Friday 9 August 2013

'தி இந்து' நாளிதழில் கருட புராணத்தின் படி தண்டனை...!



தேனி கண்ணன்



தேனி கண்ணன்.

இவரைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம்.

இவர் வரதராஜன் அபகரித்த‌ குமுதத்தில் சினிமா நிருபராகப் பணியாற்றிக் கொண்டிருப்பவர்.இளையராஜா கேள்வி பதில்கள் பகுதியை இவர் தான் தொகுத்து எழுதிக் கொண்டிருந்தார்.இவர் கடந்த மாதம் தொடங்க உள்ள  'தி இந்து' நாளிதழில் சினிமா நிருபர் வேலைக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்.

வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் இது வரை குமுதத்தில் தான் பார்த்து வந்த வேலையை ராஜினாமா செய்து விட்டு 'தி இந்து' நாளிதழில் சேர்ந்து விட்டார்.

ஆனால் வேலைக்குச் செர்ந்த இரண்டொரு நாளில் காமதேனு நிர்வாகம் இவரை வேலையை விட்டு நீக்கி விட்டது.
இவர் அதிகமாக கவர் வாங்குபவ‌ர் என்று தனியார் துப்பறியும் நிறுவனம் இவரைப்பற்றி அறிக்கை கொடுத்ததன் அடிப்படையில் இவர் தமது நிறுவனத்தில் பணி புரியத் தகுதியற்ற‌வர் என்று வேலையை விட்டு நீக்கியதாம்.

இப்பொழுது தேனி கண்ண‌ன் எந்த வழியும் தெரியாது நடுத்தெருவில் நிற்கிறார்.

நிருபர் தேனி கண்ணன் லஞ்சம் வாங்குவது உண்மை என்றே வைத்துக் கொண்டாலும் காமதேனு நிர்வாகம்,அவரை வேலைக்குச் சேர்க்கும் முன்பே தீர விசாரித்து அவரைச் சேர்க்காமல் இருந்திருக்கலாமே...ஒருவரை வேலைக்குச் சேர்த்து இரண்டு நாள் கழித்து அவர் கை சுத்தம் இல்லாதவர் என்று கண்டுபிடித்து பணி நீக்கம் செய்வதற்குப் பதிலாக, அதை இரண்டு நாட்களுக்கு முன் கண்டுபிடித்து அவரைப் பணியில் சேர்க்காமலேயே இருந்திருக்கலாமே..!அவர் குமுதத்திலேயே கவர் வாங்கிக் கொண்டு (உங்கள் எண்ணப்படி) வேலையில் நீடித்திருப்பாரே..!

கையில் இருந்த‌ வேலையையும் விட்டுவிட்டு இன்று அவரது குடும்பம் நடுத்தெருவில் நிற்கும் நிலை ஏற்பட்டிருக்காதே..!

தேனி கண்னன் கவர் வாங்குகிறார் என்பதைத் தாமதமாகவேணும் நிர்வாகம் கன்டுபிடிததுள்ளது,தாமதமாக தவறைக் கண்டுபிடித்த ஒரே காரணத்திற்காய் லஞ்சம் வாங்குபவர் பணியில் தொடர்வதை அனுமதிக்க முடியுமா..?அதனை நீங்கள் நியாயப்படுத்துகிறார்களா என்று கேள்வி எழலாம்.

சரி தேனி கண்ண‌ன் லஞ்சம் வாங்குகிறார்,இவரைப் போன்றவர்களால் தான் இத்துறைக்கே கெட்ட பெயர் ஏற்படுகிறது அதனால் அவரை நீக்கியது சரி என்று ஒப்புக் கொள்ளுவோம்.'தி இந்து' வில் இப்பொழுது ப‌ணியில் சேர்க்கப்ப‌ட்டவர்கள் எல்லாம் உத்தமபுத்திரர்களா...?

தவறே செய்யாத யோக்கிய சிகாமணிகளா..?

கவர் அளவுக்கு வாங்க மாட்டார்களா...சரி கவர் வாங்காமல் பண்டல் பண்டலாக வாங்குவார்களா..?இவர்களில் யாராவது ஒருவரின் நேர்மை பற்றிப் பேசினால் உண்மை தெரிந்து விடப் போகிறது.

சாதாரண ரிப்போர்ட்டரின் தகுதியையும் நேர்மையையும் எதற்கு உரசிப் பார்க்க வேண்டும்..? அதன் தலைமைப் பீடத்தையே உரசிப் பார்ப்போம்.

இப்பொழுது காமதேனு நாளிதழில் வேலைக்கு ஆள் எடுக்கும் பணியைச் செய்யும் இருவரில் ஒருவர் மட்டுமல்ல அதன் எடிட்டர் என்றும் அனைவராலும் அறியப்படுபவர் என்.அசோகன்.

அவர் நேர்மையானவரா..? யாரிடமும் கை நீட்டி ஒற்றைக்காசு முறையற்ற வழியில் வாங்காதவரா..?

இதற்குப் பதில் சொல்வதற்கு முன் பழைய கதை அல்ல,உண்மை ஒன்றைப் பார்ப்போம்.

அப்பொழுது திமுக ஆட்சிக் காலம்.

ஹன்ஸ்ராஜ் சக்சேனா திரைப்படங்களை சன் பிக்சர்ஸுக்காக அடிமாட்டு விலைக்கு உருட்டியும் மிரட்டியும் சமாதானமாகவும் வாங்கிக் கொண்டிருந்தார்.

ஒரு குறிப்பிட்ட நாளன்று இரண்டு பேர் தங்கள் திரைப்படத்தின் விற்பனை உரிமை குறித்துப் பேசுவதற்காய் ஹன்ஸ்ராஜ் சக்சேனாவைப் பார்க்க வந்திருந்தார்கள்.
தமிழகத்தின் முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதியின் மகன் பாலாஜி நடித்த காதல் சொல்ல வந்தேன் என்னும் திரைப்படம் தான் அது.படம்.படம் குறித்து சக்சேனாவுக்கும் படத்தயாரிப்பாளர்களுக்கும் நடந்த பேச்சு இருதரப்புக்கும் முடிவாகாமல் நீண்டு கொண்டே சென்றது.



ஒரு கட்டத்தில் சலிப்படைந்த தயாரிப்பாளர்கள் இருவரும்,நாங்க வேணுமின்னா மாறன் சார்ட்ட பேசிக்கிறோம் என்று சொல்கிறார்கள்.

இவர்கள் இப்படிச் சொன்னதும் சக்சேனாவின் புருவம் உயர்கிறது.இத்துறையின் மன்னாதி மன்னர்கள் எல்லாம் நம்மைப் பார்க்க அப்பாயிண்ட்மெண்ட் கேட்டு காத்துக்கிட்டிருக்காங்க.ஆனா ஒரு சுமாரான‌ படத்தை தயாரித்த இந்த இரண்டு புதிய தயாரிப்பாளர்கள் கலா நிதி மாறனைச் சந்திக்கப் போகிறோம் என்று சாதாரணமாக நம்மிடமே சொல்கின்றனரே என்னும் சந்தேகத்தையும் ஆச்சரியத்தையும் மனதில் வைத்துக் கொண்டு உங்களுக்கு சேர்மனைத் தெரியுமா ..? என்று கேட்கிறார்.

அசோகன் 


எதிரில் இருந்தவர்களில் ஒருவர்,  நான் அசோகன் விகடன் எடிட்டர்.இவர் சரவணக்குமார் ஜூனியர் விகடன் பொறுப்பாசிரியர் என்று சொல்கிறார்.

(நாம‌ மாறன் ட்ட ஆட்டையப் போட்டுத் தனியாப் படம் எடுக்கிறோம்,இவனுங்க சீனிவாசன் ட்ட ஆட்டையைப் போட்டு படம் எடுக்குறாங்க,சேம் பிளட் என்று சக்சேனாவின் மைண்ட் வாய்ஸ் சொல்லியதா என்று நமக்குத் தெரியாது.)

அதன் பின் சம்பிரதாயமாய் ஒரு சில வார்த்தைகள் பேசிய சக்சேனா,நீங்க சேர்மன்ட்ட பேசிக்கோங்க..என்று சொல்லி விடை கொடுக்கிறார்.உடனே கலாநிதி மாறனுக்கும் இவர்களைப் பற்றிச் சொல்லி இவர்கள் சந்திக்க வரும் விஷயத்தையும் சொல்லி விடுகிறார்.

இதைக் கேட்ட மாறன் உடனே சீனிவாசனுக்குப் போன் செய்கிறார்.

"என்ன நீங்க தான் சினிமா எடுக்குறீங்கன்னு நினைச்சேன்.உங்க கிட்ட வேலை செய்யுறவங்க எல்லாம் படம் எடுக்குறாங்க போல..தனியாப் படம் எடுக்குற அளவுக்கு நிறையச் சம்பளம் கொடுக்குறீங்க போல....ரொம்பப் பெரிய ஆளுதான் நீங்க" என்று நக்கல் செய்கிறார்.

சீனிவாசனுக்கு கோபம் உச்சத்தில் ஏறுகிறது.அவரிடம் ஆட்டையைப் போட்டதை விட‌,நாமும் இந்த பீல்டுல ஒரு படம் எடுக்குறோம்.நம்ம லெவலுக்குப் படம் எடுக்குற அளவுக்கு வந்துட்டார்களே என்பது தான் அதிக‌ ஆத்திரம்.

உடனே சீட்டுக் கிழிக்கப்படுகிறது.

ஜூனியர் விகடன் செய்தி ஆசிரியர் எஸ்.சரவணக்குமார் நீக்கப்படுகிறார்.(இப்பொழுது மீடியா வாய்ஸில் குப்பை கொட்டுகிறார்) அசோகன் விகடன் ஆசிரியர் பதவியில் இருந்து டம்மி ஆக்கப்பட்டு பதிப்பாளர் ஆக்கப்படுகிறார்.

சரவணக்குமார் 

(சரவண‌க்குமார் கரூருக்கு பந்தாடப்பட்டதாகவும்,இனிமேல் இங்கு நாம் முன்பு போல் கோலோச்சுவது சிரமம்,ஆகவே ராஜினாமா செய்து விடுங்கள் என அசோகனின் அறிவுரைப்படி அவர் ராஜினாமா செய்ததாகவும் ஒரு தகவல் உண்டு.)

விகடனில் ஆசிரியர் பதவியில் வேலை செய்த ஒருவர்,தனக்குக்கீழ் பணியாற்றும் செய்தி ஆசிரியர் ஒருவரைக் கூட்டணி சேர்த்துக் கொண்டு திரைப்படம் தயாரிக்கும் அளவுக்கு இருந்தார் என்றால் அவரது நேர்மையைத் தெரிந்து கொள்ளலாம்.



காமதேனு நாளிதழின் தலைமைப்பீடத்தின் நேர்மையை உரசினால் இப்படி பல்லிளிக்கிற‌து.

சுரண்டிய பணத்தில் படம் எடுத்த இவர்கள்,தங்களிடம் லஞ்சம் கேட்டார் என்று தணிக்கைத் துறை அதிகாரியை லஞ்ச ஒழிப்பில் சிக்க வைத்தது தனிக்கதை.

இது ஒரு சின்ன சம்பவம் தான்.இப்படி நிறையக் கறைகளைத் தனது பக்கத்தில் கொண்டவர் தான் அசோகன்.அதே சமயம் அசோகன் ஒரு திறமையான எடிட்டர் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

விகடன் ஆசிரியர் என்னும் பதவியைத் தவறாகப் பயன்படுத்தி,அதனைத் துஷ்பிரயோகம் செய்து அவர் செய்த செயல்களை எழுதப் பக்க‌ங்கள் நீளும்.எழுத எமக்கும் படிக்க உங்களுக்கும் நேரம் கிடையாது.

இப்படிப்பட்ட வரலாறு கொண்ட அசோகன் தான் இன்று காமதேனுவின் எடிட்டர்.இவர் தான் இன்று அனைவரையும் வேலைக்கு எடுக்கும்,எடுத்தவர்களை இனி வழி நடத்தும் உச்ச பட்ச பொறுப்பிலும் இருக்கிறார்.காமதேனு பத்திரிகையையும் இவர் தான் நடத்திச் சொல்லப் போகிறார்.

இவரை காமதேனுவில் தலைமைப்பீடத்தில் அமர்த்திய நிர்வாகம் சில நூறுகள் கவர் வாங்குபவர் என்று ஒரு ரிப்போர்ட்டரை வேலைக்குச் சேர்ந்த இரண்டு நாட்களில் வேலையை விட்டு நீக்கியுள்ளது.

அது சரி இப்படிக் கூடப் பார்ப்போம்.

''தி இந்து 'வில் யாருமே கவர் வாங்குவது இல்லையா..?தமிழ்ப் பத்திரிகையாளர்கள் நூறுகளில் வாங்கினால்,ஹிந்து பத்திரிகையாளர்கள் எத்தனை பேர் அரசு உயர் மட்ட அதிகாரிகளிடம்,'சார் ஒரு சின்ன obligation ' என்று ஆரம்பித்து காரியம் சாதிக்கிறார்கள் என்பதனை அரசு மட்டங்களில் கேட்டால் தெரியும்.

இதே  'தி ஹிந்து' வில் குப்பை கொட்டும் ராதாகிருஷ்ணன் கடந்த திமுக ஆட்சியில் இவரை விடத் திறமையானவர்கள் பலர் இருக்க,சலுகை விலையில் கோடிக்கணக்கான விலை மதிப்புள்ள வீட்டு வசதி வாரிய வீடு ஒன்றைப் பெறவில்லையா...?இவருடன் விண்ணப்பம் செய்தவர்கள் பலர் இருக்க அவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு இவருக்கு மட்டும் வீட்டு மனை கிட்டிய காரனம் என்ன..?கனிமொழிக்கு சொம்பு அடித்த காரணமும் அவரது நட்பும் தவிரவும் வேறு என்னவாக இருக்க முடியும்..?

(இவர் குறித்து சுவராஸ்யமான செய்தி ஒன்று உண்டு.

நான்கு வருடங்களுக்கு முன்பு ஒரு பஞ்சாயத்து தொடர்பாக கருணாநிதி குடும்பத்தினர் அனைவரும் அது குறித்துப் பேசுவதற்காய் சி.ஐ.டி. காலனி வீட்டில் குழுமிக் கொண்டிருந்தனர்.செய்தி சேகரிப்பதற்காக விரல் விட்டு எண்ணக் கூடிய பத்திரிகையாளர்கள் வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்தனர்.

பஞ்சாயத்தில் கலந்து கொள்ள மு.க.அழகிரி இறுதியாக வீட்டுக்குள் வந்தார்.வீட்டின் முன் அறையைத் தாண்டி உள்ளறைக்குச் செல்லும் முன் ஹாலுக்குள் நுழைந்தவர் அங்கு அன்னிய முகம் ஒன்று இருப்பதைப் பார்த்து திடுக்க்ட்டவர்,

இங்க வாப்பா நீ யாருய்யா..? என்று கேட்கிறார்,

ஐம் ராதாகிருஷ்ணன்,ஹிந்து ரிப்போர்ட்டர் என்று கொஞ்சம் தெனாவட்டுடன் பதில் சொல்லியிருக்கிறார்.ஹிந்துரிப்போர்ட்டர்ன்னா என் பெட்ரூம் வரைக்கும் வந்துடுவியா..முதல்ல வெளியே போய்யா என்று கழுத்தைப் பிடித்து
வெளியே தள்ளாத குறையாய் வாசல் வ‌ரைக்கும் அனுப்புகிறார்.

மூன்று அப்பாவி பத்திரிகையாளர்களைக் கொலை செய்தவர் என்பதால் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் அழகிரி மீது வெறுப்பு உண்டு.

ஆனால் ராதாகிருஷ்ணனை வெளியே அனுப்பிய அழகிரியை அன்று வெளியே நின்ற பத்திரிகையாளர்கள் புன் சிரிப்புடன் பார்த்தனர்.தமிழ் பத்திரிகையாளர்கள் என்றால் இளக்காரமாகப் பார்க்கும் ராதாகிருஷ்ணன் அன்று குனிந்த் தலையுடன் வெளியேறினார்.)


the hindu,


தேனி கண்ணனை நீக்கிய சம்பவத்திற்குத் திரும்பவும் வருவோம்.

லஞ்சம்,முறைகேடு போன்றவற்றில் தொடர்புள்ளவர்களை நீக்கம் செய்வதில் இது என்ன மாதிரியான அளவுகோல் என்றும் எந்த விதத்தில் சரியான நடவடிக்கை என்றும் தெரியவில்லை.

தேனி கண்ணன் கவர் வாங்குவது குறித்து கொஞ்சம் தாமதமாகவாவது அறிக்கை கொடுத்த தனியார் துப்பறியும் நிறுவனம் அசோகனின் 'நேர்மை' குறித்து நீண்ட தாமதமாகவேணும் எந்த அறிக்கையும் கொடுக்கவில்லையா..?இல்லை இவருக்கு மட்டும் விதிவிலக்கா..?

சில நூறு கவர் வாங்கியது குற்றம் என்றால்,சில கோடிகளில் படம் எடுக்கும் அளவுக்கு சுரண்டியது குற்றம் இல்லையா..?அது என்ன விகடன் கொடுக்கும் சம்பளப்பணத்தில் எடுத்ததா....?

சாதிச் சான்றிதழில் கையெழுத்திடுவதற்காக நூறு ரூபாய் லஞ்சம் வாங்கினார் என்று கிராம நிர்வாக அலுவலரை கையும் களவுமாய்ப் பிடிக்கும் லஞ்ச ஒழிப்புத் துறை,கோடிகளில் புரளும் மந்திரிக்கு சலாம் போடுவதைப் போலத்தானே இதுவும்...!

இல்லை இது எதுவும் சாதிப் பாசமா என்றும் தெரியவில்லை.விகடனிலும் இப்படித்தான் நடந்தது.

விகேஷ்,சரவண‌க்குமார் போன்ற ஊழல் பேர்வழிகளை டிஸ்மிஸ் செய்த நிர்வாகம் அசோகன் மாதிரி ஆட்களுக்கு மட்டும் விலக்கு கொடுத்து தன்னுடனே வைத்துக் கொண்டது..ஒருவேளை அய்யர் சொத்தை அய்யர் மட்டும் திருடலாம்,கொள்ளையடிக்கலாம்.அடிஷனலா அய்யங்காரை வேண்டுமானால் சேர்த்துக்கலாம்.மத்தவா அடிச்சா தப்புன்னு சொல்றாங்களோ என்னவோ..

பத்திரிகைத்துறை லஞ்சம்,கவர்,முறைகேடு என அதன் பெரும்பகுதி செல்லரித்துப் போனதற்கு சில நூறுகளில் கவர் வாங்கும் சாதாரண ரிப்போர்ட்டர்கள் மட்டும் காரணம் இல்லை.அதன் தலைமைப்பீடத்தில் இருந்து கொண்டு எல்லா அயோக்கியத்த‌னங்களையும் மறைமுகமாகவும் சில சமயம் வெளிப்படையாகவும் செய்பவர்கள் தான் முழு முதற்காரணம்.அதை விடுத்து இது போன்ற சிறு ரிப்போர்ட்டர்களை பலி கொடுத்து உங்களின் நேர்மையையும் தனித்தன்மையையும்,பரிசுத்தத்தையும் நிருபிக்க முயற்சிக்காதீர்கள்.

டிராபிக்கில் தவறு செய்தவன்,ரயிலில் தரமற்ற உணவு வாங்கிய குற்றங்களுக்கு எல்லாம் கருட புராண‌த்தின் படி கடுமையான தண்டனை அளித்து விட்டு,பல ஆயிரம் கோடிகள் சுரண்டியவனையும்,பல்லாயிரம் மக்களைக் கொலை செய்தவனையும் கண்டு கொள்ளாமல் திரைப்படம் எடுத்த ஷங்கர்-சுஜாதா கூட்டணியின் 'அந்நியன்' போதித்த 'நீதி'யை கஸ்தூரி அய்யங்கார் வழி வந்த 'தி ஹிந்து' நிர்வாகம் கடைப்பிடிப்பது எந்த விதத்திலும் நியாயமல்ல‌.


http://www.youtube.com/watch?v=vRVv_QALf7s


8 comments:

AAR said...

Good article.

1. Anniyan reference was a really appropriate. Shankar-Sujatha combination always shows Brahmins as educated, high designation and good people. While people in slums are big, fat, black and evil.
Sick of Shankar movies.

2. Brahmin organization always recruit and keep Brahmins in top post. Iyer-Iynegar are one and the same for them.
TVS, Sundaram group, TAFE, Hindu,..., list is endless. Thats why none of these companies are not able to grow pan-India.

3. Brahmins are always corrupt and arrogant. But they will never expose their own caste people.

4. Regarding the reporter who was expelled after joining, at that time of recruitment candidate has to sign a statement that he is okay for a back ground verification and he will quit if any adverse feedback is received.

This is quite common in IT industry. Nothing wrong. I have seen people expelled even after 2 years.

Unknown said...

Very excellent Article...

Anonymous said...

@Mr.ARR:
1. yes. Only Shankar shows brahmins in a positive way. What is wrong in that? Almost whole tamil cinema shows brahmins negatively. Now tell, the Number 1 director in South India?

2. Yes. Brahmins recruit only Brahmins. Let TVS, Tafe, The Hindu may not grow Pan-India. What is your problem? We are happy with what the quality of those above-mentioned brands.

3. Brahmins are always corrupt and arrogant. I think you have included people like A Raja, Karunanidhi, Rajathi in Brahmin list.

If you can compete with a Brahmin, please go ahead with that. Every Brahmin is coming up on his/her own even if there is no support from the government. I studied journalism and I am also from MEDIA. I am damn sure, I will definitely help a Brahmin who is in problem.

Anonymous said...

very nice article...

Anonymous said...

அசோகன் ஒண்ணும் நல்ல எடிட்டர் இல்லை. நல்ல எடிட்டரா இருந்தா ஏன் எடிட்டரா வைச்சுருந்த ஆளை விகடன்ல பப்ளிஷர் ஆக்குறான்? நிர்வாகத்துக்கு வளைஞ்சு கொடுக்குற மாதிரி நடிச்சுக்கிட்டே தனக்கு கீழ் இருக்குற நல்ல ஆளுங்களை காலி பண்றதும் தன்க்கு விசுவாசமான முட்டாளுங்க்ளை உள்ளே கொண்டு வந்துடுறதும்தான் அசோகனோட ஒரே சாமர்த்தியம். கொள்ளையடிக்குறதை முதல்ல நிர்வாகம் ஏமாறும். பின்னால கண்டுபிடிச்சுடும். விகடன்ல அதான் நடந்துச்சு. விகேஸ், சரவணக்குமார் மாதிரி அசோகனை சீனிவாசன் அனுப்பாததுக்கு காரணம்... சீனியோட பல சீக்ரெட் மேட்டர்ஸ் அசோகனுக்கு தெரியும், அது வெளியே வந்துடுமேங்கிறதாலதான். இப்போ, அசோகனா காமதேனுவுக்கு கிளம்பினதும் ஒழிஞ்சுது சனியன்கிற நிலையிலதான் சீனி இருக்கார். சனியன் நேரா மௌண்ட் ரோடு விஷ்ணு தலையில ஏறிகிடுச்சு. இந்துவை ரொம்ப் நாள் ஏமாத்த முடியாது. அவங்க கண்டுபிடிச்சுடுவாங்க. நீ சொல்ற மாதிரி தனியார் ஏஜன்சி போட்டா அசோகன் க்தை வெளியே வர எவ்ளோ நாள் ஆகப் போவது? சீக்கிரமே கத்திரிக்காய் முத்தி ரோட்டுக்கு வந்துடும் கலகக்குரல்.

Anonymous said...

The Hindu Ram got big,big,big covers from srilankan govt? who will send him out from the hindu? who will punish him?

Anonymous said...

theni kannan oru cover vangum manithane.pathi matter poduvathillai.monthly 75,000/-cover mulam sampathibvar-cinema pro

Anonymous said...

hello sir mr.theni kannan excellent froud