Wednesday 29 October 2014

தினகரன்-அடியாள் ஆர்.எம்.ஆர்.,அடாவடி-வீதியில் 200 தொழிலாளர் குடும்பங்கள்...!


தினகரனை மாறன் குடும்பம் வாங்கிய சிறிது காலத்தில் நடந்த சம்பவம் இது.

மாறன் குடும்பம் வாங்கிய பின்பு ரவீந்திரன் என்பவர் நியூஸ் எடிட்டராய் சென்னை தின்கரனில் பணிபுரிந்து வந்தார். இவர் தினமணியில் இருந்து இங்கு வேலைக்குச் சேர்ந்தவர். இவர் ஒருநாள் அலுவலகத்திலேயே ரத்த வாந்தி எடுத்து விடுகிறார். உடன் பணியாற்றியவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அவரைக் கொண்டு செல்ல முடிவு செய்து அலுவலகத்தில் இருந்த காரை அழைக்கின்றன்ர்.

ஆனால் நிர்வாகத் த‌ரப்பிலோ காரைத் தர மறுத்து விடுகின்றனர். எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் நாங்கள் காரை கொடுக்க மாட்டோம் என பிடிவாதமாய் மறுத்து விடுகின்றனர். கடைசியில் ஆட்டோ பிடித்து தான் அவரை அழைத்துச் சென்று மருத்துவமனையில் சேர்த்து உயிரைக் காப்பாற்றினர். (இன்று அவர் 'தி இந்து' வில் பணியாற்றுகிறார்.)

உலகின் பணக்காரர்கள் வரிசையில் இடம்பெற்றுள்ள கலாநிதி மாறனின் நிறுவனத்தில் தான் இப்படி நடக்கிறது. இது போல தொழிலாளர்கள் உயிரை துச்சமென மதித்த அவர்களுடன் விளையாடிய பல சம்பவங்கள் அங்கு நடைபெற்றிருக்கின்றது. ஆம்.அதிகார துஷ்ப்ரயோகம்,முறைகேடு மூலம் மட்டும் மாறன்களின் சாம்ராஜ்யம் கட்டி எழுப்பப்படவில்லை. எல்லா கார்ப்பரேட் நிறுவனங்களைப் போல் இவர்களின் வளர்ச்சியிலும் தொழிலாளர்களின் வியர்வை மட்டுமல்ல ரத்தமும் சிந்தப்பட்டிருக்கிறது.

அதன் நீட்சியாய் மொத்தமாய் தமிழ்நாடு முழுவதும் 200 ஊழிய‌ர்களை விரட்டி அத்தனை குடும்பங்க‌ளையும் நடுத்தெருவிற்கு கொண்டு வந்து விட்டது நிர்வாகம். எடிட்டோரியல்.சர்குலேஷன்,அச்சாக்கம் என அனைத்துத் துறைகளிலும் இவர்கள் நிறைந்திருக்கின்றனர்.

dinakaran
அடியாள் ஆர்.எம்.ஆர்.


நேற்று திடீரென்று ஏறத்தாழ 200 ஊழிய‌ர்களை,பல்வேறு காரணங்களைச் சொல்லி வரும் அக்டோபர் 30 ஆம் நாளிலிருந்து பணி நீக்கம் என திடீர் என உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் சொல்லியிருக்கின்றனர்.

ஒருவரிடம் அவர் 50 வயது தாண்டியதை சொல்லி பணி நீக்கம் செய்துள்ளனர். இதுதான் காரணம் என்றால் நீக்கப்பட வேண்டிய முதல் நபர்கள் கலாநிதி மாறனும் ஆர்.எம்.ஆரும்.தான். நீக்கப்பட்டவர்கள்  பட்டியலில் பழைய தினகரன் ஆட்கள் கணிசமான அளவில் இருக்கின்றனர்.

முதன்மை நிருபர் சுரேஷ்


ஒரு தொழிலாளியை பணி நீக்கம் செய்ய வேண்டுமென்றால் ஒரு மாதம் முன்பே அவருக்கு முன் அறிவிப்பு கொடுக்க வேண்டும். அதைத்தொடர்ந்து அவருக்கு மூன்று மாத ஊதியத்தையும் அளிக்க வேண்டும். ஆனால் இது எதையுமே செய்யாமல் தன்னிச்சையாய் நிர்வாகம் இத்தனை பேரையும் வீதியில் நிறுத்தியுள்ளது.

 இந்த முடிவு அனைத்தும் நிர்வாக இயக்குனர் ஆர்.எம்.ஆர்.எடுத்தது. இவருக்கு இந்த ஆலோசனையைச் சொல்லுவதற்கென்றே சென்னை பதிப்பு முதன்மை நிருபர் சுரேஷ்,மற்றும் ஆர்.எம்.ஆரின் துதிபாடிகள் சுற்றியிருக்கின்றனர்.முதன்மை நிருபர் சுரேஷ் என்பதை விட,மாலைச்சுடர் காலத்தில் இருந்து 18 வருட காலமாய் காவல்துறையின் விசுவாசி என்பது மிகச்சரி.

