இதுவரையிலும் தொழிலாளர்கள் விரோதப் போக்கைக் கடைப்பிடித்து வந்த வரதாபாய் இப்பொழுது திடீரென்று அவர்கள் மீது பாசமழை பொழிகிறாராம்.ஆயுத பூஜையை எப்பொழுதும் இல்லாத அளவுக்கு மிகவும் தடபுடலாகக் கொண்டாடினாராம்.ஊழியர்கள் அனைவருக்கும் அரைக் கிலோ இனிப்பு,பழங்கள்,பணம் ரூ.500 என அமர்க்களப்படுத்தினாராம்.அத்துடன் இல்லாமல் ஊழியர்கள் உடன் குரூப் புகைப்படம் எடுத்து அன்பு மழை பொழிந்தாராம்.இதுவரை ஊழியர்களை விரோதத்துடன் பார்ப்பவர்,இப்பொழுது பல ஊழியர்களைப் பெயர் சொல்லி அழைத்து நீண்டநாள் நண்பரைப் போல நலம் விசாரித்து,குடும்பம் பற்றியெல்லாம் வினவினாராம்.
இதுவரை குமுதம் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களிடம் வரதாபாய் மரியாதையுடன் பேசியது கூட இல்லையாம்.அயதிலும் குறிப்பாக பிரிண்டிங் செக்ஷனில் உள்ள ஊழியர்களிடம் பேசும் பொழுது மிக மோசமாக லும்பன்களைப் போல பேசுவாராம்.(உதாரணத்திற்கு,ஏய் ஒழுங்கா வேலையைப் பாருங்கடா!கொட்டையில் உதைச்சா இரண்டும் வாய் வழியா வெளியில் வந்துடும்)ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு உதாரணம்.
வரதபாய் பேச்சுக்கு இந்த ஒரு உதாரணம் போதும்.ஆண்களிடமே இப்படின்னா பெண்களிடம் எப்படிப் பேசுவார் என்று உங்கள் கற்பனைக்கே விட்டுடுறோம்.
வரதாபாய் ரிப்போர்ட்டர் ஆரம்பிச்ச பிறகு இதில் வேலைக்குச் சேர்ந்தவர்களில் சுமார் 150 க்கும் மேற்பட்டவர்கள் வேலையை விட்டு துரத்தப் பட்டுள்ளார்களாம்.அதிலும் அமைதியாக இருப்பவர்களை கேவலமான வார்த்தைகளால் கூனிக்குறுகும் அளவுக்கு வறுத்தெடுப்பாராம்.(அதே சமயம் துணிச்சலுடன் எதிர்த்துக் கேள்வி கேட்பவர்களிடம் பல்லை இளிப்பாராம்,பத்து நாட்களுக்குள் சம்பந்தப்பட்டவரின் இடத்தைக் காலி பண்ணுவாராம்)
அப்படிப்பட்ட வரதாபாயா திடீரென்று நம் மீது பாசமழை பொழிவது? என்று ஊழியர்கள் திக்குமுக்காடி விட்டார்களாம்.
ஒவொருத்தரும் ரிப்போர்ட்டர் அலுவலகத்தில் தான் இருக்கின்றோமா?நடப்பது கனவா?நிஜமா?என்று தங்களைக் கிள்ளிப்பார்த்துக் கொண்டார்களாம்.விரைவில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ள வழக்கில் விதிக்கப் பட்டுள்ள தடையை நீக்கும் திட்டத்தின் ஒரு பகுதி இந்த பம்மாத்து என்று கூறுகின்றார்கள் விபரம் அறிந்தவர்கள்.
சோழியன் குடுமி சும்மாவா ஆடும்?
1 comment:
சோழியன் குடுமி சும்மாவா ஆடும்?
உண்மை தான்..
Post a Comment