Monday 6 October 2014

வன்னியர், தேவர் சாதி வெறியை எதிர்த்து நில்; நாயர் சாதி வெறிக்கு மண்டியிடு: விகடன் பாலிசி....!




சுதேச‌மித்திரனில் வேலை பார்த்த நண்பர் முன்பு நம்மிடம் பகிர்ந்த செய்தி இது.

திருநெல்வேலி மாவட்ட‌ எல்லையும் குமரி மாவட்ட‌ தொடக்கமுமான குமாரபுரம் அருகில் உள்ள ஒரு சிற்றூரில் 'குமரி மன்னன்' என்று ஒரு நண்பர் இருந்தார். உள்ளூரில் சொல்லத்தக்க அள‌வுக்கு நிலபுலன்கள் இருந்தாலும் வெளியூர் சென்று இன்னும் அதிகம் சொத்து சேர்க்க வேண்டும் என்ற ஆசை உண்டானது.அவரது ஊரில் வெளியூர் சென்று பொருளீட்டுபவர்கள் பெரும்பாலோனார் இருந்ததாலும் அவருக்கும் அந்த எண்ணம் ஏற்பட்டது.

1995 வாக்கில் அவர் கேரளாவுக்குச் சென்றார்.சிறிது காலம் கழித்து அவரிடம் இருந்து ஊருக்கு கடிதம் வந்தது. அனுப்புனர் பெயரில் குமரி மன்னன் என்ற பெயருக்குப் பதில்,'மன்னன் பிள்ளை' என்று இருந்தது.நண்பருக்கு ஆச்சரியம் உண்டானது. சிறிது காலம் கழித்து ஊருக்கு வந்த நண்பரிடம் இது குறித்து கேட்டதும் அவர் சொன்ன பதில்,

'குமரி மன்னன்' என்பதெல்லாம் இங்கு தான் கதைக்கு ஆகும்.அங்கு போனால் பிள்ளை பட்டம் தான் நம் பிழைப்புக்கு ஆகும்.அதனால் தான் சாதிப்பெயரைச் சேர்த்துக் கொண்டேன் என்பது.

கேரளாவின் சாதி வெறிக்கும் அங்கு இன்றும் சாதி அடுக்குமுறையின் படி தான் மனிதர்கள் மதிக்கப்ப‌டுகிறார்கள்,அவர்கள் பிழைப்பைத் தீர்மானிப்பதில் சாதிக்கு முக்கிய இடம் இருக்கிறது என்பதற்கு நண்பர் சொன்ன இச்சம்பவம் எளிய எடுத்துக்காட்டு. தமிழ்நாட்டை விட மலையாளத்தில் ஆதிக்க சாதி வெறியர்கள் உச்சாணிக்கொம்பில் இருந்து அனைத்து மட்டங்களிலும் அதிகாரத்தைச் சுவைக்கிறார்கள் என்றும் புரிந்து கொள்ளலாம்.

மலையாள நாட்டில் தான் இந்த‌ நிலை என்று இல்லை.ஆதிக்க சாதி மலையாளிகள் எங்கு சென்றாலும் தங்கள் சாதியை நேரடியாகவும் மறைமுகமாகவும் தூக்கிச் சுமக்கிறார்கள் என்பதற்கு இன்னொரு எடுத்துக்காட்டு.
*
மிழ்நாட்டின் திரைத்துறையில் கவுதம் என்றொரு இயக்குனர் 'மின்னலே' என்றொரு திரைப்படத்தை இயக்கினார்.படத்திற்கு ஓரளவு வரவேற்பு.

ஓரளவு வரவேற்பு கிடைத்ததும்,அதன்பின் கால ஓட்டத்தில் தமிழகத்தின் முக்கிய திரை இயக்குனராய் அறியப்பட்ட பின்பு அவரது பெயர் 'கவுதம் வாசுதேவ் மேனன்' என்று உருமாறியது. மேனன் என்பது தம்பியைப் போல நாயர் சாதி.

அடுத்த வேளைச் சோத்துக்கு வழி இல்லாமல் கோடம்பாக்கத்தில் உதவி இயக்குனராய் அலைந்து திரிந்த பொழுது எட்டணா காசுக்குப் பிரயோஜனபப்டாத‌ சாதி, சிறிது சிறிது தன்னை நிலை நிறுத்த தொடங்கிய பின்பு ஒட்டிக் கொண்டு விட்டது. இது கேரளாவின் ஒடுக்கப்ப‌ட்ட புலையர்,ஈழவ மக்களிடம் இல்லை.அவர்கள் எண்ணிக்கையில் அதிக அளவில் இருந்தாலும்,முன்பை விட அவர்கள் பொருளாதார,சமூக ரீதியாய் முன்னேறியிருந்தாலும் இன்னும்  தங்களை சாதியுடன் அழைத்து பெருமிதப்படும் அளவுக்கு எண்ணவில்லை.இது தான் யதார்த்தம்.

