Monday 27 April 2015

குமுதம் கூட்டுக்களவாணி…! அர்ச்சனை வைரமுத்துவுக்கு மட்டும்..!


டந்த வாரம் முழுவதும் இணையம் முழுவதும் வைரமுத்துவின் மீதான அர்ச்சனை தான். ’குமுதம்’ வார இதழில் வெளிவரும் வைரமுத்துவின் சிறுகதைகளைப் பாராட்டி  மறைந்த எழுத்தாளர் ஜெயகாந்தன் கடிதம் எழுதினார் என்று அதை ‘குமுதம்’ வெளியிட்டது. அதையொட்டித் தான் சர்ச்சை தொடங்கியது. 

அதே ’குமுதம்’ இதழில் தொடர் எழுதிவரும் ஜெயகாந்தனின் மகள் தீபலட்சுமி இது என் தந்தை எழுதிய கடிதம் இல்லை என முகநூலில் மறுக்க இணையம் பற்றிக்கொண்டது. அதன் மறுநாள்  கோலப்பன் The hindu வில் இதனை முக்கிய செய்தியாக்க தொடர்ந்து வைரமுத்துவை வரிசை கட்டி அடித்தார்கள். 

வைரமுத்து புகழுக்காகவும் பணத்துக்காகவும் எதையும் செய்யத் துணிபவர்,இதையும் செய்திருப்பார் என்பதில் எந்த சந்தேகம் இல்லை. ஆனால் சம்பந்தப்பட்ட ’குமுதம்’ இதழைப்  படித்த எவரும் முழுக் களவாணித்தனமும் வைரமுத்துவிடம் இல்லை. என்பதையும் ’குமுதம்’ இதழுக்கும் இதில் முக்கியப்பங்கு உள்ளது என்பதையும் அறிய முடியும்.

கடிதத்தை பிரசுரித்த ’குமுதம்’ அதற்கு முன்பு ஒரு பக்கத்திற்கு இதனை வெளியிட்டிருக்கிறது.

//ஜெயகாந்தன் தன் கடைசி நாட்களில் குமுதத்தில் வெளிவரும் வைரமுத்து சிறுகதைகளைப் படித்தும் படிக்கச் சொல்லிக் கேட்டும் வந்தார் என்று அறிந்தோம். அதுகுறித்த அவரது அபிப்ராயத்தைப் பதிவு செய்ய முடியுமா என்று அன்போடு கேட்டோம். அதை ஒரு கடிதமாக கவிப்பேரரசு வைரமுத்துவின் வீட்டுக்கே ஆள் மூலம் அனுப்பி விட்டார்.//

குமுதத்தில் வெளிவரும் வைரமுத்துவின் சிறுகதைகள் குறித்த அபிப்ராயத்தை  ஜெயகாந்தனிடம் நாங்கள் கேட்டோம்.அவர் அதனை வைரமுத்துவின் வீட்டுக்கே அனுப்பி விட்டார் என குமுதம் சொல்கிறது. வைரமுத்து என்ன சொல்கிறார் ? 

வீட்டுக்கு ’வந்த’ கடிதத்தை வெளியிடக் கொடுத்திருக்கிறார். ஆக இதில் தவறு நடந்துள்ளது எங்கு ? 




குமுதத்திடம் இருந்து தான் தொடங்குகிறது. கருத்தை ஜெயகாந்தனிடம்  கேட்டோம்,கவிஞரின் வீட்டுக்கு ஆள் மூலம் கடிதத்தை அனுப்பி விட்டார் எனக் குமுதம் தான் சொல்கிறது. அதன்பின்பு ’தி இந்து’ ரிப்போர்ட்டர்  கோலப்பன் கேட்கையில் வேறு என்ன பதிலை வைரமுத்துவால் சொல்ல இயலும்..? 

ஆம்.கடிதம் வீட்டுக்கு வந்தது என்று தான் வைரமுத்து சொல்ல முடியும்..? இல்லை குமுதம் அலுவலகத்தில் தயாரிக்கப்பட்டது என்றோ இல்லை என் வீட்டில் தயாரித்தேன் என்றா சொல்ல முடியும்.? 

இதன்படி பார்த்தால் வந்த கடிதத்தை குமுதம் அலுவலகத்தில் சேர்ப்பித்ததைத் தவிர வேறு எந்தத் தவறும் வைரமுத்துவிடம் இல்லை. மோசடி முழுக்க முழுக்க குமுதத்தின் மீது தான் இருக்கிறது. வைரமுத்து அதற்கு உடந்தை என்று வேண்டுமானால் சொல்லலாம்.

னால் ஜெயகாந்தனின் மகள் எழுதிய பதிவின் படி 



இதன்படி பார்த்தால் வைரமுத்து மீது தான் முழுக்கத் தவறு இருக்கிறது. இவரே ஒரு கடிதத்தைத் மோசடியாகத் தயாரித்திருக்கிறார். ஆனால் அதனை நேரடியாக வெளியிடாமல் குமுதம் வார இதழ் கடிதம் கேட்டதாகவும் அதன்படி ஜெயகாந்தன் பாராட்டுப் பத்திரத்தை வீட்டுக்கு அனுப்பியதாகவும் குமுதம் ஆசிரியர் குழுவை திரைக்கதை எழுத வைத்திருக்கிறார். 

தன் மோசடிச் செயலுக்கு குமுதத்தை உடந்தையாக்கி  இருக்கிறார். மோசடியில் பி.எச்.டி பட்டம் பெற்ற அவர்களும் இதனை மகிழ்ச்சியாய்ச் செய்திருக்கிறார்கள். 

தனது வார இதழில் வெளியாகும் வைரமுத்துவின் சிறுகதைகளைப் பிரபல்யமாக்கும் நோக்கத்துடனும் அதனைப் புத்தகமாகப் பதிப்பிக்கும் பொழுது அது ’குமுதம் பப்ளிகேஷன்ஸ்’ வெளியீடாக வரும் பொழுது அதற்கு இலக்கிய அந்தஸ்து கொடுப்பதற்கும் அதன் சந்தை மதிப்பை அதிகப்படுத்தவும் ’குமுதம்’ இதழ் தெரிந்தே துணை போயிருக்கிறது. குமுதம் உடந்தையாய் இருந்ததால் தான் இவ்வளவு பெரிய மோசடியைச் செய்து மிகப்பெரிய அறுவடையைச் செய்யவும் வைரமுத்து துணிந்து இறங்கியிருக்கிறார்.

 இதனால் இருவருக்கும் ஒருசேர லாபம். கடிதம் கண்ட 'கவிஞர்' வீட்டுக்குச் சென்று நன்றி சொன்னாராம் என மோசடியில் தனக்குத் தொடர்பில்லாதது மாதிரி முன் எச்சரிக்கையாய் கிசுகிசு பாணியில் பாலோ அப் செய்தியையும் குமுதம் எழுதியிருக்கிறது. 



ஆனால் இணையப் பயன்பாட்டாளர்களும்,அறிவுஜீவிகளும் ’தி இந்து’ கோலப்பனும்,குமுதத்தில் தொடர் எழுதும் ஜெயகாந்தனின் மகளோ ஒட்டுமொத்தமாய் வைரமுத்துவின் மீது மட்டுமே பாய்கிறார்கள். அதற்கு ஒன்று வைரமுத்துவின் மீதான வெறுப்பு காரணமாய் இருக்க முடியும்,அல்லது குமுதம் இதழ் மீதான பாசம் அல்லது குமுதத்தைப் பகைத்தால் என்றாவது அதில் வெளிவரும் துக்கிணியூண்டுச் செய்தி வராமல் போய்விடக்கூடாதே என்ற முன் எச்சரிக்கை என ஏதாவது ஒன்று காரணமாய் இருக்க முடியும். அல்லது சம்பந்தப்பட்ட குமுதம் வார இதழைப் படிக்காமல் தான் படித்த, கேட்ட செய்தியை வைத்துக்கொண்டு எழுதித் தள்ளுவது மட்டுமே காரணமாய் இருக்க முடியும்.

இவ்வளவு நடந்தும் சம்பந்தப்பட்ட ’குமுதம்’ இதழோ ஒரு வருத்தமோ,விளக்கமோ எதுவும் வெளியிடாமல் அடுத்த இதழைக் கொண்டு வந்துள்ளது. வைரமுத்துவைப் போல தான் செய்த மோசடித்தனத்தில் கடைசி வரை உறுதியாய் நின்று உண்மையாக்கி விடமுடியும் என நம்புகிறது போலும். 

மாபெரும் எழுத்தாளனின் மரணத்தில் கூட மோசடித்தனம் செய்து புகழுக்கும் வணிகத்துக்கும் வெறிபிடித்து அலையும் வைரமுத்துவும் குமுதமும் சரியான ஜோடி தான்.

Thursday 16 April 2015

கலாநிதி மாறனின் அல்ஷேசன் நாய்க்கு வெறி..! ஊழியரைக் கடித்துக் குதறியது..!!



டந்த 25 ஆண்டுகளில்  மனித உரிமை பற்றிய விழிப்புணர்வு அனைத்து மட்டங்களிலும் ஏற்பட்டு விட்டது. மாதா,குரு என்ற வரிசையில் உள்ளவர்கள் தங்களின் உரிமைக்குத் தீங்கிழைத்தாலும் அதற்கு எதிரான குரல்கள் எழத்தான் செய்கின்றன. ஆசிரியர் மாணவனைப் பிரம்பால் அடித்து நாடு தழுவிய விவாதமாய் எத்தனையோ முறை எழுந்துள்ள‌து. ஊடகங்களும் அத்தகைய குரல்களுக்கு முக்கியத்துவம் அளித்து வெளியிடுகின்றன. இதனால் யாரும்  வெளிப்படையாய் தீங்கைச் செய்ய அஞ்சுகின்றார்கள்.

ஆனால் நம் கையில் இந்தியாவின் மிகப்பெரிய ஊடக குழும‌ம் இருக்கிறது,நம்மை யாரும் எதுவும் செய்ய முடியாது என்னும் திமிரில்,கொழுப்பில் ஆணவத்தில் அதிகார மமதையில் தனக்கு கீழ் வேலை செய்த ஒரு சாதாரண ஊழியனை அடித்து மிதித்து சித்திரவதை செய்து கொலை மிரட்டல் விடுத்த ரவுடி கம் நாளிதழ் ஆசிரியர் மற்றும் நிர்வாக இயக்குனர் மீதான குற்றப் பட்டியல் இது.

தினகரன் நாளிதழ் கே.பி.கே குமரன் தரப்பிடமிருந்து விலைக்கு வாங்கப்பட்ட பின்பு அதன் ஆசிரியர் மற்றும் நிர்வாக இயக்குனராய் பொறுப்பேற்றவர் ஆர்.எம்.ஆர்.ரமேஷ்.

இவருக்கு ஊடகம் குறித்து என்ன தெரியும்..?

இவர் ஆசிரியர் பொறுப்பேற்ற பொழுது, தனக்கு கீழ் பணியாற்றிய ஊழியர்களிடம் இவரது வார்த்தைகளிலேயே சொல்வதென்றால், "பத்திரிகை குறித்து  எனக்கு எதுவும் தெரியாது."

அப்படியென்றால் இவருக்கு எப்படி இந்தப்பதவி கிடைத்தது ?

கலாநிதிமாறனின் கல்லூரித் தோழர். அது மட்டுமல்ல,அவரது அனைத்து சட்டவிரோத காரியங்களுக்கும் துணை நிற்பவர். இது ஒன்று போதாதா மாறன் சாம்ராஜ்யத்தின் தளபதியாய் பொறுப்பேற்க..?

கலாநிதிமாறன் கோபத்தில் இருந்தால் இவரை 'நாய்' என்றும் மகிழ்ச்சியாய் இருந்தால் 'அல்சேஷன் டாக்' என்றும் அழைப்பார்.(அல்ஷேசன்கள் கலாநிதியை மன்னிக்க வேண்டும்)

இவர் தான் ஒட்டுமொத்த 'தினகரன்' சாம்ராஜ்யத்தின் தளபதி.இவருக்கு விசுவாசமான ஆட்கள் தான் ஆசிரியராகவும் அனைத்து பதிப்புகளிலும் மேலாளர்களாகவும் இருக்கிறார்கள். இவரன்றி 'தினகரன்' நாளிதழில் அணுவும் அசையாது. ஊழியர்களின் சம்பள உயர்விலிருந்து புதிதாய் நியமிக்கப்ப‌டுவது வரை மற்றும் நிர்வாகம் முழுமையும் இவரது அனுமதியின் பெரிலும் தலையசைப்பிலும் நடக்கும். இவருக்கு முகஸ்துதி போட்டு பிழைப்பு நடத்தும் கும்பல் 'தினகரனில்' மிக அதிக அளவில் இருக்கிறது என்பது உபரித்த‌கவல்.

இந்த அறிமுகம் போதும் என நினைக்கிறோம்.

இனி இவர் ஊழியர்களிடம் நடப்பது குறித்து சிறு அறிமுகம்.

யாரையும் இவர் மரியாதையாக நடத்தியது கிடையாது, எவ்வளவு பெரிய அனுபவசாலி,வயதில் முதியவர் என்றாலும் ஒருமையிலும் தரக்குறைவாகவும் தான் வார்த்தை வரும்.

ஆனால் வல்லவன் உண்டல்லவா..?

இவருக்கு சுயமரியாதை பாடம் எடுக்கும் தைரியம் ஒருவருக்கு இருந்த‌து.

அப்பொழுது 'சன் நியூஸ்' ஆங்கில சேனல் ஒளிபரப்பாகி கொண்டு இருந்த‌து. அண்ணா அறிவாலய வளாகத்தில் தான் அலுவலகம்.

ஆர்.எம்.ஆர் எடிட்டோரியலில் நுழைகிறார். அங்கு ஒரு ஊழியரை அழைக்கிறார் எப்படி தெரியுமா..?

"டேய் இங்க வாடா..?"

யாரும் திரும்பவில்லை.திரும்பவும் அருகில் சென்று அழைக்கிறார்.

"டேய் இங்க‌ பாருடா..? உன்னைத் தாண்டா..? காது செவிடா..?"

அந்த ஊழியர் சடாரென்று கோபத்துடன் திரும்புகிறார். அவரது பெயர் நம் ஞாபகத்தில் இல்லை.'பிலிக்ஸ்' என வைத்துக் கொள்வோம்.  திறமையானவர்.

"மிஸ்டர் ஆர்.எம்.ஆர்.,முதலில் மரியாதையாக பேசக் கற்றுக் கொள்ளுங்கள். "

கூழைக்கும்பிடு போடுபவனையும்,அச்சத்துடன் விலகிச்செல்பவனையும்,போலி மரியாதையையும் பார்த்துப் பழகிப்போன ஆர்.எம்.ஆருக்கு  இந்தப் பதிலைக் கேட்டவுடன் முகம் மாறுகிறது. ஆனாலும் சமாளிக்கிறார்.

"என்னப்பா நான் என்ன சொல்லிட்டேன்,நம்ம ரெண்டு பேருக்கும் இருக்கும் பழக்கத்தில் தானே இப்படிக் கூப்பிட்டேன்" என சமாளிக்கிறார்.

நண்பர் விடவில்லை. "நம்ம ரெண்டு பேருக்கும் எவ்வளவு வருட பழக்கம் ?இங்கு வேலைக்கு வந்த பின்னாடித்தான் தெரியும்.அப்புறம் எப்படிக் கூப்பிடலாம்..? சரி நானும் அதே காலப் பழக்கம் தானே..? உங்களை டா போட்டு கூப்பிடலாமா மிஸ்டர்..? "

ஆர்.எம்.ஆர்.வெலவெலத்துப் போகிறார்.

"உங்க கூடத்தான் படிச்சார் கலாநிதி மாறன்,அவரை எல்லோர் முன்னாடியும் டா போட்டுக் கூப்பிட முடியுமா..? முதலில் மரியாதையா நடந்துக்கோங்க‌..நீங்க‌ எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும் அது பத்தி எனக்கு கவலையில்லை."

வெளிறிய முகத்துடன் வெளியேறுகிறார்.

னது ஊழியரை இவ்வாறு இழிவாய் நடத்தும் ஆர்.எம்.ஆர் தனது முதலாளியிடம் எப்படி கூழைக் கும்பிடு போடுவார் தெரியுமா..? அதற்கு ஒரு சம்ப‌வம் சொல்கிறோம்.

தயாநிதி மாறன் மத்திய ஜவுளித்துறை கேபினட் அமைச்சராய் பதவியேற்ற சமயம்.

'தினகரன்' அலுவலக ஊழியர்கள், கச்சேரி சாலை அலுவலகத்தில்  சந்தித்து வாழ்த்து தெரிவிக்கின்றனர்.

 'தினகரன்' மற்றும் 'தமிழ் முரசு' ஆசிரியர் (பொறுப்பு) வகிக்கும் திரு.கதிர்வேல் தலைமையில் ஒரு பிரிவு செல்கிறது. அவருடன் 'தமிழ் முரசு' நியூஸ் எடிட்டர் மனோஜ் மற்றும் நிருபர் மோகன் ஆகியோரும் உடன் செல்கின்றனர்.

தயாநிதிமாறன் முன்பு இவர்கள் சரிக்குச் சமமாய் அமர, 'தினகரன்' இதழின் அதிகாரபூர்வமான ஆசிரியர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஆர்.எம்.ஆர்.எப்படி நடந்து கொள்கிறார் தெரியுமா..?



ஒரு ஓரத்தில் கைகட்டி ஆபிஸ் பையன் மாதிரி நிற்கிறார். இத்தனைக்கும் தயாநிதி மாறனின் உடன்பிற‌ந்த சகோதரன் கலாநிதிமாறனின் கல்லூரித் தோழர் மற்றும் நண்பர் தான் ஆர்.எம்.ஆர். ஆனால் இளைய முதலாளி முன்பு சேரில் அமராமல் கைகட்டி சேவகம் செய்கிறார். இப்படி கூழைக்கும்பிடு போடுபவர் தான் இவர்.

ஆனால் இதே ஆர்.எம்.ஆரோ தனக்கு கீழ் வேலை செய்யும் தொழிலாளியை கொத்தடிமை போல் நடத்துகிரார்.

எஸ்.பி.வீட்டில் ஆர்டர்லி வேலை பார்க்கும் காவலர்,தனனைத் தேடி காவல்நிலையம் வரும் அப்பாவியைத் தூக்கிப் போட்டு மிதிப்பதில்லையா..? அந்த எடுத்துக்காட்டு ஆர்.எம்.ஆருக்கு முற்றிலும் பொருந்தும்.

இனி ஆர்.எம்.ஆரின் ரவுடித் தனத்தைப் பார்ப்போம்.தினகரனில் உதிய உயர்வு இரண்டு ஆண்டுகளாய் மறுக்கப்பட்டு வந்தது.

 இந்த நிலையில், ஏப்ரல் 9 ஆம் நால் ஊதிய உயர்வு சிலருக்கு மட்டும் கண்துடைப்பாய் அளிக்கப்ப‌ட்டது. அதை எதிர்த்து பெரும்பாலோனோர் அமைதி காக்க சுயமரியாதை மிக்க லேஅவுட் ஆர்ட்டிஸ்டுகள் ஏப்ரல் 10 ஆம் தேதி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்துகின்றனர்.



***

கேஷ் பழைய  தினகரன் ஊழியர்.ஆபிஸ் பாயாக தினகரனில் 5 வருடமும்,அதைத்தொடர்ந்து  லே அவுட் ஆர்ட்டிஸ்டாக 7 வருடமும் வேலை பார்த்தவர்.

இனி நடந்த சம்பவத்தை பாதிக்கப்ப‌ட்ட லேஅவுட் ஆர்ட்டிஸ்டான மகேஷ் வார்த்தைகளிலேயே கேட்போம்.

மகேஷ்


"நான் சென்னை கச்சேரி சாலையில் அமைந்துள்ள 'தினகரன்' நாளிதழ் அலுவலகத்தில் லே அவுட் ஆர்ட்டிஸ்டாக கடந்த 7 ஆண்டு காலமாய்ப் பணிபுரிந்து வருகிறேன். இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாய்  எனக்கு ஊதிய உயர்வு கொடுக்கவில்லை.  

அதனால் கடந்த 10.04.2015 அன்று நானும் இன்னும் சில அலுவலக ஊழியர்களும் ஊதிய உயர்வு கோரி தினகரன் அலுவலகத்தினுள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினோம். அப்பொழுது எங்களுடன் தலைமை வடிவமைப்பு நிர்வாகி திரு.வேதராஜன் சமாதானப் பேச்சு வார்த்தை நடத்தினார். 

ஆனால் நாங்கள் ஒப்புக் கொள்ளாததால் ஆசிரியர் பொறுப்பு வகிக்கும் திரு. ராமன்   எங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். அதிலும் உடன்பாடு ஏற்படவில்லை. அதைத்தொடர்ந்து தலைமை நிருபர் திரு.சுரேஷ் வேதநாயகம் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

எங்களின் குறைகளை எழுதித் தருமாறும் நிர்வாக இயக்குனர் ஆர்.எம்.ஆர்.ரமேஷ்  கவனத்துக்கு கொண்டு சென்று தீர்வு வாங்கித் தருவதாகவும் உறுதி அளித்து எங்களின் கோரிக்கையை எழுதி வாங்கிக் கொண்டார். அதை ஏற்றுக் கொண்டு நான் உட்பட அனைவரும் எமது கோரிக்கையை எழுதி அவரிடம் தனித்தனியாய்க் கொடுத்தோம்.

என்னிடம் கடிதம் வாங்கும் பொழுது திரு சுரேஷ் வேதநாயகம்,நிர்வாகத்துக்கு எதிராய் உனது செயல்பாடு இருக்கிறது, அதற்கான விலையை நீ கண்டிப்பாய் கொடுக்க வேண்டி வரும் என மிரட்டினார்.ஆனால் நாங்கள் அமைதியாக இருந்து விட்டோம்.

அதன் பின் 13-04-2015 தினகரன் அலுவலகத்தில் மதியம் 12.45 மணி அளவில் பணியில் இருந்த பொழுது டெலிபோன் ஆபரேட்டர் வனிதா எனக்கு போன் செய்து மதியம் 2.30 மணிக்கு நிர்வாக இயக்குனர் திரு.ஆர்.எம்.ஆர் ரமேஷைச் சந்திக்க எம்.ஆர்.சி.நகரில் அமைந்துள்ள‌ சன் நெட்வொர்க் தலைமை அலுவலகத்துக்கு செல்லுமாறு கூறினார். 

அதனை ஏற்று நான் உடனடியாக சுமார் 1.30 மணி அளவில் அங்கு சென்றேன். அந்த சமயத்தில் திரு.ஆர்.எம்.ஆர்.ரமேஷ் அங்கு இல்லை,அவரது உதவியாளர் திரு.மணி என்பவர் மட்டும் இருந்தார். அவர் நிர்வாக இயக்குனர் மதிய சாப்பாட்டுக்கு சென்றிருப்பதாகவும் மாலை 3 மணி அளவில் வருமாறும் கூறினார். அதைக்கேட்டு நான் மீண்டும் தினகரன் அலுவலகத்துக்கு பணிக்குச் சென்றேன்.

அதன் பின்  சுமார் 2.15 மணி அளவில் மீண்டும் சன் நெட்வொர்க் அலுவலகத்துக்கு நானும் சக ஊழியர் ராஜூம் கிளம்பிச் சென்றோம், அப்பொழுது சன் நெட்வொர்க் அலுவலகம் அருகில் தினகரன் தலைமை நிருபர் திரு.சுரேஷ் வேதநாயகம்,எங்களை வழிமறித்து,எம்.டி, ஆர்.எம்.ஆரிடம் எதிர்த்து பேச வேண்டாம், நடைபெற்ற போராட்டத்துக்கு வடிவமைப்பு நிர்வாகி திரு.வேதராஜன் தான் காரணம் எனச் சொல்லுங்கள் ,ஆர்.எம்.ஆர்.ரமேஷ் கோபமாக இருந்தால் காலில் விழுந்து விடுங்கள்,அவர் மன்னித்து விடுவார்,இல்லையென்றால் சிக்கல் தான் என எச்சரித்தார்.

அடியாளுக்கு ஆள்காட்டி சுரேஷ்

அதன்பின் நானும் திரு.ராஜூம் சுமார் 2.30 மணி அளவில் சன் நெட்வொர்க் தலைமை அலுவலகம் சென்றோம்.அங்கு நாங்களும் எனது சக லே அவுட் ஆர்ட்டிஸ்டுகள் மதி,அருணாச்சலம்,சுதாகர் ஆகியோர் அவர் அறை அருகில் காத்திருந்தோம்.நாங்கள் அனைவரும் சுமார் 3.15 மணி அளவில் தினகரன் நிர்வாக இயக்குனர் அழைப்பின் பேரில் உள்ளே சந்திக்கச் சென்றோம்.

உள்ளே நுழைந்தவுடன் எங்கள் அனைவரையும் பார்த்த திரு.ஆர்.எம்.ஆர்.ரமேஷ்,"வாங்கடா தேவடியா பசங்களா கொடுக்குறதை வாங்கிட்டு வேலையைப் பாருங்க‌டான்னா ஸ்டிரைக் பண்றீங்களாடா" எவ்வளவு திமிருடா..? என தரக்குறைவான வார்த்தைகளால் எங்களை கடுமையாகத் திட்டியதோடும் இல்லாமல் தனது இருக்கையில் இருந்து எங்களை நோக்கி தாக்கவும் முயன்றார். அதைக் கண்டு அச்சத்துடன் இதர ஊழியர்கள் அனைவரும் அவரது காலில் விழுந்தனர். ஆனால் நான் மட்டும் அமைதியாய் இருந்தேன்.

 இதனால் ஆத்திரமடைந்த ஆர்.எம்.ஆர்.ரமேஷ் என்னை சராமாரியாகத் தாக்கினார்.அப்பொழுது நிலை தடுமாறி கீழே விழுந்தேன்,அதைத்தொடர்ந்து என் கழுத்தில் காலை வைத்து,எங்களை எதிர்த்தால் கொலை செய்து விடுவதாய் மிரட்டினார். நான் எதுவும் செய்வதறியாது உயிர் பயத்துடன் அமைதியாய் இருந்தேன்.

அதன் பின் அனைவரையும் மீண்டும் தரக்குறைவான வார்த்தைகளால் திட்டிய ஆர்.எம்.ஆர்.ரமேஷ், கதிர் இப்படித்தான்,நான் வாங்க மட்டேன்னு நினைச்சு ரிசைனிங் லெட்டர் கொடுத்தாரு. நான் எதுவும் சொல்லாம வாங்கிட்டேன். இப்ப என்ன நிலைன்னு தெரியுமா..? இங்க இருக்கும் வரைக்கும் தான் உங்களுக்குமதிப்பு. என்று சொல்லி மீண்டும் எங்களை கடுமையாகத் திட்டினார். 

என்னுடைய அடையாள அட்டையை மட்டும் பிடுங்கிக் கொண்டு,எல்லோரையும் கிளம்பச் சொன்னார். எல்லோரும் சென்ற பின்பும் நான் அமைதியாய் இருந்தேன்.

 "இப்படியே ஓடிப்போயிரு,இனிமேல் எங்காவது பார்த்தால் உன்னை மட்டுமல்ல உனது குடும்பத்தில் எல்லாரையும் சாவடிச்சுடுவேன்" என்று மிரட்டினார். அதன் பின் அவரது அலுவலக உதவியாளரை அழைத்து என்னைக் கழுத்தைப்பிடீத்து வெளியே தள்ளச் சொன்னார்.அதற்குள்ளாக நானாகவே வெளியே வந்து விட்டேன். "


(இந்த நிலையில் தினகரன் நிர்வாகத்துக்குச் சொந்தமான புதுத்தெருவில் உள்ள இடத்தில் தங்கியிருந்த மகேஷ் அங்கிருந்து வலுக்கட்டாயமாய் வெளியேற்றப்பட்டிருக்கிறார்.பாதிக்கப்ப‌ட்டவர் இன்னும் அச்சத்தில் இருப்பதால் புகார் கொடுப்பது குறித்து தயங்குகின்றார்.)



திய உயர்வு கோருவதும்,அதற்காய் போராட்டம் நடத்துவதும் தொழிலாளர்களின் அடிப்படை உரிமை.ஆனால் அப்படி நடத்திய தொழிலாளிகளை தரக்குறைவாகப் பேசியும் அச்சுறுத்தியும் காலில் விழ வைத்துப் பணியவைத்திருக்கிறார் அடியாள் ஆர்.எம்.ஆர்.அதற்கு உடன்படாத ஒரு தொழிலாளியை அடித்து உதைத்து கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார்.இதற்கெல்லாம் காரணம் நம்மிடம் ஊடக பலம் இருக்கிறது,நாம் மாறனின் அடியாள் என்னும் திமிர் தான்.ஜெயலலிதா ஆட்சியிலேயே இந்த ரவுடித்தனம் என்றால் கருணாநிதி ஆட்சியில் இவர்கள் எவ்வளவு கொட்டம் ஆடியிருப்பார்கள் என்று நினைத்துப் பாருங்க‌ள். 

மகேஷை தாக்கிய அதே நாளில் ஊதிய உயர்வு கோரி போக்குவரத்து தொழிலாளர்கள் நடத்திய போராட்டம் தினகரனில் விரிவாய் வெளிவந்திருக்கிற‌து. ஆனால் இன்னொருபுறமோ தன்னிடம் ஊதிய உயர்வு கோரிய பணியாளனை அத‌ன் நிர்வாக இயக்குனர் எனச் சொல்லிக்கொள்ளும் ரவுடி தாக்கியிருக்கிறார். 

'தினகரன்' நிறுவனத்துக்குள் நீங்கள் நுழையும் முன்பிருந்து அந்த நிறுவன வளர்ச்சிக்குத் தங்களை அர்ப்பணித்தவர்கள் மகேஷ் போன்றவர்கள். ஆனால் நீங்க‌ளோ சுரண்டவும் ஏமாற்ற‌வும் பிழைக்கவும் மட்டுமே இந்த நிறுவனத்துக்குள் நுழைந்தவர். இந்த வழக்கில் நீங்கள் தப்பிக்கலாம்,ஆனால் இது என்றும் நீடிக்காது.

நாம் ஆர்.எம்.ஆருக்குச் சொல்லிக் கொள்வது எல்லாம் ஒன்று தான்.

உலகையே அடக்கி ஆண்ட எத்தனையோ சாம்ராஜ்யங்கள் கடைசியில் மண்ணோடு மண்ணாய்ப் போயிருக்கிற‌து. அதனை ஒப்பிடும்பொழுது மாறன் சாம்ராஜ்யம் தூசுக்குப் பெறாது. அதுவும் நீங்களோ நாட்டைச் சுரண்டிய மாறனை அண்டிப்பிழைத்தும் சுரண்டியும் வாழ்க்கை நடத்துபவர். உங்களின் நிலை மாறவும், வீழவும், தெருவில் திரியவும் காலம் அதிகமில்லை. 

அன்று தெரு நாய் கூட உங்கள் மேல் மூத்திரம் பெய்யும் .


Thursday 9 April 2015

சாதி, மதவெறி ரங்கராஜ் பாண்டே.! பாதுகாக்கும் தந்தி டிவி..!




சென்னை ஆழ்வார்பேட்டை.சி.பி.ராமசாமி சாலையில் கீர்த்திலால் ஜூவல்லர்ஸ் எதிரில் இருக்கும் அபிராமபுரம் பழச்சாறு கடை.

ஊடகவியலாளர்கள் ரவிக்குமார்,பெஞ்சமின்,அன்பரசு,அன்வர் சந்திப்பு.
 
புதிய தலைமுறை அலுவலகம் தாக்குதலுக்கு நம்ம கடுமையான கண்டனத்தைத் தெரிவித்து இன்றைய கூட்டத்தை ஆரம்பிப்போம்,சொல்லியபடியே அன்வர் ஆரம்பித்தார்.

"தினகரனில் ஊதிய உயர்வு போட்டுட்டாங்கன்னும்,வழக்கம் போல் தனிப்பட்ட விருப்பு வெறுப்புடன் அளிக்கப்பட்டிருக்குதுன்னும் தகவல் வருது.எதுக்கும் விசாரித்து விரிவா எழுதுங்க."

" சரி விசாரிப்போம். இன்னும் மஜிதியா கமிட்டி பரிந்துரையை பெயருக்கு கூட அமல்படுத்தலையாமே..? "

"அப்படி ஒரு எண்ணமே துளியும் இல்லைன்னு சொல்றாங்க "ரவிக்குமார் சிரித்தபடியே சொன்னார்.

" மஜிதியா கமிட்டி பரிந்துரையை நிறுவனங்க‌ள் ஒழுங்காக அமல்படுத்துகிறன்றனவா என்று கண்காணிக்க அரசு ஒரு கமிட்டி நியமிச்சிருக்காங்களே..! அது எப்ப‌டி செயல்படுது..? " பார்த்தசாரதி

"அந்த கமிட்டியே தகுதி இல்லாத நபர்களால் நியமனம் செய்யபட்டிருக்குது."







"இதில் நியமிக்கப்பட்டிருக்கும் சகாயராஜ் யாருன்னு ஊர் உலகத்துக்குத் தெரியும், சகாயராஜை 'மஜிதியா கமிட்டி' பரிந்துரை தொடர்பான‌ கூட்டத்துக்கு அழைத்தால் பழக்க தோஷத்தில் நான்கு பேர் வந்திருக்கிறோம்,கவர் கொடுங்க என அதிகாரிகளிடமே கேட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.அப்படிப்பட்ட பேர்வழி. கோபால் ரிட்டயர்ட் ஆகி வீட்டில் இருப்பவர்.

சகாயராஜ்


அன்பு யோக்கியதை நம் வாசகர்களுக்குத் தெரியும். அன்பழகனின் லெட்டர் பேடு அமைப்பான‌ 'சென்னை யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட்' கணக்குகள் தாக்கல் செய்யலைன்னு சங்கப் பதிவையே  ரத்து பண்ணிட்டாங்க‌.


ஆனால் இப்படிப்பட்ட பேர்வழிகள் தான் கமிட்டியில் இருக்காங்க. இப்படியானவர்கள்  எப்படி பரிந்துரையை அமல்படுத்த ஊடக நிறுவனங்களிடம் வலியுறுத்துவாங்க. "

அன்வர் கடைசி வரை நம்பிக்கை இன்றியே சொல்லி முடித்தார்.
**


"தந்தி டிவி' ரங்கராஜ் பாண்டே பெயர் திரும்பவும் சர்ச்சைக்குரியதாக இருக்குதே..? " பார்த்தசாரதி அடுத்த பஞ்சாயத்துக்கு தாவினார்.

பாண்டே என்பதே பீகாரில் இருக்கும் பார்ப்பனர் என்றும் சாதி வெறியுடன் அதனைத் தனது பெயருடன் இணைத்திருக்கிறார்,இது மட்டுமல்ல செங்கொடியின் தியாகத்தைக் கொச்சைப்படுத்தியவர் தான் இந்தப் பேர்வழி என்பதையும்  நாம் ஏற்கனவே பதிவு செய்திருக்கிறோம் "அன்வர்

"  அந்த நேர்காண‌லில் வீரமணியிடம் போதுமான தரவுகள் இல்லை என்பது உண்மை தான். ஆனால் பாண்டே ஒரு ஊடகவியலாளராய் நடந்து கொள்ளவில்லை என்பதும் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டிய விஷயம்  "ரவிக்குமார் கோபப்பட்டார்.

"ஆமாம், நேர்காணலில் எந்த ஆதாரத்தையும் குறிப்பிட்டுக் காட்டாத சாதி வெறி பாண்டே நிகழ்ச்சி முடிந்தவுடன் இணைத்திருக்கிறார். இது மிக தவறானது. இது குறித்து ஒரு பாக்ஸ் மேட்டர் இருக்கு கடைசியா சொல்றேன் " பெஞ்சமின் தொடர்ந்தார்.

"சரி,அது மட்டுமல்லாமல் 'வீரமணி' என்று பெயரைச் சொல்லி அழைத்தார். இது உண்மையில் தவறா என்று பார்த்தால் தவறில்லை தான். ஆனால் இதே அணுகுமுறையை அவர் மோடியிடமும் காட்டியிருக்க வேண்டும்,மோடியின் நேர்காணலில் நரேந்திரன் என்று அழைத்திருக்க வேண்டும்,அதை விட்டு விட்டு அங்கு பம்மி விட்டு, வீரமணி எனப் பெயர் சொல்லி அழைப்பது என்ன வகையான  திமிர். அது மட்டுமல்ல,இந்த பாண்டே ஒரு காலத்தில் விநாயக சதுர்த்தியை சென்னை பிரஸ் கிளப்பில் நடத்தியவரும் கூடத்தான்."


சென்னை பிரஸ் கிளப்பில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடும்
ரங்கராஜ் பாண்டே,பாரதி தமிழன்


பார்த்தசாரதி,"ஆமாம், நல்லா ஞாபகம் இருக்குது. சாதி வெறி ரங்கராஜ் அப்ப பிரஸ் கிளப் இணைச் செயலாளர் பாரதி தமிழன் (எ) பெருமாள் கூடச் சேர்ந்து அதற்கான விதையை முதன் முதலில் ஊன்றியவர். இதனால் விமர்சனம் வரும் என்று நினைத்த பிரஸ் கிளப் நிர்வாகிகள் கண் துடைப்பாக இன்னொரு காரியத்தைச் செய்கிறார்கள்.

அதுவரை ரவீந்திரதாஸ் தான் ரம்ஜான் விழாவைத் தனது சங்கம் சார்பாக உரிய வாடகை கொடுத்து பிரஸ் கிளப்பில் நடத்தி வந்தார். விநாயகர் சதுர்த்தி கொண்டாட முடிவெடுத்த பிரஸ் கிளப் நிர்வாகிகள், ரவீந்திர தாசுக்கு ரம்ஜான் விழாவைக் கொண்டாட இடம் கொடுக்காமல்,விநாயகர் சதுர்த்திக்கு இரண்டு நாள் முன்பு ரம்ஜானையும் பெயருக்கு கொண்டடினார்கள்.

தொடர்ந்து விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி பிரஸ் கிளப்பில் ஆரம்பித்து வைத்தவர்கள் தான் இவர்கள்.இப்படித் திட்டமிட்டு இந்துத்துவ வெறியை வளர்ப்பதில் முனைப்பாய் இருந்த ஒரு நபரிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்..?

இன்னும் சொல்லப்போனால் பிரஸ் கிளப்பில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கூடங்குளம் அணு உலை தொடர்பில் மூத்த பத்திரிகையாளர் ஞாநி தினமலரை விமர்சித்தார் என்பதற்காய் அப்பொழுது அங்கு வந்திருந்த இந்த‌ ரங்கராஜ், ஞாநியையும் அணு உலை எதிர்ப்பாளர்களையும்  தரக்குறைவாய் பேசிய‌வர்.



இப்படிப்பட்ட ஒரு நபருக்குத் தான் இப்ப 'தந்தி டிவி'யில் உயர்ந்த இடம் கிடைச்சிருக்கு. தன் உடன் பணியாற்றி பலரைக் காலி செய்த சாதி வெறியர், இன்னொரு பக்கம் தந்தியின் போட்டி நிறுவனமான தினமலருக்கு நெருக்கமாக இருக்காருன்னும் சொல்றாங்க. பாண்டேகள் எப்பொழுதும் திருந்தப் போவதில்லை,தந்தி நிறுவனத்துக்கு தான் புத்தி வரணும்."

"வேலை செய்யும் சொந்த சாதிக்காரனின் திறமையைச் சுரண்டியும் தமிழ் இன அடையாளத்தோடும் வளர்ந்த தந்தி  நிறுவனம் இப்ப எங்கிருந்தோ வந்த பீகார்  தற்குறிக்கும்,மலையாளிக்கும் லட்சங்களைக் கொட்டிக் கொடுத்து 'தந்தி டிவி'யில் வேலைக்கு வைத்திருக்கிறது "அன்வர் ஆதங்கப்பட்டார்.

பெஞ்சமின் பாக்ஸ் மேட்டரைச் சொல்ல ஆரம்பித்தார்."இதே மாதிரி தான் சில வருடங்கள் முன்னாடி,வலம்புரி ஜானின் 'தாய்' பத்திரிகையில் ஹேமா ஆனந்த  தீர்த்தன் என்னும் எழுத்தாளர் நேர்காணல். நேர்காணல் எந்த பிரச்சனையும் இல்லாமல் முடிந்தது.

ஆனால் அச்சில் வரும் பொழுது அவரது ஒவ்வொரு பதிலுக்கும் பின்பு அடைப்புக்குறியில் நக்கலும் கிண்டலுமான தொனியில்  நேர்காணலை எடுத்த உதவி ஆசிரியர் தன‌து கருத்தை இடைச்செருகலாய்ச் சொல்லியிருந்தார்.



இதைப் படித்த எழுத்தாளர் கொதித்து விட்டார்,வலம்புரிஜானுக்கு நீண்ட கடிதம் எழுதினார்."உங்கள் பத்திரிகையின் உத‌வி ஆசிரியர்,இந்த கிண்டல் குறிப்பை நேர்காண‌லின் பொழுதே சொல்லி எனது பதிலை வாங்கியிருக்கலாமே..? அலுவலகம் சென்ற பின் எனது ஒப்புதல் இல்லாமல்அவரது கருத்தை இணைத்த‌து தவறு "என்று எழுதியிருந்தார்.

இதைப் படித்த வலம்புரிஜான் அடுத்த இதழில் அதற்கு வருத்தம் தெரிவித்திருந்தார்.

"வலம்புரிஜானிடம் இருக்கும் நேர்மை தந்தி டிவியிடம் இல்லை என்பது தான் உண்மை "பார்த்தசாரதி குறுக்கிட்டார்.

அது சரி 'தாய்' இதழுக்காய் நேர்காண‌ல் எடுத்தது யார் தெரியுமா..? அவர் இப்ப பிரபல திரைப்பட பாடலாசிரியர்.சில காலத்துக்கு முன்பு உச்சத்தில் இருந்தவர். இப்பவும் முகநூலில் ஆக்டிவ்வா இருக்கார். "பெஞ்சமின் பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.
**

"தந்தி டிவி குறித்துப் பார்த்தோம்.ஆனால் 'தினத்தந்தி' செய்தி போடவில்லை என்பதனாலே புதுசா ஒரு நாளிதழ் வருது தெரியுமா..?  ரவிக்குமார்

அப்படியா..?

ஆமாம். புரட்சிப்புயல் வைகோ தொடங்குகிறார். 'தினத்தந்தி' தனது கட்சியின் செய்தியைப் போடுவது இல்லை என்பதால் வெளிநாட்டில் வாழும் ஈழத்தமிழர் ஒருத்தர் துட்டு கொடுக்க புது நாளிதழ் ஆரம்பிக்க இருக்குறார். 70 கோடி ரூபாய் முதலீடு செய்யத் தயாராய் இருப்பதாய் அவருக்கு நெருக்கமான வட்டாரத்தில் சொல்லிக்கிறாங்க.

புகைப்படம் நன்றி.திரு.சுந்தரராஜன் முகநூல் பக்கம்


"ம். வேலை செய்யும் பத்திரிகையாளர்களுக்கு நல்ல சம்பளம் கொடுத்தால்  வைகோ தொடங்கும் நாளிதழ் வளரட்டும் என வாழ்த்துவோம்." பெஞ்சமின்
**


அன்வர் அடுத்த செய்தியை ஆரம்பித்து வைத்தார்.

" வேந்தர் பச்சமுத்து தனது நோக்கத்தை தொடர்ச்சியா வென்றெடுத்துக் கொண்டு வருகிறார் பார்த்தீர்களா..?"

"புரியலை. தெளிவாச் சொல்லுங்க.அவர் காட்டில் எப்பவும் ஜெயம் தான்,அவருக்கென்ன குறைச்சல்..?"

"கல்வியை கடைச் சரக்காக்கி பல்லாயிரம் கோடியை குறுக்கு வழியில் ஈட்டிய பாரிமுத்து அதனை அரசியல்,ஊடகம்  உட்பட பல்வேறு துறைகளில் முதலீடு செய்தார். ஊடகம் மூலம் தனது நிறுவனத்துக்கு பலவகை ஆதாயம் கிட்டும் என்பதும் தனக்கு எதிராய் எழும் எதிர்ப்புக்களை முனை மழுங்கச் செய்ய முடியும் என்பதும் அதில் முக்கியக் கணக்கு.  'புதிய தலைமுறை,''புது யுகம்,' 'வேந்தர்' போன்ற தொலைக்காட்சிகள் எல்லாம் மேற்கண்ட சூத்திரத்தின் விளைவு தான்.

தொலைக்காட்சிகள் உருவான பின்பு  பச்சமுத்துவின் கல்விக்கொள்ளை,அரசியல் மற்றும் திரைத்துறையில் அவரது ஆதிக்கத்துக்கு எதிரான எதிர்ப்போ, மிரட்டலோ,பிளாக்மெயிலோ தமிழ்நாட்டில் பெரிய அளவில் நேரடியாகவும் மறைமுகமாகவும் அரசியல்வாதிகளிடம் இருந்தோ,பிற இயக்கங்களிடமிருந்தோ இல்லை என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். இன்னும் சொல்லப்போனால் அனைத்துப் பிரிவினரும் அவரிடம் அடங்கியும் பம்மியும் தான் சென்று கொண்டிருக்கிறார்கள்.

"ம். அதுக்குத் தானே ஆரம்பிச்சது, அந்த பட்டியலில் எதும் அப்டேட் இருக்கா..? " ரவிக்குமார் ஆர்வம் காட்டினார்.

சுற்றுச்சூழலைக் காப்பதற்காய் அவதரித்ததாய் கட்டமைக்கப்ப‌டுகிற  'பூவுலகின் நண்பர்கள்' என்னும் தன்னார்வத் தொண்டு நிறுவனம்,சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் ஒரு'பொழுதுகள் ஆறு'  நிகழ்ச்சியை பெரிய அளவில் விளம்பரத்துடன் நடத்தியது. அந்த நிகழ்ச்சிக்கு முக்கிய ஸ்பான்சர் வேந்தர் பச்சமுத்து தான்.

 என்.ஜி.ஓ.நிகழ்ச்சியில் பிரம்மாண்டமாய் வேந்தர் லோகோ தான் மின்னியது. அனைவரும் அதற்கு முன் நின்று தான் உரை நிகழ்த்தினார்கள்.

"ஒ.அப்படியா..? பச்சமுத்து ஆக்கிரமிப்பு பேர்வழியாச்சே..? அரசு புறம்போக்கு நிலம்,ஏரி என எதையும் விட்டு வைக்க மாட்டாரே..? இன்னும் சொல்லப்போனால் அவரது காட்டாங்கொளத்தூர் சாம்ராஜ்யம் சுற்றுச்சூழல்,வனப்பாதுகாப்பு,தீயணைப்புத்துறை விதிமுறைகள் எல்லாவற்றையும் காலில் மிதித்தும் காற்றில் பறக்க விட்டும் தானே உருவாக்கப்ப‌ட்டது. இவ்வளவு ஏன் காட்டாங்கொளத்தூர் ஏரியே இவர்களால் பெரிய அளவில் ஆக்கிரமிக்கப்பட்டதே..? அரசு கூட கண்துடைப்பாக ஒன்றிரண்டு இடங்களில் புறம்போக்கு ஆக்கிரமிப்பையும் அகற்றியுள்ளதே.?




எத்தனையோ மக்கள் திரள் அமைப்புகள் இதற்காக தங்களால் முடிந்த அளவு போராடி வருகின்றார்களே..? அவர்களுடன் அல்லவா இவர்கள் கை கோர்க்க வேண்டும்..?

நிறுத்துங்க...இப்படியே போனா நிற்காது.



"சரி தான். ஏரியையும் சுற்றுச்சூழலையும் காக்க வேண்டிய சூழல் அமைப்பு, ஐந்திணை, முந்நீர் விழவு, ஐம்பூதம் என தமிழ்ச் சூழலியல் பண்பாட்டில் நடைபெறும் சிதைவுகள் குறித்து எச்சரிக்கும் நிகழ்ச்சிக்கு அதற்கு முற்றிலும் எதிரான நபரிடம் கைகட்டி நின்னு உதவி வாங்கியிருக்குது.



இதுக்கு எப்படி பதில் விசுவாசத்தை செலுத்தப் போறாங்கன்னு தெரியலை. இவங்க சூழலைக் காக்கும் லட்சணம் இது தானா..? பச்சமுத்துவிடமே இந்தப் பம்மு பம்முனா இதை விட பல மடங்கு வலிமை வாய்ந்த அரசு அமைப்புகளை எப்படித்தான் எதிர்ப்பார்களோ..? என்ன நிலை என்று தெரியவில்லையே..?"

"எது எப்படியோ, ஊடக அதிபர் வேந்தர் கணக்கு எப்பவும் தப்பாது" ரவிக்குமார் சிரித்தபடியே சொன்னார்.
**



"விகடன் செய்தி எதுவும் இல்லையா..? "அன்வர்

"ஆ.விகடனில் வேலை பார்க்குறவங்க கடுமையான மன அழுத்தத்தில் இருக்காங்களாம் "

"ஏன் என்னாச்சு..? "



"அது ஒண்ணுமில்லை.ஏற்கனவே அங்கு கடுமையான வேலைப்பளு. குமுதத்தில் 20 க்கும் மேற்பட்டவங்க பார்க்குற வேலையை இங்க ஆறு பேரு தலையில் கட்டியிருந்தாங்க. வேலைத் தன்மையும் மிக அதிகம். அதிலும் இப்ப கலீல் ராஜா தப்பிச்சு விளம்பர நிறுவனத்துல சேர்ந்துட்டார். ஆனாலும் நிறுவனமோ புதிதாய் ஆள் எடுக்கும்  விஷயத்தில் அரசாங்கம் மாதிரி மெத்தனப்போக்குடன் செயல்படுது. வேலையில் இருப்பவங்க பல்லைக் கடிச்சுக்கிட்டே சமாளிச்சுக்கிட்டிருக்காங்க. இதே நிலை நீடித்தால் விகடனில் வேலை பார்ப்பவங்க மன அழுத்தம் தாங்க முடியாம கஷ்டப்பட‌ வாய்ப்பு இருக்கு " பெஞ்சமின்

ஆசிரியர் ரா.கண்ண‌ன் கவனிப்பாரான்னு பார்ப்போம்.
**
"ஜு.வி.யில் கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி  ஈஸ்வரன் பேட்டி பார்த்தீர்களா ?" பார்த்தசாரதி

" ஆமாம். எதுவும் சம்பந்தம் இல்லாமல் இருக்குது. "





பார்த்தசாரதி தொடர்ந்தார்."இலங்கை சுற்றுப்பயணம் போய் வந்தது அவர் கட்சியில் ஒரு குழு. அதன் தலைவர் ஈஸ்வரன் இலங்கைக்குச் செல்லவில்லை. இவங்க பேட்டி எடுக்க முடிவு செய்தார்கள் என்றால் இலங்கைக்குச் சென்ற‌அந்தக் குழுவினரின் நேர்காணலை, திருப்பூர் நிருபரை விட்டு வாங்கிப் போட்டிருக்கலாம். இலங்கைக்குச் செல்லாமல் திருப்பூரில் இருக்கும் அதன் தலைவரிடம் இலங்கை சுற்றுப்பயண அனுபவங்களை நேர்காணல் செய்கிறார் கனிஷ்கா என்ற சூர்யா என்ற பாலகிஷன்,சென்னை அலுவலகத்தில் அமர்ந்து கொண்டு இதைச் செய்கிறார்.

"கொடுமையா இருக்குது. படிக்குற வாசகனை எவ்வளவு மடையனா நினைக்கிறாங்க. ஒரு நேர்காணலை யாரிடம் எடுக்கணும்,யார் செய்யணும் என்னும் அரிச்சுவடி கூடத் தெரியாத பாலகிஷன் சிறப்புச் செய்தியாளர் என்பது தான் கொடுமை "அன்வர் முடித்து வைத்தார்.

**


" 'ZEE tamil' தொலைக்காட்சியில் ஏதோ அடிதடின்னு தகவல் என்ன நடந்தது அங்கே..? "

"திரைப்பட சாட்டிலைட் உரிமை தொடர்பா பஞ்சாயத்து. வெள்ளக்காரதுரை என்னும் சிவாஜி பேரன் ப‌டத்தை ஹெவியான தொகை கொடுத்து வாங்கினாங்க. பிசினஸ் ஹெட்  ஈஸ்வர் என்பவர் தான்  டீல் பேசி முடிச்சார். ஒப்பந்தம் கையெழுத்தாகும் முன் இடையில் கொஞ்சம் பண‌மும் கணக்கில் வராமல் தொலைக்காட்சி நிர்வாகிகளுக்கு கை மாறியிருக்குது. படத்தயாரிப்புத் தரப்பில் அன்பான மதுரைக்கார கந்துவட்டி பார்ட்டி தான் டீல் பேசியவர்.

இதை யாரோ டெல்லி ஆபிசுக்கு போட்டுக் கொடுத்துட்டாங்க,உடனே அவங்க இங்க போன் பண்ணி படத்தை வாங்க வேண்டாமுன்னு சொல்லிட்டாங்க. கை நீட்டிக் காசு வாங்கிய பார்ட்டியால பணத்தையும் திருப்பித் தர முடியலை.ஒப்பந்தமும் போட முடியலை"

"அப்புறம் என்னாச்சு..?"

"அன்பானவர் வெகுண்டெழுந்து ஈஸ்வரை அலுவலகம் புகுந்து புரட்டி எடுத்துட்டார்.இப்ப பார்ட்டி ஆஸ்பத்திரிக்கு லட்சக்கணக்கில் செலவழித்தும் இன்னும் ஒத்தடம் தேவைப்படுதாம்."

"ம்ம்."
**
" 'தின இதழ்' பஞ்சாயத்து என்னாச்சு.., சம்பளம் வரலைன்னு எழுதியிருந்தோமே..? சம்பளம் வந்ததா..? இல்லை சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தார்களா..? " பெஞ்சமின்

"நாம் பதிவு எழுதிய மறுநாள் எல்லோருக்கும் சம்பளம் வந்துடுச்சு. ஆனாலும் வழக்கம் போல தொடர்ந்து சம்பளபாக்கியை வைத்துக்கொண்டு தான் இருக்காங்களாம்"அன்வர்

"தன‌து கல்லூரியில் படிக்கும் மாணவர்களிடம் நன்கொடையையும் ஒரு வருட கட்டண‌த்தையும் முன்கூட்டியே வாங்கும் முதலாளி பத்திரிகையில் வேலை செய்தவனுக்கு சமபளம் கொடுக்க மனசு வரல்லை. இவங்க எல்லாம் பத்திரிகை நடத்தலைன்னு யார் அழுதா." ரவிக்குமார்
**
 " 'சிகப்பு நாடா' பத்திரிகையில் இப்ப கதிர்வேல் சார் இல்லையாமே..?"

ஆமாம்,அப்படி ஒரு பத்திரிகை வருவதே நிறையப்பேருக்குத் தெரியாது. இப்ப ஏழுமலை சார் தான் அனைத்தையும் பார்த்துக்கொள்கிறார். அது மட்டுமல்லாமல் இதை நக்கல் பண்னி 'தினகரன்' சுரேஷ் முகநூலில் நிலைச்செய்தி எழுதியதையும் பார்த்தேன்.இதுக்காக சுரேஷை மலைமோகன் கலாய்ச்சிருந்தார்.கதிர்வேல் சாரிடம் விமர்சனம் உண்டு.ஆனா அதுக்காக‌...சுரேஷ் போன்றவர்கள் இப்படிப் பேசுவதை என்ன செய்வது..?


 "ஆர்.எம்.ஆர்.அல்லக்கை சுரேஷ் இது மாதிரி எழுதுவது ஆச்சரியம் இல்லை தான்."
**

"'தமிழக அரசியல்' வாரமிருமுறை இதழில் மாதக்கணக்கில் சம்பளம் தரல்லைன்னு புகார் வருது.அதையும் விசாரித்து எழுதுங்க"-என்ற அன்வரின் கோரிக்கையோடு அன்றைய சந்திப்பு முடிந்தது.