Monday 28 May 2012

நக்கீரன் கோபால்,ஜுனியர் விகடன் அசோகனுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை..?

தாமரை தியாகு
                       
ஜூனியர் விகடன்,நக்கீரன் என்கின்ற இரண்டு புலனாய்வுவுவுவு,புடலங்காய்ய்வு இதழ்கள் நாட்டில் நடக்கும் தவறுகளையும் முறைகேடுகளையும் புலனாயாமல் அதனை அம்பலப்படுத்தாமல் பரபரப்பிற்காகவும் இதழ் விற்பனைக்காகவும் அப்பொழுதைக்கு அப்பொழுது தனி நபர்கள் குறித்துச் செய்தி வெளியிடுவது வழக்கம்.ஆட்களின் தன்மையைப் பொறுத்து இந்தச் செய்தியின் காரமும் தரமும் தராதரமும் இருக்கும்.

செய்திக்கோ அல்லது தவறான செய்திக்கோ பதிலுக்கு வழக்குரைஞர் நோட்டீசோ,அல்லது ஆட்டோவோ வரும் என்று தெரிந்தால் அதற்குத் தகுந்த மாதிரி செய்தி அடக்கி வாசிக்கப்படும்.சில நேரங்களில் கிசுகிசுவாகவே செய்தி கடந்து விடும்.உண்மைச் செய்தி என்றாலும் சில நேரங்களில் பயந்து கொண்டு குப்பைத் தொட்டியில் போய் விடும்.

அதே நேரம் செய்தி வெளியிடப்படும் நபர் எதையும்கேட்க மாட்டார் என்றால் வரிந்து கட்டி வெளியிடுவார்கள்.இதுதான் இவர்களின் வீரம். இதற்கு தற்பொழுது பலியாகியிருப்பவர் தமிழ்த் தேசப் பொதுவுடைமை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தியாகு மற்றும் விஜயலட்சுமி என்னும் ஒரு பெண்மணி.

தியாகுவின் கொள்கைகள் மீதும் அவரது அரசியல் பாதைகள் மீதும் உங்களுக்கும் எங்களுக்கும் விமர்சனங்கள் இருக்கலாம்,முரண்பாடுகள் இருக்கலாம்.அது வேறு.

ஆனால் தியாகு என்ற தனிமனிதரின் மீது எந்தவித ஆதாரமும் இல்லாமல் தங்களிடம் ஊடகம் இருக்கிறது.அதனைக் காசு கொடுத்து வாங்கிப் படிப்பதற்கு இளிச்சவாய வாசகன் இருக்கிறான் என்பதற்காக ஆதாரமற்ற அவதூறுகளை அள்ளித் தெளிப்பது பத்திரிகை அறம் அல்ல.நடப்பதும் கற்காலம் அல்ல.பதில் சொல்லியாக வேண்டிய கடப்பாடு அனைவருக்கும் இருக்கிறது.

னி நடந்தவற்றைப் பார்ப்போம்.

முதலில் ஜூனியர் விகடன் புலனாய்வு..





இந்தக் கட்டுரையில் உள்ள தகவல் பிழைகளைப் பற்றி பிறகு பார்ப்போம்.முதலில் இந்தக் கட்டுரை இப்பொழுது வெளியிடப்பட்டதற்கு என்ன தேவை இருக்கிறது..?

1)தியாகு தன்னைத் துன்புறுத்தினார் என்று திரைப்பட பாடல் ஆசிரியர் தாமரை காவல்துறையில் புகார் செய்துள்ளாரா…?

2)அல்லது பெண் விடுதலைக்காய் போராடும் அமைப்புகளிலோ,மனித உரிமை அமைப்புகளிலோ எழுத்துப் பூர்வமாக தாமரை புகார் செய்துள்ளாரா?

3)அல்லது குறைந்த பட்சம் தான் உறுப்பினராக இருக்கும் திரைப்பட பாடலாசிரியர்கள் சங்கத்திலாவது புகார் செய்துள்ளாரா?

4)தியாகு ஒரு வாரமாகக் காணவில்லை என்று சொல்லி முதல் பக்கத்தில் செய்தி வெளியிடுகின்றீர்களே..? இந்தச் செய்திக்கு என்ன தேவை..?

தியாகு இந்த நாட்டின் முதல்வரா..?அல்லது மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அரசுப் பொறுப்புக்கள் எதிலும் பதவி வகிக்கிறாரா..?தியாகு காணவில்லை என்று முதல் பக்கத்தில் செய்தி வெளியிடுவதற்கு..

5)தியாகு ஒரு கட்சியின் தலைவர் என்ற அர்த்தத்தில் செய்தி வெளியியிட்டிருக்கின்றோம் என்று ஈனஸ்வரத்தில் ஜால்ஜாப்பு சொன்னீர்கள் என்றால்,இது வரை தியாகுவின் கட்சிக் கூட்டம் எத்தனையை உங்கள் இதழில் பதிவு செய்துள்ளீர்கள்..?

6)தியாகு காணாமல் போனது தொடர்பாகவோ அல்லது தியாகு ஏதாவது பெண்ணைக் கடத்தி விட்டார் என்றோ ஏதாவது காவல் நிலையத்தில் வேறு ஏதாவது புகார் பதிவாகியிருக்கிறதா..?

7)இது எதுவும் கூட வேண்டாம்.ஜுவி நிருபரிடமாவது திரைப்பட பாடலாசிரியர் தாமரை,தியாகு என்னை அடிக்கிறார்,மிதிக்கிறார் என்னை அவரிடமிருந்து மீட்டுச் செல்லுங்கள் என்று தகவல் அனுப்பினாரா…?

எதும் புகார் பட்டியல் வாசித்தாரா..?அதுவும் இல்லை.நான் எதுவும் உங்களிடம் சொல்லும் நிலையில் இல்லை என்று தான் செய்தியில் சொல்கிறார்.

இல்லை.இல்லை.எதுவும் இல்லை.அப்புறம் எதற்கு இந்தச் செய்தி வெளியிடப் பட வேண்டும்.என்ன தேவை இருக்கிறது..?ஒரு தேவையும் இல்லை.ஊடகம் நடத்துபவர்கள் செய்தி அரிப்புக்காகவும் விற்பனைக்காகவும்,தங்கள் நட்பு வட்டாரத்தில் இருப்பவர்களின் விருப்பத்திற்காகவும் தாங்கள் நினைத்தால் பக்கங்களை மையில் நிரப்பி யாரையும் செய்தியாக்கலாம், இழிவு படுத்தலாம்.அப்படித்தானே..?


  • இனி இந்தச் செய்தியில் உள்ள பிழைகளையும் தவறுகளையும் பார்ப்போம்.


ஒரு நாடறிந்த பிரபல்யம்,எழுத்தாளர் பற்றி எழுதும் பொழுது குறைந்தபட்சம் அடிப்படைத் தகவல்களையாவது பிழையில்லாமல் எழுதுவது தான் அறிவார்ந்த பத்திரிகையாளர் குணம். இங்கு எல்லாம் தலைகீழ்.

1)முதலில் தியாகு ஏதோ நாகப்பட்டிணம் கிராமத்தில் இருந்தே வர்க்கப் போராளியாகவே பிறந்து வளர்ந்தவர் என்பது போல செய்தி எழுதப்பட்டுள்ளது.




தியாகு காங்கிரஸ் கட்சியில் இருந்து தான் தனது அரசியல் பாலபாடத்தைத் தொடங்கியவர்.ஜெயகாந்தன்,கண்ணதாசன்,கருப்பையா மூப்பனார்,காமராஜருடன் கூட நிறையக் கூட்டங்களில் பங்கேற்றுள்ளார். இந்த அடிப்படைச் செய்தி கூடத் தெரியாமல் ஒருவரைப் பற்றி எழுதுவதை எந்த லட்சணத்தில் சேர்ப்பது?





2)தியாகு திருமணம் செய்தது லெனின் அவர்களின் சகோதரியை என்று எழுதியுள்ளார்கள்.//

தியாகு திருமணம் செய்தது லெனின் அவர்களின் மகளை,சகோதரியை அல்ல.மகளுக்கும் சகோதரிக்கும் வித்தியாசம் தெரியாமல் என்னய்யா ஜர்னலிசம்?.

ஜூனியர் விகடனில் தியாகு எழுதிய சிறைக்குள் சித்திரங்கள் தொடரிலேயே மேற்கண்ட விபரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இன்வஸ்டிகேஷன் ஜர்னலிசம் நமக்குரொம்பத் தூரம்.டெஸ்க் ஜர்னலிசத்தையாவது உருப்படியாப் பண்ணுங்க..

3) முதல் மனைவியிடமிருந்து அவர்களுக்கு இடையிலான மனக் கசப்பால் பிரிந்தனர். //

சட்டபூர்வமாகப் பிரிந்து விட்டனர் என்பது ஜூவி துப்பறியும் படைக்குத் தெரியுமா..?விவாகரத்து ஆணையின் நகல் கைவசம் இருக்கிறதா..?

4)தாமரைக்கும் இது இரண்டாவது திருமணம்././

தாமரையும் தியாகுவும் திருமணம் செய்து கொண்டார்கள் என்று ஜூவிக்குத் தெரியுமா..?ஆதாரம் வெளியிடுமா..? தாமரையிடம் கேட்டால் கூடக் கிடைக்காது..ஏனென்றால் சட்டப்படி திருமணம் நடக்கவில்லை.இருவரும் ஒரு கூரையின் கீழ் இணைந்து வாழ்கிறார்கள்.அவ்வளவு தான்.


5)தியாகுவிற்கு போன் செய்தோம்.அதனையும் தாமரை தான் எடுக்கிறார்.//இதற்கு மேல் என்ன வேண்டும்?ஒருவரின் தொலைபேசியை இன்னொருவரிடம் விட்டு விட்டா ஒடிப்போவார்.?இங்கு தான் பூனைக்குட்டி ஒளிந்துள்ளது என்பது அறிவுள்ளவர்களுக்குப் புரியும்.

நாட்டில் உள்ள எழுத்தாளர்களையும் திரைப்படக்காரர்களையும் கேட்டுப் பாருங்கள்,ஏன் திரைப்படத்திற்குப் பாடல் எழுதும் தாமரையைக் கூடக் கேட்டுப்பாருங்கள்.எழுத்துப் பணிக்காக ஒரு வாரம் என்ன மாதக்கணக்கில் கூட யாரிடமும் சொல்லாமல் தனிமையில் இருப்பவர்கள் அநேகம்.
ஆனால் கற்பனைக் குதிரைகளைத் தட்டி விட்டு அலுவலகத்தில் இருந்து முரண்பாடுகளை மூட்டையாக்கி செய்தி வெளியிட்டது ஜுவி.

மேற்கண்ட செய்தி 23-05-2012 தேதியிட்ட இதழில் வெளிவந்தது. இதழ் வெளியானது 19-05-2012 சனிக்கிழமை.

தியாகு வந்து சொன்னால்தான் உண்மை தெரியும்!//இது ஜூவியின் செய்தி இறுதி வார்த்தைகள்.




இந்த இதழ் கடைக்கு வந்த அன்றே காலையில் 10 மணி அளவில் சென்னையில் தமிழ்நாடு மக்கள் பேராயம் என்னும் ஒரு அமைப்பு ஸ்டெர்லிங் சாலையில் நடத்திய இலங்கை தூதரகத்தை இழுத்துப் பூட்டும் போராட்டத்தில் தியாகு கலந்து கொண்டார்.அதன் பின் காவல்துறையால் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப் பட்டார்.





அது தொடர்பான செய்தி மக்கள் தொலைக்காட்சியிலும்,மாலை தமிழ் முரசு செய்தித்தாளிலும் மறுநாளைய தினமணி நாளிதழிலும் வெளியாகி உள்ளது.இணையத்தில் நிறையப்பேர் இது குறித்து செய்தி எழுதி உள்ளனர்.எந்த வழியிலாவது ஜூவி புடலங்காய்களுக்கு செய்தி தெரியாமல் இருக்காது.
*

ஜுனியர் விகடன் அடுத்த இதழ் முடிக்கப்பட்டது 21-05-2012 திங்கள் கிழமை மாலை 7 மணி.இடையில் சனி,ஞாயிறு,திங்கள் என முழுதாக 3 நாட்கள் இருக்கின்றன.

துளியளவாவது நேர்மை இருந்தால் நாணயம் இருந்தால்,அறம் இருந்தால் மனச்சாட்சி இருந்தால் ஜூனியர் விகடன் என்ன செய்திருக்க வேண்டும்?ஒரு வரியிலாவது மறுப்புச் செய்தி வெளியிட்டிருக்க வேண்டும்.அல்லது பாலோ அப் வெளியிட்டிருக்க வேண்டும்.போகிற போக்கில் சமாளிப்பாக மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கதையாக எதையாவது 4 வார்த்தையாவது எழுதியிருக்கலாம்.

(போட்டி இதழான குமுதம் ரிப்போர்ட்டர் தியாகுவின் பேட்டியை வெளியிட்டது.)





நேர்மையான பத்திரிகையாளன் என்றால் வெளியிட்ட தவருக்கு வருத்தம் தெரிவிப்பான்,அல்லது விளக்கம் தெரிவிப்பான்,அல்லது குறைந்தபட்சம் சமாளிப்பான்.வெறும் பத்திரிகையாளன் என்றால் செய்த தவறை மூடி மறைத்து எதிராளி மீது அடுத்த சேற்றை வாரி இறைப்பான்.

ஜூவியில் நேர்மையான பத்திரிகையாளர்கள் இருக்கிறார்கள் என்று வாசகர்கள் நம்புகிறார்கள்.அது தவறு என்பது இதழைப் பார்த்தவுடன் தெரிந்து விட்டது.

தியாகு சென்னையில் தான் இருக்கிறார் என்ற செய்தியோ மறுப்போ,விளக்கமோ அப்படி எதுவும் வெளியாகவில்லை.இத்தனைக்கும் தியாகு மக்கள் தொலைக்காட்சி அலுவலகத்தில் இருந்ததாக ஊடக நண்பர்கள் சொல்கிறார்கள்.

தியாகுவைத் தொடர்பு கொள்ள முயற்சித்தோம்.அவர் போன் எடுக்கவில்லை,பதில் தந்தால் பிரசுரிக்கத் தயாராய் இருக்கிறோம் என்ற அளவில் கூட செய்தி இல்லை.

நாட்டில் காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதைக்கு எல்லாம் தன்னால் தான் நடந்தது என்று கூச்சநாச்சமில்லாமல் உரிமை கொண்டாடும் ஜூனியர் விகடன் போன்ற பத்திரிகைகள் இதற்கு ஒரு வரி விளக்கம் கூட வெளியிடவில்லை.
-------

ஆனால் ”அர்த்தமுள்ள”அமைதி கடைபிடிக்கப்பட்ட அந்த இதழுக்கு அடுத்த இதழ் அதாவது தியாகு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட 7 நாட்கள் கழித்து 26-05-2012 சனிக்கிழமை கடைக்கு வந்தது.இதில் தான்.அதிக முக்கியத்துவம் அளித்து 3 ½ பக்கங்களில் வண்ணத்தில் தியாகு குறித்த செய்தியை வெளியிட்டுள்ளது.செய்தியை நன்கு கவனித்தால் அதிக இடப்பரப்பில் சிரத்தையுடன் கூடிய வடிவமைப்பு,விசாலமான லே அவுட்டில் செய்தி வண்ணத்தில் வெளிவந்துள்ளது தெரியும்.(இதே அளவு வார்த்தைகள் கொண்ட கட்டுரை வழக்கமாக 2 பக்கங்களில் முடிக்கப்படும்.)








இதில் உள்ள கிரிமினல் தவறுகளைப் பார்ப்போம்.


  • செய்தி தொடக்கப் பத்தியைக் கவனியுங்கள்.தாமரையின் பக்கம் நின்று எழுதப்பட்டது என்பது விளங்கும்.முதல் பத்தி மட்டுமல்ல.முழுப் பதிவும் அப்படித்தான்.இடையில் ஒரு பத்தி மட்டும் தியாகுவிற்கு ஆதரவாய் இருக்கிறது.நடுநிலை மருந்துக்கும் காணோம்.


மொத்த வார்த்தைகள் 740.இதில் தியாகுவுக்கு எதிர்ப்பான கருத்துக்கள் 500 வார்த்தைகள்.

இதில் குறித்த இந்தப் பகுதியை மட்டும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளுங்கள்.

இதில் விஜயலட்சுமி என்னும் பெண்மணியின் மீது அவரது கணவர் நிறைய குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார்.அதை தள்ளி வைத்து விட்டு படியுங்கள்.



தியாகு மீது விஜயலட்சுமியின் கணவர் சொன்ன குற்றச்சாட்டு இதுதான்.இதற்கு எதும் ஆதாரம் இருக்கிறதா..?நாடறிந்த ஒருவரைப் பற்றிச் சொல்லும் பொழுது இப்படித்தான் யார் என்ன சொன்னாலும் அதனை வெளியிடுமா ஜூவி..?

நாளையே நம்ம சீனி (அதாங்க சன் ஆப் பாலு)குறித்து யார் ஒரு புகார் சொன்னாலும் விபரம் கேட்காமல் துளி ஆதாரம் இல்லாமல் செய்தி வெளியிடுமா ஜூவி..?


  • தனக்கு தியாகு தூண்டுதலின் பேரில் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக முன்னாள் கணவர் சண்முகசுந்தரம் கூறியுள்ளார்.இது பொய் என்பது அடுத்த பத்தியில் புரியும்.தியாகுவின் வீட்டில் இது குறித்து 3 மாதங்களாக பிரச்சனை இருக்கிறது என்று எழுதி விட்டு ஆனால் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி 8 மாதங்கள் ஆகிறது என்கிறார்கள்.இதில் முரண்பாடு இருக்கிறதா இல்லையா..?
  • அடுத்த பத்தியைக் கவனியுங்கள்.ஏறத்தாழ எட்டு மாதங்களுக்கு முன்பே விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி இப்பொழுது அது விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது.அதற்குத்தான் விஜயலட்சுமியும் தியாகுவின் மகளான வழக்குரைஞர் சுதாகாந்தியும் வந்துள்ளனர்.புகைப்படத்தைப் பார்த்தால் அங்கு எடுக்கப் பட்டுள்ளது தெரிகிறது.


நம் கேள்வி இது தான்.
  • கணவன் மனைவி இருவரும் உறவில் இருக்கும் பொழுது ஒருவர் இன்னொருவரைப் பற்றி குற்றம் சொல்லலாம்.அதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கிறது.தார்மீக ரீதியில் மட்டுமல்ல,சட்டப்படியும்.

இதில் பாதிக்கப்பட்ட பெண்மணியான விஜயலட்சுமி ஜூவியிடம் கருத்துச் சொல்ல விரும்பவில்லை என்று சொல்லியுள்ளார்.ஆனால் கொடுமைக்கார கணவனான சண்முகசுந்தரத்திடம் இருந்து விஜயலட்சுமி விவாகரத்து கோரியுள்ள சண்முகசுந்தரம் தியாகு மற்றும் விஜயலட்சுமி மீது குற்றச்சாட்டுகள் என்ற பெயரில் அவதூறுகளை சொல்லியுள்ளார்.
  • விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் இருக்கும் பொழுது ஒருவர் இன்னொருவரைப் பற்றி ஊடகத்தில் தரக்குறைவாய்க் குற்றம் சொல்ல தார்மீக அடிப்படையில் மட்டுமல்ல,சட்டப்படியும் உரிமை இல்லை. இது ஜுவி ஆசிரியர் குழுவுக்குத் தெரியுமா..?

அதுவும் தியாகு மீது அவர் தெரிவித்துள்ள ஆதாரமற்ற குற்றச்சாட்டிற்கு ஜூவி மீது மட்டுமல்ல சண்முகசுந்தரத்தின் மீதும் தனி வழக்கே தாக்கல் செய்ய முடியும் என்பது ஜூவிக்குத் தெரியுமா..?



100 கோடி கொள்ளை அடிக்கப்பட்டாலும் சரி.பல பெண்களைக் கற்பழித்த குற்றச்சாட்டு உள்ளவரானாலும் சரி,நாட்டை அடகு வைத்த குற்றம் என்றாலும் சரி குற்றம் சாட்டப் பட்டவரின் கருத்தை வாங்கிப் பதிவு செய்வது தான் ஜூவியின் வழமை.அல்லது வழக்குரைஞரைத் தொடர்பு கொண்டு கருத்து வாங்கி வெளியிடுவார்கள்.

அல்லது

குறிப்பிட்ட நபரைத் தொடர்பு கொள்ள முடியவில்லையென்றால் தொடர்பில் வரவில்லை.அவர் கருத்துச் சொன்னால் பிரசுரிக்கத் தயாராய் இருக்கிறோம் என்ற குறிப்புடன் செய்தி வெளியிடப்படும்.

இங்கோ தியாகுவின் மகள் எங்கள் தந்தை தலைமறைவாக வில்லை.நீங்கள் தொடர்பு கொண்டால் கிடைப்பார் என்று சொல்லியும் ஜூவி நிருபர் படைகள் தியாகுவைத் தொடர்பு கொள்ள துளியும் அக்கறை காட்டவில்லையே…ஏன்..?

ஜூவிக்கு என்ன உள் நோக்கம்..? அல்லது முதல் பதிவில் செய்த தவறை நியாயப்படுத்த அடுத்தடுத்து தவறு செய்கிறதா..?

  • சுருக்கமாகச் சொன்னால் நடந்தது இதுதான்.

முதல் இதழில் தியாகு காணவில்லை என்று அவதூறுச் செய்தி.செய்தி வெளியான அன்று பொது நிகழ்ச்சியில் தியாகு கலந்து கொண்ட பின்னும் அடுத்த இதழில் மறுப்போ விளக்கமோ இல்லை.

அதற்கடுத்த இதழிலோ அதி முக்கியத்துவத்துடன் முந்தைய செய்தியை மேலும் மிகைப்படுத்தும் வண்ணம்ஆதாரமற்ற ஒரு செய்திப்பதிவு.அதிலும் தியாகுவின் தரப்புக் கருத்து வெளியிடப்படாமல்.

  • இது தானா தமிழர்களின் நாடித்துடிப்பான ஜூவியின் யோக்கியதை?

அனைத்து ஊடகங்களுடனும் இணக்கமாக நடந்து கொள்பவர் தான் தியாகு.குமுதம் ரிப்போர்ட்டரில் தனது கருத்தினையும் விளக்கத்தினையும் தியாகு பதிவு செய்துள்ளார்.அவர்களால் அணுக முடிந்த பொழுது ஜுவியினால் ஏன் முடியவில்லை..?(தியாகுவைக் காலி செய்ய வேண்டும் என்று எதும் தனி அசைன்மெண்ட்டா..)

ஜு.வி. க்கும் தியாகு எதிரானவர் அல்ல.நிறுவனர் பாலசுப்ரமணியன் காலத்தில் இருந்தே நெருக்கமானவர்.ஜூவியில் சுவருக்குள் சித்திரங்கள்,கம்பிக்குள் வெளிச்சங்கள் என இரண்டு தொடர்கள் எழுதியுள்ளார்.அதனை ஜூவி விற்று நன்கு காசு சம்பாதித்தது.சில வாரங்களுக்கு முன்பு கூட நானும் விகடனும் என்ற கட்டுரையில் நிறுவனர் பாலசுப்ரமணியன்,பதிப்பாளர் அசோகன் உட்பட பலரையும் அதிக அளவு பாராட்டித் தள்ளினார்.

  • அந்தப் பாராட்டின் இறுதிப்பகுதி இதுதான்.

தமிழீழம் என்றாலும், தாய்த் தமிழ் என்றாலும் விகடன் ஆற்றி வருவது ஒரு வகைச் சிறை மீட்புப் பணியே. அந்தப் பணியில் என் போன்ற எளியவனுக்கும் ஒரு பங்கு தந்துள்ள விகடனுக்கு நன்றி சொல்லி முடித்துக்கொள்ள முடியாது. வேலை இன்னும் மிச்சம் உள்ளதே!''

தியாகு உச்சி முகர்ந்து பாராட்டிய விகடன் தான் இப்பொழுது தியாகு நன்றி சொல்ல புதிய செய்தியை உலகுக்குத் தெரிவித்துள்ளது.

இனி நக்கீரன் யோக்கியதைக்கு வருவோம்.






சொன்னா நம்ப மாட்டீங்க என்னும் கிசுகிசு பகுதியில் முதலில் ஒரு கிசுகிசுவை வெளியிட்டது நக்கீரன்.இதைப் பார்த்து விட்டுத்தான் ஜூவி விரிவாக ஒரு அவதுறை வெளியிட்டது.

அதற்கடுத்த இதழில் நக்கீரன் தனது ஈரோடு நிருபர் ஜீவா தங்கவேல் முலம் ஒரு செய்திப் பதிவை வெளியிட்டுள்ளது.முழுக்க முழுக்க விஜயலட்சுமியின் கணவர் சண்முகசுந்தரம் தரப்புக் கருத்தினைப் பதிவு செய்து விட்டு தியாகு கருத்து அளித்தால் வெளியிடத் தயாராய் இருக்கிறோம் என்று இரண்டு பக்கச் செய்தியை வெளியிட்டுள்ளனர்.தாமரை காத்திருக்கிறார் என்ற வார்த்தைகளின் படி செய்தியின் மூலத்தை நாம் அறிய முடிகிறது.

ஏறத்தாழ ஜூனியர் விகடனுக்கு கேட்கப்பட்ட கேள்விகள் நக்கீரனுக்கும் நாம் எழுப்பிய கேள்விகள் தான்.எத்தனை கேள்வி கேட்டால் என்ன ?செவிடன் காதில் ஊதிய சங்கு தான்.

  • ஆனால் நக்கீரனுக்கு கூடுதல் கேள்வி ஒன்று இருக்கிறது.

இந்தச் செய்தியை எழுதியுள்ள ஈரோடு நிருபர் ஜீவா தங்கவேல் தன்னைப் போல பிறரையும் நேசித்து விட்டார் என்று நினைக்கிறோம்.

ஜீவா தங்கவேல் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்கனவே திருமணமாய்க் குழந்தையும் உள்ள ஒரு பெண்ணைக் காதலித்தார்.அதற்குப் பிறகு தான் அந்தப் பெண்மணி அவரது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றார்.அதே போல இப்பொழுது தியாகுவையும் நினைத்து இந்தச் செய்தியைப் பதிவு செய்திருக்கலாம்.மேலும் தியாகுவுக்கு எதிராய் இப்பொழுது கட்சியில் போர்க்கொடி தூக்கியுள்ள மோகன்ராஜ் ஜீவா தங்கவேலின் அறைத் தோழர்.வாரம் இருமுறை மது விருந்தில் பங்கேற்பவர் என்றும் ஈரோட்டில் இருந்து வரும் தகவல்கள் சொல்கின்றன..எல்லாம் சேர்ந்து இந்தச் செய்தி வெளிவந்திருக்கும் என நம்ப இடமிருக்கிறது.




  • இனி இறுதிப் பகுதி.....


நக்கீரன்,ஜூனியர் விகடன் பத்திரிகை அன்பர்களே
பத்திரிகை அறம்,இதழியல் தர்மம் எல்லாம் விட்டு விடுங்கள்.அதைப் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்காது.மீறி நாம் கேட்டால் கிலோ என்ன விலை..?அது எந்தக் கடையில் கிடைக்கும் என்று நீங்கள் வினவக் கூடும்..!

8 மாதங்களுக்கு முன்பு விவாகரத்து கோரி வழக்குத் தாக்கல் செய்துள்ள ஒரு பெண்மணியை பொது வெளியில் நடமாடும் நபருடன் எவ்வித ஆதாரமும் இல்லாமல் தொடர்புபடுத்தி எழுதுவது தான் இதழியல் ஜனநாயகமா..?அறமா..?

செய்தி வெளியாக உண்மைத்தன்மை வேண்டாம்.நிருபரையோ அல்லது ஆசிரியர் குழுவில் உயர் பொறுப்பில் யாரையும் தெரிந்திருந்தால் போதுமானது,நாம் நினைத்த செய்தி நினைத்தபடி வந்துவிடும் என்பது மீண்டும் உறுதியாகி உள்ளது.


தியாகு கருத்து எதுவும் இல்லை.தாமரை கருத்து எதுவும் இல்லை.குறிப்பிட்ட பெண்மணி விஜயலட்சுமி கருத்து எதும் இல்லை.ஆனால் சண்முகசுந்தரத்தின் ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்ற ஒன்றை மட்டும் வைத்துக் கொண்டு தொடர்ச்சியான பதிவுகள் இரண்டு இதழ்களிலும்.

தியாகுவின் முதல் மனைவி தாமரையின் நட்பு வட்டாரத்தைத் தொடர்பு கொண்டு,” என்ன உதவி வேண்டுமானாலும் செய்யத் தயார்” என்று சொல்கிறார் என்று எழுதும் ஜுவி..?ஏன் தாமரையின் முதல் கணவர் தியாகுவின் நட்பு வட்டாரத்தில் தொடர்பு கொண்டு உங்களுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் செய்யத் தயார் என்று சொல்கிறார் என்று எழுதவில்லை.?


  • ஒரு நாள் பரபரப்பிற்காக எழுதி விற்று விட்ட நக்கீரனும் ஜுவியும் அடுத்த வேலையைப் பார்க்கப் போய் விடுவார்கள்..?ஏற்கனவே கணவரால் பாதிக்கப்பட்ட விஜயலட்சுமி தனது எதிர்காலத்தை இனி எப்படி முடிவு செய்ய முடியும்>?

அவரது எதிர்காலம் இனி என்ன ஆகும்//?இந்த இட்டுக்கட்டிய செய்தியைப் பார்த்த பின்பும் அவருக்கு இனி ஒரு மகிழ்வான திருமண வாழ்வு அமையுமா..?


நாம் உண்மையை எழுதச் சொல்கிறோம்.தியாகுவிற்கும் அந்தப் பெண்மணிக்கும் இருப்பதாகச் சொல்லப்படும் தொடர்பிற்கு இரு இதழ்களும் எதும் ஆதாரம் காட்ட வில்லை.இவர்கள் மேற்கோள் காட்டுவது என் கணவர் கொடுமைக்காரர்,காமுகர்,அவரிடமிருந்து விவாகரத்து தாருங்கள் என்று யாரை நீதிமன்றத்தில் விஜயலட்சுமி குற்றம் சாட்டினாரோ அந்த சண்முகசுந்தரத்தின் வார்த்தைகள் தான்.

எழுதியவற்றில் ஆதாரம் இல்லாத பட்சத்தில் எதை எழுதினாலும் அது தவறு தான். ஜூவி,நக்கீரன் ஆசிரியர்கள் தங்களுக்குத் தெரிந்த பெண்கள் என்றாலும் இப்படித்தான் ஆராயாமல் செய்தி வெளியிடுவார்களா..?
  • சீனி சன் ஆப் பாலு மீதோ அல்லது கோபால் மீதோ யாரும் குற்றம் சாட்டினால் இப்படித்தான் செய்தி வெளியிடுவார்களா..?

  • இதற்கு என்ன தான் தீர்வு..?எதும் கிடையாதா..?


தியாகு தரப்பில் விசாரித்தோம்.

தியாகு சாதாரணமானவர் அல்ல.உச்சநீதிமன்றத்தின் கற்றறிந்த வழக்குரைஞரை விட அதிக அளவில் சட்ட நுணுக்கங்கள் தெரிந்தவர்.அவர் இரண்டு பத்திரிகைகளின் அவதூறுகளைச் சட்டப் படி விரைவில் எதிர்கொள்வார் என்று அவர் தரப்பில் நமக்குச் சொல்லப் பட்டது.செய்தி குறித்து அவர் தரப்பில் விளக்கத்தையோ,பதிலையோ கேட்டு அணுகாவிட்டால் நீதிமன்றத்திற்கு பதிப்பாளர்,ஆசிரியர் குழுவையே வர வைப்பார் என்றும் சொல்லப்பட்டது.
  • சரி சட்டம் என்ன சொல்கிறது..?
சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்குரைஞர் ஒருவரிடம் வினவியபொழுது அவர் சொன்ன கருத்து இது.

இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவு பிரிவு 502 என்ன சொல்கிறது என்றால்...

Sale of printed or engraved substance containing defamatory matter
Whoever. sells or offers for sale any printed or engraved substance containing defamatory matter, knowing that it contains such matter, shall be punished with simple imprisonment for a term which may extend to two years, or with fine, or with both/


இதன்படி அவதூறுச் செய்தி வெளியிட்ட ஜூனியர் விகடன்,நக்கீரன் இதழ்களின் மீது தியாகு அல்லது விஜயலட்சுமி ஆகியோர் தனித்தனியாக நோட்டீஸ் அனுப்பலாம்.அதன் பின்பும் மேற்கண்ட இதழ்கள் மன்னிப்போ,வருத்தமோ தெரிவிக்க வில்லை என்றால் நக்கீரன் பதிப்பாளர்,ஜூனியர் விகடன் பதிப்பாளர் ஆகியோர் தொடங்கி செய்தி எழுதிய நிருபர் வரை அனைவர் மீதும் வழக்குத் தொடுத்து மான நஷ்ட ஈடு கோரலாம்.

       கோபால்-நக்கீரன் பதிப்பாளர்.

   அசோகன்-ஜுனியர் விகடன் பதிப்பாளர்.


தொடரப்படும் வழக்கில் இவர்கள் வெளியிட்ட செய்தி அவதூறு என்று உறுதிப்படுத்தப்பட்டால் பதிப்பாளர் தொடங்கி,அச்சிட்டவர்,செய்தி எழுதிய நிருபர் வரை அதிகபட்சமாய் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட வாய்ப்பு உண்டு.

இவர்கள் எழுதிய செய்திக்கு வருத்தம் தெரிவிப்பார்களா..? இல்லை.....

Wednesday 23 May 2012

விகடன்+மதன்+நேர்மை=சுயநலம்




ஆனந்த விகடனில் இருந்து மதனுக்கு "கல்தா" கொடுக்கப்பட்டது பற்றி பத்திரிகை உலகில் இரு வேறு வகையில் வாத பிரதிவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

விகடன் செய்தது சரி. விகடன் தனது நடுநிலையைக்(!) காப்பாற்றி விட்டது என்று ஒரு பிரிவினரும்

மதன் நல்ல மனுஷர்(!)விகடனுக்கு நடுநிலை பற்றி பேச யோக்கியதை கிடையாது என்று மற்றொரு பிரிவினரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.





இதில் எது சரி..?


மதன் எழுத்துக்கள் பற்றிப் பார்ப்போம்.

மதனின் எழுத்துக்களின் மீது சராசரி வாசகனுக்கு இருந்த ஆர்வம் முடிந்து விட்டது.  ஆரம்ப கால கட்டத்தில் ஆங்கில நூல்களிலிருந்து உருவி, மொழியாக்கம் செய்யப்பட்டவைதான்  மதனின் எழுத்துக்கள்.

அப்பொழுது பத்திரிகையாளர்கள் மட்டத்தில்,”புக் பாயிண்ட் மூடியாச்சுன்னா மதன் அம்பேல்” என்று கேலியாகப் பேசப்படும்.

அதன்பின், இணையத்தில் இருந்து சுடப்பட்டு மதனின் பதில்களாகப் பிரசுரிக்கப் பட்டன.
இணைய வசதி பரவலாகிவிட்ட தற்காலத்தில், மதனின் எழுத்துகளுக்கான மதிப்பு மங்கி விட்டது.ஆனாலும் தனது பழைய பாணியிலான எழுத்து முறையையே மதன் தொடர்ந்து செய்து கொண்டிருந்தார்.

காலத்திற்கேற்றவாறு தன்னை உருமாற்றிக் கொள்ள மதன் தயார் இல்லை.நிர்வாகம் அவரை வெளியே தள்ளக் காத்திருந்தது.

தனிப்பட்ட முறையில் மதன் எப்படிப்பட்டவர் என்பதை விகடன் வளாகத்தில் சில பத்தாண்டுகளாகப் பணியாற்றும் ஊழியர்களிடம் கேட்டால் கதை கதையாய்ச் சொல்வார்கள்.

ஆனால் இதையெல்லாம் தாண்டி அவர் நேர்மையானவர் தானே என்று கேள்வி எழலாம்.

ஜெயா டிவியில் நடத்தும் நிகழ்ச்சிக்கு லட்சக்கணக்கில் தான் வாங்கும் பணத்திற்குப் பிரதிபலனாய் விசுவாசமாய் இருப்பதை, அறிவித்திருப்பதுதான் அந்தக் கடிதம்.இதற்கு மேல் என்ன நேர்மை இருக்க முடியும்.?

இந்த நிலையில் காக்கா உட்கார பனம்பழம் விழுந்தகதையாய் மதனைக் காலி செய்யக் காத்திருந்த நிர்வாகம் அந்தக் கடிதத்தை கெட்டியாகப் பிடித்துக் கொண்டது.ஆகவே மதன் வெளியேற்றப் பட்டதற்கு வருத்தப் பட ஒன்றுமில்லை.

இனி விகடன் நிறுவனத்தின் யோக்கியதையைப் பார்ப்போம்.




மதனுக்கு கல்தா கொடுத்து, தன்னை நடுநிலையானவனாய்க் காட்டிக் கொள்ளும் விகடன் நிறுவனம் அதற்குத் தகுதியானது தானா..?

விகடன் நிறுவனத்தின் ”நடுநிலை” குறித்து நாம் அவ்வப்பொழுது சில பதிவுகள் வெளியிட்டிருக்கிறோம்.

ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஆ.ராசாவைக் கடித்துக் குதறி, அவருக்கு எதிராய் விரட்டி விரட்டிச் செய்தி வெளியிட்ட நிறுவனம்(சென்ற வார கழுகார் பதில்களில் கூட ஆ.ராசாவுக்கு எதிராய் இரண்டு கேள்வி பதில்கள் வெளியிடடுள்ளது.)தயாநிதி மாறனுக்கும் கலாநிதி மாறனுக்கும் எதிராய் செய்தி வெளியிடாமல் பம்மிக் கொண்டிருக்கிறது.தயாநிதி மீதான விமர்சனத்தை செய்த ஒரு செய்தியில் கூட கோழி தனது குஞ்சை மிதிப்பது போல செய்து விட்டு ஓடி விட்டது.இதெற்கெல்லாம் என்ன காரணம் இருக்க முடியும்?






சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று தொலைக்காட்சித் தொடர்களைத் தவிர..?அதிலிருந்து கொட்டிக் கொண்டேயிருக்கும் சில கோடிகளைத் தவிர..?


ரூ.200 கவர் வாங்கிக்கொண்டு காசு கொடுத்தவனுக்காக 4 வரிச் செய்தி எழுதும் நிருபரின் நடத்தை அயோக்கியத்தனம் என்றால் சில ஆயிரம் வாங்கிக் கொண்டு செய்தியை இருட்டடிப்பு செய்யும் நிருபரின் நடத்தை அஒக்கியத்தனம் என்றால் விகடனின் இந்த ”யோக்கியதை”க்குப் பெயர் என்ன..?


அப்படிப்பட்ட நிறுவனம் நடுநிலை பற்றியும் நியாயம் பற்றியும் பேசுவதற்குத் தகுதியானது தானா..? துளியும் தகுதி இல்லை.

ஆகக் கூட்டிக் கழித்துப் பார்த்தால்

மதன் மற்றும் விகடன் இரு தரப்பும் பயன்படுத்தும் ”நடுநிலை” என்ற வார்த்தைக்கு

நேர்மையான அர்த்தம் சுயநலம்.




தினமணி சிறந்த நாளிதழ்-வாசகர்கள் சொல்கிறார்கள்..!





தமிழ் நாளிதழ்களில் ஓரளவுக்கு சிறந்த நாளிதழ் எது?என்று நமது வாசகர்களிடையே ஒரு கருத்துக் கணிப்பு நடத்தினோம்.147 பேர் வாக்களித்துள்ளனர்.

அதில் தினமணி முதலிடத்தைப் பிடித்துள்ளது.ஒருவருக்கு இரண்டு நாளிதழ் பிடித்திருந்தாலும் இரண்டு வாக்குகள் அளிக்கலாம்.

தினமணி-69 வாக்குகள்

தினத்தந்தி-46 வாக்குகள்

தினமலர்-26 வாக்குகள்

தினகரன் -17 வாக்குகள்

இதர-6 வாக்குகள்.





Sunday 20 May 2012

சசிரேகா சம்பளம் தினமணியில் திருட்டு..?



நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை:நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள் என்று சொல்லிக் கொண்டு வெளிவரும் தினமணி நாளிதழ் அலுவலகத்திலேயே திருட்டு நடைபெற்று உள்ளது என்றால் அதிர்ச்சியாக இருக்கிறதா..?

பறிகொடுத்த பத்திரிகையாளரின் பெயர். சசிரேகா.சம்பவத்தைப் பற்றி அறிந்து கொள்வதற்கு முன் அந்தப்பெண்ணின் பின்னணி கொஞ்சம் உங்களுக்கு.

சசிரேகா தஞ்சை மண்ணைப் பூர்வீகமாய்க் கொண்டவர்.பத்திரிகைத் துறையின் மீது உள்ள ஆர்வத்தால் துறைக்குள் வந்தார்.முதலில் தஞ்சையில் நக்கீரன் செய்தியாளராய்ப் பணியைத் தொடங்கினார்.அதன்பின் சென்னையில் தினமலர் அலுவலகத்தில் பணிக்குச் சேர்ந்தார்.அங்கிருந்து தினகரன் நாளிதழில் பணியில் சேருகிறார்.

அவர் பணியில் இருந்த பொழுது தான்  தினகரன் ஊழியர்கள் மதுரையில் 3 பேர் பட்டப்பகலில் எரித்துக் கொலை செய்யப்பட்டனர்.மதுரையில் உள்ள கட்டப்பஞ்சாயத்து,ரவுடிக்கும்பல் தலைவர் இதன் பின்னணியில் இருப்பதாக பத்திரிகையாளர்கள் எண்ணினர்.அந்த சம்பவத்தைக் கண்டித்தும் கும்பல் தலைவனைக் கைது செய்யக்கோரியும் பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.அதில் சசிரேகா முதல் ஆளாகக் கலந்து கொண்டு நடுரோட்டில் அமர்ந்து துணிச்சலாக கொலை செய்த ரவுடிக்கும்பலுக்கு எதிராய் முழக்கங்களை எழுப்பினார். .(அந்த புகைப்படம் தான் மேலே நீங்கள் கண்டது)அதனைக் கண்ட பிற பத்திரிகையாளர்களே ஆச்சரியப்பட்டனர்.

அவர் பணியில் இருக்கும் பொழுது தீனதயாள் இஞ்சினியரிங் கல்லூரியில் நடைபெற்ற முறைகேட்டினை எதிர்த்து ஒரு செய்தியை எழுதினார்.அதனைக் கண்ட அக்கல்லூரி உரிமையாளர் டி.டி.நாயுடு தொலைபேசியில் சசிரேகாவை அழைத்துப் பேசினார்.(இந்த டி.டி.நாயுடு தான் அனைத்துப் பொறியியல் கல்லூரிகள் சங்கத் தலைவர்.நாடு உருப்படுமா..?)அப்பொழுதும் துணிச்சலாக தனது நிலையை விவரித்தார்.தவறு என்றால் ஆதாரத்துடன் சொல்லுங்கள்.மறுப்புச் செய்தி வெளியிடுகிறோம் என்று தெரிவித்தார். 500 க்கும் ஆயிரத்துக்கும் பல்லிளிக்கும் ஊடகவியலாளர் மத்தியில் கல்லூரி முதலாளி அழைத்துப் பேசிய பின்பும் சசிரேகா தைரியமாக தான் எழுதிய செய்தியின் பக்கம் நின்றார்.
--
டி.டி.நாயுடு


அந்த சம்பவத்துக்குப் பின் சில நாட்கள் கழித்து தீனதயாள் பொறியியல் கல்லூரி சார்பில் ஒரு பிரஸ் மீட் நடைபெற்றது.அதில் தினகரன் நாளிதழ் சார்பில் சசிரேகா கலந்து கொண்டார்.அங்கு சென்று பல கேள்விகளை எழுப்பினார்.

“உங்கள் கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாய் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறதே?”

அரசு நிர்ணயித்த அளவை விட  அதிகம்கட்டணம்வசூல் செய்கின்றீர்களாமே..”?

போன்ற கேள்விகளைக் கேட்டார்.இது கல்லூரி முதலாளி டி.டி.நாயுடுவுக்கு எரிச்சலை ஊட்டியது.பிரஸ்மீட் முடிந்த அடுத்த நிமிடம் தினகரன் நாளிதழ் C.E.O.ஆர்.எம்.ஆர்.ரமேஷூக்கு போன் போட்டார்.”உங்க ரிப்போர்ட்டர் கவர் கேட்டாரு.கொடுக்கலைன்ன உடனேயே கண்டமேனிக்கு கேள்வி கேட்குறாரு” என்று புலம்பினார்.(ஆனால் உண்மை ரமேஷூக்குத் தெரியாதா என்ன?)

உடனே ரமேஷ்,”அந்த ரிப்போர்ட்டர் வந்தவுடன் என்னை வந்து மீட் பண்ணச் சொல்லுங்க” என்று .ரிஷப்ஷனில் சொல்லி விட்டார்.

அலுவலகத்தில் நுழைந்தவுடன் சசிரேகா நேரே ஆர்.எம்.ஆர்.ரமேஷைச் சந்திக்கச் சென்றார்.

”என்னங்க கவர் கொடுக்கலைன்னா உடனே எடக்கு மடக்கா கேள்வி கேட்குறீங்களாமே” என்றார்.கடுமையான கோபம் வந்தது சசிரேகாவுக்கு.

யார் சொன்னா உங்ககிட்ட.சொன்னவனை என் முன்னாடி நிறுத்துங்க.அவனை நானே கேள்வி கேட்கிறேன்.என்று கோபப்பட்டார்.ஆனால் ரமேஷ் மிகவும் அமைதியாகி,சரி சரி போங்க நான் பார்த்துக்குறேன் என்று சொல்லி அனுப்பி வைத்தார்.

கீழே வந்தவுடன் தனது தொலைபேசியில் இருந்து சுயநிதிக் கல்லூரி வியாபாரி நாயுடுவுக்கு போன் அடித்தார், சசிரேகா. ஆனால் எதிர்முனை எடுக்கப்படவில்லை.உடனே அருகில் இருந்த ரிப்போர்ட்டரிடம் இருந்து போனை வாங்கி மறுபடியும் நாயுடுவுக்கு பேசினார். எடுத்தவுடன் ஏக வசனத்தில் அர்ச்சனை. நாயுடுவுக்கு காது முழுவதும் இரண்டு நாளுக்கு வலித்தது.


ஆர்.எம்.ஆர்.ரமேஷ்


அரண்டு போன நாயுடு திரும்பவும் ரமேஷூக்கு போன் செய்து புகார் பத்திரம் வாசித்தார்.திரும்பவும் ரமேஷ் அழைத்து இப்படி தொடர்ந்து பண்ணினால் உன்னை வேலையை விட்டு டிஸ்மிஸ் பண்ணிடுவேன் என்று எச்சரித்தார்.(அது சரி எதுக்கு ரமேஷ் கொஞ்சமும் யோசிக்காமல் நாயுடுவுக்கு வக்காலத்து வாங்குறார் என்று நீங்கள் யோசிக்கக்கூடும்?ரெண்டு பேரும் ஒரு ஊர்க்காரர்கள்.அதோடு மட்டுமல்ல மணவாடுக்கு மணவாடு.இதுக்கு மேல என்ன வேணும்.பாதிக்கப்பட்ட பத்திரிகைகாரன் பக்கம் எவன் இருப்பான்?)

உடனே கோபமான சசிரேகா நீங்க என்ன டிஸ்மிஸ் பண்றது,இப்படி பிராடுகளுக்கு வக்காலத்து வாங்குற இந்த நிறுவனத்தில் வேலை பார்க்குறதை விட வீட்ல சும்மா இருக்குறது பெட்டர் என்ற படி ராஜினாமா கடிதத்தை நீட்டினார்.

இவர் தான் சசிரேகா.

அதன்பின் கொஞ்சநாளில் தினமணியில் செய்தியாளர் வேலைக்குச் சேர்ந்தார்.இப்படிப்பட்ட துணிச்சலும் நேர்மையும் கொண்ட சசிரேகாவிடமே ஒரு பேர்வழி தினமணி அலுவலகத்திலேயே கைவரிசை காட்டி திருடி விட்டான் என்றால் அந்த பலே திருடனை என்ன செய்வது..?.


இவ்வளவு நாள் தினமணியில் வேலை பார்த்த பின்பு தனது சொந்தக் காரணங்களுக்காய் கடந்த மாதம் ராஜினாமா செய்துள்ளார்.அதனை முறைப்படி ஒரு மாதம் முன்பே அளித்துள்ளார்.(இவர் செய்த பிழை என்னவென்றால் ராஜினாமா கடிதத்தில் தேதியைக் குறிப்பிட மறந்தது தான்) அது அலுவலகத்தில் சிலருக்கு வசதியாகிப் போனது.அவரது ராஜினாமா கடிதத்தை உடனே வாங்கிக் கொண்ட நிர்வாகம் மாதக் கடைசி நாள் வரைக்கும் அவரது உழைப்பை வாங்கிக்கொண்டது. ஆனால் அவருக்குத் தரப்படவேண்டிய அந்த மாதச் சம்பளத்தை இன்றுவரை கொடுக்கவில்லை.பலமுறை கேட்டும் அவரது கணக்கில் வந்து சேரவில்லை.

சம்பளத்தை யார் திருடியது என்று இன்றுவரை தெரியவில்லை.தினமணி நிர்வாகத்திற்கு இது தெரியுமா இல்லை.நிர்வாகமே அதற்கு உடந்தையா என்றும் தெரியவில்லை.


சசிரேகா
வைத்தியநாதன்


ஸ்பெக்டரம்,போபர்ஸ் ஊழலை எல்லாம் அக்குவேறு ஆணிவேறாய் அலசி ஆராய்ந்த அலுவலகத்திலேயே இப்படி ஒரு திருட்டா? என்று அங்கு பணியாற்றுவோர் அதிர்ச்சி ஆகி உள்ளனர்.


சமயமும் அறமும் தேசியமும் தழைத்தோங்கும் இடத்தில் நடைபெற்ற திருட்டு  தினமணி பக்தர்களையும் சினத்துக்குள்ளாக்கியுள்ளது.

திருட்டு விரைவில் அம்பலத்திற்கு வருமா..?ஆசிரியர் வைத்தியநாதன் தான் தக்க பரிகாரம் காண வேண்டும்.செய்வாரா..?




Friday 11 May 2012

பிரகாஷ் காரத்தின் ஆனந்த விகடன் பேட்டி ஒரு என்சைக்ளோபீடியா....!


போஸ்ட் மார்ட்டம்-புதிய பகுதி.

இதழ்களில் வரும் நேர்காணல்,திரை விமர்சனம்,கட்டுரை,செய்திப்பதிவு,துணுக்கு போன்ற ஏதாவது ஒரு செய்தியை எடுத்துக்கொண்டு அதனை தனித்தனியாக, ஊர் பாஷையில் சொல்லப் போனால், அக்குவேறு ஆணிவேறாக அலசி ஆராயும் பகுதி இது.இந்தப் பகுதி அட்டவணைப்படி வெளிவராது.எப்பொழுதாவது வெளிவரும்.

இனி ரெடி ஸ்டார்ட்..

முதலில் நாம் எடுத்துக்கொண்ட பதிவு ஒரு நேர்காணல். மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் அவர்களுடனான நேர்காணல் ஆனந்த விகடன் தலைமை நிருபர் கவின் மலர் என்பவரால் எடுக்கப்பட்டு 15-05-2012 தேதியிட்ட இதழில் வெளிவந்துள்ளது.

அதனைப் பார்ப்பதற்கு முன் நேர்காணல் குறித்த பொது வரையறையைப் பார்ப்போம்.

ந்த ஒரு நேர்காணலும் புதிதான ஒரு செய்தியை அதன் வாசகர்களுக்குத் தெரியப் படுத்துவதாக இருக்க வேண்டும். பேட்டி அளிப்பவருடன் ஒரு விவாத நோக்கிலும் விமர்சன நோக்கிலும் இருக்க வேண்டும்.நேர்காணல் கொடுப்பவர் சொல்வதை அப்படியே வாந்தி எடுப்பதாக இருக்கக் கூடாது. நாளிதழ்கள் மற்றும் திரைத்துறை பத்திரிகைகளுக்கு வேண்டுமானால் இதன் அளவுகோல் சற்று மாறலாம்.

அதைப் போல அரசியல் பிரபலங்களைப் பேட்டி காணச் செல்லும் பொழுது அன்றைய நிகழ்வு வரைக்கும் அறிந்து வைத்துக் கொண்டு பேட்டிக்குச் செல்வதும் அவர் தொடர்புடைய அனைத்தையும் அவதானித்துச் செல்வதும் மிக முக்கியமானது.

நாம் பேட்டி காண்பது காசு கொடுத்துப் படிக்கும் நமது வாசகனுக்காகத் தானேயொழிய யாரைப் பேட்டி காணச் செல்கிறோமோ அவர்களுக்காக அல்ல.ஆகவே இந்தக் கேள்வி கேட்டால் அவர் கோபித்துக் கொள்வாரே,அடுத்த பேட்டி கிடைக்காதே,பேட்டிக்கு உதவி செய்த நண்பர் வருந்துவாரே என்று நினைத்து அங்கு அமைதியாகப் பதிலை வாங்கி வருவது வாசகனை மடையனாக நினைக்கும் செயல்.இது நிருபரின் தொலைபேசி எண்ணை பேட்டி அளித்தவர் பதிவு செய்ய இது உதவுமே தவிர தொழில் முறையில் அவருக்கு இருக்கும் மதிப்பு போய்விடும்.

இனி போஸ்ட் மார்ட்டம் பகுதிக்குச் செல்வோம்.

ஆனந்த விகடனில் வெளிவந்த பிரகாஷ் காரத் நேர்காணல் இதுதான்.இதனைப் படித்து விடுங்கள்.



இனி இதில் உள்ளவற்றை ஒவ்வொன்றாய் விமர்சன நோக்கில் ஆராய்வோம்.



இதில் தோழர் என்.வரதராஜனின் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.இவ்வாறு குறிப்பிட்டது (இந்த சொல்லாடல் நமக்கு உவப்பானதாக இருந்தாலும்)தவறானது.

ஏனென்றால் அனைவரும் படிக்கும் பத்திரிகையில் கட்சிகளுக்கு ஏற்பவோ தனது விருப்பங்களுக்கு ஏற்பவோ சொற்களைப் பயன்படுத்தக் கூடாது.மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சியின் மறைந்த தமிழ் மாநிலக்குழு செயலாளர் என்.வரதராஜன் என்று சொல்வது தான் சரியானது.

ஏனென்றால் நாளைக்கு அன்பில் தர்மலிங்கம் படத்திறப்பு நிகழ்ச்சியில் கருணாநிதி கலந்து கொண்டார் என்றால் உடன்பிறப்பு அன்பில் தர்மலிங்கம் என்றோ,
கோல்வால்கர் படத்திறப்பு விழாவில் அத்வானி கலந்து கொண்டார் என்றால் சுயம்சேவக் கோல்வால்கர் என்றோ ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியாக நிருபர் எழுத முடியாது.அது சரியானது அல்ல.பொதுவான அடையாளம் தான் பத்திரிகையாளனுக்குத் தேவை.ஆகவே இதைத் தவிர்த்திருக்க வேண்டும்.

இனி இந்தப் பகுதியைப் பாருங்கள்.



கேள்வி சரியான கேள்வி தான்.ஒரு அரசியல் கட்சித் தலைவராக பிரகாஷ் காரத்தும் தனது பதிலைச் சொல்லியிருக்கிறார்.

ஆனால் பதிலைக் கேட்டவுடன் நிருபராக ஒரு எதிர்க் கேள்வியை கேட்டிருக்க வேண்டும்.கேள்வி இப்படிக்கூட இருந்திருக்கலாம்.

அ)உங்கள் ஆட்சியிலும் நிறைய படுகொலைகள் நடந்தனவே?உங்கள் கட்சித் தொண்டர்கள் மாவோயிஸ்டுகள் மீதும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் மீதும் எத்தனையோ தாக்குதல் தொடுத்துள்ளார்களே? இது குறித்து உங்கள் கருத்து என்ன?


ஆ)பேராசிரியரைக் கைது செய்ததனால் கருத்துச் சுதந்திரம் குறித்துக் கவலை கொள்கின்றீர்கள்.ஆனால் நந்திகிராமில் 14 பேர் சுடப்பட்டு இறந்தார்களே, அதை எப்படி நியாயப் படுத்துவீர்கள்?

ஆனால் விகடன் நிருபரோ கேள்வி கேட்கவில்லை.பதிலில் திருப்தியாகி அடுத்த கேள்விக்குத் தாவி விட்டார்.சரி போகட்டும்.அடுத்த கேள்வியைக் கவனியுங்கள்.



இந்தக் கேள்வியே தவறு.

கூடங்குளம் பிரச்சனையில் உங்களின் நிலை ஏன் மக்களுக்கு விரோதமாக இருக்கிறது என்று தான் இருக்க வேண்டும்.ஆனால் நிருபர் வேறு ஒரு இடத்தில் கேள்வியைத் தொடங்குகிறார்.சரி போகட்டும்.

அரசியல் வாழ்வில் நிருபர்களிடம் எத்தனையோ கடினமான சந்தர்ப்பங்களைச் சந்தித்த பிரகாஷ் காரத்துக்கு இதெல்லாம் எம்மாத்திரம்?

வளாவளா கொலாகொலா என்று பதில் அளிக்கிறார்.குறிப்பாக அச்சுதானந்தன் குறித்து பிரகாஷ் காரத் தவறான பதில் சொல்லி நழுவிப் போகிறார்.அவரது பதிலுக்குப் பின் அதிலிருந்தே பல எதிர்க் கேள்விகள் கேட்டிருக்கலாம்.

அ) மத்தியக் கமிட்டி எடுத்த முடிவை மீறிய அச்சுதானந்தனை எச்சரித்து நோட்டீஸ் அனுப்பியதாக ஊடகங்களில் செய்தி வந்ததே,அது குறித்துக் கூறுங்கள் என்றோ?


ஆ)ஜெய்தாபூரில்உள்ள அணு உலை தொழில்நுட்ப ரீதியில் பாதுகாப்பற்றது என்பதால் அதனைஎதிர்க்கிறோம்.,கூடங்குளம் அணு உலையில் உயர் தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளதால் அது பாதுகாப்பானது ஆகவே அதை ஆதரிக்கிறோம் என்றும் சொல்கின்றீர்களே,நீங்கள்  ஜெய்தாபூரிலும் உயர் தொழில்நுட்பம் பயன்படுத்தச் சொல்லித் தானே போராட்டம் நடத்த வேண்டும் ஏன் அங்கு அணு உலையைஒட்டுமொத்தமாக எதிர்க்கின்றீர்கள்.ஏன் இந்த இரட்டை வேடம்?


என்றோ கேள்வி கேட்டிருக்கலாம்.ஆனால் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை.அடுத்து ஒரு கேள்விக்குத் தாவுகிறார் நிருபர்.(நாம் என்ன செய்ய முடியும்?காசு கொடுத்து இதழை வாங்கித் தொலைத்து விட்டோமே..!)


இது ஒரு அபத்தமான கேள்வி.பிரகாஷ் காரத்தின் பதிலில் உள்ள இரட்டைவேடம் உங்களுக்கும் எனக்கும் தெரிந்தது தான்.அதை விட்டு விடுவோம்.நிருபர் அதுகுறித்துக் கேட்ட கேள்வி தான் தவறு.

நேர்காணல் செய்த சமயத்தில் முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடர்பான நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் கமிட்டி அறிக்கை சமர்ப்பிக்கப் பட்டு விட்டது. அணை பாதுகாப்பானது என்று சொல்லப்பட்டு விட்டது.இதனை முன் வைத்துத் தான் கேள்வி கேட்கப்பட்டிருக்க வேண்டும்.


நீதிபதிஆனந்த் கமிட்டி அறிக்கைக்குப் பின் உங்கள் நிலை என்ன?இனிமேலாவது அணையின் நீர் மட்டத்தை உயர்த்துவது தொடர்பான தமிழகத்தின் உரிமையை ஏற்றுக் கொள்வீர்களா?
என்று கேட்டிருக்கலாம்.ஆனால் நிருபர் 30 வருடங்களாக முல்லை பெரியாறு விஷயத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினர் பற்றி பாமர மக்களுக்கு நன்கு தெரிந்த விஷயத்தையே கேள்வியாக்கியுள்ளார்.
பிரகாஷ் காரத்தும் அதே பல்லவியைப் பாடியுள்ளார்.அது கூடப் பரவாயில்லை.அவரின் பதிலில் இருந்தே அடுத்த கேள்வியையாவது கேட்டிருக்கலாம்.
கேரள மக்களின் அர்த்தமற்ற‌ பயத்தைப் போக்க வேண்டியது கம்யூனிஸ்டுகளின் கடமையல்லவா?ஆனால் நீங்கள் அதனை ஊதிப் பெருக்குகின்றீர்களே இதுதான் கம்யூனிஸ்டுகளின் பணியா என்று ?.

இத்தனைக்கும் ஆபிசில் ஆசிரியர்,பொறுப்பாசிரியர் உட்பட பாதிப்பேர் முல்லை பெரியாறு தண்ணீர் குடித்து வளர்ந்தவர்கள்.இதனைப் படிக்கும் மதுரைக்காரன் அவர்களைப் பற்றி என்ன நினைப்பான்?சரி போகட்டும்.

இனி அடுத்த கேள்வி பதிலைக் கவனியுங்கள்.





ஈழப்பிரச்சனையில் இவர்கள் நிலைப்பாடு ஊருக்கும் உலகுக்கும் தெரிந்தது தான். இந்த கேள்வியே கேட்கப்பட்டிருக்க வேண்டியதில்லை.இது தொடர்பாய் கேள்வி கேட்டுத்தான் ஆக வேண்டுமென்றால் இப்படிக் கேட்டிருக்கலாம்.

லெனின் அவர்களின் சுய நிர்ணய உரிமை குறித்து உங்கள் கருத்து என்ன? ஏன் அது ஈழத்திற்குப் பொருந்தாதா? இல்லையென்றால் லெனின் கொள்கை உங்களுக்குத் தொடர்பற்றதா?

ஆனால் கேட்கவில்லை.சரி போகட்டும்.

அப்பொழுதும் கூட பதிலில் இருந்து இன்னொரு எதிர்க் கேள்வி கேட்டிருக்கலாம்.

துரதிருஷ்டவசமாக என்று சொல்கின்றீர்களே?அதிர்ஷ்டம் துரதிர்ஷ்டம் என்ற சொல்லை போராடும் கம்யூனிஸ்ட் பயன்படுத்தலாமா?அநீதியை எதிர்த்துப் போராடுவது தானே உங்கள் க்டமையாக இருக்க முடியும்?

ஆனால் நிருபர் பிரகாஷ் காரத்தின் கேட்கக் கிடைக்காத பதிலில் திருப்தியாகி அடுத்த கேள்விக்குத் தாவுகிறார்.

நாமும் எதற்கடா இதைப் படித்துத் தொலைந்தோம் என்று யோசிக்கிறோம்.

விகடன்தலைமை நிருபர் கவின்மலர் எடுத்துள்ள நேர்காணலில் உள்ள நிறை குறைகளை மேலே கண்டோம்.இனி விகடன் நிருபர் செய்யத் தவறிய விஷயங்களைப் பார்ப்போம்.

அ)இப்பொழுது குடியரசுத் தலைவர் வேட்பாளர் தேர்வு குறித்து நாடு முழுவதும் விவாதம் நடந்து கொண்டிருக்கிறது.பிரணாப் முகர்ஜியும் அமீது அன்சாரியும் முன்னிறுத்தப் படுகிறார்கள்.இருவரும் வங்காளத்தைச் சேர்ந்தவர்கள்.இவர்களில் அமீது அன்சாரியை கம்யூனிஸ்டுகள் ஆதரிக்கக் கூடும் என்ற நிலை இருக்கிறது.

இந்த நிலையில் அது குறித்து ஒரு கேள்வியைக் கேட்டிருக்கலாம். அல்லது இந்தத் தேர்தலில் நீங்கள் யாரை ஆதரிப்பீர்கள் என்றாவது கேள்வி கேட்டிருக்கலாம்.

ஆ)விகடன் நேர்காணல் செய்யப்பட்ட காலகட்டத்தில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் கொல்கத்தா வருகையும் மம்தாவின் சந்திப்பும் உறுதிப் படுத்தப்பட்டுவிட்டது.இதனைக் கேள்வியாக்கி இருக்கலாம்.இது தோழர் பிரகாஷ் காரத்திற்கு சாதகமான கேள்வியும் கூட.

இ)நேர்காணல் செய்ததற்கு 20 நாட்களுக்கு முன்னர் கோழிக்கோட்டில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 20 ஆவது ஆண்டு விழாவில் பிரகாஷ் காரத் 3 ஆவது முறையாய் கட்சியின் பொதுச் செயலாளராய்த் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.அதன்பின் முதல்முறையாய் தமிழ்நாடு வருகின்றார்.அவருக்கு விகடன் சார்பில் வாழ்த்துச் சொல்லி தொடர்புடைய  ஒரு கேள்வியையும் கேட்டிருக்கலாம்.

உங்கள் கால‌த்தில் தான் கட்சி மிக மோசமான ஒரு பின்னடைவைச் சந்தித்திருக்கிற‌து.இதனை எப்படி மாற்றியமைக்கப் போகின்றீர்கள்? 

ஈ)இது எதையுமே கேட்காவிட்டாலும் பரவாயில்லை.டெண்டுலகரை நியமித்ததை ஏன் ஆதரிக்கின்றீர்கள் எனறாவது குறைந்த பட்சம் கேள்வி கேட்டுத் தொலைத்திருக்கலாம்.

மேற்கண்ட நான்கு கேள்விகளும் முக்கியமானது. இதற்குப் பதில் வாங்கியிருந்தால் தமிழ்ப் பத்திரிகையில் முதல்முறையாக விகடனில் பதிவு செய்யப்பட்டிருக்கும். தவற விட்டுவிட்டார்.அல்லது அவற்றில் கவனம் செலுத்தவில்லை.

ரிப்போர்ட்





ட்டுமொத்த நேர்காணலையும் ஒருமுறை படித்துப் பாருங்கள்.நேர்காணலுக்கான வரையறையில் இது அடங்கவில்லை.சொன்னதை அப்படியே எழுதி வந்துள்ளார் நிருபர்.இதற்கு ஸ்டெனோ கிராபர் போதும்.

புதிய செய்திகளும் எதுவும் இல்லை.தாம்பரம் கிறிஸ்டியன் கல்லூரியில் தான் படிச்சேன் என்பது உட்பட அனைத்தும் பழைய செய்திகள். மம்தா தொடர்புடைய 2 கேள்விகளும் பதில்களும் கட்சிப் பத்திரிகை படிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. பிற அனைத்துக் கேள்வி பதில்களும் சில‌ வருடங்களுக்கு முந்தைய காலகட்டத்தில் இருந்து அனைவராலும் கேட்கப்படுபவை.அதே பதிலைத் தான் நாமும் இந்த நேர்காணலில் படித்திருக்கிறோம். பிறகு என்ன நோக்கத்தில் இந்த நேர்காணல் இடம்பெற்றது என்று தெரியவில்லை.இதற்குப் பதிலாக பாசிமணி விற்கும் பெண்ணைப் பேட்டி கண்டு வெளியிட்டிருந்தால் நமக்கு புதிய செய்தி ஒன்றாவது கிடைத்திருக்கும் என்று உறுதியுடன் நாம் சொல்ல முடியும்.

எந்த ஒரு பிரத்யேக நேர்காணலும் வெளிவந்துள்ள இதழினை என்றும் நினைவு படுத்த வேண்டும்.அதிலும் விகடன் குழும இதழ்கள் trend setter என்று தங்களைக் கருதிக் கொள்பவை. அதற்கான உழைப்பையும் குறைந்தபட்சம் செலுத்தக் கூடியவை.ஆனால் இந்த நேர்காணலிலோ துளியும் அது காணப்படவில்லை.அதற்கான முயற்சியே தென்படவில்லை.

அபத்தம்,இம்சை
தலைமை நிருபர் கவின்மலர்
                                                       

இப்பொழுது உள்ள நிருபர்களிடம் காணப்படும் குறை என்னவென்றால் மிக விரைவாக தாங்கள் யாரைப் பேட்டி எடுக்க வேண்டும் என்று முடிவு செய்து விடுகிறார்கள்.அதன்பின் தனது நண்பர்கள் மூலமோ,சோர்ஸ் மூலமோ பிரபலங்களிடம் பேட்டிக்கும் ஒப்புதல் வாங்கி விடுகிறார்கள்.அலுவலகத்திலும் அனுமதி பெற்று பக்கங்களை ஒதுக்கி விடுகிறார்கள்.அவ்வளவு தான்.இந்த வாரம் நம்ம பைலைன் வருது என்று சந்தோஷப்படுகிறார்கள்.ஆனால் இதில் செலுத்தும் அக்கறையையும் ஆர்வத்தையும் பேட்டிக்கான தயாரிப்புக்களில் சிறிதும் செலுத்துவதில்லை.குறைந்த பட்சம் அன்றாட செய்தித் தாள்களைக் கூடப் படிப்பதில்லை.

இந்தப் பேட்டியையே எடுத்துக் கொள்ளுங்கள்.

பிரகாஷ் காரத் நேர்காணலை எவ்வளவோ சிறப்பாகச் செய்திருக்க முடியும்.தயாரிப்புக்களுடனும் முன்னேற்பாடுகளுடனும் சென்றிருந்தால் பிரகாஷ் காரத்திடம் இருந்து பல்வேறு விஷயங்களை வெளிக் கொணர்ந்திருக்க முடியும். வெகு சிலவற்றை நாமே சுட்டிக் காட்டினோம். பேட்டிக்குச் செல்லும் முன் அன்றாட நாளிதழ்களைப் படித்திருந்தாலோ,அல்லது இணையத்தைப் பயன்படுத்தியிருந்தாலோ ஓரளவுக்குச் சிறப்பாய் செய்திருக்க முடியும்.அப்படிச் செய்திருந்தால் விகடனின் சிறந்த நேர்காணலில் ஒன்றாக ஆகியிருக்கும். எத்தனையோ சிறப்பான முத்திரை பெற்ற நேர்காணல்கள் விகடனில் வெளிவந்துள்ளன. படிக்கும் அறிவார்ந்த வாசகனும் விகடனை வாங்கியதற்கு மகிழ்ந்திருப்பான்.இத்தனைக்கும் நேர்காணலுக்குச் சென்றவர் மாணவ நிருபர் அல்ல.விகடன் தலைமை நிருபர்.

அனைத்தையும் பரிசீலித்துப் பார்த்தால்,ஆனந்த விகடன்இந்த நேர்காணலுக்கு தலைமை நிருபரையும்,தலைமை புகைப்படக்காரரையும் அனுப்பியிருக்கத் தேவை இல்லை.கேள்விகளை அஞ்சலிலோ அல்லது மின்னஞ்சலிலோ அனுப்பிப் பதில் பெற்றிருக்கலாம்.அல்லது தீக்கதிர் நிருபரிடம் கேள்விகளைக் கொடுத்து பதில் வாங்கி வரச் செய்திருக்கலாம்.இரண்டு பக்கங்கள் வீணானது தான் மிச்சம்.

போஸ்ட் மார்ட்டம் ஒவர்.

இந்த நேர்காணலில் பாராட்டும் அம்சம் எதுவும் இல்லையா என்று நீங்கள் கேட்பது தெரிகிறது.அதுவும் இருக்கிறது.

விகடன் நிறுவனம் மாணவ நிருபர் திட்டம் ஒன்று நடத்துகிறதே.அதில் பங்கேற்பவர்களிடம் இதனை அளித்து ஒரு நேர்காணல் எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு இது ஒரு உதாரணம் என்று படிக்கச் சொல்லலாம்.


அம்புட்டுத்தான்.








Thursday 10 May 2012

அப்பாவிகளைக் கொல்பவன் அஞ்சா நெஞ்சனா..?


எரிக்கப்படும் தினகரன் அலுவலகம்

தயாநிதி மாறன்,மாறன்,முரசொலி

அழகிரி,தொடைநடுங்கி அழகிரி

கொலை,படுகொலை,ஹார்லிக்ஸ் திருடன்

போராடும் பத்திரிகையாளர்கள்


தினகரன்,கருணாநிதி




டந்த 2007 ஆம் ஆண்டு மே 9 ஆம் நாள் அன்றைய தமிழ்நாட்டு முதல்வர் முத்துவேலர் கருணாநிதி குடும்பத்து ஆதிக்கச் சண்டையில் மதுரை தினகரன் நாளிதழில் பணிபுரிந்த அப்பாவி ஊழியர்கள் ”அஞ்சாநெஞ்சன்” அனுப்பிய ரவுடிக் கும்பலால் படுகொலை செய்யப் பட்டார்கள்.துயரம் நிகழ்ந்து ஐந்து ஆண்டுகள் நிறைவு அடைந்து விட்டது.

உயிர் நீத்த மூவருக்கும் அஞ்சலி...!

கோவலன் கொலையுண்டதற்காய் கண்ணகி மதுரை நகரத்தின் வீதிகளில் சிலம்பினை ஏந்திச்சென்று பாண்டிய மன்னனிடம் ”தேரா மன்னா செப்புவது உடையேன்”என நீதி கேட்டாள்.

கண்ணகி மதுரையை எரித்தாலும் தன் தவற்றை உணர்ந்து ”யானோ அரசன் யானே கள்வன்”எனக் கூறி தன்னுயிர் நீத்து பாண்டிய மன்னன் நீதியை நிலைநாட்டினான். இது காப்பியம் சொல்லும் காதை.

ஆனால் தமிழ்நாட்டை ஆண்ட கருணாநிதியிடம் நீதி கிடைத்ததா....?