Wednesday 30 July 2014

தினத்தந்தி- பப்ளிசிட்டிக்கு பல்லிளிக்கும் சத்யராஜ்; காசுக்கு குரைக்கும் நிருபர்...!




Paid news  க்கு   இந்தச் செய்தி ஒரு எடுத்துக்காட்டு.

http://www.dailythanthi.com/News/Districts/2014/07/30034016/Mavulivakkam-Building-crash-SurvivorStreet-dog-SathyarajSibiraj.vpf



இந்தச் செய்தி இன்றைய 'தினத்தந்தி'யில் சென்னைப் பதிப்பில்  (30-07-2014)சென்னை மாநகரச் செய்திகள் பகுதியில் மொத்தம் 259 வார்த்தைகளுடனும் ஒரு புகைப்படத்துடனும் வெளிவந்துள்ளது. மவுலிவாக்கம் கட்டிட விபத்தில் பாதிக்கப்பட்ட  ஒரு தெரு நாயை திரைப்பட  நடிகர் சத்யராஜும் அவரது மகனும் நடிகருமாகிய சிபிராஜும்  தத்து (!) எடுத்தது குறித்து பதிவு.

தன் கவனத்திற்கு வந்தவுடன் கேவலமான பார்வையுடன் நிருபரால் தவிர்த்திருக்கப் பட வேண்டிய  இச்செய்தி, விரிவாகவும் முக்கியத்துவத்துடனும் சுவராசியத்துடன்(!) வெளிவந்திருக்கிறது.அதற்கு  என்ன 'முக்கியத்துவம் அல்லது தகுதி' இருக்கிறது என்று பார்த்தால் எதுவும் இல்லை.

இந்தச் செய்தியிலேயே குறிப்பிட்டது போல, மவுலிவாக்கம் கட்டிட விபத்தில் 62 நபர்கள் மரணம் அடைந்துள்ளனர்.30 க்கும் மேற்பட்ட நபர்கள் நடைப்பிணமாய் வாழ்ந்து வருகின்றனர்.அநியாயமாய்ச் செத்துப் போனவர்கள் குடும்பத்துக்கோ அல்லது நடைபிணமாய் உயிர் வாழ்பவர்கள்  நல்வாழ்வுக்கோ துரும்பைக்கூட அசைக்காத நடிகரும் அவர் பிள்ளையும்   கூச்சமில்லாமல் ஒரு நாயைத் தத்து எடுத்ததாக நிருபரையும் புகைப்படக்காரரையும் முன்கூட்டியே வரச் சொல்லி பரிவாரங்களுடன் பல்லை இளித்துக்  கொண்டு போஸ் கொடுக்கின்றனர்.பப்ளிசிட்டிக்கு அலையும் வெறிபிடித்த மனித ஜென்மங்களிடம் மாட்டிக்கொண்ட   அந்த தெரு நாய் தான் புகைப்படத்தில் பரிதாபமாய் காட்சி அளிக்கிறது. 

அந்த நாய் மற்றும் காக்கா  எவ்வாறு பாதிக்கப்பட்டது ? யார் அதனை மீட்டெடுத்தது ? எப்படிச் சிகிச்சை அளிக்கப்பட்டது என அதற்கு ஒரு பின்னணி.
அதன்பின் பேட்டி வேறு.எல்லோரும் பல்லை இளித்த படி முகரையை காட்டிக் கொண்டு நிற்கின்றனர்.கூச்சமில்லாமல் அதனைத் 'தினத்தந்தி' வெளியிடுகிறது.
*



நடிகர் சிபிராஜ் “மவுலிவாக்கம் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிர் பிழைத்த நாய் பற்றி எனது நண்பர் கூறினார். இதையடுத்து உயிர் பிழைத்த லாசி என்ற நாயை நான் தத்து எடுத்துக்கொண்டேன்...//ஏன் செத்துப் போனவர்கள் குறித்து எந்த நண்பரும் சிபிராஜின்  செவிட்டுக் காதுகளுக்கும் குருட்டுக் கண்களுக்கும்  சொல்லவில்லையா..?

எங்கள் வீட்டில் ஏற்கனவே வெளிநாட்டு நாய்கள் உள்ளன. அதோடு இந்த தெரு நாயையும் வளர்க்க முடிவு செய்து இருக்கிறோம்.’’/ வீட்டில் மனிதர்கள் யாரும் இல்லையா..? இல்லை சத்யராஜூம் அவரது குடும்பமும்  மனிதப்பிறவியில் சேர்த்தி இல்லையா..? ஒரு மனிதனை தத்து எடுத்திருக்கலாமே..?
நடிகர் சத்யராஜ் நிருபர்களிடம் கூறுகையில், “பொதுமக்கள் தங்களுக்கு விருப்பமான நாய்களை வாங்குவதை விட, வீதி நாய்களை தத்து எடுக்க முன்வர வேண்டும்” என்றார்.வீட்டில் இரண்டு வெளிநாட்டு நாயை வளர்க்கும் சத்யராஜ்  இதைச் சொல்கிறார்.

செத்துப் போனவர்களை இழிவு படுத்தும் விதமாகவும் வாசகனை மடையனாக எண்ணியும் இந்தச் செய்திப்பதிவு  இருக்கிறது.

இத்தனைக்கும் தினத்தந்தியின் வர்த்தக கண்ணோட்டத்தில் பார்த்தாலும் இது பிரசுரிக்கத் 'தகுதி' இல்லாத செய்தி தான். இது மிகப்பெரிய நடிகையோ உச்ச நட்சத்திரமோ தொடர்புடைய செய்தி இல்லை .சத்யராஜும் சிபிராஜும் இரண்டாம்  நிலையில் இருந்து  மார்க்கெட் இழந்த நடிகர்கள்.

சென்னையில் மட்டும் 4.5 லட்சம் பிரதிகள் 'தினத்தந்தி' விற்பனை ஆகிறது.(புறநகர் பதிப்பில் இச்செய்தி வெளியிடப்பவில்லை என்றாலும் 3 லட்சம் பிரதிகளில்  இச்செய்தி வெளிவந்திருக்கிறது.) பெங்களூர் பதிப்பிலும் வெளிவந்துள்ளது.அங்கு ஏறத்தாழ 60 ஆயிரம் பிரதிகள் விற்பனை  ஆகிறது.
  இச் செய்தியையோ அல்லது திரைப்படம் குறித்தோ   மேற்கண்ட பதிப்புகளில் விளம்பரமாய் வெளியிட்டால் கட்டணம்  லட்சங்களில்  கொடுக்க வேண்டும்.ஆனால் அதற்குப் பதிலாய் அதிக வாசகர்களை அதிக வீச்சில் இச்செய்தி போய்ச் சேர்ந்துள்ளது. வெளிவரும் படத்திற்கும் மார்க்கெட் இழந்த நடிகர்களுக்கும் நல்ல பப்ளிசிட்டி.பப்ளிசிட்டி தேடுவதற்கும் அதனை நாளிதழில் வர வைப்பதற்கும் ஆயிரம் வழிகள் இருக்கின்றன.அதை விடுத்து மவுலிவாக்கம் பரிதாபத்தில் அதைச் செய்தது கேவலமாய் இருக்கிறது.

நிருபருக்கு சில ஆயிரங்கள் கொட்டிக் கொடுக்காமல் திட்டமிட்ட இந்த செய்தி வெளிவர துளியும் வாய்ப்பு  இல்லை.

நாயை நடிகர்கள் தத்து எடுக்க வந்த சம்பவத்தை கண்ட பொதுமக்கள் அவர் களை பாராட்டி சென்றனர்.// பொதுமக்கள் சொன்னதாக  நிருபர் எழுதிய கடைசி  வாக்கியம்.

இதனைப்படிக்கும் அனைவரும்  எழுதிய நிருபரைக் காறித் துப்பியதை  அவருக்கு யார் சொல்லுவது..?

5 comments:

Anonymous said...

On ther Hand, This Pubilicity is for Sibi's Upcoming Movie. I Hope, Cause in that Movie Dog is going to be the main character. A nterview of Sibi was published in Vikatan.Zit is kind of publicity stunt for his upcoming movie.. Good PRO work

Anonymous said...

There is absolutely nothing wrong in what Sathyaraj has done. He has spoken with great concern about stray dogs in the streets.
I dont see any politics or in this.
Media publicity, of course, may be there. But but media publicity is even there for those politicians who visited the victims and their families!

Anonymous said...

100% true.

Anonymous said...

good

Anonymous said...

ithoooooo....ithoooo...for cibi raj....