Thursday 6 October 2011

என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டிக்கீங்களே... வரதாபாய் எகத்தாளம்





வரதன் குமுதம் ஜவஹர் சொத்தை ஆட்டையப் போட்டுட்டாரு அந்த .....யை ஆட்டையப் போட்டுட்டாருன்னு எல்லோரும் புலம்பிக்கிட்டுருக்காங்க. வரதாபாய் ஊர்ச் சொத்தை ஆட்டையப் போட்டதை அப்புறம் பார்ப்போம்.ஆனா உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா? தன்னுடன் பிறந்த சகோதரியின் மிகப்பெரிய சொத்தையே ஆட்டையப் போட டிரை பண்ணியவரு அது முடியாத பட்சத்தில் அழித்தவரு அப்படிங்குற கதை.

வரதாபாய் அப்பாக்கு இரண்டு பையன்கள்.ஒரு பொண்ணு.அதாவது வரதாபாய்க்கு ஒரு சகோதரி.வரதாபாய் அப்பா பா.சாரதி இறக்கும் பொழுது தன்னுடைய பொண்ணுக்கு மைலாப்பூரில் ஒரு வீட்டை உயில் எழுதி வைத்தார்.அந்த சகோதரி அப்பொழுது அமெரிக்காவில் இருந்தார்.அதனால அந்த வீட்டை வாடகைக்கு விடுவது,வாடகை வசூல் செய்வது,பராமரிப்பது உள்ளிட்ட பணிகளைத் தன்னுடைய அண்ணனைப் பார்த்துக்கச் சொல்லிட்டு அமெரிக்கா சென்று விட்டார்.அங்கு சென்றவுடன் சில மாதமாகியும் வாடகை வரல்லை.உடனே அண்ணனுக்கு போன் போட்டார்.அண்ணே இன்னும் வீட்டு வாடகை வரல்லை அப்படின்னு.

அதுக்கு வரதாபாயோ பராமரிக்கிறது நானு,வாடகை உனக்கா?அப்படின்னு கொஞ்சம் நக்கல்,கொஞ்சம் வில்லத்தனம் கொஞ்சம் திமிருடன் பதில் சொன்னார். 

சகோதரியோ அண்ணே,குடியிருப்பவர்களிடம் இருந்து எனக்கு வாடகை வாங்கிக் கொடுக்குறதுக்கு ஏதாவது கமிஷன் கூட எடுத்துக்க.அது போக மீத வாடகையைக் கண்டிப்பா அனுப்புன்னு சொன்னார்.வரதாபாய் பதில் சொல்லாமல் பதிலுக்குச் சிரித்தார்.
மாதம் ஒன்னாம் தேதியானா அமெரிக்காவில் இருந்து சகோதரி வாடகை கேட்குறது பதிலுக்கு வரதாபாய் சிரிக்கிறது,ரொம்ப அழுத்திக் கேட்டா பேருக்கு கொஞ்சம் பணம் அனுப்புறது,அதுக்கும் மேல அழுத்திக் கேட்டா அந்த டாக்ஸ் கட்டினேன்,வீட்டுக்கு பெயிண்ட் அடிச்சேன்,வீட்டை ரிப்பேர் பார்த்தேன்,அது இதுன்னு காரணம் சொல்லிக்கிட்ருந்தார். இப்படியே 2 வருஷம்  முடிஞ்சுச்சு.

அதன்பின் சகோதரி அமெரிக்காவில் இருந்து ரிட்டன் ஆயிட்டார்.வந்தவுடன் வரதாபாய்கிட்ட போனார்.அண்ணே நான் இனிமேல் சென்னை வீட்டில் தான் குடியிருக்கப் போறேன்.எனக்கு என்னோட மைலாப்பூர் வீடு வேணும்.ஒப்படைச்சுடு அப்படின்னு கேட்டார்.

மைலாப்பூர் வீட்டை முழுவதும் சேதாரம் இல்லாம ஆட்டையப் போடுற திட்டத்துல இருந்த வரதாபாய் இதனால் அதிர்ந்து போயிட்டார்.ஆனால் அதனை  வெளிக்காட்டாமல்,எந்த வீடு?மைலாப்பூர் வீடா?இவ்வளவு நேரம் பாக்கெட்டில் இருந்துச்சு இப்பத்தான் காணோம்.அப்படின்னு நக்கல் பண்ணினார். 

நான் 2 வருஷம் உன் வீட்டைப் பராமரிச்சதுக்கு வீடு சரியாப் போச்சுன்னு பதில் சொல்லிட்டார்.தங்கை அழுது கேட்டதும் கூட்டிக் கழிச்சுப் பாரு கணக்கு சரியா வரும்ன்னு சொல்லிட்டார். 




பொறுமை இழந்த தங்கை வேறு வழியில்லாமல் நீதிமன்றத்தில் சொத்தினை ஒப்படைக்கக் கோரி வழக்குத் தாக்கல் செய்தார்.தங்கை வழக்குத் தாக்கல் செய்வார் என்று வரதாபாய் எதிர்பார்க்கலை.பதிலுக்கு வழக்கு நடத்தினா எப்படியும் வழக்கு தோத்துடும் வீடு கிடைக்காதுன்னு நினைச்ச வரதாபாய் ஒரு குயுக்தியான குறுக்குப் புத்தியுடன் ஒரு காரியம் செய்தார்.அது நம் தமிழ்ப்படத்தில் கூட  எந்த வில்லன் நடிகரும் செய்யாதது.

அப்பா சகோதரிக்கு எழுதிய உயிலை எடுத்தார்.திரும்பத் திரும்ப படித்தார். அதில் பா.சாரதி தனது மகளுக்கு மைலாப்பூரில் உள்ள வீட்டுமனையை அவர் பங்குக்கு அளிக்கிறேன் என்று எழுதியிருந்தார். இதைப் படித்தவுடன் சரியான சட்டப் பாயிண்ட் கிடைத்து விட்டது என்று வரதாபாய் நம்பியார் சிரிப்புச் சிரித்தார்.

(அதாவது வீடு என்பதற்குப் பதிலாகத்,தவறாக வீட்டு மனை என்று எழுதி விட்டார்) உடனே சிறிதும் தாமதிக்காமல் புல்tOடோசரை வரவழைத்தார்.மைலாப்பூரில் இருந்த பல கோடி பெறுமானமுள்ள வீட்டை கொஞ்ச நேரத்தில் இடித்துத் தள்ள உத்தரவிட்டார்.சூரியன் அஸ்தமிக்கும் முன் மாளிகை இருந்த இடத்தில் காலி மனை மட்டுமே இருந்தது.தங்கைக்கு போன் பண்ணினார்.


தங்கச்சி அப்பா உனக்கு உயில் எழுதிய படி வீட்டு மனையைக் கொடுத்துட்டேன்.வந்து வாங்கிக்க என்றார்.தங்கை வந்தவுடன் தந்தையின் உயில் படி இது தான் உன் மனை என்று காலி இடத்தைக் காட்டினார்.(இதனை எதிர்த்து சட்டப் படி எதும் செய்ய முடியாது.எனென்றால் உயிலில் வீட்டு மனை என்று தானே எழுதியிருக்கிறது.வீடு என்று எழுதலை!!)

தங்கை அன்று கண்ணீருடன் சாபம் இட்டார்.கதறி அழுதார்.வரதாபாயோ சத்யராஜ் சிரிப்புச் சிரித்துக் கொண்டே என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டீக்கீங்களே!என rsஎகத்தாளமாய் இடிஇடியாய்ச் சிரித்தார்.இது தான் வரதாபாய்.தனக்கு சொந்தம் இல்லாத ஒரு பொருள் மேல ஆசைப்பட்டா அடைஞ்சே தீருவாரு.இல்லைன்னா அழிச்சுடுவாரு.



No comments: