Saturday 30 May 2015

முன்பகை + கற்பனை = தமிழக அரசியல் ’புலனாய்வு’ செய்தி..!


ரத்குமார்- தற்பொழுதைய நிலையில் தமிழக சட்டமன்ற உறுப்பினர்.

அ.தி.மு.க., தி.மு.க., அ.தி.மு.க., தனிக்கட்சி, என பல பரிணாமத்திற்குப் பிறகு தற்பொழுது அ.தி.மு.க., சார்பில் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர். தமிழக அரசியலில் இவரது செல்வாக்கு,   அதிமுக உறுப்பினர் அத்துடன் இரண்டாம் நிலை நடிகர் என்பதைத் தாண்டி ஒன்றுமில்லை. இதைத் தவிர்த்து நடிகர் சங்கத் தலைவராகவும் இருக்கிறார். ஒரு அதிமுக உறுப்பினரின் செல்வாக்கு அவர்களது கட்சித் தலைமை முன்பு எந்த நிலையில் இருக்கிறது என்பது உலகுக்குத் தெரியும். அப்படி ஒரு எண்ணம் சரத்குமாரின் கனவில் வந்தாலே அதற்கான 'விலை' என்ன என்பது ’புலனாய்வு’ பத்திரிகையில் வேலை பார்க்கும் காவலாளிக்கும் மிக மிக நன்கு தெரியும். 

ஆனால் சரத்குமார் தமிழக முதல்வராக (!) முயற்சிக்கிறார் என்று இரண்டு கவர் ஸ்டோரிகளைத் ’தமிழக அரசியல்’ வாரமிருமுறை இதழ் ஓரிரு வாரங்களுக்கு முன் வெளியிட்டது.

’அடுத்த முதல்வர் நான்தான்’ என்று முதல் அட்டைப்படக் கட்டுரையை வெளியிட்ட சற்று இடைவெளியில் கடந்த வார (16.05.2015) வியாழன் அன்று வெளியான இதழில், 

’முதல்வர் பதவி…அம்பலமான சரத்தின் நாடகம்’ என அட்டையில் இடம்பெற்ற ஸ்டோரி. 

4 பக்க மேட்டர்.






வெளியான கட்டுரை முழுக்கவும் எவ்விதத் தொடர்புமற்று நடிகர் சங்கம், பதவி இழந்து திரும்பப் பெற்ற அமைச்சர் என சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் எங்கெங்கோ பயணிக்கிறது. அந்தக் கட்டுரை இது தான். தமிழ்நாட்டு அரசியல் நிலவரத்தை ஓரளவு அறிந்த எவரும் இதில் வெளியானவை நடக்கும் என கனவில் கூட நம்ப மாட்டார்கள் என்பது தான் உண்மை.

இதைப்படித்தவுடன் நமக்குத் தோன்றியது இதுதான்.

துளியும் நம்ப முடியாத செய்திகளை  எல்லாம் எந்தவிதக் கோர்வையும் இல்லாமல் நான்கு பக்கங்கள்  எழுதி அதனை இரண்டாம் முறையாக கவர் ஸ்டோரியாக வெளியிடுகிறது என்றால், சரத்குமாருக்கும் ’தமிழக அரசியல்’ நிறுவனத்துக்கும் ஏதோ பெரிய அளவிலான முன்பகை இருக்கிறது. அது பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையா அல்லது ’தமிழக அரசியல்’ முதலாளி சுந்தரராமன்  திரைத்துறையிலும் இருப்பதால் அது தொடர்பிலான பிரச்னையா, இல்லை வெளியில் சொல்ல முடியாத வேறு எதுவுமா ? என நம்மால் முடிவுக்கு வர இயலவில்லை. நண்பர்களிடம் விசாரித்துக் கொண்டிருந்தோம்.

ஆனால் பொய் எழுதிய மை காய்வதற்குள் அம்பலமாகி விட்டது. கிரிகுஜா நிறுவனத்தின் இயக்குனர் மற்றும் ’தமிழக அரசியல்’ பத்திரிகையின் வெளியீட்டாளர் எஸ். சுந்தர்ராமனுக்கும் இடையே திரைப்படம் தயாரிப்பது தொடர்பில் உருவான  கொடுக்கல் வாங்கல் பிரச்னையை செய்தித்தாள்கள் எல்லாம் வெளியிட்டு விட்டன.




ஆக சரத்குமார் ‘தமிழக அரசியல்’ நிறுவனத்துக்கு திரைப்படம் தயாரித்துத் தருவதாகச் சொல்லி பணம் வாங்கி  ஏமாற்றி வரும் நிலையில் அவர் மீதான ஆத்திரத்தைத் தீர்த்துக் கொள்வதற்காககோ, அல்லது இப்படி ஒரு ’செய்தி’ வெளியிட்டால் சரத்குமார் தன்னிடம் செட்டில்மெண்டுக்கு வருவார் என்று நினைத்தோ இது போன்ற ’செய்திகளை’ உற்பத்தி செய்கிறது. ’நாக்ராஜ்’ என்ற பெயரில் அனேகமாக எஸ்.சுந்தரராமனே எழுதியிருக்கலாம் என நினைக்கிறோம். 

இதுதான் புதியதோர் உலகு உருவாக்கும் லட்சணமா ?

சரத்குமார் தனது அரசியலைக் காட்டி ஏமாற்ற முயற்சிக்கிறார். தமிழக அரசியல் முதலாளி  தனது பத்திரிகையைக் காட்டி வேறு வகையில் மிரட்டுகிறார். 

மோசடி நிருபர்களுக்கு ’கவர்’ வாங்க பயன்படும் பத்திரிகை, ’முதலாளி’களுக்கோ இப்படியான தங்களின் தனிப்பட்ட திரைமறைவு மிரட்டல்களுக்குப் பயன்படுகிறது. இதில் காசு கொடுத்து வாங்கிப் படிக்கும் வாசகன் தான் ஏமாளி.

’கார்க்கோடன்’ என்ற புனைப் பெயரில் பல்வேறு பிரச்னைகள் குறித்த சிந்தனைக் கட்டுரைகளை ஒவ்வொரு இதழிலும் எழுதும்   எஸ்.சுந்தர்ராமன் அவர்களே நீங்கள் ஏன் அடுத்த இதழில் புலனாய்வு பத்திரிகைச் செய்திகளின் பின்னணி, உள்நோக்கம் குறித்து ஒரு கட்டுரை எழுதக் கூடாது? 

உங்களின் கூட்டாளிகளுக்கு உபயோகமாக இருக்குமல்லவா ?


தொடர்புடைய இணைப்புக்கள்

http://m.dinakaran.com/detail.asp?Nid=146362


No comments: