Tuesday 30 August 2011

முன்னாள் காட்பாடி மந்திரியின் அர்ச்சனை-இதுதான் உண்மை






ஊர் உலகத்தில் உள்ள அரசியல்வாதிகளின் முகத்திரையைக் கிழிக்கிறேன் என்ற பெயரில் உண்மை கொஞ்சமும் பொய் நிறையவும் கலந்து அரசியல் புலனாய்வு பத்திரிக்கைகள் என்ற பெயரில் சில முன்னணி நிறுவனங்களால் நடத்தப்படும் பத்திரிக்கைகள் மற்றும் பெயர் தெரியாதவர்களால் நடத்தப்படும் பத்திரிக்கைகளிலும் தொடர்கள் எழுதப்படுகின்றன.


இந்தத்தொடர்களின் பின்னணியில் பிளாக்மெயில் நடைபெற்று சில நேரங்களில் பல ஆயிரங்கள்,லட்சங்களும் கூட கை மாறியிருக்கிறதாம்.
வாரம் இரு முறை வெளியாகும் ஒரு அரசியல் இதழில் சொல்வதெல்லாம் உண்மை என்ற தொடர் தற்பொழுது வெளிவந்து கொண்டிருக்கிறது.இந்தத்தொடரில் சமீபத்தில் முன்னாள் மந்திரி ஒருவரைப்பற்றி அவர் மனசாட்சி பேசுவதாக எழுதப்பட்டிருந்தது.


அதே இதழில் அதே முன்னாள் மந்திரியின் நேர்காணலும் சொல்லி வைத்தாற் போல வெளியானதாம்.இதனைப் படித்த அந்த முன்னாள் மந்திரி தொடர் என்ற பெயரில் அக்கப்போர் எழுதும் சம்பந்தப்பட்ட செய்தி ஆசிரியர் மற்றும் நேர்காணல் எழுதிய பழனி ஆண்டவர் பெயரைக் கொண்ட நிருபரையும்  தொலைபேசியில் தொடர்பு கொண்டு நாலு தலைமுறையைத் தோண்டி எடுத்து அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளால் அர்ச்சனை செய்து விட்டு காட்பாடிக்கு காரில் பறந்தாராம்.


இதனால் நடுங்கிப்போன தொடர் எழுதும் அந்த செய்தி ஆசிரியர் அலுவலகத்துக்கு இரண்டு நாள் ஆப்செண்ட் ஆனாராம்.அந்தளவுக்கு அவருக்கு மன தைரியம் அதிகமாம்.

நேர்காணல் செய்த முருகக் கடவுள் பெயர் கொண்ட நிருபரோ,மாண்புமிகுக்களாக இருந்தவர்கள் கூட இப்படிப் பேசுகின்றார்களே என்று சக நிருபர்களிடம் கூறி முகம் வெளிறிப் போனாராம்.

No comments: