Wednesday 30 July 2014

தினத்தந்தி- பப்ளிசிட்டிக்கு பல்லிளிக்கும் சத்யராஜ்; காசுக்கு குரைக்கும் நிருபர்...!




Paid news  க்கு   இந்தச் செய்தி ஒரு எடுத்துக்காட்டு.

http://www.dailythanthi.com/News/Districts/2014/07/30034016/Mavulivakkam-Building-crash-SurvivorStreet-dog-SathyarajSibiraj.vpf



இந்தச் செய்தி இன்றைய 'தினத்தந்தி'யில் சென்னைப் பதிப்பில்  (30-07-2014)சென்னை மாநகரச் செய்திகள் பகுதியில் மொத்தம் 259 வார்த்தைகளுடனும் ஒரு புகைப்படத்துடனும் வெளிவந்துள்ளது. மவுலிவாக்கம் கட்டிட விபத்தில் பாதிக்கப்பட்ட  ஒரு தெரு நாயை திரைப்பட  நடிகர் சத்யராஜும் அவரது மகனும் நடிகருமாகிய சிபிராஜும்  தத்து (!) எடுத்தது குறித்து பதிவு.

தன் கவனத்திற்கு வந்தவுடன் கேவலமான பார்வையுடன் நிருபரால் தவிர்த்திருக்கப் பட வேண்டிய  இச்செய்தி, விரிவாகவும் முக்கியத்துவத்துடனும் சுவராசியத்துடன்(!) வெளிவந்திருக்கிறது.அதற்கு  என்ன 'முக்கியத்துவம் அல்லது தகுதி' இருக்கிறது என்று பார்த்தால் எதுவும் இல்லை.

இந்தச் செய்தியிலேயே குறிப்பிட்டது போல, மவுலிவாக்கம் கட்டிட விபத்தில் 62 நபர்கள் மரணம் அடைந்துள்ளனர்.30 க்கும் மேற்பட்ட நபர்கள் நடைப்பிணமாய் வாழ்ந்து வருகின்றனர்.அநியாயமாய்ச் செத்துப் போனவர்கள் குடும்பத்துக்கோ அல்லது நடைபிணமாய் உயிர் வாழ்பவர்கள்  நல்வாழ்வுக்கோ துரும்பைக்கூட அசைக்காத நடிகரும் அவர் பிள்ளையும்   கூச்சமில்லாமல் ஒரு நாயைத் தத்து எடுத்ததாக நிருபரையும் புகைப்படக்காரரையும் முன்கூட்டியே வரச் சொல்லி பரிவாரங்களுடன் பல்லை இளித்துக்  கொண்டு போஸ் கொடுக்கின்றனர்.பப்ளிசிட்டிக்கு அலையும் வெறிபிடித்த மனித ஜென்மங்களிடம் மாட்டிக்கொண்ட   அந்த தெரு நாய் தான் புகைப்படத்தில் பரிதாபமாய் காட்சி அளிக்கிறது. 

அந்த நாய் மற்றும் காக்கா  எவ்வாறு பாதிக்கப்பட்டது ? யார் அதனை மீட்டெடுத்தது ? எப்படிச் சிகிச்சை அளிக்கப்பட்டது என அதற்கு ஒரு பின்னணி.
அதன்பின் பேட்டி வேறு.எல்லோரும் பல்லை இளித்த படி முகரையை காட்டிக் கொண்டு நிற்கின்றனர்.கூச்சமில்லாமல் அதனைத் 'தினத்தந்தி' வெளியிடுகிறது.
*



நடிகர் சிபிராஜ் “மவுலிவாக்கம் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிர் பிழைத்த நாய் பற்றி எனது நண்பர் கூறினார். இதையடுத்து உயிர் பிழைத்த லாசி என்ற நாயை நான் தத்து எடுத்துக்கொண்டேன்...//ஏன் செத்துப் போனவர்கள் குறித்து எந்த நண்பரும் சிபிராஜின்  செவிட்டுக் காதுகளுக்கும் குருட்டுக் கண்களுக்கும்  சொல்லவில்லையா..?

எங்கள் வீட்டில் ஏற்கனவே வெளிநாட்டு நாய்கள் உள்ளன. அதோடு இந்த தெரு நாயையும் வளர்க்க முடிவு செய்து இருக்கிறோம்.’’/ வீட்டில் மனிதர்கள் யாரும் இல்லையா..? இல்லை சத்யராஜூம் அவரது குடும்பமும்  மனிதப்பிறவியில் சேர்த்தி இல்லையா..? ஒரு மனிதனை தத்து எடுத்திருக்கலாமே..?
நடிகர் சத்யராஜ் நிருபர்களிடம் கூறுகையில், “பொதுமக்கள் தங்களுக்கு விருப்பமான நாய்களை வாங்குவதை விட, வீதி நாய்களை தத்து எடுக்க முன்வர வேண்டும்” என்றார்.வீட்டில் இரண்டு வெளிநாட்டு நாயை வளர்க்கும் சத்யராஜ்  இதைச் சொல்கிறார்.

செத்துப் போனவர்களை இழிவு படுத்தும் விதமாகவும் வாசகனை மடையனாக எண்ணியும் இந்தச் செய்திப்பதிவு  இருக்கிறது.

இத்தனைக்கும் தினத்தந்தியின் வர்த்தக கண்ணோட்டத்தில் பார்த்தாலும் இது பிரசுரிக்கத் 'தகுதி' இல்லாத செய்தி தான். இது மிகப்பெரிய நடிகையோ உச்ச நட்சத்திரமோ தொடர்புடைய செய்தி இல்லை .சத்யராஜும் சிபிராஜும் இரண்டாம்  நிலையில் இருந்து  மார்க்கெட் இழந்த நடிகர்கள்.

சென்னையில் மட்டும் 4.5 லட்சம் பிரதிகள் 'தினத்தந்தி' விற்பனை ஆகிறது.(புறநகர் பதிப்பில் இச்செய்தி வெளியிடப்பவில்லை என்றாலும் 3 லட்சம் பிரதிகளில்  இச்செய்தி வெளிவந்திருக்கிறது.) பெங்களூர் பதிப்பிலும் வெளிவந்துள்ளது.அங்கு ஏறத்தாழ 60 ஆயிரம் பிரதிகள் விற்பனை  ஆகிறது.
  இச் செய்தியையோ அல்லது திரைப்படம் குறித்தோ   மேற்கண்ட பதிப்புகளில் விளம்பரமாய் வெளியிட்டால் கட்டணம்  லட்சங்களில்  கொடுக்க வேண்டும்.ஆனால் அதற்குப் பதிலாய் அதிக வாசகர்களை அதிக வீச்சில் இச்செய்தி போய்ச் சேர்ந்துள்ளது. வெளிவரும் படத்திற்கும் மார்க்கெட் இழந்த நடிகர்களுக்கும் நல்ல பப்ளிசிட்டி.பப்ளிசிட்டி தேடுவதற்கும் அதனை நாளிதழில் வர வைப்பதற்கும் ஆயிரம் வழிகள் இருக்கின்றன.அதை விடுத்து மவுலிவாக்கம் பரிதாபத்தில் அதைச் செய்தது கேவலமாய் இருக்கிறது.

நிருபருக்கு சில ஆயிரங்கள் கொட்டிக் கொடுக்காமல் திட்டமிட்ட இந்த செய்தி வெளிவர துளியும் வாய்ப்பு  இல்லை.

