Monday 28 May 2012

நக்கீரன் கோபால்,ஜுனியர் விகடன் அசோகனுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை..?

தாமரை தியாகு
                       
ஜூனியர் விகடன்,நக்கீரன் என்கின்ற இரண்டு புலனாய்வுவுவுவு,புடலங்காய்ய்வு இதழ்கள் நாட்டில் நடக்கும் தவறுகளையும் முறைகேடுகளையும் புலனாயாமல் அதனை அம்பலப்படுத்தாமல் பரபரப்பிற்காகவும் இதழ் விற்பனைக்காகவும் அப்பொழுதைக்கு அப்பொழுது தனி நபர்கள் குறித்துச் செய்தி வெளியிடுவது வழக்கம்.ஆட்களின் தன்மையைப் பொறுத்து இந்தச் செய்தியின் காரமும் தரமும் தராதரமும் இருக்கும்.

செய்திக்கோ அல்லது தவறான செய்திக்கோ பதிலுக்கு வழக்குரைஞர் நோட்டீசோ,அல்லது ஆட்டோவோ வரும் என்று தெரிந்தால் அதற்குத் தகுந்த மாதிரி செய்தி அடக்கி வாசிக்கப்படும்.சில நேரங்களில் கிசுகிசுவாகவே செய்தி கடந்து விடும்.உண்மைச் செய்தி என்றாலும் சில நேரங்களில் பயந்து கொண்டு குப்பைத் தொட்டியில் போய் விடும்.

அதே நேரம் செய்தி வெளியிடப்படும் நபர் எதையும்கேட்க மாட்டார் என்றால் வரிந்து கட்டி வெளியிடுவார்கள்.இதுதான் இவர்களின் வீரம். இதற்கு தற்பொழுது பலியாகியிருப்பவர் தமிழ்த் தேசப் பொதுவுடைமை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தியாகு மற்றும் விஜயலட்சுமி என்னும் ஒரு பெண்மணி.

தியாகுவின் கொள்கைகள் மீதும் அவரது அரசியல் பாதைகள் மீதும் உங்களுக்கும் எங்களுக்கும் விமர்சனங்கள் இருக்கலாம்,முரண்பாடுகள் இருக்கலாம்.அது வேறு.

ஆனால் தியாகு என்ற தனிமனிதரின் மீது எந்தவித ஆதாரமும் இல்லாமல் தங்களிடம் ஊடகம் இருக்கிறது.அதனைக் காசு கொடுத்து வாங்கிப் படிப்பதற்கு இளிச்சவாய வாசகன் இருக்கிறான் என்பதற்காக ஆதாரமற்ற அவதூறுகளை அள்ளித் தெளிப்பது பத்திரிகை அறம் அல்ல.நடப்பதும் கற்காலம் அல்ல.பதில் சொல்லியாக வேண்டிய கடப்பாடு அனைவருக்கும் இருக்கிறது.

னி நடந்தவற்றைப் பார்ப்போம்.

முதலில் ஜூனியர் விகடன் புலனாய்வு..





இந்தக் கட்டுரையில் உள்ள தகவல் பிழைகளைப் பற்றி பிறகு பார்ப்போம்.முதலில் இந்தக் கட்டுரை இப்பொழுது வெளியிடப்பட்டதற்கு என்ன தேவை இருக்கிறது..?

1)தியாகு தன்னைத் துன்புறுத்தினார் என்று திரைப்பட பாடல் ஆசிரியர் தாமரை காவல்துறையில் புகார் செய்துள்ளாரா…?

2)அல்லது பெண் விடுதலைக்காய் போராடும் அமைப்புகளிலோ,மனித உரிமை அமைப்புகளிலோ எழுத்துப் பூர்வமாக தாமரை புகார் செய்துள்ளாரா?

3)அல்லது குறைந்த பட்சம் தான் உறுப்பினராக இருக்கும் திரைப்பட பாடலாசிரியர்கள் சங்கத்திலாவது புகார் செய்துள்ளாரா?

4)தியாகு ஒரு வாரமாகக் காணவில்லை என்று சொல்லி முதல் பக்கத்தில் செய்தி வெளியிடுகின்றீர்களே..? இந்தச் செய்திக்கு என்ன தேவை..?

தியாகு இந்த நாட்டின் முதல்வரா..?அல்லது மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அரசுப் பொறுப்புக்கள் எதிலும் பதவி வகிக்கிறாரா..?தியாகு காணவில்லை என்று முதல் பக்கத்தில் செய்தி வெளியிடுவதற்கு..

5)தியாகு ஒரு கட்சியின் தலைவர் என்ற அர்த்தத்தில் செய்தி வெளியியிட்டிருக்கின்றோம் என்று ஈனஸ்வரத்தில் ஜால்ஜாப்பு சொன்னீர்கள் என்றால்,இது வரை தியாகுவின் கட்சிக் கூட்டம் எத்தனையை உங்கள் இதழில் பதிவு செய்துள்ளீர்கள்..?

6)தியாகு காணாமல் போனது தொடர்பாகவோ அல்லது தியாகு ஏதாவது பெண்ணைக் கடத்தி விட்டார் என்றோ ஏதாவது காவல் நிலையத்தில் வேறு ஏதாவது புகார் பதிவாகியிருக்கிறதா..?

