Sunday 25 August 2013

ஏ.டி.எம்.மில் திருடிய தினகரன் நியூஸ் எடிட்டர்.....!



தினகரன் நாளிதழின் வேலூர் பதிப்பின் நியூஸ் எடிட்டராக சில வாரங்களுக்கு முன்பு பெருமாள் என்பவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.(பெருமாள் புகைப்படம் நம்மிடம் இல்லை.யாரிடமும் இருந்தால் அனுப்பவும்.)இதற்கு முன்பு பொறுப்பில் இருந்த கோவிந்தராஜ் திரும்பவும் சென்னைப் பதிப்பிற்கு அழைத்துக் கொள்ளப்பட்டிருக்கிறார்.

இந்த பெருமாள் திடீரென்று நியூஸ் எடிட்டராக நியமிக்கப்பட்டிருப்பது அங்குள்ள மேனேஜர் மற்றும் நிர்வாகத்தின் வேண்டுகோளின் படி நடந்துள்ளது என்பதுவும்,அது அவர்களை மிகுந்த மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது என்பது கூடுதல் தகவல்.

இனி இவர் குறித்த சிறு பதிவு.

இவர் யாரென்றால் அதிகமாய் கவர் வாங்குகிறார் என்று தினத்தந்தியில் இருந்தே விரட்டி அடிக்கப்பட்டவர்.(அங்கு இருப்பவ‌ர்களே இவரின் வேகத்தைக் கண்டு மிரண்டார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்)

இப்பொழுது தினகரனின் வேலூர் பதிப்பு எடிட்டர்.

என்ன நோக்கத்திற்காய் இவர் இந்தப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டாரோ, அதனைக் கச்சிதமாய் நிறைவேற்ற வேண்டாமா?

அலுவலகத்தில் நிறைவேற்றினாரா என்று நமக்குத் தெரியவில்லை.ஆனால் பொதுவெளியில் கச்சிதமாய் நிறைவேற்றித் தன் 'திறமை'யை நிரூபித்து விட்டார்.

ஆனால் அதில் அவரின் கீழ் பணியாற்றும் பத்திரிகையாளர் சிக்கிக் கொண்டது தான் சோகம்.

இனி செய்திக்கு வருவோம்.

வேலூர் தினகரன் அலுவலகத்தின் அருகே ஒரு தனியார் ஏ.டி.எம்.மையம்.

ஒரு மதிய வேளையில் தினகரன் ரிப்போர்ட்டர் ஒருவர் பணம் எடுக்க உள்ளே நுழைகிறார்.அவர் பெயர் தாஸ் என்று வைத்துக் கொள்ளுங்களேன்.இவர் பழைய தினகரனில் இருந்து தொடர்ந்து பணியாற்றி வருபவர்.

ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து பணம் வெளிவரும் சமயம் வெளியே நியூஸ் எடிட்டர் பெருமாள் பணம் எடுக்கக் காத்திருப்பதைத் தற்செயலாய்ப்  பார்த்து விடுகிறார்.அவரைக் கண்டதும் ரிப்போர்ட்டர் தாசிடம் இருக்கும் அடிமை மனோபாவம்  தானாய் விழிக்கிறது.பதைபதைத்து விடுகிறார்.

எடிட்டர் வெளியே காத்திருக்கிறார்.நாம் அவரைக் காக்க வைத்திருக்கிறோம்,இது ரொம்ப தவறல்லவா..? (!)என்ற பயத்தில் ஏ.டி.எம். இயந்திரத்தில் இருந்து வந்து கொண்டிருந்த பணத்தைக் கூட எடுக்காமல் அரக்கப் பரக்க வெளியே வருகிறார்.பணம் அப்படியே இயந்திரத்தில் இருக்கிறது.

'சார் நீங்க போங்க சார் உள்ளே" என்று வழி விடுகிறார்.

இவரின் பதைபதைப்பைப் பார்த்து மனதுக்குள் சிரித்துக் கொண்டு அதனை வெளிக்காட்டாத பெருமாள் ஏ.டி.எம். மையம் சென்று அவர் வந்த வேலையை முடித்து விட்டுச் செல்கிறார்.பெருமாள் செல்லும் வரை ஏ.டி.எம்.மையத்திற்கு வெளியே கொஞ்சம்  தள்ளி நின்று காத்திருந்த தாஸ்,  அவர் சென்ற அடுத்த நொடி,தான் எடுக்காமல் விட்டு வந்த பணத்தை எடுக்க உள்ளே நுழைகிறார்.

