Showing posts with label ஆர்.எம்.ஆர்.தினகரன். Show all posts
Showing posts with label ஆர்.எம்.ஆர்.தினகரன். Show all posts

Thursday, 28 May 2015

பாலியல் புகாரில் தினகரன் நியூஸ் எடிட்டர் ; ராஜினாமா நாடக ஒத்திகை..!



தினகரன்; வேலூர் பதிப்பு  நியூஸ் எடிட்டர் பெருமாள் குறித்து நாம் ஏற்கனவே எழுதியிருக்கிறோம். வேலூர் பதிப்புக்கு இவர் தான் இன்சார்ஜ். தனது கீழ் பணிபுரிந்த ஊழியரின் பணத்தை ஏ.டி.எம்.மில் திருடி அதன்பின் திருடிய தொகையை பல தவணைகளில் கொடுக்க ஒப்புக்கொண்டதையும் எழுதியிருந்தோம்.

இப்பொழுது மீண்டும் பாலியல் புகாரில் சிக்கியிருக்கிறார். இந்த முறை தனது கீழ் பணிபுரியும் உதவி ஆசிரியர் பெண்மணியிடன் தரக்குறைவாக நடந்து கொண்டிருக்கிறார் என்பது குற்றச்சாட்டு.

’தினகரன்’ வேலூர் பதிப்பில் ஆரணி பகுதியைச் சேர்ந்த கோகிலமான ஒரு பெண் கடந்த ஓரிரு வருடங்களாக உதவி ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவருக்குத் தொடர்ச்சியாக நியூஸ் எடிட்டர் பெருமாள் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்திருக்கிறார். அத்தோடு மட்டுமல்லாமல் இவரது செல்போனுக்குத் தொடர்ச்சியாய் ஆபாசமான குறுஞ்செய்திகளை நேரம்காலம் பார்க்காமல் அனுப்பி வந்துள்ளார்.

குடும்ப சூழ்நிலை காரணமாய் வேலைக்கு வந்த உதவி ஆசிரியரால் இதனை எதிர்கொள்ள முடியவில்லை. ஒருகட்டத்துக்கு மேல் பெருமாளின் தொல்லைகள் பொறுக்க முடியாமல் அதனை வேலூர் மேனேஜரிடம் தெரிவித்துள்ளார். மேனேஜரும் நியூஸ் எடிட்டரும் பல விஷயங்களில் கூட்டாளிகள் என்பதால் அவர் இதனைக் கண்டு கொள்ளவில்லை என்பதோடு பெருமாள் க்கு வக்காலத்தும் வாங்கியிருக்கிறார். வேறு வழியின்றி உதவி ஆசிரியப் பெண்மணி ’தினகரன்’ சென்னை அலுவலகத்தில் எச்.ஆர்.சாந்தியிடம், நியூஸ் எடிட்டர் பெருமாள் தனக்கு அளித்த பாலியல் தொந்தரவுகளை அதற்கான ஆதாரங்களுடன் இணைத்து புகாரை அளித்துள்ளார்.

அதற்குப்பின் எச்.ஆர்.சாந்தியின் அறிவுரையின் படி, பிரச்னை கைமீறிச் சென்றுவிடாமல் இருப்பதற்காக, நியூஸ் எடிட்டர் பெருமாளின் ராஜினாமாவை ’தினகரன்’ வேலூர் பதிப்பு மேனேஜர் வாங்கி வைத்துக் கொண்டிருக்கிறார். ஆனாலும் பெருமாள் அலுவலகத்தில் இன்னும் கோலோச்சிக் கொண்டு தான் இருக்கிறார்.பணி செய்யும் இடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகளை விசாரிப்பதற்காக உருவாக்க வேண்டிய விசாகா கமிட்டி ’தினகரனில்’ இன்னும் உருவாக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பெருமாள்


தினகரன்’ எடிட்டர் கம் மேனேஜிங் டைரக்டர் ஆல் இன் ஆல் அழகுராஜா ஆர்.எம்.ஆர். தற்பொழுது தமிழ்நாட்டில் நிலவும் வெயில் காரணமாக, வெளிநாட்டுக்கு உல்லாச சுற்றுப்பயணம் சென்றிருக்கிறாராம். அவர் வந்தவுடன் தான் என்ன முடிவெடுக்கப்படும் என்பது தெரியும். கோவிந்தராஜ் என்னும் ஒரு திறமையாளரை புறக்கணித்து விட்டு தனக்குத் தோதான இவரை, மேனேஜரின் விருப்பத்தின் பேரில் நியமித்தவர் தான் ஆர்.எம்.ஆர். தான் பதவி கொடுத்து அழகு பார்த்தவர்களை அவ்வளவு எளிதில் கைவிட மாட்டார் என பங்காளிகள் நம்புகிறார்கள்.

பாலியல் தொந்தரவு செய்த நியூஸ் எடிட்டர் பெருமாளை வீட்டுக்கு அனுப்பி குறைந்த பட்ச நடவடிக்கையையாவது நிர்வாகம் எடுக்குமா..?

ஆனால், குற்றவாளிகள் பதவியில், பாதிக்கப்பட்டவர்கள் வீதியில்  என்பதுதான் ’சன் நெட்வொர்க்’கின் கடந்தகால வரலாறு.

Wednesday, 29 October 2014

தினகரன்-அடியாள் ஆர்.எம்.ஆர்.,அடாவடி-வீதியில் 200 தொழிலாளர் குடும்பங்கள்...!


தினகரனை மாறன் குடும்பம் வாங்கிய சிறிது காலத்தில் நடந்த சம்பவம் இது.

மாறன் குடும்பம் வாங்கிய பின்பு ரவீந்திரன் என்பவர் நியூஸ் எடிட்டராய் சென்னை தின்கரனில் பணிபுரிந்து வந்தார். இவர் தினமணியில் இருந்து இங்கு வேலைக்குச் சேர்ந்தவர். இவர் ஒருநாள் அலுவலகத்திலேயே ரத்த வாந்தி எடுத்து விடுகிறார். உடன் பணியாற்றியவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அவரைக் கொண்டு செல்ல முடிவு செய்து அலுவலகத்தில் இருந்த காரை அழைக்கின்றன்ர்.

ஆனால் நிர்வாகத் த‌ரப்பிலோ காரைத் தர மறுத்து விடுகின்றனர். எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் நாங்கள் காரை கொடுக்க மாட்டோம் என பிடிவாதமாய் மறுத்து விடுகின்றனர். கடைசியில் ஆட்டோ பிடித்து தான் அவரை அழைத்துச் சென்று மருத்துவமனையில் சேர்த்து உயிரைக் காப்பாற்றினர். (இன்று அவர் 'தி இந்து' வில் பணியாற்றுகிறார்.)

உலகின் பணக்காரர்கள் வரிசையில் இடம்பெற்றுள்ள கலாநிதி மாறனின் நிறுவனத்தில் தான் இப்படி நடக்கிறது. இது போல தொழிலாளர்கள் உயிரை துச்சமென மதித்த அவர்களுடன் விளையாடிய பல சம்பவங்கள் அங்கு நடைபெற்றிருக்கின்றது. ஆம்.அதிகார துஷ்ப்ரயோகம்,முறைகேடு மூலம் மட்டும் மாறன்களின் சாம்ராஜ்யம் கட்டி எழுப்பப்படவில்லை. எல்லா கார்ப்பரேட் நிறுவனங்களைப் போல் இவர்களின் வளர்ச்சியிலும் தொழிலாளர்களின் வியர்வை மட்டுமல்ல ரத்தமும் சிந்தப்பட்டிருக்கிறது.

அதன் நீட்சியாய் மொத்தமாய் தமிழ்நாடு முழுவதும் 200 ஊழிய‌ர்களை விரட்டி அத்தனை குடும்பங்க‌ளையும் நடுத்தெருவிற்கு கொண்டு வந்து விட்டது நிர்வாகம். எடிட்டோரியல்.சர்குலேஷன்,அச்சாக்கம் என அனைத்துத் துறைகளிலும் இவர்கள் நிறைந்திருக்கின்றனர்.

dinakaran
அடியாள் ஆர்.எம்.ஆர்.


நேற்று திடீரென்று ஏறத்தாழ 200 ஊழிய‌ர்களை,பல்வேறு காரணங்களைச் சொல்லி வரும் அக்டோபர் 30 ஆம் நாளிலிருந்து பணி நீக்கம் என திடீர் என உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் சொல்லியிருக்கின்றனர்.

ஒருவரிடம் அவர் 50 வயது தாண்டியதை சொல்லி பணி நீக்கம் செய்துள்ளனர். இதுதான் காரணம் என்றால் நீக்கப்பட வேண்டிய முதல் நபர்கள் கலாநிதி மாறனும் ஆர்.எம்.ஆரும்.தான். நீக்கப்பட்டவர்கள்  பட்டியலில் பழைய தினகரன் ஆட்கள் கணிசமான அளவில் இருக்கின்றனர்.

முதன்மை நிருபர் சுரேஷ்


ஒரு தொழிலாளியை பணி நீக்கம் செய்ய வேண்டுமென்றால் ஒரு மாதம் முன்பே அவருக்கு முன் அறிவிப்பு கொடுக்க வேண்டும். அதைத்தொடர்ந்து அவருக்கு மூன்று மாத ஊதியத்தையும் அளிக்க வேண்டும். ஆனால் இது எதையுமே செய்யாமல் தன்னிச்சையாய் நிர்வாகம் இத்தனை பேரையும் வீதியில் நிறுத்தியுள்ளது.

 இந்த முடிவு அனைத்தும் நிர்வாக இயக்குனர் ஆர்.எம்.ஆர்.எடுத்தது. இவருக்கு இந்த ஆலோசனையைச் சொல்லுவதற்கென்றே சென்னை பதிப்பு முதன்மை நிருபர் சுரேஷ்,மற்றும் ஆர்.எம்.ஆரின் துதிபாடிகள் சுற்றியிருக்கின்றனர்.முதன்மை நிருபர் சுரேஷ் என்பதை விட,மாலைச்சுடர் காலத்தில் இருந்து 18 வருட காலமாய் காவல்துறையின் விசுவாசி என்பது மிகச்சரி.

ஆர்.எம்.ஆரின் அல்லக்கைகள் இந்த பணி நீக்கத்தை அலுவலகத்தில் நியாயப்ப‌டுத்தவும் செய்கின்றனர். தினகரன் நாளிதழ் நட்டத்தில் இயங்குவதாகவும்,ஆகவே அதற்கு இதுபோன்ற நடவ்டிக்கைகள் தவிர்க்க முடியாதது என்றும் பேசிக்கொள்கின்றனர். அவர்கள் கூற்றுப்படி உண்மையில் நட்டமா என்பது தெரியவில்லை. அப்படியே நட்டம் இருந்தாலும் அதில்,வேலை செய்பவர்களுக்கு எந்தப்பங்கும் இல்லை. பங்கு போட வேண்டிய அவசியமும் இல்லை.

நட்டம் இருந்தாலும் அதைத் தவிர்க்க வழியுள்ளது. அனைத்துப் பதிப்புகளிலும் ஆர்.எம்.ஆரால் நியமிக்கப்ப‌ட்ட மேலாளர்கள் தான் கோலோச்சுகின்றனர். இவர்களும் ஆர்.எம்.ஆரும் இணைந்து அடிக்கும் கூட்டுக்கொள்ளையை நிறுத்தினாலே நிறுவனம் லாபத்தில் இயங்கும் என்பது தான் உண்மை. நாட்டை மட்டுமல்ல,நாட்டைச் சுரண்ட பக்கபலமாய் இருந்த தாத்தாவையே சுரண்டிய மாறன்களிடமே ஒருவர் ஆட்டையைப் போட முடியுமென்றால் அவர் எப்பேர்ப்பட்ட கே.டி.யாய் இருக்க வேண்டும். அதுதான் ஆர்.எம்.ஆர்.

அதுவுமற்று தினகரனை இவர்கள் நடுநிலையான நாளிதழாய் நடத்தினால் விளம்பர வருவாயும் வருமானமும் அதிகரிக்கும். ஆனால் இவர்கள் தங்கள் அரசியல் வாழ்வை காப்பாற்றவும்,அதன் மூலம் செய்த அதிகார துஷ்பிரயோகத்தையும் செய்த பல நூறு கோடி மோசடிகளை மறைக்கவும் தான் இதழை நடத்துகின்றனர்.

ஆகவே நட்டம் எனக்கூறப்படுவதற்கு எந்தவிதத்திலும் தொழிலாளர்கள் பொறுப்பாக முடியாது.

இந்தப் பணி நீக்கத்தால் பாதிக்கப்பட்டோர் சென்னை மட்டுமல்ல அனைத்துப் பதிப்புகளிலும் இருக்கின்றனர். இன்று அவர்கள் அழுத அழுகையும் புலம்பலும் சொல்லி மாளாது. வெளிறிய முகமும் எதிர்காலத்தை தொலைத்த அச்சமும் அவர்களிடம் காணப்பட்டது.

அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே 
செல்வத்தைத் தேய்க்கும் படை. 

கருணாநிதி உரை.

கொடுமை பொறுக்க முடியாமல் மக்கள் சிந்தும் கண்ணீர் ஆட்சியை அழிக்கும் படைக்கருவியாகும்

என்னும் திருக்குறளை நினைத்துக் கொண்டு கண்ணீர் சிந்தினாலோ,மனதை ஆற்றுப்படுத்தினாலோ ஒன்றும் காரியம் ஆகாது.

ஆகவே பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் அனைவரும் ஒன்று திரண்டு 'தினகரன்' தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டாலோ,அல்லது மாறனின் போட் கிளப் வீட்டையோ,ஆர்.எம்.ஆரின் அடையாறு வீட்டையோ முற்றுகையிட்டாலோ தான் விடிவு பிறக்கும். இல்லை என்றால் எதுவுமே விடியாது.

 தொடர்புடைய இணைப்புகள்

http://kalakakkural.blogspot.in/2014/03/blog-post_21.html

http://kalakakkural.blogspot.in/2012/12/4.html

http://kalakakkural.blogspot.in/2014/03/blog-post_21.html

http://kalakakkural.blogspot.in/2013/08/blog-post_25.html

Wednesday, 12 December 2012

Tuesday, 7 August 2012

தினகரன் -வெளியே தள்ளப்பட்ட தலைமை புகைப்படக்காரர் முத்து கணேஷ்..!


முத்துகணேஷ்

தனது “சகலகலா திறமை”யால் உச்சத்திற்கு சென்றவர் தினகரன் முன்னாள்தலைமை புகைப்படக்காரர் முத்துகணேஷ்.இன்றோ வேலையை விட்டே வெளியே தள்ளப்பட்டுள்ளார்.அவரைப் பற்றிய பதிவு இது.

கேடி பிரதர்ஸ் வசம் தினகரன் கைமாறிய பொழுது பல்வேறு நிறுவனங்களில் இருந்து புகைப்படக்காரர்கள் அதிக அளவில் பணியில் சேர்க்கப்பட்டனர்.அவர்களில் அண்ணா சாலை தினமலரைச் சேர்ந்த சங்கர்,எழும்பூர் தினமலரைச் சேர்ந்த முத்து கணேஷ் ஆகிய இருவரும் முக்கியமானவர்கள்.

இவர்கள் இருவரில் தலைமை புகைப்பட நிருபராக சங்கரை நியமிக்கலாம் என்ற சூழ்நிலை நிலவியது.சங்கர் அதிக திறமை வாய்ந்தவரும் கூட...

சங்கர்


ஆனால் செய்தி ஆசிரியர்களில் இருவரையும் இணை ஆசிரியர் ஒருவரையும் தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி,லாபி செய்து தலைமைப் பதவிக்கு குறுக்கு வழியில் முத்து கணேஷ் வந்தார்.சங்கர் பின்னுக்குத் தள்ளப்பட்டார்.அத்துடன் ஒயவில்லை முத்து கணேஷ்.சங்கர் தினகரனில் இருந்தால் என்றாவது தனது தலைமைப் பதவிக்குச் சிக்கல் வரும் என்று கருதி பல்வேறு உள்ளடி வேலை செய்து எட்டு மாதத்தில் அவரை ஒழித்துக் கட்டினார்.( சங்கர் இப்பொழுது டைம்ஸ் ஆப் இந்தியா சென்னை பதிப்பில் தலைமை புகைப்படக் கலைஞராகப் பணியாற்றி வருகிறார்)

சங்கரைப் போல முத்து கணேஷால் பழிவாங்கப்பட்டவர்கள் பலர் இருந்தாலும் அதில் குறிப்பிடத்தக்கவர்கள் சிலர்.அவர்கள் பிரபு கார்த்திக்,அண்ணாமலை,விநாயகம்.அதை மட்டும் பார்ப்போம்.

முதலில் பிரபு

பிரபு கார்த்திக்



முத்துகணேஷ் உத்தரவின் பேரில் வேறொரு பத்திரிகை நிறுவனத்தில் உள்ள ஒரு புகைப்படக்காரருக்கு தன்னுடைய மின்னஞ்சலில் இருந்து பிரபு சில புகைப்படங்களை அனுப்பி வைக்கிறார்.இந்த சம்பவம் நடந்து முடிந்து ஆறு மாதத்திற்கு பிறகு பிரபுவை முத்து கணேஷூக்குப் பிடிக்கவில்லை.அவரைப் பழி வாங்க நினைத்தவர் 6 மாதம் முன்பு அனுப்பிய புகைப்படத்தை இப்பொழுது அனுப்பியது போல ஒரு கம்ப்யுட்டர் என்ஜினியர் உதவியுடன் நிர்வாகத்திடம் புகார் கூறி வீட்டுக்கு அனுப்பி வைக்கிறார்.

அதோடு நில்லாமல் பிரபு எங்கு போய் வேலை கேட்டாலும் அங்கு போன் செய்து அங்குள்ள தனக்கு வேண்டப்பட்ட புகைப்படக்காரர்களுக்கு போன் செய்து வேலைக்குச் சேர விடாமல் தடுக்கிறார்.(இப்பொழுது பிரபு குமுதம் நிறுவனத்தில் பணியாற்றுகிறார்)

விநாயகத்தின் கதையோ வேறு மாதிரி.

இவரை முத்து கணேஷூக்கு அறவே பிடிக்காது.ஆகவே காலி செய்ய சரியான சந்தர்ப்பத்திற்காக காத்திருக்கிறார்.அதற்கேற்றாற் போல் சந்தர்ப்பமும் அமைகிறது.

ஒரு முறை தினமலரில் இருந்து தினகரனுக்கு ஒரு புகைப்படத்தை வாங்க வேண்டியது வருகிறது.ஆகவே  தினமலர் நிர்வாகத்துக்குத் தெரியாமல்அங்குள்ள புகைப்படக்காரரைத் தொடர்பு கொண்டு சில புகைப்படங்களைத் திருட்டுத்தனமாக தினகரன் புகைப்படக்காரர் வாங்குகிறார்.ஆனால் எதிர்பாராதவிதமாக மறுநாள் தினமலரிலும் தினகரனிலும் ஒரே பிரேம் புகைப்படம் வெளியாகிறது.

இதைக் கண்டு ஆத்திரமுற்ற தினமலர் நிறுவனம் திருட்டுத்தனமாக புகைப்படம் அனுப்பிய புகைப்படக்காரைக் கண்டுபிடித்து உடனடியாக பணி நீக்கம் செய்கிறது.நீக்கம் செய்யப்பட்ட தினமலர் புகைப்படக்காரர் முத்துக்ணேஷூக்கு போன் செய்து புலம்புகிறார்.உடனே இதனை கிரிமினலாகப் பயன்படுத்திக் கொண்ட முத்துகணேஷ், தினகரனுக்கு புகைப்படம் அனுப்பியதை தினமலர் நிர்வாகத்திடம் காட்டிக் கொடுத்தது தினகரன் புகைப்படக்காரர் விநாயகம் என்று தனது நிர்வாகத்திடம் புகார் பட்டியல் வாசிக்கிறார்.நிர்வாகமும் விநாயகத்தை உடனே டிஸ்மிஸ் செய்கிறது.தவறு செய்யாத விநாயகம் இப்படியாக பழி வாங்குகிறார்.(விநாயகம் மிது தவறு இல்லை என்னும் உண்மையைத் தாமதமாக   தெரிந்து கொண்ட நிர்வாகம் சில காலங்களுக்குப் பின் மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்கிறது)

அண்ணாமலை பாதிக்கப்பட்ட கதை அடுத்தது.

முத்து கணேஷூம் விஜயகுமாரும் டெய்லி கிளாஸ் மேட்ஸ்.இதன் செலவு முழுவதும் விஜயகுமார் பொறுப்பு.இதுக்கு எப்படி காசு வரும்னு யாரும் கேட்கக் கூடாது.இதனால் முத்து கணேஷின் செல்லப்பிள்ளை மாதிரி விஜயகுமார் இருந்து கொண்டு மற்ற புகைப்படக்காரர்களை டார்ச்சர் செய்து கொண்டிருந்தார்.அதில் பாதிக்கப்பட்டவர் அண்ணாமலை.இதனால் இருவருக்கும் முட்டல் மோதல் இருந்தது.

விஜயகுமார்.


இவ்வாறு தொடர்ந்து கொண்டிருக்கையில் விஜயகுமார் சொன்னதன் பேரில் முத்து கணேஷ் C.E.O.ஆர்.எம்.ஆரிடம் புகார் செய்கிறார்.இதனால் அண்ணாமலையைக் கூப்பிட்டுக் கண்டிக்கிறார் ஆர்.எம்.ஆர்.இதன் பிறகு அண்ணாமலைக்கு விஜயகுமார் மீது கோபம் அதிகம் ஆகிறது.இந்த சூழ்நிலையில் நடைபெற்ற ஒரு மது விருந்தில் அண்ணாமலை விஜயகுமாரைப் புரட்டி எடுக்கிறார்.இந்தப் பிரச்சனையை முத்து கணேஷ் ஆர்.எம்.ஆரிடம் வேறு விதமாகப் புகார் செய்ய எச்சரிக்கப்படுகிறார் அண்ணாமலை.இதற்கு மேல் இங்கு வேலை பார்க்க முடியாது என்று முடிவுக்கு வந்த அண்ணாமலை தினமணிக்குத் தாவி விட்டார்.

இப்படி 7 ஆண்டுகளாக தினகரனில் குழி பறிப்புகள்,பாலிடிக்ஸ் செய்து தலைமைப் புகைப்படக்காரராகக் கோலோச்சிக் கொண்டிருந்தவர் முத்து கணேஷ்.இவரின் கீழ் தமிழ்நாடெங்கும் 110 புகைப்படக்காரர்கள் தினகரனில்  பணியாற்றினர்.

சில முறை மது போதையில் வெளி இடங்களில் சில பிரச்சனைகளில் சிக்கி அது நிர்வாகத்தின் கவனத்திற்கு வந்த பொழுதும் கூட எச்சரித்து விட்டது நிர்வாகம்.C.E.O.ஆர்.எம்.ஆர்.இவரைக் கண்டுகொள்ளவில்லை. அப்படிப்பட்ட இவருக்கும் சறுக்கல் தொடங்கியது.

தொடர்ந்து பக்தர்கள் மீது கை வைத்துக் கொண்டிருந்த முத்து கணேஷ் ஒரு கட்டத்தில் வரம் கொடுத்த பூசாரி மீதே கை வைத்து விடுகிறார்.அது தான் இவருக்கு இன்று வினையாய்ப் போனது.



மதுரையில் சில மாதங்களுக்கு முன் மாநில பா.ஜ.க.மாநாடு நடந்தது. இந்த மாநாட்டு புகைப்படங்களை எடுக்க சென்னையில் இருந்து முத்து கணேஷ் செல்கிறார்.மாநாட்டுக்கு முந்திய நாள் மதுவின் உச்சத்தில் இருந்த முத்து கணேஷூக்கும் அருகாமை அறையில்  இன்னொரு முக்கிய பா.ஜ.க.நிர்வாகிக்கும் கடும் வாக்குவாதமும் சண்டையும் ஏற்படுகிறது.
அதில் பா.ஜ.க.நிர்வாகியை கடுமையான வார்த்தைகளால் பிரித்து மேய்ந்து விட்டார் முத்து கணேஷ்.இதில் பாதிக்கபப்ட்ட பா.ஜ.க. நிர்வாகி இன்னொரு முக்கிய நிர்வாகியும் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவருமான ஜானகிராமனிடம் முறையிடுகிறார்.


ஆர்.எம்.ஆர்.ஜானகிராமன்.

ஜானகிராமன் வேறு யாருமல்ல.C.E.O.ஆர்.எம்.ஆரின் உடன்பிறந்த சகோதரர்.அவர் தனது தம்பியிடம் புகார் பட்டியலை சத்தமாக வாசிக்கிறார்.இதனைத் தொடர்ந்து அண்ணன் சொல்லினை   வேதவாக்காய் எடுத்துக் கொண்டுஆர்.எம்.ஆர். முத்து கணேஷை 15 நாள் சஸ்பெண்டு செய்கிறார்.அவரிடம் இருந்த தலைமை புகைப்படக்காரர் பதவியும் பறிக்கப்படுகிறது.இதன் பிறகு இவரைத் தொடர்ந்து தட்டி வைக்கவும்,முடிந்தால் வெளியே தள்ளவும் ஆர்.எம்.ஆர். திட்டமிடுகிறார்..

15 நாட்கள் கழித்து திரும்ப பணிக்கு வந்தவருக்கு பழைய பதவி அளிக்கபப்டவில்லை. பதவி இறக்கம் செய்யப்பட்டு தினகரனின் ஞாயிறு இலவச இணைப்பான சண்டே ஸ்பெஷல் பகுதியின் புகைப்படக்காரராக நியமிக்கப்படுகிறார்.110 புகைப்படக்காரர்களுக்குத் தலைமை வகித்தவர் ஒரு சாதாரண புகைப்படக்காரராக பணிபுரியும் சூழல் உருவாகிறது.ஆனாலும் தனது பழைய பந்தாவையும் தெனாவட்டையும் நக்கல் பேச்சினையும் விடவில்லை முத்து கணேஷ்.ஆர்.எம்.ஆர். அடுத்த சந்தர்ப்பத்திற்கு காத்திருக்கிறார்.

C.E.O. ஆர்.எம்.ஆர்.
.

இந்தநிலையில் கடந்த வாரத்தில் ஒரு நாள் அலுவலகத்திற்கு வரவில்லை முத்து கணேஷ். யாரைக் கேட்டாலும் என்னிடம் தகவல் சொல்லவில்லை என்று சொல்கிறார்கள்.இதனை பயன்படுத்திக் கொள்கிறது நிர்வாகம்.உரியவர்கள் யாரிடமும் தகவல் சொல்லாமல் விடுமுறை எடுத்துக்கொள்ளும் முத்துகணேஷின் தெனாவட்டு அவரது அலுவலகப் பணிக்கு முடிவுரை எழுதுகிறது. மறு நாள் முத்து கணேஷ் வந்தவுடன் நிர்வாகம் அவரைக் கடுமையாக எச்சரிக்கிறது.

ஒழுங்கா இருக்க முடியாத ஆளுங்க எங்களுக்குத் தேவை இல்லை என்று ஆர்.எம்.ஆரால் வெளியே தள்ளப்படுகிறார் முத்து கணேஷ்.தலைமைப் புகைப்படக்காரர் என்று உச்சத்தில் இருந்தவர் பதவி பறிக்கப்பட்டு வெளியே தள்ளப்படுகிறார்.

நிர்வாகத்தின் துணையுடன் ஆடிய ஆட்டம் என்ன..?இன்றோ அதே நிர்வாகத்தால் நிராதரவாய் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளப் பட்டுள்ளார் முத்து கணேஷ்.

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பது யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ முத்துகணேஷூக்குப் பொருந்துகிறது...!