நாயை நடிகர்கள் தத்து எடுக்க வந்த சம்பவத்தை கண்ட பொதுமக்கள் அவர் களை பாராட்டி சென்றனர்.// பொதுமக்கள் சொன்னதாக  நிருபர் எழுதிய கடைசி  வாக்கியம்.

இதனைப்படிக்கும் அனைவரும்  எழுதிய நிருபரைக் காறித் துப்பியதை  அவருக்கு யார் சொல்லுவது..?

Sunday 27 July 2014

நியூஸ் சைரன்-தொழிலாளர்கள் வயிற்றில் அடித்தது யார்..?



த்திரிக்கை ஆரம்பிப்பதே நாதியற்ற பத்திரிகையாளர்களை ஏமாற்றுவதற்குத்தானா என்ற கேள்வி 'நியூஸ் சைரன்' வார  இதழுக்கு பொருந்தும். தொடங்கப்பட்ட போது ஏகப்பட்ட புரளியை கிளப்பிக்கொண்டு தொடங்கப்பட்ட இதழ் இது.

 அதாவது  இதன் முதலாளிகள் வெளிநாட்டு வாழ் தமிழர்கள். பெரிய அளவில் டி.வி. சேனலையும் சேர்த்து தொடங்க இருக்கிறார்கள். முன்னோட்டமாக அச்சு ஊடகத்தில் கால் பதிக்கிறார்கள் என்ற பில்டப். ஆனால் கடைசி கட்டம் வரையிலும் உண்மையான முதலாளி யார் என்பதை ரகசியமாகவே வைத்திருந்ததுதான் வேடிக்கை.

சரி விஷயத்திற்கு வருவோம்.




இந்த வார இதழுக்கு ஆசிரியராக நியமிக்கப்பட்ட எஸ் சரவணக்குமார் இதழில் ஒரு இயக்குனர். அதாவது இவர் பத்திரிக்கையாளர் நிலையைத் தாண்டி முதலாளி ஆகி விட்டார்.பண பரிவர்த்தனையில் கையொப்பமிடும் அதிகாரமும் பெற்றவராக இருந்தார். இந்த இதழின் வெளியீட்டாளரும் சரவணகுமார் தான். 

எஸ் சரவணகுமார் யாரென்றால் இதற்கு முன் ஜூனியர் விகடனில் கோலோச்சியவர்.அதன் பின் அங்கிருந்து விரட்டப்பட்டு சரத்குமார் நடத்திய மீடியா வாய்ஸில் தஞ்சம் புகுந்தவர்.இவரைப்பற்றி நாம் ஏற்கனவே எழுதியுள்ளோம். (இணைப்பு) 


அதே போன்று ‘வெளிநாட்டு தமிழர்கள்’ சார்பில் சுந்தர் என்பவரும் இயக்குனராய் இருந்தார்.இவருக்குப் பல்வேறு தொழில்கள்.ராவ் முக்கிய பதவியில் இருந்தார். குமுதத்தில் இருந்த பா..ஏகலைவன், ரவிஷங்கர் இருவரும் பொறுப்பாசிரியர்கள். பத்திரிகை ஒழுங்காய் வெளிவந்தது.

 ஆனால் ஊழியர்களுக்கான சம்பளமே என்றுமே ஒழுங்காய் வரவில்லை. முதல் மாதமே பத்தாம் தேதி தான் சம்பளம் . அடுத்த மாதம் 15-ம் தேதியை தாண்டியது. ராவ் மட்டும் இதுகுறித்து நிர்வாகத்திடம் எதிர்ப்புத் தெரிவித்தார். அவர் எதிர்ப்போ என்னவோ 3-வது மாத சம்பளம் வரவே இல்லை  அதன் பிறகு ராவ் எதுபேசினாலும் நிர்வாகம் கேட்கவில்லை. சரவணகுமார் தான் நமக்கு சரியான சாய்ஸ் என அவரை முன்னிலைப்படுத்தி பேசியது. சரவணகுமாரும் மீனுக்கு வாலும் பாம்புக்கு தலையுமாக நடந்து கொண்டார் .

 கொஞ்ச நாளில் ஒருவர் பின் ஒருவராக எடிட்டோரியலில் இருந்த அனைவரையும் வெளி அனுப்பி விட்டார்கள். பிரிலான்ஸ் நிருபர்களை வைத்து இதழை நடத்தி விடலாம் என்று சரவணகுமார் திட்டம். அதன் பிறகும்  சம்பளத்தை கொடுத்தார்களா என்றால் கிடையாது தொடர்ந்து வேலை பார்த்தவர்கள்,வெளியேற்றப்பட்டவர்கள் என கேட்டவருக்கு எல்லாம் காசோலை கொடுத்தார்கள்.ஆனால் அனைத்தும் பணம் இல்லாமல் திரும்பி வந்தது. அனைவருக்கும் இரண்டு, மூன்று மாத சம்பளப்பணம் பாக்கி.  சரவணக்குமார் தினமும் ஒரு காரணம் சொன்னார்.
சரவணக்குமார் 


இது சரிப்படாது என முடிவு செய்து முதலில் அங்கிருந்து ராவ் விலகினார். ஒழுங்க்காய்ச் சம்பளம் தராததால் முதலில் பொறுப்பாசிரியர்  ரவிஷங்கர் விலகினார்.அதன் பின் சிறிது காலத்தில் இன்னொரு பொறுப்பாசிரியர்   பா.ஏகலைவனும் விலகிக்கொண்டார்.

இந்த கட்டத்தில்தான் சைரனின் மர்ம முதலாளி செட்டி நாட்டு சின்னப்பையனின் பெரிய பையன் என்று தெரியவருகிறது. அந்த ஆளுக்கு பணத்திற்கு என்ன பஞ்சம்..? ஊரை அடித்து உலக வங்கியில் போட்டு வைத்திருப்பவராயிற்றே என்று பலரும் புலம்ப ஆரம்பித்தார்கள். ஆனால் அவரோ பத்திரிக்கை விற்ற காசை வசூல் செய்து சம்பளம் கொடுங்கள் என்று சொல்லி விட்டு புட்பால் பார்க்க பிரேசில் போய் விட்டதாக சரவணகுமார் சொன்னார் . பத்திரிகை விற்ற காசில் சம்பளம் என்பது நடக்கும் கதையா..?

அனைவரும் போலிசுக்கு போவதாய் சத்தம் போட்டவுடன், சரவணகுமார் முதலாளி வெளிநாட்டில் இருந்து வந்தவுடன் செட்டில் செய்யப்படும் எனப் புதுத் தகவல் சொன்னார்.