ஆர்.எம்.ஆரின் அல்லக்கைகள் இந்த பணி நீக்கத்தை அலுவலகத்தில் நியாயப்ப‌டுத்தவும் செய்கின்றனர். தினகரன் நாளிதழ் நட்டத்தில் இயங்குவதாகவும்,ஆகவே அதற்கு இதுபோன்ற நடவ்டிக்கைகள் தவிர்க்க முடியாதது என்றும் பேசிக்கொள்கின்றனர். அவர்கள் கூற்றுப்படி உண்மையில் நட்டமா என்பது தெரியவில்லை. அப்படியே நட்டம் இருந்தாலும் அதில்,வேலை செய்பவர்களுக்கு எந்தப்பங்கும் இல்லை. பங்கு போட வேண்டிய அவசியமும் இல்லை.

நட்டம் இருந்தாலும் அதைத் தவிர்க்க வழியுள்ளது. அனைத்துப் பதிப்புகளிலும் ஆர்.எம்.ஆரால் நியமிக்கப்ப‌ட்ட மேலாளர்கள் தான் கோலோச்சுகின்றனர். இவர்களும் ஆர்.எம்.ஆரும் இணைந்து அடிக்கும் கூட்டுக்கொள்ளையை நிறுத்தினாலே நிறுவனம் லாபத்தில் இயங்கும் என்பது தான் உண்மை. நாட்டை மட்டுமல்ல,நாட்டைச் சுரண்ட பக்கபலமாய் இருந்த தாத்தாவையே சுரண்டிய மாறன்களிடமே ஒருவர் ஆட்டையைப் போட முடியுமென்றால் அவர் எப்பேர்ப்பட்ட கே.டி.யாய் இருக்க வேண்டும். அதுதான் ஆர்.எம்.ஆர்.

அதுவுமற்று தினகரனை இவர்கள் நடுநிலையான நாளிதழாய் நடத்தினால் விளம்பர வருவாயும் வருமானமும் அதிகரிக்கும். ஆனால் இவர்கள் தங்கள் அரசியல் வாழ்வை காப்பாற்றவும்,அதன் மூலம் செய்த அதிகார துஷ்பிரயோகத்தையும் செய்த பல நூறு கோடி மோசடிகளை மறைக்கவும் தான் இதழை நடத்துகின்றனர்.

ஆகவே நட்டம் எனக்கூறப்படுவதற்கு எந்தவிதத்திலும் தொழிலாளர்கள் பொறுப்பாக முடியாது.

இந்தப் பணி நீக்கத்தால் பாதிக்கப்பட்டோர் சென்னை மட்டுமல்ல அனைத்துப் பதிப்புகளிலும் இருக்கின்றனர். இன்று அவர்கள் அழுத அழுகையும் புலம்பலும் சொல்லி மாளாது. வெளிறிய முகமும் எதிர்காலத்தை தொலைத்த அச்சமும் அவர்களிடம் காணப்பட்டது.

அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே 
செல்வத்தைத் தேய்க்கும் படை. 

கருணாநிதி உரை.

கொடுமை பொறுக்க முடியாமல் மக்கள் சிந்தும் கண்ணீர் ஆட்சியை அழிக்கும் படைக்கருவியாகும்

என்னும் திருக்குறளை நினைத்துக் கொண்டு கண்ணீர் சிந்தினாலோ,மனதை ஆற்றுப்படுத்தினாலோ ஒன்றும் காரியம் ஆகாது.

ஆகவே பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் அனைவரும் ஒன்று திரண்டு 'தினகரன்' தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டாலோ,அல்லது மாறனின் போட் கிளப் வீட்டையோ,ஆர்.எம்.ஆரின் அடையாறு வீட்டையோ முற்றுகையிட்டாலோ தான் விடிவு பிறக்கும். இல்லை என்றால் எதுவுமே விடியாது.

 தொடர்புடைய இணைப்புகள்

http://kalakakkural.blogspot.in/2014/03/blog-post_21.html

http://kalakakkural.blogspot.in/2012/12/4.html

http://kalakakkural.blogspot.in/2014/03/blog-post_21.html

http://kalakakkural.blogspot.in/2013/08/blog-post_25.html

1 comment:

Anonymous said...

ரவீந்திரன் ரத்த வாந்தி எடுக்கும் பொழுது வெங்கடேஸ்வரன் சொன்னது என்னன்னா,ரத்த வாந்தியை அவ்வளவு சீரியஸா எடுக்கத் தேவையில்லை.கார் இல்லைன்னு சொன்னதுக்காக கவலையே வேணாம். அதனால ஆட்டோவில் போனாலும் பயப்ப‌ட வேண்டாம்.இன்று அதே ரவீந்திரனை தி இந்துவுக்கு அழைத்துப் போனதும் வெங்கடேஸ்வரன் தான்.