Wednesday 30 April 2014

அறிவாலயத்தில் பலிக்காத நக்கீரன் ஜோசியம்.. !



ஜூனியர் விகடன்,குமுதம்,குமுதம் ரிப்போர்ட்டர் போன்றவை கருத்துக் கணிப்பு வெளியிடும் பொழுது உண்மையைச் சொல்வதற்கென்றே நம்மிடையே 'அவதரித்துள்ள' நக்கீரன் அமைதி காக்குமா என்ன..?

நக்கீரன் இப்பொழுது வெளியிட்ட கருத்துக் கணிப்பைப் பார்ப்பதற்கு முன்பு, 2011 சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக‌ அதன் பழைய கருத்துக் கணிப்பையும் அது தொடர்பாய் வெளியிட்ட மன்னிப்பையும் பார்ப்போம்.


தேர்தலில் திமுக கூட்டணி 31 இடங்களைப் பிடித்தது.

தேர்தலில் தனது ஜோசியம் பலிக்காததால் அதன் ஆசிரியர் அதற்கு வருத்தம் தெரிவித்தார்.

இது தொடர்பான நக்கீரன் ஆசிரியரின் மன்னிப்பு.

சென்ற தேர்தல்களில் நக்கீரன் கணிப்புகள் நூற்றுக்கு நூறு சரியாக இருந்ததை வாசகர்களும், அரசியல் பிரமுகர்களும், மக்களும் மறக்கவில்லை. ஆனால் இந்த முறை தவறி விட்டது.
கருத்து கணிப்புகளை மேற்கொள்வதற்கு என்ன நடைமுறைகள் மேற்கொள்ளப்படுமோ அதே விஞ்ஞான முறையையே கையாண்டோம். முடிவுகளை பாரபட்சமின்றி வெளியிட்டோம்..
தற்போது ஏன் சர்வே தோற்றது என்பதை ஆராய்ந்தோம். சாம்பிள்களில் தவறா, எடுக்கப்பட்ட முறை தவறா, சர்வே முடிவை தொகுதிகளாக மாறுவதில் தவறா என வல்லுனர்களிடம் கேட்டோம். இதெல்லாம் சரியாகவே இருப்பதாக அவர்கள் கூறினர்.
பிறகு ஏன தோல்வி ஏற்பட்டது என ஆராய்ந்தோம். நாம் தனியார் நிறுவனங்களை நம்பாமல் நேரடியாக சர்வே செய்தோம். சர்வே படிவத்தின் தலைப்பில் நக்கீரன் என்ற பெயர் இருந்தது. எனவே மக்கள் உண்மையான முடிவை சொல்லாமல், ஜெயலலிதாவுக்கு நக்கீரன் எதிரி என கருதி, மாற்றி சொல்லி இருக்கிறார்கள் என்ற முடிவுக்கு வந்துள்ளோம்.. இதனால்தான் கணிப்பு தவறி விட்டது.
என்ன காரணம் சொன்னாலும் தவறு தவறுதான். இதை நேர்மையுடன் ஒப்புக்கொண்டு நக்கீரன் தன் வருத்தத்தை தெரிவித்து கொள்கிறது. வாசகர்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டு கொள்கிறது.”

-ஆசிரியர்

இப்படிப்பட்ட நக்கீரன் தான் இந்த முறை 2014 இல் நாடாளுமன்றத் தேர்தல் கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ள‌து. (கருத்துக் கணிப்பில் பலமுறை அம்பலப்பட்டும் பிராடுத்தனத்தை ஒப்புக் கொள்ளாத ஜு.வி. க்கு நக்கீரனை இந்த விஷயத்தில் பாராட்டலாம்.)

டந்த சட்டமன்றத் தேர்தலில் தனது கருத்துக் கணிப்பினை வெளியிட்டதனால், வாங்கிய அடியின் வலி இன்னும் நக்கீரனுக்கு மறக்காத நிலையில் தொகுதிக்கு இத்தனை பேரிடம் கருத்துக் கேட்டோம் என்று வெளிப்படையாய்ச் சொல்லி இப்பொழுது கருத்துக் கணிப்பு வெளியிட்டுள்ளது. சில இடங்களில் இரண்டு வேட்பாளர்கள் சரி நிகர் சரியாக போட்டியில் இருக்கிறார்கள் என்று 'துல்லியக்' கணக்கும் காட்டியுள்ளது.  ஸ்ஸ்ஸ் முடியல.




5  கோடிக்கும் மேற்பட்ட  வாக்காளர்களைக்  கொண்ட தமிழ்நாட்டில், மக்களின் மனநிலையை வெறும் இருபத்து நான்காயிரம் நபர்களிடம் கருத்துக 'கேட்டதாகச்' சொல்லி வெளியிடும் யூகம் துல்லியமாக இருக்க முடியாது.தங்கள் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள‌த்தான் உதவும்.

அனைவரும் நினைப்பது போல திமுக தான் முன்னணியில் இருக்கிறது என்று யாரும் சொல்லாத,சொல்லத் துணியாத செய்தியைச் சொல்லியுள்ளது.இந்த விசுவாசம் பாராட்டுக்குரியது.

நக்கீரனின் கருத்துக்கணிப்பின் படி திமுக தலைமையிலான கூட்டணி தமிழ்நாட்டில் 22 இடங்களில் வெற்றி பெறும்.

இந்த முறை நக்கீரனின் கணிப்பு பலிக்குமா அல்லது இன்னொரு மன்னிப்பா?அல்லது ஜூனியர் விகடன் மாதிரியான சமாளிப்பா என்று மே 16 இல் தெரியவரும்.
***

நாம் நக்கீரன் வெளியிடும் செய்திகளின் 'நம்பகத்தன்மை'யை வேறோரு கோண‌த்தில் பரிசீலிப்போம்.

1992-93 கால கட்டங்களில் முதலில் தராசு விற்பனையை முந்திய நக்கீரன் அதன்பின் ஜூனியர் விகடனின் விற்பனையை முந்தியது. இவ்வாறு ஒரு காலத்தில் ஜூனியர் விகடனுக்கு போட்டியாக கோலோச்சிய 'நக்கீரன்' இன்று ஜூ.வி. விற்பனையில் கால்வாசியை நெருங்கவே முடியாத நிலையில் இருக்கிறது என்பதை அறிந்து கொண்டாலே சந்தையில் அதன் நம்பகத்தன்மையும் நடுநிலைமையும் எந்த அளவு அடிபட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.

நக்கீரன் இதழானது முரசொலியின் வாரமிருமுறைப் பதிப்பு போலத் தான் வெளிவருகிறது.அதன் வாசகர்களும் பெரும்பாலும் திமுகவினர் தான்.அதனால் நக்கீரனில் வெளியான திமுக தொடர்பான செய்திகள் உண்மை என்று நம்புகின்றனர்.அதனால் நக்கீரனின் இந்தச் சேவை திமுக கட்சிக்காரனின் நல்லதுக்கா ? கெட்டதுக்கா ? எனத் தெரியவில்லை.

இந்த  கருத்துக் கணிப்பின் மூலம் திமுக மீதான தனது விசுவாசத்தை வெளிப்படுத்தி இருப்பதாய் நாம் உணர முடியும். பாமர மக்கள் மட்டுமல்ல,திமுக கட்சிக்காரர்கள் கூட நக்கீரன் அப்படித்தான் எழுதுவான் என்று சொல்லும் நம்ப முடியாத சூழலே இருக்கிறது.

