Wednesday 29 February 2012

மோசடி ஆவணங்கள் மூலம் ரூ.6 கோடி பெற்றுக் கொண்டேன் -திரிசக்தி சுந்தர்ராமன் ஒப்புதல் வாக்குமூலம்!


 


தமிழக அரசியல் வாரமிருமுறை இதழின் பதிப்பாளர் திரிசக்தி சுந்தர்ராமன் மோசடியாக ஆவணங்களை உருவாக்கி சில கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்ததாக தனியார் வங்கியின் புகாரின் பேரில் சென்னை மாநகரக் காவல்துறையின் வங்கி மோசடிகளை விசாரிக்கும் மத்தியக் குற்றப்புலனாய்வு டீம் 12 விசாரித்து அவர் மீது 10-11-2011 அன்று இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 406,419,420,465,468,471 r/w,மற்றும் 120 (B)ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றப் பத்திரிகை பதிவுசெய்து கைது செய்தது.இது குறித்து ஏற்கனவே செய்தி வெளியிட்டுள்ளோம்.தமிழக அரசியல் இதழ் இது தொடர்பாக அப்பொழுது ஒரு விளக்கம் வெளியிட்டிருந்தது. 








ஆனால் உண்மை வேறு.திரிசக்தி சுந்தர்ராமன் காவல்துறையிடம் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தில் தான் செய்தவற்றை விளக்கமாக அளித்துள்ளார்.

அது இது தான்.

2011 ஆம் வருடம் டிசம்பர் மாதம் 6 ஆம் தேதி மாலை சுமார் 17.30 மணிக்கு சென்னை-14,ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலை ஹேமமாலினி கல்யாண மண்டபம் முன்பாக வைத்து சென்னை மத்தியக் குற்றப்பிரிவு குற்ற எண் 499/2011 சட்டப்பிரிவு 406,419,465,468,471 மற்றும் IPC 120(B)இந்திய தண்டனைச் சட்டம் வழக்கினது எதிரி சுந்தர்ராமன் வயது 54,த/பெ,சங்கரன்,நெம்பர்,7/4,4 ஆவது மெயின் ரோடு,இந்திரா நகர்,சென்னை-20,என்பவரை 

சென்னை மத்தியக் குற்றப்பிரிவு 12 ஆவது டீம் ஆய்வாளர் ஆகிய நான் கைது செய்து சாட்சிகள் ஆகிய 1)திரு,N.பாபுகுமார்,வயது 38,த/பெ,நடராஜன்,மற்றும் 2)திரு,Bசதிஷ்குமார்,வயது 42,த/பெ,திரு S.பாலகிருஷ்ணன் என்பவர்கள் முன்னிலையில்

 விசாரணை செய்ய,மேற்படி எதிரி தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து செய்ததாக ஒத்துக் கொண்டு,எந்தவிதமான அச்சுறுத்தலோ,ஆசை வார்த்தையோ,துன்புறுத்தலோ எதுவுமின்றி சுயநினைவுடன் 17.40 மணி முதல் சொன்ன ஒப்புதல் வாக்குமூலம்.

என் பெயர் சுந்தர்ராமன்.எனக்கு தற்சமயம் 54 வயதாகிறது.எனது த்ந்தை பெயர் சங்கரன்.எனது தாயார் பெயர் முத்துலட்சுமி.எனது தந்தை பிரைவேட் கம்பெனியில் வேலை பார்த்து ரிட்டயர் ஆகி விட்டார்.எனது தாயார் இல்லத்தரசி.

என்னுடன் பிறந்தவர்கள் மொத்தம் 5 சகோதரிகள்.முதல் சகோதரி பெயர் கிரிஜா.இவர் தனது கணவருடன் கோடம்பாக்கத்தில் வசித்து வருகிறார்.எனது தங்கையின் கணவர் அசோக் லேலண்ட் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.எனது அடுத்த தங்கை ஜலஜா.இவர் கணவர் பெயர் பாபு.இவர் சிம்சன் குரூப்பில் வேலை செய்து வருகிறார்.

அடுத்த தங்கை பெயர் மைதிலி.இவர் கணவர் பெயர் சந்திரசேகர்.இவர் அசோக் லேலண்ட் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.அடுத்த தங்கையின் பெயர் விஜி.இவர் AGS ஆபிசில் வேலை செய்து வருகிறார்.தனது கணவர் ரவியுடன் கோடம்பாக்கத்தில் வசித்து வருகிறார்எனது கடைசி தங்கையின் பெயர் ஹேமா.இவரது கணவர் பெயர் குரு.தஞ்சாவூரில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.

நான் பி.காம். வரை படித்துள்ளேன்.நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான்.நான் படித்து முடித்து விட்டு இந்தியன் வங்கியில் ஆபிசர் ஆக 1977 முதல் 1992 வரை வேலை செய்து வந்தேன்.அதன் பின்னர் படித்து வேலையை ராஜினாமா செய்து விட்டு இந்தோனேசியாவில் யூமி என்ற ஷிப்பிங்  நிறுவனத்தில் வேலை பார்த்தேன்.அதன் பின்னர் இந்தோனேஷியாவில் நிலக்கரி,இரும்பு,இவைகளை வியாபாரம் செய்து வந்தேன்.

நான் வங்கியில் வேலை பார்த்த பொழுது எனக்குத் திருமணம் நடந்தது.எனது மனைவியின் பெயர் நளினி.எங்களுக்கு ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தை.எனது மகள் பெயர் மதுமிதா.இவருக்குத் திருமணமாகி விட்ட்து.எனது மருமகன் பெயர் விஜயன்.இவர் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.எனது மகன் பெயர் மதன் சுந்தர்.இவர் என்னுடன் வியாபாரத்தில் உதவி செய்து வருகிறார்.

நான் இந்தோனேஷியாவில் இருந்து கடந்த 2008 ஆம் ஆண்டு இந்தியா வந்தேன்.பின்னர் 2008 ஆம் ஆண்டு கிரிஜா ப்ப்ளிகேஷன்ஸ் பி.லிமிடெட் என்னும் நிறுவனத்தை ஆரம்பித்தேன்.இதில் நான் எனது மனைவி, மகள் மற்றும் மகன் ஆகியோர் இயக்குனர்களாக இருக்கிறோம்.இந்த கம்பெனி நெம்பர் 56/21,சாஸ்திரி நகர்,முதல் அவென்யூ,சென்னை-20 என்ற முகவரியில் இயங்கி வருகிறது.இந்த கம்பெனி மூலம் நான் தமிழக அரசியல்,திரிசகதி(பக்திமலர்)திரிசக்தி ஜோதிடம்,தேவதை கொலுசு போன்ற பத்திரிகைகளை வெளியிட்டு வருகிறேன்.

மேலும் GJ மல்டி மீடியா பிரைவேட் லிமிடெட் என்ற கம்பெனியை நான் 2008 இல் மேற்படி முகவரியில் ஆரம்பித்து அனிமேஷன் ஜாப் வெளியில் இருந்து எடுத்து செய்து வருகிறேன்.இந்த கம்பெனியில் நான்,என் மனைவி,மகள் ஆகியோர் இயக்குனர்களாக இருந்து வருகிறோம்.என் மனைவி 2009 ஆம் வருடம் அக்டோபர் மாத்த்தில் இருந்து மேற்படி முகவரியில் பதிப்பகம் ஆரம்பித்து நடத்தி வருகிறார்.இந்த பதிப்பகம் மூலம் சிறுகதை தொகுப்பு போன்ற புத்தகங்கள் வெளியிட்டு வந்தோம்.