7)இது எதுவும் கூட வேண்டாம்.ஜுவி நிருபரிடமாவது திரைப்பட பாடலாசிரியர் தாமரை,தியாகு என்னை அடிக்கிறார்,மிதிக்கிறார் என்னை அவரிடமிருந்து மீட்டுச் செல்லுங்கள் என்று தகவல் அனுப்பினாரா…?

எதும் புகார் பட்டியல் வாசித்தாரா..?அதுவும் இல்லை.நான் எதுவும் உங்களிடம் சொல்லும் நிலையில் இல்லை என்று தான் செய்தியில் சொல்கிறார்.

இல்லை.இல்லை.எதுவும் இல்லை.அப்புறம் எதற்கு இந்தச் செய்தி வெளியிடப் பட வேண்டும்.என்ன தேவை இருக்கிறது..?ஒரு தேவையும் இல்லை.ஊடகம் நடத்துபவர்கள் செய்தி அரிப்புக்காகவும் விற்பனைக்காகவும்,தங்கள் நட்பு வட்டாரத்தில் இருப்பவர்களின் விருப்பத்திற்காகவும் தாங்கள் நினைத்தால் பக்கங்களை மையில் நிரப்பி யாரையும் செய்தியாக்கலாம், இழிவு படுத்தலாம்.அப்படித்தானே..?


  • இனி இந்தச் செய்தியில் உள்ள பிழைகளையும் தவறுகளையும் பார்ப்போம்.


ஒரு நாடறிந்த பிரபல்யம்,எழுத்தாளர் பற்றி எழுதும் பொழுது குறைந்தபட்சம் அடிப்படைத் தகவல்களையாவது பிழையில்லாமல் எழுதுவது தான் அறிவார்ந்த பத்திரிகையாளர் குணம். இங்கு எல்லாம் தலைகீழ்.

1)முதலில் தியாகு ஏதோ நாகப்பட்டிணம் கிராமத்தில் இருந்தே வர்க்கப் போராளியாகவே பிறந்து வளர்ந்தவர் என்பது போல செய்தி எழுதப்பட்டுள்ளது.




தியாகு காங்கிரஸ் கட்சியில் இருந்து தான் தனது அரசியல் பாலபாடத்தைத் தொடங்கியவர்.ஜெயகாந்தன்,கண்ணதாசன்,கருப்பையா மூப்பனார்,காமராஜருடன் கூட நிறையக் கூட்டங்களில் பங்கேற்றுள்ளார். இந்த அடிப்படைச் செய்தி கூடத் தெரியாமல் ஒருவரைப் பற்றி எழுதுவதை எந்த லட்சணத்தில் சேர்ப்பது?





2)தியாகு திருமணம் செய்தது லெனின் அவர்களின் சகோதரியை என்று எழுதியுள்ளார்கள்.//

தியாகு திருமணம் செய்தது லெனின் அவர்களின் மகளை,சகோதரியை அல்ல.மகளுக்கும் சகோதரிக்கும் வித்தியாசம் தெரியாமல் என்னய்யா ஜர்னலிசம்?.

ஜூனியர் விகடனில் தியாகு எழுதிய சிறைக்குள் சித்திரங்கள் தொடரிலேயே மேற்கண்ட விபரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இன்வஸ்டிகேஷன் ஜர்னலிசம் நமக்குரொம்பத் தூரம்.டெஸ்க் ஜர்னலிசத்தையாவது உருப்படியாப் பண்ணுங்க..

3) முதல் மனைவியிடமிருந்து அவர்களுக்கு இடையிலான மனக் கசப்பால் பிரிந்தனர். //

சட்டபூர்வமாகப் பிரிந்து விட்டனர் என்பது ஜூவி துப்பறியும் படைக்குத் தெரியுமா..?விவாகரத்து ஆணையின் நகல் கைவசம் இருக்கிறதா..?

4)தாமரைக்கும் இது இரண்டாவது திருமணம்././

தாமரையும் தியாகுவும் திருமணம் செய்து கொண்டார்கள் என்று ஜூவிக்குத் தெரியுமா..?ஆதாரம் வெளியிடுமா..? தாமரையிடம் கேட்டால் கூடக் கிடைக்காது..ஏனென்றால் சட்டப்படி திருமணம் நடக்கவில்லை.இருவரும் ஒரு கூரையின் கீழ் இணைந்து வாழ்கிறார்கள்.அவ்வளவு தான்.


5)தியாகுவிற்கு போன் செய்தோம்.அதனையும் தாமரை தான் எடுக்கிறார்.//இதற்கு மேல் என்ன வேண்டும்?ஒருவரின் தொலைபேசியை இன்னொருவரிடம் விட்டு விட்டா ஒடிப்போவார்.?இங்கு தான் பூனைக்குட்டி ஒளிந்துள்ளது என்பது அறிவுள்ளவர்களுக்குப் புரியும்.

நாட்டில் உள்ள எழுத்தாளர்களையும் திரைப்படக்காரர்களையும் கேட்டுப் பாருங்கள்,ஏன் திரைப்படத்திற்குப் பாடல் எழுதும் தாமரையைக் கூடக் கேட்டுப்பாருங்கள்.எழுத்துப் பணிக்காக ஒரு வாரம் என்ன மாதக்கணக்கில் கூட யாரிடமும் சொல்லாமல் தனிமையில் இருப்பவர்கள் அநேகம்.
ஆனால் கற்பனைக் குதிரைகளைத் தட்டி விட்டு அலுவலகத்தில் இருந்து முரண்பாடுகளை மூட்டையாக்கி செய்தி வெளியிட்டது ஜுவி.

மேற்கண்ட செய்தி 23-05-2012 தேதியிட்ட இதழில் வெளிவந்தது. இதழ் வெளியானது 19-05-2012 சனிக்கிழமை.

தியாகு வந்து சொன்னால்தான் உண்மை தெரியும்!//இது ஜூவியின் செய்தி இறுதி வார்த்தைகள்.




இந்த இதழ் கடைக்கு வந்த அன்றே காலையில் 10 மணி அளவில் சென்னையில் தமிழ்நாடு மக்கள் பேராயம் என்னும் ஒரு அமைப்பு ஸ்டெர்லிங் சாலையில் நடத்திய இலங்கை தூதரகத்தை இழுத்துப் பூட்டும் போராட்டத்தில் தியாகு கலந்து கொண்டார்.அதன் பின் காவல்துறையால் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப் பட்டார்.





அது தொடர்பான செய்தி மக்கள் தொலைக்காட்சியிலும்,மாலை தமிழ் முரசு செய்தித்தாளிலும் மறுநாளைய தினமணி நாளிதழிலும் வெளியாகி உள்ளது.இணையத்தில் நிறையப்பேர் இது குறித்து செய்தி எழுதி உள்ளனர்.எந்த வழியிலாவது ஜூவி புடலங்காய்களுக்கு செய்தி தெரியாமல் இருக்காது.
*

ஜுனியர் விகடன் அடுத்த இதழ் முடிக்கப்பட்டது 21-05-2012 திங்கள் கிழமை மாலை 7 மணி.இடையில் சனி,ஞாயிறு,திங்கள் என முழுதாக 3 நாட்கள் இருக்கின்றன.

துளியளவாவது நேர்மை இருந்தால் நாணயம் இருந்தால்,அறம் இருந்தால் மனச்சாட்சி இருந்தால் ஜூனியர் விகடன் என்ன செய்திருக்க வேண்டும்?ஒரு வரியிலாவது மறுப்புச் செய்தி வெளியிட்டிருக்க வேண்டும்.அல்லது பாலோ அப் வெளியிட்டிருக்க வேண்டும்.போகிற போக்கில் சமாளிப்பாக மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கதையாக எதையாவது 4 வார்த்தையாவது எழுதியிருக்கலாம்.

(போட்டி இதழான குமுதம் ரிப்போர்ட்டர் தியாகுவின் பேட்டியை வெளியிட்டது.)





நேர்மையான பத்திரிகையாளன் என்றால் வெளியிட்ட தவருக்கு வருத்தம் தெரிவிப்பான்,அல்லது விளக்கம் தெரிவிப்பான்,அல்லது குறைந்தபட்சம் சமாளிப்பான்.வெறும் பத்திரிகையாளன் என்றால் செய்த தவறை மூடி மறைத்து எதிராளி மீது அடுத்த சேற்றை வாரி இறைப்பான்.

ஜூவியில் நேர்மையான பத்திரிகையாளர்கள் இருக்கிறார்கள் என்று வாசகர்கள் நம்புகிறார்கள்.அது தவறு என்பது இதழைப் பார்த்தவுடன் தெரிந்து விட்டது.

தியாகு சென்னையில் தான் இருக்கிறார் என்ற செய்தியோ மறுப்போ,விளக்கமோ அப்படி எதுவும் வெளியாகவில்லை.இத்தனைக்கும் தியாகு மக்கள் தொலைக்காட்சி அலுவலகத்தில் இருந்ததாக ஊடக நண்பர்கள் சொல்கிறார்கள்.

தியாகுவைத் தொடர்பு கொள்ள முயற்சித்தோம்.அவர் போன் எடுக்கவில்லை,பதில் தந்தால் பிரசுரிக்கத் தயாராய் இருக்கிறோம் என்ற அளவில் கூட செய்தி இல்லை.

நாட்டில் காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதைக்கு எல்லாம் தன்னால் தான் நடந்தது என்று கூச்சநாச்சமில்லாமல் உரிமை கொண்டாடும் ஜூனியர் விகடன் போன்ற பத்திரிகைகள் இதற்கு ஒரு வரி விளக்கம் கூட வெளியிடவில்லை.
-------

ஆனால் ”அர்த்தமுள்ள”அமைதி கடைபிடிக்கப்பட்ட அந்த இதழுக்கு அடுத்த இதழ் அதாவது தியாகு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட 7 நாட்கள் கழித்து 26-05-2012 சனிக்கிழமை கடைக்கு வந்தது.இதில் தான்.அதிக முக்கியத்துவம் அளித்து 3 ½ பக்கங்களில் வண்ணத்தில் தியாகு குறித்த செய்தியை வெளியிட்டுள்ளது.செய்தியை நன்கு கவனித்தால் அதிக இடப்பரப்பில் சிரத்தையுடன் கூடிய வடிவமைப்பு,விசாலமான லே அவுட்டில் செய்தி வண்ணத்தில் வெளிவந்துள்ளது தெரியும்.(இதே அளவு வார்த்தைகள் கொண்ட கட்டுரை வழக்கமாக 2 பக்கங்களில் முடிக்கப்படும்.)








இதில் உள்ள கிரிமினல் தவறுகளைப் பார்ப்போம்.


  • செய்தி தொடக்கப் பத்தியைக் கவனியுங்கள்.தாமரையின் பக்கம் நின்று எழுதப்பட்டது என்பது விளங்கும்.முதல் பத்தி மட்டுமல்ல.முழுப் பதிவும் அப்படித்தான்.இடையில் ஒரு பத்தி மட்டும் தியாகுவிற்கு ஆதரவாய் இருக்கிறது.நடுநிலை மருந்துக்கும் காணோம்.


மொத்த வார்த்தைகள் 740.இதில் தியாகுவுக்கு எதிர்ப்பான கருத்துக்கள் 500 வார்த்தைகள்.

இதில் குறித்த இந்தப் பகுதியை மட்டும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளுங்கள்.

இதில் விஜயலட்சுமி என்னும் பெண்மணியின் மீது அவரது கணவர் நிறைய குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார்.அதை தள்ளி வைத்து விட்டு படியுங்கள்.



தியாகு மீது விஜயலட்சுமியின் கணவர் சொன்ன குற்றச்சாட்டு இதுதான்.இதற்கு எதும் ஆதாரம் இருக்கிறதா..?நாடறிந்த ஒருவரைப் பற்றிச் சொல்லும் பொழுது இப்படித்தான் யார் என்ன சொன்னாலும் அதனை வெளியிடுமா ஜூவி..?

நாளையே நம்ம சீனி (அதாங்க சன் ஆப் பாலு)குறித்து யார் ஒரு புகார் சொன்னாலும் விபரம் கேட்காமல் துளி ஆதாரம் இல்லாமல் செய்தி வெளியிடுமா ஜூவி..?


  • தனக்கு தியாகு தூண்டுதலின் பேரில் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக முன்னாள் கணவர் சண்முகசுந்தரம் கூறியுள்ளார்.இது பொய் என்பது அடுத்த பத்தியில் புரியும்.தியாகுவின் வீட்டில் இது குறித்து 3 மாதங்களாக பிரச்சனை இருக்கிறது என்று எழுதி விட்டு ஆனால் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி 8 மாதங்கள் ஆகிறது என்கிறார்கள்.இதில் முரண்பாடு இருக்கிறதா இல்லையா..?
  • அடுத்த பத்தியைக் கவனியுங்கள்.ஏறத்தாழ எட்டு மாதங்களுக்கு முன்பே விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி இப்பொழுது அது விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது.அதற்குத்தான் விஜயலட்சுமியும் தியாகுவின் மகளான வழக்குரைஞர் சுதாகாந்தியும் வந்துள்ளனர்.புகைப்படத்தைப் பார்த்தால் அங்கு எடுக்கப் பட்டுள்ளது தெரிகிறது.


நம் கேள்வி இது தான்.
  • கணவன் மனைவி இருவரும் உறவில் இருக்கும் பொழுது ஒருவர் இன்னொருவரைப் பற்றி குற்றம் சொல்லலாம்.அதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கிறது.தார்மீக ரீதியில் மட்டுமல்ல,சட்டப்படியும்.

இதில் பாதிக்கப்பட்ட பெண்மணியான விஜயலட்சுமி ஜூவியிடம் கருத்துச் சொல்ல விரும்பவில்லை என்று சொல்லியுள்ளார்.ஆனால் கொடுமைக்கார கணவனான சண்முகசுந்தரத்திடம் இருந்து விஜயலட்சுமி விவாகரத்து கோரியுள்ள சண்முகசுந்தரம் தியாகு மற்றும் விஜயலட்சுமி மீது குற்றச்சாட்டுகள் என்ற பெயரில் அவதூறுகளை சொல்லியுள்ளார்.
  • விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் இருக்கும் பொழுது ஒருவர் இன்னொருவரைப் பற்றி ஊடகத்தில் தரக்குறைவாய்க் குற்றம் சொல்ல தார்மீக அடிப்படையில் மட்டுமல்ல,சட்டப்படியும் உரிமை இல்லை. இது ஜுவி ஆசிரியர் குழுவுக்குத் தெரியுமா..?

அதுவும் தியாகு மீது அவர் தெரிவித்துள்ள ஆதாரமற்ற குற்றச்சாட்டிற்கு ஜூவி மீது மட்டுமல்ல சண்முகசுந்தரத்தின் மீதும் தனி வழக்கே தாக்கல் செய்ய முடியும் என்பது ஜூவிக்குத் தெரியுமா..?



100 கோடி கொள்ளை அடிக்கப்பட்டாலும் சரி.பல பெண்களைக் கற்பழித்த குற்றச்சாட்டு உள்ளவரானாலும் சரி,நாட்டை அடகு வைத்த குற்றம் என்றாலும் சரி குற்றம் சாட்டப் பட்டவரின் கருத்தை வாங்கிப் பதிவு செய்வது தான் ஜூவியின் வழமை.அல்லது வழக்குரைஞரைத் தொடர்பு கொண்டு கருத்து வாங்கி வெளியிடுவார்கள்.

அல்லது

குறிப்பிட்ட நபரைத் தொடர்பு கொள்ள முடியவில்லையென்றால் தொடர்பில் வரவில்லை.அவர் கருத்துச் சொன்னால் பிரசுரிக்கத் தயாராய் இருக்கிறோம் என்ற குறிப்புடன் செய்தி வெளியிடப்படும்.

இங்கோ தியாகுவின் மகள் எங்கள் தந்தை தலைமறைவாக வில்லை.நீங்கள் தொடர்பு கொண்டால் கிடைப்பார் என்று சொல்லியும் ஜூவி நிருபர் படைகள் தியாகுவைத் தொடர்பு கொள்ள துளியும் அக்கறை காட்டவில்லையே…ஏன்..?

ஜூவிக்கு என்ன உள் நோக்கம்..? அல்லது முதல் பதிவில் செய்த தவறை நியாயப்படுத்த அடுத்தடுத்து தவறு செய்கிறதா..?

  • சுருக்கமாகச் சொன்னால் நடந்தது இதுதான்.

முதல் இதழில் தியாகு காணவில்லை என்று அவதூறுச் செய்தி.செய்தி வெளியான அன்று பொது நிகழ்ச்சியில் தியாகு கலந்து கொண்ட பின்னும் அடுத்த இதழில் மறுப்போ விளக்கமோ இல்லை.

அதற்கடுத்த இதழிலோ அதி முக்கியத்துவத்துடன் முந்தைய செய்தியை மேலும் மிகைப்படுத்தும் வண்ணம்ஆதாரமற்ற ஒரு செய்திப்பதிவு.அதிலும் தியாகுவின் தரப்புக் கருத்து வெளியிடப்படாமல்.

  • இது தானா தமிழர்களின் நாடித்துடிப்பான ஜூவியின் யோக்கியதை?

அனைத்து ஊடகங்களுடனும் இணக்கமாக நடந்து கொள்பவர் தான் தியாகு.குமுதம் ரிப்போர்ட்டரில் தனது கருத்தினையும் விளக்கத்தினையும் தியாகு பதிவு செய்துள்ளார்.அவர்களால் அணுக முடிந்த பொழுது ஜுவியினால் ஏன் முடியவில்லை..?(தியாகுவைக் காலி செய்ய வேண்டும் என்று எதும் தனி அசைன்மெண்ட்டா..)

ஜு.வி. க்கும் தியாகு எதிரானவர் அல்ல.நிறுவனர் பாலசுப்ரமணியன் காலத்தில் இருந்தே நெருக்கமானவர்.ஜூவியில் சுவருக்குள் சித்திரங்கள்,கம்பிக்குள் வெளிச்சங்கள் என இரண்டு தொடர்கள் எழுதியுள்ளார்.அதனை ஜூவி விற்று நன்கு காசு சம்பாதித்தது.சில வாரங்களுக்கு முன்பு கூட நானும் விகடனும் என்ற கட்டுரையில் நிறுவனர் பாலசுப்ரமணியன்,பதிப்பாளர் அசோகன் உட்பட பலரையும் அதிக அளவு பாராட்டித் தள்ளினார்.

  • அந்தப் பாராட்டின் இறுதிப்பகுதி இதுதான்.

தமிழீழம் என்றாலும், தாய்த் தமிழ் என்றாலும் விகடன் ஆற்றி வருவது ஒரு வகைச் சிறை மீட்புப் பணியே. அந்தப் பணியில் என் போன்ற எளியவனுக்கும் ஒரு பங்கு தந்துள்ள விகடனுக்கு நன்றி சொல்லி முடித்துக்கொள்ள முடியாது. வேலை இன்னும் மிச்சம் உள்ளதே!''

தியாகு உச்சி முகர்ந்து பாராட்டிய விகடன் தான் இப்பொழுது தியாகு நன்றி சொல்ல புதிய செய்தியை உலகுக்குத் தெரிவித்துள்ளது.

இனி நக்கீரன் யோக்கியதைக்கு வருவோம்.






சொன்னா நம்ப மாட்டீங்க என்னும் கிசுகிசு பகுதியில் முதலில் ஒரு கிசுகிசுவை வெளியிட்டது நக்கீரன்.இதைப் பார்த்து விட்டுத்தான் ஜூவி விரிவாக ஒரு அவதுறை வெளியிட்டது.

அதற்கடுத்த இதழில் நக்கீரன் தனது ஈரோடு நிருபர் ஜீவா தங்கவேல் முலம் ஒரு செய்திப் பதிவை வெளியிட்டுள்ளது.முழுக்க முழுக்க விஜயலட்சுமியின் கணவர் சண்முகசுந்தரம் தரப்புக் கருத்தினைப் பதிவு செய்து விட்டு தியாகு கருத்து அளித்தால் வெளியிடத் தயாராய் இருக்கிறோம் என்று இரண்டு பக்கச் செய்தியை வெளியிட்டுள்ளனர்.தாமரை காத்திருக்கிறார் என்ற வார்த்தைகளின் படி செய்தியின் மூலத்தை நாம் அறிய முடிகிறது.

ஏறத்தாழ ஜூனியர் விகடனுக்கு கேட்கப்பட்ட கேள்விகள் நக்கீரனுக்கும் நாம் எழுப்பிய கேள்விகள் தான்.எத்தனை கேள்வி கேட்டால் என்ன ?செவிடன் காதில் ஊதிய சங்கு தான்.

  • ஆனால் நக்கீரனுக்கு கூடுதல் கேள்வி ஒன்று இருக்கிறது.

இந்தச் செய்தியை எழுதியுள்ள ஈரோடு நிருபர் ஜீவா தங்கவேல் தன்னைப் போல பிறரையும் நேசித்து விட்டார் என்று நினைக்கிறோம்.

ஜீவா தங்கவேல் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்கனவே திருமணமாய்க் குழந்தையும் உள்ள ஒரு பெண்ணைக் காதலித்தார்.அதற்குப் பிறகு தான் அந்தப் பெண்மணி அவரது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றார்.அதே போல இப்பொழுது தியாகுவையும் நினைத்து இந்தச் செய்தியைப் பதிவு செய்திருக்கலாம்.மேலும் தியாகுவுக்கு எதிராய் இப்பொழுது கட்சியில் போர்க்கொடி தூக்கியுள்ள மோகன்ராஜ் ஜீவா தங்கவேலின் அறைத் தோழர்.வாரம் இருமுறை மது விருந்தில் பங்கேற்பவர் என்றும் ஈரோட்டில் இருந்து வரும் தகவல்கள் சொல்கின்றன..எல்லாம் சேர்ந்து இந்தச் செய்தி வெளிவந்திருக்கும் என நம்ப இடமிருக்கிறது.




  • இனி இறுதிப் பகுதி.....


நக்கீரன்,ஜூனியர் விகடன் பத்திரிகை அன்பர்களே
பத்திரிகை அறம்,இதழியல் தர்மம் எல்லாம் விட்டு விடுங்கள்.அதைப் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்காது.மீறி நாம் கேட்டால் கிலோ என்ன விலை..?அது எந்தக் கடையில் கிடைக்கும் என்று நீங்கள் வினவக் கூடும்..!

8 மாதங்களுக்கு முன்பு விவாகரத்து கோரி வழக்குத் தாக்கல் செய்துள்ள ஒரு பெண்மணியை பொது வெளியில் நடமாடும் நபருடன் எவ்வித ஆதாரமும் இல்லாமல் தொடர்புபடுத்தி எழுதுவது தான் இதழியல் ஜனநாயகமா..?அறமா..?

செய்தி வெளியாக உண்மைத்தன்மை வேண்டாம்.நிருபரையோ அல்லது ஆசிரியர் குழுவில் உயர் பொறுப்பில் யாரையும் தெரிந்திருந்தால் போதுமானது,நாம் நினைத்த செய்தி நினைத்தபடி வந்துவிடும் என்பது மீண்டும் உறுதியாகி உள்ளது.


தியாகு கருத்து எதுவும் இல்லை.தாமரை கருத்து எதுவும் இல்லை.குறிப்பிட்ட பெண்மணி விஜயலட்சுமி கருத்து எதும் இல்லை.ஆனால் சண்முகசுந்தரத்தின் ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்ற ஒன்றை மட்டும் வைத்துக் கொண்டு தொடர்ச்சியான பதிவுகள் இரண்டு இதழ்களிலும்.

தியாகுவின் முதல் மனைவி தாமரையின் நட்பு வட்டாரத்தைத் தொடர்பு கொண்டு,” என்ன உதவி வேண்டுமானாலும் செய்யத் தயார்” என்று சொல்கிறார் என்று எழுதும் ஜுவி..?ஏன் தாமரையின் முதல் கணவர் தியாகுவின் நட்பு வட்டாரத்தில் தொடர்பு கொண்டு உங்களுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் செய்யத் தயார் என்று சொல்கிறார் என்று எழுதவில்லை.?


  • ஒரு நாள் பரபரப்பிற்காக எழுதி விற்று விட்ட நக்கீரனும் ஜுவியும் அடுத்த வேலையைப் பார்க்கப் போய் விடுவார்கள்..?ஏற்கனவே கணவரால் பாதிக்கப்பட்ட விஜயலட்சுமி தனது எதிர்காலத்தை இனி எப்படி முடிவு செய்ய முடியும்>?

அவரது எதிர்காலம் இனி என்ன ஆகும்//?இந்த இட்டுக்கட்டிய செய்தியைப் பார்த்த பின்பும் அவருக்கு இனி ஒரு மகிழ்வான திருமண வாழ்வு அமையுமா..?


நாம் உண்மையை எழுதச் சொல்கிறோம்.தியாகுவிற்கும் அந்தப் பெண்மணிக்கும் இருப்பதாகச் சொல்லப்படும் தொடர்பிற்கு இரு இதழ்களும் எதும் ஆதாரம் காட்ட வில்லை.இவர்கள் மேற்கோள் காட்டுவது என் கணவர் கொடுமைக்காரர்,காமுகர்,அவரிடமிருந்து விவாகரத்து தாருங்கள் என்று யாரை நீதிமன்றத்தில் விஜயலட்சுமி குற்றம் சாட்டினாரோ அந்த சண்முகசுந்தரத்தின் வார்த்தைகள் தான்.

எழுதியவற்றில் ஆதாரம் இல்லாத பட்சத்தில் எதை எழுதினாலும் அது தவறு தான். ஜூவி,நக்கீரன் ஆசிரியர்கள் தங்களுக்குத் தெரிந்த பெண்கள் என்றாலும் இப்படித்தான் ஆராயாமல் செய்தி வெளியிடுவார்களா..?
  • சீனி சன் ஆப் பாலு மீதோ அல்லது கோபால் மீதோ யாரும் குற்றம் சாட்டினால் இப்படித்தான் செய்தி வெளியிடுவார்களா..?

  • இதற்கு என்ன தான் தீர்வு..?எதும் கிடையாதா..?


தியாகு தரப்பில் விசாரித்தோம்.

தியாகு சாதாரணமானவர் அல்ல.உச்சநீதிமன்றத்தின் கற்றறிந்த வழக்குரைஞரை விட அதிக அளவில் சட்ட நுணுக்கங்கள் தெரிந்தவர்.அவர் இரண்டு பத்திரிகைகளின் அவதூறுகளைச் சட்டப் படி விரைவில் எதிர்கொள்வார் என்று அவர் தரப்பில் நமக்குச் சொல்லப் பட்டது.செய்தி குறித்து அவர் தரப்பில் விளக்கத்தையோ,பதிலையோ கேட்டு அணுகாவிட்டால் நீதிமன்றத்திற்கு பதிப்பாளர்,ஆசிரியர் குழுவையே வர வைப்பார் என்றும் சொல்லப்பட்டது.
  • சரி சட்டம் என்ன சொல்கிறது..?
சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்குரைஞர் ஒருவரிடம் வினவியபொழுது அவர் சொன்ன கருத்து இது.

இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவு பிரிவு 502 என்ன சொல்கிறது என்றால்...

Sale of printed or engraved substance containing defamatory matter
Whoever. sells or offers for sale any printed or engraved substance containing defamatory matter, knowing that it contains such matter, shall be punished with simple imprisonment for a term which may extend to two years, or with fine, or with both/


இதன்படி அவதூறுச் செய்தி வெளியிட்ட ஜூனியர் விகடன்,நக்கீரன் இதழ்களின் மீது தியாகு அல்லது விஜயலட்சுமி ஆகியோர் தனித்தனியாக நோட்டீஸ் அனுப்பலாம்.அதன் பின்பும் மேற்கண்ட இதழ்கள் மன்னிப்போ,வருத்தமோ தெரிவிக்க வில்லை என்றால் நக்கீரன் பதிப்பாளர்,ஜூனியர் விகடன் பதிப்பாளர் ஆகியோர் தொடங்கி செய்தி எழுதிய நிருபர் வரை அனைவர் மீதும் வழக்குத் தொடுத்து மான நஷ்ட ஈடு கோரலாம்.

       கோபால்-நக்கீரன் பதிப்பாளர்.

   அசோகன்-ஜுனியர் விகடன் பதிப்பாளர்.


தொடரப்படும் வழக்கில் இவர்கள் வெளியிட்ட செய்தி அவதூறு என்று உறுதிப்படுத்தப்பட்டால் பதிப்பாளர் தொடங்கி,அச்சிட்டவர்,செய்தி எழுதிய நிருபர் வரை அதிகபட்சமாய் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட வாய்ப்பு உண்டு.

இவர்கள் எழுதிய செய்திக்கு வருத்தம் தெரிவிப்பார்களா..? இல்லை.....

13 comments:

Anand said...

சிறப்பான கட்டுரை.

வி.திருஞானம் said...

தியாகு தாமரை பிரிவை பற்றி இரண்டு இதழ்களாக எழுதும் தம்பி ராஜாதிரு(ட்டு)வேங்கடத்தின் லீலைகள் தெரியுமோ? அவர் குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகளை பற்றி எழுதினால் அவரால் தாங்க முடியுமா? பிறரை பற்றி எழுதுவதற்கு முன் தன் முகத்தை கண்ணாடியில் பார்ப்பது நல்லது. தோழர்களை அசிங்கப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்தால், (அனுபவி)ராஜாவின் அந்தரங்கமும் தோண்டப்படும். தியாகுவை பேட்டி எடுக்க துப்பில்லாத இவனெல்லாம் துணை பொறுப்பாசிரியர்...

Anonymous said...

சார்,மேட்டர் ரொம்ப சிம்பிள்.தாமரை தியாகு பஞ்சாயத்துல ஈடுபட்டிருக்கிறது 2 தலைவருங்க.
தியாகு தரப்பில் மணியான அரசர்.தாமரை தரப்புல கருப்புத்துண்டை தோளில் ஆள் உயரத்துக்கு தொங்க விட்டுள்ள எழும்பூர் கட்சித் தலைவர்.
இவங்க பேசிக் கிட்டிருக்குறதுல தீர்வு கிடைக்கல.இத நேரத்துல அவங்கவுங்க அவுங்க செல்வாக்குல பிரச்சனையை வீதிக்கு கொண்டு வந்துட்டாங்க.கடைசியில பாவம் விஜயலட்சுமி....

Anonymous said...

அசோகன் சாரை நீங்க இப்படிச் செய்திருக்க வேண்டாம்.ஆபிசுல அவரை யார் நம்புனாலும் அவங்களுக்கு நல்லா உதவி செய்வார்.அவர் போட்டோ எடுத்துடுங்க சார்.பிளீஸ்.கஷ்டமா இருக்கு.

Anonymous said...

ஜீவா தங்கவேல் பின்னாடி இப்படி ஒரு கதையா தோழர்.ஆள் எப்படிப் பேசுவாரு தெரியுமா சிரிச்சுக்கிட்டே.ம்ம்.நடத்துங்க நடத்துங்க....

Anonymous said...

மறைந்த சின்னக் குத்தூசியின் வாசகம் ஒன்றை இணையத்தில் படித்தேன்.நடுநிலை என்று ஒன்று கிடையாது.ஏதாவது ஒரு சார்பில் தான் பத்திரிககள் எழுத முடியும் என்று.இங்கு ஜூவி.நக்கீரன் தாமரை பக்கம் நின்று கொண்டு செய்தி எழுதியுள்ளார்கள்.இது தப்புங்களான்னா....

நர்மதன் said...

இன்றைக்கு வெளியாகியிருக்கும் தியாகு பேட்டி வரை மொத்தமாக 7 பக்கங்களை தாமரை - தியாகு மேட்டருக்காக வெளியிட்டிருக்கிறது ஜூ.வி. தாமரை, தியாகுவின் போராட்டங்கள் குறித்து எழுதுவதற்கு இத்தனை பக்கங்களை ஜூ,வி. செலவிடுமா? ஈழப் போராட்டம் என்றால் வைகோ ஒருவர் தான் என்பதை சித்தரிக்க ஜூ.வி. எந்தளவுக்கு கீழிறங்கி போராடுகிறது என்பதற்கு இதைவிட சாட்சி வேறில்லை. மதிமுக சார்பில் வாரம் இருமுறை வெளியாகும் சங்கொலியாகிவிட்டது ஜூ.வி. வாழ்க வை.கோ!

thambi said...

இந்த ஜீ.வி. பொது வாழ்க்கையில ஈடுப்பட்டுள்ளவங்கள டேமேஜ் செய்வதை தனது பிழைப்பாக வைத்துள்ளது. ஏற்கெனவே தோழர் .சி.மகேந்திரனை ஒரு பெண்ணுடன் தொடர்புப்படுத்தி செய்தி வெளியிட்டது. இப்போ தியாகு..நக்கீரனை பத்தி சொல்லவே வேண்டாம்.

Anonymous said...

”அவரை வழிக்குக் கொண்டு வர வேண்டியது என் பொறுப்பு.நான் எல்லாவற்றையும் பார்த்துக்கறேன்”இது கறுப்புத் துண்டு தலைவர் கவிஞரிடம் சொன்னது.வீதி சிரிக்கும் வரை கொண்டு சென்றது இந்த வார்த்தைகள் தான்.தலைவரின் வார்த்தையைக் காப்பாற்ற அனைவரும் பாடுபடுகிறார்கள்...

Anonymous said...

கம்பிக்குள் வெளிச்சம் எழுதிய தியாகு பற்றி ராஜா திருவேங்கடம் எழுதுகிறார்... காலம் எவ்வளவு கேவலமாகி விட்டது பார்த்தீர்களா? கூலைக் கும்பிடு போட்டும் ஜால்ரா அடித்துமே காலத்தை ஓட்டும் ராஜா திருவேங்கடத்தின் கேவல நிலை எல்லோருக்குமே தெரியும். சேலம் ராமசாமி, ராசிபுரம் செந்தில், திலீபன், பரஞ்சோதி என யாரிடம் கேட்டாலும் இவனை பற்றி கதை கதையாகச் சொல்வார்கள். வடக்கே இருக்கும் ஷஃபி முன்னா இவனை கழுவிக் கழுவி ஊத்துகிறார். மாவோயிஸ்ட் கடத்தல் மேட்டரில் பிட்டளவு செய்தி எழுதி முழு மேட்டரையும் அவனே எழுதியா மாதிரி காட்டி விட்டானாம். இப்படி அடுத்தவர்கள் உழைப்பில் அட்டைப் பூச்சி மாதிரி வாழும் ராஜா திருவேங்கடம் தியாகுவின் தமிழ் தேசிய வாழ்க்கையை பற்றி எழுதுகிறான் என்றால், இதைவிட கேவலம் என்ன? சௌந்திரவிஜயன் என்கிற போட்டோகிராபரின் மரணத்துக்கு காரணமானவன், இன்று கஷ்டப்படும் அந்த குடும்பத்துக்கு உதவி செய்கிறானா? அந்த பாவமெல்லாம் இவனை சும்மா விடுமா? பேஸ்புக்கில் பப்லிசிட்டி கோயிந்தாக பம்மாத்து காட்டும் ராஜா, மறுபடியும் தியாகு மேட்டரில் தலையிட்டால், பேஸ்புக்கிலேயே அவனுடைய அத்தனை அசிங்கத்தையும் எழுதிக் குவிப்போம்.

Anonymous said...

நீங்கள் தியாகு குறித்து எழுதவே கூடாது என்று சொல்கின்றீர்களா>>>?

கலகக்குரல் said...

நாம் தியாகு குறித்து எழுதக் கூடாது என்று சொல்லவில்லை.தியாகு விஜயலட்சுமி என்ற பெண்ணுடன் தவறான உறவு வைத்திருந்தால் அதற்கான ஆதாரங்கள் எதையும் பிரசுரிக்காமல் எழுதுவது அவதூறு என்று தான் சொல்கிறோம்.இவர்கள் ஆதாரங்களைப் பிரசுரித்தால் நாம் எதற்கு இவர்களைப் பற்றி எழுதப் போகிறோம்.?

மாநிலத்தமிழ்ச்சங்கம் said...

தோழர்,
உங்களுடைய கட்டுரைகளைக் கடந்த சில நாட்களாகப் படித்து வருகிறேன். பெரும்பாலான கட்டுரைகள் ஆழமாக உள்ளன. பாராட்டுகள். தோழர் தியாகுவைப் பற்றிய மேலுள்ள கட்டுரையை இன்று படித்தேன். ஆனால் இன்றே முகநூலில் http://www.youtube.com/watch?v=f_a7jrmxtEY என்றொரு காணொளி காணக்கிடைக்கிறது. அதைப் பார்த்த பின் தோழர் தியாகுவின் மீதுள்ள மதிப்பு எனக்குக் குறைந்து விட்டது. கவிஞர் தாமரை - விசயலட்சுமியை நேர்காணும் காணொளி அது. கண்டு உண்மை உரைப்பீர்கள் என நம்புகிறேன்.