Tuesday 30 August 2011

வீர நீரால் வீறு கொண்ட சுய மரியாதை

அன்று மதுரையை எரித்தாள் கண்ணகி.சில ஆண்டுகளூக்கு முன் மதுரையில் உள்ள நாளிதழ் அலுவலகத்தை எரித்தனர் ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள். இந்த நாளிதழின் தலைமை அதிகாரி சமீபத்தில் அதன் செய்தி ஆசிரியர்களில் ஒருவரை நள்ளிரவு நேரத்தில் செல்லிடப்பேசியில் அழைத்து நாக்கில் நரம்பில்லாமல் பேசினாராம்.


எப்பொழுதும் அர்ச்னையை அமைதியாக வாங்கிக் கொண்டிருக்கும் செய்தி ஆசிரியர் அன்று வீர நீரை உள்ளே செலுத்தியிருந்ததால்,சுயமரியாதை அவரைச் சுட்டெரிக்க அவர் நாவும் பதிலுக்கு அன்று நர்த்தனம் ஆடியதாம்.எப்பொழுதும் அமைதியாக கேட்டுக் கொண்டிருக்கும் எதிர்முனை அன்று நர்த்தனம் ஆடியதால் தலைமை அதிகாரியின் பேச்சு தாழ்ந்து போனதாம். தன் கீழ் பணியாற்றும் ஊழியர்களை எப்பொழுதும் நாக்கில் நரம்பில்லாமல்  பேசும் தலைமை அதிகாரி நா அன்று மட்டும் தழுதழுக்க ஆரம்பித்து விட்டதாம்.


இனிமேலாகினும் தலைமை அதிகாரி அனைவரிடமும் நாவடக்கத்துடன் நடந்து கொண்டால் எதிர்முனை நா நர்த்தனம் ஆடாது என்பதைப் புரிந்து கொண்டால் சரி.

No comments: