Thursday 6 November 2014

குள்ளநரி சிங்கமாச்சி; கோசல்ராம் கதை அசிங்கமாச்சி...!




கோசல்ராம்.

முதலில் 'சுதேசமித்ரன்' பணி . பிறகு 'விகடன் பேப்பர்'.அடுத்து  'தினகரன்' ஏரியா கிரைம் பீட்,அடுத்து 'குமுதம்' நிருபர். அடுத்து 'தினகரன்' கிரைம் பீட் இன்சார்ஜ்...அங்கிருந்து 'குமுதம்' குழம்பு ஆசிரியர்.

இப்படித் தன் பத்திரிகை அனுபவத்தில் தகுதி திறமை தவிர்த்து பிற தொடர்புகளை வைத்து உச்சத்திற்கு வந்தவர். கோசல்ராம். இப்பொழுதோ பணி எதுவும் இல்லாத நிலையில் தனது நண்பர் ரஙகராஜ் பாண்டே உதவியுடன் 'தந்தி டிவி'யில் கருத்துச் சொல்லி வருகிறார்.(அது எப்படி எல்லாப் பய பிள்ளைகளும் கரெக்டா ஒன்னு சேருரீங்க)

'குமுதம்' குழும ஆசிரியராய் இருந்த பொழுது வரதுக்குட்டியுடன் கைகோர்த்துக்கொண்டு இவர் செய்த அட்டூழியங்கள் அதிகம்.

ஆனால் அதே கோசல்ராம் காரியம் முடிந்தவுடன் வரதுவால் தூக்கி எறியப்பட்டார். இப்பொழுது அழுகையும் புலம்பலுமாய் முகநூலில், "நான் உன்னை எப்படி நினைச்சிருந்தேன்,நீ இப்படிப் பண்ணிட்டீயே" என வரதராஜனை நோக்கி இன்னும் பாசம் போகாமல் சோக ராகம் பாடி வருகிறார்.

அதை ஒட்டி அவர் எழுதிய பதிவும்,நமது எதிர் பதிவும் இங்கே;

அவருக்கு எப்பவுமே எழுதத்தெரியாது என்பதால் காசிமுத்து மாணிக்கம் கதையைப் பகிர்ந்துள்ளார்.நல்லது. வரதராஜனை சிங்கமாகவும்,அவரை பூனையாகவும்,அவரால் குமுதம் அலுவலகத்தில் இருந்து தூக்கி எறியப்பட்ட ஊழியர்களை எலிகளாகவும் அந்தக்கதையில்  உருவகம் செய்யப்பட்டுள்ள‌து.



இதுவே தவறு.வரதராஜன் என்றும் சிங்கம் அல்ல.அவர் என்றும் நரி தான்.ஆக அந்தக் கதையின் அடிப்படையே தவறு. அதுவும் போக  கோசலின் வார்த்தையிலேயே என்றும் உண்மை இல்லாத பொழுது  கதையில் என்ன உண்மை எப்படி இருக்க முடியும்..?

நாம் அவருக்கு பொருந்துவது போல ஒரு கதையை எழுதியுள்ளோம்.

ரந்து விரிந்த அந்த வனாந்திரத்திற்கு ஒரு வயதான சிங்கம் ராஜாவாக இருந்தது.ஒரு நாள் அந்த வயதான சிங்க ராஜா இறந்துபோனார். புதிய ராஜா பதவி ஏற்றுக்கொள்ள வேண்டுமே...!

 அதனால் வெளிக் காட்டில் வசித்துக்கொண்டிருந்த வாரிசு இங்கே ராஜாவாக பொறுப்பேற்றுக்கொண்டது. புதிய சிங்க ராஜாவு வேறொரு காட்டில் எப்பவும் பிசி. அதனால‌ இந்தக் காட்டு ராஜாங்கத்தையும் பார்த்துக்கொள்ள முடியல. காட்டில் வளர்க்கப்படாத அந்த .கான்வெண்ட் சிங்கத்திற்கு வேட்டைக் குணமும் காடு பற்றிய அறிவும் குறைவு. அதனால் காட்டோட நிலையை அறியாம, தனது ராஜா பதவியின் நிலையையும் அறியாம, தனது பதவியை நரியிடம் கொடுத்தது. அது குள்ள நரின்னு தெரியாம:

குள்ள‌நரியும் சிங்கத்தோட குகையிலேயே வந்து தங்கிக்கொண்டது. தனக்கு நாட்டாமை பதவி கிடைத்ததால் தனது நாட்டாமையைக் காட்ட ஆரம்பித்தது குள்ள‌நரி.

சிங்கத்தோட குகையில தங்கிட்டதாலவோ என்னவோ உடம்பு முழுக்க சிங்கச் சாயம் பூசிக்கொண்டு, சிங்கம் போலவே மாறி ‘நான்தான் ராஜா’ என்று தம்பட்டம் அடிக்க தொடங்கியது. காட்டோட கணக்கு வழக்கில் எல்லாம் கைவைத்து சுருட்டியது. ராஜாவுக்கு இருந்த சொத்தை சுருட்ட தொடங்கியது. வெளிக்காட்டில் இருந்த ராஜாவுக்கு குள்ள நரியோட திருவிளையாடல் எல்லாம் போனபடியே இருந்தது. ஆவேசமா புறப்பட்டு வந்த சிங்கம் குள்ள‌நரியோட திருட்டு கணக்கை எல்லாம் எடுத்து போலீஸில் புகார் கொடுத்துடுச்சி.குள்ள‌ நரி கைதாகி தப்பிச்சோம் பிழைச்சோம்னு வெளியில வந்து ‘அவமான பட்டதுக்கு’ காரணம் யார்னு கருவிகிட்டிருந்துச்சு. உடம்பெல்லாம் பூசிக்கொண்டிருந்த சிங்கச் சாயம் வெளுத்துபோச்சேன்னு புலம்பியது.

அப்பதான் சிங்கத்தோட குகையில இருந்த 21 காட்டு எலிகள்தான் நமக்கு எதிரா உள்ளடி வேலைய பார்த்திருக்கும்னு அதுவாக‌வே புரிஞ்சிகிட்டது.
திருடனுக்கு யாரை பார்த்தாலும் போலீஸாதான் தெரியும்.

அந்த மாதிரி எலிகளை எல்லாம் பார்த்து தனக்கு எதிரிகள் என புலம்ப ஆரம்பித்தது. அந்த எலிகளை எல்லாம் ஒழித்துக்கட்ட வேண்டும். அதை நாம் செய்தபடியும் தெரியகூடாது என்று யோசித்தது குள்ள நரி. சரியான ஒரு கங்காணி பூனை இருந்தால் நன்றாக இருக்கும் என்று பல இடங்களிலும் தேடி அலைந்தது. அப்போதுதான் ஏற்கனவே குள்ள நரியால் அடித்து விரட்டப்பட்ட பூனை எதிலே வந்தது. அந்த பூனை எல்லா தப்பு வழியிலும் போகக்கூயது என்று தெரிந்துதான் குகையில் இருந்து ஏற்கனவே அடித்து விரட்டி விட்டிருந்தது குள்ள‌நரி.

 இப்போது அந்த பூனை சரியாக இருக்குமே என்று பேசியது. உனக்கு கங்கானி வேலை. என் குகையில் உள்ள பழைய எலிகளை வேட்டையாடி விரட்டனும் என்று 21 எலிகளோட பட்டியல கொடுத்தது.

காலக்கொடுமை என்னவென்றால், இந்த கள்ள பூனை, பூனையாகவே இருந்திருந்தால் பரவாயில்லை. கங்காணி பதவியை வைத்து அடிக்கடி அதுவும் ‘நரிவேஷம்’ கட்ட ஆரம்பித்தது. எவ்வளவு பெரிய நரியோடு நட்பு எனக்கு கிடைச்சிருக்கு தெரியுமா என்று குகையிலும், வெளியிலும் ஆடத்தொடங்கியது. குகையில் இருந்த 21 எலிகளையும் அவமானப்படுத்தியது. ஒவ்வொன்னா அடிச்சு வெளியே விரட்டினபடியே இருந்தது.

வெளியில போயிருந்த சிங்க சாயம் பூசிய  குள்ள நரி குகைக்கு வந்ததும், இன்னைக்கு ஒன்ன காலிபன்னிட்டேன் என்று பெருமையா பட்டியல் வாசிக்கு. குள்ள நரியும் ஆஹா ஓஹோ என்று சலுகை என்ற எலும்புத்துண்டை எடுத்து வீசும். கள்ள பூனைக்கோ இப்படி வீசிய எலும்புத்துண்டு ருசி தாங்க முடியல. அதனால எலி வேட்டைய வேகமா நடத்தியது.

ஒரு கட்டத்தில் குகையில் இருந்த எலிகள் எல்லாம் காலி. குள்ளநரிக்கு சந்தோஷம்.

ஆனா இப்போ கள்ள பூனை மேல கவனத்தை வைத்தது குள்ள நரி.

எவ்வளவு எலும்புத் துண்டை தின்னு கொழுத்திருக்கு. தவிர நம்ப விஷயத்தை எல்லாம் எவ்வளவு தெரிஞ்சி வச்சிருக்கு. இனியும் இதை விட்டு வைக்கக்கூடாது என்று கணக்கு போட்டது.

இந்த குள்ள நரி இப்படித்தான் என்று கள்ள பூனைக்கும் தெரியும். அதனால‌ காட்டு போலீஸில் இருந்த நரியோட எதிரிங்ககூட கைகோர்த்து வேவு வேல பார்க்க ஆரம்பிச்சது. ஆஹா..அடிமடியிலேயே கைவைக்க ஆரம்பிச்சிடுச்சுப்பா கள்ளப் பூனை என்று குள்ள நரி ஆவேசமானது. அந்த கள்ளபூனை வந்தா குகைக்கு வெளியவே நிறுத்தி விரட்டி அனுப்பிடுங்க. இது நரி ராஜா உத்தரவுன்னு சொல்லுங்கன்னு ஆர்டர் போட்டிருச்சு.

வழக்கம்போல கங்காணி பந்தாவோட வந்த பூனை வாசல்லலேயே நின்று அவமானப்பட்டு போச்சு. அப்படி துரத்தப்பட்ட பழைய கங்கானி பூனைதான் இப்ப குட்டிகுட்டி  கதையா அடுத்தவங்க கிட்ட கேட்டுக்கிட்டு சொல்லிச் சொல்லி  குள்ள நரியோட நாட்டாமைய  நாறடிச்சுகிட்டிருக்காம்.


****
சூடுபட்ட கள்ளப்பூனையும்,குள்ளநரியும்



பாதிக்கப்பட்ட  21 எலிகளோட பட்டியல்

ரஞ்சன்- குமுதம் எடிட்டர்.
ரவிஷங்கர்- குமுதம் சினிமா சீனியர் நிருபர்
தளவாய் சுந்தரம்- குமுதம் சீனியர் நிருபர்.
கோபால்- குமுதம் புகைப்படக் கலைஞர்.
சித்திரிம் மத்தியாஸ்- குமுதம் புகைப்படக் கலைஞர்.
திண்டுக்கல்-மருதநாயகம்
கரூர்-உன்னி கிருஷ்ணன்

கோடீஸ்வர ராவ்- குமுதம் (தெலுங்கு) குமுதம் ஜோதிடம் ஆசிரியர்
மற்றொரு கோபால் ஜோதிடம் (தமிழ்) உதவி ஆசிரியர்.

இளங்கோவன். குமுதம் ரிப்போர்ட்டர் எடிட்டர்.
பா.ஏகலைவன்- ரிப்போர்ட்டர் சீனியர். தலைமையிடம்
ஆந்தை குமார். ரிப்போர்ட்டர் சீனியர் தலைமையிடம்
திருமலை- ரிப்போர்ட்டர் சீனியர்-மதுரை
கா.சு. வேலாயுதம்- ரிப்போர்ட்டர் சீனியர்.
வேட்டை பெருமாள்-ரிப்போர்ட்டர். ரிப்போர்ட்டர் உதவி ஆசிரியர்
மோகன்- ரிப்போர்ட்டர் உதவி ஆசிரியர்.
பாலஜோதி- ரிப்போர்ட்டர் உதவி ஆசிரியர்
மலைமோகன்  ரிப்போர்ட்டர் உதவி ஆசிரியர்.
விஜயானந்த்- ரிப்போர்ட்டர் நிருபர்.
கலைவாணன்-பாண்டி ரிப்போர்ட்ட‌ர் நிருபர்
மீடியா ராமு- ரிப்போர்ட்டர் புகைப்படக் கலைஞர்.
முருகேசன்-ரிப்போர்ட்டர் நிருபர்.

 மேலே  பட்டியலில் உள்ள அனைவரும் குமுதம் முதலாளி ஜவகர் பழனியப்பனுக்கு வேண்டப்பட்டவர்கள் என்றதாலேயே 21 எலிகளாக பட்டியல் எடுக்கப் பட்டார்கள். இவர்கள் ஒவ்வொருவரையும் உளவியல் ரீதியாய் சித்ரவதை செய்தும் பல வழிகளில் அவமானபப்டுத்தியும் அவர்களை வெளியேற்ற கோசல்ராம் செய்த அட்டுழியம் எழுத்தில் வடிக்க முடியாதது.

அதே போன்று சேஷையா ரவி, வெங்கிட் ஆகிய இருவரும் கோசலுக்கு நெருங்கிய நண்பர்கள். விகடனில் இருந்து அவரே அழைத்து வந்தார். கடையில் அந்த இருவரும் அவமானப்பட்டு ஓடிப்போனார்கள்.நெருங்கிய நண்பர்களான வெங்கட்,சேஷையா ரவி விஷயத்தில் கோசலின் ஆட்டம் அதிகம் என்பது அனைவருக்கும் தெரியும்.

இவ்வளவு சூடு பட்ட பின்பு தான் கள்ள‌ப்பூனைக்கு புத்தி வந்திருக்கிற‌து.

 குள்ள நரியும் பூனையும் எப்பொழுதும் நண்பராக முடியாது என.

அடுத்து தான், எப்பவும் ராஜா ஆக முடியாது என குள்ள‌நரிக்கு என்று புரியுமோ,எப்பொழுது பாடம் கற்பிக்கப்ப‌டுமோ.?..


பொறுத்திருப்போம்.

1 comment:

Anonymous said...

super