 ஆனால் எங்கிருந்து தான் பணம் வந்ததோ தெரியாது.நான்கு நாட்கள் கழித்து வந்து கொடுத்தார்கள். அனைவருக்கும் ஒருமாத சம்பளத்தை  செட்டில் செய்தார். ராஜவிபீஷிகாவுக் சுத்தமாக தரவேயில்லை. ஜெரோமிற்கு ஒரு மாத சம்பளம் பாக்கி. ராவ் அவர்களுக்கு 3 மாதம் இல்லை.ஏகலைவன், ஷாலினி,மகேஷ், ஸ்ரீதர், லே அவுட் டிசைனர் சுரேஷ், ஆகியோருக்கு இரண்டு மாத சம்பளம் தரவேயில்லை. கேட்டால் முதலாளி  இவ்வளவு தொகையைதான் கொடுத்தார். இதற்கு மேல் கிடையாது என்ற பதிலை சரவணகுமார் கூறினார்.
 மூத்த பத்திரிகையாளர் ’ஆந்தை குமார் அவரும் நீயுஸ் சைரன் வார இதழில் ஒரு மாதம் வேலை பார்த்தார். அவருக்கு டிமிக்கி கொடுக்க அதுவும் பெரும் பஞ்சாயத்தாகி முடிந்தது.மதன் எழுதிய தொடருக்கு பணம் கொடுக்கவில்லை என்பதால் அவரும் நிறுத்தி விட்டார்.சாரு நிவேதிதா தொடருக்கு  பணம் கொடுத்தார்களா என்பது தெரியவில்லை.

 உண்மையில் 'செட்டி நாட்டு சின்னப்பையனின் பெரிய பையன்'  எவ்வளவு கொடுத்தார். சரவணகுமார் எவ்வளவு எடுத்தார் ?என்பதெல்லாம் புரியாத புதிராக உள்ளது. ஒரு வேலை பினாமியாக நியமிக்கப்பட்டிருந்த சுந்தர் தரப்பில் ஏதாவது கைவரிசை காட்டப்பட்டதா ? என்பதும் தெரியவில்லை. ஆனால் அனைத்துக்கும் ஆதார மைய மர்மமாக இருப்பது சரவணகுமார்தான் என்கிறது ஒரு தரப்பு.

அதற்கு ஒரு சம்பவத்தையும் சொல்கிறார்கள்.

 சீமோன் என்பவரை தொடக்கத்திலேயே எச்.ஆர் ராக நியமித்தார் சரவணகுமார். இவர் சரத்குமார் கட்சியில் இளைஞர் அணியில் இருப்பவராம். சீமோன். நிர்வாகத்தை நம்பி கணினி உட்பட பலதையும் அவர் வாங்கி போட்டிருந்தார். ஒரு கட்டத்தில் அந்த எச்.ஆர் சீமோனை வேலையை விட்டு நீக்கி விட்டார் சரவணகுமார். அவருக்கு இரண்டு மாத சம்பளம் மேலும் அவரது உதவி நிர்வாகியாக இருந்த இரண்டு நபர்களுக்கும் பாக்கி. கேட்டு கேட்டு அலைந்து பார்த்துவிட்டு நடிகர் சரத்குமாரிடம் போய் நின்றார் சீமோன். அவர் காவல்துறை  உயர்மட்டத்தில்  பேசினார். வழக்கு பதிவு போடாமலேயே சரவணகுமாராய்  வீடு தேடிபோய் இழுத்துவர முனைந்தார்கள். அவர் தப்பித்து  முன்ஜாமின் போட்டார். அது கிடைக்காமல் போனது. கடைசியல் சமரச பேச்சு உடன் பட்டார்.

நியூஸ் சைரன் இதழை வெளியிட்ட மதன்.இவருக்கே பணம் தராமல் நாமம் சாத்தியவர்கள் எம்மாம் பெரிய கில்லாடிகள்..?



அப்பொழுது சீமோன், நடந்தது இதுதான் என பக்கம் பக்கமாக ஆதாரத்தை முன்வைத்து ‘சரவணகுமார் நம்பகமான ஆள் இல்லை. பலவற்றிலும் கை வைக்கிறார். சுருட்டுகிறார். ஒரு நாளைக்கு உண்மையான முதலாளி கவலைப்படுவார் என்று கூறினார். பதிலுக்கு எதுவுமே பேசாத சரவணகுமார் எச்.ஆர் சீமோனுக்கு கொடுக்க வேண்டிய முழு தொகையையும் கொடுத்துதான் மீண்டார்.  இந்த விஷயத்தில் நிர்வாகம் சரவணகுமாருக்காக முன்வந்து எந்த உதவியும் செய்யவில்லை. அவராகவே தான் இதிலிருந்து எனில் ஊழியர்கள் சம்பள பிரச்சனையில் என்ன நடந்திருக்கும் என்பதும் அனைவராலும் ஓரளவு ஊகிக்க முடிகிறது.

கோட் அணிந்து இருப்பவர் தான் சீமோன் இடது ஓரம் திருவாளர் சரவணகுமார் 


செட்டி நாட்டு முதலாளி பணம் கொடுக்காமல் ஏமாற்றினாரா ?

அல்லது சரவணகுமார் வாங்கிய பணத்தில் சரியாக கணக்கு காட்டாமல் முதலாளியையும் தொழிலாளியையும் ஒருங்கே  ஏமாற்றினாரா என்பதுதான் வியப்பான கேள்வியாகி நிற்கிறது.எது உண்மையோ தெரியவில்லை.நட்டாற்றில் நிற்பது உயர்பதவி வகித்த ராவ் முதல் அடிமட்ட தொழிலாளர்கள் தான்.சென்னை மட்டுமல்ல வெளியூர் நிருபர்கள் யாருக்கும் கூட சம்பளமோ இதர சலுகைகளோ தரவில்லை. சம்பளப்பாக்கியே சில லட்சங்கள் இருக்கிறது.
இப்பொழுது இதழும் வரவில்லை.நிறுத்தி விட்டார்கள்.

நாட்டைச் சுருட்டும் ஊழல் பேர்வழிகள் ,அவர்களுக்கு புரோக்கர் வேலை பார்ப்பவர்கள்  எல்லாம் பத்திரிகை தொழிலுக்கு வந்தால் இப்படித்தான் முடியும் போல் இருக்கிறது.


தொழிலாளர்களுக்கு என்று விடியும்..?




Monday 21 July 2014

வினை விதைத்த மு.க.ஸ்டாலின் ;அறுவடை செய்த உதயநிதி..!


குமுதம் நிறுவனத்தை உரிமை கொண்டாடுவது தொடர்பாக எழுந்த பஞ்சாயத்தில் குமுதம் முதலாளி ஜவஹர் பழனியப்பனுக்கும் அதன் இயக்குனர் வரதராஜனுக்கும் நடந்த மோதல் தொடர்பாகவும் அதில் நீதிக்குப் புறம்பாக வரதராஜனுக்கு அப்பொழுதைய துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் உதவி செய்ததனால் வரதராஜன் தப்பித்து விட்டது குறித்தும் ஒரு பதிவினை ஏற்கனவே எழுதியிருந்தோம்.

அந்தப்பதிவிலியே கருணாநிதி மீது கடும் வன்மத்துடன் செய்தி வெளியிடும் 'குமுதம் ரிப்போர்ட்டர்' மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவாக நிலைப்பாடு எடுப்பதையும் எழுதி இது எத்தனை நாளைக்கு என்ற கேள்வியையும் எழுப்பியிருந்தோம். யாரையும் பயன்படுத்தி தூக்கி எறியும் குணம் கொண்ட வரதராஜன் ஸ்டாலினுக்கும் அதைச் செய்ய நீண்ட நாள் ஆகாது என்பது தெரிந்ததனால் தான் அதை எழுதினோம்.அதற்கு இப்பொழுது விடை கிடைத்துள்ளது.

'குமுதம் ரிப்போர்ட்டர்' வரதராஜன் தன் சுயரூபத்தைக் காட்டி இருக்கிறார்.




இது போன வாரம் குமுதம் ரிப்போர்ட்டர் அட்டைப்படக் கட்டுரை. மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதிக்கும்,நடிகை ஒருவருக்கும் 'காதல்' (!)என்றும் அதன் எதிரொலியாய் உதயநிதி தற்கொலை முயற்சி என்றும் செய்தி.இதன் நம்ப‌கத்தன்மை குறித்து நமக்கு எதுவும் தெரியவில்லை.அது உண்மையோ பொய்யோ அது குறித்தும் இப்பொழுது பேசப்பட வேண்டிய அவசியமில்லை.

( இந்த உதயநிதி தான் தி.மு.க. கட்சிப் பத்திரிகையான‌ முரசொலி நாளிதழின் பொறுப்பு நிர்வாகி என்பதும் அவருக்கு மாதமாதம் லட்சத்தில் சம்பளம் என்பதும் உபரித்தகவல்.அவர் முரசொலியை கண்ணிலாவது பார்ப்பாரா என்பதும் சந்தேகமே..)

ஆனால் இப்பொழுது எதைத்தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் இருக்கும், எதைச் செய்தாலாவது ஆளுங்கட்சியின் ஆசிர்வாதத்தை பெற்றுவிடத் துடிக்கும் வரதராஜன் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள இதுவரை தான் விமர்சிக்காமல் இருந்த மு.க.ஸ்டாலின் குடும்பத்தையும் விமர்சிக்க ஆரம்பித்திருக்கிறார் என்பதை அறியலாம். இது நாம் ஏற்கனவே அறிந்தது தான்.
---

மு.க.ஸ்டாலின் போன்றவர்களுக்கு அரசியல் சூத்திரமே இன்னும் புரிபடாது இருக்கும் பொழுது பத்திரிகைத்துறை அரிச்சுவடி பற்றி இன்னும் ஒரு நூற்றாண்டு ஆனாலும் எதுவும் புரியாது.

குமுதம் பிரச்சனை என்னவென்று அறியாமல்,எவனோ ஒரு அரசியல் புரோக்கர் ஒரு பிரச்சனையைக் கொண்டு வந்தவுடன் எதையும் விசாரிக்காமல் அந்தப்பிரச்சனையில் ஒருதரப்பு ஆதரவு என்பதில் வெளிப்படுவது சுயநலம் மட்டுமல்ல,திறமையின்மையும் கூடத்தான்.





குமுதம் பிரச்சனையில் தலையிட்ட பின்பு  அதற்கான பிரதிபலன்களில் ஒன்றாக‌ தனது மனைவியை எழுத வைத்து 'தளபதியும் நானும்' என்னும் தொடரை குமுதம் சிநேகிதியில் வெளியிட வைத்து புளகாங்கிதம் அடைந்தார்.நான்கு மாதங்களுக்கு மேல் வெளியிடத் தகுதி இல்லாத அத் தொடரும் நான்கு வருடங்களுக்கும் மேலாக இன்னும் சவ்வாக இழுக்கடிக்கப்பட்டு வருகிறது.

அதைத்தொடர்ந்து பதவி வெறியில் மு.க.ஸ்டாலின் குடும்பத்தினர்,கருணாநிதியையும் குஷ்பூவையும் இணைத்து அட்டைப்படக் கட்டுரையை வெளியிட வைத்து மகிழ்ச்சிப் பட்டுக் கொண்டனர். இன்றோ அதே குமுதம் ரிப்போர்ட்டரில்,நடிகையை இணைத்து அவரது பிள்ளைக்கு கவர் ஸ்டோரி.  அடுத்து ஸ்டாலின் குடும்பத்தில் யாருக்கு என்று காத்திருப்போம்.

(இந்த கவர் ஸ்டோரியில் ஸ்டாலின் குடும்பத்து உள்குத்து எதுவும் இருக்கிறதா என்று தெரியவில்லை. அதே நேரம் மகனைப் பற்றி இழிவு படுத்தி கவர்ஸ்டோரி வெளியிட்ட பத்திரிகை குழுமத்தில் அம்மா துர்கா ஸ்டாலின் தனது தொடரை முழு மூச்சுடன் தொடர்கிறார். நல்ல குடும்பமய்யா..)

எப்படியானாலும் மு.க.ஸ்டாலின் போன்றவர்களுக்கு இது தேவை தான்.
---

இன்னொரு புறத்தில் இது குமுதம் ரிப்போர்ட்டர் வரதராஜன் போன்றவர்களின் சுயரூபத்தைக் காட்டுவதாய் எடுத்துக் கொள்ள‌லாம்.தன்னைக் காப்பாற்ற எந்த எல்லைக்கும் செலல்வும்,திரும்ப அதற்கு எதிர் நிலை எடுக்கவும் தயாராவார் என்பதற்கு இது நல்ல உதாரண‌ம்.

நேற்று த‌னது சுயநலனுக்காய் மு.க.ஸ்டாலின் ஆதரவு நிலை எடுத்தவர் இன்று ஜெயலலிதா ஆதரவு நிலை எடுத்துள்ளார். இது எத்தனை காலத்துக்கோ..?

(குமுதம் குழுமத்தில் கோசல்ராம் ஓரங்கட்டப்பட்டு பிரியா கல்யாணராமன் கை ஓங்கியிருப்பதாய்ச் சொல்றாங்களே..?உண்மையா அண்ணாச்சி..! )

Monday 14 July 2014

சிந்தனைக் களமா இது..? சிந்திக்குமா தி இந்து..!



தனியார் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றும் அ.வெண்ணிலா

' தி இந்து ' தமிழ் நாளிதழில் கடந்த 10 ஜூலை 2014 அன்று என் மகள் இன்றைக்கு அரசுப் பள்ளி மாணவி!- ஒரு ஆசிரியர்-தாயின் அனுபவம் என்னும் தலைப்பில் சிந்தனைக்களம் பகுதியில் ஒரு சிறப்புக்கட்டுரை வெளியாகியிருக்கிறது.

இந்த சிறப்புக் கட்டுரையை அ.வெண்ணிலா என்பவர் எழுதியிருக்கிறார். இவர் சொந்த ஊர் வந்தவாசி . தனது 18 வயதிலிருந்து அரசுப்பள்ளியில் ஆசிரியராய் பணி புரிந்து வருகிரார்.23 ஆண்டுகள் பணி அனுபவம். இவர் கல்வி கற்றதும் அரசுப்பள்ளியில் தான்.இவரது தந்தையும் அரசுப்பள்ளி ஆசிரியர் தான் (ஓய்வு). 

தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தில் அங்கம் வகிக்கிறார். மாநில அளவில் அதன் மேடைகளில் தமிழ் மொழி, கல்வி மற்றும் பல சங்கதிகள் குறித்து எவ்வளவோ உரைகளை ஆற்றியிருக்கிறார். சமச்சீர் கல்வி குழு பாடத்திட்ட தயாரிப்பில் ஓர் ஆசிரியராக மட்டுமின்றி அறியப்பட்ட எழுத்தாளராகவும் அ.வெண்ணிலா இருக்கிறார்.

இவருடைய இந்தக் குறிப்பிட்ட கட்டுரை சிந்தனைக் களம் பகுதியில் சிறப்புக் கட்டுரையாக‌,( தி இந்து அப்படித்தான் கட்டம் கட்டுகிறது) முன்பு இதே நாளிதழில் இன்னொரு எழுத்தாளரும் பள்ளி ஆசிரியருமான இமையம் அவர்களின் பேட்டியை அடுத்து வெளியாகியிருக்கிறது.

நிற்க, இமையத்தின் கருத்துகள் தொடர்பாக நிறைய எதிர்வினைகள் வெளிப்பட்டிருந்ததாலும், அ.வெண்ணிலாவின் சிந்தனைக் கட்டுரை, அவரும் ஒரு பள்ளி ஆசிரியர் என்பதால், கூடுதல் கவனத்தையும் முக்கியத்துவதையும் பெறுவதில் வியப்பு இல்லை.

வெண்ணிலாவின் கட்டுரையில் அனைவரைப்போல நாமும் எதிர்பார்த்தது அரசுப் பள்ளியில் கற்பித்தல் மற்றும் கற்றலில் எதிர்கொள்ளும் சவால்கள், கிராமப்புற மாணவர்கள் மற்றும் கிராமப்புற பள்ளிகளின் இன்றைய நிலை, மாணவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் போன்ற‌, இன்னும் பல புதிய செய்திகளைத் தான். அதுவும் கட்டுரையாளர் சமச்சீர் கல்வி என அறியப்பட்ட பொதுப் பாடத்திட்டப் பாடங்கள் உருவாக்கத்தில் முக்கியப் பங்களித்தவர் என்பதால் நம்முடைய எதிர்பார்ப்பும் அதிகமாய் இருந்தது.

ஆனால், அவரின் இந்த சிந்தனைக் கட்டுரையைப் படித்தபின், இக் கட்டுரையை வெளியிட்ட 'தி இந்து' அலுவலகத்துக்கு நேரே சென்று, இந்தப் பக்க‌த்தின் பொறுப்பாளரை சந்தித்து, நறுக்கென நான்கு கேள்வி கேட்க வேண்டும் என்ற ஆத்திரம் தான் வந்தது. ஆனால் எரிபொருள் தான் விரயம் ஆகும் என்பதால் அதனைத் தவிர்த்து விட்டோம்.

இந்தக் கட்டுரை குறித்து இப்பொழுது பார்ப்போம். இது தான் அந்தக் கட்டுரையின் இணைய இணைப்பு

இந்தக் கட்டுரை குறித்த நமது சிறு விமர்சனம்.

'என் மகள் இன்றைக்கு அரசுப் பள்ளி மாணவி!- ஒரு ஆசிரியர்-தாயின் அனுபவம் ' என்னும் தலைப்புடன் வெளிவந்திருக்கிற‌து. பொதுவாக தலைப்பு பத்திரிகை அலுவலகத்தில் தான் வைக்கப்ப‌டும். இங்கு கட்டுரையாளர் ஆசிரியர் என்பதால்  அவர் வைத்தாரா ? என்று தெரியவில்லை.

ஆனால் தலைப்பில் தவறு இருக்கிறது. ஓர் ஆசிரியரின் அனுபவம் என்று தான் இருக்க வேண்டும்.ஒரு ஆசிரியரின் அனுபவம் என்பது தவறு.

இனி கட்டுரைக்குள் செல்வோம்.

// மகளை எங்கு சேர்ப்பது என்று அப்போதுதான் யோசிக்கத் தொடங்கினோம்.மேலே சொன்ன எந்த ஊரின் பள்ளியில் சேர்ப்பது என்றாலும் மகளை விடுதியில் சேர்க்க வேண்டும். பதினான்கு வயதுக்குள் விடுதி வாழ்க்கையா என்று எனக்கே பீதியாக இருந்தது. அங்கு கொடுக்கப்படும் சாப்பாடு, நடைமுறையில் இருக்கும் கட்டுப்பாடுகள், இரண்டாண்டுகளில் மாணவர்களுக்குத் தரப்படும் மனநெருக்கடிகள், அங்கு நடக்கும் மாணவர்களின் தற்கொலைகள் இவற்றையெல்லாம் கேட்டறிந்த பிறகு மதிப்பெண் அறுவடை நிலையங்களான இந்தப் பள்ளிகளே வேண்டாம் என்று முடிவுசெய்தோம். //

14 வயதிலேயே மகளை விடுதியில் சேர்ப்பது குறித்த தயக்கத்தாலும் அங்கு சேர்ப்பதால் ஏற்படும் சிக்கல்கள் குறித்த அச்சத்தினாலும் உள்ளூரில் இருக்கும் பள்ளிகளில் சேர்ப்பது குறித்த எண்ணம் அ.வெண்ணிலாவுக்குத் தோன்றியிருக்கிறது. மேலே சொன்ன ஊர்களில் மேற்கண்ட குறைபாடுகள் இல்லாத தனியார் பள்ளிகள் இருந்திருந்தால் அங்கேயே சேர்த்திருப்பார்.

அதன் பின் உள்ளூர் தனியார் பள்ளிகளை விட அரசுப்பள்ளியில் சேர்க்கலாமா என்பது குறித்த எண்ணம் எப்பொழுது துளிர் விடத் துவங்கியிருக்கிறது என்றால்...

//23 ஆண்டுகள் அரசுப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்துக்கொண்டு, அரசாங்கத்திடமிருந்து நல்ல ஊதியத்தைப் பெற்று என்னை நடுத்தர வர்க்கத்துக்கு உயர்த்திக்கொண்டு, என்னுடைய பிள்ளைகளுக்கு வசதியான தனியார் பள்ளிகளில் கல்வி கொடுத்துக்கொண்டிருப்பதற்காகப் பலமுறை குற்றவுணர்ச்சியோடும் இயலாமையோடும் இருந்த எனக்கு இப்பொழுது லேசாகத் துணிச்சல் வந்தது. //

// என்னுடைய பிள்ளைகளுக்கு வசதியான தனியார் பள்ளிகளில் கல்வி கொடுத்துக்கொண்டிருப்பதற்காகப் //

கட்டுரையாளர் அ.வெண்ணிலாவுக்கு தனியார் பள்ளிகளில் படிப்பவர்களுக்கு மட்டுமே அதிக வசதிகள் கொண்ட மேம்பட்ட கல்வி கிடைக்கிறது என்ற எண்ணம் எப்பொழுதும் இருந்து வந்திருக்கிறது என்பதை இதன் மூலம் தெளிவாகவே அறிய முடிகிறது.

// எனக்கு இப்பொழுது லேசாகத் துணிச்சல் வந்தது //

18 வயதில் பணிக்குச் சேர்ந்து 23 ஆண்டுகள் அரசுப்பள்ளியில் மாதம் முப்பத்து ஒன்றாம் தேதியில் பல்லாயிரம் சம்பளமும் வருடத்தில் பாதி நாட்கள் விடுமுறை உட்பட இதர சலுகைகளையும் அனுபவித்து ஆசிரியராய் வேலை பார்த்த அ.வெண்ணிலாவுக்கு,தனியார் பள்ளிகள் தான் மேம்பட்டவை வசதியானவை என்னும் எண்ணம் கொண்டவருக்கு,அரசுப்பள்ளியில் தனது மகளைச் சேர்ப்பது குறித்து 23 ஆண்டுகால  பணிக்குப் பின்புதான் லேசாகத் துணிச்சல் வந்திருக்கிறது. நல்லவேளை இப்பொழுதாவது வந்ததே என்று எண்ணிப்பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டியது தான்.

//நம் பள்ளியைவிட வேறு நல்ல பள்ளி வேறெது இருக்க முடியும்? இந்த யோசனை எனக்குள் உதித்த கணம் மனசுக்குள் உடைந்த பனிக்கட்டியின் குளுமையை வார்த்தைகளில் சொல்ல முடியாது.//

அப்படியானால் இவர் 23 ஆண்டுகள் அரசுப்பள்ளிகளைத் தனியார் பள்ளிகளை விடத் தரம் குறைவானதாகவும், அதில் கல்வி கற்பவர்களையும் கற்பிப்பவர்களையும்  தகுதிக் குறைவானவர்களாகவும் தான் எண்ணியிருந்திருக்கிறார். எவ்வளவு கீழான மனப்பான்மை இது ?

அப்படியானால் தன்னிடம் பயிலும் மாணவர்களை இவர் எப்படி  நடத்தியிருப்பார்.?அவர்களுக்கு உள்ளன்போடும் இதய சுத்தியோடும் எப்படிக் கல்வி கற்றுக் கொடுத்திருப்பார்..? இவர்களெல்லாம் படித்து என்ன கிழிக்கப் போகிறார்கள் என்ற எண்ணம்தானே இவரின் அடிமனதில் மட்டுமல்ல செயல்பாட்டிலும் வெளிப்படையாய் இருந்திருக்க முடியும்..?

(இவர் உளவியல் முதுநிலைப் பட்டப்படிப்பு வேறு படித்தவர் என்பது கூடுதல் தகவல் )

//எனக்கு மிகப் பெரிய அதிர்ச்சி. அரசுப் பள்ளிகளுக்கு எதிராக மாணவர்களின் மனநிலை நம் வீட்டிலேயே இப்படி இருக்கிறதே என்று எனக்கு மயக்கம் வராத குறையாகத் தலைசுற்றியது. //

இது முரணாக இருக்கிறது. 23 ஆண்டுகள் அரசுப் பள்ளியில் வேலைபார்த்ததாக பெருமிதப்பட்டுக்கொள்ளும்  அ.வெண்ணிலாவுக்கே இப்பொழுது தான் அரசுப் பள்ளிகள் குறித்த மோசமான எண்ணம் லேசாக மாறியிருக்கும் பொழுது, அவர் வீட்டில் உள்ளவர்கள் வேறு எப்படி இருப்பார்கள்..? சமூகத்தின் பொதுப்புத்திதானே அவர்களுக்கு இருக்க முடியும்..? இதற்கு எதற்கு மயக்கம் வர வேண்டும்.?

வெண்ணிலாவுக்கு 23 வருடங்கள் கழித்து நம் பள்ளியை விட வேறு நல்ல பள்ளி வேறெது இருக்க முடியும் என்ற ஞானோதயம் உதித்து, மனசுக்குள் உடைந்த பனிக்கட்டியின் குளுமை உண்டானதைப்போல ,அவரைவிட கல்வி அறிவிலும், சிந்தனைத் திறனிலும் மிகவும் 'பின் தங்கிய ' வீட்டில் உள்ளவர்கள் இன்னும் 50 ஆண்டுகளில் என்றேனும் மனசுக்குள் இருக்கும் அக்கினிப் பாறை உடைந்து ஆலங்கட்டிகளின் குளுமையை உணராமலா போவார்கள்..?

கண்டிப்பாய் நடக்கும். வெண்ணிலா காத்திருக்கலாம்.

//பள்ளிக்கான ஆண்டுக் கட்டணமாக 750 ரூபாயைக் கட்டியபோது எனக்கு ஒரு கணம் ஸ்தம்பித்தது. இதுவரை ஆயிரம் ரூபாய் நோட்டுகளாக எத்தனை லட்சங்களை எண்ணிக் கொடுத்திருக்கிறோம் ? //

இதுவும் படு அபத்தமாய் இருக்கிறது. அரசுப்பள்ளியில் 750 ரூபாய் ஆண்டுக்கட்டணம் என்பது அப்பொழுது தான் கட்டுரையாளர் அ.வெண்ணிலாவுக்குத் தெரியுமா என்ன‌..? பக்கத்தை நிரப்புவதற்கு சங்கதிகள் இல்லாததால் வசன வார்த்தைகளைப் போட்டு நிரப்பியிருக்கிறார் என்று தெரிகிற‌து.

// “உன்கூடவே வந்து போனால் பசங்க ஃபிரெண்ட்லியா இருக்க மாட்டாங்கம்மா” என்றாள். //

இதை எப்படிப் புரிந்து கொள்வது என்று தெரியவில்லை.அ.வெண்ணிலா மாணவ,மாணவிகளுடன் தோழமையுடன் பழகாமல் அதிகாரத்துடன் நடந்து கொள்பவர் என்று அவரது மகளே  அளித்த சான்றிதழாகத் தான் இதை நாம் கருத வேண்டியிருக்கிற‌து.அங்கு படிக்கும் மாணவர்கள் தனியார் பள்ளியில் பயில்பவர்களை விடத் தாழ்ந்தவர்கள் என்ற எண்ணம் ஆழ மனதில் குடிபுகுந்தவர் மாணவர்களை  எப்படித் தனக்குச் சமாமகவும் தோழமையாகவும் நடத்தியிருக்க முடியும்..? அவர்கள் எட்ட முடியாத உயரத்தில் தானே இவர் தன்னை வைத்திருப்பார். 

//அன்று மாலை வீட்டுக்கு வந்தவுடன், “எப்படிடா இருந்தது வகுப்புகள்?” என்றேன். “ம்மா...சூப்பர்ப்மா… எல்லா டீச்சரும் நல்லா நடத்துறாங்க...” என்றாள். //

நல்லவேளை வெண்ணிலா போன்ற ஆசிரியர்கள் அங்கு இல்லை போலிருக்கிற‌து.இதில் பாராட்டுக்குரியவர் 14 வயது நிரம்பிய அவரின் குழந்தைதான். சமூகத்தில் ஒட்டாத தாய்(தந்தையும்தான்), குழந்தை வாழும் குடும்பச் சூழல், குழந்தையின் நண்பர்கள் மற்றும் புறச்சூழல்கள் ஆகிய அனைத்தும் தனியார் பள்ளியில் படிக்கும் குழந்தையின் விருப்பத்தை அதிகப்படுத்துவதாக இருந்தாலும், அவர் எதிர்பார்ப்புக்கு மாறாக கொஞ்சம் வலுக்கட்டாயமாய் அரசுப் பள்ளியில் சேர்த்தாலும், முதல் நாளே அப்பள்ளியில் பயிலும் மாணவர்களுடன் ஒன்றிவிட்டதாகவும் அந்தச் சூழல் பொருந்தியிருப்பதாகவும் சொன்னதாய் எழுதியிருக்கிறார்.

கட்டுரையாளர் அ.வெண்ணிலா மற்றும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்  ராஜேந்திரன் இருவரும் தொகுத்த நூலான 'வந்தவாசிப்போர் -250' நூலை (அப்பொழுதைய ) பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு வெளியிட உணவுத்துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு பெற்றுக் கொள்கிறார்.

