Wednesday 24 December 2014

விகடனில் ப்ரியா தம்பி - "இவர் பிழைப்பு, அவர்கள் உழைப்பு " ..!

ப்ரியா தம்பி

டகங்களில் தகுதி,திறமை,அனுபவம் எல்லாம் இரண்டாம் பட்சம் தான். நிர்வாகம் அல்லது எடிட்டோரியலில் உயர் பொறுப்பில் இருப்பவர்களுடன் சாதி,நட்பு தொடங்கி என்ன காரணம் என்று அறுதியிட்டுச் சொல்ல முடியாத வண்ணம் வரைக்குமாக  ஒவ்வொருவரும் ஒருவித வலைப்பின்னலில் கோர்த்துக்கொண்டு தங்களது தகுதிக்கும் திறமைக்கும் எட்டாத  உயரத்தைப் பிடித்து விடுகின்றனர். இது  எப்பொழுதும் நடப்பது தான் என்றாலும் இப்பொழுது மிக அதிகமாய் நடக்கிறது.

உயர் பொறுப்பில் இருப்பவரின் நட்பும், கூச்சமில்லாமல் சுயமரியாதையற்று லாபி செய்யும் குறுக்குப் புத்தியும் அறிந்தால்,எவ்விதத் தகுதியுமற்ற ஒருவர் உயரே ஏறி உச்சாணிக்கொம்புக்கு வர முடியும் என்பதை அம்பலப்படுத்தும் பதிவு இது.

"ப்ரியா தம்பி' என்பவர் விகடன் குழுமத்தில் இருந்து வெளியாகும் 'டாக்டர் விகடனுக்கு' பொறுப்பாசிரியராய் ஒரு மாதத்திற்கு முன்பு நியமிக்கப்ப‌ட்டுள்ளார்.

இது பற்றிய செய்திக்குச் செல்வதற்கு முன் பிறிதொரு சம்பவத்தைப் பார்ப்போம்.

சென்னை பெருநகர குற்றவியல் நீதிமன்ற வளாகம், எழும்பூர். முதல் மாடி.

சென்னை பெருநகரத்தில் வசிக்கும்,பத்திரிகை நடத்த விரும்பும் 'பண்பாளர்கள்' அனைவரும் இந்த நீதிமன்றத்தில் தான், புது டில்லி  RNI அலுவலகத்தினால் ஒப்புதல் அளிக்கப்ப‌ட்ட தங்களது பத்திரிகையின் பெயரைப் பதிவு செய்ய வேண்டும்.அதன் பின் தான் பத்திரிகையை அச்சிட்டு வெளியிட முடியும்.

பதிவிற்கென‌ சில நடைமுறைகள் உள்ளன‌.

அதில் முக்கியமானது,பத்திரிகை வெளியீட்டாளர் ஒரு படிவமும்,அச்சிடும் அச்சக உரிமையாள‌ர் ஒரு அறிவிக்கை படிவத்தையும்  நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும்.

பத்திரிகை பெயர்,விலை, வெளியிடும் மொழி,முகவரி,ஆசிரியர் பெயர்,பதிப்பாளர் பெயர்,உரிமையாளர் பெயர்,காலம்,அச்சிடுபவர் பெயர் உட்பட அனைத்து விபரங்களையும் நிரப்பிய‌ படிவம் (FORM1 ) வெளியீட்டாளரால் அளிக்கப்படும்.

அச்சக உரிமையாள‌ர் கொடுக்கும் ஒப்புகைப் படிவத்தில், தான் குறிப்பிட்ட பத்திரிகையை அச்சிடுவதாக இருக்கும். இந்த அறிவிக்கையானது section 6,Press and registration of books act 1867 இன் படி உள்ள நடைமுறை. எந்த மொழி பத்திரிகை என்றாலும் இரண்டு படிவங்களும்  ஆங்கிலத்தில் இருக்கும்.

நிரப்பப் பட்ட இரண்டு படிவங்க‌ளையும் நீதிமன்ற‌த்தால் இதற்காக நியமிக்கப்ப‌ட்ட முதல் மாடியில் இருக்கும் அலுவலரிடம் கொடுத்த பின் அது பட்டியலில் இடப்படும். பெரும்பாலும் பதிவு செய்யும் நடைமுறை  வேலை நாட்களில் நீதிமன்றம் காலை 10.45 க்கு துவங்கியதும் முதல் அலுவலாக நடைபெறும் வழக்கம் இருக்கிறது.

பதிவுக்கு, ஒரு நாள் முன்பே இந்த படிவங்கள் அனைத்தும் நீதிமன்ற‌ அலுவலரிடம் சமர்ப்பிக்கப்பட்டு தவறுகள் திருத்தப்படுவதால், சமர்ப்பிக்கப்படும் படிவத்தில் பெரும்பாலும் தவறுகள் இருக்க வாய்ப்பு இல்லை. நீதிமன்றத்தில், சம்பிரதாயமான கேள்விகள் மட்டும் கேட்கப்படுவதாலும் சிக்கல் இல்லை.

என்று நமது பதிவு நாள் பட்டியலில் இடப்படுகின்றதோ அன்று, மாஜிஸ்டிரேட் முன்பு கூண்டில் ஏறி நின்று வெளியீட்டாளரும்,அச்சக உரிமையாளரும் ஒருவர் பின் ஒருவராக‌ பத்திரிகை குறித்த தகவலைக் கூறிப் பதிவு செய்யும் நடைமுறை இருக்கிறது. சில நேரம், மாஜிஸ்திரேட் எழுப்பும் வினாக்களுக்கு உரிய பதிலை கூற வேண்டும். (அதில் அவருக்குத் திருப்தி இல்லையென்றால் பதிவு அன்று நிறுத்தப்படும்.)

பெரும்பாலும் பதிவு எளிது முடிந்து விடும்.

னி விஷயத்துக்கு வருவோம்.

வழக்கம் போல் ஒரு அலுவல் நாள். சென்னை முதன்மை பெருநகர குற்றவியல் நீதிமன்றம்.எழும்பூர்.நீதீமன்ற அறை எண்.12.காலை நேரம்  10.45.

வழக்கமான நடைமுறையில் இல்லாமல், நீதிமன்ற அலுவல் துவங்க இருக்கும் சிறிது நேரத்துக்கு முன்பு ஒரு பத்திரிகையின் பதிவுக்கான ஆவணங்கள் சம்பந்தப்பட்ட அலுவலரிடம் கொடுக்கப்ப‌டுகிறது. நீதிமன்ற அலுவலரும் பதட்டத்தில் அவசர அவசரமாய் எதனையும் சரிபார்க்காமல் அனுமதிக்கிறார்.

வழக்கறிஞர்களும் தங்கள் வழக்குக்காய் வந்தவர்களாலும்,அலுவலர்களாலும் நீதிமன்றம் நிரம்பி இருக்கிறது.

வழக்கம் போல் முதலில் பத்திரிகை பதிவு நடைபெற ஆரம்பிக்கிறது.

பதிவுக்கான பத்திரிகையின் விபரம் இது தான்.

Oli vilakku.  Rs.10. Hindi magazine. Monthly 

'ஒளி விளக்கு' என்னும் இந்தி மொழி மாத பத்திரிகை.விலை ரூ.10. முதலில் வெளியீட்டாளர் கூண்டில் ஏறி நிற்கிறார்.


(இந்த பத்திரிகையைப் பொறுத்த வரை  வெளியீட்டாளர் தான் எடிட்டர் பொறுப்பையும் வகிக்கிறார்.)

விண்ண‌ப்ப படிவ‌ம் தப்பும் தவறுமாய் இருக்கிறது.இதை ஆங்கிலத்தில் இப்ப‌டி எழுதி இருக்கிறார்கள்.

'ol vilakku விலைக்கு நேரே ரூ.1014 என்று இருக்கிறது.

மாஜிஸ்திரேட் படித்து விட்டு கோபமாகிறார்.

மாஜிஸ்திரேட்,பத்திரிகை பெயர் என்ன ? .

ஒளி விளக்கு.

"அப்படியா..? இங்கு அப்படி எழுத வில்லையே ?"

எதனால் இப்படிக் கேள்வி எழுகிறது என்பது தெரியாததால் இந்தக் கேள்விக்கு வெளியீட்டாளர் தடுமாறுகிறார்.

என்ன விலை ?

ரூ.10.

அங்கோ Rs..10/- என்பதற்குப் பதில் 1014 என்று இருக்கிற‌து. இந்தப் பதிலும் கடும் எரிச்சலை உண்டாக்குகிறது.

"நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் ரெண்டு பக்கத்தையே தப்பில்லாமல் ஒழுங்கா எழுதத் தெரியலை.நீங்க எப்படி 50 பக்கம் பத்திரிகை தயாரிப்பீங்க.? " என்று சொல்லி விட்டு அடுத்ததாய் பத்திரிகை அச்சிடுபவரை அழைக்கச் சொல்கிறார்.

வெளியீட்டாளருக்கு ஏற்பட்ட நிலையைப் பார்த்து,அவர் என்றுமில்லாத பயத்துடன் கூண்டில் ஏறுகிறார்.

வழக்கமான கேள்வி எதுவும் இல்லாமல் அச்சிடுபவரிடம் மாஜிஸ்திரேட் கேட்ட முதல் கேள்வி.

"உங்களுக்கு இந்தி எழுதப் படிக்கத் தெரியுமா..?"

அச்சிடுபவர் தயங்கித் தயங்கி,"எனக்கு ஹிந்தி கொஞ்சம் புரியும். பேசினால் ஓரளவுக்குப் புரிந்து கொள்வேன்"

கேட்ட கேள்விக்குப் பதில்."ஹிந்தி எழுதப்படிக்கத் தெரியுமா..?"

"தெரியாது." பளிச்சென உண்மையை ஒப்புக் கொள்கிறார்.

"அப்படின்னா இந்த பத்திரிகையை எப்படி படித்துப் பார்த்து அச்சிடுவீங்க.?  என்ன எழுதுகிறார்கள் என்பதை தெரியாமல் எப்படி நீங்கள் அச்சிடலாம்..? இது தவறுக்கு வழி வகுக்கும். இது சட்டப்ப‌டி தவறு. முதலில் இந்தி நன்கு படித்து விட்டு வாருங்கள். அதன்பின் பத்திரிகையை நீங்கள் அச்சிடலாம்."

 அந்தப்பத்திரிகை அன்று பதிவு செய்யப்ப‌டவில்லை. நிராகரிக்கப்படுகிறது.

இனி நாம் கட்டுரைக்கு வருவோம்.

இதனை அப்படியே பொருத்திப்பாருங்கள்.

ஒரு பத்திரிகையில் அச்சிடுபவரை விட ஆசிரியருக்கு முதன்மைப்பொறுப்பு இருக்கிறது. பொறுப்பாசிரியர் நியமிக்கப்ப‌ட்டால் அனைத்துப் பொறுப்பும் அவரைச் சார்ந்து விடுகிறது.

பத்திரிகையில் எதைப் பிரசுரிக்கலாம் என முடிவு செய்வதும்,அதை யாரிடம் இருந்து பெறலாம் என முடிவு செய்வதும்,அதன்பின் பிரசுரத்துக்காய் வரும் படைப்புகளைச் சரி பார்ப்பதும்,அதில் இருக்கும் பிழைகளையும் தவறுகளையும் சுட்டிக்காட்டித் திருத்துவதும்,வந்துள்ள கட்டுரை போதுமான விவரங்கள், தகவல்களுடன் இல்லாத பட்சத்தில் கூடுதல் விபரங்களைக் கோரிப்பெறுவதும் தான் பொறுப்பாசிரியரின் பணி.

மேற்கண்டவற்றைச் செய்வதற்கு, இதழ் எந்த உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கிறதோ அத்துறை குறித்த ஞானம் கொண்டிருக்க வேண்டும். இதழுக்குப் பங்களிப்பவர்கள் எது குறித்து எழுதுகிறார்களோ அத்துறை குறித்த விஷயங்களைத் தெரிந்திருக்க வேண்டும்.அரசியல் பத்திரிகை என்றால் அரசியல் ஞானமும்,திரைத்துறை குறித்த பத்திரிகை என்றால் அத்துறை குறித்த விஷயங்களையும் தெரிந்திருக்க வேண்டும்.

தினமணி ஆசிரியர் பொறுப்பு வகித்த‌ திரு.சம்பந்தமோ,தினகரன் ஆசிரியர் பொறுப்பு வகித்த‌ திரு.கதிர்வேலோ தாங்கள் வகித்த பொறுப்பை உணர்ந்தவர்கள்,அதற்கான தகுதியை உடையவர்கள்.இது போல‌ எத்தனையோ பேரை அடையாளம் காட்ட முடியும்.

இவ்வளவு ஏன்? விகடன் குழுமத்தின் அரசியல் பத்திரிகையான 'ஜூனியர் விகடன்' ஆசிரியராய் ப.திருமாவேலன் இருக்கிறார். இவருக்கு இதழில் ஒரு ரிப்போர்ட்டர் எழுதுவதை எடிட் செய்யும்,அதிலிருக்கும் தகவல்களைச் சரி பார்க்கும் திறனும்,தலைப்பு வைப்பதிலிருந்து அனைத்தையும்  செய்யும் வல்லமை  உண்டு. இதழ் முடிக்கும் கடைசி நேரத்தில் ஒரு முக்கிய அரசியல் நிகழ்வு நடக்கிறது என்றால் அது குறித்து அவரே எழுதி அந்தப்பக்கத்தை நிரப்பும் திறமையும் அவருக்கு உண்டு. தமிழ் நாட்டின் அரசியல் சூழல் அவருக்குத் தெரிந்ததனால் அவரால் இதைச் செய்ய முடிகிறது. இதே திருமாவேலனால் மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு அரசியல் பத்திரிகைக்கு ஆசிரியராய் நியமிக்கப்ப‌ட்டால் செயல்பட முடியாது என்பது வேறு விஷயம். அங்குள்ள அரசியல் அவருக்குப் பரிச்சயம் கிடையாது என்பது தான் காரணம்.

மேற்கண்டவர்களின் அரசியலில் நமக்கு முரண்பாடுகள் இருக்கலாம். ஆனால் வகித்த பொறுப்புக்குத் தகுதியானவர்கள் தான்.

