Sunday, 30 September 2012

'புலனாய்வு' இதழ்கள்-மக்களை ஏமாற்றுவதில் விஞ்சி நிற்பது யார்..?




இந்த வாரம் நாம் திறனாய்வுக்கு எடுத்துக் கொள்ளும் ஜூனியர் விகடன்,நக்கீரன்,குமுதம் ரிப்போர்ட்டர் மூன்று இதழ்களும் 27-09-2012  மாலை முடிக்கப்பட்டு வெளிவந்துள்ளது.இதில் உள்ள நிறைகுறைகளை நாம் அலசி அதன் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கியுள்ளோம்.

குமுதம் ரிப்போர்ட்டர்




தொடர்ச்சியாக இரண்டாம் முறையாக இந்த வாரமும் டெல்லி அரசியலை முன்னிறுத்தி அட்டைப் படக் கட்டுரையுடன் கூடிய கவர் ஸ்டோரி வெளிவந்துள்ளது.

வழக்கம் போல சென்னையில் இருந்து கொண்டு அதன் நிருபர் செல்வராஜ் எழுதியிருப்பார் என்று தெரிகிறது.ஆனால் டெல்லியில் இருந்து நிருபர் பட்டாளம் எழுதியயதைப் போல பில்ட் அப் காட்டுகிறது.பலமுறை சொல்லப்பட்ட விஷயங்கள்,கிசுகிசுக்கள்,பல இதழ்களில் வெளிவந்த செய்திகள் என அனைத்தையும்  கலந்து அரைகுறையாக தோன்றியதை வைத்து எழுதப்பட்ட கட்டுரை என்பதைத் தவிர கவர்ஸ்டோரிக்கான தகுதி எதையும் இந்தப் பதிவு கொண்டிருக்கவில்லை.பக்கங்கள் நிரப்பியது தான் மிச்சம்.

'சுவாமி வம்பானந்தா' பகுதியில் தா.பாண்டியன் விட்டுக்கு முதல்வர் சென்றது,.தி.முக.வில் பிளவு,மின் தட்டுப்பாடு,பா...பிரச்சாரம்,என நிரம்பியிருக்கிறது.காவல்துறை கிசுகிசு ஒன்றையும் வெளியிட்டு ஒப்பெத்தியிருக்கிறார்கள்.

இரண்டு இதழ்களாக தமீம் அன்சாரி தீவிரவாதி என்று பிரச்சாரம் செய்த ரிப்போர்ட்டர் இந்த இதழில் அதைக் கொஞ்சம் மாற்றி நல்லவரா.?தீவிரவாதியா என்று ரெண்டுங்கெட்டான் நிலை எடுத்துள்ளது.உள்ளே செய்தியும் அதைப் போலத்தான்.வழக்கமாக அனைத்து இதழ்களும் செய்வது தான்.முடிந்தவரை எதிர்மறையாக எழுதுவது,அது பொதுப்புத்தியில் பதிந்தவுடன் பாதிக்கப்பட்டவர் தரப்பை எழுதுவது போல் நடிப்பது.(ஆனால் படிப்பவர்கள் நம்பும் வாய்ப்பு எதுவும் இருப்பதில்லை)

புத்திரபாசத்தில் அழகிரி,நெகிழும் தச்சுத் தொழிலாளி,திமுக மதுரை பஞ்சாயத்து,தா.பா.விழாவில் வைகோ,பாரதிராஜா உரசல்,நேரு மீதான் அபகரிப்பு புகார்,சினிமா செய்திகள் என கலந்து கட்டி உருவாகியுள்ளது.

கடந்த வியாழன் அன்று மதியம் 12 மணிக்குத் தான்  ..எஸ்.அதிகாரிகள் மெகா டிரான்ஸ்பர் தமிழ்நாட்டில் நடைபெற்றுள்ளது.அதைப் பற்றி ஒருவரிச் செய்தி இல்லை.

அதைப்போல காவிரி பிரச்சனை தமிழ்நாடு,கர்நாடகம்,டெல்லி என கொழுந்து விட்டெறிந்து கொண்டிருக்க அது குறித்த ஒரு வரிச் செய்தி இல்லை.

ஆனால் நிகழ்காலத்தின் குரல் என்று தலைப்பு வேற அட்டையில்.

புதிய மாற்றங்களோ,முயற்சிகளோ எதுவும் இல்லை.






நக்கீரன்





நாட்டில் எத்தனையோ பிரச்சனைகள் தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்க நக்கீரனுக்கோ காவல்துறை கிசுகிசு அட்டைப் படக் கட்டுரையாக ஆகி விட்டிருக்கிறது.

நக்கீரனின் மக்கள் நலப் பணிக்கு இதைவிட வேறு என்ன சான்று இருக்க முடியும்?

அதைப்போல தனது பேரன் தயாநிதியைக் காப்பாற்ற கருணாநிதி திமுக செயற்குழுவைக் கூட்டினால் அதை காங்கிரசுக்கு எதிரான யுத்தபிரகடனம் செய்யும் கூட்டமாக ஊதிப் பெருக்குகிறது நக்கீரன்.அதைப்போல மந்திரி பதவியில் இடம் வேண்டாம் என்று கலைஞர் மறுத்து விட்டதாகவும் செய்தியை அள்ளித் தெரித்து கருணாநிதிக்கு போராளி அரிதாரத்தைப் பூசியுள்ளது.

..எஸ்.அதிகாரிகள் மாற்றத்தில் ராதாகிருஷ்ணன் நியமனம் குறித்த ஒரு பத்தி செய்தியை கடைசிகட்டமாக இணைத்து அப்டேட் செய்துள்ளது

ரகசிய காமரா,சிக்கிய காமக் கொடூரன் என்ற பதிவில் வழக்கம் போல் காமக்கொடூரனை அம்பலப்படுத்துகிறேன் என்ற போர்வையில் வாசகனுக்கு வக்கிரத்தையும் ஆபாசத்தையும் விலாவாரியாகப் பந்தி வைத்துள்ளது.
வழக்கம் போல் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுடன் 2 பக்க அரசியல் கிசுகிசு.

அதைப்போல எதிர்க்குரல் என்னும் பெயரில் மனுஷ்யபுத்திரன் தொடர்ந்து கட்டுரை எழுதி வருகிறார்.
இந்த இதழில் காங்கிரசைக் காப்பாற்றுபவர்கள் யார்? என்ற தலைப்பில் 3 பக்கங்கள் கொண்ட பதிவினை எழுதியுள்ளார்.காங்கிரசை விமர்சனம் செய்து அதைத் தாங்கிப் பிடிப்பவர்கள் குறித்து எழுதபப்ட்ட  அந்தப் பதிவில் காங்கிரசின் மிகப்பெரிய,நீண்டநாள்  கூட்டணிக் கட்சியான,அதிக காலமாக திமுக.வைத் தாங்கிப் பிடிக்கும்  தி.மு.க. வைப் பற்றி எழுதியதே மொத்தம் 3 வரிகள் தான்.அதுவும் இப்படித்தான்.

காங்கிரஸ் பலவீனமடைந்திருக்கும் இந்தச் சூழலிலாவது தனது எதிர்ப்பைக் காட்ட வேண்டும் என்று திமுக நினைப்பது இயல்பு தான்.அதே சமயம் காங்கிரசுடனான இணக்கத்தை முற்றாக முறித்துக் கொள்ளும் சூழலில் திமுக இல்லை.எனவே அரை மனதோடு பந்த்தில் திமுக பங்கேற்றது.

இது தான் அந்த வரிகள்.இதைத் தாண்டி விமர்சனம் எதுவுமில்லை.வாங்குன லைப்ரரி ஆர்டருக்கு விசுவாசமா.?என்று தெரியவில்லை.

இது எதிர்க் குரல் அல்ல.ஜால்ரா குரல்.

அதிமுகவின் நாடாளுமன்றத் தேர்தல் பிளான் என்று 3 பக்க பக்கங்களை நிரப்பியுள்ளனர்.

அடுத்த குறி என்னும் தலைப்பில் திமுக மந்திரிகளைப் பழி வாங்க திட்டமிடுகின்றனர் என்று செய்திப்பதிவு.திமுக வாசகத் தொண்டர்களுக்காக எழுதப்பட்டுள்ளது.அதில் ஹிந்து ராமுக்கும் சேர்த்து வக்காலத்து.
தாண்டவம் தகராறு-அமீர் ராஜினாமா பேக்ரவுண்ட் என்னும் தலைப்பில் தாண்டவம் திரைப்பட கதை தகராறு-பஞ்சாயத்து குறித்து நிருபர் எஸ்.பி.சேகர் எழுதியுள்ளார்.நிருபர் யூ டிவி நிறுவனத்தின் மீது  சாப்ட் கார்னர் உள்ளவர் போலும்.

அவர் எழுதியது இது.

பிரச்சனை பெரிதானதால் மூலக்கதை-பொன்னுசாமி என் டைட்டிலில் போடுவதுடன் ஒரு தொகையும் தருவதாக யு டீவி சமரசம் பெசியது.இதில் உடன்படாத பொன்னுசாமி பிரச்சனையை இயக்குனர்கள் சங்கத்திற்கு கொண்டு போனார்"
என்று எழுதியுள்ளார்.

மூலக்கதை-பொன்னுசாமி என்று டைட்டிலில் போட வேண்டும் என்பது தான் அவரது கோரிக்கை.அதை வலியுறுத்தி தான் அவர் போராடிக் கொன்டிருக்கிறார்.இதற்கு மேல் படம் முழுவதும் தயாரிக்கப்பட்டு விட்ட இந்த நேரத்தில் எந்தக் கோரிக்கையையும் வைக்க முடியாது என்பது அவருக்கும் தெரியும்.ஆனால் டைட்டிலில் பெயரைப் போட முற்றுமுழுதாக யூ டிவி மறுத்து விட்டது.இது அனைவருக்கும் தெரியும்.ஆனால் நிருபரோ யூ டிவி பெயர் போடத் தயாராய் இருந்தும் பொன்னுசாமி பிரச்சனையை வளர்ப்பதாக அர்த்தம் தொனிக்கும் விதத்தில் எழுதியுள்ளார்.

யூ டிவி விருந்தில் பங்கேற்ற விசுவாசம் வெளிப்படாமல் இருக்குமா என்ன..?

மொத்தத்தில் நக்கீரன் வழக்கம் போலத் தான்.எந்த மாற்றமும் இல்லை.
இப்படியே போனால் இப்ப விக்கிற  40000 காப்பியும் விக்காது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.



ஜூனியர் விகடன்




இந்த வாரம் அட்டைப் படக் கட்டுரை ஒன்றும் தேறவில்லை என்பதால் 
ஏற்கனவே பல செய்திப்பதிவுகளில் சொல்லப்பட்ட பல செய்திகளை சின்னச் சின்ன பாக்ஸ் மேட்டர்களாக மாற்றிப் புதிய தலைப்பு வைத்து நன்கு லே அவுட் செய்து கவர் ஸ்டோரியாக மாற்றி அட்டையில் வைத்து விற்பனையும் செய்து விட்டார்கள்.

யார் யார் தலைமறைவாய் இருக்கிறார்கள் என்று தலைப்பிட்டு ஸ்டோரி.பெரும்பாலும் திமுகவினர்.அதில் ஒன்றிரண்டு இதர துரைகளைச் சேர்ந்தவர்களையும் சேர்த்திருக்கிறார்கள்.

மக்களை நாசூக்காக ஏமாற்றுவதில் ஜூ.வி.யா கொக்கா..? 

மிஸ்டர் கழுகு பகுதியில் தா.பா.பிறந்த நாள் செய்தி,சைதை துரைசாமிக்கு ஆதரவான ஒரு செய்தி(நடுநிலை போல் தோற்றமளிக்கிறது),பெங்களூரு சொத்துக் குவிப்பு வழக்கு பாலோ அப்,அடுத்த தலைமைச் செயலாளர் யார் ..? ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றத்தில் ஒரு சிறு பிட் என கலந்து கட்டி எழுதியுள்ளார்கள்.

தாண்டவம் பிரச்சனை,பன்னீர் செல்வம் வீட்டில் நடந்த பஞ்சாயத்து,ஆந்திர மேட்டர்,.சிதம்பரம் நில ஆக்கிரமிப்பு தொடர்பான இடிப்பு ஆகியன பதிவாகி உள்ளது.

எனது இந்தியா,கழுகார் பதில்கள்,மயக்கம் என்ன ஆகிய தொடர்கள் வழக்கம் போல வெளிவந்துள்ளது.(அவரவர் மனநிலைக்கு ஏற்ப,விருப்பத்திற்கு ஏற்பஇதை எடுத்துக் கொள்லலாம்)

இதற்கு முன்பு காசு வாங்கிக் கொண்டு நிறுவனங்களின் விளம்பரத்தை செய்தியைப் போல் வெளியிட்ட ஜூ.வி.இப்பொழுது தனது சுட்டி விகடன் விளம்பரத்தைச் செய்தியைப் போல் 2 பக்கங்கள் ஒவ்வொரு இதழிலும் வெளியிட்டு வருகிறது.காசு கொடுத்து வாங்குபவன் இதையெல்லாம் கேள்வி கேட்கவா போகிறான் என்னும் நினைப்பில்.

அப்புறம் அவ்வளவு தானா..?

ஆசிரியர் குழு  பெயர் கூட இல்லாமல்  இதழ் வெளிவரும்.ஆனால் வைகோ புகழாரச் செய்தியோ அவருக்கு சொறிந்து விடும் செய்தியோ இல்லாமல் இதழ் வெளிவருமா என்ன..?

வழக்கம் போல் வைகோவுக்கு 2 பக்கங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.தா.பா.இதழில் வைகோ பாய்ந்ததை வெளியிட்டுள்ளனர்.

ஜூவி.சராசரிக்கும் கீழ் இருக்கிறது.


மொத்தத்தில் அனைத்து இதழ்களும் அமைச்சர்கள் மாற்றம் என்று தான் பலமுறை கிசுகிசுக்களை வெளியிட்டு வந்தனர்,ஆனால் அது நடக்கவில்லை.எதிர்பாராவிதமாக   ஐஏஎஸ் அதிகாரிகள் பெரிய அளவில் மாற்றப்பட்டுள்ளனர்.இது  குறித்து இதற்கு முன் யாரும் கோடிட்டுக் காட்டவில்லை.அப்புறம் என்ன புலனாய்வு..?

ஆனால் இனிமேல் இதற்குப் பின்னணி என்று அவரவர்க்குத் தோன்றிய கதைகளையும் விருப்பங்களையும் எழுத்தில் போட்டி போட்டுப் பதிவு செய்வர்.

ஒட்டு மொத்தமாகப் பார்க்கப் போனால் அனைத்து இதழ்களும் சொல்லி வைத்தாற் போல்,நாடு முழுவதும் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ள காவிரி பிரச்சனையை மருந்துக்கும் பதிவு செய்யவில்லை.இதழ்கள் நம் மக்கள் மீது காட்டும் அக்கறை இது தான்.

மக்களை ஏமாற்றுவதில் விஞ்சி நிற்பது யார் என்ற போட்டியில் ஒவ்வொரு வாரமும் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் வாசகர்கள் எப்பொழுதும் ஏமாறுவது என்னவோ உண்மை...!





Saturday, 22 September 2012

கவனிக்கிறோமா..? கதை கட்டுகிறோமா..?




"கவனிக்கிறோம்" – என்னும் பெயரில் ஊடக கண்காணிப்பு இணையப் பக்கத்தை சில முற்போக்காளர்களும் அறிவுஜீவிகளும் இணைந்து சில மாதங்களுக்கு முன்பு தொடங்கினர்.



முதல் பதிவிலேயே இதன் நோக்கம் குறித்தும் செயல்பாடுகள் குறித்தும் அதன் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரும், மூத்த பத்திரிகையாளரும் சமூகத்தின் மீது அக்கறை கொண்டவருமாகிய எழுத்தாளர் ஞாநி சுருக்கமாகப் பதிவு செய்திருந்தார்.அது இதுதான்.




ஆனால் இதன் சில பதிவுகள் இந்த நோக்கத்திற்கு முரண்பட்டு இருப்பதை நாம் அறிய முடியும்.எடுத்துக்காட்டாய் ஒன்றைப் பார்க்கலாம்.


சிங்கள பயணிகள் தமிழ்நாட்டில் அடித்து விரட்டப்பட்டதை எந்த ஊடகமும் ஆதரிக்கவில்லை.செய்தியாக மட்டும் பதிவு செய்திருந்தன.ஆனால் தி ஹிந்து,தினமணி மட்டும் அதற்கு கண்டனம் தெரிவித்தனர்.அவர்களைப் பாராட்டும் பதிவு தான் மேலே சொல்லப்பட்டது. 

இந்த ”அறிவார்ந்த” பதிவை எழுதியவர் மீனா என்பவர்.இவர் திருவண்ணாமலையில் வசிக்கும் பள்ளி ஆசிரியர்.அ.மார்க்ஸ் அவர்களின் சிஷ்யர்.

தி ஹிந்து, தினமணி தெரிவித்துள்ள கண்டனத்திற்கு பின்னான அரசியல் வேறு என்பது அரசியலில் பாலபாடம் கற்ற சிறு குழந்தைக்கும் கூடத் தெரியும்.

உலக அரசியலில் இருந்து உள்ளூர் அரசியல் வரை கரைத்துக் குடித்த அ.மார்க்ஸ் அவர்களுக்கும் அவர்களது சிஷ்யகோடிகளுக்கும் தெரியாததல்ல..!

http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Editorial&artid=655164&SectionID=132&MainSectionID=132&SEO=&Title=)%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1


ஆனாலும் பாராட்டு..!

**** 

அப்படிப்பாராட்டும் அளவுக்கு தினமணி ’சிறப்பாக’ என்ன எழுதியிருக்கிறது தெரியுமா..?

அதில் ஒரு சிறுபத்தியை எடுத்துக் காட்டுகிறோம்.







சுருக்கமாகச் சொன்னால் எப்படியும் தமிழ் மீனவன் செத்துப் போவது உறுதி.அப்படிச் செத்துப் போறவன் இந்தியனிடம் பயிற்சி பெற்ற சிங்களனால் செத்துப் போவது பெருமையல்லவா..! என்று  பெருமை பொங்க எழுதியிருக்கிறது.

நமக்கு இதைக் கண்டால் ஆத்திரம் வருகிறது.

கவனிக்கிறோம் குழுவினருக்கோ பாராட்டத் தோன்றுகிறது.

*****


இந்தப் பாராட்டிற்குப் பின்னான கவனிக்கிறோம் குழுவினரின் அல்லது அதில் ஆதிக்கம் செலுத்துபவர்களின் ’உள்நோக்கம்’ உங்களுக்குத் தெரியாததல்ல.

மேலும் இந்தக் கட்டுரையைப் படித்துப் பாருங்கள்.824 வார்த்தைகள் கொண்ட பதிவில் முதல் 630 வார்த்தைகள் பதிவிற்குத் தொடர்பற்று உள்ளது.

மேலே கூறியுள்ளபடி என்று தொடங்கும் இடத்திலிருந்து தான் கட்டுரையாளரின் பதிவு தலைப்பிற்குத் தொடர்பாக உள்ளது.அதற்கு மேல் உள்ளவை எல்லாம் கட்டுரையாளரின் அரசியல் எண்ணத்தையும் அவரது விருப்பத்தையும் பறை சாற்றுவதாக உள்ளது.தங்கள் தனிப்பட்ட அரசியல் விருப்பு வெறுப்பிற்காக எழுத வேண்டுமானால் தனிப்பதிவு எழுதலாமே..!

முதல் பதிவில் ஞாநி சொல்லியிருந்தாரே..!



அதற்கு முற்று முழுதிலும் முரணாக உள்ளது.என்ன நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்டதோ அதை விடுத்து சிலரின் தனிப்பட்ட அரசியல் விருப்பு வெறுப்புக்களைக் காட்டும் தளமாக மாறிவருவதை அறியமுடிகிறது.

ஞாநி போன்றவர்கள் தான் இதற்கு பதில் அளிக்க வேண்டும்.

இது மட்டுமல்ல அதே பதிவில் இன்னொரு வன்மத்தையும் சுட்டிக் காட்டுகிறோம்.

இதனைப் பாருங்கள்.



தமிழ்நாட்டில் விடுதலைப்புலிகள் போராட்டம் நடத்தியதாக கட்டுரையாளர் எழுதியுள்ளார்.இதனை பிளாக்கை நிர்வகிக்கும் மிகப்பெரிய அறிவாளிகள் குழுவும் அனுமதித்துள்ளது. 

இது கட்டுரையாளரின் வன்மம் இல்லாமல் வேறு என்ன? விடுதலைப்புலிகளை நேர்மையாக விமர்சித்தால் தவறு இல்லை.ஆனால் தமிழ்நாட்டில் தளம் அமைத்து விடுதலைப்புலிகள் செயல்படுவதாகப் பொருள்படும் படி எழுதியிருக்கிறார்.

தமிழ்நாட்டில் எங்கு விடுதலைப்புலிகள் இருக்கிறார்கள்..?


இதற்கு மேல் கட்டுரையாளரின் வன்மத்திற்கும் உள்நோக்கத்திற்கும் எடுத்துக்காட்டு வேண்டுமா?


இந்த “ஆகச் சிறந்த” பதிவை எழுதிய மீனா தான் அ.மார்க்ஸ் சில மதிப்பீடுகள் என்ற நுாலையும் தொகுத்தவர். கட்டுரையே இப்படி..?





இப்பொழுது கூட்டிக் கழித்துப் பாருங்கள்.புரியும்.



காமாலைக் காரனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் என்பார்கள்.

வனிக்கிறோம் தனது புலிக்காமாலைக்கு மருத்துவம் பார்க்குமா?

கவனிப்போம்...

Monday, 17 September 2012

தினமலரின் அரசியல் பதிப்பு தீக்கதிர்..!






உதயகுமார் ஓட்டம் என்ற தினமலரின் செய்தியை நகலாக வெளியிடும் தீக்கதிர் 

போராடும் மக்களின் பின் அணிவகுத்து நிற்க வேண்டிய கம்யூனிஸ்டுகள் இங்கோ போராடுபவர்களை இழிவுபடுத்துபவர்களின் ஊதுகுழலாகச் செயல்படுகிறார்கள்.
பேசாமல் உங்களின் கட்சிப் பெயரை மாற்றிவிடுங்கள்.நாங்களும் மக்களின் பக்கம் நிற்க வேண்டும் என்று உங்களை எதிர்பார்க்க மாட்டோம்.  

கூடங்குளம்-தினமலரின் அரசியல் பதிப்பு தீக்கதிர்..!


Monday, 3 September 2012

வீழ்வது தமிழ் இனமாக இருப்பினும் வாழ்வது நாமாக இருக்கட்டும்-தாத்தா வழியில் பேரன்கள்..!



ஈழத்தில் உள்ள தமிழர்களைத் தொப்புள் கொடி உறவு என்ற சொல்லாடல் மூலம் முதன்முதலில் விளித்தது முரசொலி மாறன்.அதனைத் தான் இன்று அனைவரும் பயன்படுத்துகிறார்கள் என்று பேராசிரியர் க.அன்பழகன் டெசோ மாநாட்டில் சொன்னதாக தி.மு.க.உடன்பிறப்பு ஒருவர் பெருமையுடன் முகநூலில் பகிர்ந்திருந்தார்.

ஆனால் அந்த முரசொலி மாறனின் மகன்கள்,தொப்புள் கொடி உறவுகளின் மயானத்தில் வர்த்தகம் தொடங்க இருக்கும் சிறுமையை இங்கு பகிர்ந்து கொள்கிறோம்.

திருவாரூர் வீதியில் 14 வயதில் இந்தி அரக்கியை எதிர்த்து மாமா வுடன் கொடி ஏந்திச் சென்று போராடியதாகச் சொல்லப்பட்ட,சண்முகத்தம்மாள் மகனாகிய மாறன் அடுத்த 30 ஆண்டுகளில் இந்தி ஏகாதிபத்தியத்திற்கு அடிமையாய் கொடி தூக்கிய அவலத்தைக் கண்டவர்களுக்கும்,அதற்குப் பரிசாய் பல நூறு கோடிகளின் சாம்ராஜ்யங்களுக்கு அதிபதியாய் ஆன வரலாறு தெரிந்தவர்களுக்கும் அவரது மகன்களின் செய்கை துளியும் வியப்பளிக்காதது  தான்.

ஆனாலும் நடக்க இருப்பதைப் பகிர வேண்டியது நமது கடமை.


இந்த நூற்றாண்டின் மிக மோசமான இனப்படுகொலை இலங்கையில் நடைபெற்றிருக்கும் நிலையில் அதற்கு உரிய நியாயம் கேட்டு உலகம் முழுவதும் உள்ள மனித உரிமை ஆர்வலர்களும், தமிழர்களும் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் அவர்களின் குரல்கள் செவிடர் காதில் ஊதிய சங்காக இருக்கிறது.அதே சமயம் தமிழினப் படுகொலைக்குக் காரணமான சிங்கள இனவாதத்துடன் அனைவரும் போட்டி போட்டுக் கை குலுக்கித் தங்கள் வர்த்தக நலன்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றனர்.தனது கொலைகார முகத்தை மறைப்பதற்காக இதனை சிங்கள இனவாதம் முழுமூச்சுடன் செய்கிறது.

சிங்கள ஏகாதிபத்தியம் அதிலும் தமிழ்நாட்டுத் தமிழன் என்றால் ராஜமரியாதையுடன் சிவப்புக் கம்பளம் விரிக்கிறது.அதிலும் போராட்டக்காரர்களின் குரலை யார் தமிழ்நாட்டில் எதிரொலிப்பார்கள் என்று ”நம்பப் படுகிறதோ”,யார் கையில் ஊடகம் இருக்கிறதோ, அவர்களுக்கு உச்சபட்ச மரியாதையை வழங்க ராஜபக்சே கும்பல்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கின்றனர்.

புதிய தலைமுறை தொலைக்காட்சி குழுமத்தின் பல்கலைக் கழகம் இலங்கையில் கால் பதித்ததை ஆதாரங்களுடன் ஏற்கனவே வெளியிட்டோம்.அந்த வரிசையில் இப்பொழுது மாறன்களுக்குச் சொந்தமான ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் தனது வணிகத்தை கொழும்புவிற்கு வரும் செப்டம்பர் 20 ஆம் தேதியில் இருந்து  மதுரையில் இருந்து தொடங்குகிறது.


தொடர்புடைய இணைப்புக்கள்.





சன் டிவி தொடங்கப்பட்டதற்கும் இன்று அசுர வளர்ச்சி அடைந்ததற்கும் ”திராவிடர்”களின் நலனுக்காகத் தொடங்கப்பட்டதாகச் சொல்லப்பட்ட தி.மு.க. எந்த அளவு பின்னணியில் இருந்தது என்று ஊடக அரசியல்,தமிழ்நாட்டு அரசியல் தெரிந்தவர்களுக்குத் தெரியும்.(சன் டிவி குறித்த தெளிவான சித்திரததை இதன் மூலம் அறியலாம்.)

http://savithrikannan.blogspot.in/2007/05/blog-post.html

காலங்கள் மாறிய பின் பதவி வெறிக்காக,இன்று தி.மு.க.,இனப்படுகொலைக்குத் துணை நின்றதைப் போல,வணிக நலன்களுக்காக சன் குழுமம் லட்சக்கணக்கான தமிழர்கள் புதைக்கப்பட்ட மயான பூமியில் வர்த்தகம் தொடங்க இருக்கிறது.

தி.மு.க.விலாவது பெயரளவுக்காவது இன்னும் இனம்,மொழி,என்று இன்னமும் பேசிக் கொண்டு இருக்கின்றனர்.  

ஆனால் சன் தொலைக்காட்சி குழுமங்களிலோ நடுநிலை என்பதும்,இனம்,மொழி என்பதும் என்றும் எப்பொழுதும் பெயரளவுக்குக் கூட கிடையாது. ஒருதலைப்பட்சமான செய்தி,இருட்டடிப்பு போன்றவற்றுக்கு சன் குழுமத் தொலைக்காட்சிகள் தான் அஸ்திவாரம்.இதனால் தான் இந்தியாவில் எங்கும் இல்லாத அளவுக்குத் தமிழ்நாட்டில் தான் ஒவ்வொரு அரசியல் கட்சியும் ஆளுக்கொரு தொலைக்காட்சி தொடங்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. 

தமிழ்நாட்டில்  ஊடக அறம் என்பதே இன்று கேலிக் கூத்தாகி விட்டது.

2009 இல் நடைபெற்ற இறுதிக் கட்டப்போரின் பொழுது கூட பாதிக்கப்பட்ட தமிழர்கள் சார்பாகச் செய்தி எதனையும் சன் குழும ஊடகங்கள் வெளியிட்வில்லை.இலங்கை ராணுவம் கிளிநொச்சியைப் பிடித்தது,இலங்கை ராணுவம் முன்னேறுகிறது என்று தான் செய்தி வெளியிட்டன.

இந்த லட்சணத்தில் இனி ஈழ விஷயத்திலும்,தமிழக மீனவர்கள் தாக்கப்படும் விஷயத்திலும்,தமிழ்நாட்டில் அவர்களுக்கு ஆதரவாய்ப் போராடுபவர்களின் குரல்களை எதிரொலிப்பதிலும் நடுநிலை என்பது சன் குழுமத்தில்

பெயரளவுக்கு அல்ல,மயிரளவுக்கும் இருக்காது என்பது தான் உண்மை. 



தொடர்பற்ற ஆனால் தொடர்புடைய செய்தி.

சினிமாப் பாட்டுப் பாடும் கலைக் கூத்தாடிகளை எதிர்த்து குரல் எழுப்பியவர்கள்,ஏர்டெல் போன்ற வணிக நிறுவனங்களை எதிர்த்த கட்சியினர் யாரும் இதில் குரல் கொடுக்க மாட்டார்கள் என்று புதிய தலைமுறை விஷயத்தில் உங்களுக்குத் தெரிந்திருக்கும்.ஏனென்றால் அவர்களுக்கான இலவச மார்க்கெட்டிங் கை அவர்கள் எப்படிக் கெடுத்துக் கொள்வார்கள்.?நன்றி விசுவாசமும் காரணமாய் இருக்கலாம்.இதுவும் உங்களுக்குத் தெரியும்.

அவர்களாவது அரசியல்வாதிகள்.அவர்கள் அப்படித்தான் என்பது உலகிற்குத் தெரியும்.ஆனால் இதில் அம்பலப்பட்ட அமைப்பும் சில இருக்கின்றன.குறிப்பாய் இனப்படுகொலை நடைபெற்ற நாளை நினைவு கூறும் வகையில் தொடங்கப்பட்ட அமைப்பு புதிய தலைமுறை குழுமம் கொழும்பில் தொழில் தொடங்கும் விஷயத்தில் கள்ள மவுனம் சாதித்தது தான்.இந்த விஷயத்தில் என்ன செய்கிறது என்று பார்ப்போம்.

ஊழலுக்கும் அதிகார வெறிக்கும்,முறைகேட்டிற்கும்,ஜாதி வெறிக்கும் மனிதர்களும் அமைப்புகளும் பலியாவது மட்டும் நம் கண்ணுக்குத் தெரிகிறது.
ஆனால் இலவச பப்ளிசிட்டிக்கு மனிதர்கள் பலியாவது நம் கண்ணுக்குத் தெரிவதில்லை. அதையும் கண்டுகொள்ளுங்கள்.