Wednesday 23 November 2011

ஜூனியர் விகடன்-ஊருக்குத்தாண்டி உபதேசம்



ஜூனியர் விகடனில் உதவி ஆசிரியர்களாகப் பணியாற்றி வந்த பி.பி.சிவசுப்ரமணியன் என்கின்ற சிவன் மற்றும் என்.அண்ணாமலை ஆகிய இருவரையும் பதவி உயர்வு என்கின்ற பெயரில் முறையே கோவைக்கும் மதுரைக்கும் நிர்வாகம் இடமாற்றம் செய்து பழி வாங்கியது. ஜூனியர் விகடன் வெளியீட்டாளர் அசோகன் இதன் பின்னணியில் இருப்பதாக இருவரும் தன்க்கு நெருக்கமானவர்களிடம் தெரிவித்து இருந்தனர்.

இடமாற்றத்தினை அண்ணாமலை அமைதியாக ஏற்றுக்கொண்டு மதுரைக்குப் பணிக்குச் சென்றார்.ஆனால் பி.பி.சிவசுப்ரமணியன் என்கின்ற சிவன் சென்னையில் தொழிலாளர் நீதிமன்றத்தில் இதனை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தார்.இவரது வழக்கினை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் பழிவாங்கும் நடவடிக்கை என்று கூறி இடமாற்றத்துக்கு தடை விதித்துள்ளது.

ஆனாலும் ஜுனியர் விகடன் நிர்வாகம் அலுவலகத்தில் இன்னும் அவரைப் பணியில் சேர்க்க மறுக்கிறது.இந்த விஷயத்தை ஜூனியர் விகடன் வெளியீட்டாளர் அசோகன் தனக்கு எதிரான விஷயமாகப் பார்க்கிறாராம்.அதனால் தான் இந்த இழுபறியாம்.


ஜெயலலிதா நீதிமன்றத்தை மதிக்க வேண்டும்,நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று பக்கம் பக்கமாக எழுதித் தள்ளும் ஜுனியர் விகடன் நீதிமன்ற உத்தரவை மதிக்குமா?

ஊருக்குத்தாண்டி உபதேசம் !

1 comment:

கலகக்குரல் said...

திரு சிவன் அவர்கட்கு,
நீதிமன்ற உத்தரவின் இன்னொரு நகல் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள்.
கலகக்குரல்