Wednesday 28 December 2011

இரண்டு விபச்சாரிகளின்(பத்திரிக்கைளின்)குழாயடிச் சண்டை


                  நன்றி-தினமணி கார்ட்டூன் 27-12-2011


                                       


                          நன்றி-தமிழ் முரசு-28-12-2011



   புரியாதவர்கட்கு உதவி செய்ய சில குறிப்புகள்.

1)பப்ளிசிட்டி வாத்தியார்-வைத்தியநாதன்
2)மனோகரா-மனோஜ்குமார்
3)கண்ணழகி-உங்க அறிவுக்கு எட்டிய வரை யோசியுங்க.நமக்கு அந்தளவுக்கு ஞானம் பத்தாதுங்க.கண்ணழகி கால் அழகி,தொடையழகி,தொப்புள் அழகி இப்படியெல்லாம் எழுதுறவனைத் தவிர வேறு யாருக்குத் தெரியும்?
4)மதிகெட்டான் கார்ட்டூன் மதி


இந்த சண்டையைப் பத்தி கேட்டுக்கிட்டு இருந்த நரிக்குறவர் ஒருத்தர் நைசா நம்மகிட்ட வந்தார்.அவர் பாட்டுக்குப் பேச ஆரம்பிச்சார்.


சாமியோவ் நீங்க படிச்சுக்கிட்டு இருந்ததை எல்லாம் கேட்டுக்கிட்டு இருந்தேனுங்க.எங்க சனங்க சரியாக் குளிக்காததால நாத்தம் அடிக்கும் சாமியோவ்.

ஆனா பத்திரிக்கை முதலாளிங்க சாமிங்க,பத்திரிகையில வேலை பார்க்குற சில ஆசாமிங்க,இவங்க எல்லாம் நீட்டா வெள்ளையும் சொள்ளையுமா இருக்காங்க.அவங்க செய்யுற வேலைங்களக் கேட்டா இந்த நாத்தம் அடிக்குதுங்க சாமியோவ்.

இப்ப படிச்ச கத மாதிரி இதுக்கு முன்னாடி நிறையக் கதை இருக்கு சாமியோவ்!ஒன்ணு சொல்றேன் சாமி!வீரப்பனப் பேட்டி கண்ட செய்தி படம் எல்லாம் நக்கீரனில் வந்தது சாமி.அதே செய்தி இந்தியா டுடே விலும் வந்தது சாமி.அந்தச் செய்தி ஜூனியர் விகடனுக்கு கிடைக்கலைன்னு ஆத்திரத்தில சாமி,இது வரை செய்தி தான் வியாபாரம் ஆச்சு.இப்ப செய்தியாளர்களே வியாபாரம் ஆகிட்டாங்க அப்படின்னு ஒரு செய்தி ஜு.வி.யில் போட்டாங்க சாமி.இதனால நக்கீரன் சாமிக்கு பெருத்த கோபம் வந்துச்சு சாமி.

உடனே சாமி, ஜு.வி.முதலாளியோட பையன்,அதான் சீனி சாமி ன்னு ஒருத்தர் இருக்காரே சாமி,அந்த சாமி தீபா வெங்கட் டுன்னு ஒரு நடிகை சாமியத் தள்ளிட்டுப் போச்சுன்னு நக்கீரனில் எழுதி பதிலுக்கு நாறடிச்சுட்டாங்க சாமி.

இன்னும் இது மாதிரி நிறையக் கத இருக்குது சாமி உங்க பத்திரிக்கை உலகத்துல.அதச் சொல்ல நிறய நேரம் வேணும் சாமி.எனக்கு இப்ப வேல இருக்கு சாமி.அப்பத் தான் நான் கா வயித்துக் கஞ்சியாவது இன்னிக்கு குடிக்க முடியும் சாமி!

எங்க மேல இருந்து வர்ற அழுக்கால வர்ற நாத்தம் பரவால்ல சாமி.இந்த மாதிரி ஒழுக்ககேடான விஷயம் எங்க சாதி சனத்துல கிடையாது சாமி.நாங்க மான மருவாத உள்ளவங்க சாமி.


இன்னொரு நாள் இந்தக் கருமத்தச் சொல்றேன் சாமி!வரட்டா சாமி!பாத்துப் போங்க சாமியோவ்.



                            

No comments: