Monday 28 November 2011

குமுதம் ஜவஹர் பழனியப்பன் அமெரிக்கா பயணம்




குமுதம் குழுமத்தை பி.வரதராஜன்(வயது 50) அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டதன் காரணமாக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சென்னையில் தங்கி அது தொடர்பான வழக்கு விஷயங்களைக் கவனித்துக் கொண்டிருந்த குமுதம் நிறுவனர் எஸ்.ஏ.பி.அண்ணாமலை அவர்களின் மகன் டாக்டர் ஜவஹர் பழனியப்பன் கடந்த வாரம் சென்னையில் இருந்து அமெரிக்காவிற்கு மீண்டும் திரும்பினார்.

டாக்டர் ஜவஹர் பழனியப்பன் அமெரிக்கா செல்வதை வரதராஜன் அனுப்பியிருந்த உளவு ஆட்கள் விமான நிலையத்தில் இருந்து உறுதிப்படுத்திய பின்பு  இதனை வரதராஜனின் வலது கை,இடது கை மற்றும் அனைத்துமாக இருக்கும் உமாசேகர் என்பவருக்கு தொலைபேசியில் சொன்னார்களாம்.இதை உமாசேகர் வரதராஜனிடம் சொன்னவுடன் வரதுவின் முகம் பிரகாசமாக மாறிவிட்டதாம்.அனைவரிடமும் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டாராம்.ம்ம்.எதெதுக்கு எல்லாம் சந்தோஷப் படுகிறார்கள் நாட்டில்?

நாம் இப்பொழுது வரதுவுக்கும் அவரது அடிப்பொடிகளுக்கும் தெரியாத செய்தியைச் சொல்கிறோம். டாக்டர் ஜவஹர் பழனியப்பன் மீண்டும் அமெரிக்காவில் இருந்து வரும் டிசம்பர் இரண்டாம் வாரத்தில் தமிழ்நாடு வருகிறாராம்.

No comments: