Sunday 22 July 2012

பொய்யிலே பிறந்து..பொய்யிலே வளர்ந்த...புதிய தலைமுறை பச்சமுத்து&கோ..!

வீச்சரிவாளுடன் ”பச்சை”த் தமிழனும்   SRM  வேந்தருமான பச்சமுத்து..! 
நாம்SRM லங்கா குறித்து ஆதாரங்களுடன் எழுதினோம்.ஆனால் இன்றைய நாளிதழ்களில்( 22-7-2012) SRM நிறுவனம் சார்பில் அதன் பதிவாளர் சேதுராமன் என்பவர் மறுப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார். ஈழத் தமிழர்க்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல,அவர்களது படிப்புக்கு உதவி செய்கிறோம்,தமிழ் வளர்ச்சிக்கு உதவி செய்கிறோம் என்று சொல்லிச் செல்கிறது அந்த அறிக்கை.


ஈழத்தமிழர்க்கு உதவி செய்த பட்டியல் என்று கருணாநிதி அறிக்கை வெளியிடுவாரே!அதைப்போல SRM நிறுவனம் அறிக்கையும் உயிரற்று உள்ளது.

இலங்கை சென்று வந்த SRM துணைவேந்தர் பொன்னவைக்கோவும்,அதனை பொய் பூசி முழுகி அறிக்கை வெளியிட்ட   SRM   பதிவாளர் சேதுராமனும் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில்


நாம் புகைப்பட ஆதாரங்களுடன் விலாவாரியாக எழுதிய பின்னும் இன்னமும் ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யை SRM நிறுவனம் அவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கிறது.அதைப்பற்றி நமக்குக் கவலை இல்லை.

இதோ இன்னும் ஆதாரங்கள்....இதற்கு என்ன பதில் அறிக்கை வெளியிடும்...?

கொழும்பில் ஒப்பந்தங்களைப் பரிமாறிக் கொள்ளும் SRM குளோபல் மேலாண்மை இயக்குனர் சுப்ரமணியனும் (வலது) SRM லங்கா சேர்மன் சிவகுமார் சின்னராஜாவும்..


இலங்கையில் வெளியிட்ட விளம்பரம்

SRM  லங்கா லோகோ


அட்மிஷனில் சிங்கள யுவதிகள்



 SRM லங்கா அதிகாரபூர்வ இணையம் 



தினமலர் உட்பட பத்திரிகைகளில்  வெளிவந்த செய்தி.
சிங்கள வணிகர் வர்த்தகத்துறை அமைச்சரை வரவேற்கும் பொன்னவைக்கோ

SRM அங்கு தொழில் துவங்கிய பின்னணி குறித்து ஊடக வட்டாரத்தில் பேசப்படும் தகவலைப் பார்ப்போம்.

கொழும்பில் ராஜபக்சேவின் அதிகார வட்டத்தின் துணையுடன் கல்வி வணிகம் துவங்க வேண்டும் என்று முதலில் திட்டமிட்டது திருச்சியைச் சேர்ந்த முன்னாள் அதிமுக அமைச்சர் நல்லுசாமி.இவர் எம்.ஜி.ஆர்.காலத்து மந்திரி.ஆர்.எம்.வீரப்பன் சிபாரிசால் அமைச்சர் ஆனவர்.அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற பின்பு திருச்சி பேரூர் அருகே காவேரி காலேஜ் ஆப் இஞ்சினியரிங் என்னும் பெயரில் ஒரு கல்லூரி துவங்கினார்,

பிரம்மாண்ட வளர்ச்சி.இவர் தான் கொழும்பில் தனது கிளையைத் துவக்க முயற்சித்தார்.அதற்கு புத்தபிக்குகள் உதவியை நாடினார்.அவர்களின் ஆலோசனைப்படி தனது திருச்சி பொறியியல் கல்லூரியில் புத்தர் சிலையை நிறுவினார்.ஆனால் இங்கு எழுந்த எதிர்ப்பின் காரணமாய் சிலை திறக்கும் திட்டம் கைவிடப்பட்டது.அதன் பின் அவரது தொடர்ச்சியான முயற்சி ஏனோ வெற்றி பெறவில்லை.நாமல் ராஜபக்க்ஷே தரப்புக்கும் இவருக்கும் இடையே கொடுக்கல் வாங்கல் விகிதாச்சார முரண்பாட்டால் நின்று போனது என்றும் பேசிக் கொள்கிறார்கள்.

அதற்குப் பின் இலங்கை அதிகார வர்க்கம் மிகப்பெரிய வல்லமை மிக்க ஒருவரை வளைத்துப் போடத் திட்டமிடுகிறது.அதற்கு உடன்பட்டவர் தான் ஊடக மற்றும் கல்வி வியாபாரி பச்சமுத்து.மிகப்பெரிய கல்வி சாம்ராஜ்யம்கொழும்பில் துவங்கும் இந்த சாம்ராஜ்ய திட்டமிடலில் முதலில் ஈடுபட்டவர்கள் எம்.ஜி.எம். குரூப்பைச் சேர்ந்தவர்கள்.இவர்களுக்கு அங்கு மிகப்பெரிய சாராயத் தொழிற்சாலை உண்டு.ஆனால் அவர்களின் வழி தொடர்பு ஏனோ அது சரிப்பட்டு வரவில்லை.ஆகவே அது கைவிடப்பட்டது.




.அதன்பின் இதில் நுழைந்தவர்கள்  டி.ஆர்.பாலு தரப்பினர்.டி.ஆர்.பாலுவுக்கு நீண்ட காலமாய் தனது தொழில் நிமித்தம் மட்டுமல்ல,அதிகாரத் தரகு வேலை நிமித்தமும் இலங்கை உயர் மட்டத்தினருடன் நல்ல தொடர்பு உண்டு.அவர் இதில் தலையிட்டு வெற்றிகரமாய் பரிவர்த்தனைகளை முடித்துக் கொடுக்கிறார்.தனக்கு வேண்டியதைச் சரியாகப் பெற்றுக் கொள்கிறார்.இப்படி உருவானது தான் SRM லங்காபல்கலைக்கழகம்.இன்று வெற்றிகரமாய் தமிழர்களின் முகத்தில் கரியைப் பூசி துவக்கப்பட்டுள்ள‌து.

சர்வதேச போர்க்குற்றவாளி என்று உலகத் தமிழர்கள் ராஜபக்சேவை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கையில் அதே இனத்தைச் சேர்ந்த தொப்புள் கொடி உறவான பச்சமுத்து கல்வி உறவு கள்ள‌த்தனமாக ஏற்படுத்தியுள்ளார்.நான் தமிழனுக்கு எதிரி அல்ல என்று சர்வதேசத்திற்கு காட்ட ஒரு முகம் இப்பொழுது ராஜபக்சேஷேவுக்கு கிடைத்துள்ளது.







இது புதிய தலைமுறையின் சக குழுமமான  SRM லங்கா காலூன்றிய வரலாறு.

இனியாவது தனது அறியபப்ட்ட துரோகத்தை ஒப்புக் கொள்ளூமா..அல்லது இன்னும் ஆதாரங்கள் கேட்குமா...?



Tuesday 17 July 2012

தமிழனின் பிணக்குவியலின் மீது புதிய தலைமுறை தொலைக்காட்சி குழுமம்..!




ஈழத்தில் சிங்கள இனவாதத்தால் காலங்காலமாக மறுக்கப்பட்ட தங்கள் உரிமைகளுக்காகவும் இழந்த உடைமைகளை மீட்கவும் போராடிய தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.இதன் உச்சகட்டமாக முள்ளிவாய்க்காலில் தமிழ் இனப்படுகொலை 2009 ஆம் ஆண்டு மே மாதம் அரங்கேறியது.லட்சக்கணக்கில் தமிழர்கள் அழித்தொழிக்கப் பட்டனர்.சர்வதேச வல்லாதிக்கங்களின் துணையுடன் இலங்கை அரசு இந்தக் கோரத்தையும் கொடூரத்தையும் நடத்தியது.ஆனால் இனப்படுகொலை மட்டுமல்ல,தமிழர்களின் மரண ஓலமும் ஒப்பாரியும் கூட இங்குள்ள ஊடகங்களால் உரிய முறையில் பதிவு செய்யப்படவில்லை.

இனப்படுகொலை முடிந்து 3 ஆண்டுகளாகியும் சொந்த நாட்டிலேயே தமிழர்கள் முள்வேலிக் கம்பிகளுக்குள் இன்னமும் அகதிகளாய் இருக்கின்றனர். அடுத்த வேளை சோற்றுக்குக் கூடத் தங்களை அழித்தவர்களிடம் கையேந்தி கொண்டிருக்கும் அவலம் தொடர்ந்து கொண்டுள்ளது.அதே வேளை இனப்படுகொலைக்குக் காரணமான ராஜபக்‌ஷேவோ இன்னும் தண்டிக்கப்படவில்லை என்பது மட்டுமல்ல குற்றவாளிக் கூண்டில் கூட ஏற்றப்படவில்லை. அவரை போர்க்குற்றவாளி என அறிவிக்கக் கோரியும்,சிங்கள இனவாதத்திற்கு எதிராகவும் உலகமெங்கும் உள்ள தமிழர்கள் தங்களால் இயன்ற அனைத்து வழிகளிலும் போராடிக் கொண்டிருக்கின்றனர்.



அதே சமயம் இலங்கை அரசு கலை நிகழ்ச்சிகள் மற்றும் வர்த்தக கண்காட்சிகளை நடத்தியும், அந்நிய நாட்டு வர்த்தக நிறுவனங்களை அழைத்து வந்து புதிய தொழில் தொடங்கியும் தனது கொடூர முகத்தை மறைக்கவும் கொலைக் கரங்களைப் பரிசுத்தமாக்கவும் திட்டமிட்டு முயல்கிறது.புத்தம் புதிய அனைவரும் விரும்பும் அமைதியான இலங்கை என்னும் பிம்பத்தை உலகமெங்கும் நிறுவ இதன் மூலம் முயல்கிறது.

ஆனால் உலகமெங்கிலும் உள்ள தமிழர்கள் தங்கள் எதிர்ப்பின் மூலம் இதற்கு முட்டுக்கட்டை போடுகின்றனர். தமிழர்களின் உணர்வுகளை மதித்து திரைப்பட நடிகர் அமிதாப் பச்சன்,பாடகர் ஹரிகரன் உள்ளிட்டோர் தங்கள் நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளனர்.இந்திய விவசாய நிலங்களை மலடாக்கிய சுவாமிநாதன் கூட தமிழர்களின் எதிர்ப்பால் அங்கு மேற்கொள்ள இருந்த  தனது செயற்பாடுகளை நிறுத்திக் கொண்டார்.

ஆனால் இப்பொழுது தமிழர்களின் எதிர்ப்பை மயிருக்கும் மதிக்காமல் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு நிறுவனம் அங்கு பல்கலைக்கழகம் ஒன்றினை கொழும்பு நகரில் நிறுவியுள்ளது. எஸ்.ஆர்.எம்.லங்கா பல்கலைக் கழகம் என்னும் பெயரில் தன் கல்வி வர்த்தகத்தை கோலாகோலமாக தொடங்கியுள்ளது.


முதல்மந்திரி ரிஷாத்தை வரவேற்கும் பொன்னவைக்கோ,துணைவேந்தர், SRM,பல்கலைக்கழகம்
நாடாளுமன்ற உறுப்பினர் ரங்காவை வரவேற்கும்  துணைவேந்தர் பொன்னவைக்கோ

குத்துவிளக்கு ஏற்றும் ரங்கா,நாடாளுமன்ற உறுப்பினர்


குத்துவிளக்கு ஏற்றும் சிவராஜன் சின்னராஜா,சேர்மன் SRM லங்கா,



துவக்க விழா கும்மாளத்தின் பொழுது

குத்துவிளக்கு ஏற்றும் பொன்னவைக்கோ,SRM,பல்கலைக்கழக துணைவேந்தர்,சென்னை.



கொழும்பு பிரஸ் மீட்டில்
இந்திய-இலங்கை SRM பல்கலைக்கழக கும்பல்களின் குரூப் போட்டோ


இந்த எஸ்.ஆர்.எம்.லங்கா நிறுவனத்தின் பின்னணி என்ன..?

தனக்கு கிடைக்காத கல்வி தனது பிள்ளைகளுக்காவது கிடைக்க வேண்டும் என்பதற்காகத்,தன் தாலியை அடகு வைத்தும்,கந்து வட்டிக்குக் கடன் வாங்கியும்,நிலத்தை விற்றும்,கால் வயிற்றுக் கஞ்சியுடன் தன் பிள்ளைகளைப் படிக்க வைக்க தமிழ்நாட்டில் உள்ள லட்சக்கணக்கான அப்பனும் ஆத்தாள்களும் அனுப்பிய காசில் பிரமாண்டமாய் தமிழ்நாடு முழுவதும் விண்ணை முட்டும் கட்டிடங்களாகவும்,நூற்றுக்கணக்கான கோடிகள் கையிருப்பாகவும்,கல்விச்சாலைகளாகவும் உருவானது தான்  தமிழ்நாட்டின் எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழக நிறுவனம்.கடந்த 20 ஆண்டுகளில் இதன் வளர்ச்சி நினைத்துப் பார்க்க முடியாதது.அதில் தரமான கல்வி என்று சொல்லிக்கொண்டு தமிழர்களிடமிருந்து உறிஞ்சப்பட்ட ரத்தமும்,வியர்வையும் இரண்டறக் கலந்துள்ளது.

சென்னை SRM,பல்கலைக்கழகம்,


இவ்வாறு தமிழனின் ரத்தத்தையும் வியர்வையும் தமிழ்நாட்டில் உறிஞ்சிய காசில் விண்ணை முட்டும் அளவில் இங்கு தமிழ்நாட்டில் உருவான நிறுவனம் இன்று,இந்த நூற்றாண்டில் தமிழர்களுக்கு எதிராய் உலகின் மிகப்பெரிய இனப்படுகொலையை நடத்திய இலங்கை  சிங்கள அதிகாரவர்க்கத்தின் ஆசியுடன் கொழும்பு நகரில் புதிதாய் பல்கலைக்கழகம் தொடங்கியுள்ளது.

சிங்கள இனவாதத்திற்கு எதிராய் அனைவரும் வீதியில் இறங்கிப் போராடிக் கொண்டிருக்க,அதே கொலைகாரர்களுடன் கைகுலுக்குபவர்கள் எவ்வளவு கேடுகெட்ட அயோக்கியர்களாய் இருக்க வேண்டும்..?எவ்வளவு பணவெறியும் அதிகார வெறியும் இருக்க வெண்டும்..?(சில மாதங்களுக்கு முன் தமிழர்களின் எதிர்ப்பால் அப்படி ஒரு திட்டமே இல்லை என்று மறுத்த நிறுவனம் இன்று அதனைப் பொய்யாக்கி பிரம்மாண்டமாய் உருவாக்கியுள்ளது)

இதுதான் எஸ்.ஆர்.எம்.லங்கா நிறுவனம் உருவான பின்னணி.

இனி இந்த நிறுவனத்தின் இன்னொரு நிறுவனமான புதிய தலைமுறை தொலைக்காட்சி குழுமம் தோன்றிய கதையைப் பார்ப்போம்.



கள்ளச் சாராயம் காய்ச்சியவனெல்லாம் தனது கெட்ட பெயரை மறைக்க கல்வித் தந்தை ஆனது போல, கட்டப்பஞ்சாயத்து செய்தவனெல்லாம் இன்று அரசியல்வாதியானது போல,முறையற்ற வழிகளில் சம்பாதித்தவர்கள் தங்கள் சொத்துக்களைத் தக்க வைக்கவும்,அரசியல்வாதிகளின் மிரட்டலில் இருந்து காக்கவும்,ஊடகங்களில் முதலீடு செய்வதும் அதனைப் புதிதாய் ஆரம்பிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது.இதன் முலம் தங்களுக்கு உரிய பாதுகாப்பினை அதிக செலவில்லாமல் ஏற்படுத்திக் கொள்கின்றனர்.

எஸ்.ஆர்.எம்.நிறுவனம் கல்வியில் அடித்த கொள்ளையினைப் பாதுகாக்கவும் அரசியல்வாதிகளிடமிருந்து தப்பிக்கவும் உருவாக்கியது முகமூடிகளில் ஒன்று தான் தான் புதிய தலைமுறை தொலைக்காட்சி.மற்றும் புதிய தலைமுறை வார பத்திரிகை.

என்ன தான் உண்மை,நடுநிலைமை,நேர்மை என்று பித்தலாட்டம் செய்தாலும் அது தான் உண்மை.இது அனைவருக்கும் தெரியும்.இப்படிப்பட்ட குழுமத்தின் பின்னணியில் இருந்து தான் எஸ்.ஆர்.எம்.லங்கா பல்கலைக்கழகம் உருவாகியுள்ளது.(ஹிந்து ராமுக்கு அடுத்து இன்னொரு தூதர் தமிழ்நாட்டில் இருந்து உருவாகிறார்..பராக்..பராக்..)

இனி இறுதிப்பகுதிக்கு வருவோம்.

நம்மூர் பத்திரிகையாளர்கள் 200 ரூபாய் கவர் வாங்கினால் அவர்களுக்கு ஆதரவாய் கூடுதலாக 4 வரிச் செய்தி எழுதுவது வழக்கம்.அதைப்போல பத்திரிகை நிறுவனங்களும் தங்களுக்கு விளம்பரம் கொடுத்தாலோ. தங்களின் அரசியல் ஆதாயத்திற்காகவோ,பொருள் ஆதாயத்திற்காகவோ தங்களுடன் வர்த்தக நலன்களைப் பேணும் நிறுவனங்கள் என்றாலோ, அவர்களுக்கு எதிராய்ச் செய்தி வெளியிடுவதில்லை.

இதுதான் நம்மூர் நிறுவனங்களின்,பத்திரிகையாளர்களின் லட்சணம்.இப்படி இருக்கையில் புதிய தலைமுறையில் நேர்மை என்பது இனி இருக்குமா..?இனி ஈழத்தமிழர் பிரச்சனையில் நடுநிலையாகச் செயல்படும் என்று எப்படி எதிர்பார்க்க முடியுமா..?

புதிய தலைமுறை தொடங்கப்பட்ட  ஆரம்ப காலங்களில் ஈழத் தமிழர்களூக்கு எதிரான ஒரு போக்கைக் கடைப்பிடித்தது.நாமும் ஒரு பதிவில் இதைச் சொல்லியிருக்கிறோம்.பிரேம்சங்கர் மனைவியின் உண்மையைத் தேடி என்னும் டாகுமெண்டரியில் அப்பட்டமான இலங்கை அரசு ஆதரவு குரல்  வெளிப்பட்டது.அதன் பின் சமீபகாலமாக ஈழத்தமிழருக்கு ஆதரவான செய்திகளை மிக‌ அதிக அளவில் வெளியிட்டு வருகிறது.

இதனை நாம் இரண்டு விதமாகப் பார்க்கலாம்.தனது பல்கலைக் கழகத்தை கொழும்புவில் துவங்கி அங்கு கொள்ளையடிக்கவும் அதற்கான அனுமதியை பைசாச் செலவின்றி வாங்கவும் தனது ஊடக பலத்தைப் பயன்படுத்தியதா..?அதனை அங்குள்ளவர்களுக்கு உணர்த்துவதற்காக இலங்கை அரசுக்கு எதிர்ப்புச் செய்திகளை அதிக அளவில் த்னது தொலைக்காட்சியில் வெளியிட்டதா..?

இது தவறு என்று நீங்கள் வாதிடலாம்.உண்மையில் நடுநிலையாகத் தான் உள்நோக்கமின்றி செய்திகளை வெளியிட்டது.நீங்கள் அவதூறாகச் சொல்கின்றீர்கள் என்றும் சொல்லலாம்.

 

அதனை உன்மை என்று வாதத்திற்காய் வைத்துக் கொள்வோம்.

ஆனால் தமிழர் விரோதப்போக்கைக் காட்டும் அருகாமை நாடான கொழும்புவில் பல நூறு கோடிகளைக் கொட்டி உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகத்தையும், இனி தொடர்ச்சியாக  அங்கு செய்யத் திட்டமிட்டுள்ள முதலீடுகளைக் காக்கவும் சிங்கள அதிகாரவர்க்கத்திற்கு தலையாட்டும் பொம்மையாக அதன் நிறுவனத்தில் இருந்து வெளிவரும் புதிய தலைமுறை செயல்படாது என்று யாரும் நம்ப முடியுமா..?

நம்மூரில் தனியார் தொலைக்காட்சியில் மூன்று தொடர் வெளியிடும் வாய்ப்புக்காக ஒரு பத்திரிகை நிறுவனம் எப்படியெல்லாம்வளைகிறது என்பது உங்களுக்குத் தெரியும்.

இவ்வளவு ஏன் சென்ற ஆட்சியில் தமிழக அரசின் லைப்ரரி ஆர்டர்(வெறும் 1800 பிரதிகள் தான் ஜெண்டில்மேன்) தனது சிற்றிதழுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காய் ஈழப்படுகொலையில் ஆட்சியாளர்களின் பங்கை எதிர்த்து குரல் எழுப்பாமல்  ஈனஸ்வரத்தில் முனங்கியவர்களும் உண்டு.
சொந்த நாட்டிலேயே 5000 பத்திரிகை விற்கும் முதலாளியிலிருந்து 5 லட்சம் விற்கும் முதலாளி வரை அனைவரின் லட்சணம் இதுதான்.

 
ஆனால் தமிழர்களைக் கொன்று குவித்த இன்னொரு நாட்டில்  செயல்படும் நிறுவனம் தங்களது முதலீடுகளைளைக் காப்பாற்றவும் பாதுகாக்கவும் அங்குள்ள ஆட்சியாளர்களுக்கும் இனவாதத்திற்கும் ஆதரவாக புதிய தலைமுறை தொலைக்காட்சி செயல்படாது என்று உறுதியாய்ச் சொல்ல முடியுமா..?

இன்று கொலைகாரர்களுடன் தங்கள் வணிக‌த்திற்காக கைகுலுக்குபவர்கள்,தங்கள் வர்த்தகத்தைக் காப்பதற்காக‌ நாளை அவர்களது கொலைகளை மறைக்க உடன்பட மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்..?

அம்புட்டு யோக்கியமானவரா முதலாளி..?

கண்டிப்பாய் நடக்காது.இனி ஈழத் தமிழர் தொடர்புடைய விஷயத்திலும்,தமிழ்நாட்டு மீனவர்கள் சிங்கள ராணுவத்தால் படுகொலை செய்யப்படும் விஷயத்திலும் இனி வரும் காலங்களில் படிப்படியாக......சிறிது சிறிதாக.....பாலில் துளித்துளியாய் நஞ்சு கலப்பது போல....புதிய தலைமுறைத் தொலைக்காட்சி தனது செயற்பாட்டை கீழ்க்கண்டவாறு வகைப்படுத்திக் கொள்ளும் என்று உறுதியாகச் சொல்ல முடியும்.

அ) புதியதலைமுறை தொலைக்காட்சியில் இனி சிங்கள அரசுக்கு ஆதரவாய் செய்தி,நிகழ்ச்சி வெளியிடப்படலாம்.

ஆ)ஈழத் தமிழர்களுக்கு எதிராக இலங்கையிலும்,வெளிநாடுகளிலும் சிங்கள அரசால் நடைபெறும் சம்பவங்களை இருட்டடிப்பு செய்யலாம்..அல்லது செய்தியைத் திசை திருப்பி விடலாம்.

இ)அல்லது கொஞ்சம் கொஞ்சமாக நீர்த்துப் போகச் செய்யுமாறு இருக்கலாம்.

ஈ)தமிழ் மீனவர் படுகொலையை இருட்டடிப்பு செய்வது.... 

இல்லை,அப்படிச் செய்ய மாட்டார்கள் என்பதற்கு யாராவது உத்தரவாதம் தர முடியுமா..?

இவ்வளவுக்குப் பின்னும் புதிய தலைமுறை தொலைக்காட்சி நடுநிலை என்றும் சிறப்பானது என்றும் எவராவது உங்களிடம் சொன்னால் அது தமிழனின் பிணக்குவியலின் மீது அதனை அடிவாரமாய்க் கட்டப்பட்டது என்று செவுளில் அறைவது போல் சொல்லுங்கள்.

முதலாளித்துவம் தனக்கு ஆதாயம் கிடைக்கும் என்றால் தனக்கான சவக்குழியைக் கூடத் தானே தோண்டிக்கொள்ளும் என்று சொல்லியிருக்கிறார் மார்க்ஸ்.

ஆனால் இங்கோ தமிழர்களின் பிணக்குவியலின் மீது பிரம்மாண்டமாய் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் சக குழுமம் நிறுவியுள்ளது.

இனி நேர்மை,நடுநிலை,துணிச்சல்,உண்மை ஆகியன கெட்ட வார்த்தைகள்.

போங்கடா நீங்களும்.....

Wednesday 11 July 2012

மணாவுக்கு இந்தப் பொழப்பு தேவையா..?



மணா என்கிற லட்சுமணன்.


குமுதம் ரிப்போர்ட்டரில் இருந்து ராஜினாமா செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டு,வெளியேறிய சீனியர் ரிப்போர்ட்டர் மதுரை ப.திருமலைக்கு திடீரென்று போன்.

எதிர்முனையில் பேசியவர் வேறு யாரு.நம்ம கங்காணி மணா.”

எரிச்சலுடன் என்ன..?என்றார் திருமலை.

ஒன்னும் கவலைப்படாதீங்க திருமலை.நான் உங்க விஷயமா எம்.டி.ட்ட பேசிக்கிட்ருக்கேன்.சரி பண்ணிடலாம்.என்று மணா சொன்னதுமே,(இன்னுமாடா உங்கள ஊர் நம்புது)அதெல்லாம் ஒரு மசிரும் வேணாம் உன் சோலியப் பாருய்யா என்று கன்னத்தில் விட்டாற் போல் நறுக்கென்று நாக்கைப் பிடுங்குவது போல் கேட்டிருக்கிறார் திருமலை.

இதற்கெல்லாம் மசிபவரா மானங்கெட்ட மணா..?ஆள் சைலண்ட்.முன்பு வரதாபாயை எப்பொழுதும் சந்திக்கும் மணா இப்பொழுது தினசரி சந்தித்து ஆலோசனைகளை வழங்குகிறாராம்.யாரைச் சந்திக்கலாம்,எப்படி பலபப்டுத்தலாம் என்று அள்ளித் தெரிக்கிறாராம்.இதுக்கு முன்னாடி எத்தனை பேரு இப்படி வரது வளர்ச்சியில் பங்கெடுத்திருப்பாங்க...?
அவங்க இப்ப எங்க போனாங்க என்கிற  தகவல் மணாவுக்குத் தெரியாததல்ல..!அடுத்த கறிவேப்பிலை தயாராகுதுடோய்...
 
ஒரு சின்ன பிளாஷ்பேக்..

சில ஆண்டுகளூக்கு முன் கங்காணி மணாவுக்கு ஆப்பு வைக்க வரதாபாய் முடிவு செய்து,மணாவின் வண்டவாளத்தை விசாரித்து அறிக்கை அனுப்புமாறு திருமலையை நச்சரித்தார்.

அப்பொழுது, நம் சக ஊழியர் ஆயிற்றே என்ற நல்லெண்ணத்துடன் மணாவைப் பற்றி போனால் போகிறது என்று நல்லவிதமாக அறிக்கை அனுப்பியவர் இதே திருமலை தான்.

காலச்சக்கரம் எப்படி மாறுகிறது பாருங்கள்…

பத்திரிகையாளர் வேலையை விடுத்து வரதாபாய்க்கு .....வேலை பார்ப்பது இவருக்குத் தேவை தானா?என்று ஊழியர்கள் பேசிக் கொள்கிறார்கள்.




Sunday 8 July 2012

வரதாபாய்க்கு யோகம்..! குமுதம் காசில் யாகம்..!




கடந்த ஜூன் மாதம் 29,ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று அலுவலக ஊழியர்களுக்கு ஒரு தகவல்.நாளை 30 ஆம் தேதி சனிக்கிழமை அலுவலகம் விடுமுறை,யாரும் வர வேண்டாம் என்றார்கள்.ஏன் என்று கேட்டதற்கு பவர் கட் என்று பதில் வந்தது.ஆனால் குமுதம் அலுவலகத்தில் மறுநாள் ஏதோ நடக்கப் போகிறது என்பது  ஊழியர்களுக்குத் தெரிந்து விட்டது.(இன்னும் என்ன கொடுமை நடக்க வேண்டியிருக்கு என்கிறீர்களா..?அதுவும் சரிதான்)

அவர்கள் நினைத்ததைப் போல அன்று மாலையே ஊழியர்கள் பணிமுடிந்து கிளம்பியதும்,கீழே இருந்த வராண்டாவைப் பெருக்கித் தண்ணிர் விட்டுக் கழுவி,மணல்,செங்கல் எல்லாவற்றையும் கொண்டு வந்து அடுத்த நாள் வேலைக்கான”அனைத்து ஏற்பாடுகளையும் முழுமூச்சில் செய்து விட்டே கிளம்பினார்கள் வரதாபாயின் அல்லக்கைகள்.

மறுநாள் அதிகாலை மன்னாரங்கம்பெனி வரதாபாய்,ஜெனரல் மேனேஜர் அனுராதா,சி.. ஸ்ரீகாந்த்,உமாசங்கர்,ஜோதிடம் ஆசிரியர் .எம்.ஆர்.ஆகியோர் ஆஜர்.அங்கே யாக குண்டம் அமைக்கப்பட்டிருந்தது.அனைவரும் அமர்ந்த பிறகு சிறப்பு பூஜைகள் தொடங்கியது.அதன்பின் கேரளாவில் இருந்து வந்திருந்த ஒன்பது நம்பூதிரிகள் யாகத்தை தொடங்கினர்.யாகம் மதியம் 2 மணி வரை நீடித்தது.நடந்தது சத்ரு சங்கார யாகம் என்று அலுவலகத்தில் பேசிக் கொண்டார்கள். 

தாங்கள்  நினைத்த காரியம் கை கூட வேண்டும் என்பது தான் இதன் நோக்கம்.(சுருக்கமாகச் சொல்லப்போனால் செட்டியார் சொத்தை முழுவதுமாக ஆட்டையைப் போடுவது தான்).மதியம் யாகம் முடிந்தவுடன் யாகம் நடந்த சுவடு தெரியாமல் அதை அழிக்கும் பணி தொடங்கியது.

ஆனாலும் யாகத்திற்குப் பின்பும் வரதாபாய்க்கு நிம்மதி இல்லையாம்.அன்றிலிருந்து இரண்டு நாள் ஊர் ஊராய் கோயில்களுக்குச் சென்று வழிபட்டு புதன்கிழமை தான் அலுவலகம் வந்தாராம்.இந்த யாகத்துக்குச் செலவிட்ட தொகை மட்டும் சில லட்சங்களாம்.இந்த காசு எங்கிருந்து எடுக்கப்பட்டது,சுரண்டப்பட்டது என்பது உங்களுக்குத் தெரியும்.

அத்தனை வழியிலும் ஆள் அனுப்பிப் பார்த்தாயிற்று.நெருக்கமானவர்கள் என்று யார் யாரை நினைத்தார்களோ அவர்கள் எல்லோருக்கும் ஆதரவாய்ச் செய்தி போட்டாயிற்று.ஆனாலும் அதிகாரத்தின் கதவு இன்னும் திறந்தபாடில்லை.ஆட்டையைப் போட வேண்டும் என்று தான் நினைத்த காரியம் கைகூடவில்லை என்பதால் இறுதியாக யாகத்தை நம்ப ஆரம்பித்திருக்கிறார் நம்ம வரதாபாய்.

உலகத்திலேயே ஒருவர் சொத்தினை அபகரிக்க அவரது காசினை வைத்து மற்றொருவர் யாகம் நடத்தியிருப்பது இதுவே முதன்முறை.இது அடுத்தவர்  காசில் அவருக்கே சூனியம் வைக்கும் வேலை.இது வரதாபாய்க்கு கைவந்த கலை...


யாகத்திலேயே அடுத்தவர் சொத்தை ஆட்டையைப் போடலாம் என்றால் அப்புறம் நாட்டில் நீதிமன்றம் எதற்கு..…!வக்கீல் எதற்கு?

போகாத ஊருக்கு வழி தேடாதீங்க வரதாபாய்...