புகைப்படத்தில் திரு.தங்கம் தென்னரசு,திரு.எ.வ.வேலு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் திரு.மு.ராஜேந்திரன் ஆகியோருடன் அ.வெண்ணிலா.


****

இந்த சிற‌ப்புக் கட்டுரையை படித்த பின்பு 'தி இந்து' நாளிதழில் இவரைப்போல அரசுப் பள்ளி ஆசிரியரான இமையம் அவர்கள் ஜூன் 26,2014 தேதியிட்ட அளித்த நேர்காணலில் இருந்து ஒரு பகுதியை மேற்கோள் காட்ட விரும்புகிறோம்.

//அரசுப் பள்ளிகளின் தொடர் வீழ்ச்சிக்கு எது அடிப்படைக் காரணம் என்று நினைக்கிறீர்கள்?

ஆசிரியர்களோட பொறுப்பற்றத்தனம், அதிகாரி களோட அக்கறையின்மை, தனியார் பள்ளியில, அதுவும் ஆங்கிலத்தில படிச்சாதான் வேலை கிடைக்கும்கிற பெற்றோர்களோட மூடநம்பிக்கை எல்லாமும்தான் இதுக்குக் காரணம். ரொம்ப அடிப்படையா சொல்லணும்னா, அரசுப் பள்ளின்னா தரமற்றது, அரசு மருத்துவமனைன்னா தரமற்றது, அரசு நிர்வாகம்னாலே தரம் கெட்டது அப்படிங்கிற எண்ணம் சமூக உளவியலா இங்கே உருவாயிடுச்சு.//

இமையம் சொன்னது வெண்ணிலாவுக்கு பொருந்தும். அதுவும் ஆசிரியர்,பெற்றோர் என இரண்டு பாத்திரத்தையும் அ.வெண்ணிலா வகிக்கிறார்.ஆக அரசுப்பள்ளிகளின் வீழ்ச்சிக்கு வெண்ணிலாக்கள்தான் காரணம்.

இதற்கு ஏதுவாய் வெண்ணிலாவின் பழைய நேர்காணலில் ஒரு பகுதி.

 //பதினெட்டு வயதிலேயே ஆசிரியர் ஆகிவிட்டேன். வேண்டா வெறுப்பாகத்தான் ஆசிரியர் பொறுப்பேற்றேன். ஆசிரியர் பணியில் சேர்ந்த ஆரம்ப காலங்களில் அழுது அடம்பிடித்துக் கொண்டுதான் பள்ளிக்கு போவேன்.   ஒவ்வொரு நாட்டின் தலைவிதியும் வகுப்பறையில் தான் நிர்ணயிக்கப்படுகின்றன  என்று நேரு சொல்வதை மெல்ல மெல்ல உணர்ந்தேன்.// இது நக்கீரன் நேர்காணலில் அ.வெண்ணிலா சொன்னது.

ஆனால் பேட்டியில் சொன்னது  போல இன்னும் வெண்ணிலா மாறவில்லை என்று தெரிகிறது. இன்னும் வேண்டா வெறுப்பாகத்தான் ஆசிரியர் பொறுப்பில் இருக்கிறார் என்பதை அறிய முடிகிறது. முன்பு இளம்பிராயம் என்பதால் வெளிப்படையாய் அழுது அடம்பிடித்திருக்கிறார். இப்பொழுதோ வயதாகி விட்டபடியாலும் சமுகத்தில் ஒரு அந்தஸ்து கிட்டி விட்டபடியாலும், மனதுக்குள் ஆசிரியப்பணியின் மீதான வெறுப்பை மறைத்து வைக்கும் லாவகம் கைகூடியிருக்கிறது என்று நம்புவோம். அதே சமயம். அரசு கொடுக்கும் பல்லாயிரம் சம்பளத்தையும் வேண்டா வெறுப்பாகத் தான் இவர் வாங்கியிருப்பார் என்று நம்புவோம்.

அது மட்டுமல்ல.இவர் அரசுப் பள்ளியில் வேலை பார்க்கிறார். இவர் அங்கம் வகிக்கும்  த.மு.எ.க. சங்கம் தமிழ் வழிக் கல்வியை வலியுறுத்துகிறது. இவரும் தமிழக அரசால் நியமிக்கப்பட்ட சமச்சீர் பாடத் தயாரிப்புக் குழுவில் அங்கம் வகித்திருக்கிறார். ஆக தான் பணிபுரியும் அரசு வேலைக்கு மட்டுமல்ல, தான் அங்கம் வகிக்கும் கட்சியின் கொள்கை, பேசும் பேச்சுக்கள் அனைத்துக்கும் உண்மை இல்லாமல் இவர் இருந்திருக்கிறார். 23 ஆண்டுகள் கழித்து தன மகளை அரசுப் பள்ளியில் சேர்த்ததை ஒரு மாபெரும் சாதனையாய் கட்டுரை வேறு வடித்திருக்கிறார்.தி இந்து அதனை பெருமையுடன் வெளியிட நாம் காசு கொடுத்து வாங்கிய பாவத்துக்காய் படித்துத் தொலைத்திருக்கிறோம்.

ஆக மொத்தத்தில் அ.வெண்ணிலா ஆசிரியர் பணிக்கான எந்தத் தகைமையும் அர்ப்பணிப்பையும் கொண்டிருக்க வில்லை என்பதை முழுமையாய் அறிய முடிகிறது. மொத்தத்தில் இந்தக் கட்டுரை சிந்தனைக் களத்திலோ சிறப்புக் கட்டுரையாகவோ வெளியிடுவதற்கு எந்தத் தகுதியும் இல்லாத ஒன்று என்பதை ஆணித்தரமாகச் சொல்லமுடியும்.
****


இந்தக் கட்டுரையை வெளியிட்ட 'தி இந்து' நடுப்பக்க பொறுப்பாளருக்கு  நாம் சொல்லிக் கொள்வது ஒன்றுதான்.

அ.வெண்ணிலா ஆசிரியர்,கவிஞர்,எழுத்தாளர்,சமூகச் செயற்பாட்டாளர்,பதிப்பாளர்  என பல அடைமொழியுடன் வலம் வரலாம். அதில் அவர் குறித்த பங்களிப்புகள் கூட‌ செய்திருக்கலாம். அது குறித்து நீங்கள் நூல் விமர்சனம் எழுதலாம், கருத்து வாங்கிப் போடலாம். அது உங்கள் விருப்பம். (சில வாரங்களுக்கு முன்பு கூட‌  இந்திய ஆட்சிப் பணியாளர் ராஜேந்திரனும் அ.வெண்ணிலாவும் இணைந்து எழுதிய ஒரு கட்டுரை தி இந்து நடுப்பக்கத்தில் வெளியாகியிருந்தது. )

ஆனால் அ.வெண்ணிலா எதை கிறுக்கினாலும் அதைப் பிரசுரித்து வாசகன் மூளையில் திணிக்க வேண்டுமா என்ன..?  கட்டுரையை முழுமையாய் ஒருமுறைக்கு பல முறை வாசியுங்கள்.அது பிரசுரிக்கத் தகுந்த தகுதியுடன் இருந்தால் பிரசுரியுங்கள்.

இந்தக் கட்டுரையை அவர் ஒரு அரசுப் பள்ளி ஆசிரியர் என்ற முறையில் எழுதியிருக்கிறார். ஆனால் ஆசிரியருக்கான அர்ப்பணிப்பையும்,அரசுப்பள்ளியில் பணிபுரிந்ததற்கான கடமையையும் கொண்டிருக்க வில்லை என்பதை மட்டுமல்ல, அவர் எழுதிய கட்டுரையும் அதற்கான தகுதியில் இல்லை என்பதையும்,மேலும் இதுவரை அவர் பேசிய அரசியலுக்கும் முற்றிலும் முரணாய் இருக்கிறது என்பதை அவரது வார்த்தைகளில் இருந்து மேலே எடுத்துக் காட்டியிருக்கிறோம்.

அதை விடுத்து அவர் பிரபலம் என்பதற்காகவோ, உங்களின் கைபேசிப் பதிவில் அவரது பெயரும் எண்ணு ம் இருக்கக்கூடும் என்பதிலிருந்தோ அல்லது பக்கங்களை கடமைக்கு நிரப்பவேண்டும் என்பதற்காகவோ, படிக்கும் வாசகனை மடையன் எனக் கருதியோ யாரோ எதைப் பற்றி எழுதினாலும் வெளியிட்டு விடுவீர்களா?
*

ந‌மது சிற்றறிவுக்கு எட்டியபடி, அ.வெண்ணிலாவின் இந்தக் கட்டுரையை பத்திகளாக‌ச் சுருக்கி இமையம் நேர்காணலுக்கு எதிர்வினையாய் வாசகர் கடிதத்தில் வெளியிடலாம். அதைத் தாண்டி இதை வெளியிடுவதற்கு எந்த தகுதியும் இல்லை.
அதற்கான மாதிரியையும் இணைத்துள்ளோம். அந்தக் கடிதம் இப்படியும் இருக்கலாமோ ?

/ நான் வந்தவாசி அரசுப் பள்ளியில்  23 ஆண்டுகளாய்ப் பணிபுரிகிறேன். அங்கு சம்பளம் வாங்கினாலும் எனக்கு அரசுப் பள்ளி என்றால் ஓர் இளக்காரமும், தவறான எண்ணமும் இருந்தது. அதனால் எனது பணியில் நான் உரிய கவனம் செலுத்தியதில்லை. ஆனால் கடந்த மாதம் தான் இந்த எண்ணம் தவறானது என்பதை அறிந்தேன்.அதன் பிறகு தான் எனது மகளை அரசுப்பள்ளியில் கல்வி கற்க வைக்க முடிவு செய்தேன்.அதற்கு அனைத்துத் தரப்பிலும் கடும் எதிர்ப்பு இருந்தது.ஆனால் எனது கண்டிப்பு மற்றும் உறுதியின் காரணமாய் அதில் வெற்றி பெற்றேன்.முதலில் இதனை கடுமையாய் எதிர்த்த எனது 14 வயது மகளும் இப்பொழுது மிகுந்த மகிழ்ச்சியுடன் பள்ளி சென்று வருகிறாள்.
எனக்கு நல்ல கல்வியை மட்டுமல்ல நல்ல பொருளாதார வாழ்க்கையையும் இன்று சமூகத்தில் ஓர் அந்தஸ்தையும்  அளித்த அரசுப் பள்ளி எனது மகளின் வாழ்க்கையையும் மேம்படுத்தும் என நம்புகிறேன். நீங்களும் அரசுப்பள்ளி குறித்து தவறான எண்ணம் வைத்திருந்தால் மாற்றி விடுங்கள்.

இப்படிக்கு,
அ.வெண்ணிலா,
ஆசிரியை.அரசுப்பள்ளி.வந்தவாசி-604408,
திருவண்ணாமலை மாவட்டம்.

 
சிந்திக்குமா இந்து..?





Tuesday 8 July 2014

' ஏ' படம் பார்த்து அவுட் ஆன எடிட்டர் பாலிமரில் சங்கமம்...!



லைமாறன்.இவர் சன் நியூஸில் அவுட்புட் எடிட்டர்.இதற்கு முன்பு திருச்சி மாலை முரசில் செய்தி ஆசிரியராய் பணிபுரிந்தவர்.

அவுட்புட் எடிட்டர் கலைமாறன் எப்போதும் மர்மமான நபர்தான்..அவரை அவ்வளவு எளிதில் தொடர்பு கொள்ள முடியாது. ஆனால் 3,4 தொலைபேசி எண்கள் வைத்திருப்பவர்.

அவர் திடீர் திடீர் என காணாமல் போனால் சன் நியூஸ் நிர்வாகமே அவரைத் தேடுவதற்குள் படாதபாடு பட்டுவிடும். அவர் வசிப்பிடம் கூட ஒன்றிரண்டு பேருக்குத்தான் தெரியும்.

கலைமாறனின் சகோதரிகள் கூட அவரை கண்டுபிடிக்க முடியாமல் அவ்வப்போது சன் நியூஸுக்கு போன் செய்து புலம்புவது வாடிக்கையான ஒன்று. அவ்வளவு மர்மமான நபர்!

சன் நியூஸில் அவுட்புட் எடிட்டர் ராஜராஜன், 3 வது திருமண பிரச்சனையில் வெளியேறிய நிலையில் அந்த இடத்தைப் பிடித்தார்.

சன் நியூஸில் தலைமை செய்தி ஆசிரியர் ராஜா  சிறைச்சாலைக்கு போக சன் டிவி எடிட்டர் உமாசங்கர் வசம் சன் நியூஸ் போனது. அப்போது கலைமாறன் செய்திப் பிரிவில் இருந்து தூக்கியடிக்கப்பட்டு நிகழ்ச்சிகளுக்குப் பொறுப்பாளரானார்.

செய்திகளில் இருந்து ஒதுங்கியே இருந்த கலைமாறன் ஞாயிறுதோறும் ஒளிபரப்பாகும் 'நிஜம்' போன்ற ஒன்றிரண்டு நிகழ்வுகளை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தார். இதர ஓய்வு நேரங்களில் இணையதளத்தில் ஆபாச படங்களை விடாமல் பார்த்துக் கொண்டிருந்துள்ளார். இதை டெக்னிக்கல் டீம் கண்டுபிடித்துவிட்டது.




கலைமாறன்

முதலில் இதை மறுத்த கலைமாறன், ஆதாரங்களுடன் டெக்னிக்கல் டீம் காண்பிக்க வேறு வழியில்லாமல் ஒப்புக் கொண்டார். அதனால் நிகழ்ச்சி பிரிவில் இருந்து மீண்டும் சப் எடிட்டர் அளவுக்கு கீழிறக்கப்பட்டு ஓரங்கப்பட்டார்.

வந்தோமா...ரெண்டு செய்தி எழுதிக் கொடுத்தோமா என்று போய்க் கொண்டிருந்தார் கலைமாறன். ராஜா மீண்டும் சன் நியூஸுக்கு வந்த போதும் கலைமாறனால் பழைய இடத்துக்கு வர முடியவில்லை. கேவலமான செயலால் கேவலமாக ஒதுக்கப்பட்ட கலைமாறன் தற்போது அங்கிருந்து வெளியேறி பாலிமர் டிவியில் இணைந்துவிட்டார்.

பாலிமர் டிவியிலாவது பிட்டு படம் பார்க்காம கொடுத்த வேலையை மட்டும் செய்யுங்க...