அக்டோபர் 2009 இல் கிரிகுஜா பப்ளிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் கம்பெனிக்காக யூனியன் பேங்க் ஆப் இந்தியா சேமியர்ஸ் சாலை கிளையில் சுமார் 10 கோடி பிரிண்டிங் மெஷின் வாங்க கடன் வாங்கினேன்.இன்றைய தேதி வரை அதைக் கட்டி வருகிறேன்.

பின்னர் 2009 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நான் திரிசகதி பப்ளிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் என்னும் பெயரில் கம்பெனி ஆரம்பித்து அதனைப் பதிவு செய்தேன்.இதில் ஆரம்பத்தில் நானும் எனது மனைவி மட்டும் இயக்குனர்களாக இருந்து வந்தோம்.அதன் பின்னர் எனது நண்பர் மோசஸ் செல்வநாதன் என்பவரையும் எனது மகன் மதன் சுந்தரையும் பங்குதாரர்கள் மற்றும் இயக்குனர்களாகச் சேர்த்துக் கொண்டேன்.

எனது பெயரிலும் எனது மனைவி பெயரிலும் ஜாயிண்ட் அக்கவுண்ட் யுனியன் பேங்க் ஆப் இந்தியா சேமியர்ஸ் சாலை கிளையிலும் ICICI வங்கி ராஜா அண்ணாமலைபுரம் கிளையிலும் இதே வங்கியில் கிரிகுஜா பப்ளிகேஷன்ஸ் லிமிடெட் கம்பெனி பெயரிலான அக்கவுண்ட்டும் GJ மல்டி மீடியா பெயரிலான அக்கவுண்ட்டும் உள்ளது.   

திரிசகதி பப்ளிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் பெயரில் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி திருவான்மியூர் கிளையிலும் ICICI வங்கி ராஜா அண்ணாமலைபுரம் கிளையிலும் கணக்கு உள்ளது.
மோசஸ் செல்வநாதன் எனக்கு வியாபார வகையில் பழக்கமான வக்கீல் ரமேஷ் என்பவர் மூலம் பழக்கம்.மோசஸ் செல்வநாதனுக்கு கொட்டிவாக்கத்தில் சுமார் 25 கிரவுண்ட் நிலம் உள்ளது.அதை வாங்க அவரிடம் நான் சுமார் 13 கோடி விலை பேசி 2010 ஆம் ஆண்டு ஆரமபத்தில் அக்ரிமெண்ட் போட்டு அவருக்கு சுமார் 6 கோடி அட்வான்ஸ் கொடுத்திருந்தேன்.இதனை நான் செக்குகளாகவும் கொடுத்துள்ளேன்.

மீத பணம் கொடுக்க அந்த சமயத்தில் என்னிடம் என்னிடம் பணம் இல்ல்லாமல் இருந்தது.அதனால் நான் மோசஸ் செல்வநாதனுக்கு திரிசகதி பப்ளிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் பங்குகள் கொடுத்து ஒரு இயக்குனராகச் சேர்த்துக் கொண்டேன்.

அந்த நேரத்தில் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியின் இயக்குனர்களில் ஒருவரான திரு.ராஜ்குமார் என்னைச் சந்தித்து புதிதாக ஏதாவது புராஜக்ட் ஆரம்பித்தால் எங்கள் வங்கி நிதி உதவி தரத் தயாராக இருக்கிறது என்று தெரிவித்தார்.

அதன்படி நான் 2010 ஜூன் மாதம் திரிசகதி பப்ளிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் என்னும் பெயரில் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி திருவான்மியூர் கிளையில் கரண்ட் அக்கவுண்ட் ஆரம்பித்தேன்.கம்பெனியின் டைரக்டர்களாக இருந்த நான் எனது மனைவி,எனது மகன் மதன் சுந்தர்,மற்றும் மோசஸ் செல்வநாதன் ஆகியோர் அப்ளிகேஷன் பார்மில் கையெழுத்து போட்டு அக்கவுண்ட் துவங்கினோம்.அதன்பிறகு நான் கிரிகுஜா பப்ளிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் என்னும் பெயரில்  புத்தகங்கள் அச்சிட புதிதாக யூனிட் ஆரம்பிக்க புரபோசல் கொடுத்தேன்.

அதில் நான் டேர்ம் லோனாக ரூ.15 கோடியும் வொர்க்கிங் கேப்பிடலாக ரூ.3.5 கோடியும் கேட்டேன்.இது தொடர்பாக செம்மஞ்சேரியில் இந்த கம்பெனிக்கு பேக்டரி கட்ட வாங்கவிருக்கும் நிலத்தின் விபரம் மற்றும் வாங்கவிருக்கும் நிலத்தின் விபரம்,விலை அதில் பேகடரி கட்ட ஆகும் செலவு,அதற்குரிய மெஷின்கள் ஆகியவற்றைக் குறிப்பிட்டு இதர ஆவணங்களுடன் நான் வங்கியில் புரபோசல் சமர்ப்பித்தேன்.

மேற்படி பேக்டரி கட்ட எனக்குத் தெரிந்த பில்டர் திரு மோசஸ் சம்பத் அவர் நடத்தும் ஆர்பிட் இஞ்ஜினியர்ஸ் நிறுவனத்தின் பேரில் பில்டிங் எஸ்டிமேட் தந்தார்.இதே போல் எனது கிரிகுஜா பப்ளிகேஷன் கம்பெனிக்கு மெஷினரி சப்ளை செய்த சபையர் டிரேடர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் திரு.குணசேகரன் அவர்கள் நிறுவன லெட்டர்பேடில் மெஷினரிக்கான கொட்டேஷன் தந்தார்.

ஆர்பிட் இஞ்ஜினியர்ஸ் நிறுவனமும் டிரான்ஸ் பார்மர் மெஷினரி சப்ளை செய்ய கொட்டேஷன் தந்தது.இவைகளை நான் வங்கியில் சமர்ப்பித்தேன்.மேலும் இந்த லோன் படி செக்யூரிட்டியாக செம்மஞ்சேரியில் வாங்கவிருக்கும் நிலம் மற்றும் இயக்குனர் மோசஸ் செல்வநாதன் பெயரிலான OMR சாலை கொட்டிவாக்கத்திலிருக்கும் 25 கிரவுண்ட் நிலம் ஆகியவற்றை வைக்கவிருப்பதாகவும் எனது லோன் புரபோசலில் தெரிவித்தேன்.மோசஸ் செல்வநாதனுக்கு அட்வான்ஸ் கொடுத்த நிலத்தை பேங்க் செக்யூரிட்டியாக கொடுப்பதற்காக நான் மோசஸ் செல்வநாதனிடம் சம்மதம் பெற்றேன்.

