Tuesday 8 July 2014

' ஏ' படம் பார்த்து அவுட் ஆன எடிட்டர் பாலிமரில் சங்கமம்...!



லைமாறன்.இவர் சன் நியூஸில் அவுட்புட் எடிட்டர்.இதற்கு முன்பு திருச்சி மாலை முரசில் செய்தி ஆசிரியராய் பணிபுரிந்தவர்.

அவுட்புட் எடிட்டர் கலைமாறன் எப்போதும் மர்மமான நபர்தான்..அவரை அவ்வளவு எளிதில் தொடர்பு கொள்ள முடியாது. ஆனால் 3,4 தொலைபேசி எண்கள் வைத்திருப்பவர்.

அவர் திடீர் திடீர் என காணாமல் போனால் சன் நியூஸ் நிர்வாகமே அவரைத் தேடுவதற்குள் படாதபாடு பட்டுவிடும். அவர் வசிப்பிடம் கூட ஒன்றிரண்டு பேருக்குத்தான் தெரியும்.

கலைமாறனின் சகோதரிகள் கூட அவரை கண்டுபிடிக்க முடியாமல் அவ்வப்போது சன் நியூஸுக்கு போன் செய்து புலம்புவது வாடிக்கையான ஒன்று. அவ்வளவு மர்மமான நபர்!

சன் நியூஸில் அவுட்புட் எடிட்டர் ராஜராஜன், 3 வது திருமண பிரச்சனையில் வெளியேறிய நிலையில் அந்த இடத்தைப் பிடித்தார்.

சன் நியூஸில் தலைமை செய்தி ஆசிரியர் ராஜா  சிறைச்சாலைக்கு போக சன் டிவி எடிட்டர் உமாசங்கர் வசம் சன் நியூஸ் போனது. அப்போது கலைமாறன் செய்திப் பிரிவில் இருந்து தூக்கியடிக்கப்பட்டு நிகழ்ச்சிகளுக்குப் பொறுப்பாளரானார்.

செய்திகளில் இருந்து ஒதுங்கியே இருந்த கலைமாறன் ஞாயிறுதோறும் ஒளிபரப்பாகும் 'நிஜம்' போன்ற ஒன்றிரண்டு நிகழ்வுகளை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தார். இதர ஓய்வு நேரங்களில் இணையதளத்தில் ஆபாச படங்களை விடாமல் பார்த்துக் கொண்டிருந்துள்ளார். இதை டெக்னிக்கல் டீம் கண்டுபிடித்துவிட்டது.




கலைமாறன்

முதலில் இதை மறுத்த கலைமாறன், ஆதாரங்களுடன் டெக்னிக்கல் டீம் காண்பிக்க வேறு வழியில்லாமல் ஒப்புக் கொண்டார். அதனால் நிகழ்ச்சி பிரிவில் இருந்து மீண்டும் சப் எடிட்டர் அளவுக்கு கீழிறக்கப்பட்டு ஓரங்கப்பட்டார்.

வந்தோமா...ரெண்டு செய்தி எழுதிக் கொடுத்தோமா என்று போய்க் கொண்டிருந்தார் கலைமாறன். ராஜா மீண்டும் சன் நியூஸுக்கு வந்த போதும் கலைமாறனால் பழைய இடத்துக்கு வர முடியவில்லை. கேவலமான செயலால் கேவலமாக ஒதுக்கப்பட்ட கலைமாறன் தற்போது அங்கிருந்து வெளியேறி பாலிமர் டிவியில் இணைந்துவிட்டார்.

பாலிமர் டிவியிலாவது பிட்டு படம் பார்க்காம கொடுத்த வேலையை மட்டும் செய்யுங்க...

No comments: