Friday 30 September 2011

குமுதத்தில் இயக்குனர்கள் கூட்டம்.வெளியே தள்ளப்பட்ட இயக்குனர்








இங்கே பத்திரிக்கையை ஆக்கிரமிப்பு கும்பல் அபகரிப்பு செய்த பின்னும் எதைப் பற்றியும் கவலைப் படாமல் அமெரிக்காவில் மருத்துவமனையில் உட்கார்ந்து கல்லா கட்டிக் கொண்டிருந்த குமுதம் முதலாளி,இங்கிருந்து ஆச்சி போன் பண்ணி நறுக்குன்னு நாலு கேள்வி கேட்டவுடன் அடுத்த பிளைட் பிடித்து இந்த வார ஆரம்பத்தில் சென்னை வந்து சேர்ந்தார்.முதலில் குடும்ப உறுப்பினர்கள் கூட்டத்தைக் கூட்டிய டாக்டர்,அதன்பின் வழக்குரைஞர்களின் ஆலோசனையைப் பெற்றார்.

அதற்குப் பின் பத்திரிக்கை நிறுவனத்தின் இயக்குனர்கள் கூட்டத்தைக் கூட்டி ஆக்கிரமிப்புக் கும்பல் தலைவனை நிறுவன இயக்குனர் பதவியில் இருந்து நீக்கி விட்டார்களாம்.இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளாராம் கும்பல் தலைவன்.

 இனி அடுத்த கட்ட நடவடிக்கையை டாக்டர் எப்படி எடுக்கப் போகிறார் என்பதை வைத்துத் தான் குமுதம் என்னவாகும் என்பது தெரிய வரும்.

டாக்டருக்கு ஒரு அட்வைஸ்.நல்ல நண்பர்களை எப்பொழுதும் அருகில் வைத்துக் கொள்ளுங்கள்.அல்லது துணிந்து செயல்படும் சரியான நபர்களிடம் பொறுப்பை ஒப்படையுங்கள்.வெற்றி உங்க பக்கம் தான்.

1 comment:

Astrologer sathishkumar Erode said...

குமுதம் தமிழர்களின் அடையாளம் அது நிறுவனருடன் முடிந்துவிட்டது