இந்த புரபோசலை வைத்து 2011 சனவரியில்  எனக்கு ரூ.1.8 கோடி செம்மஞ்சேரியில் திரிசக்தி கம்பெனிக்கு இடம் வாங்க லோன் சேங்ஷன் செய்தார்கள்.அந்த மாதம் இதற்கான டிடி யை நிலம் விற்ற வெங்கடேச பெருமாள் பெயருக்கு வங்கியில் கொடுத்து விட்டார்கள்.அதன்படி செம்மஞ்சேரியில் உள்ள நிலம் திரிசக்தி பப்ளிகேஷன்ஸ் லிமிடெட் பெயரில் பதிவு செய்யப்பட்டு அதன் டாகுமெண்டுகள் வங்கியில் அடமானமாக வைத்துக் கொண்டனர்.

பிப்ரவரி 2011 இல் மெஷினரி வாங்க நான் கொடுத்த சபையர் டிரேடர்ஸ் கொட்டேஷன் பெயரில் ரூ.8,68,50000/வங்கியில் சாங்ஷன் செய்தார்கள்.பிப்ரவரி மாத்த்திலேயே சபையர் டிரேடர்ஸ் பெயரிலான ரு.4,31,40000/க்க்கான டிடி மற்றும் ரு.1,44,15000 க்க்கான டிடி ஆகியவற்றை வங்கியிடம் இருந்து எங்களிடம் கொடுத்தார்கள்.அதை என் மகன் மதன் சுந்தர் இயக்குனர் மோசஸ் செல்வநாதன் ஆகியோர் பெற்று வந்தார்கள்.அப்போது மோசஸ் செல்வநாதனும் வக்கீல் ரமேஷூம் என்னிடம் OMR ரோடு கொட்டிவாக்கத்தில் இருக்கும் நிலத்திற்கான மீத பணத்தைக் கொடுக்க வற்புறுத்தினார்கள்.

நான் என்னிடம் பணம் இல்லை என்று சொன்னேன். மோசஸ் செல்வநாதன் சபையர் டிரேடர்ஸ் பெயரில் வங்கி கொடுத்திருக்கும்  டிடி யைக் குறிப்பிட்டு சபையர் டிரேடர்ஸ் பெயரில் நாமே ஒரு அக்கவுண்ட்டை புதிதாகத் துவங்கி அந்த டிடியை அதில் ரியலைஸ் செய்து தனக்கு பணம் வழங்கும் படி கேட்டார்.நானும் அதனை ஒத்துக் கொண்டு மெஷினரி வாங்க பிறகு பிசினஸ் செய்து பணம் புரட்டிக் கொள்ளலாம் என முடிவு செய்தேன்.

அதன்படி நான் எனது நண்பர் மற்றும் பில்டர் ஆர்பிட் இண்டிரியர்ஸ் உரிமையாளர் திரு.மோசஸ் சம்பத் துக்கு தெரிவித்து அதில் பணம் தருவதாக சொன்னதன் பேரில் அவரும் என் மீது உள்ள நம்பிக்கையில் தன் மனைவி கிரிஸ்டினா மோசஸை வைத்து ICICI வங்கி ராஜா அண்ணாமலை புரம் கிளையில் சபையர் டிரேடர்ஸ் பெயரில் ஒரு வங்கிக் கணக்கு ஒப்பன் செய்ய வைத்தார்.

அதில் வக்கீல் ரமேஷ்,மோசஸ் செல்வநாதன் ஆகியோர் சொன்னதன் படி சபையர் டிரேடர்ஸ் பெயரில் வங்கி கொடுத்த இரண்டு டிடி மொத்தம் ரூ.5,75,55000/த்தை நாங்கள் டெபாசிட் செய்து பணமாக்கிய பின் அங்கிருந்து இந்த பணத்தை எனது கம்பெனிகளான GJ மல்டி மீடியா,கிரிகுஜா ப்ப்ளிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் கம்பெனிக்கும் எனது மனைவி பெயரிலான அக்கவுண்டிற்கும் அவரது வளர்ப்பு மகள் கிரிஜா அக்கவுண்டிற்கும்,மோசஸ் செல்வநாதன் சொன்ன பெயர்களுக்கும் மாற்றினேன்.பிறகு சபையர் டிரேடர்ஸ் இந்த அமவுண்ட்டை ரிசீவ் செய்து விட்டது போல் போலியாக ரசீது தயார் செய்து வங்கிக்கு நாங்கள் கொடுத்து விட்டோம்.

வக்கீல் ரமேஷூக்கு வங்கியில் நல்ல இன்புளுயன்ஸ் இருந்ததாலும்,வங்கியின் இயக்குனர் ராஜ்குமார் நல்ல சப்போர்ட்டாக இருந்ததாலும் மேலும் நான் பத்திரிகை தொழில் செய்து வருவதாலும் என்னை வங்கி ஏதும் செய்ய முடியாது என இருந்து வந்தோம்.பிறகு பிசினஸ் செய்து இதனை சரி செய்து விடலாம் என நினைத்தேன்.

மோசஸ் செல்வநாதன் செக்யூரிட்டியாக அளித்த OMR ரோடு கொட்டிவாக்கம் நில விஷயத்தில் விற்பனை செய்யவோ அடமானம் வைக்கவோ கூடாது என்று நீதிமன்ற உத்தரவு எதும் இருக்கிறதா என்று தாங்கள் கேட்டீர்கள்.அது பத்தி எனக்கு எதுவும் தெரிய வில்லை.மோசஸ் செல்வநாதன் அடமானம் வைக்கும் பொழுது அது குறித்து எனக்குத் தெரிவிக்கவில்லை.

வங்கி முதலில் வழங்கிய ரூ.1.8 கோடி லோன் திரிசக்தி பப்ளிகேஷன்ஸ் க்கு நிலம் வாங்க சரியாகச் சென்றது.பில்டிங் கட்ட வாங்கப்பட்ட லோன் ரூ.82.5 லட்சமும் பிரிண்டிங் மெஷினரி வகையில் கொடுக்கப்பட்ட லோன் ரூ.35.62 லட்சமும் ஆர்பிட் இண்டீரியர்ஸ் அக்கவுண்டில் செலுத்தப்பட்டுள்ளது.

மெஷினரி வகையில் கொடுக்கப்பட்ட லோன் ரூ.5,75,55 000,/லோன் நாங்கள் ஓப்பன் செய்த போலி வங்கி கணக்கு மூலம் எங்களால் பெறப்பட்டது.

ஜுன் 2011 இல் ஏற்கனவே திரிசக்தி ப்ப்ளிகேஷன்ஸ் பெயரில் என் மனைவி இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பெற்ற லோன் ரூ.1 கோடியை செலுத்தி தமிழ்நாடு மெர்க்கண்டல் வங்கி லோன் டேக் ஓவர் செய்தது.

நான் பத்திரிகையாளன் என்பதாலும் அரசியலில் எனக்கு செல்வாக்கு உள்ளதாலும் வங்கியில் போலீசில் புகார் செய்தால் பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்தேன்.
இன்று 6-12-2011 ஆம் நாள் பகல் சுமார் 17.30 மணிக்கு ராயப்பேட்டை ஹேமமாலினி கல்யாண மண்டபம் முன்பாக வந்த பொழுது போலீசார் ஆகிய தாங்கள் பிடித்துக் கொண்டீர்கள்.

சாட்சிகள் பெயர் மற்றும் விலாசம்.

1)திரு.N.பாபுகுமார்,வயது 38,த/பெ,நடராஜன்,
எண்,41 ஸ்ரீராம் நகர்,சின்ன கொடுங்கையூர்
சென்னை-51

2)திரு B.சதீஷ் குமார்,
த/பெ,பாலகிருஷ்ணன்,நெம்பர் 14,4 ஆவது தெரு PTC காலனி,
திருவான்மியூர்,சென்னை-41.


ஒப்புதல் வாக்குமூல நகல்









இப்பொழுது நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.நிற்க.

தமிழக அரசியல் தனது மேலாண் இயக்குனர் திரிசக்தி சுந்தர்ராமனுக்கு ஆதரவான செய்தியை மட்டும் வெளியிட்டு மற்ற மோசடிச் செய்தியை இருட்டடிப்பு செய்தது குறித்து நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. 
ஆனால் அவரது கைது குறித்து ஜூனியர் விகடன் அப்பொழுது  அவரைப் பாதுகாக்கும் விதமாக‌ ஒரு செய்திக் கட்டுரை வெளியிட்டது.




முழுக்க முழுக்க சுந்தர்ராமனுக்கு ஆதரவாக வெளியிடப்பட்ட செய்தி இது தான்.
    
இதனை விமர்சித்து அப்பொழுது ஒரு பதிவு வெளியிட்டிருந்தோம்.



ஆனால் திரிசக்தி சுந்தர்ராமன் தனது ஒப்புதல் வாக்குமூலத்தில் மோசடியாக வங்கிக் கணக்கு திறந்தது உட்பட அனைத்தையும் ஒப்புக் கொண்டுவிட்டார்.

இனிமேலாவது விகடன் குழுமம் தனது தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களை எல்லாம் விட்டு விட்டு எப்பொழுதும் போல் சமூக அக்கறையுடன் செயல்பட வேண்டும்.


Monday 27 February 2012

தமிழக அரசியல் பதிப்பாளர் திரிசக்தி சுந்தர்ராமன் மீதான மோசடி புகாரும் காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையும்!



                                                                                   திரிசக்தி சுந்தர்ராமன்

தமிழக அரசியல் என்னும் வாரமிருமுறை இதழ் பதிப்பாளர் திரிசக்தி சுந்தர்ராமன் மேலாண் இயக்குனராக உள்ள திரிசக்தி குழுமம் எங்களிடம் மோசடி ஆவணங்களைக் கொடுத்து கடன் வாங்கி பொதுமக்களின் பணத்தை தவறாகப் பயன் படுத்தி விட்டது என்று தமிழ்நாடு மெர்க்கண்டல் வங்கி நிர்வாகம் சார்பில் அதன் மண்டல மேலாளர் ரவீந்திரன் சென்னை மாநகரக் காவல்துறை ஆணையாளரிடம் 08-09-2011 அன்று புகார் அளித்தார்.


அதன் பேரில் சென்னை மாநகரக் காவல்துறையின் வங்கி மோசடிகளை விசாரிக்கும் மத்தியக் குற்றப்புலனாய்வு டீம் 12 விசாரித்து அவர் மீது 10-11-2011 அன்று இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 406,419,420,465,468,471 r/w,மற்றும் 120 (B)ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றப் பத்திரிகை பதிவுசெய்து கைது செய்தது.இது குறித்து ஏற்கனவே செய்தி வெளியிட்டுள்ளோம்.

திரிசக்தி சுந்தர்ராமனின் குற்ற எண் 499/2011.

அதன் நகல்கள் இது தான்.

காவல்துறையிடம் அளித்த புகார் நகல்


                                                     


                                     


                                பக்க எண் 3

முதல் தகவல் அறிக்கை நகல்



                          


                                    


                              


                       



வங்கியின் புகார் குறித்தும் கைது குறித்தும் தமிழக அரசியல் இதழ் கொடுத்த விளக்கமும்,காவல்துறையிடம் திரிசக்தி சுந்தர்ராமன் அளித்த ஒப்புதல் வாக்குமூலமும் அடுத்த பதிவில்....!



Thursday 23 February 2012

விகடனில் பணியாற்றும் கறுப்பு ஆடு யார்?






தமிழக ஊடகவியலாளர்களிடையே சமீபத்தில் பரபரப்பாகப் பேசப்படும் ஒரு விஷயம், விகடன் குழுமத்திற்குச் சொந்தமான ஜூனியர் விகடன் இதழில் நிர்வாக ஆசிரியராக இருந்த விகேஷ் என்பவர் அதிரடியாக  வேலைநீக்கம் செயப்பட்டிருப்பது பற்றித்தான். அவருக்கு சென்னையில் மட்டும் சொந்தமாக நான்கு வீடுகள் இருப்பதாகவும், சில பெரிய புள்ளிகளோடு சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாகவும், அது தொடர்பான கட்டப் பஞ்சாயத்துகள் போன்றவற்றில் நீண்டகாலமாகவே அவர் கைதேர்ந்தவர் என்றும், ஒட்டு மொத்தமாக தன் தொழிலுக்கு ஜுனியர் விகடன் பெயரைத் தவறாகப் பயன்படுத்திக் கொண்டதாகவும் கூறுகிறார்கள்.
சமீபத்தில் மோசடி வைத்தியசாலை தொடர்பான கட்டுரை ஒன்றைப் பிரசுரிக்காமல் தவிர்த்ததைத் தொடர்ந்து,  நிர்வாகம் அவரைக் கண்காணித்ததாகவும் தனியார் துப்பறியும் நிறுவனம் மூலமாக விசாரணை நடத்தியதில் பல லட்சமோ, கோடியோ மோசடி நடந்திருப்பது உறுதியானதாகவும், அதன் தொடர்ச்சியாகத்தான் விகேஷ் அலுவலத்துக்குள் அனுமதிக்கப்படாமலேயே வீட்டிற்கு அனுப்பப் பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
இதைக்காட்டிலும் தமிழ் மக்களுக்கு அதிர்ச்சியூட்டத்தக்க குற்றச்சாட்டு ஒன்றும் உள்ளது. அது விகேஷ் இலங்கைத் தூதரகத்துடன் வைத்திருந்த உறவு தொடர்பானது. இன அழிப்புப் போரின் போது தமிழகத்து அரசியல்வாதிகளையும், பத்திரிகையாளர்களையும் ‘திறமையாக’க் கையாண்டதற்காக சென்னையில் இலங்கை அரசின் துணைத்தூதராக இருந்த அம்சாவுக்கு பதவி உயர்வு கொடுத்து இலண்டனுக்கு அனுப்பி வைத்தது, இலங்கை அரசு. தமிழ் ஊடகவியலாளர்களில் சிலர் அம்சாவோடு மிக நெருக்கமாகப் பழகி வந்திருக்கிறார்கள். போருக்கு முன்னர்; இலங்கை அரசின் பிரச்சாரத்தை முன்னெடுக்க அவர்களுக்குச் சன்மானங்கள் வழங்கப்பட்டன. போரின் வெற்றிக்குப் பின்னர், செய்த வேலைக்காக சன்மானமும் விருந்தும் வைக்கப்பட்டது.

அம்சாவிடம் கேள்வி எழுதிக் கொடுத்து ராஜபட்சேவிடம் பதில் வாங்கி, அதைத் தொடர்ந்து வெளியிட்டு வந்தன, சில ஊடகங்கள். போர் தீவீரமாக நடந்த காலத்தில் வழக்கறிஞர்களும் மாணவர்களும் அரசியல் அமைப்புகளும் போர் நிறுத்தம் கேட்டு போராடிய காலத்தில், இலங்கைத் தூதரகம் துரோகி கருணாவின் நேர்காணலுக்கான ஏற்பாட்டைச் செய்து, இங்குள்ள எல்லா பெரிய ஊடக நிறுவனங்களிலும் அது வெளியானது. ஜூனியர் விகடன் இரண்டு வாரமாக துரோகி கருணாவின் பேட்டியை வெளியிட்டது. இந்த நேர்காணல்களை  வெளியிடும் சுதந்திரம் எல்லா ஊடகங்களுக்குமே உண்டு என்று வாதிடலாம்.  ஆனால், அதிர்ச்சிகரமான செய்தி என்ன வென்றால்,  புலிகளின் அரசியல் பிரிவுத்தலைவர் பா.நடேசனின் நேர்காணலை ஜூனியர் விகடனும், டெக்கான் குரோனிக்கலும் வெளியிட மறுத்து கருணாவின் நேர்காணலை வெளியிட்டதுதான்.
தமிழ் ஊடகங்களில் உள்ள கணிசமான பத்திரிகையாளர்கள் வளைக்கப்பட்டார்கள். சில மானமுள்ள பத்திரிகையாளர்கள் அம்சாவின் அன்பளிப்புகளைப் புறக்கணித்தும் இருக்கிறார்கள்.இலங்கை தூதரகத்தின் செயல்பாடுகளைக் கண்டித்தும் அம்பலப்படுத்தியும் எழுதிய ஊடகங்களும் உண்டு. போருக்கு முன்னரும் பின்னரும் ஆங்கிலம் பேசும் ஊடகவியலாளர்களை கொழும்புக்கு அழைத்துச் சென்று குளிப்பாட்டியும். தமிழ் பேசும் ஊடகவியலாளர்களை சென்னையிலேயே குளிப்பாட்டியதும் கூட நடந்திருக்கிறது.
இதில் விகேஷ் மட்டுமல்ல, ஜுனியர் விகடன் குழுமத்தில் இப்போதும் பணியாற்றிவரும் ஒருவர்தான் அம்சாவுக்கு அதிகமான தரகு வேலை பார்த்ததாகவும், இப்போது புதிதாக வந்திருக்கும் துணைத் தூதருக்கும் அவரே ஊடகத் தரகராக இருப்பதாகவும் பேச்சு அடிபடுகிறது.



                            அம்சா மனைவியுடன்

இவரது பணி வித்தியாசமானது; யாராவது புலிகளை ஆதரித்து எழுதினால், உடனே இவர் விகடனின் தீவீர வாசகர் என்ற போர்வையில் பிரமுகர்களை அழைத்துக் கொண்டு விகடன் நிர்வாகத்தினரைப் பார்க்கச் செல்வார். இவர் அழைத்துச் செல்லும் நபர் இலங்கை தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்படுபவராக இருப்பார். இவர் போய் ‘விகடனில் ஒரே புலி ஆதரவு கட்டுரையாக வருகிறது’ என்று பற்ற வைப்பார். இலங்கை தூதரகத்தால் இவருக்கு வழங்கப்பட்ட பல பணிகளில் இதுவும் ஒன்று.
தனிப்பட்ட பத்திரிகையாளர்கள் மட்டுமல்ல, சென்னை அரசினர் தோட்டத்திற்குள் இருக்கும் பத்திரிகையாளர் மன்றம் என்கிற அமைப்பின் பழைய கட்டிடம் இடிக்கப்பட்டு நவீன வசதிகளுடன் புதிய கட்டிடம் ஒன்று கட்டப்பட்டிருக்கிறது. தமிழ் ஊடகவியலாளர்களுக்காகக் கட்டப்பட்ட இந்த கட்டிடத்திற்குப் பெயர் வைக்கும் போது ஒரு பைசாத் தமிழன் இதழை நடத்திய அயோத்திதாசப் பண்டிதரின் பெயர் முதல் தினத்தந்தி  ஆதித்தனார் பெயர் வரை, ஏதாவது ஒரு ஊடகவியல் சார்ந்தோரின் பெயரை வைத்திருக்கலாம்.
ஆனால், அக்கட்டிடத்திற்கு வைக்கப்பட்ட பெயர் என்ன தெரியுமா? ” எஸ்.ஆர். எம். மாளிகை”. அதாவது, எஸ்.ஆர். எம். கல்லூரி முதலாளி பச்சைமுத்துவின் நிதியில் அந்தக் கட்டிடம் கட்டப்பட்டதால், அவர் பெயரையே கட்டிடத்திற்கு வைத்து விட்டார்களாம். இலங்கை அரசின் முன்னாள் அதிபர் சந்திரிகாவிடம் விருது வாங்கியவரும் தொடர்ந்து தமிழ் மக்களுக்கு எதிராக நஞ்சைக் கக்கிவருபவருமான ஹிந்து ராமைக் கொண்டு ‘எஸ்.ஆர்.எம்‘  என்ற அந்தக் கட்டிடம் திறக்கப்படுகிறது என்றால், பத்திரிகையாளர் மன்றத்தின் இன்றைய சில துரோக நிர்வாகிகளுக்கும் இலங்கைத் தூதரகத்திற்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பதை ஊடக நிறுவனங்கள் விசாரித்திருக்க வேண்டும்.
எஸ். ஆர்.எம். கல்லூரியின் மர்ம அறையில் மாணவர்களை அடைத்து வைத்துத் தாக்கியதும். அந்தக் கல்லூரியின் தொழில் நுட்பச் சான்றிதழ்கள் செல்லாதவை என்று இந்திய தொழில் கூட்டமைப்பு அறிவித்தது குறித்தும் எஸ். ஆர். எம். கல்லூரி நிர்வாகத்தின் கட்டணக் கொள்ளை குறித்தும் யோக்கியமான எந்தப் பத்திரிகையாவது வெளியில்  கொண்டு  வந்திருக்கிறதா? போர் கொடூரமாக நடந்த காலத்தில், போர் நிறுத்தம் கோரியோ சிங்கள இனவெறி அரசைக் கண்டித்தோ ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லை இந்த ஊடக அமைப்பு. காரணம் இதில் தலைமைப் பொறுப்பில் உள்ள சிலர் எது செய்தாலும் இந்து ராமிடம் கேட்டுத்தான் செய்வார்களாம்.
ஈழத்தமிழினத்திற்கெதிராக நடைபெற்ற ஒரு இன அழிப்பு போரை இருட்டடிப்பு செய்வதற்காகவும், சிங்கள இனவெறி அரசை நியாயப்படுத்துவதற்காகவும் கைநீட்டி காசு வாங்கிய பத்திரிகையாளர்களின் குற்றம் வெறும் ஊழல் குற்றமல்ல. அது போர்க்குற்றத்திற்கு இணையாக, தண்டிக்கப்பட வேண்டிய ஒரு கிரிமினல் குற்றம். இவர்கள் இனப்படுகொலையின் கூட்டாளிகள்.
எண்ணிப்பாரக்கவே இயலாத இந்த அருவருப்பான நடவடிக்கை சிறு சிறு ஊழல்கள் வழியாகத்தான வளர்ந்து விசுவரூபமெடுத்திருக்கிறது. மாணவ நிருபராக இருந்து ஜுனியர் விகடனுக்கு நிர்வாக ஆசிரியராக வந்தவர்தான் விகேஷ். பொறுப்புக்கு வந்த மாணவ நிருபர்கள் மிக மிக தந்திரமாக செய்த ஒரு விஷயம், தங்கள் இருப்புக்கு இன்னொரு மாணவ நிருபர் உலைவைத்து விடாமல் பார்த்துக் கொண்டதுதான். ஒரு கட்டத்தில் மாணவ நிருபர்களின் வரவே குறைந்து ஒப்புக்கு மட்டும் அந்தத் திட்டம் இப்போது விகடனில் இருப்பதாக அறிய முடிகிறது.
நேர்மை, ஊடக தர்மம், எழுத்தை மட்டுமே நம்பி வாழ்கிற பத்திரிகையாளர்கள் பிழைக்கத் தெரியாதவர்களாகவும், ஊழல், செல்வாக்கை வளர்த்து அதிகார பீடங்களுக்கு  வருபவர்கள் திறமைசாலிகளாகச் சித்தரிக்கப்பட்டதும்  ஊழல்மயப்பட்ட ஊடக ஒழுக்கம் கட்டமைத்த கருத்தியலே. அந்தக் கருத்தியலின் ஒரு நவகால அடையாளம் மட்டுமே விகேஷ். ஒரு எல்லை வரை ஊழல், கட்டப்பஞ்சாயத்து போன்ற இழி செயல்களை எல்லா ஊடக நிறுவனங்களும் அனுமதித்தே வந்திருக்கின்றன. தமிழ் மக்களின் மனச்சாட்சி. நாடித்துடிப்பு என்றெல்லாம் பறைசாற்றிக் கொள்ளும் இந்த ஊடகங்கள் பத்திரிகையாளர்களுக்கு வழங்கும் ஊதியம் மிகவும் சொற்பமானது. உழைப்பைச் சுரண்டி ஊதியம் கொடுக்காத முதலாளிகள் ஒரு எல்லை வரை தனது நிருபர்கள் வெளியில் லஞ்சம் வாங்குவதை  அனுமதிக்கிறார்கள். இதுதான் பெரும்பலான தமிழக பத்திரிகையாளர்களின் நிலை.
தொடக்க காலத்தில் போலீசு அக்கிரமங்களை வெளிக்கொண்டு வந்த ஜுனியர் விகடன், நாளடைவில் போலீசு புகழ்பாடத் துவங்கியது. போலீசை வைத்து வாசகர்களுக்குச் சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிலைக்கு அது வளர்ந்து சென்றது. சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்த  பல்வேறு வழக்கறிஞர்கள் இருக்க, போலீசாரைக் கொண்டு சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் தொடங்குகிறது விகடன் நிருபர்களின் போலீசு கூட்டு. ரௌடி, போலீசு, அரசியல்வாதி கூட்டணியோடு பத்திரிகையாளர்களில் சிலரும் இணைந்து வளர்ந்த கதை சுவாரசியமானது. போலீசார் நடத்திய கட்டப்பஞ்சாயத்துகளில் பத்திரிகையாளர்களும் கூட்டு சேர்ந்து தொழில் துரோகம் செய்த விஷயங்கள் ஏராளமாக இருக்கின்றன. காலம் தோறும் இத்தகைய மோசடிப் பேர்வழிகள் குமுதம், விகடன் குழுமம், நக்கீரன் என எல்லா ஊடகங்களிலுமே இருந்துதான் வந்திருக்கிறார்கள். ஆனால், அதிர்சியளிக்கும் விஷயமாக அத்தனை பேரும் பேசிக் கொள்வது விகடனுக்குள்ளேயே இது நடந்து விட்டது என்பதுதான்
பாரம்பரியமிக்க பத்திரிகை நிறுவனம் எங்களுடையது என்று மூச்சுக்கு முந்நூறு தடவைச் சொல்லிக் கொள்ளும் விகடன் தங்கள் நிறுவனத்தின் பெயரை தவறான வகையில் பயன்படுத்திய மோசடிப் பேர்வழி விகேஷ் மீது ஏன் சட்ட நடவடிக்கை எடுக்க வில்லை என்கிற கேள்வி இங்கே முக்கியமானது. சில வருடங்களுக்கு முன்பு இதே ஜுனியர்விகடனில் புதிதாக வேலைக்குச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் பிரச்சினை ஒன்றில் செய்தியை வெளியிடாமல் இருக்க, சம்பந்தப்பட்டவர்களை மிரட்டுகிற தொனியில் பேசி வகையாகச் சிக்கிக் கொண்டார். அப்போது ஜூனியர் விகடன் நிர்வாகத்தினர், அவரை போலீசில் ஒப்படைத்தார்கள். அவர் சிறைக்கு அனுப்பப்பட்டார். விகேஷ் போன்றோரின் குற்றங்களை ஒப்பிடும்போது அது மிகச்சாதாரண குற்றம்.
இலங்கைத் தூதரின் விருந்தைச் சுவைத்தவர்கள் முதல் எலும்பைச் சுவைத்தவர்கள் வரையிலான எல்லா குற்றவாளிகளும் அடையாளம் காட்டப்படவேண்டும். இதனைத் தெரிந்து கொள்வது தமிழ் மக்களின் உரிமை. ஆதாரங்கள் தெரியாத வண்ணம் இழைக்கப்படும் இத்தகைய குற்றங்களுக்கான ஆதாரங்களை அம்பலமாக்குவது நேர்மையான பத்திரிகையாளர்கள் ஒவ்வொருவரின் கடமை.





நன்றி-புதிய ஜனநாயகம்-செப்டம்பர் 2009


இந்தக்கட்டுரை இரண்டு வருடங்களுக்கு முந்தைய பழைய கட்டுரையாக இருக்கலாம்.ஆனால் இன்னும் வெளிவராத நடப்புச் செய்தி ஒன்று இருக்கிறது.

இந்தக்கட்டுரையின் படி நமக்கு "தெரியாத"விடை அல்லது "அம்பலத்துக்கு வராத" விடை என்னவென்றால் விகடனில் இப்பொழுதும் பணியாற்றும் பத்திரிகையாளர்  ஒருவர் தான்
  புதிதாக வந்துள்ள இலங்கையின் துணைதூதருக்கும் தரகு வேலை பார்ப்பதாக செய்தி கூறுகின்றதே!

யார் அந்த கறுப்பு ஆடு?தெரிந்தால் நீங்கள் சொல்லுங்களேன்!


Tuesday 21 February 2012

பத்தாயிரம் நிதியும் பல்லாயிரம் புலம்பல்களும்




சென்னை பிரஸ் கிளப் சார்பில் தமிழக முதலமைச்சரிடம் தானே புயல் நிவாரண நிதி ரூ.10 ஆயிரம் ரூபாய்க்கு காசோலை கொடுத்து விட்டு வந்துள்ளதற்குப் பின்னால் பல விஷயங்கள் வருத்தமும் சோகமும் ஆத்திரமும் கழுத்தறுப்புகளுமாக பத்திரிகையாளர்கள் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

அதனைத் தொகுத்து தந்துள்ளோம்.

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைந்துள்ளது சென்னை பிரஸ் கிளப் என்னும் பத்திரிகையாளர் அமைப்பு.இந்த அமைப்புக்கான புதிய கட்டிடம் எஸ்ஆர்எம் பல்கலைக்கழக நன்கொடையால் கட்டப்பட்டுள்ளது.கட்டிடம் அமைந்துள்ள இடம் தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறைக்குச் சொந்தமானது.


இந்தக்கட்டிடம் கட்டுவதற்கு முறைப்படி சென்னை மாநகராட்சியின் அனுமதியோ அல்லது சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமத்தின் அனுமதியோ முறைப்படி பெறப்படவில்லை.இதனால் இந்தக்கட்டிடத்தை திறந்து வைக்க முன்னாள் முதல்வர் கருணாநிதி வர மறுத்து விட்டார்.இந்தக்கட்டிடத்திற்கு எத்தனையோ பத்திரிகையாளர்கள் பெயர்களை வைப்பதற்குப் பதிலாக மக்களைச் சுரண்டிய சுயநிதிக்கல்லூரி முதலாளியின் பெயர் வைத்தது அப்பொழுதே பரபரப்பாகப் பேசப்பட்டது.

எழவு வீட்டிற்குப் போனால் கூலிக்கு மாரடிக்கும் கூட்டம் இருப்பதைப்போல பத்திரிகையாளர்கள் சங்க நிர்வாகிகள் என்று தங்களைத் தாங்களே சொல்லிக் கொள்வோர் காசு வாங்கி விட்டு கட்டிடத்திற்கு சுயநிதிக் கல்லூரி நிர்வாகத்தின் பெயரைச் சூட்டி விட்டார்கள் எனவும் பேசப்பட்டது.ஆனால் இது குறித்து எந்தக் கூச்சமும் நிர்வாகிகள் என்று சொல்லிக் கொள்பவர்களுக்கு இருக்கவில்லை.

ஆட்சி மாறியதும் இன்றைய முதல்வரை எப்படியேனும் பிரஸ் கிளப் வளாகத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று தங்களைத் தாங்களே நிர்வாகிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள் பெரு முயற்சி எடுத்துள்ளார்கள்.ஆனால் அவர்கள் முயற்சி இதுவரை வெற்றிபெறவில்லை.

னால் சில நாட்களுக்கு முன் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான குடியிருப்பு வளாகத்தில் பெண் உறுப்பினர்களுக்கான உடற்பயிற்சிக்கூடத்தை திறந்து வைக்க முதல்வர் ஜெயலலிதா வருகை தந்தார்.

அப்பொழுது பிரஸ் கிளப் வாசல் வழியாகச் சென்ற முதல்வரின் காரை இடையில் வழி மறித்து கார் முன் கையில் பொக்கேயுடன் நின்று கொண்டு 'அம்மா தானே புயல் நிவாரணத்திற்கு நன்கொடை கொடுக்க வேண்டும் அம்மா' என்று நிர்வாகிகள் கூக்குரல் எழுப்ப முதல்வர் கார் மெல்ல பிரஸ் கிளப் வாசலில் இருந்து சற்று தூர தள்ளி நின்றவுடன் கையில் பொக்கேயுடன் சென்று முதல்வரைச் சந்தித்து நிதி கொடுக்க வேண்டும் அம்மா என்று சொல்லி உள்ளார்கள்.

உடனே முதல்வர் தானே புயல் நிவாரண நிதியை தலைமைச் செயலகத்தில் வந்து கொடுங்கள் என்று கூறியுள்ளார்.உடனே சென்னை பிரஸ் கிளப் சார்பில் 5 பேர் தலைமைச் செயலகம் சென்று காசோலை அளித்து விட்டு வந்து உள்ளனர்.

இது தான் நாம் மேலே பார்க்கும் புகைப்படம்.ஆனால் இதற்குப் பின் நடைபெற்ற கழுத்தறுப்பு விஷயங்கள் அரசியலில் கூட நடக்காதது என்று உண்மையான பத்திரிகையாளர்கள் புலம்புகின்றனர்.

புலம்பல் 1

பாரதி தமிழன்  

தேர்ந்தெடுக்கப் படா விட்டாலும் இப்பொழுதைக்கு நான் தான்  இணைச் செயலாளர். முதல்வரைச் சந்திக்கப் போகிறோம் என்று சொல்லி விட்டு நான் கிளம்பி வருவதற்குள் நான் இல்லாமல் என்னை வேண்டும் என்று கழட்டி விட்டு சீட்டிங் பெல்லோஸ் இவர்களாகவே சென்று சந்தித்து விட்டார்கள்.அன்பு அசதுல்லாவால எப்பவும் ஒரே பஞ்சாயத்து,இவனுங்களால பிரஸ் கிளப்புக்கு கெட்ட பேரு.நான் இனிமேல் இவனுங்க சகவாசம் வேண்டாமுன்னு நினைச்சா இவனுங்க என்னைக் கழட்டி விட்டுட்டானுங்க.

இவனுங்க பண்ற பிராடுத்தனத்தை நான் தான் வெளியில் சொல்றேன்னு தெரிஞ்சி போச்சு.அதான் இப்ப கழுத்தறுத்துட்டானுங்க.என்னைப் பார்க்குறவங்க எல்லாம் பிரஸ் கிளப் ஆக்டிங் செக்ரட்டரி,தலைவர் ஆல் இன் ஆல் எல்லாம் நீங்க தான்.நீங்களே இல்லாம போயிட்டு வந்துட்டாங்க...என்ன சார் இதுன்னு எல்லாம் என்னை எழவுக்கு விசாரிக்கிற மாதிரி விசாரிக்கிறாங்க.

ஒரே அசிங்கமா இருக்கு.அதனாலேயே இப்ப கிளப்புக்கு போறதைக் குறைச்சுக்கிட்டேன்இப்படி சக நண்பர்களிடம் புலம்புகிறாராம்.

புலம்பல் 2

கோசல்ராம்

நான் இவனுங்க மாதிரி வெட்டிப் பசங்க கிடையாது.நாட்டில பெரிய பத்திரிகையான குமுதத்திற்கே நான் குழும ஆசிரியர்.நான் சொல்றது தான் நாட்டுக்கே இப்ப வேத வாக்கு.ஆனாலும் இவனுங்க கூப்பிட்டாங்கன்னு நான் எல்லா வேலை வெட்டியையும் விட்டுட்டு கார் எடுத்துட்டு அவசரமா கிளம்பி வந்தேன்.நாம் கே வாஸ் பத்திரிகையில் இருப்பவன் எல்லாம் பிரஸ் கிளப் நிர்வாகின்னு முதல்வர் முன்னாடி நின்னு நிதி கொடுக்குறானுங்க.

நிர்வாகிகளைத் தவிர்த்து எவனெவனோ முதல்வரைச் சந்தித்து நிதி கொடுக்கலாமா?இவனுங்களை ஏத்திட்டு வர்ற டிரைவரா நான்?கார் பார்க்கிங் பண்ணிட்டு வர்றதுக்குள் போய் சந்திச்சுட்டு வந்துட்டானுங்க.அவசரமா முதல்வர் அழைத்துட்டார் அதனால நீங்க வர்றதுக்குள் போய்ட்டு வந்துட்டோம்ன்னு சொல்றானுங்க,இவனுங்க கூட சகவாசம் வச்சா இப்படித் தான் அவமானம் கிடைக்கும் போல.

இனி மேல் இவனுங்க பக்கம் எட்டிக்கூடப் பார்க்கக்கூடாது.தரித்திரம் புடிச்சவனுங்க.

தன்னிலை விளக்கம் 3

விகேஷ்

பாரதியும் மத்தவங்களும் வரட்டும்னு நான் சொன்னேன்.ஆனால் அன்புவும் அசதுல்லாவும் நீ வாய்யா,போவோம்.இல்லைன்னா நீயும் வேண்டாம் நாங்க மட்டும் போறோம் ன்னு சொன்னாங்க.விட்டா இவனுங்க நம்மளக் கழட்டி விட்ருவாங்க ன்னு பயந்து நான் போயிட்டேன்.போனப்புறம் தான் எல்லாம் நம்ம கூட்டாளிகன்னு தெரியுது.நமக்கு என்ன?சந்தர்ப்பத்தைச் சரியாப் பயன்படுத்துறது நம்ம பாலிசி பாஸ்..

நமக்கு எப்பவுமே பாசிட்டிவ் ஆஸ்பெக்ட் தான் பாஸ்..ஏறிப்போய்க்கிட்டே இருப்போம்....

அடாவடி-4

அண்டப்புளுகு அன்பு

நமது எம்ஜிஆர் ல எனது பெயர் போட்டு நிறையக் கட்டுரை வந்துருக்கு. இந்தக்கட்டுரை எழுதுற அன்பு யார்ன்னு நமது எம்ஜி ஆர் எடிட்டர் மருது சார்ட்ட சிஎம் கேட்ருக்காங்க.அப்ப அவர் சொல்லியிருக்கார் இவர் தான் பிரஸ் கிளப் டிரஷரரு.சென்னை யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட்டோட பிரசிடெண்ட்.பத்திரிகைத்துறையில் ரொம்ப செல்வாக்கான ஆளு.இப்பவும் இவரு பேரக்கேட்டா கருணாநிதி பயப்படுறாராம்.நக்கீரன் கோபாலுக்கும் காமராஜூக்கும் சிம்ம சொப்பனமாம்.மாறன் பிரதர்ஸ் பத்தி எல்லா தகவலும் இவருக்கு அத்துப்படியாம் அப்படின்னு.

இப்படி சொன்னதோடு மட்டுமல்லாம சிஎம் கிட்ட என் போட்டோவையும் காட்னதுன்னால அன்னிக்கு பிரஸ் கிளப் வாசல்ல முதல்வர் நீங்க தான அன்பு?உடனே கோட்டைக்கு வந்துடுங்க ன்னு சொன்னாங்க.என்னால தான் அப்பாயிண்ட்மெண்ட்டே கிடைச்சது.அதனால தான் நான் இந்தப்பயலுகளப் பத்தி பெருசா கண்டுக்கலை.

நான் சொன்னதச் செய்யுற 4 பசங்களக் கூப்பிட்டுப் போயிட்டேன்.


இதே மாதிரி தான் போன கவர்ன்மெண்ட்ல கூட ஜூவி பொட்டு சுரேஷ் பிரச்சனையில கருணாநிதி கிட்ட எனக்கு இருந்த செல்வாக்குன்னால தான் அவர் எங்களைச் சந்திக்க அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்தார்.அப்ப நான் நீங்க பிரஸ் கிளப் பங்ஷனுக்கு வரணும்னு கேட்டேன்.அப்ப அவர் தான் வரல்லை.

இப்ப இவங்க கிட்ட நிதி கொடுக்க கேட்டேன்.உடனே அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்தாங்க.நிதியும் கொடுத்துட்டு வந்துட்டேன்.

ஆனா இவனுங்க இன்னும் போட்டோவுக்கு போஸ் கொடுக்க அலையுறானுங்க.போட்டோல ஆள் வரல்லைன்னு அடிச்சுட்டு சாகுறானுங்க.என்னைப் பத்தி அவதூறு பரப்பிட்டுத் திரியுறானுங்க.என் கிட்ட நேர்ல சொல்லப் பயந்துக்கிட்டு யார் யார்கிட்டயோ எதைஎதையோ சொல்லிட்டுத் திரியுறானுங்க.

இவனுங்களால என்ன ஒண்ணும் பண்ண முடியாது.அப்படின்னு எல்லோரிடமும் தெனாவட்டாகப் பேசித் திரிகின்றாராம்.

அசதுல்லா ரீல்

அதிமுக திமுக  எந்த கவர்ன்மெண்ட் வந்தாலும் கோட்டையில கோலோச்சுறது நான் தான்.மந்திரிகளை எப்படி மடக்கணும் எப்படி மிரட்டணும் ன்னு தெரிஞ்ச ஆளு நானு.அதிமுக ஆட்சின்னா அரைக்கை சட்டை போடுவேன்.திமுக ஆட்சின்னா முழுக்கை சட்டை போடுவேன்.அதிமுக கொடி பச்சை குத்தின எம்ஜி ஆர் விசுவாசி நான்.

நான் சொன்னா எதும் செய்வான் அன்பு.பாரதி தமிழன், கோசல் வேற எவனும் என்னை ஒன்னும் பண்ண முடியாது.கிளப் பில் எப்பவும் இருக்கும் நிரந்தர நிர்வாகி நான் தான்.மத்தவன் எல்லாம் வெளியில போய் நிர்வாகின்னு சொல்லிக் கிட்டுருப்பான்.நிர்வாகம் நட்த்துறவன் நான் தான்.எவனைப் பத்தியும் எனக்கு கவலை இல்லை.

அதனால் தான் எனக்கு எடுபிடி வேலை செய்யுற நிலாவேந்தன் ராஜேந்திரனைக் கூடக் கூப்பிட்டுப் போனேன்.அந்தக்காலத்துலயே நான் சொல்றத ஆந்தையார் சொல்வார்.அதனால தான் விகேஷ் கூட வரட்டும்ன்னு நான் தான் அனுமதிச்சேன்.இல்லைன்னா அவனையும் விட்டுட்டுப் போயிடுப்பேன். நான் ஒத்துக்கிட்டதுன்னால தான் விகேஷ் உடன் வர அன்பு சம்மதிச்சான். அன்பு என் பேச்சை மீறிடுவானா?இப்பவும் நானும் அன்பும் சொல்றது தான் கழுகார் பேரில வருதுன்னு எவ்வளவு பேருக்குத் தெரியும் இதுன்னு புல் மப்பில் பிரஸ் கிளப்பில் சவுண்டு விட்டாராம்.

ஒரு சந்திப்பு நிறைய களேபரங்களையும் புகைச்சலையும் பிரஸ் கிளப்பில் ஏற்படுத்தி விட்டதாம்.ஆனால் உண்மையான பத்திரிகையாளர்களோ இவனுங்க எலெக்‌ஷன் நடத்தாமலே பல வருடம் நாங்க தான் செக்ரட்டரி ன்னு சொல்லிக்கிட்டுத் திரியுறானுங்க.

இப்ப தங்களுக்குள்ளேயே அடிச்சுக்கிட்டு இருக்கானுங்க இது எங்கே போய் முடியுமோ என்று தலையில் அடித்துக் கொள்கிறார்களாம்.