ஆனால் அங்கு பணம் இல்லை.

அதிர்ச்சியாகிறார்.சிலையாய் நிற்கிறார்.என்னடா இது சோதனை?

மாசக் கடைசி வேற...எவனிடமும் கடனும் வாங்கவும் முடியாது.என்ன செய்வது என்று யோசிக்கிறார்.

நம்ம எடிட்டர் தான் இதற்கு முன் வந்தார்.அவர் ஏதாவது.?

ஆனாலும் அதிகம் யோசிக்க முடியவில்லை.

பெருமாள்



எடிட்டர் முதலாளியைப் போல கேடி தான்.ஆனால் 5000 ரூபாய் என்பது அவரைப் பொறுத்து அல்பக் காசு,அதைத் திருடுவாரா என்று யோசித்து உடனே அவராகவே அப்படியெல்லாம் செய்ய மாட்டார் என்று ஒருவாறாய் முடிவு செய்து கொள்கிறார்.

ஒருவேளை பணம் நாம் எடுக்காததனால் அது திரும்ப,இயந்திரத்தின்  உள்ளே(!) சென்றிருக்குமோ,அல்ல‌து எடிட்டர் உள்ளே இருக்கும் பொழுதே, நம் கவனத்திற்கு வராமல் பணம் எடுக்க வந்த இன்னொருவன் ந‌ம் பணத்தையும் சுட்டிருப்பானோ என்று யோசித்து இறுதியில் வேறு வழியில்லை என்று முடிவு செய்து வங்கியில் புகார் செய்கிறார்.

இவர் ரிப்போர்ட்டர் என்பதால் வங்கி உடனே நடவடிக்கை எடுக்கிற‌து.சில மணி நேரத்திலேயே,ஏடி எம் மையத்தில் பொருத்தப்பட்டுள்ள காமெரா பதிவுகளை எடுத்துப் பார்க்கிற‌து.அதில் அனைத்தும் பதிவாகி இருந்தது.தாஸூம் உடன் இருக்கிறார்.

அதில்....

தாஸ் எடிட்டரைப் பார்த்தவுடன் வெளியே வருகிறார்.
உள்ளே செல்லும் எடிட்டர் பெருமாள்,முதல் வேலையாய் அங்கு எடுக்கப் படாமல் இருக்கும் தாஸின் பணத்தை எந்தக் கூச்சமும் இல்லாமல் எடுத்து பாக்கெட்டில் திணிக்கிறார்.அதன் பின் தான் தனது கார்டை உள்ளே நுழைக்கிறார்.

இந்தப் பதிவைப் பார்த்தவுடன் அனைவருக்கும் அதிர்ச்சி. ஆனால் அதிக அதிர்ச்சி அடைந்தது ரிப்போர்ட்டர் தாஸூ.

"ச்சே இவ்வளவு கேவலமா இருக்கானே",எச்சக்காரப் பய,தனக்குக் கீழ வேலை செய்யுறவன் பண‌ம் என்று தெரிந்தும் இப்படிச் செய்துட்டானே..?பகலிலேயே திருடுறானே,மொள்ளமாரிப்பய என்பது போன்ற இன்னும் பல 'நாகரீக‌' வார்த்தைகளைச் சேர்த்துத் திட்டுகிறார்.வங்கி நிர்வாகத்திற்கு இந்தக் கதை எதும் புரியவில்லை.நகரக் காவல்துரைக்கு புகார் அளிக்க முடிவு செய்கிறது.
ஆனால் தாஸ் தடுத்து விடுகிறார்.

"இவன் எங்க எடிட்டர் சார்."என்று அவமானத்துடன் சொல்கிறார்.

அவர்களுக்கும் அதிர்ச்சி.

இந்தியன் வங்கி கோபாலகிருஷ்ணன் போன்ற ஊழல் பேர்வழிகளைக் கண்ட அவர்கள்,மேலதிகாரின்னா இப்படித்தான் இருப்பானுஙகளோ என்று சிரித்துக் கொள்கின்றனர்.

அதன் பின் பஞ்சாயத்து கூட்டப்படுகிற‌து.பல கெடுபிடிகளுக்குப் பின் வங்கிக்கு வருகிறார்.நம்ம பெருமாள்.

முதலில் தான் எடுக்கவில்லை என்றும்,தான் யார் தெரியுமா என்னைச் சந்தேகப்ப‌டலாமா?என்றும் சவடால் விட்டவர் வீடியோ பதிவுகளைக் காட்டியதும்,அமைதியானார்.பிறகு,என் பணம் என்று தான் தவறாய் எடுத்து விட்டேன் என்றும் அபத்தமாய் காரணம் சொன்னார்.

அதன்பின்,"சார் அவர் பணத்தை உடனே கொடுத்துடுங்க,புகாரை முடித்து விடலாம்" என்று வங்கி நிர்வாகம் சொல்கிறது.

அதற்கு எடிட்டரோ,கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல்,பணம் இப்பொழுது என்கிட்ட இல்லை.இரண்டு தவணையாகத் தந்துடுறேன் என்று சொன்னார்.வங்கி நிர்வாகம் தாஸ் முகத்தைப் பார்க்க,தாஸ் இந்தப் பாவி,அலுவலகத்தில் நம்மை எதும் காலி பண்ணிடுவானோ என்று பிழைப்பை யோசித்து பெருமாள் சார் சொன்ன மாதிரி,நான் வாங்கிக்கிறேன் சார்.புகாரை முடிச்சுடுங்க என்று சொல்லித் 'தலைவிதி'யை நொந்தபடி  விடை கொடுத்தார்.

'கிரேட்' பெருமாளோ எதுவும் நடைபெறாதது போல எல்லாவற்றையும் துடைத்துப் போட்டு தினகரன் அலுவலக்ம் சென்று சமூகத்திற்கு ஆற்ற வேண்டிய‌ தனது பணிகளைத் தொடர்ந்தார்.

த்திரிகையாளர்களின் அடிமை மனோபாவம் குறித்து ஆராய்வதா,இல்லை எடிட்டரின் திருட்டுத்தனம் குறித்து பேசுவதா,இல்லை இவர்களைப் போன்றவர்களை மட்டும் ஏன் நிர்வாகம் விரும்புகிறது என்பது குறித்தோ,இங்கு பேசுவதை விட ஒட்டுமொத்த துறையும் எவ்வாறு செல்லரித்துக் கிடக்கிறது என்பது குறித்து தான் கவலைப்பட வேண்டிய தருணம் இது.


Friday 9 August 2013

'தி இந்து' நாளிதழில் கருட புராணத்தின் படி தண்டனை...!



தேனி கண்ணன்



தேனி கண்ணன்.

இவரைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம்.

இவர் வரதராஜன் அபகரித்த‌ குமுதத்தில் சினிமா நிருபராகப் பணியாற்றிக் கொண்டிருப்பவர்.இளையராஜா கேள்வி பதில்கள் பகுதியை இவர் தான் தொகுத்து எழுதிக் கொண்டிருந்தார்.இவர் கடந்த மாதம் தொடங்க உள்ள  'தி இந்து' நாளிதழில் சினிமா நிருபர் வேலைக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்.

வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் இது வரை குமுதத்தில் தான் பார்த்து வந்த வேலையை ராஜினாமா செய்து விட்டு 'தி இந்து' நாளிதழில் சேர்ந்து விட்டார்.

ஆனால் வேலைக்குச் செர்ந்த இரண்டொரு நாளில் காமதேனு நிர்வாகம் இவரை வேலையை விட்டு நீக்கி விட்டது.
இவர் அதிகமாக கவர் வாங்குபவ‌ர் என்று தனியார் துப்பறியும் நிறுவனம் இவரைப்பற்றி அறிக்கை கொடுத்ததன் அடிப்படையில் இவர் தமது நிறுவனத்தில் பணி புரியத் தகுதியற்ற‌வர் என்று வேலையை விட்டு நீக்கியதாம்.

இப்பொழுது தேனி கண்ண‌ன் எந்த வழியும் தெரியாது நடுத்தெருவில் நிற்கிறார்.

நிருபர் தேனி கண்ணன் லஞ்சம் வாங்குவது உண்மை என்றே வைத்துக் கொண்டாலும் காமதேனு நிர்வாகம்,அவரை வேலைக்குச் சேர்க்கும் முன்பே தீர விசாரித்து அவரைச் சேர்க்காமல் இருந்திருக்கலாமே...ஒருவரை வேலைக்குச் சேர்த்து இரண்டு நாள் கழித்து அவர் கை சுத்தம் இல்லாதவர் என்று கண்டுபிடித்து பணி நீக்கம் செய்வதற்குப் பதிலாக, அதை இரண்டு நாட்களுக்கு முன் கண்டுபிடித்து அவரைப் பணியில் சேர்க்காமலேயே இருந்திருக்கலாமே..!அவர் குமுதத்திலேயே கவர் வாங்கிக் கொண்டு (உங்கள் எண்ணப்படி) வேலையில் நீடித்திருப்பாரே..!

கையில் இருந்த‌ வேலையையும் விட்டுவிட்டு இன்று அவரது குடும்பம் நடுத்தெருவில் நிற்கும் நிலை ஏற்பட்டிருக்காதே..!

தேனி கண்னன் கவர் வாங்குகிறார் என்பதைத் தாமதமாகவேணும் நிர்வாகம் கன்டுபிடிததுள்ளது,தாமதமாக தவறைக் கண்டுபிடித்த ஒரே காரணத்திற்காய் லஞ்சம் வாங்குபவர் பணியில் தொடர்வதை அனுமதிக்க முடியுமா..?அதனை நீங்கள் நியாயப்படுத்துகிறார்களா என்று கேள்வி எழலாம்.

சரி தேனி கண்ண‌ன் லஞ்சம் வாங்குகிறார்,இவரைப் போன்றவர்களால் தான் இத்துறைக்கே கெட்ட பெயர் ஏற்படுகிறது அதனால் அவரை நீக்கியது சரி என்று ஒப்புக் கொள்ளுவோம்.'தி இந்து' வில் இப்பொழுது ப‌ணியில் சேர்க்கப்ப‌ட்டவர்கள் எல்லாம் உத்தமபுத்திரர்களா...?

தவறே செய்யாத யோக்கிய சிகாமணிகளா..?

கவர் அளவுக்கு வாங்க மாட்டார்களா...சரி கவர் வாங்காமல் பண்டல் பண்டலாக வாங்குவார்களா..?இவர்களில் யாராவது ஒருவரின் நேர்மை பற்றிப் பேசினால் உண்மை தெரிந்து விடப் போகிறது.

சாதாரண ரிப்போர்ட்டரின் தகுதியையும் நேர்மையையும் எதற்கு உரசிப் பார்க்க வேண்டும்..? அதன் தலைமைப் பீடத்தையே உரசிப் பார்ப்போம்.

இப்பொழுது காமதேனு நாளிதழில் வேலைக்கு ஆள் எடுக்கும் பணியைச் செய்யும் இருவரில் ஒருவர் மட்டுமல்ல அதன் எடிட்டர் என்றும் அனைவராலும் அறியப்படுபவர் என்.அசோகன்.

அவர் நேர்மையானவரா..? யாரிடமும் கை நீட்டி ஒற்றைக்காசு முறையற்ற வழியில் வாங்காதவரா..?

இதற்குப் பதில் சொல்வதற்கு முன் பழைய கதை அல்ல,உண்மை ஒன்றைப் பார்ப்போம்.

அப்பொழுது திமுக ஆட்சிக் காலம்.

ஹன்ஸ்ராஜ் சக்சேனா திரைப்படங்களை சன் பிக்சர்ஸுக்காக அடிமாட்டு விலைக்கு உருட்டியும் மிரட்டியும் சமாதானமாகவும் வாங்கிக் கொண்டிருந்தார்.

ஒரு குறிப்பிட்ட நாளன்று இரண்டு பேர் தங்கள் திரைப்படத்தின் விற்பனை உரிமை குறித்துப் பேசுவதற்காய் ஹன்ஸ்ராஜ் சக்சேனாவைப் பார்க்க வந்திருந்தார்கள்.
தமிழகத்தின் முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதியின் மகன் பாலாஜி நடித்த காதல் சொல்ல வந்தேன் என்னும் திரைப்படம் தான் அது.படம்.படம் குறித்து சக்சேனாவுக்கும் படத்தயாரிப்பாளர்களுக்கும் நடந்த பேச்சு இருதரப்புக்கும் முடிவாகாமல் நீண்டு கொண்டே சென்றது.



ஒரு கட்டத்தில் சலிப்படைந்த தயாரிப்பாளர்கள் இருவரும்,நாங்க வேணுமின்னா மாறன் சார்ட்ட பேசிக்கிறோம் என்று சொல்கிறார்கள்.

இவர்கள் இப்படிச் சொன்னதும் சக்சேனாவின் புருவம் உயர்கிறது.இத்துறையின் மன்னாதி மன்னர்கள் எல்லாம் நம்மைப் பார்க்க அப்பாயிண்ட்மெண்ட் கேட்டு காத்துக்கிட்டிருக்காங்க.ஆனா ஒரு சுமாரான‌ படத்தை தயாரித்த இந்த இரண்டு புதிய தயாரிப்பாளர்கள் கலா நிதி மாறனைச் சந்திக்கப் போகிறோம் என்று சாதாரணமாக நம்மிடமே சொல்கின்றனரே என்னும் சந்தேகத்தையும் ஆச்சரியத்தையும் மனதில் வைத்துக் கொண்டு உங்களுக்கு சேர்மனைத் தெரியுமா ..? என்று கேட்கிறார்.

அசோகன் 


எதிரில் இருந்தவர்களில் ஒருவர்,  நான் அசோகன் விகடன் எடிட்டர்.இவர் சரவணக்குமார் ஜூனியர் விகடன் பொறுப்பாசிரியர் என்று சொல்கிறார்.

(நாம‌ மாறன் ட்ட ஆட்டையப் போட்டுத் தனியாப் படம் எடுக்கிறோம்,இவனுங்க சீனிவாசன் ட்ட ஆட்டையைப் போட்டு படம் எடுக்குறாங்க,சேம் பிளட் என்று சக்சேனாவின் மைண்ட் வாய்ஸ் சொல்லியதா என்று நமக்குத் தெரியாது.)

அதன் பின் சம்பிரதாயமாய் ஒரு சில வார்த்தைகள் பேசிய சக்சேனா,நீங்க சேர்மன்ட்ட பேசிக்கோங்க..என்று சொல்லி விடை கொடுக்கிறார்.உடனே கலாநிதி மாறனுக்கும் இவர்களைப் பற்றிச் சொல்லி இவர்கள் சந்திக்க வரும் விஷயத்தையும் சொல்லி விடுகிறார்.

இதைக் கேட்ட மாறன் உடனே சீனிவாசனுக்குப் போன் செய்கிறார்.

"என்ன நீங்க தான் சினிமா எடுக்குறீங்கன்னு நினைச்சேன்.உங்க கிட்ட வேலை செய்யுறவங்க எல்லாம் படம் எடுக்குறாங்க போல..தனியாப் படம் எடுக்குற அளவுக்கு நிறையச் சம்பளம் கொடுக்குறீங்க போல....ரொம்பப் பெரிய ஆளுதான் நீங்க" என்று நக்கல் செய்கிறார்.

சீனிவாசனுக்கு கோபம் உச்சத்தில் ஏறுகிறது.அவரிடம் ஆட்டையைப் போட்டதை விட‌,நாமும் இந்த பீல்டுல ஒரு படம் எடுக்குறோம்.நம்ம லெவலுக்குப் படம் எடுக்குற அளவுக்கு வந்துட்டார்களே என்பது தான் அதிக‌ ஆத்திரம்.

உடனே சீட்டுக் கிழிக்கப்படுகிறது.

ஜூனியர் விகடன் செய்தி ஆசிரியர் எஸ்.சரவணக்குமார் நீக்கப்படுகிறார்.(இப்பொழுது மீடியா வாய்ஸில் குப்பை கொட்டுகிறார்) அசோகன் விகடன் ஆசிரியர் பதவியில் இருந்து டம்மி ஆக்கப்பட்டு பதிப்பாளர் ஆக்கப்படுகிறார்.

சரவணக்குமார் 

(சரவண‌க்குமார் கரூருக்கு பந்தாடப்பட்டதாகவும்,இனிமேல் இங்கு நாம் முன்பு போல் கோலோச்சுவது சிரமம்,ஆகவே ராஜினாமா செய்து விடுங்கள் என அசோகனின் அறிவுரைப்படி அவர் ராஜினாமா செய்ததாகவும் ஒரு தகவல் உண்டு.)

விகடனில் ஆசிரியர் பதவியில் வேலை செய்த ஒருவர்,தனக்குக்கீழ் பணியாற்றும் செய்தி ஆசிரியர் ஒருவரைக் கூட்டணி சேர்த்துக் கொண்டு திரைப்படம் தயாரிக்கும் அளவுக்கு இருந்தார் என்றால் அவரது நேர்மையைத் தெரிந்து கொள்ளலாம்.



காமதேனு நாளிதழின் தலைமைப்பீடத்தின் நேர்மையை உரசினால் இப்படி பல்லிளிக்கிற‌து.

சுரண்டிய பணத்தில் படம் எடுத்த இவர்கள்,தங்களிடம் லஞ்சம் கேட்டார் என்று தணிக்கைத் துறை அதிகாரியை லஞ்ச ஒழிப்பில் சிக்க வைத்தது தனிக்கதை.

இது ஒரு சின்ன சம்பவம் தான்.இப்படி நிறையக் கறைகளைத் தனது பக்கத்தில் கொண்டவர் தான் அசோகன்.அதே சமயம் அசோகன் ஒரு திறமையான எடிட்டர் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

விகடன் ஆசிரியர் என்னும் பதவியைத் தவறாகப் பயன்படுத்தி,அதனைத் துஷ்பிரயோகம் செய்து அவர் செய்த செயல்களை எழுதப் பக்க‌ங்கள் நீளும்.எழுத எமக்கும் படிக்க உங்களுக்கும் நேரம் கிடையாது.

இப்படிப்பட்ட வரலாறு கொண்ட அசோகன் தான் இன்று காமதேனுவின் எடிட்டர்.இவர் தான் இன்று அனைவரையும் வேலைக்கு எடுக்கும்,எடுத்தவர்களை இனி வழி நடத்தும் உச்ச பட்ச பொறுப்பிலும் இருக்கிறார்.காமதேனு பத்திரிகையையும் இவர் தான் நடத்திச் சொல்லப் போகிறார்.

இவரை காமதேனுவில் தலைமைப்பீடத்தில் அமர்த்திய நிர்வாகம் சில நூறுகள் கவர் வாங்குபவர் என்று ஒரு ரிப்போர்ட்டரை வேலைக்குச் சேர்ந்த இரண்டு நாட்களில் வேலையை விட்டு நீக்கியுள்ளது.

அது சரி இப்படிக் கூடப் பார்ப்போம்.

''தி இந்து 'வில் யாருமே கவர் வாங்குவது இல்லையா..?தமிழ்ப் பத்திரிகையாளர்கள் நூறுகளில் வாங்கினால்,ஹிந்து பத்திரிகையாளர்கள் எத்தனை பேர் அரசு உயர் மட்ட அதிகாரிகளிடம்,'சார் ஒரு சின்ன obligation ' என்று ஆரம்பித்து காரியம் சாதிக்கிறார்கள் என்பதனை அரசு மட்டங்களில் கேட்டால் தெரியும்.

இதே  'தி ஹிந்து' வில் குப்பை கொட்டும் ராதாகிருஷ்ணன் கடந்த திமுக ஆட்சியில் இவரை விடத் திறமையானவர்கள் பலர் இருக்க,சலுகை விலையில் கோடிக்கணக்கான விலை மதிப்புள்ள வீட்டு வசதி வாரிய வீடு ஒன்றைப் பெறவில்லையா...?இவருடன் விண்ணப்பம் செய்தவர்கள் பலர் இருக்க அவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு இவருக்கு மட்டும் வீட்டு மனை கிட்டிய காரனம் என்ன..?கனிமொழிக்கு சொம்பு அடித்த காரணமும் அவரது நட்பும் தவிரவும் வேறு என்னவாக இருக்க முடியும்..?

