Showing posts with label அசோகன். Show all posts
Showing posts with label அசோகன். Show all posts

Friday, 24 October 2014

'தி இந்து'-முடிந்தது மூடத்தனம்;தொடங்கியது விஷமத்தனம்...!




                                              'உண்மை நின்றிட வேண்டும்'

இது 'தி இந்து' தமிழ் இதழில் நடுப்பக்கம் வெளிவரும் தலையங்க முகப்பு வாசகம்.

இனிமேல் இதனை 'பொய்மை வென்றிட வேண்டும்' என மாற்றி அமைக்கலாம்.ஏனென்றால் அதன் நடுப்பக்கத்தில் வெளியாகும் கட்டுரைகள் அந்த லட்சணத்தில் தான் இருக்கிறது.

அரசியல் சமூக விமர்சகர் க.திருநாவுக்கரசு என்பவர் எழுதிய 'பெரியாரின் வாரிசுதான் ஜெயலலிதா' என்பதை கருத்துப்பேழை என்னும் தலைப்பில் நடுப்பக்க கட்டுரையாக வெளியிட்டுள்ளது.

the hindu,tamil the hindu


இந்தக் கட்டுரையின் நோக்கமாக கீழ்க்கண்டவற்றை வகைப்படுத்த‌லாம்.

பெரியாரை சர்வாதிகாரி என நிறுவுவதும்,அதன் தொடர்ச்சியாக அவரது வாரிசு என்று ஜெயலலிதாவை பிரகடனப்படுத்தி இப்பொழுது ஜெயலலிதாவின் கைதுக்குப் பிந்தைய மரணங்கள்,ஆர்ப்பாட்டங்கள்,எதிர்ப்புக்குரல்கள் என்ற பெயரிலான காணச் சகிக்காத கூத்துக்கள் என அனைத்தையும் கண்டிப்பதும்,இவை அனைத்துக்கும் அன்று பெரியார் தொடக்கி வைத்த சர்வாதிகாரம் தான் விதை எனத் தொடர்பு படுத்துவதும் தான்.

பெரியார் ஒன்றும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவரல்ல,ஆனால் அதில் உண்மை இருக்க வேண்டும்.

கட்டுரையானது தனது நோக்கத்தை நிறைவேற்றியிருக்கிறதா அதற்கான தரவுகளை அளித்திருக்கிறதா என்று பார்ப்போம்.
*
முதல் சில பத்திகள் அதாவது கட்டுரையின் சரிபாதி வரைக்கும் ரஷ்யாவின் ஸ்டாலினை இந்திய குடியரசுத்தலைவர் ராதாகிருஷ்ணன் சந்தித்தது,காந்தி மீது விமர்சனம் என நீள்கிறது.

அதன்பின் தான் தமிழகச் சூழலை கட்டுரையாளர் எழுதுகிறார். அதன்பின் பெரியாரின் சர்வாதிகாரம் குறித்து ஒரு உதாரணத்தை கட்டுரையாளர் சொல்கிறார்.

//உதாரணமாக, முதல் சுயமரியாதை மாநாட்டின் தலைவராக சௌந்திர பாண்டியனைப் பெரியார் முன்மொழிந்தபோது, ‘‘இனிமேல் வந்து இங்கு அவரை ஒருவர் பிரேரேபிக்கவோ ஆட்சேபிக்கவோ உண்மையாக யாருக்கும் அதிகாரமும் யோக்கியதையும் கிடையாது. பிரேரேபணையோ ஆமோதிப்பதோ ஆதரிப்பதோ கொஞ்சமும் அவசியமே இல்லை’’ என்கிறார்.//

இது தான் சர்வாதிகாரி பெரியார் என்பதை நிறுவ‌ கட்டுரையாளர் தரும் உதாரணம்.இதில் தான் கட்டுரையின் அடித்தளம் இருக்கிறது எனவும் சொல்லலாம்.

70 ஆண்டுகளுக்கும் மேலாகப் பொதுவாழ்வில் பணியாற்றிய பெரியாரை போகிற போக்கில் ஒரு சிறு உதாரணம் மட்டும் சொல்லி அவர் ஜனநாயக மறுப்பாளர் எனச் சொல்கிறார்.அவரது ஒட்டுமொத்த பணியையும் இதனை வைத்து எடை போடுகிறார்.இப்படி எடை போடுவது சரியல்ல என்பதை விடவும் அப்படிக் காட்டப்பட்டதாவது உண்மையா என்று பார்ப்பதும் முக்கியமானது.

 கட்டுரையாளரின் மேற்கொள்  ஒப்பீட்டளவில் நூலிழை ஆதாரம் எனக்கொள்ளலாம். ஆனால் சீர்தூக்கிப் பார்த்தால் அது நூலிழை அல்ல,திரிக்கப்பட்ட வன்மக் கயிறு என்பதை அறியலாம்.

திரு.சவுந்திரபாண்டியனை முன்மொழிந்த பெரியார், கட்டுரையாளர் சொல்லியபடி தனது கட்சியினர் யாரையும் கலந்து ஆலோசிக்காமல் அதிகார மமதையுடன் நடந்து கொண்டாரா..? ஜனநாயக மறுப்பாளராய் விளங்கினாரா? என்று பார்ப்போம்.

//இப்பொழுது இந்த மகாநாட்டுக்கு தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய தன்னை எனது நண்பர் திரு.சவுந்திர‌பாண்டியன் அவர்களைப் பிரேரிக்கும்படியாக நமது வரவேற்பு அக்கிரசனார் அவர்கள் கட்டளையிட்டிருக்கிறார்.இப்போது அவர்களை உங்கள் சார்பாக பிரேரிக்கப் போகிறேன்.

இப்படிப் பிரேரிப்பதில் ஒரு விஷேஷமிருக்கிறது.என்ன.?திரு.சவுந்திரபாண்டியன் அவர்களை சுமார் ஒன்றரை மாதத்திற்கு முன்பாகவே வரவேற்புக் கமிட்டியாரால் தேர்ந்தெடுக்கப்பட்டு,அவர்களின் சம்மதத்தையும் வெகு நிர்ப்பந்தத்தின் பேரில் பெற்று,உங்களுக்கும் எல்லோருக்கும் வெளிப்படுத்தியாய் விட்டது.இனிமேல் இங்கு வந்து அவர் ஒருவர் பிரேரிக்கவோ,ஆட்சேபிக்கவோ உண்மையாக யாருக்கும் அதிகாரமும் யோக்கியதையும் கிடையாது.//

ஆதாரம்- திராவிடன் 19.2.1929

நூல்-செங்கல்பட்டு (தமிழ்) மாகாண சுயமரியாதை மகாநாடு 1929 (பக்கம் 105)



இது தான் பெரியார் சொல்லியது.ஏறத்தாழ இந்த மாநாட்டுக்காய் ஒன்றரை மாதங்களுக்கு முன்பே யார் தலைவர் என வரவேற்புக் கமிட்டியால் முடிவு செய்யப்பட்டு அனைவராலும் தேர்ந்தெடுக்கப்பட்டு,அனைவரின் ஒப்புதலையும் பெற்று ,சவுந்திரபாண்டியன் சம்மதத்தையும் அவரின் நிர்ப்பந்தப்படுத்திப் பெற்று விட்ட பிறகு அதனை இப்பொழுது யாரும் ஆட்சேபிக்க யாருக்கும் அதிகாரமோ,யோக்கியதையோ கிடையாது என்கிறார் பெரியார்.

இதில் என்ன தவறு இருக்க முடியும்..? இதில் எங்கு ஜனநாயக மறுப்பு இருக்கிறது..? சர்வாதிகார முடிவு இருக்கிறது..? இதனை விட எவரொருவர் ஜனநாயகமாய் இயங்க முடியும்..? எல்லாம் முடிந்த பின்பு இப்பொழுது ஆட்சேபிப்பதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை என்கிறார்.இது சரியானது தானே..?

ஆனால் பெரியார் சொன்னதில் முதலில் ஒரு பத்தியை வெட்டி விட்டு அவர் சொன்னது இதுதான் என்று சொல்வது தான் அரசியல் சமூக விமர்சகனின் நேர்மையா.? கடைந்தெடுத்த அயோக்கியன் கூட இப்படிச் செய்ய மாட்டானே..? இவரிடம் பாடம் படிக்கும் மாணவர்கள் கதியை நினைத்தால் தான் பரிதாபமாய் இருக்கிறது.

அதே சமயம் பெரியாரின் அரசியல் வாரிசு என 'தி இந்து' பிரகடனப்படுத்தும் ஜெயலலிதா தனது கட்சி சார்பில் நடக்கும் மாநாட்டில் இப்படி என்றாவது செய்துள்ளாரா..? யாரையாவது இந்த வழிமுறையைப் பின்பற்றித் தேர்ந்தெடுத்துள்ளாரா..?தி இந்து ஒரு ஆதாரம் காட்டட்டும்.
வழக்கம் போல் திரித்து ஒரு ஆதாரத்தை உருவாக்கி கட்டுரை வெளியிட வேண்டாம்.
*

தில் இன்னொரு முக்கியச் செய்தியும் இருக்கிறது.

முதல் சுயமரியாதை மாநாட்டின் தலைவராக திரு.சவுந்திரபாண்டியன் தேர்ந்தெடுக்கப்ப‌ட்ட மாநாட்டில் பெரியார் உப தலைவராகப் பணியாற்றி இருக்கிறார்.

ஆதாரம்- திராவிடன் 12.2.1929

நூல்-செங்கல்பட்டு (தமிழ்) மாகாண சுயமரியாதை மகாநாடு 1929 (பக்கம் 14)

ஒரு ஜனநாயக மறுப்பாளர்,சர்வாதிகாரி என 'தி இந்து' வால் விமர்சிக்கப்படும் தன்னால் நியமிக்கபப்ட்ட இன்னொருவருக்கு கீழ் பணியாற்றுவாரா..?

இந்தபண்புஜெயலலிதா,கருணாநிதி,வாசன்,விஜயகாந்த்,ராமதாஸ்,ஸ்டாலின், என தமிழ்நாட்டு அரசியலில் மட்டுமல்ல உலக அரசியலில் எங்கும் பார்க்க முடியுமா..?

ஜெயலலிதா நத்தம் விஸ்வநாதன் கீழ் பணியாற்றுவாரா..? இல்லை கருணாநிதி தான்பொன்முடி கீழ் பணியாற்றுவாரா..?

இவ்வளவு ஏன்..?

ஒரு தாய் வயிற்றுப்பிள்ளைகளான என்.ராமும்,என்.ரவியும் ஒருங்கிணைந்தே பணியாற்ற‌ முடியவில்லை.ஆயிரம் பஞ்சாயத்துகள்.

'தி இந்து' ஆசிரியர் அசோகன் வெங்கடேஸ்வரன் கீழ் பணியாற்றுவாரா..?

'தி இந்து' நடுப்பக்க பொறுப்பாளர்,தன்னைக் காந்தியவாதி என அழைப்பதில் பெருமிதம் கொள்ளும் சமஸ் யாராவது தனது சக நிருபரின் கீழ் பணியாற்றத்தான் முடியுமா..?
***

//டைசியாக எனக்கு இக்கவுரவப் பதவியை அளித்த வரவேற்புக்கழக அங்கத்தினர்களுக்கும்,நண்பர்களுக்கும் மீண்டும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.//

இது மகாநாட்டுத் தலைவராகப் பணியாற்றிய திரு.சவுந்திர பாண்டியன் பேசிய உரையின் கடைசிப்பகுதி.

ஆதாரம்- திராவிடன் 17.2.1929

நூல்-செங்கல்பட்டு (தமிழ்) மாகாண சுயமரியாதை மகாநாடு 1929 (பக்கம் 77)

தனது நீண்ட உரையில் எங்கும் பெரியாருக்கு நன்றி சொல்லவில்லை.வாய்ப்பளித்த சர்வாதிகாரிக்கு யாரும் நன்றி சொல்லாமல் சேவகம் செய்யாமல் உரையை முடிக்க முடியுமா என்ன..?

ஜெயலலிதாவை வழிபடாமல்,4 வார்த்தைகளில் 2 வார்த்தைகள் தொழாமல் பன்னீர்செல்வம் உரையை முடிக்க முடியுமா என்ன..?

அப்பாயிண்ட்மென்ட் ஆர்டர் வாங்கியவுடன் என்.ராமைப் புகழாமல் பாராட்டாமல்,நன்றி சொல்லாமல் அசோகனோ,அசோகனுக்கு நன்றி சொல்லாமல் சமஸோ,வெங்கடேஸ்வரனோ இன்ன பிறரோ இருந்தனரா..என்ன‌..?

திறமைக்கு வேலை கிடைத்துள்ளது.ஏன் நன்றி சொல்ல வேண்டும் என்று இவர்கள் சுயமரியாதையுடன் இருந்தனரா..?

**
‘‘னநாயகம் பித்தலாட்டமான காரியம் மட்டுமல்ல, முட்டாள்தனமானதும்கூட’’ என்று பெரியார் சொன்னது ஜெயலலிதாவின் சர்வாதிகாரத்திற்கு மூலமாக இருக்கிறது என்பதை அரசியல் விமர்சகர் கண்டுபிடித்துள்ளார்.  பெரியாரின் வாசகம் என்ன காலத்தில் சொல்லப்பட்டது,அதன் வரலாற்றுப்பின்னணி என்ன என்பதை சொல்லி அதை எழுத வேண்டும் என்னும் குறைந்த பட்ச நேர்மை,எதை எதையும் தொடர்பு படுத்த வேண்டும் என்னும் அறிவும் இல்லை.

இதற்குப்பின் இந்தக் கட்டுரையில் விவாதிக்க ஒன்றும் இல்லை.

அடுத்ததாக ஜெயலலிதாவை பெரியாரின் வாரிசு என பிரகடனப்படுத்தியது குறித்து.

ஜெயலலிதா போனறு அதிகாரத்தின் உச்சத்தில் இருப்பவர்கள் செய்யும் சர்வாதிகாரச் செயல்களை, ஒரு சமூகப் போராளியுடன் ஒப்பிடுவது எப்படிச் சரியாகும்..? அப்ப‌டி ஒப்பிடுவதில் என்ன நேர்மை இருக்க முடியும்..?

இந்த விஷயத்தில் மட்டுமல்ல எந்த விஷயத்திலும் பெரியாரின் வாரிசாக ஜெயலலிதா விரும்பியது இல்லை.அப்படி நடந்து கொண்டதும் இல்லை.அவ்வாறு சொல்வதையும் அவர் விரும்பியது இல்லை.அவரே விரும்பாத விஷயத்திற்கு 'தி இந்து' முட்டுக் கொடுக்கிறது.

கருணாநிதியாவது பெரியார்,அண்ணா தொடர்ந்து தன்னை திராவிட இயக்க வாரிசாக காட்டிக்கொள்ள (ஒரு சில நேரங்கள் தவிர்த்து) விரும்புகிறார். அதைப் பெருமையாக கருதுகிறார். அதற்கு உண்மையாக இருக்கிறாரா ?இல்லையா ? என்பது வேறு விஷயம்..?இனிவரும் காலங்களில் அவருக்குப் பின் வருபவர்களிடம் அதை எதிர்பார்க்க முடியாது.

இப்படி இருக்கையில் அனைத்துக் கொள்கைகளிலும் பெரியாருடன் வெளிப்படையாக முரண்படும் ஜெயலலிதா எப்படி 'ஜனநாயக மறுப்பில்' மட்டும் வாரிசு ஆக முடியும்..?

(ஜனநாயக மறுப்பாளர் என்பது திரிக்கப்பட்டது என்று நாம் மேலே ஆதாரங்களுடன் நிரூபித்திருக்கிறோம்)
**
கொரியர் பாய் சமஸ்


//ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டது முதல் பிணையில் விடுவிக்கப்பட்டது வரை தமிழகத்தில் நடந்த கூத்துகளையெல்லாம் என்னவென்று சொல்வது? ‘//

ஜெயலலிதா கைதுக்குப் பின் 193 பேர் மரணம் அடைந்ததாக ஜெ.அவரது அறிக்கை சொல்கிறது.அவர‌து கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்தும்,விடுதலைக்கு வேண்டியும் நாடு முழுவதும் யாகம்,மொட்டை அடித்தல்,முளைப்பாரி,பால் காவடி,என இத்தியாதிகள்... 'தி இந்து' அரசியல் விமர்சகர் வார்த்தைகளில் சொல்லப்போனால் தமிழகத்தில் 'கூத்துகள்' நடந்துள்ளன.அதைப்பற்றி ஒரு வார்த்தை விமர்சித்து எழுதவும் வெளியிட  தி இந்துவுக்கும் அரசியல் விமர்சகருக்கும் திராணி இல்லை.

ஜெ.ஊழல் வழக்கில் சிறை சென்றது போல் வேறு யார் இதற்கு முன் சென்றுள்ளார்கள்,இருவருக்குமான ஒற்றுமை என்ன..? ஜெ.ஊழல் செய்தமைக்கு என்ன காரணம்..? ஜெ.கைதை ஒட்டி நடைபெற்றதாக கருதப்படும் இத்தனை பேரின் மரணம் உண்மையானதா..? அப்படியாயின் இதற்கு காரண‌ம் என்ன..? இத்தனை குடும்பங்கள் நிர்க்கதியாய் இருப்பதற்கு யார் காரண‌ம்..? இதற்கு என்ன தீர்வு என்று அலசி ஆராய கட்டுரையாளருக்கு விருப்பமில்லை.அல்லது தைரியம் இல்லை.

என்ன சம்பவத்திற்காக,எதன் எதிரொலியாக இந்தக் கட்டுரை தீட்டப்பட்டதோ,அந்த அரைப்பக்க கட்டுரையில் 'கூத்துக்கள்' என்ற ஒரு வார்த்தையில் அரசியல் விமர்சகர் கடந்து சொல்கிறார். அதற்குப்பின் எந்ததொடர்பும் அற்று பாரதியை மேற்கோள் காட்டி முடிக்கிறார் அரசியல் விமர்சகர்.

இந்தக் கட்டுரைக்கு வலுச்சேர்க்கும் வண்னம் பெரியாரும் ஜெயலலிதாவும் இணைந்து இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்தப்புகைப்படத்தை பார்த்தால் இருவரும் இணைந்து களங்கள் பல கண்டு சிறைகள் பலவற்றிற்கு ஒன்று போல் சென்றிருப்பது போல் ஒரு எண்ணத்தை 'தி இந்து' படிக்கும் வாசகனுக்கு இயல்பாக ஏற்படுத்துகிறது. இந்தப்புகைப்படம் 'சூரியகாந்தி' என்னும் திரைப்படத்தின் வெற்றி விழாவில் எடுக்கப்பட்டது. அதையாவது குறிப்பிட்டிருக்கலாம்.

இழிவான நோக்கம் ஒன்று இருக்கும் பொழுது என்ன வழிமுறையை பின்பற்றவும் விஷமிகள் யோசிக்கவா போகிறார்கள்..?

ஒட்டுமொத்தமாய் இந்தக் கட்டுரை.எதை எழுத வேண்டுமோ அதை வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்து விட்டு,எந்தச் சம்ப‌ந்தமும் இல்லாமல் பெரியாரின் வாரிசு என்று ஜெயலலிதாவை பிரகடனப்படுத்தி,அதிலும் நேர்மையற்று அவர் சொன்னதை மறைத்து அவரை அவதூறு செய்வதில் முடிந்திருக்கிறது.
***

"பெரியாரின் வாரிசுதான் ஜெயலலிதா" இந்த தலைப்பானது கத்துக்குட்டி வாசகன் முதல் விமர்சகர்கள்,எதிர்த்தரப்பினர் என அனைத்து தரப்பினரையும் இந்தக் கட்டுரையைப்படிக்க வைக்க வேண்டும் என்ற நோக்கில் வைக்கபப்ட்டுள்ள‌து.ஆனால் அதற்கான எந்தத் தரவுகளும் இல்லை.

ஆபாச தலைப்பு வைத்து,அதனை மலிவான சுவரொட்டி அடித்து ஊர் முழுவதும் ஒட்டி திரை அரங்குக்கு ரசிகர்களை வரவழைப்பது திரைப்பட விநியோகஸ்தர்கள்,திரை அரங்கு உரிமையாளர்களின் ஒரு காலத்திய கேவலமான உத்தி.அவர்களின் அத்தகைய உத்தியைத்தான் தனது கட்டுரையை அனைத்து வாசகனும் படிக்க வேண்டும் என்னும் நோக்கில் கட்டுரையாளர் வைத்துள்ளார்.

ஜெயலலிதாவை விமர்சிப்பதாகவும் கணக்கில் வர  வேண்டும். அதே சமயம் மென்மையாக கூட விமர்சிக்க கூடாது.அதே சமயத்தில் 70 ஆண்டுகளுக்கு முன்பே தனது பரம வைரியும்,தனது கஸ்தூரி அய்யங்கார் நிறுவனத்தை விமர்சித்த  பெரியாரை இழிவு படுத்தவும் வேண்டும். எழுதியவர் ஆய்வாளர் என்ற பெயரையும் பெற வேண்டும் இப்படிப் பல நோக்கில் எழுதப்ப‌ட்டதால் எதிலும் உண்மையை நிறுவ முடியவில்லை.கட்டுரையாளர்,வெளியீட்டாளர் நோக்கமும் நிறைவேறாமல் அம்பலப்பட்டு அசிங்கப்பட்டு இருக்கிறது.

அதுவும் போக இன்னொன்றும் இருக்கிறது.இது போல தவறான செய்திகளுடன் எதுவும் கட்டுரைகள் பிற பத்திரிகைகளில் வெளியானால், அந்த எழுத்தாளர் படைப்புகள் அதன் பிறகு வெளியிடுவது நிறுத்தி வைக்கப்படும்,(சிறிது காலத்துக்காவது).

ஆனால் இன்னும் ஒரு வாரத்தில் பாருங்கள் க.திருநாவுக்கரசு அடுத்து ஒரு ஆய்வுக்கட்டுரை எழுதி அதனை கூச்சமற்று நடுப்பக்கத்தில் 'தி இந்து' வெளியிடும்.இது தான் இவர்கள் நேர்மை.

****


'தி இந்து' வில் வெளியாகும் கட்டுரைகள்,அதன் சிறப்பு நிருபர் தொடங்கி,அவர்களால் கவிஞர்,எழுத்தாளர்,விமர்சகர்,ஆய்வாளர் என ஒளிவட்டம் சூட்டப்படும் யார் எழுதிய கட்டுரையானாலும் சரி, அது யார் எழுதியதென்றாலும் அந்தக்கட்டுரையையும் அதே விஷயத்தை தினகரன்,தினத்தந்தி யில் அதன் முகம் தெரியாத உதவி ஆசிரியர் எழுதியதையும் ஒப்பிடுங்கள்.

முகம் தெரியாத உதவி ஆசிரியர் எழுதியது அனைத்து வகையிலும் சிறப்பாய் இருக்கும் என அறுதியிட்டுச் சொல்லலாம்.ஏனென்றால் அவர் பார்வையில் கட்டுரை சிறப்பாய் வர வேண்டும் என்னும் நோக்கமும்,உண்மையாய் எழுத வேண்டும் என்னும் எண்ணமும் மட்டும் தான் இருக்கும்.

தனது மேதமையைக் காட்ட வேண்டும் என்றோ,தனக்குத் தெரிந்ததை எல்லாம் கொட்டி விட வேண்டும் ,சமூகத்துக்கு ஏதாவது கருத்துச் சொல்லியே தீர வேண்டும் என்ற அரிப்போ,வெற்றுப் பரபரப்பை உருவாக்க வேண்டும் என்பதோ அவர்களிடம் இருக்காது.

(ஆனால் 'தி இந்து' அப்ப‌டியாகத்தான் இருக்கிறது.இதில் எங்கு போய் தினமலருடனும் தினகரனுடனும்,தினத்தந்தியுடனும் போட்டி போட..? முண்டியடித்து தினமணி இடத்தைப் பிடிக்கலாம்.)

அந்தக் கட்டுரைகளும் இப்பொழுது விஷமத்தனம் செய்ய ஆரம்பித்து விட்டது. ஒரு நடுப்பக்க கட்டுரை எவ்வளவு பொறுப்புடனும்,எவ்வளவு தரவுகளுடனும் எழுதப்ப‌ட்டு வெளியிடப்பட வேண்டும். அதனை ஆசிரியர் குழுவோ,அதன் பொறுப்பாளரோ எத்தனை கவனமுடன் ஒப்பு நோக்கி சொல்லப்பட்ட ஆதாரங்கள்,மேற்கோள்கள் சரியா எனப் பார்க்க வேண்டும்..?

பெரியாரின் மகாநாட்டு உரையைக் கண்டிப்பாய் கட்டுரையாளர் படித்திருப்பார்.ஆனாலும் அதில் ஒரு பத்தியை வெட்டி எடுத்து,மீதம் உள்ளவற்றை வைத்து அவர் ஜனநாயக மறுப்பாளர் எனச் சொல்வது எவ்வளவு விஷமத்தனம்..? இவர்கள் தாங்கள் செய்வதை அறிந்தே செய்கிறார்கள்.என்ன உள்நோக்கம்..?

ஆதாரம் எதுவும் இல்லாமல் வார்த்தைகளை உருவிப் போட்டு விமர்சிப்பது எவ்வளவு நாளைக்கு நிற்கும்..? அது தவறென்று அம்பலப்படுத்த எவ்வளவு நேரம் ஆகும்..?

 உண்மையை மறைத்து பொய்யை உற்பத்தி செய்து எழுதுவதற்கு 'அரசியல் சமூக விமர்சகர்' பட்டம் ஒரு கேடா..? இப்படிப்பட்ட பொய்யர்கள் எழுதுவதை எவ்வித ஒப்புக்கும்,ஆய்வுக்கும் உட்படுத்தாமல் கொரியர் பாய் வேலையைச்செய்யும்,அப்படியே பிரசுரிப்பதற்கு op-editor பதவியும் லட்சத்தைத் தாண்டிய சம்பளமும் தண்டமாய் அழ வேண்டுமா..?

அதைப்போல இப்படிப்பட்ட ஆட்களை வேலைக்கு எடுத்து விட்டு அவர்களை வைத்து வேலை வாங்கத் துப்புக்கெட்ட எடிட்டரோ தினசரிக்கு லாயக்கில்லாத நிலையில் இருக்கிறார்.

போர்க்களத்தில் முதலில் கொல்லப்படுவது அறமும் உண்மையும் தான் என்பது அறியப்பட்ட உண்மை. இனிமேல் போர்க்களத்திற்கு மட்டுமல்ல,'தி இந்து'வில் வெளியாகும் கட்டுரைகளுக்கும் அது பொருந்தும் .

தொடர்புடைய இணைப்புக்கள்

http://kalakakkural.blogspot.in/2014/03/blog-post_10.html

http://kalakakkural.blogspot.in/2014/07/blog-post_14.html

http://www.vinavu.com/2014/10/16/media-brokers-bat-for-corrupt-jaya/

Monday, 16 September 2013

தினமலர்,தினமணி வரிசையில் 'தி இந்து'...!



 வுண்ட் ரோடு மகா விஷ்ணு ஹிந்து ஆங்கில பத்திரிகை குழுமத்தில் இருந்து இன்று முதல் (16-09-2013) 'தி இந்து' வெளிவந்திருக்கிறது.44 பக்கங்கள் 4 ரூபாய்.

அதன் ஆங்கிலப் பெயரில் இருந்து,ஜூனியர் விகடன்,ஆனந்த விகடனின் நகலாக இருப்பது வரை விமர்சிக்க எண்ணற்ற செய்திகள் இருக்கிற‌து.

சிறு விமர்சனம் மட்டும் இன்று செய்கிறோம்.

முதல் பக்கத்தில் அதி முக்கியத்துவத்துடன் வெளிவந்த செய்தி இது தான்.




தமிழக சிறைகளில் அடிக்கடி தேடுதல் வேட்டை நடத்தப்படுவதோ கைதிகளிடமிருந்து செல்போன்,சிம்கார்டுகள் முதலானவை பறிமுதல் செய்யப்படுவதோ புதிதல்ல.எத்தனையோ முறை நடந்திருக்கிற‌து.நாளிதழ்களிலும் அது உரிய முறையில் அதற்கான செய்தி முக்கியத்துவத்துடன் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

ஆனால் இன்று 'தி இந்து' நாளிதழிலும் அப்படியான ஒரு செய்தி புகைப்படங்களுடன் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.ஆனால் செய்தி என்பதைத் தாண்டி அதி முக்கியத்துவத்துடன் முதல் பக்கத்தில் தலைப்புச் செய்திக்கு அருகில் இரண்டாவது தலைப்புச் செய்தி என்று கருதும் வண்ணம் வெளியிடப்பட்டிருக்கிறது.

சிறைத்துறை குறித்த ஒரு செய்தியை,44 பக்கங்களில் ஏதோ ஒரு பக்கத்தில் வெளியிட வேண்டிய அளவுக்கு செய்திக்கான த்குதி உள்ள ஒன்றை முதல் பக்கத்தில் தலைப்புச் செய்திக்கு நிகராக வெளியிட வேண்டிய அவசியம் என்ன..?

 ராஜீவ் காந்தி கொலையில் தொடர்புடைய குற்றவாளி முருகன் தொடர்புடைய செய்தி என்பதாலும்,கோவை சிறையில் இருக்கும் இஸ்லாமியர் தொடர்புடைய செய்தி என்பதாலும் 'தி இந்து' நாளிதழின் ஆசிரியர் இலாகா  இச்செய்தியை வெளியிட்டுத் தன் வன்மத்தையும் அரசியல் நிலைப்பாட்டையும் தெளிவாக உலகுக்கு வெளிப்படுத்தி இருக்கிறது.

'தி இந்து' நிருபர் வ.செந்தில்குமார் இதனை ரிப்போர்ட் செய்திருக்கிறார்.

இன்னும் ஆராய்ந்தால் கீழ்க்கண்ட விஷயம் கூட நிருபருக்குக் கிடைத்திருக்கலாம்.

காஞ்சி சங்கரராமனை வரதராஜப்பெருமாள் கோவிலின் உள்ளேயே கொலை செய்த குற்றத்திற்காக அப்புவும் அவரது கூட்டாளிகளும் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பொழுது,சிறையில் இருந்த படியே,அந்தக் கொலையில் நெம்பர் 1 அக்யூஸ்டான சுப்பிரமணி (ஜெயேந்திரன்) உடன் அதிக நேரம் செல்போனில் பேசினார்களா ?
அல்லது ரெண்டாவது அக்யூஸ்டான விஜயேந்திரனிடம் அதிக நேரம் பேசினார்களா என்பதுவும் அல்லது நெம்பர் ஒன் அக்யூஸ்ட்டை சகல மரியாதைகளுடன காரில் அழைத்து வந்த ஊடக முதலாளியுடன் அதிக நேரம் பேசினார்களா..?போன்ற விபரங்கள் கிடைத்திருக்கும்.

அல்லது தெரிந்திருந்தும் நிருபர் தன் வேலையைக் காப்பாற்றும் பொருட்டு எழுதாமல் விட்டு விட்டார் என்று கருத வேண்டியிருக்கிற‌து.அல்லது 'ரத்த' பாசத்தால் தி இந்து அதனை வெளியிடாமல் தவிர்த்திருக்கலாம்.

ஒன்று மட்டும் நிச்சயம்.

தினமலர்,தினமணி,தி இந்து போன்றவைகள்  ஒவ்வொன்றும் இனிமேல் போட்டி போட்டுக் கொண்டு விற்பனையைப் பெருக்குவதற்காக எந்தக் கேவலமான எல்லைக்கும் செல்லத் தயங்காது என்பதும் தெரிகிறது. 

Friday, 9 August 2013

'தி இந்து' நாளிதழில் கருட புராணத்தின் படி தண்டனை...!



தேனி கண்ணன்



தேனி கண்ணன்.

இவரைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம்.

இவர் வரதராஜன் அபகரித்த‌ குமுதத்தில் சினிமா நிருபராகப் பணியாற்றிக் கொண்டிருப்பவர்.இளையராஜா கேள்வி பதில்கள் பகுதியை இவர் தான் தொகுத்து எழுதிக் கொண்டிருந்தார்.இவர் கடந்த மாதம் தொடங்க உள்ள  'தி இந்து' நாளிதழில் சினிமா நிருபர் வேலைக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்.

வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் இது வரை குமுதத்தில் தான் பார்த்து வந்த வேலையை ராஜினாமா செய்து விட்டு 'தி இந்து' நாளிதழில் சேர்ந்து விட்டார்.

ஆனால் வேலைக்குச் செர்ந்த இரண்டொரு நாளில் காமதேனு நிர்வாகம் இவரை வேலையை விட்டு நீக்கி விட்டது.
இவர் அதிகமாக கவர் வாங்குபவ‌ர் என்று தனியார் துப்பறியும் நிறுவனம் இவரைப்பற்றி அறிக்கை கொடுத்ததன் அடிப்படையில் இவர் தமது நிறுவனத்தில் பணி புரியத் தகுதியற்ற‌வர் என்று வேலையை விட்டு நீக்கியதாம்.

இப்பொழுது தேனி கண்ண‌ன் எந்த வழியும் தெரியாது நடுத்தெருவில் நிற்கிறார்.

நிருபர் தேனி கண்ணன் லஞ்சம் வாங்குவது உண்மை என்றே வைத்துக் கொண்டாலும் காமதேனு நிர்வாகம்,அவரை வேலைக்குச் சேர்க்கும் முன்பே தீர விசாரித்து அவரைச் சேர்க்காமல் இருந்திருக்கலாமே...ஒருவரை வேலைக்குச் சேர்த்து இரண்டு நாள் கழித்து அவர் கை சுத்தம் இல்லாதவர் என்று கண்டுபிடித்து பணி நீக்கம் செய்வதற்குப் பதிலாக, அதை இரண்டு நாட்களுக்கு முன் கண்டுபிடித்து அவரைப் பணியில் சேர்க்காமலேயே இருந்திருக்கலாமே..!அவர் குமுதத்திலேயே கவர் வாங்கிக் கொண்டு (உங்கள் எண்ணப்படி) வேலையில் நீடித்திருப்பாரே..!

கையில் இருந்த‌ வேலையையும் விட்டுவிட்டு இன்று அவரது குடும்பம் நடுத்தெருவில் நிற்கும் நிலை ஏற்பட்டிருக்காதே..!

தேனி கண்னன் கவர் வாங்குகிறார் என்பதைத் தாமதமாகவேணும் நிர்வாகம் கன்டுபிடிததுள்ளது,தாமதமாக தவறைக் கண்டுபிடித்த ஒரே காரணத்திற்காய் லஞ்சம் வாங்குபவர் பணியில் தொடர்வதை அனுமதிக்க முடியுமா..?அதனை நீங்கள் நியாயப்படுத்துகிறார்களா என்று கேள்வி எழலாம்.

சரி தேனி கண்ண‌ன் லஞ்சம் வாங்குகிறார்,இவரைப் போன்றவர்களால் தான் இத்துறைக்கே கெட்ட பெயர் ஏற்படுகிறது அதனால் அவரை நீக்கியது சரி என்று ஒப்புக் கொள்ளுவோம்.'தி இந்து' வில் இப்பொழுது ப‌ணியில் சேர்க்கப்ப‌ட்டவர்கள் எல்லாம் உத்தமபுத்திரர்களா...?

தவறே செய்யாத யோக்கிய சிகாமணிகளா..?

கவர் அளவுக்கு வாங்க மாட்டார்களா...சரி கவர் வாங்காமல் பண்டல் பண்டலாக வாங்குவார்களா..?இவர்களில் யாராவது ஒருவரின் நேர்மை பற்றிப் பேசினால் உண்மை தெரிந்து விடப் போகிறது.

சாதாரண ரிப்போர்ட்டரின் தகுதியையும் நேர்மையையும் எதற்கு உரசிப் பார்க்க வேண்டும்..? அதன் தலைமைப் பீடத்தையே உரசிப் பார்ப்போம்.

இப்பொழுது காமதேனு நாளிதழில் வேலைக்கு ஆள் எடுக்கும் பணியைச் செய்யும் இருவரில் ஒருவர் மட்டுமல்ல அதன் எடிட்டர் என்றும் அனைவராலும் அறியப்படுபவர் என்.அசோகன்.

அவர் நேர்மையானவரா..? யாரிடமும் கை நீட்டி ஒற்றைக்காசு முறையற்ற வழியில் வாங்காதவரா..?

இதற்குப் பதில் சொல்வதற்கு முன் பழைய கதை அல்ல,உண்மை ஒன்றைப் பார்ப்போம்.

அப்பொழுது திமுக ஆட்சிக் காலம்.

ஹன்ஸ்ராஜ் சக்சேனா திரைப்படங்களை சன் பிக்சர்ஸுக்காக அடிமாட்டு விலைக்கு உருட்டியும் மிரட்டியும் சமாதானமாகவும் வாங்கிக் கொண்டிருந்தார்.

ஒரு குறிப்பிட்ட நாளன்று இரண்டு பேர் தங்கள் திரைப்படத்தின் விற்பனை உரிமை குறித்துப் பேசுவதற்காய் ஹன்ஸ்ராஜ் சக்சேனாவைப் பார்க்க வந்திருந்தார்கள்.
தமிழகத்தின் முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதியின் மகன் பாலாஜி நடித்த காதல் சொல்ல வந்தேன் என்னும் திரைப்படம் தான் அது.படம்.படம் குறித்து சக்சேனாவுக்கும் படத்தயாரிப்பாளர்களுக்கும் நடந்த பேச்சு இருதரப்புக்கும் முடிவாகாமல் நீண்டு கொண்டே சென்றது.



ஒரு கட்டத்தில் சலிப்படைந்த தயாரிப்பாளர்கள் இருவரும்,நாங்க வேணுமின்னா மாறன் சார்ட்ட பேசிக்கிறோம் என்று சொல்கிறார்கள்.

இவர்கள் இப்படிச் சொன்னதும் சக்சேனாவின் புருவம் உயர்கிறது.இத்துறையின் மன்னாதி மன்னர்கள் எல்லாம் நம்மைப் பார்க்க அப்பாயிண்ட்மெண்ட் கேட்டு காத்துக்கிட்டிருக்காங்க.ஆனா ஒரு சுமாரான‌ படத்தை தயாரித்த இந்த இரண்டு புதிய தயாரிப்பாளர்கள் கலா நிதி மாறனைச் சந்திக்கப் போகிறோம் என்று சாதாரணமாக நம்மிடமே சொல்கின்றனரே என்னும் சந்தேகத்தையும் ஆச்சரியத்தையும் மனதில் வைத்துக் கொண்டு உங்களுக்கு சேர்மனைத் தெரியுமா ..? என்று கேட்கிறார்.

அசோகன் 


எதிரில் இருந்தவர்களில் ஒருவர்,  நான் அசோகன் விகடன் எடிட்டர்.இவர் சரவணக்குமார் ஜூனியர் விகடன் பொறுப்பாசிரியர் என்று சொல்கிறார்.

(நாம‌ மாறன் ட்ட ஆட்டையப் போட்டுத் தனியாப் படம் எடுக்கிறோம்,இவனுங்க சீனிவாசன் ட்ட ஆட்டையைப் போட்டு படம் எடுக்குறாங்க,சேம் பிளட் என்று சக்சேனாவின் மைண்ட் வாய்ஸ் சொல்லியதா என்று நமக்குத் தெரியாது.)

அதன் பின் சம்பிரதாயமாய் ஒரு சில வார்த்தைகள் பேசிய சக்சேனா,நீங்க சேர்மன்ட்ட பேசிக்கோங்க..என்று சொல்லி விடை கொடுக்கிறார்.உடனே கலாநிதி மாறனுக்கும் இவர்களைப் பற்றிச் சொல்லி இவர்கள் சந்திக்க வரும் விஷயத்தையும் சொல்லி விடுகிறார்.

இதைக் கேட்ட மாறன் உடனே சீனிவாசனுக்குப் போன் செய்கிறார்.

"என்ன நீங்க தான் சினிமா எடுக்குறீங்கன்னு நினைச்சேன்.உங்க கிட்ட வேலை செய்யுறவங்க எல்லாம் படம் எடுக்குறாங்க போல..தனியாப் படம் எடுக்குற அளவுக்கு நிறையச் சம்பளம் கொடுக்குறீங்க போல....ரொம்பப் பெரிய ஆளுதான் நீங்க" என்று நக்கல் செய்கிறார்.

சீனிவாசனுக்கு கோபம் உச்சத்தில் ஏறுகிறது.அவரிடம் ஆட்டையைப் போட்டதை விட‌,நாமும் இந்த பீல்டுல ஒரு படம் எடுக்குறோம்.நம்ம லெவலுக்குப் படம் எடுக்குற அளவுக்கு வந்துட்டார்களே என்பது தான் அதிக‌ ஆத்திரம்.

உடனே சீட்டுக் கிழிக்கப்படுகிறது.

ஜூனியர் விகடன் செய்தி ஆசிரியர் எஸ்.சரவணக்குமார் நீக்கப்படுகிறார்.(இப்பொழுது மீடியா வாய்ஸில் குப்பை கொட்டுகிறார்) அசோகன் விகடன் ஆசிரியர் பதவியில் இருந்து டம்மி ஆக்கப்பட்டு பதிப்பாளர் ஆக்கப்படுகிறார்.

சரவணக்குமார் 

(சரவண‌க்குமார் கரூருக்கு பந்தாடப்பட்டதாகவும்,இனிமேல் இங்கு நாம் முன்பு போல் கோலோச்சுவது சிரமம்,ஆகவே ராஜினாமா செய்து விடுங்கள் என அசோகனின் அறிவுரைப்படி அவர் ராஜினாமா செய்ததாகவும் ஒரு தகவல் உண்டு.)

விகடனில் ஆசிரியர் பதவியில் வேலை செய்த ஒருவர்,தனக்குக்கீழ் பணியாற்றும் செய்தி ஆசிரியர் ஒருவரைக் கூட்டணி சேர்த்துக் கொண்டு திரைப்படம் தயாரிக்கும் அளவுக்கு இருந்தார் என்றால் அவரது நேர்மையைத் தெரிந்து கொள்ளலாம்.



காமதேனு நாளிதழின் தலைமைப்பீடத்தின் நேர்மையை உரசினால் இப்படி பல்லிளிக்கிற‌து.

சுரண்டிய பணத்தில் படம் எடுத்த இவர்கள்,தங்களிடம் லஞ்சம் கேட்டார் என்று தணிக்கைத் துறை அதிகாரியை லஞ்ச ஒழிப்பில் சிக்க வைத்தது தனிக்கதை.

இது ஒரு சின்ன சம்பவம் தான்.இப்படி நிறையக் கறைகளைத் தனது பக்கத்தில் கொண்டவர் தான் அசோகன்.அதே சமயம் அசோகன் ஒரு திறமையான எடிட்டர் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

விகடன் ஆசிரியர் என்னும் பதவியைத் தவறாகப் பயன்படுத்தி,அதனைத் துஷ்பிரயோகம் செய்து அவர் செய்த செயல்களை எழுதப் பக்க‌ங்கள் நீளும்.எழுத எமக்கும் படிக்க உங்களுக்கும் நேரம் கிடையாது.

இப்படிப்பட்ட வரலாறு கொண்ட அசோகன் தான் இன்று காமதேனுவின் எடிட்டர்.இவர் தான் இன்று அனைவரையும் வேலைக்கு எடுக்கும்,எடுத்தவர்களை இனி வழி நடத்தும் உச்ச பட்ச பொறுப்பிலும் இருக்கிறார்.காமதேனு பத்திரிகையையும் இவர் தான் நடத்திச் சொல்லப் போகிறார்.

இவரை காமதேனுவில் தலைமைப்பீடத்தில் அமர்த்திய நிர்வாகம் சில நூறுகள் கவர் வாங்குபவர் என்று ஒரு ரிப்போர்ட்டரை வேலைக்குச் சேர்ந்த இரண்டு நாட்களில் வேலையை விட்டு நீக்கியுள்ளது.

அது சரி இப்படிக் கூடப் பார்ப்போம்.

''தி இந்து 'வில் யாருமே கவர் வாங்குவது இல்லையா..?தமிழ்ப் பத்திரிகையாளர்கள் நூறுகளில் வாங்கினால்,ஹிந்து பத்திரிகையாளர்கள் எத்தனை பேர் அரசு உயர் மட்ட அதிகாரிகளிடம்,'சார் ஒரு சின்ன obligation ' என்று ஆரம்பித்து காரியம் சாதிக்கிறார்கள் என்பதனை அரசு மட்டங்களில் கேட்டால் தெரியும்.

இதே  'தி ஹிந்து' வில் குப்பை கொட்டும் ராதாகிருஷ்ணன் கடந்த திமுக ஆட்சியில் இவரை விடத் திறமையானவர்கள் பலர் இருக்க,சலுகை விலையில் கோடிக்கணக்கான விலை மதிப்புள்ள வீட்டு வசதி வாரிய வீடு ஒன்றைப் பெறவில்லையா...?இவருடன் விண்ணப்பம் செய்தவர்கள் பலர் இருக்க அவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு இவருக்கு மட்டும் வீட்டு மனை கிட்டிய காரனம் என்ன..?கனிமொழிக்கு சொம்பு அடித்த காரணமும் அவரது நட்பும் தவிரவும் வேறு என்னவாக இருக்க முடியும்..?

(இவர் குறித்து சுவராஸ்யமான செய்தி ஒன்று உண்டு.

நான்கு வருடங்களுக்கு முன்பு ஒரு பஞ்சாயத்து தொடர்பாக கருணாநிதி குடும்பத்தினர் அனைவரும் அது குறித்துப் பேசுவதற்காய் சி.ஐ.டி. காலனி வீட்டில் குழுமிக் கொண்டிருந்தனர்.செய்தி சேகரிப்பதற்காக விரல் விட்டு எண்ணக் கூடிய பத்திரிகையாளர்கள் வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்தனர்.

பஞ்சாயத்தில் கலந்து கொள்ள மு.க.அழகிரி இறுதியாக வீட்டுக்குள் வந்தார்.வீட்டின் முன் அறையைத் தாண்டி உள்ளறைக்குச் செல்லும் முன் ஹாலுக்குள் நுழைந்தவர் அங்கு அன்னிய முகம் ஒன்று இருப்பதைப் பார்த்து திடுக்க்ட்டவர்,

இங்க வாப்பா நீ யாருய்யா..? என்று கேட்கிறார்,

ஐம் ராதாகிருஷ்ணன்,ஹிந்து ரிப்போர்ட்டர் என்று கொஞ்சம் தெனாவட்டுடன் பதில் சொல்லியிருக்கிறார்.ஹிந்துரிப்போர்ட்டர்ன்னா என் பெட்ரூம் வரைக்கும் வந்துடுவியா..முதல்ல வெளியே போய்யா என்று கழுத்தைப் பிடித்து
வெளியே தள்ளாத குறையாய் வாசல் வ‌ரைக்கும் அனுப்புகிறார்.

மூன்று அப்பாவி பத்திரிகையாளர்களைக் கொலை செய்தவர் என்பதால் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் அழகிரி மீது வெறுப்பு உண்டு.

ஆனால் ராதாகிருஷ்ணனை வெளியே அனுப்பிய அழகிரியை அன்று வெளியே நின்ற பத்திரிகையாளர்கள் புன் சிரிப்புடன் பார்த்தனர்.தமிழ் பத்திரிகையாளர்கள் என்றால் இளக்காரமாகப் பார்க்கும் ராதாகிருஷ்ணன் அன்று குனிந்த் தலையுடன் வெளியேறினார்.)


the hindu,


தேனி கண்ணனை நீக்கிய சம்பவத்திற்குத் திரும்பவும் வருவோம்.

லஞ்சம்,முறைகேடு போன்றவற்றில் தொடர்புள்ளவர்களை நீக்கம் செய்வதில் இது என்ன மாதிரியான அளவுகோல் என்றும் எந்த விதத்தில் சரியான நடவடிக்கை என்றும் தெரியவில்லை.

தேனி கண்ணன் கவர் வாங்குவது குறித்து கொஞ்சம் தாமதமாகவாவது அறிக்கை கொடுத்த தனியார் துப்பறியும் நிறுவனம் அசோகனின் 'நேர்மை' குறித்து நீண்ட தாமதமாகவேணும் எந்த அறிக்கையும் கொடுக்கவில்லையா..?இல்லை இவருக்கு மட்டும் விதிவிலக்கா..?

சில நூறு கவர் வாங்கியது குற்றம் என்றால்,சில கோடிகளில் படம் எடுக்கும் அளவுக்கு சுரண்டியது குற்றம் இல்லையா..?அது என்ன விகடன் கொடுக்கும் சம்பளப்பணத்தில் எடுத்ததா....?

சாதிச் சான்றிதழில் கையெழுத்திடுவதற்காக நூறு ரூபாய் லஞ்சம் வாங்கினார் என்று கிராம நிர்வாக அலுவலரை கையும் களவுமாய்ப் பிடிக்கும் லஞ்ச ஒழிப்புத் துறை,கோடிகளில் புரளும் மந்திரிக்கு சலாம் போடுவதைப் போலத்தானே இதுவும்...!

இல்லை இது எதுவும் சாதிப் பாசமா என்றும் தெரியவில்லை.விகடனிலும் இப்படித்தான் நடந்தது.

விகேஷ்,சரவண‌க்குமார் போன்ற ஊழல் பேர்வழிகளை டிஸ்மிஸ் செய்த நிர்வாகம் அசோகன் மாதிரி ஆட்களுக்கு மட்டும் விலக்கு கொடுத்து தன்னுடனே வைத்துக் கொண்டது..ஒருவேளை அய்யர் சொத்தை அய்யர் மட்டும் திருடலாம்,கொள்ளையடிக்கலாம்.அடிஷனலா அய்யங்காரை வேண்டுமானால் சேர்த்துக்கலாம்.மத்தவா அடிச்சா தப்புன்னு சொல்றாங்களோ என்னவோ..