விகடன் மட்டுமல்ல, எந்த நிறுவனத்திலும் அனுபவம் இல்லாத கத்துக்குட்டிகளை, எடுத்தவுடன் தலைமைப் பொறுப்புக்கு நியமிப்ப‌தில்லை. தினமலர்,தினகரன்,தினத்தந்தி போன்ற நிறுவனங்கள் ஒருவரை தலைமைப்பொறுப்புக்கு நியமிக்கிறது என்றால் அவர் எதற்கு ஆசிரியராய் நியமிக்கப்ப‌டுகிறாரோ அது குறித்து அனைத்தும் தெரிந்தவராகத் தான் இருப்பார். இவ்வளவு ஏன் ஒரு நிருபரைத் தேர்ந்தெடுக்கும் பொழுது எத்தனை கேள்விகள் கேட்கின்றனர்.

இது தான் நடைமுறை.

'பிரியா தம்பி' என்பவர் 'டாக்டர் விகடன்' பத்திரிகையின் பொறுப்பாசிரியராய் நியமிக்கப்ப‌ட்டிருக்கிறார்.

டாக்டர் விகடன்,ரா.கண்ணன்,ப்ரியா தம்பி,குங்குமம் டாக்டர்

பொறுப்பாசிரியர் பணிக்குத் தகுதி உடையவரா 'பிரியா தம்பி'  ..?

'டாக்டர் விகடன்' பத்திரிகை முழுக்க முழுக்க மருத்துவம் சார்ந்தது. வயிற்றில் இருக்கும் கருவிலிருந்து மரணத்தை எதிர்நோக்கி இருக்கும் உயிர்கள் வரை எதிர்கொள்ளும் உடல் நல சிக்கல்கள் அனைத்தையும் அந்த இதழ் விவாதிக்கிறது. மனித உடல்களில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு ஆலோசனையும்  தீர்வும் சொல்கிறது. இதில் பெரும்பாலானவற்றை மருத்துவத்துறையில் நிபுணத்துவம் மிக்க மருத்துவர்கள் மற்றும் இத்துறை சார்ந்தவர்கள் எழுதுகின்றனர். தங்களது ஆலோசனைகளைச் சொல்கின்றனர். இந்த இதழுக்குத்தான்  பொறுப்பாசிரியராய் 'பிரியா தம்பி' நியமிக்கப்பட்டுள்ளார். ஒட்டுமொத்த பத்திரிகையும் இவரது கட்டுப்பாட்டில் இருக்கிறது.

அவர்கள் எழுதும் கட்டுரையைச் சரி பார்ப்பதற்கும் அவர்கள் எழுதுவதில் தவறு இருந்தால் அதனைச் சுட்டிக்காட்டுவதற்கும், கட்டுரை அதிக பக்கங்கள் இருந்தால் அதனைச் சுருக்கவும், கட்டுரையில் சொல்லப்ப‌ட்டுள்ள‌வைகள் முழுமையாய் இல்லையென்றால் கூடுதலாய் தகவல்களைக் கோரவும் இத்துறையில் பரிச்சயம் இருக்க வேண்டும். இதுவும் போக மருத்துவ உலகில் சமீபத்திய அனைத்தும் அப்டேட்டாக இருக்க வேண்டும்.

நிபுணத்துவம் மிக்க மருத்துவர்களின் படைப்புகளைச் சரி பார்க்க அவர்கள் அளவுக்கு திற‌மையும் அறிவும் இல்லையென்றாலும்,குறைந்த பட்சம் அடிப்படை விஷயங்களாகவது தெரிந்திருக்க வேண்டும். ஆனால் 'டாக்டர் விகடன்' பொறுப்பாசிரிய‌ருக்கோ மருத்துவம் குறித்து எதுவும் தெரியாது. இவர் இதற்கு முன் மருத்துவ இதழ்கள் எதிலும் வேலை பார்க்கவில்லை. அல்லது மருத்துவம் தொடர்பான கட்டுரைகள் எதையும் எழுதவில்லை.

ஆனால் இவர் ஏற்றிருக்கும் வேலையோ 'டாக்டர் விகடன்' என்னும் மருத்துவ இதழுக்கு பொறுப்பாசிரியர்.

இதில் இடம் பெற்றிருக்கும்  கட்டுரைகள் பெரும்பாலானவற்றை எழுதுபவர்கள் புகழ் பெற்ற மருத்துவர்கள். இது எப்ப‌டிச் சரியாகும்..?

 நம் உயிரையும் உடலையும் குறித்து எழுதும் மருத்துவ இதழுக்கு பொறுப்பாசிரியராய் மருத்துவம் குறித்து தெரியாத ஒருவர் நியமிக்கப்ப‌டுகிறார் என்றால் அதன் வாசகனின் உயிர் குறித்து 'விகடன் குழுமம்' மயிர் அளவுக்கும் கவலைப்ப‌டவில்லை எனத் தெரிந்து கொள்ள‌லாம். மற்ற துறை இதழ்களின் நிருபர்களின் தகுதியின்மை போல் இதனை எளிதாய் ஒதுக்கித் தள்ளி விட முடியாது. ஏனென்றால் இது படிப்பவனின் உயிரும் உடல்நலமும் சம்பந்தப்பட்ட விஷயம்.

தண்டு வடப்பிரச்சனை குறித்தோ, நரம்புச்சிதைவு நோய் குறித்தோ,இதய மாற்று அறுவைச் சிகிச்சை குறித்தோ,மார்பகப் புற்று நோய் குறித்தோ,ஸ்டெம்செல் குறித்தோ ஒரு மருத்து நிபுண‌ர் கட்டுரை எழுதுகிறார் என வைத்துக் கொள்வோம்.

அந்தக்கட்டுரையை வெளியிடுவதில் பொறுப்பாசிரியராய் இருக்கும் பிரியா தம்பியின் பங்கு என்ன..? இதைப்பற்றி எதுவுமே தெரியாத இவரால் என்ன செய்ய முடியும்..? எழுதப்பட்ட விஷயங்கள் சரியான முறையில் சொல்லப்பட்டுள்ளதா இல்லையா என்பதை எப்படி முடிவு செய்வார்..? தகவல்கள் போதுமானவையா இல்லையா என்பதை எப்படி முடிவு செய்வார்..? மூன்று பக்க கட்டுரைக்கு நான்கு  பக்க மேட்டர்  வந்தால், அதனை எப்படி கையாள்வார்..?

அவர் எதைச் செய்தாலும் அதும் படிக்கும் வாசகனின் தலையில் தானே வந்து இடியாய் இறங்கும்.எதுவுமே தெரியாத ஒருவர் பொறுப்பாசிரியராய் பணியாற்றுவது படிக்கும் வாசகனின் உயிரைப் பணயம் வைக்கும் ஒன்றுக்கு சமம் இல்லையா..?

இல்லை,இல்லை  பிரியா தம்பி மருத்துவர்கள் எழுதும் இது போன்ற‌ கட்டுரையில் திருத்தமோ,எடிட்டிங்கோ எதுவும் செய்வதில்லை,அதனால் வாசகன் இது குறித்து கவலை கொள்ளத் தேவையில்லை என்று சொன்னால் அவர் வகிக்கும் பொறுப்பாசிரியர் பதவி என்பது அலுவலகத்தில் அமர்ந்து இருக்கும் அலங்காரப் பதவியா.? பதவிக்காக அவர் வாங்கும் நாற்பத்து சொச்சம் ஆயிரம் சம்பளம் என்பது தண்டமா..?

மலையாள சினிமா விமர்சனம் எழுதும் ஒருவரை,தொலைக்காட்சி சீரியலுக்கு வசனம்  எழுதிக்கொண்டிருந்த ஒருவரை டைம்பாஸ் இதழில் பணி செய்யச் சொல்வதில் நமக்குப் பிரச்சனை இல்லை,அல்லது விகடன் நிருபராக பத்தோடு ஒன்றாக பதினொன்றாக‌ பணி செய்யச் சொல்வதில் நமக்குப் பிரச்சனை இல்லை. ஆனால் ஒட்டுமொத்த  டாக்டர் விகடனைத் தாம்பாளத்தில் வைத்து கொடுத்திருக்கிறது விகடன்.

 தெருவுக்குத் தெரு புற்றீசல் போல் முளைத்திருக்கும் மெடிக்கல் ஸ்டோரை நடத்துவதற்கே, குறைந்த பட்சம் பார்மசி படிப்பில்  டிப்ளமோ படித்திருக்க வேண்டும் என சட்டம் சொல்கிறது. ரெண்டு பக்கம் ஒழுங்காய் எழுத தெரியவில்லை,உனக்கு வெளியீட்டாளர் கம் எடிட்டர் பதவி கேடா ? எனவும்,அச்சிடுவதை படிக்கத் தெரியாது எனவே நீ அச்சிடக் கூடாது என நீதிமன்றம் பதிவு செய்ய மறுக்கிறது. ஆனால் கட்டுரையாளர் எழுதுவதை படிக்கத் தெரிந்தாலும் அது பற்றி ஒன்றுமே தெரியாதவர் இங்கு பொறுப்பாசிரியர்.  நீதிமன்றத்தில் குட்டு வாங்கிய ஆசிரியர் நிலையில் இருப்பவர். மருத்துவம் குறித்து எதுவும் தெரியா விட்டாலும்,உள்ளடக்கம் பற்றி எதுவுமே தெரியா விட்டாலும் ஒருவரை பொறுப்பாசிரியராய் விகடன் குழுமமும் ஆசிரியர் ரா.கண்ணனும் நியமிக்கிறார்கள்.

உள்ளே ஒரு அறிவிப்பு இருக்கிறது.

மருத்துவர்களின் ஆலோசனையைப்பெற்றுத்தான் படிப்பவர்கள் செயல்பட வேண்டும் என்று. இதைப்படித்தால் 'புகை உள்ளத்துக்கும் உடலுக்கும் தீங்கானது' என்று அட்டையில் சிறியதாய் அச்சிட்டு விட்டு ஊரெங்கும் உள்ள‌வனின் உயிரைப்பறிக்கும் புகையிலை நிறுவனங்கள் தான் ஞாபகத்தில் வந்து தொலைக்கிறது.

இது தான் 80 ஆண்டு பாரம்பரிய நிறுவனம் எனச் சொல்லிக்கொள்ளும் விகடனின் தரம்.

(விகடன் மட்டுமல்ல 'டாக்டர் விகடன்','குமுதம் ஹெல்த்','குங்குமம் டாக்டர்' என அனைத்து பத்திரிகைகளுக்கும் கட்டுரையின் இந்தப்பகுதி பொருந்தும்.அப்படியே பொருத்திக் கொள்ளலாம்.)

துவரை தகுதியற்ற ஒருவரின் நியமனம் குறித்து நாம் பார்த்தோம். இனி நாம் இந்த நியமனத்தால் பாதிக்கப்ப‌ட்ட விகடன் பத்திரிகையாளர்களைப் பார்ப்போம் .




ந்த  பத்திரிகையிலும் பொறுப்பாசிரியர் பதவிக்கு ஒருவர் வர வேண்டுமென்றால் அவர் நிருபர்,மூத்த நிருபர்,உதவி ஆசிரியர் போன்ற படிநிலைகளைக் கடந்து வர வேண்டும். அனைத்து கட்டங்களையும் கடந்து வந்தால் தான் அவர் தான் வகிக்கும் உயர் பொறுப்புகளில் மிளிர முடியும் என்பதற்காகத் தான் இந்த நடைமுறை. இல்லையென்றால் கத்துக்குட்டிகள் எல்லாம் தலைமைப்பொறுப்புகளுக்கு வந்து விடுவார்கள் அல்லவா..?

வேறு பத்திரிகையில் இருந்து ஒருவர்,இன்னுமொரு பத்திரிகைக்கு வந்தாலும், அவரது பழைய பொறுப்பையோ அல்லது அதற்கு அடுத்த படிநிலையையோ தான் அடைய முடியும்.

நிருபர் பதவி வகித்த ஒருவர் புதிதாய் இன்னொரு நிறுவனத்தில் சேரும் பொழுது அவருக்கு ஆசிரியர் பதவியையோ,பொறுப்பாசிரியர் பதவியையோ யாரும் தருவதை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. அதுவும் நாளிதழ்களில் கனவில் கூட நினைக்க முடியாது. பிளாக்மெயில் பேர்வழிகள் நடத்தும் பத்திரிகைகள்,கட்டப்பஞ்சாயத்து நபர்கள் நடத்தும் பத்திரிகைகள் வேண்டுமானால் இப்படிச் செய்யும்.

பாரம்பரிய குழுமம் என்று பெருமை பீற்றிக்கொள்ளும் விகடன் இப்பொழுது இதைச் செய்துள்ளது. இது வரை இப்படி அந்த நிறுவனம் செய்ததில்லை.

அந்த நிறுவனத்தின் ஆசிரியர் பதவி வகித்த அனைவரும் இதுவரை விகடனில் கடைநிலையில் இருந்து தான் முன்னேறி இருக்கின்றனர். இல்லையென்றால் அதற்கான அனுபவத்துடனும் தகுதியுடனும்  பிற பத்திரிகையில் இருந்து வந்திருக்கின்றனர்.

அசோகன்,ரா.கண்ணன்,திருமாவேலன் என அனைவரும் இதைக்கடந்து வந்தவர்கள் தான்.

இவ்வளவு ஏன் ? விகடனின் வெளியீடான டைம்பாஸ் விகடனுக்கு ஆசிரியராய் நியமிக்கப்பட்டுள்ள ரீ.சிவக்குமார் என்ற சுகுணா திவாகர் வரை நியமனம் இப்படித்தான் நடந்துள்ள‌து.

ஆபாசம்,வக்கிரம்,சினிமா,கிசுகிசு,துணுக்கு,ஜாலி உள்ளடங்கிய பத்திரிகைக்கே விகடன் நிறுவனம், அந்த நிறுவனத்தில் நிருபர்,மூத்த நிருபர்,முதன்மை நிருபர் என படிநிலைகளைக் கடந்த ஒருவருக்குத் தான் முறைப்படி பொறுப்பைக் கொடுக்கிற‌து.

இனி விஷயத்துக்கு வருவோம்.

'டாக்டர் விகடன்' பொறுப்பாசிரியர் பதவி காலியாய் சிறிது காலம் இருக்கிறது. இதனை நிரப்ப வேண்டும். அதற்கு 'டாக்டர் விகடன்' வெளியிடுபவரும் ஆசிரியரும், விகடன் நிர்வாகமும் என்ன செய்ய வேண்டும்?

தற்பொழுது டாக்டர் விகடனில் உதவிப் பொறுப்பாசிரியர் பொறுப்பு வகிப்பவர் அதற்கான தகுதியுடன் இருந்தால் அவரை நியமனம் செய்ய வேண்டும்,அல்லது விகடன் குழுமத்தில் இருக்கும் பிற பத்திரிகையாளர்கள் யார் அதற்குத் தகுதியாய் இருக்கிறார்களோ அவர்களை நியமிக்க வேண்டும்,அல்லது வெளியில் இருந்து உரிய தகுதியுடன் ஒருவரை வேலைக்குத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஆனால் இங்கோ விகடனின் அனுபவமிக்க பத்திரிகையாளர்கள் கண்டு கொள்ளப்படாமல் வெளியிலிருந்து 'ப்ரியா நாயர்' பொறுப்பேற்றுள்ளார்.

பத்திரிகையாளராக 'ப்ரியா தம்பி' அனுபவம் என்ன ? அதற்கான தகுதி அவருக்கு இருக்கிறதா..?

கேரள‌ கைரளி நிறுவனத்தில் ஐந்து மாதங்கள். அதன் பின் இடைவெளி,அதற்கடுத்து 'சுட்டி விகடனி'ல் ஒரு ஆறு  மாத காலம்,அதன் பின் 'தமிழ் முரசு' நாளிதழில் நிருபராய் ஒரு எட்டு மாத காலம் (பணி நீக்கம்), அதன் பின் 'கிழக்கு' பதிப்பகத்தில் மிகக் குறைந்த காலம்,அதன் பின் நீண்ட இடைவெளி, அதன் பின் 'குமுதம் ரிப்போர்ட்டரி'ல் சில காலம், அதன் பின் நீண்ட இடைவெளி.

இவ்வளவு தான் இவரது பத்திரிகையாளர் அனுபவம்.

எல்லாவற்றையும் கூட்டினால் துறை அனுபவம்  மூன்று வருட சொச்ச பணிக்காலம் கூட வராது. இவரைத் தான் தொடக்க நிலையிலேயே 'டாக்டர் விகடன்' பொறுப்பாசிரியராய் நிர்வாகம் நியமனம் செய்துள்ளது.

இது எப்படிப்பட்ட முறைகேடு ?

 தகுதி,திறமை,படிநிலை பற்றி இம்மியளவு விட்டுக்கொடுக்காமல் பின்பற்றுவதாய்ச் சொல்லிக் கொள்ளும் விகடன் நிறுவனம் அப்படி என்ன யாரிடமும் இல்லாத தகுதியை ப்ரியா தம்பியிடம்  கண்டுவிட்டது..? தகுதிக்கு என்ன அளவுகோல் வைத்திருக்கிறது.? அதை வெளிப்படையாகக் கூட சொல்ல வேண்டாம். கிசுகிசு பாணியிலாவது செப்புமா..?

அவர் பத்திரிகை பணிக்கு வந்த காலத்தில் இருந்து இன்று வரை தொடர்ச்சியாக இத்துறையில் இருந்திருந்தால் வேண்டுமென்றால் ஒருவேளை அவருக்கு இப்பொறுப்பு கொடுத்திருப்பதில் ஒரு நியாயம் இருப்பதாய் வாதிட முடியும்..? அப்பொழுதும் வாதிடத்தான் முடியும். அது சரியென்று தீர்ப்பு சொல்லி விட முடியாது.

'ப்ரியா தம்பி'யின் நியமனத்தால் டாக்டர் விகடனில் பணியாற்றிய மூவர் பாதிக்கப்பட்டுள்ள‌னர். அதை முதலில் பார்ப்போம்.

பலி கொடுக்கப்பட்டவர்களுக்கு விருந்து-டாக்டர் விகடன் டீம்.

பிரேமா நாராயணன்.

இப்பொழுது உதவிப் பொறுப்பாசிரியராய் பதவி வகிக்கிறார்.டாக்டர் விகடன் ஆரம்பித்ததில் இருந்து அங்கு பணியாற்றி வருகிறார். இவர் தான் பொறுப்பாசிரியராய் நியமனம் ஆகி இருக்க வேண்டும். ஆனால் இவருக்கு நியமனம் மறுக்கப்பட்டுள்ளது. ப்ரியா தம்பியை விட துறை அனுபவம் மிக்கவர்.

எஸ்.ரேவதி.உதவி ஆசிரியர்.

இவர் பல வருடங்களாய் விகடன் குழுமத்தில் பணியாற்றி வருகிறார். அடிமட்டத்தில் இருந்து இந்த நிலைக்கு வந்தவர். விகடனின் வள‌ர்ச்சிக்கு வியர்வையையும், விகடன் குழுமங்களின் தலைவர் மறைந்த‌ பாலசுப்ரமணியம் மனைவிக்கு தனது ரத்தத்தை தானமாகவும் அளித்தவர்.இவரும் ப்ரியா தம்பியை விட இத்துறையில் அனுபவம் மிக்கவர்.

இதற்கடுத்து பா.ப்ரவீண் குமார். 

பா.ப்ரவீண் குமார்

இவரும் 'டாக்டர் விகடன்' ஆரம்பித்ததில் இருந்து இங்கு பணியாற்றி வருகிறார்.பத்திரிகைத் துறையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாய் இருக்கிறார். இன்னும் சொல்லப்போனால் 'தமிழ் முரசு' நாளிதழில் ப்ரியா தம்பி பணிக்கு வரும் முன்பே 'தினகரனில்' பணியில் இருந்தவர்.

மேற்கண்ட மூவரும் ப்ரியா தம்பியை விட இத்துறையில் அனுபவம் மிக்கவர்கள். இத்துறையை விட்டு வேறு எங்கும் செல்லாதவர்கள். மருத்துவத்துறை குறித்து அதிகமாய்த் தெரியா விட்டாலும் தொடர்ச்சியாய் டாக்டர் விகடன் முதல் இதழிலிருந்து பணிபுரிந்ததன் மூலம் யாரிடம் படைப்புகளை வாங்கலாம்,எந்தப் பிரச்சனைக்கு யார் கட்டுரை சிறப்பாய் இருக்கும் என்பது மட்டுமல்ல,போட்டி இதழ்களின் போக்கையும் அறிந்த அனுபவமிக்க‌வர்கள்.

ஆனால் இவர்கள் அனைவருக்கும் பணி உயர்வு மறுக்கப்ப‌ட்டு ப்ரியா தம்பியை ராஜபாட்டையில் அழைத்து வந்து பொறுப்பாசிரியர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இவரது நியமனத்தால் டாக்டர் விகடனில் பாதிக்கப்ப‌ட்டவர்கள் இவர்கள். விகடன் குழுமத்தில் பாதிக்கப்பட்ட சில எடுத்துக்காட்டுகளைச் சொல்கிறோம்.

தமிழ் மகன்.




'தமிழ் மகன்' என்பவர் சென்னையைச் சேர்ந்தவர். 'தினமணி' இணைப்பிதழான கொண்டாட்டம் பொறுப்பாசிரியராய் (பொறுப்பாளராய் )இருந்தவர். ஆனால் அவரோ இப்பொழுது 'ஜூனியர் விகடன்' உதவிப் பொறுப்பாசிரியராய் இருக்கிறார். 'தினமணி'யில் இருந்து விலகி விகடன் குழுமத்தில் சேரும் பொழுதே இப் பொறுப்பிற்குத் தான் தெரிவு செய்யப்பட்டார்.




விகடனை விட பாரம்பரிய இதழான 'தினமணி'யின் இணைப்பிதழில் பொறுப்பாசிரியராய் பணியாற்றியவரையே, உதவிப் பொறுப்பாசிரியருக்குத் தேர்ந்தெடுக்கும் அளவுக்கு கடுமையான அளவுகோல் வைத்திருக்கும் விகடன்,சொற்ப காலம்  துறையில் நிருபராகப் பணியாற்றிக்கொண்டிருந்து விட்டுத் துறையை விட்டு நீண்ட காலம் விலகியிருந்த ஒருவ‌ரை பணிக்குச் சேர்க்கும் பொழுதே, பொறுப்பாசிரியராய் நியமிப்பதற்கு என்ன காரணம்..?
**

னந்த விகடனில் மூத்த நிருபராய்  பணியாற்றும் டி.அருள் எழிலன் என்பவர் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்.
அருள் எழிலன்


ஆ.வி.நிருபராய் சில ஆண்டுகளுக்கு முன் பொறுப்பு வகித்தார். அதன் பின் அந்த நிறுவனத்தை விட்டு விலகினார். சில ஆண்டுகள் இடைவெளியில் அவர்  மீண்டும் ஆ. விகடனுக்கு வேலைக்கு வந்தார். இடைப்பட்ட காலத்தில் அவர் குங்குமம் வார இதழிலும்,இன்னும் சில இதழ்களிலும் வேலையில் இருந்தார். இடைப்பட்ட காலத்தில் அவர் இத்துறையை விட்டு எங்கும் சென்று விடவில்லை,ஆனாலும் மீண்டும் விகடன் நிறுவனத்தில் சேர்ந்த பொழுது அவருக்கு 'மூத்த நிருபர்' பொறுப்பு தான் வழங்கப்பட்டது. இது அவர் ஏற்கனவே வகித்த நிருபருக்கு அடுத்த நிலை தான். இப்பொழுது ஓர் ஆண்டு பணிபுரிதலுக்குப்பிறகு அவருக்கு 'முதன்மை  நிருபர்' பொறுப்பு கிடைத்துள்ளது.



பாரதி தம்பி


பாரதி தம்பி என்பவர் தஞ்சாவூரைச் சேர்ந்தவர். சில காலங்களுக்கு முன்பு ஆனந்த விகடனில் மூத்த நிருபராய் பணி புரிந்தார். அதன் பின் விகடனை விட்டு விலகி 'சன் டிவி'யில் பணி புரிந்தார். அதன்பின்பு அங்கிருந்து விலகி மீண்டும் விகடனில் வேலைக்குச் சேர்ந்தார். அவருக்கு ஏற்கனவே வகித்த மூத்த நிருபருக்கு அடுத்த நிலையான 'முதன்மை  நிருபர்' பதவி தான் கொடுக்கப்பட்டது. அதன் பின் இப்பொழுது அவர் 'உதவிப் பொறுப்பாசிரியர்' ஆகி இருக்கிறார்.

இவர்கள் எல்லாம் பத்திரிகைத் துறையை விட்டு விலக வில்லை. இவர்கள் திறமைக்கும் குறைவில்லை. ஆனாலும் இவர்கள் எத்தனை வருடம் கழித்து வந்தாலும் இவர்கள் ஏற்கனவே வகித்த பொறுப்பிலோ,அல்லது அடுத்த நிலையிலோ தான் பணிபுரிய அழைக்கப்படுகின்றனர்.

ப்ரியா தம்பியை ஒப்பிடும் பொழுது மேலே சொல்லப்பட்டவர்கள், இத்துறையில் பல வருடங்கள் அதிக அனுபவம் உள்ளவர்கள். இவர்களின் பத்திரிகை அனுபவம் தமிழ் மகனுக்கு 20 வருடமும்,மீதமுள்ளவர்களுக்கு 15 வருடங்களை ஒட்டிய அனுபவமும் இருக்கும்..

நாம் மேலே சொன்ன தமிழ்மகன்,அருள் எழிலன்,பாரதி தம்பி ஆகியோர் நூல்களையும் எழுதியுள்ளனர்.

இவர்களைப் போல் கலீல் ராஜா,'டைம்பாஸ்' இதழின் பொறுப்பாசிரியர் சரண் உட்பட‌ விகடனில் இன்னும் அனுபவமிக்க,திறமைமிக்க  எத்தனையோ பத்திரிகையாளர்களைக் காட்ட முடியும். இவர்கள் எல்லாம் இன்னும் உதவி ஆசிரியர்,மூத்த,முதன்மை நிருபர்,உதவி பொறுப்பாசிரியர் பதவியைத் தாண்ட முடியாமல் இருக்கின்றனர்.

தனது எழுத்தின் மூலம் , நந்திக்கடலில் நாதியற்றுச் செத்துப்போன தமிழனுக்காக‌ படிப்பவர் மனதில் குற்ற உணர்வை  உருவாக்க டி.அருள் எழிலனால் முடியும், உழைப்புச் சுரண்டல் குறித்து பக்கம் பக்கமாய் எழுத பாரதி தம்பியால் முடியும்,கொரிய சினிமாவை ஏமாற்றி தமிழ் திரை உலகினர் படம் எடுக்கிறார்கள் என கலீல் ராஜாவால் அம்பலப்படுத்த  இயலும்.

ஆனால் இவர்களின் உரிமையோ, பணி உயர்வோ 'ப்ரியா தம்பி' போன்றோரால் கண் முன்னே சத்தமில்லாமல் பறிக்கப்படும் பொழுது அறிந்தும் அறியாமலும் கையறு நிலையில் தான் இவர்களால் இருக்க முடியும்.சகித்துக்கொண்டு கடந்து தான் செல்ல முடியும். இவர்கள் எல்லாம் பொறுப்பாசிரியர் ஆவதற்கு இன்னும் எத்தனை யுகம் காத்திருக்க வேண்டுமோ தெரியவில்லை.

னால் மொத்தமே மூன்று வருடத்து சொச்சம் அனுபவம் உள்ள ப்ரியா தம்பி, நீண்ட காலம் துறையில் இல்லாத சீரியல் வசனகர்த்தா ப்ரியாதம்பி   திரும்பவும் துறைக்குள் நுழையும் பொழுதே, பொறுப்பாசிரியராய் நியமிக்கப்ப‌டுகிறார்.  ப்ரியா தம்பிக்கு இவர்களை விட சில ஆயிரம் ஊதியமும் அதிகம்.

துவும் போக‌ பொறுப்பாசிரியர் பதவி என்பது மிகவும் கவுரமானது. இதில் அடிக்கடி ஆட்களை மாற்ற‌ முடியாது. ப்ரியா தம்பியோ ஆறு மாதத்திற்கு மேல் அதிகபட்சம் எட்டு மாதம் இதற்கு முன் எந்த நிறுவனத்திலும் தொடர்ச்சியாக‌ பணிபுரிந்ததில்லை.இவரை நம்பி எப்படி இந்தப் பொறுப்பை விகடன் நிர்வாகம் அளித்தது..?

அடுத்ததாக  முகநூலில் கவனிக்கத்தக்க லைக்கும் கமெண்டும் வாங்குபவர் என்று குஷியாகி வேலைக்கு எடுத்தார்கள் என்று வாதத்துக்காய் வைத்துக்கொண்டால் கூட இவரை விட பல மடங்கு திறமையான டிமிட்ரி இவ்நோவ்ஸ்கியைத் தான் தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஆக‌ அதுவும் இல்லை. மீண்டும் கேட்கிறோம். என்ன தான் உங்கள் அளவுகோல்..?

அவரிடம் அப்படி என்ன திறமையைக் கண்டனரோ விகடன் நிர்வாகிகளும் அதன் ஆசிரியரும்..? அதற்கு என்ன தேர்வு வைத்தனரோ..? தேர்வின் அளவுகோல் என்ன..? 

**



டாக்டர் விகடனுக்கு சந்தையில் போட்டி இதழ் தினகரன் நிறுவனம் நடத்தும் 'குங்குமம் டாக்டர்'

அங்கு 'வைதேகி' என்பவர் முதன்மை ஆசிரியராய் இருக்கிறார். இவரது ஆசிரியர் நியமனம் ஒரு வருடத்திற்குள்ளாகத்தான் நடந்துள்ளது.

 20 வருடங்களுக்கும் மேலாக அனுபவம் மிக்கவர். இவர் பழைய தினகரனில் இருந்து அங்கு பணியில் இருப்பவர். மிகத்திறமை வாய்ந்தவர்.இன்னும் சொல்லப்போனால் பழைய தினகரன் நடத்திய மருத்துவம் குறித்த 'ஆரோக்யா' இலவச இணைப்பில் பணியாற்றியவர். அதன்பின் குங்குமம் வார இதழின் தலைமை உதவி ஆசிரியர். அதற்குப்பின் 'குங்குமம் தோழி' பத்திரிகை பொறுப்பாசிரியர்.(இவரது தாய் ஒரு எழுத்தாளர் என்பது குறிப்பிடத்தக்கது)

இன்று 'குங்குமம் டாக்டர்' முதன்மை ஆசிரியர்.

 'வைதேகி' 


ஆக ஒருவர் என்ன தான் திற‌மையானவராய் இருந்தாலும் ஒரே நிறுவனத்தில் தொடர்ச்சியாய் பணியாற்றியவராய் இருந்தாலும் 20 வருடங்கள் அனுபவமிக்கவராய் இருந்தாலும் அவர் 'முதன்மை ஆசிரியராய்' நியமிக்கப்ப‌ட இவ்வளவு பணிக்காலம் தேவைப்படுகிற‌து. குறுக்கு வழிக்கோ 3 ஆண்டு காலம் போதுமானதாய் இருக்கிறது.

ஒன்றுக்கு 3 வருட பதவி புரிந்தவர் பொறுப்பாசிரியர். அதன் போட்டி இதழுக்கு  20 வருடங்கள் அனுபவமிக்கவர் முதன்மை ஆசிரியர்.

எந்த பத்திரிகை தரத்துடனும்,சிறப்புடனும் வெளிவரும் என்பதை நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள்.



க எப்பத்திரிகை பொறுப்பாசிரியராய் பொறுப்பு ஏற்றுள்ளாரோ,அதன் உள்ளடக்கம் குறித்த ஞானமும் இல்லை. இன்னொரு புறம் துறை அனுபவமும் இல்லை.

மொத்தத்தில் ப்ரியா தம்பியை நியமித்தது எந்த வகையில் பார்த்தாலும் அதிகார துஷ்பிரயோகத்தின் மூலமும் குறுக்கு வழியில் லாபி செய்ததன் மூலமும் பதவியை அடைந்தது தெரிகிற‌து.


ஏற்கனவே விகடனில் நடைபெற்ற இதுபோன்ற துஷ்பிரயோகத்தை ஒரு பதிவாக எழுதியுள்ளோம். 

தங்களது நிறுவனத்தில் இப்படியான செயல்களை எவ்விதக்குற்ற உணர்வும் இன்றி செய்பவர்கள் தான் அரசியல்வாதிகளையும்,அதிகார மட்டத்தினரையும் கடுமையாய் விமர்சனம் செய்கின்றனர்.

இன்னொருபுறமோ,இப்படிக் குறுக்கு வழியில் அடுத்தவரின் வாய்ப்புக்களைத் தட்டிப்பறித்து தங்களுக்குத் தகுதி இல்லாத இடத்துக்கு தாவி வந்தவர்கள் தான்,பத்திரிகையாளர்கள் என்று கூறிக்கொண்டு அனைவரையும் விமர்சனம் செய்கின்றனர்.

 தகுதியும் திறமையும்  இல்லாமல் குறுக்கு வழியில் பத்திரிகை தலைமையைப் பிடிக்கும் ப்ரியா தம்பி போன்ற இப்படிப்பட்ட 'பண்பாளர்கள்' தான் பொதுவெளியில் நியாயவான்களாக உருமாறுகிறார்கள். எத்துறை குறித்த விவாதம் என்றாலும் அது குறித்து துளியும் தெரியாவிட்டாலும்  கருத்துச் சொல்லவும்,மேடையில் இடம்பிடிக்கவும் முதல் ஆளாய் கிளம்பி விடுகிறார்கள்.ஊடகர் என்றால் பொது வெளியில் இருக்கும் மதிப்பும் ஒளி வட்டமும் இவர்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்துகிறது.அதுவும் ஊடகங்களின் எண்ணிக்கை  அதிகரித்துள்ள கடந்த ஐந்தாண்டுகளில் இப்படி 'நியாயவான்களின்' எண்ணிக்கை பல்கிப் பெருகியிருக்கிறது.

சாதியச் சண்டையில் இருந்து திரைப்பட விமர்சனம் வரை, அரசியல்வாதிகள் முதல் அதிகார வர்க்கம் வரை அனைவரையும் நடுநிலைச் சொம்பெடுத்து முகநூல் முதல் தொலைக்காட்சிப் பெட்டி வரை கருத்து வாந்தியெடுக்கிறார்கள். சகட்டுமேனிக்கு விமர்சிக்கிறார்கள்.

இந்த நியமனம் அதன் ஆசிரியர் ரா.கண்ணன் பரிந்துரை மற்றும் விரைவுபடுத்தல் இல்லாமல் துளியும் சாத்தியமில்லை. ரா.கண்ணன் அவர்களே நீங்கள் கை நீட்டிக் காசு வாங்காதவராய் இருக்கலாம். ஆனால் நேர்மை என்பது பணத்துடன் மட்டும் தொடர்பு கொண்டது அல்ல. இப்படி முறையற்ற நியமனத்துக்கு துணை புரிந்ததன் மூலம் நீங்கள் மிகப்பெரிய தவறு இழைத்திருக்கின்றீர்கள்.

டாக்டர் விகடனுக்கு ப்ரியா தம்பியை நியமித்ததன் மூலம்,திறமையான எத்தனையோ விகடன் பத்திரிகையாளர்கள் பணி உயர்வு தடுக்கப்பட்டிருக்கிறது. இன்னொரு புறமோ அறிவார்ந்த டாக்டர் விகடன் வாசகர்களை மூடர்களாக விகடன் குழுமம் கருதியிருக்கிறது,அதனால் அவர்களின் உயிரும் உடல் நலமும் பணயம் வைக்கப்பட்டிருக்கிறது.

தங்கள் நிறுவனத்தில் முறையற்ற நியமனத்தைச் செய்யும் விகடன் தான்,அலைக்கற்றை ஊழல் முதல் பல விஷயங்களில் முறைகேடு நடந்திருக்கிறது என கூப்பாடு போடுகிறது.போலி மருத்துவர்களையும்,அங்கீகாரம் இல்லாத மருத்துவக்கல்லூரி நடத்துபவர்களையும் சாடுகிறது. ஒரு வருட மூப்பு குறைவான ஐ.ஏ.எஸ்.,ஐ.பி.எஸ்.அதிகாரிக்கு பதவி உதவி வழங்கினால் அதை எதிர்த்து கவர் ஸ்டோரி எழுதுகிறது.

இதைச் செய்வதற்கான‌ தகுதி உங்களுக்கு இருக்கிறதா..? உங்கள் மனசாட்சியிடம் நீங்கள் கேட்க வேண்டிய கேள்வி. 


Tuesday 25 November 2014

தினத்தந்தி - மாறிய பாலிசி; மாறாத ஜாதிப்பாசம்....!



சென்னை அண்ணா சாலை- ஸ்மித் சாலை சந்திப்பு.விகடன் அலுவலக சாலை எதிரே,சற்று தள்ளியிருக்கும் ஈராணி தேநீர்க்கடை.மாலை நேரம்.  ஊடகவியலாளர்கள் பார்த்தசாரதி,பெஞ்சமின்,அன்பரசு சந்திப்பு.

ஆளுக்கொரு தேநீர் சொல்லி விட்டுக் காத்திருந்தனர்.

"எல்லா டீக்கடைக்காரனும் விலை ஏத்திட்டாங்க‌.இங்க‌ இன்னும் ஏத்தலையா..?"

"ஏற்கனவே மத்த கடையை விட ஒரு ரூபாய் அதிகம் தான் இங்க. கொஞ்ச நாளில் கூட்டுவாங்க" என்றபடியே தேநீரை வாங்கிக்கொண்டு பேச்சைத் தொடங்கினர்.

" செய்தி என்ன இருக்குது...?" பெஞ்சமின்

"செய்திக்கா பஞ்சம்..? நமக்குத் தான் சந்திக்க நேரம் இருக்குறதில்ல‌ "பார்த்தசாரதி

kavitha muralitharan,


"அண்ணா சாலையில் இருந்து ஆரம்பிங்க ..? 'விகடன்' செய்தி என்ன இருக்குது.? " பெஞ்சமின்.

விகடனை அப்புறம்  பார்ப்போம். 'தி இந்து' ல என்ன நடக்குது..? அங்க சி.ஓ.பியா இருந்த கவிதா முரளிதரன் விலகிட்டாங்க போல இருக்கு..? என்ன காரணம்..? என அன்பரசு ஆர்வமாய் கேள்வியைத் தொடுத்தார்.

அவங்க திற‌மையான செய்தியாளர் தான்.ஆனால் அங்க அவங்க வகித்த பொறுப்பில் அவங்களால தாக்குப்பிடிக்க முடியலைன்னு சொல்றாங்க..!  பார்த்தசாரதி பதிலைத் தொடங்கினார்.

என்ன விஷயம்..? அன்பரசு ஆர்வத்தைத் தொடர்ந்தார்.

பெஞ்சமின்,"அதாவது சென்னை தவிர்த்த வெளியூர் செய்தியாளர்களை ஒருங்கிணைத்து அவர்கள் தரும் செய்திகளை  வெளியிடுவது தான் அவங்க பார்த்த வேலை.  சில  நாளிதழ்களில் அதனை O.C.(Other centre)அப்படின்னும் சொல்வாங்க."

பார்த்தசாரதி அடுத்து தொடர்ந்தார். "இது கொஞ்சம் கடினமான வேலை தான்.ஏனென்றால் மொத்தம் 30 க்கும் மேலான செய்தியாளர்கள் இருக்காங்க. நாள்தோறும் எண்ணற்ற செய்திகள். அவர்கள் அனைவரையும் ஒருங்கிணைப்பதும் அவர்கள் தரும் செய்திகள் குறித்து முடிவெடுப்பதும் சற்று சிரமம் தான்.

மிகவும் டென்ஷனையும் நெருக்கடியையும் சந்திக்கும் வேலை இது. கவிதாவால் இதைச் சமாளிக்க முடியலை. இந்தப்பணியில் முன் அனுபவம் கவிதாவுக்கு  இல்லை. இதுல (V.V.)வெங்கடேஸ்வரன் இடைஞ்சல் வேறு. வெங்கடேஸ்வரன் ஒட்டு மொத்த 'தி இந்து'வும் தனக்கு கீழே வரணுமுன்னு திட்டம் போட்டு வேலை பார்த்துக்கிட்டுருக்காறா..ஏற்கனவே கோலாகல ஸ்ரீனிவாசனை இவர் தான் காலி பண்ணாரு.தொடர்ந்து ஒவ்வொரு ஏரியாவா ஸ்கெட்ச் போட்டுக் காலி பண்ணிக்கிட்டிருக்காரு."



"வி.வி.ரொம்பத் திறமையான ஆளா..?" அன்பரசு

"திறமைன்னு சொல்ல முடியாது. யாரை எந்த வேலைக்கு வைத்துக்கலாம்,எந்த வேலையை யார்கிட்ட வாங்கலாம்,எப்படி வாங்கலாம், ஒருத்தரை எப்படி காலி பண்ணலாம், அதுக்கு எப்படி பாலிடிக்ஸ் பண்ணலாமுன்னு ஸ்கெட்ச் போடுவ‌தில் கில்லாடி." பார்த்தசாரதி

"சுருக்கமாச் சொல்லணுமுன்னா மேயத் தெரியாது,மேய்க்கத் தெரியுமுன்னு சொல்லு." பெஞ்சமின்

"ஆமாம்.இப்படி ஆளை நிர்வாகமும் விரும்பும். இவங்களும் அதுக்கு ஏத்த மாதிரி விசுவாசமா இருப்பாங்க.இவரைப்பத்தி ஒரு செய்தி சொல்றேன் கேட்டுக்கோங்க. தினகரனில் இருந்த வரைக்கும் ஆர்.எம்.ஆர்.கிட்ட பம்முவாரு.விசுவாசமா இருந்தாரு.இப்ப அங்கிருந்து விலகி 'தி இந்து' நாளிதழில் இருக்கார்.

அது போதாதுன்னு 'தினகரனில்' இருந்து கொஞ்ச பேரையும் அழைத்திட்டு வந்தார். ஒவ்வொருத்தரா அங்க போறது  ஆர்.எம்.ஆருக்கு கடுப்பு. இதுக்கு காரணமான‌ வி.வி.யை கூப்பிட்டுத் திட்டுவோமுன்னு நினைச்சு,பழைய நினைப்புல போன் பண்ணாரு. இது பத்தி பேசுனாரு.வழக்கமா பம்முற வெங்கடேஸ்வரன் இந்த தடவை அப்படி பேசலை.


(V.V.)வெங்கடேஸ்வரன்

இவர் டோப்பா போட்டு காரியம் சாதிப்பவர் மட்டும் அல்ல. இவர் தலைமுடியும் டோப்பா தான்.


"சார்,கலாநிதி மாறனும் என்.,ராமும் முதலாளிகள் அவங்க இது பத்திப் பேசிக்குவாங்க சார். நம்ம ரெண்டு பேரும் அவங்கட்ட சம்பளம் வாங்குற வேலைக்காரங்க சார். அவங்க சொல்றதைச் செய்றவங்க சார். நாம எதுக்கு இது பத்திப் பேசி சண்டை போடணும் சார்..? வேறு என்ன செய்தி சொல்லுங்க."அப்படின்னு கூலா பேசுனாரு. இதுக்கு மேல ஆர்.எம்.ஆர். பேசுவாரா என்ன..?

தன்னை ரொம்பநாள் ஆட்டிப்படைச்ச ஆர்.எம்.ஆர் மூக்கை   சமயம் பார்த்து உரசி விட்டாரு.

இது தான் வி.வி.சமயம் பார்த்து யாரையும் காலி பண்ணுவார்." நீளமாய்ப் பேசி முடித்தார் பார்த்தசாரதி.

"இன்னொன்னு சொல்லணும்,இலங்கையில் இன அழிப்பு உச்சத்தில் இருந்த பொழுது தமிழ்நாட்டு பத்திரிகையாளர்களை அம்சா தன் வலையில் விழ வைத்து பல காரியம் பண்ணார்.ஒரு சிலரை கொழும்புக்கு ஒரு டூர் அழைத்துட்டும் போனார்.அப்ப நிறையப்பேர் போனாங்க. " அன்பரசு பேச்சினை முடிக்கும் முன்பே,குறுக்கிட்டார் பெஞ்சமின்,"நம்ம அந்த விஷயத்தை இன்னொரு நாள் விரிவாப் பேசுவோம். இப்ப சொன்னா சில மனிதர்கள் பத்தி மட்டும் பேச வேண்டியிருக்கும்.முழுமையாப் பேச முடியாது."

சரி,பாதியில் நிப்பாட்டுன‌ பழைய விஷயத்துக்கு வர்றேன். அலுவலக இடைஞ்சல்,பணிச்சுமை,நெருக்கடியில் இருந்து எப்படி தப்பிப்பதுன்னு பார்த்துக்கிட்டிருந்த கவிதா, தனது பழைய 'இந்தியா டுடே'  நட்புகளையும் தொடர்புகளையும்  வலியுறுத்தி அங்கு வேலைக்குப் போய்ட்டாங்க.



"ரொம்ப நாளா 'இந்தியா டுடே' வில் எடிட்டர் இல்லைல..? " அன்பரசு

"ஆமாம்.இப்பொழுதைக்கு எடிட்டர் நியமிக்க வேணாம், இன்னும் கொஞ்சநாள் இப்படியே பத்திரிகையை நடத்திடலாமுன்னு இருந்த 'இந்தியா டுடே'  நிர்வாகம்  இப்ப கவிதாவை நியமிச்சிட்டாஙக. பழைய எடிட்டருக்கு கொடுத்ததை விட கவிதாவுக்கு சம்பளம் சற்றுக்குறைவு தான்.ஆனா 'தி இந்து' வில் இருந்த ஊதியத்தை விட அதிகம்." பார்த்தசாரதி தனது பதிலை முடித்தார்.

பெஞ்சமின்,"அத விடுப்பா..இன்னொன்னு தெரியுமா..? 'தி இந்து' வேலைப்பளுவை ஒப்பிட்டா இந்தியா டுடே வேலை ரொம்பக் ரொம்பக் குறைவு. இது போதாதா..? "

பார்த்தசாரதி,"ஆமா,நீ சொன்னது சரிதான். வார இதழான இந்தியா டுடேவில் தமிழ்நாட்டிலிருந்து மிக குறைந்த பக்கங்கள் தான்.அதையும் பார்க்க திறமையானவர்கள் இருக்காங்க. முதன்மைச் செய்தியாளராய் இருக்கும் ராமசுப்ரமணியம் கவிதாவை விட அதிக அனுபவம் வாய்ந்தவர். அதனால நாளிதழை ஒப்பிட்டால் வேலைப்பளு குறைவு. .(அசோசியேட் காப்பி எடிட்டர் கவின்மலர் என்பவர் பார்க்கும் வேலையை மட்டும் கொஞ்சம் கண்காணித்தால்,செம்மைப்படுத்தினால் போதும்.)  "

"ம். நடக்கட்டும். கவிதாவுக்குப் பதிலா 'தி இந்து' ல இப்ப யாரை அந்த இடத்துக்கு நியமிச்சிருக்காங்க..?" அன்பரசு அடுத்த கேள்வியை கேட்டு விட்டு அமைதியாய் வேடிக்கை பார்க்கத் தொடங்கினார்.

சண்முகம் தான். தினமலரில் இருந்து 'தி இந்து' வுக்கு வேலைக்கு வந்து சேர்ந்தார்.டெல்லியில் இருந்தவரை இப்ப இங்க நியமிச்சிருக்காங்க. "பெஞ்சமின்

"ம். அமைதியான மனுஷர்.பார்ப்போம் எப்படி பண்றாருன்னு." அன்பரசு முடித்து வைத்தார்.

"நான் ரொம்ப நாளா கேட்கணுமின்னு நினைச்சேன். 'தி இந்து' இணைப்பு பகுதி யார் பார்க்குறாங்க.சில பகுதிகள் மிகச் சிறப்பா இருக்குதுப்பா.?" இது பெஞ்சமின்.




"ம். நானும் படிக்கிறேன்.அரவிந்தன் பார்க்குறார். இதுக்கு முன்னால கடைசியா  மாபா பாண்டியராஜனுக்கு சொந்தமான 'நம்ம சென்னை'  பத்திரிகையில் வேலை பார்த்தார். தான் வாங்குற சம்பளத்துக்கு ஏற்ற உழைப்பைக் கொடுக்குறவரில் அவரும் ஒருத்த‌ர். தனது பொறுப்பில் வரும் பகுதியை மிகுந்த சிரத்தையுடன் கவனிப்பவர். தஞ்சாவூர்க்காரர். " பார்த்தசாரதி பாராட்டுப் பத்திரத்தை  வாசித்தார்.

"தஞ்சாவூரா..?  மாம்பலம் அப்படின்னு சொன்னாங்க.? " அன்பரசு குறுக்கு கேள்வியை எழுப்பினார்.

 "ஒருத்தருக்கு ரெண்டு பூர்வீகம் இருக்கக் கூடாதா என்ன..? " பார்த்தசாரதி சிரித்துக் கொண்டே பதில் சொன்னார்.

அப்படியா..? ஆனா என் பங்குக்கு நான் ஒரு விமர்சனம் சொல்றேன்.நீங்க சொல்றதைப் பார்த்தால் அவர் சரி பண்ணுவாருன்னு நினைக்கிறேன். அன்பரசு  பேசத் தொடங்கினார்.

" 'இயக்கும் கரங்கள்' அப்படின்னு ஒரு பகுதி வாராவாரம் வருகிறது. ஆதி.வள்ளியப்பன்  என பைலைன் வருகிறது. அவர் எழுதுறாருன்னு சொல்வது சரியல்ல..தகவல்களைத் திரட்டி அவர் பெயரைப் போட்டுக் கொள்கிறார் என்பதுதான் சரி.

தீபா மேத்தா,ரேவதி போன்றவர்கள் குறித்து அப்பகுதியில் சொல்லப்ப‌ட்டதெல்லாம் அனைவருக்கும் தெரிந்தது தான். இணையத்தில் எளிதாய்க் கிடைக்கிறது. யார் குறித்து சொல்கிறோமோ அவர் படைப்புக‌ள் குறித்து, எழுதுபவர் பார்வை என்ன என்று எழுதணும்.அதை விடுத்து தகவல்களைத் திரட்டி எழுதி, ஆதி தன்னுடைய‌ பெயரைப் போடுவது தவறு. ஒன்று இவர் எழுத்தில் அவர்கள் படைப்பு குறித்து எழுதணும்.அல்லது தகவல் திரட்டு ஆதி அப்படின்னு எழுதணும்.அது தானே சரி ? "  அன்பரசு தனது தொடர்ச்சியான கவனத்தை அங்கு வைத்திருக்கிறார் என்பது தெரிந்தது.

" ஆதி நிறைய மொழிபெயர்ப்பு பண்ணுவார்.அந்தப் பாதிப்பா இருக்குமோ..? " சிரித்துக் கொண்டே பார்த்தசாரதி சொன்னார்.

"ம்.விடுங்க.அரவிந்தன் சரி பண்ணுவாருன்னு எதிர்பார்ப்போம்.' பெஞ்சமின்

"இன்னொன்னு தெரியுமா..? 'தி இந்து'வில் இருந்து வெளிவருவதா இருந்த குழந்தைகள் பத்திரிகை தற்காலிகமாத் தள்ளிப்போடப் பட்டிருக்காம்." அன்பரசு தனக்குத் தெரிந்த தகவலைச் சொன்னார்.

அப்படியா ? இது புதுத் தகவலா இருக்கே..? பெஞ்சமின்

"ஆமாம்.அதுக்காக வேலைக்கு எடுத்திருந்த முருகேஷை இப்ப செய்தியாளரா நியமிச்சுட்டாங்க‌ளாம்."அன்பரசு.

யாரு..? அகநி பதிப்பகம் அப்படின்னு நடத்திக்கிட்டிருந்தவரா..? பெஞ்சமின்

அவரே தான்.கவிஞர் அ.வெண்ணிலா வீட்டுக்காரர்.புதுக்கோட்டைக் காரர்." அன்பரசு.

புதுசா வர்த்தகப் பகுதி 'தி இந்து' வில் ஒன்னு ஆரம்பிக்கப் போறாங்க தெரியுமா..?

ம்.நானும் கேள்விப்பட்டேன்.

"என்னமோ 'தி இந்து' வில் தான் ஒருத்தரை ஒருத்தர் காலி பண்ணுற பாலிடிக்ஸ் நடக்குற மாதிரி சொல்றீங்க.'புதிய தலைமுறை' தொலைக்காட்சியிலும் அதுக்கு குறைவில்லாமல் நடக்குது." அன்பரசு அலுத்துக் கொண்டார்.

அங்க யாரு..?




வேற யாரு..? குணசேகரன் தான். 'நேர்பட பேசு' நிகழ்ச்சி நடத்துவது தொடர்பா குணசேகரன் பண்ணுன பாலிடிக்ஸ் ல வேங்கட பிரகாஷ் அந்த நிகழ்ச்சியை விட்டு தற்காலிகமாக விலகிட்டாருன்னு சொல்றாங்க. கொஞ்சம் விசாரித்துக் கொள்ளுங்கள்.அன்பரசு.

அது சரி. நிகழ்ச்சியில் பேசுற அரசியலை விட‌ அதுக்குப் பின்னாடி நடக்கும் பாலிடிக்ஸ் சுவராசியமா இருக்குதே..?

தலைப்பு என்னவோ "நேர்பட பேசு".ஆனால் பின்னாடி தான் குழி பறிப்பாங்க போல.

***



ண்ணாச்சி கம்பெனி செய்தி என்ன..?

"தினத்தந்தி நிர்வாகம் நிலப்பிரபுத்துவ அமைப்பில் இருந்து கார்பரேட் முறைக்கு மாறிடுச்சுன்னு சொல்றாங்க..உண்மை தானா..?"

பார்த்த சாரதி தந்தியை குறித்துப் பேச்சைத் தொடங்கினார்.

"ஆமாம்.சிவந்தி ஆதித்தன் இருந்த வரைக்கும் பழைய முறையில் இருந்தது. இப்ப நீ சொல்லுற மாதிரி ஆகிடுச்சுன்னு தான் சொல்றாங்க."

"எடிட்டோரியலில் வேலை செய்யுற யாரையும் முன்பு வேலையை விட்டு எடுக்குறதுக்கு நிறைய‌ யோசிப்பாங்க. தண்டனையாக‌, கடினமான (கேவலமான) வார்த்தைகளும், துறை மாற்றமும் தான் பெரும்பாலும் இருக்கும். வேலை செய்யுற பெரும்பாலானோரை முதலாளி தெரிந்து வைத்திருப்பவர்  என்பதால் இது சாத்தியப்பட்டது. ஆனா இப்ப அப்படி இல்லையாம். ஒருத்தரை சரி இல்லைன்னு நிர்வாகத்துக்கு அடுத்த நிலையில் இருப்பவங்க முடிவு பண்ணிட்டா அவர் யாராயிருந்தாலும்,எத்தனை வருடம் வேலை பார்த்தாலும் உடனடியா  வேலை காலியாகுதுன்னு சொல்லிடுறாங்க.

இப்ப இருக்குற முதலாளியும் தனக்கு அடுத்து இருப்பவர்கள் சொல்வதை அப்படியே ஆமோதித்து உண்மையா என விசாரிக்காமல், வேலையைக் காலி பண்ணிடுறாராம். அதனால மற்ற நிறுவனங்கள் போல இங்கேயும் ஊழியர்கள் வேலை நிரந்தரம் இல்லைன்னு நினைக்கிறாங்களாம். " அன்பரசு

"பழைய மாதிரி ஊர்க்காரன்,ஜாதிக்காரன்னு,தெரிஞ்சவன்னு நெனப்புல தன் சீட்டு நிரந்தரம் அப்படின்னு இப்ப யாரும் தெனாவட்டா இருக்க முடியாதுன்னு சொல்லுங்க." பெஞ்சமின் சிரித்துக் கொண்டே கேட்டார்.

அப்படித்தான் இருக்குது நிலவரம்.

பெஞ்சமின் சிரித்துக் கொண்டே, "நீங்க சொல்றது எல்லாம் சரி தான். ஆனா இது தொழிலாள‌ர்களுக்குத் தான். நிர்வாகம் வழக்கம் போல ஜாதிப்பாசத்தோட தான் இயங்குது. அதாவது வர்க்கமும் ஜாதியும் கைகூடி இருப்பவர்களுக்கு ஆதரவாய் இயங்குதுன்னு சொன்னேன்."

"அது எப்படி மாறும்..? "என சிரித்துக் கொண்டே எதிர்க்கேள்வி எழுப்பினார் பார்த்த சாரதி.

"வைகுண்டராஜன் முன் ஜாமீன் மனு தள்ளுபடி,கனிமொழிக்கு எதிரா டெல்லி சிறப்பு நீதிமன்றம் வாரண்ட் ஒன்னு பிறப்பிச்சது.கொஞ்ச நேரத்துல ரத்து பண்னிட்டது. இது எல்லாம் மத்த‌ பத்திரிகைகளில் செய்தியா வந்தது. ஆனால் தினத்தந்தி மட்டும் பதிவு பண்ணலை. ஜாதிப்பாசம் தவிர வேறு என்ன..? தினத்தந்தி நிருபர் செய்தியை மிஸ் பண்ணுறது நடக்காத காரியம்.அதனால் நிர்வாகம் தான் இதைத் திட்டமிட்டுத் தவிர்த்திருக்குதுன்னு தெரிஞ்சுக்கிடலாம். " பெஞ்சமின் கடுப்புடன் பேச ஆரம்பித்தார்

தினமலர்
தினமணி


தினத்தந்தி


"வைகுண்டராஜனுக்கும் சிவந்தி ஆதித்தனுக்கும் நிறைய பஞ்சாயத்து இருந்ததே..? ஒரு கட்டத்துல தினத்தந்திக்கு போட்டியா நாளிதழ் துவங்குற ஐடியா கூட விவி மினரல் கம்பெனி வைத்திருந்ததே..? இப்ப எப்படி சமாதானம்..?" பார்த்தசாரதி பழைய பஞ்சாயத்தைக் கிளறினார்.

"ஆமா..திருநெல்வேலியில் இருக்கும் சாதிச் சங்கத்தையும் அதுக்கு இருக்குற பல கோடிச் சொத்துக்களையும் நிர்வாகம் பண்ணுற பஞ்சாயத்து இருந்தது. அதான் ரெண்டு பேருக்கும் ஆகாது.ஆனால் சிவந்தி மறைவுக்குப் பின்னாடி இரு தரப்பும் சமரசமாயிட்டாங்க‌ன்னு சொல்றங்க.அதான் இப்ப எதிர்த்துச் செய்தி போடுற‌து இல்ல."

"முதலாளி மாறியிருக்கலாம்.அவரோட பாலிசி மாறியிருக்கலாம்.ஆனால் நாடார் ஜாதிப் பாசம் மட்டும் மாறலைன்னு சொல்லு. அது எப்பவும் போலத் தொடருது. எத்தனை யுகங்களானாலும் தொடருமுன்னு சொல்லு." பார்த்தசாரதி.

ம்.அதே தான்.

அதே போல ராமச்சந்திர ஆதித்தன் குடும்பத்துக்கும் சிவந்தி ஆதித்தன் குடும்பத்துக்கும் இருந்த சொத்து பிரச்சனைகளும் தற்காலிகமா சமரசத்துக்கு வந்திருக்குன்னு சொல்றாங்க.  

**
"குமுதம் ரிப்போர்ட்டர் முன்ன மாதிரி இல்லாமல்,கொஞ்சம் மாறி இருக்குதே என்ன காரணம்..? " பெஞ்சமின் ஆர்வமுடன் கேட்டார்.

"அங்க கணபதி சார்ஜ் எடுத்துருக்கார்." பார்த்தசாரதி.

யாரு..? 'தமிழ் முரசு' பார்த்துக்கிட்டிருந்த கணபதி சாரா..?

ஆமாம்.அவரே தான்.

அப்ப குடியாத்தம் குபேந்திரன் ..?

"குபேந்திரன் தான் இப்பவும் இணை ஆசிரியர். அவரை அவ்வளவு எளிதில் காலி பண்ன முடியுமா..? பெரிய இடத்து பரிந்துரையில் வேலைக்குச் சேர்ந்தவரு வேற..? "

"பெரிய இடம்ன்னா யார்..?" பெஞ்சமின்

"மன்னர்கள் மட்டுமல்ல குறுக்கு வழியில் பதவியைப்பிடித்தவர்கள்,பணம் படைத்தவர்கள் எல்லாம் கண்ணை மூடிக்கொண்டு சாமியார் அல்லது ஜோசியர் சொல்றதைக் கேட்பாங்க. இங்க குபேந்திரனுக்கு ஜோசியர் பரிந்துரையில தான் வரதராஜனிடம் வேலை கிடைச்சது. " அன்பரசு தனது பகுத்தறிவை போகிற போக்கில் பரப்பி விட்டுப் போனார்.

குபேந்திரன்


இதைக்கேட்டவுடன் பெஞ்சமின் அதீத ஆர்வம் காட்டினார்.

"ரொம்ப சுவாரசியமா இருக்கே ..? இவ்வளவு நாளா நீ சொல்லவே இல்லையேப்பா..? ஜோசியர் சொல்லியெல்லாம் வேலை கிடைக்குதா என்ன..? நான் திறமைக்குத் தான் வேலை கிடைக்கும் என்று நம்புற ஆள் இல்லை தான்.ஆனால் இந்த அளவுக்குத் துறை போயிடுச்சுன்னு நினைக்க முடியலை. நம்பவும் முடியலை.நம்பாமல் இருக்கவும் முடியலை. முதலில் விஷயம் சொல்லு."



ஷெல்வின்னு ஒரு ஜோசியர். இவரது உண்மையான பெயர் தாமோதரன்.கருணாநிதி மகள் செல்வி,மருமகள் துர்கா,ஸ்டாலின் மருமகன் சபரீசன்,குமுதம் ரிப்போர்ட்டர் வரதராஜன், பிரேமலதா,விஜயகாந்த் மச்சினர் சதீஷ்,இலங்கை முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இது போக அதிகார மட்டத்தில் இருப்பவர்கள் நிறையப்பேருக்கு ஷெல்வி தான் ஜோதிடர்.

 என்னப்பா சொல்ற..? அதிர்ச்சியைத் தொட்டார் பெஞ்சமின்

"இதுல அதிர்ச்சி அடைய என்ன இருக்கு.இன்னும் சொல்றேன் கேட்டுக்கோ. கடந்த பாராளுமன்றத்தேர்தலில் தமிழ்நாட்டில் அதிமுக அதிக இடங்களில் ஜெயிக்கும்,இந்தியா முழுவதும் நரேந்திர மோடி அதிக இடங்களில் வெற்றி பெறுவார் என்று நாட்டு நடப்பை தனது கணிப்பாக்கி இவர் ஜோசியம் சொன்னாரு.

ஆனால் விஜயகாந்த்-பா.ஜ.க.கூட்டணி இவரால தான் பைனலாச்சுன்னா உனக்குத் தெரியுமா..? "

"அப்படியா..? இவரு ஜோசியரா இல்லை..." என சிரித்துக் கொண்டே கேட்டார் பார்த்தசாரதி

" அத விடு.இப்ப மேட்டருக்கு வர்றேன். இவர் குபேந்திரனுக்கு நெருக்கம். தமிழக அரசியலில் இருந்து விலகுன குபேந்திரனுக்கு,ஜோசியர் தான் வரதராஜனிடம் சொல்லி வேலையை வாங்கிக் கொடுத்தாரு. அதுவும் இல்லாமல் குபேந்திரனுக்கு அதிகார மட்டத்துல செல்வாக்கு இருப்பதால் பலவகையிலும் உபயோகப்படுவாருன்னும் சொல்லி சேர்த்தாரு.ஜோதிடருக்கு வரதராஜனிடம் அதிக செல்வாக்கு. அதனால குபேந்திரன் வேலை இப்பொழுதைக்குத் தப்பாது. இப்பவாச்சும்  நான் சொன்னதை நம்புறியா..? " அன்பரசு முடித்தார்

"நம்புறேன். நம்புறேன்.எனக்கு அவர் ஜோசியம் பார்ப்பாரா? " என சிரித்துக் கொண்டே பெஞ்சமின் கேட்டார்.

"உன்ன மாதிரி அன்னக்காவடி, அதிகப்பிரசங்கிக்கெல்லாம் மரத்தடி கிளி ஜோசியர் தான் சரி. இவங்க லெவல் வேறப்பா. இன்னொன்னு எப்படிப் பார்த்தாலும் உனக்குத் தரித்திரம் தான் நிலைக்கும். ஜோசியம்  பார்த்து எனனவாகப் போகுது." என சிரித்துக் கொண்டே அன்பரசு சொன்னார்.

அனைவரும் சிரித்தனர்.

***
மணா(பழைய படம்) 

"து என்னவோ தெரியலைப்பா,நம்ம மணா வரதராஜனை விடாமல் பிடிச்சுக்கிட்டிருக்காரு. "

இருவரில் யார் யாரைப் பிடிச்சுக்கிட்டிருக்காங்கன்னு தெரியலை. குமுதம் பிரச்சனையில அமைதியா இருக்காம,வரதராஜனுக்கு சகலவழியிலும் காபந்து பண்ணாரு. ஏற்கனவே உடல் நிலை சரியில்லாத மணா தொடர்ச்சியா வரதராஜ விசுவாசம் காட்டுறதுக்குப் பதிலா அமைதியா இருக்கலாம். ஆனால் அவரோ ஓய்வுக்குப் பதிலா வரதராஜன் அலுவலகத்துல பதிப்பகம் பொறுப்பெடுத்திருக்கார். விகடன் பிரசுரத்துக்குப் போட்டியா இனி வருமாம்.

"விகடன் பிரசுரம் எங்கே..?குமுதம் வெளியீடு எங்கே..ஏணி வைத்தாலும் எட்டாது. அது சரி குமுதத்தில் வேலை பார்ப்பது தப்பா என்ன..?"

" தப்பில்லை.ஆனால் பத்திரிகை வேலையை மட்டும் பார்க்கணும்.முதலாளியைக் காப்பாத்துற புரோக்கர் வேலையைப் பார்ப்பது தப்பு. அவரவர் மனசாட்சிக்குத் தெரியும் யார் என்ன வேலை பார்க்கோமுன்னு. "
**


 நேரம் அதிகமாக ஆளுக்கொரு தேநீரை மீண்டும் வாங்கினர்.

"மாறன் கம்பெனி செய்தி எதுவும் இருக்காங்க..?"

"இன்னும் மஜிதியா கமிட்டி பரிந்துரையை அமல்படுத்தவில்லை,ஊதிய உயர்வு இல்லை,ஆட்குறைப்பு அப்படின்னு தொழிலாளர் விரோதப்போக்கு தொடர்ச்சியா நடந்துக்கிட்டுத் தான் இருக்குது. யாரும் கண்டுக்க மாட்டிக்கிறாங்க." பார்த்தசாரதி சலிப்புடன் சொன்னார்.

"ம். பதவியில் இல்லாதப்பவே இப்படின்னா,இவனுங்க பதவியில் இருந்திருந்தால் ருத்ரதாண்டவம் ஆடியிருப்பாங்கன்னு சொல்லுங்க." பார்த்த சாரதி கடுப்புக் காட்டினார்.

ஆமாம். இன்னொன்னு.அங்க தொழிலாளர் விரோதப்போக்கு மட்டும் இல்ல.சீனியர் ஜூனியர் மரியாதை கூட இல்லை..." அன்பரசு

"பீல்டு முழுவதும் அப்படித்தான் இருக்குது.இதுல 'தினகரன்' மட்டும் விதிவிலக்கா என்ன..?என்ன சங்கதி? "பார்த்தசாரதி

நியூஸ் எடிட்டரா இருக்குற ஆர்.சி.,மனோஜ்,தமிழ் முரசு குணசேகரன் எல்லாம் அங்க சீப் ரிப்போர்ட்டரா இருக்குற சுரேஷைப் பார்த்தா பம்முறாஙக.-பெஞ்சமின்

"என்னங்க சொல்றீங்க‌..? சீப் ரிப்போர்ட்டரைப் பார்த்தால் நியூஸ் எடிட்டர் பயப்படுறாருன்னு சொல்ற.. நீ சொல்றதைப் பார்த்தா டிஜிபி வீட்டுல எடுபிடி வேலை பார்க்குற சாதாரண ஆர்டர்லியைப் பார்த்து டி.எஸ்.பி.பயப்படுற மாதிரி இல்ல இருக்கு."இது அன்பரசு

"அதே..அதே.இருக்குற சுரேஷ் இருக்கும் இடம் அப்படி."

"சரியாச் சொன்னீங்க,ஆர்டர்லி பார்க்குற வேலையும் நம்ம சுரேஷ் பார்க்குறதும் ஒரே தன்மையிலான வேலை தானே. ?

ஆர்.எம்.ஆர். எது சொன்னாலும் அதை தட்ட மாட்டாமலும் முகம் சுளிக்காமலும் செய்வாரு சுரேஷ்.பழைய செய்தி சொல்றேன்.கேட்டுக்கோங்க.

சீப் ரிப்போர்ட்டர் பதவி சார்ஜ் எடுத்துக்கிட்ட கொஞ்ச நேரத்துல ஆர்.எம்.ஆர்.ஒரு வேலை சொல்றாரு.உடனே அதைச் செய்தாரு."அன்பரசு

என்ன வேலை.? எதும் முக்கிய அசைன்மெண்ட்டா..? பெஞ்சமின் ஆர்வமுடன் கேட்டார்.

சிரித்துக்கொண்டே "அசைன்மெண்ட்டா? ஆர்.எம்.ஆர்.தன்னோட பிள்ளைகளை அப்ப சேப்பாக்கம் ஸ்டேடியம் ல நடந்த கிரிக்கெட் மேட்ச் பார்க்க கூப்பிட்டுப் போய்ட்டு வரச் சொன்னாரு.உடனே யாரையோ பிடிச்சு ஓசி பாஸ் வாங்கிட்டுப் போய் சொன்ன வேலையைச் செய்தாரு.இது ஒரு உதாரண‌ம் தான். இது மாதிரி என்ன வேலை என்றாலும் முகம் சுளிக்காமல் செய்வாரு. அதையும் சிற‌ப்பாச் செய்வாரு. "

"பிறகு எப்படி நியூஸ் எடிட்டர், சீப் ரிப்போர்ட்டரைப் பார்த்துப் பயப்படாமல் இருப்பாங்க சொல்லுங்க."

***

நியூஸ் செவன் வைகுண்டராஜன் தொலைக்காட்சி எப்படி இருக்குது. ?

இதுவரைக்கும் பெரும்பாலும் குறைந்த வயதில் இருப்பவர்களைத் தான் வேலையில் எடுத்திருக்காங்க. பெரும்பாலோனோர் பெரிய அளவில் அனுபவம் இல்லாமல் இருப்பவர்கள். அது போக உயர் பதவியில் இருப்பவர்கள் யாரும் இங்குள்ள சூழல் முழுக்க பரிச்சயம் இல்லாதவர்கள். இன்னும் சொல்லப்போனால் தமிழில் நடக்கும் நியூஸ் செவன் தொலைக்காட்சிக்கு வேற்று மொழியில் சிந்திப்பவர்கள். சுருக்கமாச் சொன்னா எந்த நிகழ்ச்சியும் உருப்படுற மாதிரி இல்ல.தொலைக்காட்சி தொடர்பா வர்ற விளம்பரங்கள் கூட உருப்படியா இல்லைன்னா பாருங்க.

ம்ம்.வழக்கம் போல மல்லுக்கள் இங்கேயும் உயர் இடத்தைக் கைப்பற்றி விட்டார்கள் போல.

ஆமாம். நம்ம வாசகர்களுக்குப் பரிச்சயமான பிரேம்சங்கரும் வந்துட்டாருன்னு சொல்றாங்க.

ஒரே வார்த்தையில் சொல்லப்போனால் சேனலே குப்பைன்னு சொல்லு.

***

விகடன் செய்தி எதுவுமே இல்லையா..?

'டாக்டர் விகடனுக்கு' பிரியா நாயர்  பொறுப்பாசிரியரா..இல்ல ஆசிரியரா..?

பொறுப்பாசிரியர் தான். ஏன்..?



தினகரனில் வேலை பார்க்குற  சிவராமன், பிரியாநாயர் ஆசிரியர் ஆகிட்டாங்க‌ன்னு மகிழ்ச்சியில், முகநூலில் ஆனந்தக்கூத்தாடியிருக்காரே ?அதான்  ஒருவேளை ரா.கண்ணனை ஆசிரியர் பதவியில் இருந்து டிஸ்மிஸ் பண்ணிட்டாங்கன்னு நினைச்சேன்.



 பொறுப்பாசிரியர் பிரியா நாயரை  'ஆசிரியர்' அப்படின்னு எழுதி தகுதிக்கு மீறிப்பொறுப்பு கொடுத்த ரா.கண்ணனை, ஏன சிவராமன் துச்சமா எழுதுனாருன்னு தெரியலை. தினகரனில் ஆர்.எம்.ஆர் பெயருக்குத் தான் எடிட்டரா இருக்காரு.அவருக்கும் செய்திக்கும் சம்பந்தம் இல்லை.அதுக்காக தினகரன் எடிட்டர் ஆர்.எம்.ஆர் இல்லைன்னு சொல்லிட்டு வேறு யாரையும் சிவராமன் பகிரங்கமாக எழுதுவாரா என்ன..?

இல்லைன்னா ஆர்.எம்.ஆர். எம்.டி. இல்லைன்னு சொல்லிட்டு வேறு யாரையும் எழுதுவாரா என்ன..?

அதிலெல்லாம் நாங்க எச்சரிக்கையா இருப்போம்ல. அது சரி கே.என்.சிவராமன் தயாரித்த& பெருமையுடன் விளம்பரப்ப‌டுத்திய‌ தினகரன் இலவச இணைப்பில் இடம் பெற்ற ஒரு பதிவு தொடர்பா வினவு இணைய தளத்தில் ஒரு பதிவு வந்திருந்தது பார்த்தீங்களா..?

சிரித்துக் கொண்டே அன்பரசு பதில் சொன்னார்."ஆமாம்.பார்த்தேன். ஆனால் இதழ் தயாரித்த‌ சிவராமன்  பெயரைக் குறிப்பிட மறந்து  'தினகரனது இலவச இதழ் தயாரிப்பாளர்கள்' அப்படின்னு சொல்லியிருந்தாங்க‌."

"அவங்க சொல்லலைன்னா என்ன,நாம் இப்ப சொல்லிட்டோமே"

ம்ம்ம்ம்.

vikatan awards,


'விகடன் விருதுகள்' தயாராகிட்டிருக்குப்பா..

 இது ஒரு செய்தியா..?

யாருக்கு விருது கொடுப்பாங்கன்னு ஊருக்குத் தெரிந்த விஷயம் தான.? விஜய் டிவிக்கு ரெண்டு,அதுல்ல ஒன்னு கோட்டு கோபிக்கு, இது போக‌ விகடன் சீரியலுக்கு ஒன்னு.இது போக விகடன் ரிப்போர்ட்டர்களுக்குத் தெரிந்த நாலு பிரபலம், ஆசிரியருக்குப் பிடிச்ச சினிமாக்காரர்கள், (பாலா எதும் படம் எடுக்கலைன்னு நினைக்கிறேன்.அந்த வரைக்கும் தப்பித்தோம்.)

இது போக சிற‌ந்த இரு சக்கர வாகனம் அப்படின்னு ஒரு விருது கொடுப்பாங்க பாரு.

சான்சே இல்ல. அவங்க சொல்ற வண்டி எப்படியும் சில லட்சங்கள் இருக்கும். அதை நம்ம நாட்டுல பெரும்பாலானோருக்குச் சுத்தமாத் தெரியாது. இவ்வளவு ஏன் விகடனில் ஒருத்தரும் ஓட்டுறதும் கிடையாது. ஆனா ரொம்பச் சரியா அவ்வளவு காஸ்ட்லி வண்டிக்குத் தான் கொடுப்பாங்க.

இதுக்கு நடுவுல உண்மையிலேயே திறமையான நாலு பேருக்கு கொடுப்பாங்க‌. ஆகமொத்தம் எல்லோரும் திறமையானவங்கன்னு ஒரு இமேஜ் வந்துடும்.

அடப்போங்க‌..?  பில்லை கொடுத்துட்டு வாங்க.இவங்களைப் பத்திப் பேசிக்கொண்டிருந்தால் நம்ம வேலை பார்க்க முடியாது.கிளம்புவோம்.


Wednesday 12 November 2014

'பிறக்காத பிள்ளைக்கு தாலாட்டு' - 'தினமலர்' &'தினகரன்' பொய்ப்பாட்டு...!




தினமலரில் அடிக்கடி ஒரு அறிவிப்பு வரும்.

"தினமலர் நிருபர் என்று சொல்லிக்கொண்டு யாரும் செய்தி வெளியிட அன்பளிப்பு கேட்டால் உடனே எங்களுக்கு தகவல் சொல்லுங்கள்.அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பணி நீக்கம் செய்யப்படுவார்கள்."

இதைக் கண்டவுடன் படிப்பவர்கள் அனைவரும் தினமலர் லஞ்சத்தை அடியோடு எதிர்க்கிற‌து. தனது நிருபர்களிடம் இருந்தே அதை நடைமுறைப்படுத்துகிறது என நினைப்பார்கள்.

தினமலர் நிருபர்கள் எல்லா இடங்களிலும் கவர் வாங்குகிறார்கள் என்று சொல்ல முடிகிறதோ இல்லையோ, ஆனால் ஆங்கில ஊடகங்களின் நிருபர்களைப் போல அதிகார மட்டத்திடம் ஒரு Obligation எனச் சொல்லிக் காரியம் சாதிப்பவர்கள் தான். 

கவர் வாங்கும் பத்திரிகையாள‌ர்களை விட இவர்கள் சாதிக்கும் காரியத்தின் 'மதிப்பு' மிக அதிகம். விதி விலக்குகள் ஒன்றிரண்டு இருக்கலாம். விதிவிலக்குகள் தினமலருக்கு மட்டுமல்ல அனைத்துப் பத்திரிகைகளுக்கும் உண்டு .

'தினமலர்' நிருபர் செய்தி வெளியிட லஞ்சம் வாங்கினால் அதன் நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதாகச் சொல்கிற‌து. அதன் முதலாளி ஆதாயம் எதிர்பார்த்து செய்தி வெளியிட்டால் யார் நடவடிக்கை எடுப்பது..?
*


பதவியேற்ற ஓரிரு நாளில் ஒவ்வொரு பத்திரிகையும் தங்கள் விருப்பு வெறுப்புக்களின் அடிப்ப‌டையிலும்,தங்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலும் யார் யாருக்கு அமைச்சரவை விரிவாக்கத்தில் இடம் கிடைக்கும் எனச் செய்திகளை வெளியிட்டு வந்தார்கள். 

வெற்றி பெற்றதில் யாரையாவது ஒருவரைச் சுட்டிக்கட்டி அவருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என ஊகச் செய்திகளை பிற ஊடகங்கள் வெளியிட்டன. நாட்டின் பிற ஊடகங்களே எதிர்பார்க்காத செய்தியை தமிழ்ப் பத்திரிகைகளான தினகரன் மற்றும் தினமலர் வெளியிட்டன. 

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டுத் தோற்றுப்போன இல.கணேசனுக்கு மத்திய அமைச்சர் பதவி,அதுவும் கேபினட் அந்தஸ்தில் கிடைக்கும்,மேலும் என்ன இலாகா கிடைக்கும் என அறுதியிட்டுச் சொல்லின. 

பொதுவாய் இல.கணேசன் என்றாலே பத்திரிகைகள் பம்முவதும்,ஆதரவுச் செய்திகளை அள்ளித் தெளிப்பதும் தெரிந்த விஷயம் தான்.ஆனாலும் தோற்றுப்போன ஒருவருக்கு அமைச்சர் பதவி என்று எழுதுவதற்கு எவ்வளவு பொய் நெஞ்சுரம் வேண்டும்.? 

அது இவர்களுக்கு நிறைய இருக்கிறது.

ஜூன் 10,2014 தினமலர் செய்தி


நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை பதவியேற்ற பின்பு இரு வாரங்கள் கழித்து இந்தச் செய்தியை தினமலர் வெளியிடுகிறது. தோற்றுப்போன மனிதருக்கு அமைச்சர் பதவி என்று செய்தி வெளியிட்டால் படிக்கும் வாசகன் என்ன நினைப்பான் என்று துளியும் கருதவில்லை.அது தனது வாசகனை எடை போடுவது இப்படித்தான். தனது ஆதாயம் இருக்கிறது என்று எண்ணிய‌ பின்பு எதற்கும் துணிவது தானே அவர்கள் 'நியாயம்..'?

அமைச்சரவை விரிவாக்கம் எதிர்பார்த்தபடி நடைபெறவில்லை.ஆனாலும் தினமலர் ஓய‌வில்லை.இல.கணேசன் அமைச்சரானால் என்னென்ன காரியம் சாதிக்க வேண்டும் என பெரிய லிஸ்ட் வைத்திருக்கிறது போலும்.


அடுத்ததாக அக்டோபர் 13 அன்று டீக்கடை பெஞ்சில் இல.கணேசன் அமைச்சராகப் போகிறார் என பொய்யை மீண்டும் எழுதுகிறது. கவர்னர் பதவியையே துச்சமென மதித்தவர்,நாட்டுக்குச் சேவை செய்ய வெயிட்டிங் லிஸ்டில் காத்திருக்கிறார் என ஒளிவட்டம் சுற்றுகிறது.
**



தினம‌லர் யோக்கியதைக்கு சற்றும் குறைந்ததல்ல,தினகரன் யோக்கியதை. 

தனது பிழைப்புக்காக ஒரு தட்டில் சாப்பிட்டவனுக்கு விஷம் வைக்கவும் தயங்காத மாறன் சகோதரர்கள் இன்று மிகப்பெரிய இக்கட்டில் இருக்கிறார்கள். திகாரில் களி எண்ணுவதை எப்படியாவது தவிர்க்க நினைக்கிறார்கள்.அதனால் தான் பாரதீய ஜனதாவை தங்கள் வசமாக்க ஆதரவுச் செய்திகளை அள்ளித் தெளிக்கிறார்கள். அதிலும் இல.கணேசனை குளிர்வித்தால் அவர் நெட்வொர்க் வழியாக‌ எதும் காரியம் கிட்டுமா என முயற்சிக்கிறார்கள். அதனால் தான் இச்செய்தி.




தேர்தல் முடிவடைந்து பதவியேற்பு நடைபெறும் முன்னர் இல.கணேசன் மத்திய அமைச்சர் ஆகிறார் என ஒரு செய்தி.  

ஆனாலும் காரியம் கைகூடவில்லை என்பதால் அதன் பின்பு சற்று இடைவெளி விட்டு இன்னொரு செய்தி.

ஜூன் 7,2014 தினகரன் செய்தி

இன்றோ மோடி தனது அமைச்சர‌வையை விரிவாக்கம் செய்து விட்டார். இல.கணேசனுக்கு திருவோடு தான் கிடைத்துள்ளது. இல.கணேசன் அமைச்சராவதை அவரை விட ராமசுப்பையர் மகன்கள்,பேரன்கள் மற்றும் கருணாநிதியின் பேரன்கள் அதிகம் எதிர்பார்த்துக் காத்திருத்திருக்கிறார்கள் போலும்.

அதனால் வரிந்து கட்டி இல.கணேசனே மறந்து போனாலும் அவர் அமைச்சர் ஆகிறார்,ஆகப்போகிறார் என பரலோக ராஜ்யம் சமீபித்திருப்பதாய் பாதிரிகள் பிரசங்கம் போல,நம்முள் பரவசத்தை உருவாக்குகிறார்கள். குறி சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அடுத்து இல கணேசனுக்கு ஐ.நா.சபை தலைவர் பதவி கிடைக்கும் என இரண்டு ஊடகங்களும் எழுதும் என எதிர்பார்க்கலாம். கொஞ்சம் அசந்தால் இவர்களே இல.கணேசனை கேபினட் கூட்டம் நடக்கும் பொழுது உள்ளே தள்ளிக் கதவைப் பூட்டி விடவும் தயங்க மாட்டார்கள்.

சேலம் சிவராஜ் சித்த வைத்தியசாலை விளம்பரங்களில் ஒன்றைக் கண்டிப்பாய்ப் பார்க்கலாம்.எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது என. 

அதன் உள்ளர்த்தம் வேறெங்கும் போய் ஏமாந்து விடாதீர்கள்,எங்களிடம் மட்டும் வந்து ஏமாறுங்கள் என்பது தான். நிருபர் என்று சொல்லிக் கொண்டு யாரும் காசு கேட்டால் கொடுக்காதீர்கள்,எங்களை அணுகுங்கள் என்ற தினமலர் அறிவுப்பும் இப்படித்தான்.

இவர்கள் எழுதும் கிசுகிசுக்கள் பெரும்பாலும் இப்படித் தான் பிறக்கின்றன. ஆனால் அதன் பொய்மையை இந்தச் செய்தியைப்போல் உரிக்க முடிவதில்லை.

தனது நலனுக்காய் எந்த சமரசத்தையும் எவர் காலிலும் விழத் தயார் நிலையில் இருப்பவர்கள் தான் நமது பத்திரிகை முதலாளிகள்.அப்படிப்பட்டவர்கள் பொய்ச் செய்தியை வெளியிட்டுத் தரகு வேலை செய்வதற்கா அஞ்சப் போகிறார்கள்.? தனக்கு ஆதாயம் கிடைப்பதற்காய் கூச்சம் இல்லாமல் மகிழ்ச்சியுடன் அதனைச் செய்வார்கள். 

தினமலரும் தினகரனும் அதைத்தான் செய்கின்றன. வாசகன் தான் வழக்கம் போல் ஏமாளி.


Thursday 6 November 2014

குள்ளநரி சிங்கமாச்சி; கோசல்ராம் கதை அசிங்கமாச்சி...!




கோசல்ராம்.

முதலில் 'சுதேசமித்ரன்' பணி . பிறகு 'விகடன் பேப்பர்'.அடுத்து  'தினகரன்' ஏரியா கிரைம் பீட்,அடுத்து 'குமுதம்' நிருபர். அடுத்து 'தினகரன்' கிரைம் பீட் இன்சார்ஜ்...அங்கிருந்து 'குமுதம்' குழம்பு ஆசிரியர்.

இப்படித் தன் பத்திரிகை அனுபவத்தில் தகுதி திறமை தவிர்த்து பிற தொடர்புகளை வைத்து உச்சத்திற்கு வந்தவர். கோசல்ராம். இப்பொழுதோ பணி எதுவும் இல்லாத நிலையில் தனது நண்பர் ரஙகராஜ் பாண்டே உதவியுடன் 'தந்தி டிவி'யில் கருத்துச் சொல்லி வருகிறார்.(அது எப்படி எல்லாப் பய பிள்ளைகளும் கரெக்டா ஒன்னு சேருரீங்க)

'குமுதம்' குழும ஆசிரியராய் இருந்த பொழுது வரதுக்குட்டியுடன் கைகோர்த்துக்கொண்டு இவர் செய்த அட்டூழியங்கள் அதிகம்.

ஆனால் அதே கோசல்ராம் காரியம் முடிந்தவுடன் வரதுவால் தூக்கி எறியப்பட்டார். இப்பொழுது அழுகையும் புலம்பலுமாய் முகநூலில், "நான் உன்னை எப்படி நினைச்சிருந்தேன்,நீ இப்படிப் பண்ணிட்டீயே" என வரதராஜனை நோக்கி இன்னும் பாசம் போகாமல் சோக ராகம் பாடி வருகிறார்.

அதை ஒட்டி அவர் எழுதிய பதிவும்,நமது எதிர் பதிவும் இங்கே;

அவருக்கு எப்பவுமே எழுதத்தெரியாது என்பதால் காசிமுத்து மாணிக்கம் கதையைப் பகிர்ந்துள்ளார்.நல்லது. வரதராஜனை சிங்கமாகவும்,அவரை பூனையாகவும்,அவரால் குமுதம் அலுவலகத்தில் இருந்து தூக்கி எறியப்பட்ட ஊழியர்களை எலிகளாகவும் அந்தக்கதையில்  உருவகம் செய்யப்பட்டுள்ள‌து.



இதுவே தவறு.வரதராஜன் என்றும் சிங்கம் அல்ல.அவர் என்றும் நரி தான்.ஆக அந்தக் கதையின் அடிப்படையே தவறு. அதுவும் போக  கோசலின் வார்த்தையிலேயே என்றும் உண்மை இல்லாத பொழுது  கதையில் என்ன உண்மை எப்படி இருக்க முடியும்..?

நாம் அவருக்கு பொருந்துவது போல ஒரு கதையை எழுதியுள்ளோம்.

ரந்து விரிந்த அந்த வனாந்திரத்திற்கு ஒரு வயதான சிங்கம் ராஜாவாக இருந்தது.ஒரு நாள் அந்த வயதான சிங்க ராஜா இறந்துபோனார். புதிய ராஜா பதவி ஏற்றுக்கொள்ள வேண்டுமே...!

 அதனால் வெளிக் காட்டில் வசித்துக்கொண்டிருந்த வாரிசு இங்கே ராஜாவாக பொறுப்பேற்றுக்கொண்டது. புதிய சிங்க ராஜாவு வேறொரு காட்டில் எப்பவும் பிசி. அதனால‌ இந்தக் காட்டு ராஜாங்கத்தையும் பார்த்துக்கொள்ள முடியல. காட்டில் வளர்க்கப்படாத அந்த .கான்வெண்ட் சிங்கத்திற்கு வேட்டைக் குணமும் காடு பற்றிய அறிவும் குறைவு. அதனால் காட்டோட நிலையை அறியாம, தனது ராஜா பதவியின் நிலையையும் அறியாம, தனது பதவியை நரியிடம் கொடுத்தது. அது குள்ள நரின்னு தெரியாம:

குள்ள‌நரியும் சிங்கத்தோட குகையிலேயே வந்து தங்கிக்கொண்டது. தனக்கு நாட்டாமை பதவி கிடைத்ததால் தனது நாட்டாமையைக் காட்ட ஆரம்பித்தது குள்ள‌நரி.

சிங்கத்தோட குகையில தங்கிட்டதாலவோ என்னவோ உடம்பு முழுக்க சிங்கச் சாயம் பூசிக்கொண்டு, சிங்கம் போலவே மாறி ‘நான்தான் ராஜா’ என்று தம்பட்டம் அடிக்க தொடங்கியது. காட்டோட கணக்கு வழக்கில் எல்லாம் கைவைத்து சுருட்டியது. ராஜாவுக்கு இருந்த சொத்தை சுருட்ட தொடங்கியது. வெளிக்காட்டில் இருந்த ராஜாவுக்கு குள்ள நரியோட திருவிளையாடல் எல்லாம் போனபடியே இருந்தது. ஆவேசமா புறப்பட்டு வந்த சிங்கம் குள்ள‌நரியோட திருட்டு கணக்கை எல்லாம் எடுத்து போலீஸில் புகார் கொடுத்துடுச்சி.குள்ள‌ நரி கைதாகி தப்பிச்சோம் பிழைச்சோம்னு வெளியில வந்து ‘அவமான பட்டதுக்கு’ காரணம் யார்னு கருவிகிட்டிருந்துச்சு. உடம்பெல்லாம் பூசிக்கொண்டிருந்த சிங்கச் சாயம் வெளுத்துபோச்சேன்னு புலம்பியது.

அப்பதான் சிங்கத்தோட குகையில இருந்த 21 காட்டு எலிகள்தான் நமக்கு எதிரா உள்ளடி வேலைய பார்த்திருக்கும்னு அதுவாக‌வே புரிஞ்சிகிட்டது.
திருடனுக்கு யாரை பார்த்தாலும் போலீஸாதான் தெரியும்.

அந்த மாதிரி எலிகளை எல்லாம் பார்த்து தனக்கு எதிரிகள் என புலம்ப ஆரம்பித்தது. அந்த எலிகளை எல்லாம் ஒழித்துக்கட்ட வேண்டும். அதை நாம் செய்தபடியும் தெரியகூடாது என்று யோசித்தது குள்ள நரி. சரியான ஒரு கங்காணி பூனை இருந்தால் நன்றாக இருக்கும் என்று பல இடங்களிலும் தேடி அலைந்தது. அப்போதுதான் ஏற்கனவே குள்ள நரியால் அடித்து விரட்டப்பட்ட பூனை எதிலே வந்தது. அந்த பூனை எல்லா தப்பு வழியிலும் போகக்கூயது என்று தெரிந்துதான் குகையில் இருந்து ஏற்கனவே அடித்து விரட்டி விட்டிருந்தது குள்ள‌நரி.

 இப்போது அந்த பூனை சரியாக இருக்குமே என்று பேசியது. உனக்கு கங்கானி வேலை. என் குகையில் உள்ள பழைய எலிகளை வேட்டையாடி விரட்டனும் என்று 21 எலிகளோட பட்டியல கொடுத்தது.

காலக்கொடுமை என்னவென்றால், இந்த கள்ள பூனை, பூனையாகவே இருந்திருந்தால் பரவாயில்லை. கங்காணி பதவியை வைத்து அடிக்கடி அதுவும் ‘நரிவேஷம்’ கட்ட ஆரம்பித்தது. எவ்வளவு பெரிய நரியோடு நட்பு எனக்கு கிடைச்சிருக்கு தெரியுமா என்று குகையிலும், வெளியிலும் ஆடத்தொடங்கியது. குகையில் இருந்த 21 எலிகளையும் அவமானப்படுத்தியது. ஒவ்வொன்னா அடிச்சு வெளியே விரட்டினபடியே இருந்தது.

வெளியில போயிருந்த சிங்க சாயம் பூசிய  குள்ள நரி குகைக்கு வந்ததும், இன்னைக்கு ஒன்ன காலிபன்னிட்டேன் என்று பெருமையா பட்டியல் வாசிக்கு. குள்ள நரியும் ஆஹா ஓஹோ என்று சலுகை என்ற எலும்புத்துண்டை எடுத்து வீசும். கள்ள பூனைக்கோ இப்படி வீசிய எலும்புத்துண்டு ருசி தாங்க முடியல. அதனால எலி வேட்டைய வேகமா நடத்தியது.

ஒரு கட்டத்தில் குகையில் இருந்த எலிகள் எல்லாம் காலி. குள்ளநரிக்கு சந்தோஷம்.

ஆனா இப்போ கள்ள பூனை மேல கவனத்தை வைத்தது குள்ள நரி.

எவ்வளவு எலும்புத் துண்டை தின்னு கொழுத்திருக்கு. தவிர நம்ப விஷயத்தை எல்லாம் எவ்வளவு தெரிஞ்சி வச்சிருக்கு. இனியும் இதை விட்டு வைக்கக்கூடாது என்று கணக்கு போட்டது.

இந்த குள்ள நரி இப்படித்தான் என்று கள்ள பூனைக்கும் தெரியும். அதனால‌ காட்டு போலீஸில் இருந்த நரியோட எதிரிங்ககூட கைகோர்த்து வேவு வேல பார்க்க ஆரம்பிச்சது. ஆஹா..அடிமடியிலேயே கைவைக்க ஆரம்பிச்சிடுச்சுப்பா கள்ளப் பூனை என்று குள்ள நரி ஆவேசமானது. அந்த கள்ளபூனை வந்தா குகைக்கு வெளியவே நிறுத்தி விரட்டி அனுப்பிடுங்க. இது நரி ராஜா உத்தரவுன்னு சொல்லுங்கன்னு ஆர்டர் போட்டிருச்சு.

வழக்கம்போல கங்காணி பந்தாவோட வந்த பூனை வாசல்லலேயே நின்று அவமானப்பட்டு போச்சு. அப்படி துரத்தப்பட்ட பழைய கங்கானி பூனைதான் இப்ப குட்டிகுட்டி  கதையா அடுத்தவங்க கிட்ட கேட்டுக்கிட்டு சொல்லிச் சொல்லி  குள்ள நரியோட நாட்டாமைய  நாறடிச்சுகிட்டிருக்காம்.


****
சூடுபட்ட கள்ளப்பூனையும்,குள்ளநரியும்



பாதிக்கப்பட்ட  21 எலிகளோட பட்டியல்

ரஞ்சன்- குமுதம் எடிட்டர்.
ரவிஷங்கர்- குமுதம் சினிமா சீனியர் நிருபர்
தளவாய் சுந்தரம்- குமுதம் சீனியர் நிருபர்.
கோபால்- குமுதம் புகைப்படக் கலைஞர்.
சித்திரிம் மத்தியாஸ்- குமுதம் புகைப்படக் கலைஞர்.
திண்டுக்கல்-மருதநாயகம்
கரூர்-உன்னி கிருஷ்ணன்

கோடீஸ்வர ராவ்- குமுதம் (தெலுங்கு) குமுதம் ஜோதிடம் ஆசிரியர்
மற்றொரு கோபால் ஜோதிடம் (தமிழ்) உதவி ஆசிரியர்.

இளங்கோவன். குமுதம் ரிப்போர்ட்டர் எடிட்டர்.
பா.ஏகலைவன்- ரிப்போர்ட்டர் சீனியர். தலைமையிடம்
ஆந்தை குமார். ரிப்போர்ட்டர் சீனியர் தலைமையிடம்
திருமலை- ரிப்போர்ட்டர் சீனியர்-மதுரை
கா.சு. வேலாயுதம்- ரிப்போர்ட்டர் சீனியர்.
வேட்டை பெருமாள்-ரிப்போர்ட்டர். ரிப்போர்ட்டர் உதவி ஆசிரியர்
மோகன்- ரிப்போர்ட்டர் உதவி ஆசிரியர்.
பாலஜோதி- ரிப்போர்ட்டர் உதவி ஆசிரியர்
மலைமோகன்  ரிப்போர்ட்டர் உதவி ஆசிரியர்.
விஜயானந்த்- ரிப்போர்ட்டர் நிருபர்.
கலைவாணன்-பாண்டி ரிப்போர்ட்ட‌ர் நிருபர்
மீடியா ராமு- ரிப்போர்ட்டர் புகைப்படக் கலைஞர்.
முருகேசன்-ரிப்போர்ட்டர் நிருபர்.

 மேலே  பட்டியலில் உள்ள அனைவரும் குமுதம் முதலாளி ஜவகர் பழனியப்பனுக்கு வேண்டப்பட்டவர்கள் என்றதாலேயே 21 எலிகளாக பட்டியல் எடுக்கப் பட்டார்கள். இவர்கள் ஒவ்வொருவரையும் உளவியல் ரீதியாய் சித்ரவதை செய்தும் பல வழிகளில் அவமானபப்டுத்தியும் அவர்களை வெளியேற்ற கோசல்ராம் செய்த அட்டுழியம் எழுத்தில் வடிக்க முடியாதது.

அதே போன்று சேஷையா ரவி, வெங்கிட் ஆகிய இருவரும் கோசலுக்கு நெருங்கிய நண்பர்கள். விகடனில் இருந்து அவரே அழைத்து வந்தார். கடையில் அந்த இருவரும் அவமானப்பட்டு ஓடிப்போனார்கள்.நெருங்கிய நண்பர்களான வெங்கட்,சேஷையா ரவி விஷயத்தில் கோசலின் ஆட்டம் அதிகம் என்பது அனைவருக்கும் தெரியும்.

இவ்வளவு சூடு பட்ட பின்பு தான் கள்ள‌ப்பூனைக்கு புத்தி வந்திருக்கிற‌து.

 குள்ள நரியும் பூனையும் எப்பொழுதும் நண்பராக முடியாது என.

அடுத்து தான், எப்பவும் ராஜா ஆக முடியாது என குள்ள‌நரிக்கு என்று புரியுமோ,எப்பொழுது பாடம் கற்பிக்கப்ப‌டுமோ.?..


பொறுத்திருப்போம்.