(இவர் குறித்து சுவராஸ்யமான செய்தி ஒன்று உண்டு.

நான்கு வருடங்களுக்கு முன்பு ஒரு பஞ்சாயத்து தொடர்பாக கருணாநிதி குடும்பத்தினர் அனைவரும் அது குறித்துப் பேசுவதற்காய் சி.ஐ.டி. காலனி வீட்டில் குழுமிக் கொண்டிருந்தனர்.செய்தி சேகரிப்பதற்காக விரல் விட்டு எண்ணக் கூடிய பத்திரிகையாளர்கள் வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்தனர்.

பஞ்சாயத்தில் கலந்து கொள்ள மு.க.அழகிரி இறுதியாக வீட்டுக்குள் வந்தார்.வீட்டின் முன் அறையைத் தாண்டி உள்ளறைக்குச் செல்லும் முன் ஹாலுக்குள் நுழைந்தவர் அங்கு அன்னிய முகம் ஒன்று இருப்பதைப் பார்த்து திடுக்க்ட்டவர்,

இங்க வாப்பா நீ யாருய்யா..? என்று கேட்கிறார்,

ஐம் ராதாகிருஷ்ணன்,ஹிந்து ரிப்போர்ட்டர் என்று கொஞ்சம் தெனாவட்டுடன் பதில் சொல்லியிருக்கிறார்.ஹிந்துரிப்போர்ட்டர்ன்னா என் பெட்ரூம் வரைக்கும் வந்துடுவியா..முதல்ல வெளியே போய்யா என்று கழுத்தைப் பிடித்து
வெளியே தள்ளாத குறையாய் வாசல் வ‌ரைக்கும் அனுப்புகிறார்.

மூன்று அப்பாவி பத்திரிகையாளர்களைக் கொலை செய்தவர் என்பதால் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் அழகிரி மீது வெறுப்பு உண்டு.

ஆனால் ராதாகிருஷ்ணனை வெளியே அனுப்பிய அழகிரியை அன்று வெளியே நின்ற பத்திரிகையாளர்கள் புன் சிரிப்புடன் பார்த்தனர்.தமிழ் பத்திரிகையாளர்கள் என்றால் இளக்காரமாகப் பார்க்கும் ராதாகிருஷ்ணன் அன்று குனிந்த் தலையுடன் வெளியேறினார்.)


the hindu,


தேனி கண்ணனை நீக்கிய சம்பவத்திற்குத் திரும்பவும் வருவோம்.

லஞ்சம்,முறைகேடு போன்றவற்றில் தொடர்புள்ளவர்களை நீக்கம் செய்வதில் இது என்ன மாதிரியான அளவுகோல் என்றும் எந்த விதத்தில் சரியான நடவடிக்கை என்றும் தெரியவில்லை.

தேனி கண்ணன் கவர் வாங்குவது குறித்து கொஞ்சம் தாமதமாகவாவது அறிக்கை கொடுத்த தனியார் துப்பறியும் நிறுவனம் அசோகனின் 'நேர்மை' குறித்து நீண்ட தாமதமாகவேணும் எந்த அறிக்கையும் கொடுக்கவில்லையா..?இல்லை இவருக்கு மட்டும் விதிவிலக்கா..?

சில நூறு கவர் வாங்கியது குற்றம் என்றால்,சில கோடிகளில் படம் எடுக்கும் அளவுக்கு சுரண்டியது குற்றம் இல்லையா..?அது என்ன விகடன் கொடுக்கும் சம்பளப்பணத்தில் எடுத்ததா....?

சாதிச் சான்றிதழில் கையெழுத்திடுவதற்காக நூறு ரூபாய் லஞ்சம் வாங்கினார் என்று கிராம நிர்வாக அலுவலரை கையும் களவுமாய்ப் பிடிக்கும் லஞ்ச ஒழிப்புத் துறை,கோடிகளில் புரளும் மந்திரிக்கு சலாம் போடுவதைப் போலத்தானே இதுவும்...!

இல்லை இது எதுவும் சாதிப் பாசமா என்றும் தெரியவில்லை.விகடனிலும் இப்படித்தான் நடந்தது.

விகேஷ்,சரவண‌க்குமார் போன்ற ஊழல் பேர்வழிகளை டிஸ்மிஸ் செய்த நிர்வாகம் அசோகன் மாதிரி ஆட்களுக்கு மட்டும் விலக்கு கொடுத்து தன்னுடனே வைத்துக் கொண்டது..ஒருவேளை அய்யர் சொத்தை அய்யர் மட்டும் திருடலாம்,கொள்ளையடிக்கலாம்.அடிஷனலா அய்யங்காரை வேண்டுமானால் சேர்த்துக்கலாம்.மத்தவா அடிச்சா தப்புன்னு சொல்றாங்களோ என்னவோ..

பத்திரிகைத்துறை லஞ்சம்,கவர்,முறைகேடு என அதன் பெரும்பகுதி செல்லரித்துப் போனதற்கு சில நூறுகளில் கவர் வாங்கும் சாதாரண ரிப்போர்ட்டர்கள் மட்டும் காரணம் இல்லை.அதன் தலைமைப்பீடத்தில் இருந்து கொண்டு எல்லா அயோக்கியத்த‌னங்களையும் மறைமுகமாகவும் சில சமயம் வெளிப்படையாகவும் செய்பவர்கள் தான் முழு முதற்காரணம்.அதை விடுத்து இது போன்ற சிறு ரிப்போர்ட்டர்களை பலி கொடுத்து உங்களின் நேர்மையையும் தனித்தன்மையையும்,பரிசுத்தத்தையும் நிருபிக்க முயற்சிக்காதீர்கள்.

டிராபிக்கில் தவறு செய்தவன்,ரயிலில் தரமற்ற உணவு வாங்கிய குற்றங்களுக்கு எல்லாம் கருட புராண‌த்தின் படி கடுமையான தண்டனை அளித்து விட்டு,பல ஆயிரம் கோடிகள் சுரண்டியவனையும்,பல்லாயிரம் மக்களைக் கொலை செய்தவனையும் கண்டு கொள்ளாமல் திரைப்படம் எடுத்த ஷங்கர்-சுஜாதா கூட்டணியின் 'அந்நியன்' போதித்த 'நீதி'யை கஸ்தூரி அய்யங்கார் வழி வந்த 'தி ஹிந்து' நிர்வாகம் கடைப்பிடிப்பது எந்த விதத்திலும் நியாயமல்ல‌.


http://www.youtube.com/watch?v=vRVv_QALf7s


Thursday 1 August 2013

யோக்கியர் பிரகாஷ் வர்றாரு...சொம்பெடுத்து உள்ள வை...!


நக்கீரன் தலைமை நிருபர் பிரகாஷ் (படம் உதவி-சவுக்கு)







இந்த 'செய்திப்பதிவை' எழுதியவர் நக்கீரன் வாரமிருமுறை இதழின் தலைமை நிருபர் பிரகாஷ்.

இந்தக் 'கருமாந்திரத்துக்கு' இரண்டு பக்க முக்கியத்துவம் கொடுத்துப் பிரசுரித்த நக்கீரனின் 'தரம்' குறித்தோ,இதனை எதற்காக பிரகாஷ் எழுதினார் என்பதன் 'பின்னணி' குறித்தோ,இச் செய்தியின் உண்மை,பொய்த் தன்மை குறித்தோ நாம் ஆராயவோ விவாதிக்கவோ விரும்பவில்லை.

ஆனால் சிந்தாதிரிப்பேட்டை,பல்லாவரம் என ஏரியாவுக்கு ஒரு குடும்பம் நடத்தும்,இது தொடர்பில் இன்னும் பல குற்றச்சாட்டுகள்,பஞ்சாயத்துகளை,தகராறுகளைத் தன் வாழ்வில் சந்தித்த நக்கீரனின் தலைமை நிருபர் பிரகாஷூக்கு இதை எழுதக் குறைந்த பட்ச யோக்கியதை இருக்கிறதா என்பது தான் நமது கேள்வி.

நீங்கள் முதலில் சரியாக இருங்கள்.அதன் பின் ஊர் உலகத்தை விமர்சியுங்கள்.

சிரிப்பாச் சிரிக்கிறாங்க பாஸ்.....முடியல....!

தொடர்புடைய இணைப்பு.

http://www.youtube.com/watch?v=M55ScJ9hQsA