பத்திரிகைத்துறை லஞ்சம்,கவர்,முறைகேடு என அதன் பெரும்பகுதி செல்லரித்துப் போனதற்கு சில நூறுகளில் கவர் வாங்கும் சாதாரண ரிப்போர்ட்டர்கள் மட்டும் காரணம் இல்லை.அதன் தலைமைப்பீடத்தில் இருந்து கொண்டு எல்லா அயோக்கியத்த‌னங்களையும் மறைமுகமாகவும் சில சமயம் வெளிப்படையாகவும் செய்பவர்கள் தான் முழு முதற்காரணம்.அதை விடுத்து இது போன்ற சிறு ரிப்போர்ட்டர்களை பலி கொடுத்து உங்களின் நேர்மையையும் தனித்தன்மையையும்,பரிசுத்தத்தையும் நிருபிக்க முயற்சிக்காதீர்கள்.

டிராபிக்கில் தவறு செய்தவன்,ரயிலில் தரமற்ற உணவு வாங்கிய குற்றங்களுக்கு எல்லாம் கருட புராண‌த்தின் படி கடுமையான தண்டனை அளித்து விட்டு,பல ஆயிரம் கோடிகள் சுரண்டியவனையும்,பல்லாயிரம் மக்களைக் கொலை செய்தவனையும் கண்டு கொள்ளாமல் திரைப்படம் எடுத்த ஷங்கர்-சுஜாதா கூட்டணியின் 'அந்நியன்' போதித்த 'நீதி'யை கஸ்தூரி அய்யங்கார் வழி வந்த 'தி ஹிந்து' நிர்வாகம் கடைப்பிடிப்பது எந்த விதத்திலும் நியாயமல்ல‌.


http://www.youtube.com/watch?v=vRVv_QALf7s


Tuesday, 2 October 2012

அந்தி மழை....!






து போன்றும் இல்லாமல்

புதிதாய் இருக்குமென எண்ணிணால்

அதில் கொஞ்சம் இதில் கொஞ்சம் என

இருப்பதில் பலவே இருக்கிறது..

அசைக்கமுடியாத ஓர் இடம்பிடிக்க

தனித்தன்மையோடு வாருங்கள்.

இல்லையெனில்

அந்திமழை அன்றொரு நாள் பெய்தது

என்ற நிலைதான் ஏற்படும் நண்பர்களே…!

Wednesday, 23 November 2011

ஜூனியர் விகடன்-ஊருக்குத்தாண்டி உபதேசம்



ஜூனியர் விகடனில் உதவி ஆசிரியர்களாகப் பணியாற்றி வந்த பி.பி.சிவசுப்ரமணியன் என்கின்ற சிவன் மற்றும் என்.அண்ணாமலை ஆகிய இருவரையும் பதவி உயர்வு என்கின்ற பெயரில் முறையே கோவைக்கும் மதுரைக்கும் நிர்வாகம் இடமாற்றம் செய்து பழி வாங்கியது. ஜூனியர் விகடன் வெளியீட்டாளர் அசோகன் இதன் பின்னணியில் இருப்பதாக இருவரும் தன்க்கு நெருக்கமானவர்களிடம் தெரிவித்து இருந்தனர்.

இடமாற்றத்தினை அண்ணாமலை அமைதியாக ஏற்றுக்கொண்டு மதுரைக்குப் பணிக்குச் சென்றார்.ஆனால் பி.பி.சிவசுப்ரமணியன் என்கின்ற சிவன் சென்னையில் தொழிலாளர் நீதிமன்றத்தில் இதனை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தார்.இவரது வழக்கினை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் பழிவாங்கும் நடவடிக்கை என்று கூறி இடமாற்றத்துக்கு தடை விதித்துள்ளது.

ஆனாலும் ஜுனியர் விகடன் நிர்வாகம் அலுவலகத்தில் இன்னும் அவரைப் பணியில் சேர்க்க மறுக்கிறது.இந்த விஷயத்தை ஜூனியர் விகடன் வெளியீட்டாளர் அசோகன் தனக்கு எதிரான விஷயமாகப் பார்க்கிறாராம்.அதனால் தான் இந்த இழுபறியாம்.


ஜெயலலிதா நீதிமன்றத்தை மதிக்க வேண்டும்,நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று பக்கம் பக்கமாக எழுதித் தள்ளும் ஜுனியர் விகடன் நீதிமன்ற உத்தரவை மதிக்குமா?

ஊருக்குத்தாண்டி உபதேசம் !

Sunday, 13 November 2011

ஜூனியர் விகடன் உதவி ஆசிரியர்களுக்கு கல்தா !


விகடன் குழுமத்தில் 15 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிக் கொண்டிருப்பவர்களும் தற்பொழுது ஜூனியர் விகடன் வாரம் இருமுறை இதழில் உதவி ஆசிரியர்கள் பொறுப்பில் இருப்பவர்களுமான பி.பி.சிவசுப்ரமணியன் என்கின்ற சிவன் மற்றும் அண்ணாமலை ஆகிய இருவரையும் ஜூனியர் விகடன் நிர்வாகம் பதவி இறக்கம் மற்றும் இட மாறுதல் செய்துள்ளது.
அண்ணாமலை


இதில் பி.பி.சிவசுப்ரமணியன் அவர்களை கோவை பகுதிக்கும்,அண்ணாமலையை மதுரை பகுதிக்கும் செய்தியாளர்களாக பதவியிறக்கம் செய்து இடமாறுதல் செய்துள்ளது.
ஆனால் பதவியிறக்கத்தால் சட்டரீதியாக நிர்வாகத்துக்கு பிரச்சனை வரும் என்பதால் சப் எடிட்டர் வித் ரிப்போர்ட்டர் என்ற பெயரிலும் ரூ.100 ஊதியம் உயர்வு கொடுத்தும் டெக்னிக்கலான உத்தரவினை நிர்வாகம்  வழங்கியுள்ளது.(ஆர்டரைத் தயாரித்த வெளியீட்டாளர் அசோகனுக்கு நாட்டிலேயே தான் தான் அறிவாளின்னு மனசுக்குள்ள நினைப்பு

இதில் பி.பி.சிவசுப்ரமணியன் அவர்கள் நிறைய நூல்களை எழுதியுள்ளார்.பல நூல்களை மொழிபெயர்த்துள்ளார்.மொழிபெயர்ப்பிலும் இலக்கியத்திலும் குறிப்பிடத்தக்க இடத்தை வகித்து வருபவர்.

அலுவலகத்தில் தனது உரிமைகளைப் பேசியதால் அவரைப்  பழி வாங்க நினைத்த நிர்வாகம் பிழை திருத்துவதில் கடந்த ஒரு வருடத்திற்கு முன் ஏற்பட்ட சிறு பிழையைக் காரணம் காட்டி கடந்த ஒரு வருடமாக அவருக்கு பெர்மார்மன்ஸ் அலவன்சை கொடுக்கவில்லை. 
இட மாற்ற‌த்தால் இப்பொழுது மூத்த வழக்குரைஞரைச் சந்தித்துள்ள பி.பி.சிவசுப்ரமணியன் ஓரிரு நாட்களில் தன்னை கோவைக்கு இடமாறுதல் செய்ததை எதிர்த்து விகடன் நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உள்ளார்.அதன் பின் நீதிமன்றத்தில் முறையிடவும் தயாராகி வருகிறாராம்.

மற்றொரு உதவி ஆசிரியரும் திரைப்பட பாடலாசிரியருமான அண்ணாமலை தன்னை மதுரைக்கு இட மாறுதல் செய்ததை எப்படி அணுகுவது?நீதிமன்றம் செல்வதா அல்லது நிர்வாகத்துக்கு தொடர்ந்து மனு போடுவதா என்று மதில் மேல் பூனையாக இருக்கிறாராம்.