Thursday 3 January 2013

கலைஞர் தொலைக்காட்சியிலிருந்து ரமேஷ் பிரபா நீக்கம்...!




ரமேஷ் பிரபா


கலைஞர் தொலைக்காட்சி குழுமத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து ரமேஷ்பிரபா இன்று காலை அதிரடியாக நீக்கபப்ட்டுள்ளார்.

கலைஞர் தொலைக்காட்சி நிறுவன குழுமத்தில் இருந்து கலைஞர் தொலைக் காட்சி, இசையருவி, சிரிப்பொலி, கலைஞர் செய்திகள், சித்திரம், முரசு என 6 சேனல்கள் வெளியாகி வருகிற‌து.இதன் ஒட்டுமொத்தப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டு அதன் தலைவராக கேலக்சி நிறுவனத்தை நடத்தி வந்த ரமேஷ் பிரபா கடந்த 2012 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பொறுப்பேற்றார்.

கடந்த 11 மாதங்கள் இப்பொறுப்பை அவர் வகித்து வந்த நிலையில் இன்று காலை அந்தப் பொறுப்பிலிருந்து அவர் திடீரென்று நீக்கப்பட்டு விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


காலை அலுவலகம் வந்த பின் தான் அவருக்கு நீக்கம் பற்றி அறிவிக்கப்பட்டதாம்.இதன்பின் அவர் சிறிது நேரத்திலேயே கிளம்பிச்  சென்று விட்டதாக சொல்கிறார்கள்.


அவருக்குப் பதில் கருணாநிதியின் உறவினர் அமிர்தம் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளதாகவும் தெரிகிறது.இந்த மாற்றங்களின் பின்னணி விரைவில் தெரியவரும்.


1 comment:

semmalai akash said...

என்ன மர்மம் அடங்கி இருக்கிறதோ????