கவுதம் வாசுதேவ் மேனனின் வளர்ச்சியில் எந்தப்பங்கும் வகிக்காத அவர் சாதி,வளர்ந்த பின் அவர் பெயருக்குப் பின்னுட்டு வந்து விடுகிறது.இன்னும் சொல்லப்போனால் இத்துறையில் அவர் நீடிப்பதற்கும் இடத்தைத் தக்க வைப்பதற்கும் அவரது சாதி எந்தப்பங்கையும் வகிக்க முடியாது. ஆனால் சாதியைத் தூக்கிச் சுமப்பதை பெருமிதமாய்க் கருதுகிறார்கள்.

சாதி வெறிக்கு திரைத்துறை மட்டுமல்ல எழுத்துத் துறையும் விதிவிலக்கா என்ன..? அதிலும் சீரியலுக்கு வசனம் எழுதுவது திரைத்துறைக்கு அடுத்த படி தானே..?

அதே போன்ற எடுத்துக்காட்டைத் தான் நாம் சென்ற பதிவில் சொல்லியிருந்தோம்.

பிரியா என்றொரு பெண்மணி தனது பெயருக்குப் பின் தம்பி என்னும் நாயர் சாதிப்பிரிவைச் சேர்த்துக் கொண்டு நம்பர் ஒன் இதழ் என்று சொல்லிக் கொள்ளும் ஆ.விகடனில் "பேசாத பேச்செல்லாம்" தொடர் எழுதுவதையும் எழுதியிருந்தோம்.

 இணையத்தில் முற்போக்கு பேசுபவர்களின் போலித்தனத்தையும் த‌டித்தனத்தையும் நன்கு அறிந்ததாலேயே, பெண் போராளி என்பதாலும் மலையாளி என்பதாலும் இவரது சாதி வெறியை யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள் என்றும் அத்தொடரிலேயேஎழுதியிருந்தோம்.

நாம் நினைத்த படிதான் நடந்தது.

பிரியா தம்பி தொடர்அருமை என வியாழன் காலை முகநூலைத் திற‌ந்து பதிவிட்டு டேக் செய்பவரில் இருந்து யாரும் அதைக் கண்டுகொள்ள‌வில்லை. ஜேசுதாசின் ஜீன்ஸ் உடை குறித்த கருத்துக்கு பொங்குபவர்கள் இதனை வேண்டுமென்று திட்டமிட்டுக் கண்டுகொள்வது இல்லை.

இதையெல்லாம் நாம் எதிர்பார்த்து தானே இங்கு எழுதுகிறோம்.

இதோ இன்னொரு ஆதாரத்தை அளிக்கிறோம்.



இது பிரியாவின் திருமண சான்றிதழ் நகல்.

2006 ஆம் ஆண்டு சென்னை சாந்தோம் பதிவுத்துறைத் தலைவர் அலுவலக வளாகத்தில் பதிவு செய்யப்பட்டது. தமிழ்நாடு அரசு பதிவுத்துறை இணையப் பக்கத்தில் கூடக் கிடைக்கிறது.

இதில் பிரியா என்ற பெயரில் தான் சான்றிதழ் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இத்தனைக்கும் மேலாக அவரது தந்தை மற்றும் தாயாரின் பெயருக்குப் பின்னும் எந்த சாதிப்பட்டமும் இதர 'பெருமை'களும் இல்லை. பிரியாவின் தந்தைக்கு வயது கிட்டத்தட்ட 60 பிள‌ஸ் ஆக இருக்கும்.அந்தக்காலத்து ஆள். பழமையில் ஊறிய தந்தைக்கு இல்லாத சாதி வெறி,மூளை முழுவதும் 'புரட்சி'கர சிந்தனைகள்  நிரம்பி வழியும் பிரியாவுக்கு இருக்கிறது.இந்த லட்சண‌த்தில் ஊருக்கு 'உபதேசம்'.

அரசு பதிவு ஆவணங்களில் பதியப்படும் பெயர் நாம் அதற்காய் கொடுக்கும் ஆவணங்களை வைத்துத் தான் பதியப்படும். அப்படியானால் பிரியா சாந்தோம் அலுவலகத்தில் சமர்ப்பித்த அனைத்து ஆவணங்களும் பிரியா என்ற பெயரில் தான் இருந்திருக்கிறது.அதனால் தான் அவர்கள் அளித்த ஆவணம் பிரியா என்று வந்திருக்கிறது.

நாம் கேட்பது இது தான்.

2006  இல் 'பிரியா' என்ற பெயரில் அரசு ஆவணங்களில் இருக்கும் அவரது பெயர் எப்ப‌டி 'பிரியா தம்பி' ஆனது.?

எந்த கல்லூரியில் தம்பி என்ற பட்டம் கொடுத்தார்கள். ஒருவேளை இந்தக்கல்லூரியில் கிடைத்ததா..?(!) இது அப்பட்டமான சாதி வெறி இல்லாமல் வேறென்ன.? இன்னும் அவரது சாதி வெறிக்கு என்ன ஆதாரம் வேண்டும்..? பிரியா நாயர் எழுத்தை வியக்கும் முற்போக்கு வெண்ணைகள் தான் இதற்குப் பதில் சொல்ல வேண்டும்.
***

சாதிப்பெயரைச் சுமப்பவர்கள் குறித்து டாக்டர் அம்பேத்கர் கருத்து இது;



"ந்த சாதிப் பெயர்களைத் தொடர்வதற்கு வேறொரு ஆட்சேபøணயும் இருக்கிறது. மனிதர்களையும் பொருட்களையும் பற்றி மக்களின் எண்ணத்திலும் உணர்விலும் மனப்பாங்கிலும் ஏற்படும் மாறுதலே சீர்திருத்தம் என்பது. சில குறிப்பிட்ட பெயர்கள் சில குறிப்பிட்ட கருத்துகளோடும் உணர்வுகளோடும் இணைந் தவையாக உள்ளன. இந்தக் கருத்துகளும் உணர்வுகளுமே மனிதர்களைப் பற்றியும் பொருள்களைப் பற்றியும் தனிமனிதனின் மனப்போக்கு என்ன என்பதையும் தீர்மானிக்கின்றன.

பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் ஆகிய பெயர்கள் ஒவ்வொன்றும் திட்ட வட்டமான, நிலையான ஒரு கருத்தை ஒவ்வொரு இந்துவின் மனதிலும் ஏற்படுத்தி இருக்கின்றன. பிறப்பை அடிப்படையாகக் கொண்ட ஏணிப்படி அமைப்பே அந்தக் கருத்து.

இந்தப் பெயர்கள் நீடிக்கின்ற வரை பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் ஆகி÷யாரை பிறப்பின் அடிப் படையில் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பிரிவுகளாக ஏணிப்படி வரிசையில் எண்ணிப் பார்க்கிற போக்கும், அதற்கு ஏற்றபடி நடந்து கொள்கிற போக்கும் இந்துக்களிடம் தொடரத்தான் செய்யும்.

இந்துக்களின் சிந்தனை யில் இந்தப் போக்கு இல்லாமல் போவதற்குப் பயிற்றுவித்தாக வேண்டும். ஆனால், பழைய சாதி முத்திரைகள் தொடர்ந்து நீடித்து மனிதனின் மனதில் பழைய கருத்துகளையே நினைவுபடுத்திக் கொண்டிருக்கையில் இது எப்படிச் சாத்தியம்?

மக்களின் மனதில் புதிய கருத்துகள் பதிய வைக்கப்பட வேண்டுமென்றால், மக்களுக்குப் புதிய பெயர்களைச் சூட்டியாக வேண்டும். பழைய சாதிப் பெயர்களையே தொடர்வது சீர்திருத்தத்தைப் பயனற்றது ஆக்கிவிடும்.

பிறப்பை அடிப்படையாகக் கொண்ட சமூகப் பிரிவினைகளான பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் போன்ற முடைநாற்றம் வீசுகிற பெயர்களால், தகுதியை அடிப்படையாகக் கொண்ட நான்கு வர்ணத்தை அழைப்பது சூழ்ச்சியே ஆகும்."

டாக்டர் அம்பேத்கர்,'ஜாதியை அழித்தொழிக்கும் வழி ' நூல்

-கருப்புப் பிரதிகள் வெளியீடு.

**

ப்படி யோசித்துப் பாருங்கள். தமிழ்நாட்டில் உள்ள சாதிப் பெயருடன் யாராவது எழுத வந்திருந்தால் இன்று கள்ள மவுனம் காக்கும் இணையத்தில் உலவும் இந்த முற்போக்கு முகரைகள் என்ன கொதி கொதித்திருப்பார்கள்.?

ஆனால் ஆதிக்க சாதி வெறியை சுமந்து கொண்டு தொடர் எழுதும் பிரியாவை கண்டிப்பதில்முற்போக்காளர்கள்,பெண்ணியவாதிகள்,எழுத்தாளர்கள்,கருத்தாளர்கள்,சமூக ஆர்வலர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்வோர்,அப்படி அழைப்பதையே வெளிப்படையாகவும்,மறைமுகமாகவும் விரும்புபவர்கள் தடித்த தோலுடன் அமைதி காக்கின்றனர்.

இணையத்தில் நிலவும் 'முற்போக்கு' இதுதான்.

 பிரியா நாயரோ தன் சாதியைப் பெருமிதமாக வெறியாகச் சுமந்து வருகிறார்.அந்தச் சாதி காலம் காலமாக அனைவரையும் ஒடுக்குவதையே நிகழ்ச்சி நிரலாய்க் கொண்டுள்ளது. நாம் உரத்தும் தெளிவாகவும் சொன்னபின்னும் நாயர் சாதி வெறிக்கு விகடன் ஒளிவட்டம் சூட்டுகிறது . நாம் தம்பி என்பது சாதி என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டிய பிறகும் தொடர்ந்து சாதிப்பெயருடன் தொடரை வெளியிடுகிறது.

குமுதம் இதழிலோ,டைம்பாஸ் இதழிலோ சாதி வெறிக்கு பரிவட்டம் சூட்டியிருந்தால் நாம் கேள்வி கேட்கப்போவதில்லை.

ஏனென்றால் கேவலமான குமுதம் இதழின் இன்னும் சீரழிந்த வடிவம் தான் டைம்பாஸ். குமுதத்தின் விற்று முதலில் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தி அதனை நம் நிறுவனத்துக்கு அறுவடை செய்ய வேண்டும் என்ற நோக்கில் விகடன் குழுமத்தால் ஆரம்பிக்கப்பட்டது தான் டைம்பாஸ்.

ஆனால் ஆனந்த விகடன் அப்படியல்ல.குமுதத்தின் வணிகத்தன்மையில் ஒரு பாதியைக் கொண்டிருந்தாலும்,இன்னொரு பகுதியோ சிற்றிதழ்களின் உள்ளடக்கம், தீவிரத்தன்மையைத் தன்னகத்தே கொண்டு 'மாறுபட்ட' இதழாகத் தன்னைக் காட்டிக்கொள்ளத் தொடர்ந்து முயற்சிக்கிறது. அப்படியான வாசகர்களை நிலைநிறுத்த முயற்சிக்கிறது. அதனால் தான் அது தற்பொழுது தாங்கி வரும் சாதி வெறியை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

ஒரு பக்கம் சாதி வெறி எதிர்ப்பு குறித்த கட்டுரை. இன்னொரு  பக்கம் சாதி வெறிக்கு மேள தாளத்துடன் மேடை.

சாதி வெறிக்கு மேடை போடும் இவர்கள், ராமதாசைச் 'சாதி வெறியர்' என்று சொல்ல என்ன யோக்கியதை இருக்கிறது ? சாதி தாஸ் என என்ன தகுதி இருக்கிறது..? அதற்கான அருகதை இவர்களுக்கு துளியாவது இருக்கிறதா..?

வன்னியர்,தேவர்,நாயர்,பேசாத பேச்செல்லாம்

 சாதி வெறியுடன் செயல்படும் பிரியா சேச்சி தான் தமிழ்நாட்டில் சாதி வெறியுடன் செயல்படுபவர்களை விமர்சிக்கிறார்.முதலில் உங்கள் முகத்தை கண்ணாடியில் பாரும்மா..!



சாதி வெறியை ஊக்குவித்தது என்னும் கரும்புள்ளி விகடனுக்கு வரலாற்றில் உண்டு.

சாதி வெறியர் பிரியா ஆ.விகடனில் புரட்சிகரத் தொடர் எழுதியது போதாது என்று ,இப்பொழுது 'டாக்டர் விகடனுக்கு' பொறுப்பாசிரியராய் நியமிக்கப்பட்டிருக்கிறார் என்றும் . தகவல்கள் வருகின்றன.

ஆ.விகடனுக்கும் ,டாக்டர் விகடனுக்கும் ரா.கண்ணன் தான் ஆசிரியர்.அவரது ஒப்புதலும் விரைவுபடுத்தலும் இல்லாமல் இது சாத்தியப்பட்டிருக்காது. இன்னும் சிறிது காலத்தில் விகடன் பொறுப்பாசிரியராய்க் கூட வரலாம். யார் கண்டது..?

ஆனாலும் நாம்

தொடர்ந்து பேசுவோம்.

No comments: