Thursday, 28 May 2015

மோசடிப்புகாரில் சிறைக்குச் சென்ற தின இதழ் முதலாளி…!



தின இதழ்’ நாளிதழ் ஆரம்பிக்கப்படும் பொழுது அதன் பின்னணி, நோக்கம் குறித்து எழுதியிருந்தோம். குறுக்கு வழியில் மோசடியாக பலநூறு கோடிகளைச் சம்பாதித்து அதனைப் பாதுகாக்கவும் பலவாறாகப் பெருக்கும் நோக்கத்திலும் தான் 'தின இதழ்' நாளிதழை ஆரம்பித்துள்ளனர் என்றும் சொல்லியிருந்தோம். 

இந்த நிலையில் தனது மருத்துவக் கல்லூரிக்கு சி.எம்.டி.ஏ. சான்றிதழை மோசடியாக தயாரித்த குற்றத்திற்காக ’தின இதழ்’ நாளிதழ் முதலாளியும், மருத்துவக் கல்லூரித் தலைவருமான ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இந்தச் செய்தியை’தின இதழ்’ முதன்மை ஆசிரியர் குமார் இன்றைய நாளிதழில் ஏனோ (!) வெளியிடவில்லை.

29-05-2015


30-05-2015


மத்திய, மாநில அரசுகளுக்கு வரன்முறையில்லாமல் ஜால்ரா அடித்தும், தான் செய்த குற்றத்திலிருந்து ’உரிய’ வழிமுறைகளில் தப்ப முடியாமல், ஏதோ ஒரு காரணத்தினால் சிறைச்சாலைக்குச் சென்றிருக்கிறார்.
கலாநிதிமாறன், பச்சமுத்து, வைகுண்டராஜன் போன்ற பங்காளிகளிடம் கொஞ்ச நாள் டியூஷன் போயிட்டு வாங்க சார்..!
கைதாகாமல் தப்பிப்பது எப்படி?

ஆனால் தொழில் ரகசியத்தை அவர்கள் சொல்வது சந்தேகம் தான். எதற்கும் முயற்சியுங்கள்.


தொடர்புடைய இணைப்புகள்


பாலியல் புகாரில் தினகரன் நியூஸ் எடிட்டர் ; ராஜினாமா நாடக ஒத்திகை..!



தினகரன்; வேலூர் பதிப்பு  நியூஸ் எடிட்டர் பெருமாள் குறித்து நாம் ஏற்கனவே எழுதியிருக்கிறோம். வேலூர் பதிப்புக்கு இவர் தான் இன்சார்ஜ். தனது கீழ் பணிபுரிந்த ஊழியரின் பணத்தை ஏ.டி.எம்.மில் திருடி அதன்பின் திருடிய தொகையை பல தவணைகளில் கொடுக்க ஒப்புக்கொண்டதையும் எழுதியிருந்தோம்.

இப்பொழுது மீண்டும் பாலியல் புகாரில் சிக்கியிருக்கிறார். இந்த முறை தனது கீழ் பணிபுரியும் உதவி ஆசிரியர் பெண்மணியிடன் தரக்குறைவாக நடந்து கொண்டிருக்கிறார் என்பது குற்றச்சாட்டு.

’தினகரன்’ வேலூர் பதிப்பில் ஆரணி பகுதியைச் சேர்ந்த கோகிலமான ஒரு பெண் கடந்த ஓரிரு வருடங்களாக உதவி ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவருக்குத் தொடர்ச்சியாக நியூஸ் எடிட்டர் பெருமாள் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்திருக்கிறார். அத்தோடு மட்டுமல்லாமல் இவரது செல்போனுக்குத் தொடர்ச்சியாய் ஆபாசமான குறுஞ்செய்திகளை நேரம்காலம் பார்க்காமல் அனுப்பி வந்துள்ளார்.

குடும்ப சூழ்நிலை காரணமாய் வேலைக்கு வந்த உதவி ஆசிரியரால் இதனை எதிர்கொள்ள முடியவில்லை. ஒருகட்டத்துக்கு மேல் பெருமாளின் தொல்லைகள் பொறுக்க முடியாமல் அதனை வேலூர் மேனேஜரிடம் தெரிவித்துள்ளார். மேனேஜரும் நியூஸ் எடிட்டரும் பல விஷயங்களில் கூட்டாளிகள் என்பதால் அவர் இதனைக் கண்டு கொள்ளவில்லை என்பதோடு பெருமாள் க்கு வக்காலத்தும் வாங்கியிருக்கிறார். வேறு வழியின்றி உதவி ஆசிரியப் பெண்மணி ’தினகரன்’ சென்னை அலுவலகத்தில் எச்.ஆர்.சாந்தியிடம், நியூஸ் எடிட்டர் பெருமாள் தனக்கு அளித்த பாலியல் தொந்தரவுகளை அதற்கான ஆதாரங்களுடன் இணைத்து புகாரை அளித்துள்ளார்.

அதற்குப்பின் எச்.ஆர்.சாந்தியின் அறிவுரையின் படி, பிரச்னை கைமீறிச் சென்றுவிடாமல் இருப்பதற்காக, நியூஸ் எடிட்டர் பெருமாளின் ராஜினாமாவை ’தினகரன்’ வேலூர் பதிப்பு மேனேஜர் வாங்கி வைத்துக் கொண்டிருக்கிறார். ஆனாலும் பெருமாள் அலுவலகத்தில் இன்னும் கோலோச்சிக் கொண்டு தான் இருக்கிறார்.பணி செய்யும் இடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகளை விசாரிப்பதற்காக உருவாக்க வேண்டிய விசாகா கமிட்டி ’தினகரனில்’ இன்னும் உருவாக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பெருமாள்


தினகரன்’ எடிட்டர் கம் மேனேஜிங் டைரக்டர் ஆல் இன் ஆல் அழகுராஜா ஆர்.எம்.ஆர். தற்பொழுது தமிழ்நாட்டில் நிலவும் வெயில் காரணமாக, வெளிநாட்டுக்கு உல்லாச சுற்றுப்பயணம் சென்றிருக்கிறாராம். அவர் வந்தவுடன் தான் என்ன முடிவெடுக்கப்படும் என்பது தெரியும். கோவிந்தராஜ் என்னும் ஒரு திறமையாளரை புறக்கணித்து விட்டு தனக்குத் தோதான இவரை, மேனேஜரின் விருப்பத்தின் பேரில் நியமித்தவர் தான் ஆர்.எம்.ஆர். தான் பதவி கொடுத்து அழகு பார்த்தவர்களை அவ்வளவு எளிதில் கைவிட மாட்டார் என பங்காளிகள் நம்புகிறார்கள்.

பாலியல் தொந்தரவு செய்த நியூஸ் எடிட்டர் பெருமாளை வீட்டுக்கு அனுப்பி குறைந்த பட்ச நடவடிக்கையையாவது நிர்வாகம் எடுக்குமா..?

ஆனால், குற்றவாளிகள் பதவியில், பாதிக்கப்பட்டவர்கள் வீதியில்  என்பதுதான் ’சன் நெட்வொர்க்’கின் கடந்தகால வரலாறு.

Tuesday, 19 May 2015

தினமணி- நிமிர்ந்த நன்னடையா ? சாஷ்டாங்கமான வணக்கமா?







ஜெயலலிதாவை சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் இருந்து கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி சி.ஆர்.குமாரசாமி விடுவித்ததை அடுத்து ’தினமணி’ ஆசிரியர் வைத்தியநாதன் ஒரு தலையங்கம் எழுதியுள்ளார்.படிக்கப் படிக்க பரவசம். தினமணி தலையங்கமா ? இல்லை சித்ரகுப்தன் எழுதிய வாழ்த்துப்பாவா என மனம் ஒருகணம் குழம்பி விட்டது. நீங்களும் படித்து விடுங்கள்.

அதில் சில பகுதிகளை எடுத்து விமர்சனம் செய்துள்ளோம்.

 //நீதிபதி சி.ஆர்.குமாரசாமி தலைமையிலான சிறப்பு இருக்கை தீர்ப்பளித்திருக்கிறது//

தீர்ப்பு அளித்தவர் சி.ஆர்.குமாரசாமி மட்டுமே. அவருக்கு கீழே வேறு நீதிபதிகள் கிடையாது. ஆனால் சி.ஆர்.குமாரசாமி தலைமையிலான சிறப்பு இருக்கை தீர்ப்பளித்திருக்கிறது என்று வைத்தி எழுதியுள்ளார்.

//கடந்த 3 மாதங்கள், யாரையும் சந்திக்காமல் தனித்திருந்து பிரச்னையை எதிர்கொண்டு வெற்றிபெற்ற ஜெயலலிதாவின் மன உறுதிக்கும்//

மத்திய சட்ட அமைச்சர் அருண்ஜெட்லியை ஜெயலலிதா சந்தித்தாரே? இந்த சந்திப்பு இப்பொழுது வரைக்கும் விமர்சனத்துக்குள்ளாகி உள்ளதே? அந்த சந்திப்பு குறித்த செய்தி கூட ’தினமணி’யில் வெளிவந்துள்ளதே? ஜெயலலிதாவின் ’மனஉறுதி’யைப் பாராட்டுவதற்கு வசதிவாய்ப்பாக அதனை வைத்தி மறந்து விட்டாரா?

//பன்னீர்செல்வம் உள்ளிட்ட அதிமுக அமைச்சரவைக்கு இருந்த எதிர்பார்ப்பெல்லாம் உயர்நீதிமன்ற மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு வெளிவந்து, ஜெயலலிதா மீண்டும் முதல்வராகப் பதவி ஏற்க வேண்டும் என்பது தான்//

பக்கத்து இலைக்கு பாயாசம் கேட்கிறார் வைத்தி. இது அவர்களின் எதிர்பார்ப்பு மட்டுமா ? வைத்தியின் எதிர்பார்ப்புமா?

//அதனால் பல நல்வாழ்வுத் திட்டங்களில் அவர்களால் முழுமையாகக் கவனம் செலுத்த முடியாததை தவறு காண முடியாது//

மக்கள் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டிய அரசு, அவர்களின் நல் வாழ்வுக்காக செயல்பட வேண்டிய அரசு, அதன்பொருட்டு உறுதிமொழி ஏற்றுப் பதவி ஏற்ற அமைச்சரவை, செய்யத் தவறினால் அதனைச் சுட்டிக் காட்டி விமர்சனம் செய்ய வேண்டிய பத்திரிகையாளர்,கவனம் செலுத்த முடியவில்லை என்பதில் தவறு காண முடியாது என்று வக்காலத்து வாங்குகிறார். விந்தை தான்.

//சட்டத்தின் பார்வையில் அரசியல் லாபங்களுக்காக வழக்குத் தொடுப்பதை ஊக்குவிக்க கூடாது. என்கிற நீதிபதியின் கருத்து வருங்காலத்தில் அரசியல் காரணங்களுக்காகத் தொடுக்கப்படும் இதுபோன்ற வழக்குகளில் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.//

இந்தக் கருத்தினை தயாநிதி மாறன் தொடர்புடைய ஏர்செல் மேக்சிஸ், தனியார் தொலைபேசி இணைப்பு மோசடி வழக்குகளிலும் சொல்வீர்களா வைத்தி?

//பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியிருந்த ஒவ்வோர் அம்சத்தையும் , உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி தனது 919  பக்கத் தீர்ப்பில் மிகத் தெளிவாக மறுஆய்வு செய்து, சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை நிராகரித்திருக்கிறார்.//

நிதிபதி சி.ஆர்.குமாரசாமியின் தீர்ப்பு கர்நாடக உயர்நீதிமன்ற இணையத்தில் 11 ஆம் தேதி மாலை 4 மணி அளவில் வெளியிடப்பட்டது. ’தினமணி’ தலையங்கம் அதிகபட்சம் இரவு 10 மணிக்குள் எழுதி முடிக்கப்பட்டு அச்சுக்குப் போயிருக்கும். இந்த இடைப்பட்ட 6 மணி நேரத்துக்குள்ளாக 919 பக்கங்களையும் டவுன்லோடு செய்து வரிக்கு வரி படித்து நீதிபதி சி.ஆர்.குமாரசாமியின் தீர்ப்பு ’மிகத் தெளிவான மறு ஆய்வு’ என்று வைத்தி எப்படி முடிவு செய்தார்?

இந்த வழக்கின் ஒவ்வொரு அம்சத்துடனும் சில ஆண்டுகள் செலவிட்ட கர்நாடக அரசுத் தரப்பு சிறப்பு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா கூட மறுநாள் காலையில் தானே கருத்துச் சொன்னார்?

அவரை விட மிகப்பெரிய சட்ட மேதையா வைத்தியநாதன்? பேசாமல் படிக்காத வழக்கறிஞர் ஆகி விடுங்களேன். ’தினமணி’ வாசகர்களாவது பிழைத்துப் போகட்டும்.

 //நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பு ஏனோதானோ என்று எழுதப்பட்ட தீர்ப்பு அல்ல. விரிவாக அலசப்பட்ட விவரங்களுடன் கூடிய தீர்ப்பு.//

//வருமானத்துக்கு அதிகமான சொத்து மதிப்பு மொத்த வருமானத்தில் வெறும் 8.12 % தான். இதன் அடிப்படையில் தான் உயர்நீதிமன்றம் அனைவரையும் விடுதலை செய்திருக்கிறது.//

நீதிபதியின் கணக்கிடுதலில் மிகப்பெரிய தவறு நடந்திருக்கிறது. வருமானத்துக்கு அதிகமான சொத்து மதிப்பு வெறும் 8.12% அல்ல 76.76 % என்று இப்பொழுது விமர்சனங்கள் எழுந்துள்ளதே? ஆனால் வைத்தி மட்டும் எப்படி விரிவாக அலசப்பட்ட,  விவரங்களுடன் கூடிய தீர்ப்பு என்று சான்றிதழ் வழங்குகிறார்.

சான்றிதழ் தீர்ப்பை பார்த்து கொடுத்ததா? இல்லை சாதியைப் பார்த்துக் கொடுத்ததா?

சரி அவசரத்தில் உணர்ச்சிவசப்பட்டு தலையங்கம் எழுதிவிட்டார் என்று வைத்துக் கொள்வோம். மறுநாள் மதியத்தில் இருந்து கணக்கீட்டில் உள்ள குளறுபடி குறித்து தகவல்கள் வந்தனவே? அனைத்துக்கட்சிகளும் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டனரே? எல்லா நாளிதழ்களிலும், இணையத்திலும் செய்திகளும் விமர்சனங்களும் வெளிவருகின்றனவே? அது வைத்தியின் கண்களையும்  காதுகளையும் எட்டவில்லையா?

நீதிபதி சி.ஆர்.குமாரசாமி எழுதிய தீர்ப்பை மாற்றுவது தான் கடினம். வைத்தி எழுதிய  தலையங்கத்தை மாற்றுவதுமா கடினம்? வருமானக் கணக்கீட்டுக் குளறுபடி குறித்தும், நீதித்துறை மீது எழுந்துள்ள விமர்சனங்கள் குறித்தும் அதன் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளானதைக் கண்டித்தும் ஒரு தலையங்கம் எழுதுவதில் என்ன சிக்கல்? அவசர அவசரமாய் வரவேற்று தலையங்கம் எழுதிய தினமணி, நிதானமாக சிந்தித்து எழுத, விமர்சனம் எழுத 8 நாட்கள் கடந்த நிலையிலும் தயங்குவது என்?

வைத்தியை எது தடுக்கிறது?

இதைப்போன்ற புகழுரைகளைத் தாண்டி அத் தலையங்கத்தில் குறிப்பிட்டுச் சொல்லும்படி வேறு எதுவும் இல்லை.

தீர்ப்பு வெளியானவுடன் அதிக உணர்ச்சிவசப்பட்ட நிலையிலும் பரவசத்திலும் காணப்பட்ட ஒரு அதிமுக தொண்டனின் மனநிலையை இத் தலையங்கத்தின் ஒவ்வொரு வார்த்தையிலும் காண முடிகிறது. ஒரு மூத்த பத்திரிகையாளனின் எழுத்தை எந்த இடத்திலும் காண முடியவில்லை. 

தினமணியின் முகப்பு வாசகமான 'நிமிர்ந்த நன்னடை'க்குப் பதில் கூனிக்குறுகிய சாஷ்டாங்கமான வணக்கத்தைத் தான் வைத்தி செலுத்தியிருக்கிறார்.




ங்கோ கல்கத்தாவில் இருந்து சென்னைக்கு பிழைக்க வந்து, வெளிநாட்டுத் துணி வணிகம் செய்த நிறுவனத்துக்கு விசுவாசமாய் துபாஷி வேலை பார்த்துக்கொண்டிருந்த அதேசமயம், தமிழ்நாட்டு சதானந்திடமிருந்த ’The Indian Express’ பத்திரிகையை தனதாக்கி அதையே துருப்புச் சீட்டாய் வைத்துக் கொண்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் அதிரடியாய் உள் நுழைந்து அப்பொழுதிருந்த பழம்தின்று கொட்டை போட்ட பார்ப்பனர்களை எல்லாம் தாண்டி தேர்தலில் போட்டியிட சீட்டும் வாங்கி முக்கிய அரசியல் ஆளுமை ஆனவர், உங்கள் முதலாளி செத்துப்போன ராம்நாத் கோயங்கா. அதற்குப்பின் அவரது அரசியல், பத்திரிகை, பொருளாதார வளர்ச்சி அமோகமாய் ஆனது.

அவரது லாவகமும் குயுக்தியும் லாபியும் உங்களிடமும் இருக்கிறது, கூடுதலாக கூழைக்கும்பிடு போடும் குணமும் இருக்கிறது. நீங்கள் ஏன் அதிமுகவில் சேரக்கூடாது ? 

உங்களுக்கு நல்ல ஒளிமயமான எதிர்காலம் இருக்கிறது.


Monday, 4 May 2015

ஊழியரிட‌ம் மண்டியிட்ட தினகரன் எம்.டி. ஆர்.எம்.ஆர்..!



தித்தால் உதைப்பதும் மிதித்தால் தலையைக் குனிந்த படி பொதி சுமப்பதும் கழுதைகளின் குணம் மட்டுமல்ல; பத்திரிகை முதலாளிகள் மற்றும் அவர்களது கங்காணிகளின் குணமும் தான்.

கங்காணி பற்றிப் பார்ப்பதற்கு முன் முதலாளியின் அராஜகத்தை அசை போடுவோம்.

ஏறக்குறைய 22 வருடங்களுக்கு முன்பு அதாவது 1992 வாக்கில் நடந்தது   'நக்கீரன்' ஆரம்பித்து 4 வருடங்கள் தான் இருக்கும்.  'தராசு' தான் முன்னணியில் இருக்கும் இதழ். ஜெயலலிதாவின் அராஜகத்தையும் ஆணவத்தையும் எதிர்த்து மிகத் தீவிரமாக எழுதுகிறது நக்கீரன். இன்னொருபுறம் 'நக்கீரன்' முதலாளி கோபால் அராஜகத்தில் இறங்குகிறார்.


நக்கீரன் கோபால்


ஊருக்குத் தானே உபதேசம். ?

'தராசு' பத்திரிகையில்  லே அவுட் ஆர்ட்டிஸ்டாக இருந்து தனியாக நக்கீரன் என்னும் பத்திரிகையை புதிதாக‌ ஆரம்பித்து புது பணக்கார முதலாளியாக கோபால் அப்பொழுது தான் பரிணமித்து வருகிறார்.

இனி தமிழ் பத்திரிகை சாம்ராஜ்யத்தின் முடிசூடா அதிபர் நாம் தான் என மனதுக்குள் ரெக்கை கட்டிப் பறந்து கொண்டிருந்த சமயம். இந்த நிலையில் அவரது ரெக்கையை பிடுங்கும் வண்ணம் சம்பவம் நிகழ்கிறது.

இவர் எப்படித் 'தராசு' வில் இருந்து துரை தலைமையில் ஒரு டீமை அழைத்து வந்து நக்கீரன் என்ற பெயரில் தனிப்பத்திரிகை விரித்தாரோ அதைப்போல், நக்கீரனில் இருந்து முத்துராமலிங்கம்,ஜி.கே.ராஜ்,சுந்தரமூர்த்தி,கவிதா பாரதி ஜான் ராஜையா ஆகியோர் தனி அணியாகப் பிரிந்து 'சத்ரியன்' என்ற பெயரில் தனிக்கடை போடுகின்றனர். இது கோபாலுக்கு கடும் சினத்தை ஏற்படுத்துகிறது. அவரது மூளை மழுங்குகிறது.

முத்துராமலிங்கம்

கவிதா பாரதி


விரலசைவில் பத்திரிகை உலகம் இயங்கும் என எதிர்பார்த்தவருக்கு, ஆரம்பத்திலேயே தீய்ந்த வாசனை வருகிறது. நேற்று வரை தானும்  இன்னொருவரிடம் குப்பை கொட்டிக்கொண்டிருந்ததை மறந்து விடுகிறார்.

தண்ணீரின் நடுவில் துரை


ஒரு அடியாள் படையைத் திரட்டி அனுப்புகிறார். அதில் 'நக்கீரன்' அப்பொழுதைய ஆசிரியர் துரை, அச்சக இன்சார்ஜ் சுந்தர் இவர்களுடன் இன்னும் நாலைந்து அடிப்பொடிகள் கீழ்ப்பாக்கம் அலுவலகத்தில் இருந்து 'சத்ரியன்' அண்ணா நகர் அலுவலகம் செல்கின்றனர். குடிபோதையில் இருக்கும் அடியாள் படை கீழ்த்தரமாக பேசுகிறது. அதனை கடுமையாக‌ ஜி.கே.ராஜ் எதிர்த்துப் பேச,மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சுந்தர், ஜி.கே.ராஜை வெட்ட முயற்சிக்கிறார். முடிந்தமட்டில் தடுத்தாலும் ஜி.கே.ராஜ் கையில் ஆழமான வெட்டு விழுந்து விடுகிறது. அதைத்தொடர்ந்து அலுவலகத்தில் இருக்கும் அனைவரும் சூழ்ந்துவிட, தப்பித்தால் போதும் என கோபால் அனுப்பி வைத்த கும்பல் ஓடி விடுகின்றது.

காவல்துறை வழக்குப் பதிவு செய்த நிலையில் நடப்பது ஜெ.ஆட்சி என கோபாலுக்கு புத்தியில் உறைக்கிறது. கோபால் உட்பட எல்லோரும் தலைமறைவாகி முன் ஜாமீன் எடுக்கின்றனர். அதன்பின் காலில் விழுந்ததனாலும் இன்னும் சில காரணங்களாலும்  காலப்போக்கில் வழக்கு நீர்த்துப்போகிறது. தம்பி தம்பி என உருகுவதில், கோபால் பாசத்தில் வானத்தைப்போல விஜயகாந்த என அங்கு பணி செய்த அனைவரும் சொல்வதுண்டு. ஆனால் தம்பிகளை வெட்ட ஆட்களையும்  கோபால் அனுப்புவார்.

கோபாலின் மீசை வழக்கம் போல் வெளியில் யாருக்கும் தெரியாமல் அப்போது மடங்கியது .

இனி இந்த பதிவுக்கு வருவோம்.



தினகரனின் அடியாள் ஆர்.எம்.ஆர். குறித்து நாம் சில பதிவுகள் எழுதியுள்ளோம். சமீபத்தில் இவர், ஊதிய உயர்வு கோரிக்கைக்காக போராட்டம் நடத்திய மகேஷ் என்னும் ஊழியரை தாக்கியது குறித்து பதிவு எழுதியிருந்தோம். அதைத்தொடர்ந்து மகேஷ் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கும் சூழ்நிலை உருவானது.

ஆர்.எம்.ஆர். குறித்து நிறைய செய்திகள் சமூக ஊடகங்களில் வெளியாகின. இந்நிலையில் கலாநிதிமாறன் அவரை அழைத்து கடுமையாக திட்டியதாகத் தெரிகிறது. "சக்சேனா. ராஜா,பிரவீண் என எல்லோரும் புழல் போயிட்டு வந்துட்டாங்க.மிச்சமிருப்பது நீ ஒருத்தன் தான். உனக்கும் போக ஆசை வந்துடுச்சு போல,என்ன செய்வியோ தெரியாது,அவன் கை,காலில் விழுந்தாவது இந்த பிரச்சனையை முடிச்சுடு,முடியலைன்னா அப்படியே போயிடு" என எச்சரித்ததாகவும் சொல்கிறார்கள்.

அதன்பின் ஓரிரு நாளில்  சீப் ரிப்போர்ட்டர் சுரேஷ்,மகேஷை  போனில் அழைத்தாராம். மிகவும் மரியாதையாகவும் பணிவாகவும் பேசிய அவர், "தம்பி நடந்ததை மறந்துடு, இனி உனக்கு நல்ல காலம் தான். எம்.டி. சார் உன்னை வரச்சொன்னார்" எனச் சொன்னாராம்.

மறு நாள் சன் நெட்வொர்க் அலுவலகத்தில் ஆர்.எம்.ஆரைச் சந்திக்க மகேஷ் சென்றுள்ளார்.

தனது சேரை விட்டு எழுந்து மகேஷை வரவேற்ற ரமேஷ், நீ உட்காருப்பா முதலில் என சொல்லி விட்டு மகேஷ் சேரில் அமர்ந்த பின்பு தான் தனது சேரில் அமர்ந்தாராம்.

நடந்ததை மறந்துடு,அன்னைக்கு ஏதோ கோபத்துல ரொம்ப ஹார்ஷா நடந்துட்டேன்,எதையும் மனசுல வச்சிக்காதம்மா,உன்னோட பிரதரா என்னை நினைச்சுக்கோ.  வெரி சாரி. 10 டேஸ் ஊருக்குப் போய் ரெஸ்ட் எடுத்துட்டு வந்தாப் போதும்,இந்த மாச சம்பளத்தையும்,இன்கிரிமெண்டையும் அதிகமா கொடுக்கச் சொல்றேன்,ஒன்னாந்தேதியில் இருந்து நீ வேலைக்கு வந்தாப்போதும்.எனக் கையைப்பிடித்த‌ படியே சொன்னாராம்.

சொன்னபடி கடந்த மே 1 ஆம் தேதி மகேஷ் லே அவுட் ஆர்ட்டிஸ்டாக  'தினகரனில்' திரும்பவும் வேலைக்குச் சேர்ந்து விட்டார். ஆபிசில் இருப்பவர்கள் அனைவரும் மிரட்சியாய் பார்த்துக்கொண்டதோடு மட்டுமல்லாமல் நமட்டுச் சிரிப்பு படியே இருக்கிறார்கள்.

வெறி பிடித்து கடித்து குதறிய அல்சேஷன் நாய் மகேசின் முன் வாலாட்டிக்கொண்டு நிற்கிறது.


Sunday, 3 May 2015

நக்கீரனும் வைரமுத்துவும்- வேலிக்கு ஓணான் சாட்சி….!


ழுத்தாளர் மறைந்த ஜெயகாந்தனின் கடிதத்தை மோசடியாகத் தயாரித்து வார்த்தை வியாபாரி வைரமுத்து அம்பலப்பட்டு நாறிப்போன நிலையில் அவரைக் காப்பாற்ற களம் இறங்கியிருக்கிறது துருப்பிடித்த போர்வாள் நக்கீரன்.

இந்த இதழில் இரண்டு பக்க மேட்டர். இதுதான்.




இதைப்படித்தால் சில சந்தேகங்கள் எழுகின்றன.

நாம் தீபலட்சுமியிடம் நடந்தவைகளைக் கேட்டோம் என்று ஆரம்பித்து அவர் கருத்தை வெளியிட்டிருக்கிறது. இதில் சொல்லப்பட்டவை முழுக்க முழுக்க ஏற்கனவே அவர் முகநூலில் சொல்லியவை தான். புதிதாய் ஒரு வார்த்தை கூட இடம்பெறவில்லை. ஆனால் அவரிடம், இவர்கள் தனியாக கருத்துக் கேட்டது போல எழுதியிருக்கிறார்கள். இது மட்டுமல்ல காட்டமாக சொன்னார் என பக்கத்தில் அமர்ந்து கேட்டு எழுதியது போலவோ,தொலைபேசியில் பேசியது போலவோ காரம் தடவியிருக்கிறார்கள்.

தன்னிடமோ தனது குடும்பத்தினரிடமோ எவ்விதக் கருத்தும் கேட்கவில்லை என இதழ் வந்த அன்று மதியமே ஜெயகாந்தனின் மகள் நக்கீரனுக்கு முகநூலில் சூடு வைத்திருக்கிறார். 



அதானே பொய்க்கு அலங்காரப்பூச்சு செய்வதற்கு நக்கீரனுக்கு சொல்லியா கொடுக்க வேண்டும் ? கைவந்த கலை தானே அவர்களுக்கு.

அடுத்ததாக குற்றச்சாட்டுக்கு உள்ளான வைரமுத்துவின் பேட்டியை வெளியிட்டிருக்கிறார்கள். கவிஞர் ’உருக்கமாக’ பேசினாராம்,நக்கீரன் சென்டிமென்ட் தூவுகிறது. படிப்பவர்கள் மத்தியில் தவறு வைரமுத்துவிடம் இல்லை என உளவியல் தாக்கத்தை ஏற்படுத்த முயற்சிப்பது இதன் நோக்கம்.

வைரமுத்து தன் தரப்பு சாட்சியாக U.S.S.R. நடராஜன் என்பவரை முன்னிறுத்தி தப்பிக்கிறார். (யார்றா அது?) U.S.S.R.நடராஜன் என்பவரோ ஜெயகாந்தனின் பாராட்டுக் கடிதம் உண்மை என்று சூடம் அடித்துச் சத்தியம் செய்கிறார்,அது மட்டுமல்ல கடிதம் கிடைத்த உடன் தொலைபேசி மூலம் ஜெயகாந்தனுக்கு வைரமுத்து நன்றி சொன்னார் எனவும் சொல்கிறார்.
(ஆனால் கவிஞரின் கூட்டுக் களவாணியான ’குமுதம்’ இதழோ கடிதம் கிடைத்தவுடன் வைரமுத்து வீடு தேடிச்சென்று நன்றி சொன்னார் என ஏற்கெனவே எழுதியுள்ளது. எந்தக் கூட்டாளி சொல்வது உண்மை..?)

அத்துடன் இல்லாமல், U.S.S.R. நடராஜன், ஜெயகாந்தனின் இரண்டாம் மனைவி கவுசல்யாவுக்கு எல்லாம் தெரியும் என ஜெயகாந்தனின் வீட்டிலிருக்கும் முக்கிய உறவினை தனது தரப்பு ஆதாரமாய் முன் நிறுத்துகிறார். இது மிக முக்கியமான செய்தி.

றைந்த ஜெயகாந்தன் பாராட்டுக் கடிதத்தை மோசடியாக வைரமுத்து தயாரித்தார் என்னும் குற்றச்சாட்டை எழுப்பியவர் அவரது மகள் தீபலட்சுமி.

குற்றச்சாட்டுக்கு உள்ளான வைரமுத்துவோ தனது தரப்பு சாட்சியாக U.S.S.R.நடராஜன் என்பவரைக் கைகாட்டி தப்பிக்கிறார். U.S.S.R.நடராஜனோ, ஜெயகாந்தனின் இரண்டாம் மனைவி திருமதி கவுசல்யா அம்மையாருக்கு எல்லாம் தெரியும் எனச் சொல்வதோடு மட்டுமல்லாமல் குற்றச்சாட்டைக் கூறிய அவரது மகள் தீபலட்சுமி மாடியில் வசிப்பதால் அவருக்கு எதுவும் தெரியாது எனவும் பதில் குற்றம் சாட்டுகிறார்.

இந்நிலையில் ஒட்டுமொத்த பிரச்சினையும் ஜெயகாந்தன் மனைவி திருமதி.கவுசல்யா அவர்களின் பதிலில் தான் இருக்கிறது. அவர் பதில் தான் மோசடிக்கடிதமா என்னும் வினாவுக்கு உரிய விடையைத் தரும்.

அல்லது செத்துப்போன ஜெயகாந்தனின் கடிதத்தை மோசடியாகத் தயாரித்தது போல் உயிருடன் வீட்டில் அமைதியாய் இருக்கும் ஜெயகாந்தனின் மனைவியின் பெயரை வைத்து அடுத்த சுற்று ஏமாற்றுக்கு வைரமுத்து கோஷ்டி தயாராகி விட்டதா என்பது தெரியவரும்.ஆனால் நக்கீரனோ திருமதி.ஜெயகாந்தனின் கருத்து எதையும் வாங்கிப்பதிவு செய்யவில்லை. வைரமுத்துவுக்கு ஆதரவான கருத்துடன் மேட்டருக்கு  சுபம் போட்டு  விட்டது.

ஜெயலலிதா மீது தொடரப்பட்ட வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்குவித்த வழக்கில், வழக்கிற்கு தொடர்பற்ற மூன்றாம் தரப்பான க. அன்பழகன் கருத்தை கேட்டுத்தான் நீதிபதி தீர்ப்பு சொல்ல வேண்டும் என பக்கம் பக்கமாய் எழுதித் தள்ளும் நக்கீரன் இங்கோ, வழக்குத் தொடர்ந்த, பாதிக்கப்பட்ட தரப்பு கருத்தையே கேட்காமல் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வாக்குமூலத்தையே  தீர்ப்பாகச் சொல்லி விட்டது. 

இது பித்தலாட்டமன்றி வேறென்ன..? மாடியில் வசிக்கும் மகள் தீபலட்சுமியின் கருத்தை வாங்கியதாய்ச் சொல்லும் நக்கீரன் கீழ் வீட்டில் வசிக்கும் ஜெயகாந்தனின் மனைவி கருத்தை வாங்கத் துப்பில்லையா..? ஒருவேளை வாங்கினால் வைரமுத்துவின் அடுத்த மோசடிச்சுற்றும் அம்பலமாகி விடும் என்னும் பயமா தெரியவில்லை. இதுவே தனக்குப் பிடிக்காத நபர்கள் தொடர்புடைய விஷயமாய் இருந்தால் அதில் நக்கீரன் என்னவெல்லாம் செய்திருக்கும் ? சம்பந்தப்பட்ட நபர் கருத்து சொல்லாவிட்டாலும் தன் தரப்பை கிசுகிசு பாணியில் எழுதி விட்டு அவரது ’நட்பு’ வட்டாரங்கள் சொல்கின்றன என்றோ ’நம்பத்தகுந்த’ வட்டாரங்களில் இருந்து தகவல் எனவோ கூச்சமில்லாமல் எழுதுவது தானே நக்கீரன் பாணி.? இங்கோ உண்மையை கோணிப்பையில் போட்டு மூட முயற்சிக்கிறது.

மேலும் இதில் ’நமது நிருபர்’ என பைலைன் வேறு. உயிருக்கு அச்சுறுத்தல் தரக்கூடிய மிக முக்கியமான செய்திப்பதிவை எழுதியிருந்தாலோ அல்லது தரக்குறைவான செய்தியாக இருந்தாலோ ’நமது நிருபர்’ என்று பைலைன் போடுவது சரி. ஆனால் ஊரறிந்த பிரச்சனையில் கருத்துச் சொன்னவர்கள் எல்லாரும் முகம் காட்டியிருக்க நக்கீரனோ பதிவை எழுதியவருக்கு ’நமது நிருபர்’ என்று முக்காடு போட்டுள்ளது.

மோசடி செய்து அம்பலப்பட்ட வைரமுத்து,அவர் தரப்பு சாட்சி ஆகியோருடன் கைகோர்த்து அவர்கள் சொன்னதை எல்லாம் எந்த வரைமுறையும் இன்றி வெளியிட்டு ஜெயகாந்தன் குடும்பத்தினர் மீதே சந்தேகத்தை நக்கீரன் எற்படுத்தியுள்ளது. தங்களது திமுக குடும்பத்தின் மூத்த வணிக உடன்பிறப்பு வைரமுத்துவுக்கு எதிரான குற்றச்சாட்டு இனி நீர்த்துப்போகும் என்பது நக்கீரனின் மூட நம்பிக்கை போலும். 

வைரமுத்துவின் மோசடிக் கடிதம் அதனால் எழுந்த சர்ச்சை என எதையும் பேசாமல் ஒட்டுமொத்த பிரச்சனையையும் நீர்த்துப்போகச் செய்யும் முயற்சியில் இப்படி மொக்கையாக முடிக்கிறது நக்கீரன்.

  //இறந்த பிறகும் அச்சு வாகனத்தின் நாயகனாகவே இருக்கிறார் ஜெயகாந்தன்//

ஆனால் படித்துப் பார்த்தால்

எப்பொழுதும் பொய்மையின் புகலிடமாகவே இருக்கிறது நக்கீரன்

இப்படித்தான் நினைக்கத் தோன்றுகிறது.

(இந்த இதழுக்குப் பின்  3 நக்கீரன் இதழ்கள் வெளிவந்த நிலையிலும் எழுத்தாளர் ஜெயகாந்தனின் மகளது மறுப்போ, திருமதி ஜெயகாந்தனின் பேட்டியோ இடம்பெறாத நிலையில் இந்த பதிவு வெளியிடப்படுகிறது.)


Monday, 27 April 2015

குமுதம் கூட்டுக்களவாணி…! அர்ச்சனை வைரமுத்துவுக்கு மட்டும்..!


டந்த வாரம் முழுவதும் இணையம் முழுவதும் வைரமுத்துவின் மீதான அர்ச்சனை தான். ’குமுதம்’ வார இதழில் வெளிவரும் வைரமுத்துவின் சிறுகதைகளைப் பாராட்டி  மறைந்த எழுத்தாளர் ஜெயகாந்தன் கடிதம் எழுதினார் என்று அதை ‘குமுதம்’ வெளியிட்டது. அதையொட்டித் தான் சர்ச்சை தொடங்கியது. 

அதே ’குமுதம்’ இதழில் தொடர் எழுதிவரும் ஜெயகாந்தனின் மகள் தீபலட்சுமி இது என் தந்தை எழுதிய கடிதம் இல்லை என முகநூலில் மறுக்க இணையம் பற்றிக்கொண்டது. அதன் மறுநாள்  கோலப்பன் The hindu வில் இதனை முக்கிய செய்தியாக்க தொடர்ந்து வைரமுத்துவை வரிசை கட்டி அடித்தார்கள். 

வைரமுத்து புகழுக்காகவும் பணத்துக்காகவும் எதையும் செய்யத் துணிபவர்,இதையும் செய்திருப்பார் என்பதில் எந்த சந்தேகம் இல்லை. ஆனால் சம்பந்தப்பட்ட ’குமுதம்’ இதழைப்  படித்த எவரும் முழுக் களவாணித்தனமும் வைரமுத்துவிடம் இல்லை. என்பதையும் ’குமுதம்’ இதழுக்கும் இதில் முக்கியப்பங்கு உள்ளது என்பதையும் அறிய முடியும்.

கடிதத்தை பிரசுரித்த ’குமுதம்’ அதற்கு முன்பு ஒரு பக்கத்திற்கு இதனை வெளியிட்டிருக்கிறது.

//ஜெயகாந்தன் தன் கடைசி நாட்களில் குமுதத்தில் வெளிவரும் வைரமுத்து சிறுகதைகளைப் படித்தும் படிக்கச் சொல்லிக் கேட்டும் வந்தார் என்று அறிந்தோம். அதுகுறித்த அவரது அபிப்ராயத்தைப் பதிவு செய்ய முடியுமா என்று அன்போடு கேட்டோம். அதை ஒரு கடிதமாக கவிப்பேரரசு வைரமுத்துவின் வீட்டுக்கே ஆள் மூலம் அனுப்பி விட்டார்.//

குமுதத்தில் வெளிவரும் வைரமுத்துவின் சிறுகதைகள் குறித்த அபிப்ராயத்தை  ஜெயகாந்தனிடம் நாங்கள் கேட்டோம்.அவர் அதனை வைரமுத்துவின் வீட்டுக்கே அனுப்பி விட்டார் என குமுதம் சொல்கிறது. வைரமுத்து என்ன சொல்கிறார் ? 

வீட்டுக்கு ’வந்த’ கடிதத்தை வெளியிடக் கொடுத்திருக்கிறார். ஆக இதில் தவறு நடந்துள்ளது எங்கு ? 




குமுதத்திடம் இருந்து தான் தொடங்குகிறது. கருத்தை ஜெயகாந்தனிடம்  கேட்டோம்,கவிஞரின் வீட்டுக்கு ஆள் மூலம் கடிதத்தை அனுப்பி விட்டார் எனக் குமுதம் தான் சொல்கிறது. அதன்பின்பு ’தி இந்து’ ரிப்போர்ட்டர்  கோலப்பன் கேட்கையில் வேறு என்ன பதிலை வைரமுத்துவால் சொல்ல இயலும்..? 

ஆம்.கடிதம் வீட்டுக்கு வந்தது என்று தான் வைரமுத்து சொல்ல முடியும்..? இல்லை குமுதம் அலுவலகத்தில் தயாரிக்கப்பட்டது என்றோ இல்லை என் வீட்டில் தயாரித்தேன் என்றா சொல்ல முடியும்.? 

இதன்படி பார்த்தால் வந்த கடிதத்தை குமுதம் அலுவலகத்தில் சேர்ப்பித்ததைத் தவிர வேறு எந்தத் தவறும் வைரமுத்துவிடம் இல்லை. மோசடி முழுக்க முழுக்க குமுதத்தின் மீது தான் இருக்கிறது. வைரமுத்து அதற்கு உடந்தை என்று வேண்டுமானால் சொல்லலாம்.

னால் ஜெயகாந்தனின் மகள் எழுதிய பதிவின் படி 



இதன்படி பார்த்தால் வைரமுத்து மீது தான் முழுக்கத் தவறு இருக்கிறது. இவரே ஒரு கடிதத்தைத் மோசடியாகத் தயாரித்திருக்கிறார். ஆனால் அதனை நேரடியாக வெளியிடாமல் குமுதம் வார இதழ் கடிதம் கேட்டதாகவும் அதன்படி ஜெயகாந்தன் பாராட்டுப் பத்திரத்தை வீட்டுக்கு அனுப்பியதாகவும் குமுதம் ஆசிரியர் குழுவை திரைக்கதை எழுத வைத்திருக்கிறார். 

தன் மோசடிச் செயலுக்கு குமுதத்தை உடந்தையாக்கி  இருக்கிறார். மோசடியில் பி.எச்.டி பட்டம் பெற்ற அவர்களும் இதனை மகிழ்ச்சியாய்ச் செய்திருக்கிறார்கள். 

தனது வார இதழில் வெளியாகும் வைரமுத்துவின் சிறுகதைகளைப் பிரபல்யமாக்கும் நோக்கத்துடனும் அதனைப் புத்தகமாகப் பதிப்பிக்கும் பொழுது அது ’குமுதம் பப்ளிகேஷன்ஸ்’ வெளியீடாக வரும் பொழுது அதற்கு இலக்கிய அந்தஸ்து கொடுப்பதற்கும் அதன் சந்தை மதிப்பை அதிகப்படுத்தவும் ’குமுதம்’ இதழ் தெரிந்தே துணை போயிருக்கிறது. குமுதம் உடந்தையாய் இருந்ததால் தான் இவ்வளவு பெரிய மோசடியைச் செய்து மிகப்பெரிய அறுவடையைச் செய்யவும் வைரமுத்து துணிந்து இறங்கியிருக்கிறார்.

 இதனால் இருவருக்கும் ஒருசேர லாபம். கடிதம் கண்ட 'கவிஞர்' வீட்டுக்குச் சென்று நன்றி சொன்னாராம் என மோசடியில் தனக்குத் தொடர்பில்லாதது மாதிரி முன் எச்சரிக்கையாய் கிசுகிசு பாணியில் பாலோ அப் செய்தியையும் குமுதம் எழுதியிருக்கிறது. 



ஆனால் இணையப் பயன்பாட்டாளர்களும்,அறிவுஜீவிகளும் ’தி இந்து’ கோலப்பனும்,குமுதத்தில் தொடர் எழுதும் ஜெயகாந்தனின் மகளோ ஒட்டுமொத்தமாய் வைரமுத்துவின் மீது மட்டுமே பாய்கிறார்கள். அதற்கு ஒன்று வைரமுத்துவின் மீதான வெறுப்பு காரணமாய் இருக்க முடியும்,அல்லது குமுதம் இதழ் மீதான பாசம் அல்லது குமுதத்தைப் பகைத்தால் என்றாவது அதில் வெளிவரும் துக்கிணியூண்டுச் செய்தி வராமல் போய்விடக்கூடாதே என்ற முன் எச்சரிக்கை என ஏதாவது ஒன்று காரணமாய் இருக்க முடியும். அல்லது சம்பந்தப்பட்ட குமுதம் வார இதழைப் படிக்காமல் தான் படித்த, கேட்ட செய்தியை வைத்துக்கொண்டு எழுதித் தள்ளுவது மட்டுமே காரணமாய் இருக்க முடியும்.

இவ்வளவு நடந்தும் சம்பந்தப்பட்ட ’குமுதம்’ இதழோ ஒரு வருத்தமோ,விளக்கமோ எதுவும் வெளியிடாமல் அடுத்த இதழைக் கொண்டு வந்துள்ளது. வைரமுத்துவைப் போல தான் செய்த மோசடித்தனத்தில் கடைசி வரை உறுதியாய் நின்று உண்மையாக்கி விடமுடியும் என நம்புகிறது போலும். 

மாபெரும் எழுத்தாளனின் மரணத்தில் கூட மோசடித்தனம் செய்து புகழுக்கும் வணிகத்துக்கும் வெறிபிடித்து அலையும் வைரமுத்துவும் குமுதமும் சரியான ஜோடி தான்.

Thursday, 16 April 2015

கலாநிதி மாறனின் அல்ஷேசன் நாய்க்கு வெறி..! ஊழியரைக் கடித்துக் குதறியது..!!



டந்த 25 ஆண்டுகளில்  மனித உரிமை பற்றிய விழிப்புணர்வு அனைத்து மட்டங்களிலும் ஏற்பட்டு விட்டது. மாதா,குரு என்ற வரிசையில் உள்ளவர்கள் தங்களின் உரிமைக்குத் தீங்கிழைத்தாலும் அதற்கு எதிரான குரல்கள் எழத்தான் செய்கின்றன. ஆசிரியர் மாணவனைப் பிரம்பால் அடித்து நாடு தழுவிய விவாதமாய் எத்தனையோ முறை எழுந்துள்ள‌து. ஊடகங்களும் அத்தகைய குரல்களுக்கு முக்கியத்துவம் அளித்து வெளியிடுகின்றன. இதனால் யாரும்  வெளிப்படையாய் தீங்கைச் செய்ய அஞ்சுகின்றார்கள்.

ஆனால் நம் கையில் இந்தியாவின் மிகப்பெரிய ஊடக குழும‌ம் இருக்கிறது,நம்மை யாரும் எதுவும் செய்ய முடியாது என்னும் திமிரில்,கொழுப்பில் ஆணவத்தில் அதிகார மமதையில் தனக்கு கீழ் வேலை செய்த ஒரு சாதாரண ஊழியனை அடித்து மிதித்து சித்திரவதை செய்து கொலை மிரட்டல் விடுத்த ரவுடி கம் நாளிதழ் ஆசிரியர் மற்றும் நிர்வாக இயக்குனர் மீதான குற்றப் பட்டியல் இது.

தினகரன் நாளிதழ் கே.பி.கே குமரன் தரப்பிடமிருந்து விலைக்கு வாங்கப்பட்ட பின்பு அதன் ஆசிரியர் மற்றும் நிர்வாக இயக்குனராய் பொறுப்பேற்றவர் ஆர்.எம்.ஆர்.ரமேஷ்.

இவருக்கு ஊடகம் குறித்து என்ன தெரியும்..?

இவர் ஆசிரியர் பொறுப்பேற்ற பொழுது, தனக்கு கீழ் பணியாற்றிய ஊழியர்களிடம் இவரது வார்த்தைகளிலேயே சொல்வதென்றால், "பத்திரிகை குறித்து  எனக்கு எதுவும் தெரியாது."

அப்படியென்றால் இவருக்கு எப்படி இந்தப்பதவி கிடைத்தது ?

கலாநிதிமாறனின் கல்லூரித் தோழர். அது மட்டுமல்ல,அவரது அனைத்து சட்டவிரோத காரியங்களுக்கும் துணை நிற்பவர். இது ஒன்று போதாதா மாறன் சாம்ராஜ்யத்தின் தளபதியாய் பொறுப்பேற்க..?

கலாநிதிமாறன் கோபத்தில் இருந்தால் இவரை 'நாய்' என்றும் மகிழ்ச்சியாய் இருந்தால் 'அல்சேஷன் டாக்' என்றும் அழைப்பார்.(அல்ஷேசன்கள் கலாநிதியை மன்னிக்க வேண்டும்)

இவர் தான் ஒட்டுமொத்த 'தினகரன்' சாம்ராஜ்யத்தின் தளபதி.இவருக்கு விசுவாசமான ஆட்கள் தான் ஆசிரியராகவும் அனைத்து பதிப்புகளிலும் மேலாளர்களாகவும் இருக்கிறார்கள். இவரன்றி 'தினகரன்' நாளிதழில் அணுவும் அசையாது. ஊழியர்களின் சம்பள உயர்விலிருந்து புதிதாய் நியமிக்கப்ப‌டுவது வரை மற்றும் நிர்வாகம் முழுமையும் இவரது அனுமதியின் பெரிலும் தலையசைப்பிலும் நடக்கும். இவருக்கு முகஸ்துதி போட்டு பிழைப்பு நடத்தும் கும்பல் 'தினகரனில்' மிக அதிக அளவில் இருக்கிறது என்பது உபரித்த‌கவல்.

இந்த அறிமுகம் போதும் என நினைக்கிறோம்.

இனி இவர் ஊழியர்களிடம் நடப்பது குறித்து சிறு அறிமுகம்.

யாரையும் இவர் மரியாதையாக நடத்தியது கிடையாது, எவ்வளவு பெரிய அனுபவசாலி,வயதில் முதியவர் என்றாலும் ஒருமையிலும் தரக்குறைவாகவும் தான் வார்த்தை வரும்.

ஆனால் வல்லவன் உண்டல்லவா..?

இவருக்கு சுயமரியாதை பாடம் எடுக்கும் தைரியம் ஒருவருக்கு இருந்த‌து.

அப்பொழுது 'சன் நியூஸ்' ஆங்கில சேனல் ஒளிபரப்பாகி கொண்டு இருந்த‌து. அண்ணா அறிவாலய வளாகத்தில் தான் அலுவலகம்.

ஆர்.எம்.ஆர் எடிட்டோரியலில் நுழைகிறார். அங்கு ஒரு ஊழியரை அழைக்கிறார் எப்படி தெரியுமா..?

"டேய் இங்க வாடா..?"

யாரும் திரும்பவில்லை.திரும்பவும் அருகில் சென்று அழைக்கிறார்.

"டேய் இங்க‌ பாருடா..? உன்னைத் தாண்டா..? காது செவிடா..?"

அந்த ஊழியர் சடாரென்று கோபத்துடன் திரும்புகிறார். அவரது பெயர் நம் ஞாபகத்தில் இல்லை.'பிலிக்ஸ்' என வைத்துக் கொள்வோம்.  திறமையானவர்.

"மிஸ்டர் ஆர்.எம்.ஆர்.,முதலில் மரியாதையாக பேசக் கற்றுக் கொள்ளுங்கள். "

கூழைக்கும்பிடு போடுபவனையும்,அச்சத்துடன் விலகிச்செல்பவனையும்,போலி மரியாதையையும் பார்த்துப் பழகிப்போன ஆர்.எம்.ஆருக்கு  இந்தப் பதிலைக் கேட்டவுடன் முகம் மாறுகிறது. ஆனாலும் சமாளிக்கிறார்.

"என்னப்பா நான் என்ன சொல்லிட்டேன்,நம்ம ரெண்டு பேருக்கும் இருக்கும் பழக்கத்தில் தானே இப்படிக் கூப்பிட்டேன்" என சமாளிக்கிறார்.

நண்பர் விடவில்லை. "நம்ம ரெண்டு பேருக்கும் எவ்வளவு வருட பழக்கம் ?இங்கு வேலைக்கு வந்த பின்னாடித்தான் தெரியும்.அப்புறம் எப்படிக் கூப்பிடலாம்..? சரி நானும் அதே காலப் பழக்கம் தானே..? உங்களை டா போட்டு கூப்பிடலாமா மிஸ்டர்..? "

ஆர்.எம்.ஆர்.வெலவெலத்துப் போகிறார்.

"உங்க கூடத்தான் படிச்சார் கலாநிதி மாறன்,அவரை எல்லோர் முன்னாடியும் டா போட்டுக் கூப்பிட முடியுமா..? முதலில் மரியாதையா நடந்துக்கோங்க‌..நீங்க‌ எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும் அது பத்தி எனக்கு கவலையில்லை."

வெளிறிய முகத்துடன் வெளியேறுகிறார்.

னது ஊழியரை இவ்வாறு இழிவாய் நடத்தும் ஆர்.எம்.ஆர் தனது முதலாளியிடம் எப்படி கூழைக் கும்பிடு போடுவார் தெரியுமா..? அதற்கு ஒரு சம்ப‌வம் சொல்கிறோம்.

தயாநிதி மாறன் மத்திய ஜவுளித்துறை கேபினட் அமைச்சராய் பதவியேற்ற சமயம்.

'தினகரன்' அலுவலக ஊழியர்கள், கச்சேரி சாலை அலுவலகத்தில்  சந்தித்து வாழ்த்து தெரிவிக்கின்றனர்.

 'தினகரன்' மற்றும் 'தமிழ் முரசு' ஆசிரியர் (பொறுப்பு) வகிக்கும் திரு.கதிர்வேல் தலைமையில் ஒரு பிரிவு செல்கிறது. அவருடன் 'தமிழ் முரசு' நியூஸ் எடிட்டர் மனோஜ் மற்றும் நிருபர் மோகன் ஆகியோரும் உடன் செல்கின்றனர்.

தயாநிதிமாறன் முன்பு இவர்கள் சரிக்குச் சமமாய் அமர, 'தினகரன்' இதழின் அதிகாரபூர்வமான ஆசிரியர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஆர்.எம்.ஆர்.எப்படி நடந்து கொள்கிறார் தெரியுமா..?



ஒரு ஓரத்தில் கைகட்டி ஆபிஸ் பையன் மாதிரி நிற்கிறார். இத்தனைக்கும் தயாநிதி மாறனின் உடன்பிற‌ந்த சகோதரன் கலாநிதிமாறனின் கல்லூரித் தோழர் மற்றும் நண்பர் தான் ஆர்.எம்.ஆர். ஆனால் இளைய முதலாளி முன்பு சேரில் அமராமல் கைகட்டி சேவகம் செய்கிறார். இப்படி கூழைக்கும்பிடு போடுபவர் தான் இவர்.

ஆனால் இதே ஆர்.எம்.ஆரோ தனக்கு கீழ் வேலை செய்யும் தொழிலாளியை கொத்தடிமை போல் நடத்துகிரார்.

எஸ்.பி.வீட்டில் ஆர்டர்லி வேலை பார்க்கும் காவலர்,தனனைத் தேடி காவல்நிலையம் வரும் அப்பாவியைத் தூக்கிப் போட்டு மிதிப்பதில்லையா..? அந்த எடுத்துக்காட்டு ஆர்.எம்.ஆருக்கு முற்றிலும் பொருந்தும்.

இனி ஆர்.எம்.ஆரின் ரவுடித் தனத்தைப் பார்ப்போம்.தினகரனில் உதிய உயர்வு இரண்டு ஆண்டுகளாய் மறுக்கப்பட்டு வந்தது.

 இந்த நிலையில், ஏப்ரல் 9 ஆம் நால் ஊதிய உயர்வு சிலருக்கு மட்டும் கண்துடைப்பாய் அளிக்கப்ப‌ட்டது. அதை எதிர்த்து பெரும்பாலோனோர் அமைதி காக்க சுயமரியாதை மிக்க லேஅவுட் ஆர்ட்டிஸ்டுகள் ஏப்ரல் 10 ஆம் தேதி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்துகின்றனர்.



***

கேஷ் பழைய  தினகரன் ஊழியர்.ஆபிஸ் பாயாக தினகரனில் 5 வருடமும்,அதைத்தொடர்ந்து  லே அவுட் ஆர்ட்டிஸ்டாக 7 வருடமும் வேலை பார்த்தவர்.

இனி நடந்த சம்பவத்தை பாதிக்கப்ப‌ட்ட லேஅவுட் ஆர்ட்டிஸ்டான மகேஷ் வார்த்தைகளிலேயே கேட்போம்.

மகேஷ்


"நான் சென்னை கச்சேரி சாலையில் அமைந்துள்ள 'தினகரன்' நாளிதழ் அலுவலகத்தில் லே அவுட் ஆர்ட்டிஸ்டாக கடந்த 7 ஆண்டு காலமாய்ப் பணிபுரிந்து வருகிறேன். இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாய்  எனக்கு ஊதிய உயர்வு கொடுக்கவில்லை.  

அதனால் கடந்த 10.04.2015 அன்று நானும் இன்னும் சில அலுவலக ஊழியர்களும் ஊதிய உயர்வு கோரி தினகரன் அலுவலகத்தினுள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினோம். அப்பொழுது எங்களுடன் தலைமை வடிவமைப்பு நிர்வாகி திரு.வேதராஜன் சமாதானப் பேச்சு வார்த்தை நடத்தினார். 

ஆனால் நாங்கள் ஒப்புக் கொள்ளாததால் ஆசிரியர் பொறுப்பு வகிக்கும் திரு. ராமன்   எங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். அதிலும் உடன்பாடு ஏற்படவில்லை. அதைத்தொடர்ந்து தலைமை நிருபர் திரு.சுரேஷ் வேதநாயகம் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

எங்களின் குறைகளை எழுதித் தருமாறும் நிர்வாக இயக்குனர் ஆர்.எம்.ஆர்.ரமேஷ்  கவனத்துக்கு கொண்டு சென்று தீர்வு வாங்கித் தருவதாகவும் உறுதி அளித்து எங்களின் கோரிக்கையை எழுதி வாங்கிக் கொண்டார். அதை ஏற்றுக் கொண்டு நான் உட்பட அனைவரும் எமது கோரிக்கையை எழுதி அவரிடம் தனித்தனியாய்க் கொடுத்தோம்.

என்னிடம் கடிதம் வாங்கும் பொழுது திரு சுரேஷ் வேதநாயகம்,நிர்வாகத்துக்கு எதிராய் உனது செயல்பாடு இருக்கிறது, அதற்கான விலையை நீ கண்டிப்பாய் கொடுக்க வேண்டி வரும் என மிரட்டினார்.ஆனால் நாங்கள் அமைதியாக இருந்து விட்டோம்.

அதன் பின் 13-04-2015 தினகரன் அலுவலகத்தில் மதியம் 12.45 மணி அளவில் பணியில் இருந்த பொழுது டெலிபோன் ஆபரேட்டர் வனிதா எனக்கு போன் செய்து மதியம் 2.30 மணிக்கு நிர்வாக இயக்குனர் திரு.ஆர்.எம்.ஆர் ரமேஷைச் சந்திக்க எம்.ஆர்.சி.நகரில் அமைந்துள்ள‌ சன் நெட்வொர்க் தலைமை அலுவலகத்துக்கு செல்லுமாறு கூறினார். 

அதனை ஏற்று நான் உடனடியாக சுமார் 1.30 மணி அளவில் அங்கு சென்றேன். அந்த சமயத்தில் திரு.ஆர்.எம்.ஆர்.ரமேஷ் அங்கு இல்லை,அவரது உதவியாளர் திரு.மணி என்பவர் மட்டும் இருந்தார். அவர் நிர்வாக இயக்குனர் மதிய சாப்பாட்டுக்கு சென்றிருப்பதாகவும் மாலை 3 மணி அளவில் வருமாறும் கூறினார். அதைக்கேட்டு நான் மீண்டும் தினகரன் அலுவலகத்துக்கு பணிக்குச் சென்றேன்.

அதன் பின்  சுமார் 2.15 மணி அளவில் மீண்டும் சன் நெட்வொர்க் அலுவலகத்துக்கு நானும் சக ஊழியர் ராஜூம் கிளம்பிச் சென்றோம், அப்பொழுது சன் நெட்வொர்க் அலுவலகம் அருகில் தினகரன் தலைமை நிருபர் திரு.சுரேஷ் வேதநாயகம்,எங்களை வழிமறித்து,எம்.டி, ஆர்.எம்.ஆரிடம் எதிர்த்து பேச வேண்டாம், நடைபெற்ற போராட்டத்துக்கு வடிவமைப்பு நிர்வாகி திரு.வேதராஜன் தான் காரணம் எனச் சொல்லுங்கள் ,ஆர்.எம்.ஆர்.ரமேஷ் கோபமாக இருந்தால் காலில் விழுந்து விடுங்கள்,அவர் மன்னித்து விடுவார்,இல்லையென்றால் சிக்கல் தான் என எச்சரித்தார்.

அடியாளுக்கு ஆள்காட்டி சுரேஷ்

அதன்பின் நானும் திரு.ராஜூம் சுமார் 2.30 மணி அளவில் சன் நெட்வொர்க் தலைமை அலுவலகம் சென்றோம்.அங்கு நாங்களும் எனது சக லே அவுட் ஆர்ட்டிஸ்டுகள் மதி,அருணாச்சலம்,சுதாகர் ஆகியோர் அவர் அறை அருகில் காத்திருந்தோம்.நாங்கள் அனைவரும் சுமார் 3.15 மணி அளவில் தினகரன் நிர்வாக இயக்குனர் அழைப்பின் பேரில் உள்ளே சந்திக்கச் சென்றோம்.

உள்ளே நுழைந்தவுடன் எங்கள் அனைவரையும் பார்த்த திரு.ஆர்.எம்.ஆர்.ரமேஷ்,"வாங்கடா தேவடியா பசங்களா கொடுக்குறதை வாங்கிட்டு வேலையைப் பாருங்க‌டான்னா ஸ்டிரைக் பண்றீங்களாடா" எவ்வளவு திமிருடா..? என தரக்குறைவான வார்த்தைகளால் எங்களை கடுமையாகத் திட்டியதோடும் இல்லாமல் தனது இருக்கையில் இருந்து எங்களை நோக்கி தாக்கவும் முயன்றார். அதைக் கண்டு அச்சத்துடன் இதர ஊழியர்கள் அனைவரும் அவரது காலில் விழுந்தனர். ஆனால் நான் மட்டும் அமைதியாய் இருந்தேன்.

 இதனால் ஆத்திரமடைந்த ஆர்.எம்.ஆர்.ரமேஷ் என்னை சராமாரியாகத் தாக்கினார்.அப்பொழுது நிலை தடுமாறி கீழே விழுந்தேன்,அதைத்தொடர்ந்து என் கழுத்தில் காலை வைத்து,எங்களை எதிர்த்தால் கொலை செய்து விடுவதாய் மிரட்டினார். நான் எதுவும் செய்வதறியாது உயிர் பயத்துடன் அமைதியாய் இருந்தேன்.

அதன் பின் அனைவரையும் மீண்டும் தரக்குறைவான வார்த்தைகளால் திட்டிய ஆர்.எம்.ஆர்.ரமேஷ், கதிர் இப்படித்தான்,நான் வாங்க மட்டேன்னு நினைச்சு ரிசைனிங் லெட்டர் கொடுத்தாரு. நான் எதுவும் சொல்லாம வாங்கிட்டேன். இப்ப என்ன நிலைன்னு தெரியுமா..? இங்க இருக்கும் வரைக்கும் தான் உங்களுக்குமதிப்பு. என்று சொல்லி மீண்டும் எங்களை கடுமையாகத் திட்டினார். 

என்னுடைய அடையாள அட்டையை மட்டும் பிடுங்கிக் கொண்டு,எல்லோரையும் கிளம்பச் சொன்னார். எல்லோரும் சென்ற பின்பும் நான் அமைதியாய் இருந்தேன்.

 "இப்படியே ஓடிப்போயிரு,இனிமேல் எங்காவது பார்த்தால் உன்னை மட்டுமல்ல உனது குடும்பத்தில் எல்லாரையும் சாவடிச்சுடுவேன்" என்று மிரட்டினார். அதன் பின் அவரது அலுவலக உதவியாளரை அழைத்து என்னைக் கழுத்தைப்பிடீத்து வெளியே தள்ளச் சொன்னார்.அதற்குள்ளாக நானாகவே வெளியே வந்து விட்டேன். "


(இந்த நிலையில் தினகரன் நிர்வாகத்துக்குச் சொந்தமான புதுத்தெருவில் உள்ள இடத்தில் தங்கியிருந்த மகேஷ் அங்கிருந்து வலுக்கட்டாயமாய் வெளியேற்றப்பட்டிருக்கிறார்.பாதிக்கப்ப‌ட்டவர் இன்னும் அச்சத்தில் இருப்பதால் புகார் கொடுப்பது குறித்து தயங்குகின்றார்.)



திய உயர்வு கோருவதும்,அதற்காய் போராட்டம் நடத்துவதும் தொழிலாளர்களின் அடிப்படை உரிமை.ஆனால் அப்படி நடத்திய தொழிலாளிகளை தரக்குறைவாகப் பேசியும் அச்சுறுத்தியும் காலில் விழ வைத்துப் பணியவைத்திருக்கிறார் அடியாள் ஆர்.எம்.ஆர்.அதற்கு உடன்படாத ஒரு தொழிலாளியை அடித்து உதைத்து கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார்.இதற்கெல்லாம் காரணம் நம்மிடம் ஊடக பலம் இருக்கிறது,நாம் மாறனின் அடியாள் என்னும் திமிர் தான்.ஜெயலலிதா ஆட்சியிலேயே இந்த ரவுடித்தனம் என்றால் கருணாநிதி ஆட்சியில் இவர்கள் எவ்வளவு கொட்டம் ஆடியிருப்பார்கள் என்று நினைத்துப் பாருங்க‌ள். 

மகேஷை தாக்கிய அதே நாளில் ஊதிய உயர்வு கோரி போக்குவரத்து தொழிலாளர்கள் நடத்திய போராட்டம் தினகரனில் விரிவாய் வெளிவந்திருக்கிற‌து. ஆனால் இன்னொருபுறமோ தன்னிடம் ஊதிய உயர்வு கோரிய பணியாளனை அத‌ன் நிர்வாக இயக்குனர் எனச் சொல்லிக்கொள்ளும் ரவுடி தாக்கியிருக்கிறார். 

'தினகரன்' நிறுவனத்துக்குள் நீங்கள் நுழையும் முன்பிருந்து அந்த நிறுவன வளர்ச்சிக்குத் தங்களை அர்ப்பணித்தவர்கள் மகேஷ் போன்றவர்கள். ஆனால் நீங்க‌ளோ சுரண்டவும் ஏமாற்ற‌வும் பிழைக்கவும் மட்டுமே இந்த நிறுவனத்துக்குள் நுழைந்தவர். இந்த வழக்கில் நீங்கள் தப்பிக்கலாம்,ஆனால் இது என்றும் நீடிக்காது.

நாம் ஆர்.எம்.ஆருக்குச் சொல்லிக் கொள்வது எல்லாம் ஒன்று தான்.

உலகையே அடக்கி ஆண்ட எத்தனையோ சாம்ராஜ்யங்கள் கடைசியில் மண்ணோடு மண்ணாய்ப் போயிருக்கிற‌து. அதனை ஒப்பிடும்பொழுது மாறன் சாம்ராஜ்யம் தூசுக்குப் பெறாது. அதுவும் நீங்களோ நாட்டைச் சுரண்டிய மாறனை அண்டிப்பிழைத்தும் சுரண்டியும் வாழ்க்கை நடத்துபவர். உங்களின் நிலை மாறவும், வீழவும், தெருவில் திரியவும் காலம் அதிகமில்லை. 

அன்று தெரு நாய் கூட உங்கள் மேல் மூத்திரம் பெய்யும் .