இவ்வாறு திமுகவிற்கு வரிந்து கட்டி ஆதரவாய் வெளியிடும் நக்கீரனில்,உண்மையிலேயே திமுக தொட‌ர்பாக எழுதுவதிலேயே உண்மை இருப்பதில்லை.திமுக தரப்புச் செய்திகளையே சரியாக நக்கீரன் கணிக்க முடிவதில்லை.(டெஸ்க்கில் அமர்ந்து உருவாக்கினால் இப்படித்தான் இருக்கும் என்கிறீர்களா அதுவும் சரிதான்.)

திமுகவின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் என்று இரண்டு இதழ்களில் ஒரு யூகப் பட்டியலை  மார்ச் மாதத்தில் வெளியிட்டது.கூட்டணிக் கட்சிகளின் தொகுதிகளின் பெயர் தவிர 35 தொகுதிகளின் பட்டியலை எடுத்துக் கொண்டால் அதில் 15 தொகுதிகளின் வேட்பாளர்கள் பெயரைத் தவறாக நக்கீரன் வெளியிட்டது.

தான் எந்தக் கட்சிக்கு ஆதரவாய்,எக்கட்சியின் பிரச்சார பீரங்கி போல் நடந்து கொள்கிறதோ,அந்தக் கட்சி யாரை வேட்பாளராய் நிறுத்தும் வாய்ப்பு இருக்கிறது என்பதனை தேர்தல் நெருக்கத்தில் கூட நக்கீரனின் 'துப்பறியும்' இலாகாவால் கணிக்க முடியவில்லை.இத்தனைக்கும் அதிமுக போல் திமுக இல்லை என்றும் இது வெளிப்படைத் தனமையுடன் இயங்கும் ஜனநாயக இயக்கம் என்றும் அடிக்கடி சொல்லியிருக்கிறது நக்கீரன்.

நாம் நக்கீரன் தவறாய் வெளியிட்ட வேட்பாளர் பட்டியல் மற்றும் அதற்கு எழுதிய குறிப்பை மட்டும் வெளியிடுகிறோம். யாருக்கு கிடைக்கும் என்பதற்கு நக்கீரன் எழுதிய குறிப்புகள் மிகவும் சுவராஸ்யமாய் இருக்கும்.



இனி தப்பும் தவறாய்  வெளியிட்ட நக்கீரன் பட்டியல் விபரம்.

முதல் பட்டியல்: 25.02.2014 - தேதியிட்ட‌ இதழில் வெளியானது.

வடசென்னை-டி.கே.எஸ்.இளங்கோவன் (தவறு)

தென்சென்னை-ஆலந்தூர் பாரதி-மா.சுப்ரமணியம் (தவறு)

கிருஷ்ணகிரி-சுகவனம் (தவறு)

கடலூர்- (தவறு)

தி.மு.க தரப்பில் முன் னாள் மத்திய-மாநில அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரனை களமிறக் கும் எண்ணம் உள்ளது. கடந்த முறையே அவர் கடலூர் தொகுதியில் போட்டியிட நினைத் தார். காங்கிரசுக்கு ஒதுக் கப்பட்டதால் அவருக்கு வாய்ப்பு இல்லை. இந்த முறை அவருக்குத் தருவதற்கு கனிமொழி சிபாரிசு செய்கிறார். மா.செ. எம்.ஆர்.கே.பன்னீர் செல்வ மும் செஞ்சி ராமச்சந்திரனுக்கு ஆதரவாக இருக்கிறாராம்.

சேலம்-(தவறு)

தி.மு.கவில் சீட் கேட்டிருப்பவர்களில் வீர பாண்டி ஆறுமுகத்தின் இரண்டாவது மனைவியின் மகன் பிரபுவும் ஒருவர். சமீபத்தில் ஸ்டாலினை அவரது வீட்டில் பிரபு சந்தித்தபோது, அவரிடம் ஸ்டாலின் பாசமாகப் பேசியதுடன், "நான் வெளி யிலே புறப்படுறேன்.. நீ அண்ணியை பார்த்து விட்டுப்போ' என்று சொல்லியிருக்கிறார். தன் உதவியாளரையும் கூப்பிட்டு, "பிரபு வந்திருக்கும் செய்தியை துர்காகிட்டே சொல்லி, பார்க்கச் சொல்லுங்க' என்று சொல்லியிருக்கிறார். இந்தளவுக்கு ஸ்டாலினின் மனதில் பிரபுவுக்கு இடமிருப்பதால் சேலம் சீட்டும் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு பிரபு தரப்பில் உள்ளது.

அடுத்த இதழில் (4.03.2014) வெளிவந்த தொடர்ச்சி இது:

அரக்கோணம் (தவறு)

 தி.மு.க.வில் சிட்டிங் எம்.பி. ஜெகத்ரட்சகனின் கவ னம் ஸ்ரீபெரும் புதூர் பக்கம் சென்றுவிட்டதால், துரை முருகன் தனது மகன் கதிர் ஆனந்தை இங்கே களமிறக்க விரும்புகிறார். அவரது மகன் விருப்பமனு அளிப்பதற்கு முன் அது பற்றி தன்னிடம் எதுவும் தெரி விக்கவில்லை என்பதில் கலைஞருக்கு வருத்தம். தினமும் தன்னை சந் திக்கிறவர் இதைச் சொல்ல வில்லையே என்று மறுநாள் துரைமுருகனை கலைஞர் பார்க்கவேயில்லை. வாரிசுகளுக்கு சீட் இல்லை என்கிற கலைஞரின் வார்த்தைகளால் துரைமுருகன் பதற்றமாகி யிருக்கிறார். இருப்பினும் எப்படியும் கலைஞரின் மனதைக் கவர்ந்து தன் மகனுக்கு சீட் வாங்கிவிட லாம் என்ற முயற்சியைத் தொடர்கிறார். திருத்தணி நகராட்சி முன்னாள் சேர்மன்களான சந்திரன், கண்ணையன் ஆகியோரும் சீட் எதிர்பார்ப்பில் உள்ளனர். டாக்டர் சரவணன், பூபாலன் பெயர்களும் பரிசீலனையில் உள்ளன.


ஈரோடு (தவறு)

தி.மு.கவில் சீனியரான சுப்பு லட்சுமி ஜெகதீசன் தேர்தல் அரசியல் களத்திலிருந்து கடந்த தேர்தலின் போதே ஒதுங்கி விட்டதால், முத்துசாமியை நிறுத்த ஏற்பாடாகிறது. மாநில அரசியலில்தான் முத்துசாமிக்கு ஆர்வம் அதிகம். எனினும் தலைமை வலியுறுத்தினால் அதனை எப்படித் தட்டிக்கழிப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறார் முத்துசாமி. அவர் களமிறங்காவிட்டால் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பிரகாஷ், மாநில நெசவாளர் அணி எஸ்.எல்.டி.சச்சிதானந்தம் ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்படும்.

திருப்பூர் (தவறு)

 தி.மு.க தரப்பிலும் பெண் வேட்பாளராக கீதாநடராஜன் களமிறக்கப்படுவார் எனத் தெரிகிறது. 2006 சட்டமன்றத் தேர்தலின்போது பவானிசாகர் தொகுதிக்கு இவரது பெயர் முதலில் அறிவிக்கப்பட்டு, பின்னர் மாற்றப்பட்டு, ஜீவா ஓ.சுப்ரமணியம் களமிறக்கப்பட்டு ஜெயித்தார். பறிபோன எம்.எல்.ஏ.சீட்டுக்குப் பதிலாக எம்.பி சீட்டை எதிர்பார்த்திருக்கிறார் கீதா நடராஜன்.

பொள்ளாச்சி (தவறு)

தி.மு.கவில் மா.செ.  பொங்கலூர் பழனிச்சாமி யின் மகன் பைந்தமிழ்ப்பாரி நேர்காணலுக்கு செல்வதற்கு முன்பு, கட்சி நிர்வாகிகளுக்கு ஓட்டல் அறையில் வகுப்பெடுத்திருக்கிறார் மா.செ. "எல்லோரும் பாரி பேரையே சொன்னீங்கன்னா, வாங்க கிளிப்பிள்ளைகளான்னு தலைவர் கிண்டலடிப்பாரு. அதனால ஒரு சிலர் வேறு பெயர்களைச் சொல்லுங்க' என்று சொன்னதுடன், நிர்வாகிகளுக்கு விருந்தும் கொடுத்திருக்கிறார். ஆனால் நேர்காணலில், வாரிசுகளுக்கு சீட் இல்லை என ஓப்பனாகவே கலைஞர் சொல்லிவிட, மா.செ.வுக்கு அதிர்ச்சி. அவருடன் சென்ற நிர்வாகிகளோ, கலைஞரின் மனதை சட்டெனப் புரிந்துகொண்டு, உங்க விருப்பம் தலைவரே என்று சொல்லி விட்டார்கள். இந்தத் தொகுதிக்கு சீட் கேட்டிருந்த முன்னாள் அமைச்சர் மு.கண்ணப்பன் மகன் மு.க.முத்துவும் நம்பிக்கை இழந்துவிட்டார். கடந்த 2009-ல் போட்டியிட்டுத் தோற்ற சண்முகசுந்தரம் அல்லது சஃபாரி கார்த்திகேயன் இருவரில் ஒருவருக்கு சீட் கிடைக்கும் எனத் தெரிகிறது. எனினும், கலைஞரின் முடிவு மாறினால் பைந்தமிழ்ப்பாரி வேட்பாளராகலாம் என்ற எதிர்பார்ப்புடன் இருக்கிறது பொங்கலூர் பழனிச்சாமி தரப்பு.

கோவை (தவறு)

தி.மு.க தரப்பில் கடந்த முறை காங்கிரஸ்  நின்ற தொகுதி என்பதால், இப்போதும் கூட்டணிக்குக் காங்கிரஸ் வந்தால் கோவையைத் தள்ளிவிட்டுவிடும் சூழல் இருக்கிறது. தி.மு.க களமிறங்கினால், ஸ்டாலின் ஆதரவாளரான மாநகரச் செயலாளர் வீரகோபால் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. அவர் சீட் கேட்டுப்  பணம் கட்டவில்லை என்பதால் இளைஞரணியைச் சேர்ந்த சன் ராஜேந்திரன் என்பவர் மு.க.ஸ்டாலினின் சாய்ஸாக இருக்கிறார்.

மதுரை (தவறு)

தி.மு.கவில் முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம் அல்லது முன்னாள் மேயர் செ.ராமச்சந்திரன் இருவரில் ஒருவருக்கு சீட் எனப் பேச்சு அடிபடுகிறது. அம்பலத்தார் என்ற முறையில் ராமச்சந்திரனுக்கு புறநகர் மா.செ. மூர்த்தி ஆதரவாக உள்ளார். மாநகர மா.செ. தளபதி, முன்னாள் மா.செ. வேலுச்சாமி உள்ளிட்டோர் பொன்.முத்துவுக்கு ஆதரவு. மதுரை இல்லாவிட்டால் தேனி என்ற எண்ணத்தில் உள்ளார் பொன்.முத்து.

சிவகங்கை-(தவறு)

  தி.மு.க தரப்பில் முன்னாள் அமைச்சர் ரகுபதிக்கு இத்தொகுதி மீது ஒரு கண் இருக்கிறது. அதே நேரத்தில் பிற்படுத்தப்பட்ட சமுதாயமான உடையார் சமுதாயத் தைச் சேர்ந்த சிறுபான்மை கிறிஸ்தவ மதத்தினரான ஜோன்ஸ் ரூசோவும் பரிசீலனையில் உள்ளார். பெண் வேட்பாளராக ஜோன்ஸ் ரூசோவைக் களமிறக்கினால் வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும் என்ற கருத்தும் நிலவுகிறது.
ராமநாதபுரம்-(தவறு)

சிட்டிங் எம்.பி. ரித்தீஷ் வெளிப்படையான அழகிரி ஆதரவாளராகி விட்ட தால் அவர் இந்த முறை களமிறங்க முடியாது.

தமிழச்சி தங்கபாண்டியனிடம் சீட்டுக்கு பணம் கட்டும்படி ஸ்டாலின் சொன்னபோது, ""இல்லீங்கன்னா, என்னால ஒரு கோடி செலவு பண்ணுறதே கஷ்டம். எம்.எல்.ஏ. சீட் தந்தால் போதும்'' எனச் சொல்லிவிட்டா ராம் தமிழச்சி.

மா.செ. சுப.தங்கவேலன் மகன் சுப.த.சம்பத் சீட் எதிர்பார்த்திருந்தார். வாரிசுகளுக்கு சீட் இல்லை என்ற கலைஞரின் முடிவில் மாற்றம் ஏற்பட்டால், அவருக்கான வாய்ப்பு அதிகரிக்கும். சீட் கேட்டு பணம் கட்டியிருப்பவர்களில் பெருநாழி போஸ் முக்கியமானவர். இஸ்லாமியரான ரகுமான்கானை நிறுத்தலாம் என்ற பேச்சும் தலைமையிடம் எழுந்துள்ளது.

விருதுநகர்-(தவறு)

தி.மு.க மா.செ கே.கே. எஸ்.எஸ்.ஆரின் மெயின் டார்கெட் வைகோவைத் தோற்கடிப்பதுதானாம். வைகோவின் சமுதாயத்தைச் சேர்ந்த ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அண்ணாச்சிக்கு வேண்டியவர்தான் என்றாலும், வைகோவுக்கு டஃப் தருவாரா என்ற கேள்வி உள்ளது. மதுரை மாநகர் மா.செ தளபதி தனது மாவட்டத்திற்குட்பட்ட திரு மங்கலம் தொகுதி விருதுநர் எம்.பி. தொகுதிக்குள் வருவதால் அவரும் சீட் எதிர்பார்க்கிறார்.

நேர்காணலில் பங்கேற்று தன்னுடைய எதிர்பார்ப்பையும் வெற்றிவாய்ப்பையும் தலை மையிடம் தெரிவித்திருக்கிறார் தளபதி. எனினும், கே.கே. எஸ்.எஸ்.ஆர் தனது சாய்ஸாக வெயிட்டான கட்சிக்காரரைத் தேடிக்கொண்டிருக்கிறார்.

வைகோவையும் அ.தி.மு.க. வையும் எதிர்த்து ஜெயிக்கும் வலிமையுடனான வேட்பாளர் வேண்டும் என்பதுதான் அண்ணாச்சியின் தேடல் என்கிறார்கள் தி.மு.கவினர்.

கன்னியாகுமரி (தவறு)

தி.மு.க தரப்பில் சிட்டிங் எம்.பி. ஹெலன் டேவிட்சனுக்கே சீட் தரும் எண்ணத்தில் தலைமை உள்ளது. எனினும், மா.செ. சுரேஷ்ராஜன் வேறு வேட்பாளரை நிறுத்த முயற்சி செய்துகொண்டி ருக்கிறார்.

இதில் அரக்கோணம் தொகுதி வேட்பாளர் பற்றிய செய்தி மட்டும் ஜூவி,ரிப்போர்ட்டர்  இதழைப் போல நக்கீரனிலும் பட்டியல் வெளிவருவதற்கு மாறுதல் செய்தி வந்தது.

க மொத்தம் 15 வேட்பாளர் பெயர் தவறு. அதிலும் பாருங்கள்.வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் பிரபுவை வீட்டில் அண்ணியைப் பார்த்து விட்டுப் போ என்று சொன்னாராம்.ஆகவே அவருக்கு சீட் என்று எழுதியிருக்கிற‌து.நல்லாத் தான் சீட் கொடுக்குறாங்க நக்கீரனில்..

தேர்தலில் போட்டியிட  யாருக்கு சீட் கிடைக்கும் என்பது கடைசி வரைக்கும் தெரியாமல் இருக்கும் வாய்ப்பு அதிமுக வைப்போல திமுகவில் இல்லை என்பது உண்மை தான். முன்கூட்டியே மாவட்டச் செயலாளர்களுக்குத் தெரிந்து விடும்.அவர்களும் அதற்குத் தோதாக வேலையை ஆரம்பித்து விடுவார்கள்.அந்த வழியிலும் நக்கீரனால் வேட்பாளர்கள் பட்டியலைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

தொகுதிக்கு இரண்டு முதல் மூன்று பெயரை வலியுறுத்தினாலும் அந்தப்பட்டியலில் உள்ளவர்களுக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை.பாதிக்குப் பாதி புதிய முகங்கள் நிறுத்தப்பட்டுள்ள‌னர்.

மேலும் இந்த முறை திமுக வேட்பாளர் பட்டியலை 'தளபதி' என்று நக்கீரனால் புகழ் சூட்டப்ப‌டும் மு.க.ஸ்டாலின் தான் தேர்வு செய்துள்ளார்.அவர் மனதில் என்ன இருக்கிறது,யாரை நிறுத்தப் போகிறார் என்பதனைக் கூட துப்பறிய முடியாத நிலையில் தான் இருக்கிறது நக்கீரன்.

கடந்த 15 ஆண்டுகளாய் மத்தியில் ஆட்சி அதிகாரத்தை ருசி கண்ட திமுக வேட்பாளர் பட்டியல் கண்டிப்பாக கடைசி நாளில் முடிவு செய்யப்பட்டிருக்காது.

ஆக நக்கீரனின் 'துப்பறியும்' திறமை அறிவாலயத்தில் நீண்ட காலமாய் பொரி விற்கும் வயதான பெரியவருக்குத் தெரிந்த அள‌வுக்கு கூட இல்லை என்பது தான் உண்மை.

இது தான் நக்கீரனின் உண்மையான நிலை.தான் எந்தக் கட்சிக்கு காவடி எடுக்கிறதோ ? அந்தக் கட்சியில் என்ன நடக்கிற‌து..?அந்தக் கட்சியின் தலைவர் அல்ல‌து வருங்கால தலைவர் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்று கூட ஊகித்து செய்தி போட முடியாமல் பாதிக்குப் பாதி தப்பும் தவறுமாய் வெளியிடும் நிலையில் தான் நக்கீரன் 'திறமை' இருக்கிறது.

இந்த நக்கீரன் வெளியிடும் கருத்துக் 'கணிப்புகள்' எப்படிக் களத்தில் சென்று உண்மையாய் எடுக்கப்பட்டிருக்கும்..? திமுக தலைமையையும் அதன் தொண்டனையும் மகிழ்ச்சிப்படுத்தவும் எழுதப்பட்டதேயன்றி வேறொன்றுமில்லை.உண்மையை எழுதாமல் இவ்வாறு எழுதுவது உண்மையில் அக்கட்சிக்கு எந்தப் பலனையும் தராது.கெடுதலைத் தான் தரும்.வெற்றிக்கு உழைக்க எண்ணியுள்ள அக்கட்சியின் தொண்டனை முடக்கவே உதவும்.

இப்படியே எழுதிக்கொண்டிருந்தால் இப்பொழுது வாங்கும் கொஞ்சம் திமுக காரன் கூட வாங்க மாட்டான்.அதற்குப்பிறகு ஆசிரியர் குழுவுக்கு வேலை இருக்காது.

நக்கீரன் பாலஜோதிடம்,நக்கீரன் சினிமா,நக்கீரன் ஓம்,நக்கீரன் சினிக்கூத்து போன்ற இதழ்களில் தான் நக்கீரன் ஆசிரியர் குழு கவனம் செலுத்தி துப்பறிய வேண்டியிருக்கும்.

நக்கீரன் வெளியிட்டுள்ள 'கணிப்புகள்' ஒருவேளை பலித்தால் அது 'காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதை'யாகத் தான் இருக்கும்.

Sunday 20 April 2014

பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்கும்...!



ஜூனியர் விகடன் தனது அடுத்த‌ கருத்துக் க‌ணிப்பு என்று ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதுவரை பல கட்டங்களில் கருத்துக் கணிப்பை நடத்தி பல கட்டமாக வெளியிட்டு வாசகனின் பாக்கெட்டில் இருந்து பணத்தை பிடுங்கியது போதாது என்று இறுதியாக அனைத்தையும் தொகுத்தும்,புதிய மற்றும் இறுதி கணிப்பை வெளியிட்டுள்ளது.

ஜூனியர் விகடனின் மோடி பாசம் இதில் வெறியாக வெளிப்பட்டுள்ள‌து.மோடி பிரதமர் பதவியைப்பிடிப்பதற்கு எப்ப‌டி எதற்கும் தயாராய் இருக்கிறாரோ, அதைப்போல அவருக்கு காவடி தூக்கும் ஜூனியர் விகடனும் ஜமுக்காளத்தில் வடிகட்டிய‌ பொய்யை உரைத்து விற்பனையை அதிகரிப்பதற்கும், தனது நோக்கத்தை நிறைவேற்றுவதற்கும் இதுவரை வெளியிட்ட சர்வேக்கள் போதாது என்று இப்பொழுது இறுதி சர்வே வெளியிட்டுள்ளது..







இதன் படி பார்த்தால்  தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணிஅதிக வாக்குகளை பெறும்.அதற்கடுத்த இடங்களை முறையே அதிமுக மற்றும் திமுக பெறும் என்றும்,நரேந்திர மோடி பிரதம்ராக மக்களின் ஏகோபித்த ஆதரவு இருக்கிறது என சொல்கிறது.

ஜூனியர் விகடன் சர்வே சரி தானா என‌ அம்பலப்படுத்த மக்கள் தீர்ப்பு மே 16 இல் வெளிவரும்.

அப்பொழுது இது குறித்து எழுதுவோம்.
**

ஆனால் இதை வெளியிட்டு  ஜூனியர் விகடன் ஒரு பெருமைமிகு புராணமும் பாடியிருக்கிறது.

//நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களின்போது மக்கள் மனதைப் படம் பிடிக்கும் கருத்துக் கணிப்புகளை 1999-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இருந்து வாசகர்களுக்கு வெளியிட்டு வருகிறோம். இவை மக்கள் மனதைப் படம் பிடிப்பதாக, வெற்றி, தோல்விகளுக்கு மிக நெருக்கமாக அமைந்துள்ளன. அந்த வரிசையில் இந்தத் தேர்தலை முன்னிட்டும் கருத்துக் கணிப்புகளை எடுக்கத் தொடங்கினோம். //

ஜூனியர் விகடன் கருத்துக் கணிப்புகள் உண்மையில் மக்கள் மனத்தைப் பிரதிபலிப்பவையாக இருந்துள்ளனவா ?

அதன் கருத்துக்கணிப்புகள் இதுவரை பொய்த்ததே இல்லையா..?

இந்த வாக்கியத்தின் உண்மைத்தன்மையை உணர‌ அதிகம் மெனக்கெட வேண்டியது இல்லை.2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் ஜூவி வெளியிட்ட‌ கருத்துக்கணிப்பு ஒன்றே போதும்







அந்தக் கருத்துக் கணிப்பிலும் பாருங்கள்.ஜெயலலிதாவுக்கு முதல் பாதகமானது என்று எதைச் சொல்லுகிறது என்றால்,ஜெயலலிதா திருந்தவில்லை என வைகோ சொன்னாராம்.அது தான் ஜெயலலிதாவுக்கு மிகப்பெரிய பாதகமாம்.கடந்த தேர்தலில் நிற்கவே வக்கற்று காணாமல் போன வைகோ சொன்னதை நம்பி மக்கள் ஜெயலலிதாவுக்கு பாதகமாய் இருக்கிறார்கள் என்று சொன்னது மிகப்பெரிய காமெடி. 

இந்தத் தேர்தலில் அதிமுகவுக்கு 141 இடங்களும் திமுகவுக்கு 92 இடங்களும் மற்றவர்களுக்கு 1 இடமும் கிடைக்கும் எனக் கூறியது ஜூனியர் விகடன். ஆனால் முடிவு என்ன ஆனது என்பது நமக்குத் தெரியும்.




திமுக கூட்டணிக்கு  வெறும் 31 தொகுதிகள் தான் கிடைத்தன.

இது தான் ஜூனியர் விகடன் கருத்துக் கணிப்பின் யோக்கியதை.92 தொகுதிகள் எங்கே..? 31 தொகுதிகள் எங்கே..?
சரி தேர்தல் முடிவுகள் ஜூ.வி. வெளியிட்டதற்கு மாறாய் வந்தவுடன்,தனது கருத்துக்கணிப்புகள் பொய்த்துப் போனதற்காய் அல்லது சிறு சறுக்கல் என்றாவது காரணம் சொல்லி  குறைந்த பட்சம் ஒரு வருத்தம் தெரிவித்திருக்க வேண்டுமா இல்லையா..அதுவும் இல்லை.


தேர்தல் முடிவுக்குப் பின் வந்த ஜூவியில் என்ன எழுதினார்கள் தெரியுமா..கழுகார் என்ற பெயரில்,

அடடா... உம் கருத்துக் கணிப்புக்காக, ஜூ.வி. நிருபர் படைக்கு தனியாக ஒரு பூங்கொத்தை நான் கொண்டுவந்திருக்க வேண்டும்!'' என்ற கழுகாரைப் பேசவே விடாமல், எஸ்.எம்.எஸ்-கள் வந்து குவிந்துகொண்டு இருந்தன. 

(2011 மே 18 தேதியிட்ட இதழ் கழுகாரில் )

மிகப்பெரிய தவறைப் பற்றி கூச்சம் எதுவும் படாமல் தான் மிகச்சரியாக கருத்துக் கணிப்பை வெளியிட்டது போலத் தனக்குத் தானே பாராட்டிக் கொண்டது கழுகார் என்ற பெயரில்.

து தான் ஜூ.வி.அப்பொழுதைய பரபரப்பிற்காக எதையாவது எழுதி விற்றுவிட்டு,தான் எழுதியதற்கு மாறாய் எந்த முடிவுகள் வந்தாலும் அது குறித்து துளியும் கவலைப்படாமல்,தான் சொன்னது மட்டும் நடந்தது மாதிரியான தோற்றத்தை உருவாக்குவதில் அதனை மிஞ்ச யாரும் இல்லை.வாசகனை மடையனாக கருதுவதில் அதற்கு நிகர் அது தான்.

இவ்வாறு 3 வருடங்களுக்கு முன்னர் திமுக 92 இடங்கள் ஜெயிக்கும் என்று சொல்லி அம்பலப்பட்ட ஜூனியர் விகடன் தான் இப்பொழுது மோடிக்கு 50.68 சதவீகித வாக்குகள் தமிழ்நட்டில் கிடைக்கும் என்று சொல்கிறது.

அத்துடன் இல்லாமல் எங்கள் கருத்துக் கணிப்புகள் எப்பொழுதும் மக்கள் மனதைப் படம் பிடிப்பதாக,வெற்றி தோல்விகளுக்கு மிக நெருக்கமாக அமைந்துள்ள‌ன என்று நெஞ்சை நிமிர்த்திச் சவடால் வேறு.

உண்மையை ஒரு கணம் கூட மறந்தும் பேசக் கூடாது என்று அலுவலகம் நுழையும் பொழுது சபதம் எடுப்பார்களோ..?

'பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காது' என்று ஒரு பழமொழி உண்டு.அது மட்டும் உண்மையாக இருந்தால், ஜூனியர் விகடனில் யாருக்கும் ஒருவேளைச் சோறு கூடக் கிடைக்காது.

Wednesday 16 April 2014

ஜெயலலிதாவை எதிர்க்கும் 'குமுதம் ரிப்போர்ட்டர்' வரதராஜன்..!



ஜூனியர் விகடன் இதழைத் தொடர்ந்து வரதராஜனின் 'குமுதம் ரிப்போர்ட்டர்' வாரமிருமுறை இதழும் தனது கருத்துக் கணிப்பு சர்வேக்களை வெளியிடத் தொடங்கியிருக்கிறது.

நாம் பலமுறை சொல்லியிருந்தாலும்,மீண்டும் மீண்டும் பதிவு செய்யத் தான் வேண்டியிருக்கிறது.குமுதம் செட்டியாரின் வாரிசுக்கு மட்டும் சொந்தமான‌ சொத்துக்களை தன்வசம் ஆக்கிக்கொண்ட வரதராஜன், கருத்துக்கணிப்பை மட்டும் சும்மா விட்டு வைத்திருப்பாரா..?

இதற்கு மேல் எழுத ஒருவரும் இல்லை என்னும் அளவுக்கு ஆட்களை வைத்து எழுதியிருக்கிறார்.நம் எதிர்பார்ப்பிற்கு மாறாக எதுவும் இல்லை. ஆனால் அதற்காக நமக்கு வேலை வைக்காமலும் இல்லை.

யாருக்கு ஓட்டுப் போடுவார்கள்? என்று தான் வழக்கமாய் கருத்துக் கணிப்புகள் இருக்கும்.ஆனாலும் இங்கோ நேர் எதிர்.யார் மீது தமிழ் நாட்டு மக்கள் படுகோபமாய் இருக்கிறார்கள், யாருக்கு ஓட்டுப் போட மாட்டார்கள் என்று கருத்துக் கணிப்பாம்.

இதன் மூலம் யாருக்கு வெற்றி ? என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டுமாம். எதையும் குறுக்காகச் சிந்திப்பது தானே வ.ரா.கும்பலின் இயல்பு!

அதற்காக, தேர்தல் நேரத்தில் அவர்கள் என்ன அருளியிருக்கிறார்கள் என்பதைப் பார்க்காமல் இருக்கமுடியுமா? வேறு வழியில்லாமல் படித்துத் தொலைந்தோம்.




கருத்துக் கணிப்பின் அடிநாதம் இது தான்.

தமிழ்நாட்டின் 39 பாராளுமன்ற‌ தொகுதிகளில் 66100 நபர்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தினார்களாம்.

கருத்துக்கணிப்பின் அடிப்படையையே ஆட்டம் காணும் சில கேள்விகள் இதில் எழுகின்றன.

இவர்கள் கணக்குப் படி தொகுதிக்கு 1695 நபர்களிடம் கருத்துக் கேட்டிருக்கிறார்கள்.அதிலும் போகிற போக்கில் வருபவர் போகிறவர் என்று கேட்கப்பட்டவை அல்ல.

ஆண்கள்,பெண்கள்,முதல்முறை வாக்காளர்கள்,
மாண‌வர்கள்,சுயதொழில் செய்பவர்கள்,பள்ளிக்கல்வி படித்தவர்கள்,பள்ளிக் கல்வி முடிக்காதவர்கள்,பட்டதாரிகள்,தனியார் நிறுவன ஊழியர்கள்,அரசு ஊழியர்கள்,விவசாயிகள்,மாணவர்கள் என பலதரப்பட்டவர்களைச் சந்தித்து அவர்களின் ஆதரவு,எதிர்ப்பு என தனித்தனியாகத் தொகுத்திருக்கிறார்கள்.




ஒரு பாராளுமன்றத் தொகுதிக்குத் தோராயமாக 15 லட்சம் வாக்காளர்கள் இருப்பார்கள்.இவர்களின் வரையறையைப் பார்த்தால் ஒரு பாராளுமன்றத் தொகுதிக்கு 1695 நபர்களை  மேற்கண்ட பல்வேறு பிரிவுகளில் சல்லடை போட்டுத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

அதிலும் மேற்சொன்ன ஒவ்வொரு பிரிவு நபர்களிலும் மிகச்சரியாக கண்டுபிடிப்பதும்,தேர்ந்தெடுப்பதும் மிக மிகச் சவாலான பணி.மிக நீண்ட காலம் பிடிக்கும் பணி. அதிலும் அறிவு சார் பணி.இதையெல்லாம் தாண்டி இதற்கு நிறைய மனித‌ உழைப்புத் தேவைப்படும்.

ஆனால் மேற்கண்டவற்றைச் செய்திருப்பதாக குமுதம் ரிப்போர்ட்டர் சொல்லியிருக்கிற‌து.

குமுதம் ரிப்போர்ட்டரில் சீனியர் நிருபர்கள்,நிருபர்கள் உட்பட மொத்தம் 10 பேர் மட்டும் பணியாற்றுகின்றார்கள்.இன்னும் தற்காலிக,நிரந்தரப்படுத்தப்படாத 5 நிருபர்கள் இருப்பதாய் வைத்துக் கொண்டாலும் மொத்தம் 15 பேர் தான்.வெறும் 15 பேர் இவ்வளவு பெரிய பணியை எப்படிச் செய்தார்கள்..? (அதுவும் தஙகளது பிற தேர்தல் ரிப்போர்ட்டிங் பணிகளுக்கு இடையில் )

விகடன் குழுமத்திற்கு இருப்பது போல 'மாணவ நிருபர்' என்னும் பெயரிலான புத்திசாலி அடிமைகளும் குமுதம் ரிப்போர்ட்டருக்கு இல்லை.

ஆக குமுதம் ரிப்போர்ட்டர் இப்படி ஒரு கருத்துக் கணிப்பை உண்மையாய் நடத்த வாய்ப்பே இல்லை என்னும் முடிவுக்கு வர வேண்டியிருக்கிற‌து..

நரேந்திர மோடிக்கு ஆதரவுக் கருத்துக் கணிப்பு என்பதால் பாரதிய ஜனதாக் கட்சியின் அலுவலகத்தில் உள்ள‌ சேவகர்களிடம் கொடுத்து எழுதி வாங்கி விட்டார்களா..? இல்லை குமுத‌ம் ரிப்போர்ட்டர்அலுவலகத்தில் அமர்ந்து,பொய் சொல்வது தான் சொல்கிறோம், மொத்தமாய் குத்து மதிப்பாய்,பிரம்மாண்டமாய்  66100 நபர்கள் என்று புளுகித் தள்ளி விட்டார்களா...?

நாம் என்ன முடிவுக்கு வர முடிகிறது என்றால், கடைசிக் காரண‌த்திற்குத் தான் வாய்ப்பு இருக்கிறது. இந்த அபத்தம் நம்மைக் கேள்வி கேட்க யார் இருக்கிறார்கள் என்ற மிதப்பில் மட்டும் வருவதல்ல இது.அரைகுறை முட்டாள் தனத்திலும் வருவது தான் இது.

இதே கால கட்டத்தில் கடந்த வாரம் இது போன்ற‌ ஒரு கருத்துக் கணிப்பை வெளியிட்ட ஜூனியர் விகடன் மொத்தம் தமிழ்நாடு முழுவதிலும் மொத்தம் 11700 பேரிடம் (இன்னொரு சர்வேயில் 5500 நபர்களிடம் எடுத்ததாகச் சொல்லியது ஜூவி.)கருத்துக் கேட்டதாக எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

நாம் ஆரம்பத்தில் இருந்து சொல்லிவருவது தான். கருத்துக்கணிப்பை இட்டுக்கட்டி எழுதுவதில் மற்றவர்களை விடத் 'தெளிவும்' லாவகமும் 'பாரம்பரியமும்' மிக்க விகடன் ஆட்கள்தான் கை தேர்ந்தவர்கள்.

வரதராஜனைப் போலவே, திடீர் அதிர்ஷ்டத்தால் பத்திரிகையாளர்களாக ஆன வ.ரா. கும்பலுக்கு சுட்டுப் போட்டாலும் அந்த கூறு வராது.
**
ருத்துக் கணிப்பின் அடிப்படையே ஆட்டம் கண்ட நிலையில் அதில் வெளியிட்ட முடிவுகளின் உண்மைத் தன்மையைப் பார்ப்போம்.

இவர்களின் கருத்துக்கணிபின்படி, தமிழ்நாட்டு மக்கள் காங்கிரஸ் மீது அதிக கோபமாக இருக்கிறார்கள்.



நடப்பது இந்திய நாட்டின் நாடாளுமன்றத் தேர்தல்.ஆகவே கடந்த 10 ஆண்டுகளாய் மத்தியில் ஆட்சி பொறுப்பை  ஏற்று நிர்வாகம் செய்தவர்கள் மீது தான் மக்களின் கோபம் இருக்கும்.ஆக இது சரிதான்.

அதே போல திமுக மீதும் அதே அளவுக்கு கோபத்தில் இருப்பதாய் கருத்துக் கணிப்பு சொல்கிறது. ஒரு விழுக்காடு கூட மாற்றம் இல்லை.அவ்வளவு துல்லியம்.

தி.மு.க. கடைசி வரை ஆட்சி அதிகாரத்தில் இருந்து அனைத்தையும் ருசித்து அனுபவித்து விட்டு கடைசி சில மாதங்கள் விலகி இருப்பதாய் பாவ்லா காட்டினாலும்,பல நாடகங்களை நடத்தினாலும் மக்கள் மிகவும் விழிப்பாய்த் தான் இருக்கிறார்கள்,ஆக்வே அவர்கள் மீதும் மக்களின் கோபம் சரி சமமாய் இருக்கிறது என்று சொல்வதிலும் தர்க்க ரீதியாய் எதுவும் பிழை இல்லை தான்.

அடுத்ததாக மக்கள் நேற்று முளைத்த‌ 'ஆம் ஆத்மி' மீது படு கோபமாய் இருக்கிறார்களாம்.காங்கிரஸ்,தி.மு.க. வை விடக் கொஞ்சம் குறைந்த அளவில் அதாவது 15.5 விழுக்காடு மக்கள் கோபமாய் இருக்கிறார்களாம்.

கேட்பதற்கு படு காமெடியாய் இருந்தாலும் முட்டாள்தனமாகவும், அபத்தமாகவும் இருக்கிறது.

பெரு நகரங்களில் உள்ள குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்களைத்தவிர, இங்குள்ள பெரும்பான்மையோருக்கு இன்னும் ஆம் ஆத்மி என்னும் கட்சி இருப்பதே தெரியவில்லை. தமிழ்நாட்டின் அனைத்து ஊடகங்களிலும் நாள் முழுவதும் திட்டமிட்டு பரப்பப்படும் வெளிச்சத்திலும் இன்னும் மோடியே நம்மூர்க் கிராமங்களில் போய்ச்சேராத நிலையில், ஆம் ஆத்மியின் பிரபலம் அவ்வளவு சீக்கிரத்தில் நிகழ்ந்துவிடுமா? அதுவும் அதை எதிர் விமர்சனங்களோடு மக்கள் பார்க்கும்நிலை உருவாகிவிட்டதா? என்றெல்லாம் யாரும் யோசிக்கமாட்டார்கள் என இந்த முட்டாள் கும்பல் நினைத்துக் கொள்கிறதா? அல்லது நினைக்கக்கூடாது என பத்திரிகை அதிகாரத்தால் திணிக்கமுயல்கிறதா?

ஆம் ஆத்மி கட்சியின் மீது தமிழ்நாட்டு மக்கள் படுகோபமாய் இருக்கிறார்கள் என்பது எந்த அடிப்படையில்..?

காங்கிர‌சின் நகலாய் இந்திய நாட்டை மூன்று முறை ஆட்சி செய்த பாரதிய ஜனதா மீது, தமிழ்நாட்டை இப்பொழுது ஆட்சி செய்யும் அதிமுகவைவிட மக்கள் அதிக  கோபமாக ஆம் ஆத்மி கட்சியின் மீது இருக்கிறார்கள் எனறு எழுதுகிறார்கள், இந்த 'அதிமேதாவிகள்'!

டெல்லியில்தான் 43 நாட்கள் ஆட்சியில் இருந்திருக்கிறது ஆம் ஆத்மி .டெல்லி மக்கள் ஆம் ஆத்மி மீது கோபமாய் இருக்கிறார்கள் என்று சொல்வதிலாவது ஒரு அர்த்தம் இருக்கிறது.கருத்துக் கணிப்பு எடுத்தது டெல்லியிலா..?தமிழ்நாட்டிலா..?

ஒருவேளை டெல்லியைப்போல காங்கிர‌சுக்கு மாற்றாய் ஆம் ஆத்மிக்கு ஓட்டுப் போட்டு விடுவார்களோ என்னும் அதீதப்பதற்றத்திலும், வரதராஜனின் உள்ளம் கவர் நாயகன் நரேந்திர மோடி மட்டுமே பிரதமராய் வர வேண்டும் என்னும் உள்ளக் கிடக்கையிலும் எழுதப்பட்டது தான் இது.அதனால் தான் பூத் ஏஜெண்டுக்கு கூட ஆள் இல்லாத ஆம் ஆத்மியை இங்கு மிகப்பெரிய எதிரியாய்ச் சித்தரிக்கிறார்கள்.

கவலைப்பாடாதீர்கள் வ.ரா.!

நீங்கள் அதீதமாகப் பதற்றப்படுவது போல ஒருக்காலும், ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்துவிடாது. நம்புங்கள்!

அப்படி ஒருவேளை வந்தாலும்,செட்டியாருக்கு எதிராக உங்களைத் தக்க வைக்க கட்சிக்கு ஒரு அதிகாரத்தரகர் உங்கள் கைவசம் இருப்பது போல,அதிலும் ஒரு ஆளைப்பிடித்து விடலாம்.
**


இனி இறுதிப்பகுதி

//வேலூரில் இஸ்லாமியர் ஒருவர் மோடி மீது எனக்குஅபிப்ராய பேதம் உண்டு. ஆனால் அவர் தான் பிரதமராய் வர வேண்டும் என்று சொன்னாராம்.//

மேலே பல பிரிவுகளில் கருத்துக் கேட்டதாக பல வரைபடங்களை வெளியிட்டுள்ளவர்கள் இஸ்லாமியர்கள் அல்லது சிறுபான்மையினரிடம் கருத்துக் கேட்டதாக எங்கும் பதிவு செய்யவில்லை.ஆக இதுவும் பொய்.

இதைத்த‌விர ஒட்டுமொத்த கருத்துக்கணிப்பின் நோக்கம் எது என்பதை இவ்வாறு எழுதப்பட்டுள்ளதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.
அதே போல அது மோசடி என்பதையும் நமது யதார்த்த வாழ்வில்,நாம் அறிந்துள்ள‌ இஸ்லாமியர்கள் மூலம் புரிந்து கொள்ள‌லாம். அதற்கு எங்கும் செல்ல வேண்டியதில்லை,குமுதம் அலுவலகத்தில் கருத்துக் கேட்டாலே போதுமான‌து.




தற்கு மேல் இந்தக் கருத்துக்கணிப்பு குறித்து எழுத என்ன இருக்கிற‌து.?

நான்காவது தூண் எப்படி செல்லரித்துப் போய்க்கிடக்கிறது என்பதற்கு 'குமுதம் ரிப்போர்ட்டர்' ஒரு உரைகல்.

கொசுறு: 

இந்தக் கருத்துக் கணிப்பின் மூலம் ஆளுங்கட்சியின் கோபத்தை வரதராஜன் சம்பாதித்துள்ளார் என்றும் கோட்டை வட்டாரத்தில் கூறப்படுகிறது.

ஜெயலலிதா, பிரதமர் ஆகத்தான் தமிழ்நாட்டில் அதிக செல்வாக்கு இருக்கிறது,அவர்தான் அடுத்த பிரதமர் என்று அக்கட்சியினர் தீவிரப் பிரச்சாரம் செய்து சொல்லும் நிலையில், நரேந்திரமோடிக்கே அதிக செல்வாக்கு,ஜெயலலிதாவுக்கு செல்வாக்கு இல்லை என்று குமுதம் ரிப்போர்ட்டரில் சொல்லியிருப்பதும்,அவரது படத்தைக் கூட செய்தியில் பிரசுரிக்காததும் ஆட்சியாளர்களிடம் உச்சகட்டக் கோபத்தை உண்டாக்கியுள்ளதாம். தேர்தல் முடிந்ததும் உக்கிரப்பார்வை  உறுதி என்கிறார்கள்.

இதனால் வெலவெலத்துப் போன வரதுவும் அவரது கோஷ்டியினரும் அதைச் சரிக்கட்டும் விதம் அடுத்து என்ன செய்ய‌லாம்   தீவிரமாய் மண்டையைக் குடைந்து கொண்டிருக்கிறார்களாம்.

Sunday 6 April 2014

குமுதம் வேட்பாளர் அரக்கோணத்தில் போட்டி...!



குமுதம் இந்த வார இதழில் தேர்தல் கருத்துக் கணிப்பை வெளியிடத் தொடங்கியுள்ளனர்.

அரசியல் என்ற பெயரில் அக்கப்போர்களை வெளியிடும் 'புலனாய்வு' இதழ்களில்தான், வழக்கமாக தேர்தல் கருத்துக்கணிப்பு என்ற பெயரில் தங்கள் விருப்பங்களை பக்கம்பக்கமாக வெளியிடுவார்கள். பல்சுவை இதழ்கள் என்ற பெயரில் சினிமாவையும் ஆபாசத்தையும் கலந்துகட்டி முதன்மைப் படுத்தி விற்பனை செய்யும் குமுதம், விகடன் போன்றவை இதைச் செய்வது இல்லை. அந்த வாசகர் வட்டம் வேறு என்பது மட்டுமல்ல, இதை வெளியிடுவதற்குத் தான், பொழுதுபோக்கு பத்திரிகை நிறுவனம் ஒவ்வொன்றிலும் தனியாகப் புலனாய்வு இதழ்களை நடத்துகின்றனவே!

ஆனாலும், குமுதம் இதழில் இந்தத் தேர்தலையொட்டி கருத்துக் கணிப்பு என்ற பெயரில் தொகுதிவாரியான செய்தி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. செட்டியார் சொத்தை, நிரந்தரமாய்த் தனதாக்க எந்த எல்லைக்கும் செல்லத் தயாராய் இருக்கும் ஒரு கும்பல், ஒரே நேரத்தில் ஜெயலலிதாவுக்கும், மோடிக்கும் சேர்த்து ஜே போட்டுக் காரியம் சாதிக்கத் துடிக்கிறது.

ப்படிப்பட்ட கருத்துக் கணிப்பு முடிவுகள் எப்படி இருக்கும் என்பதும், யாருக்கு வெற்றி மாலை சூடும் என்பதும் தமிழ்வாணனின் மர்மக் கதை முடிச்சு அல்ல.

அதன்படியே, கருத்துக்கணிப்பில் கட்சிகளின் பெயர்ப்பட்டியலில், அதிமுகவுக்கு அடுத்ததாக தமிழகத்தின் பிரதான கட்சியான தி.மு.க.அணி இடம்பெற‌வில்லை; தொகுதிக்கு நூறு நபர்கள்கூட இல்லாத பா.ஜ.க.தான் இடம்பெற்றிருக்கிறது.



இந்தக் கருத்துக் கணிப்பு விவரங்கள் எல்லாம் பெயரளவுக்குகூட களத்தில் சென்று எடுக்கப்படவில்லை என்பதும் புகைப்படங்கள் மட்டும் தொகுதிக்கு இரண்டு இடங்களில் சென்று எடுத்திருப்பார்கள் என்பதும் நன்றாகவே தெரிகிறது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என முன்னோர்கள் சும்மாவா, சொல்லிவிட்டுப் போனார்கள்.

அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதிக்கு திமுக சார்பில் போட்டியிடுபவர் என்.ஆர்.இளங்கோ என்ற வழக்கறிஞர்.



ஆனால் அரக்கோணம் தொகுதியில் இப்போதைய எம்.பி. ஜெகத்ரட்சகனே மீண்டும் போட்டியிடுவதாக குமுதம் இதழில், ஏதோ ஒரு செய்தியின் மூலையில், கவனக்குறைவாக என்கிறபடி இல்லை; தொகுதிவாரியான கருத்துக்கணிப்பில் அரக்கோணம் தொகுதியைப் பற்றிய செய்தியில், இது நிகழ்த்தப்பட்டு இருக்கிறது.

பேருக்காவது, தொகுதிப் பக்கம் சென்று உண்மையாய் கருத்துக்கணிப்பு எடுத்திருந்தால், இப்படி ஒன்று நடந்திருக்குமா?  சென்னையில் உட்கார்ந்துகொண்டு, விருப்பப்படி எழுதியதால், சென்ற முறை,2009 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட ஜெகத்ரட்சகன் பெயரே, எழுதியவரின் மனதில் இருந்ததால் இப்படி ஆகியிருக்கிறது.

ஒவ்வொரு பத்திரிகையும் ஒரு முத்திரை வாசகத்தை வைத்துக்கொள்வார்கள். அதற்கும் அவற்றின் எழுத்துகளுக்கும் சம்பந்தம் இருக்கிறதா என்பது வேறு! ஆனாலும், அவர்கள் மறுக்கும்வரை அதை அவர்களின் அடையாளமாகத்தானே நாம் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.

பிரதான போட்டியாளரின் பெயரையே தப்பாய் எழுதுவது தான் சிறந்த கருத்துக் கணிப்பின் லட்சணமா..?

( இத்தனைக்கும் குமுதம் ரிப்போர்ட்டர் உதவி ஆசிரியர் குலேந்திரன் பக்கத்து மாவட்டத்தைச் சேர்ந்தவர்.அவரிடமாவது எழுதும் முன் கேட்டிருக்கலாம்.)

தன் முத்திரை வாசகத்தில் புதுமையைக் கொண்ட குமுதம் இதழில், இப்படியும் புதுமை காட்டலாம் என முடிவெடுத்து இருக்கிறார்களோ, தெரியவில்லை!

இட்டுக்கட்டி எழுதுவது என்றும் அதனையும் உடல் வலிக்காமல் எழுதுவது என்றும் முடிவெடுத்தாகி விட்டது. அதை தவறில்லாமல் ஒழுங்காய் எழுதக்கூடாதா..? (இந்த மாதிரி விஷயங்களில் விகடன் ஆட்கள் தான் எக்ஸ்பர்ட்.) அதைக் கூட ஒழுங்காய் செய்யத் தெரியாத மக்குகளைத்தான், ஏசிடெக் கல்லூரியில் படித்த வரதராஜன் வேலைக்கு வைத்திருக்கிறாரா?

வரதராஜன் நடத்துற கருமாந்திரத்தை எல்லாம் காசு கொடுத்து வாங்கிப் படிக்கணும் என்பது இந்தச் சமூகத்தின் சாபக்கேடு.