Tuesday 30 August 2011

குற்றவாளிகளின் புகலிடமான பத்திரிக்கையாளர்கள் அறை




புது ஆட்சியின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக சட்டசபையில் நடந்து வருகின்றது.பட்ஜெட் கூட்டத்தொடர் என்றாலே சட்டசபை செய்திகளைச் சேகரிக்க தலைமைச் செயலகத்துக்குச் செல்லும் ஒருசில பத்திரிக்கையாளர்களுக்கு கொண்டாட்டம் தான்.


துறைவாரியாக திட்டங்கள் அறிவிக்கப்பட்டு அதற்கான நிதி ஒதுக்கி மானியக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.திட்டங்கள் மக்களுக்குப் போய்ச் சென்றடைகின்றதோ இல்லையோ பத்திரிக்கையாளர்களின் வயிற்றைப் பிரியாணி பொட்டலங்கள் நிரப்பும்.பாக்கெட்டுகளை கவர் நிரப்பும்.கைப்பையை காம்ப்ளிமெண்ட் நிரப்பும்.இதனால் தலைமைச் செயலகத்தில் உள்ள செய்தியாளர்கள் அறை எப்பொழுதும் நிரம்பி வழியும்.


இதில் குறிப்பாக தற்பொழுது எதிர்க்கட்சியாக உள்ள அரசியல் கட்சியைச் சார்ந்த பிரமுகர் ஒருவரை கடந்த பொதுத் தேர்தலின் பொழுது மிரட்டிப் பணம் கேட்ட புகாரில் திண்டுக்கலில் கைதான ஆனந்தமான நிருபரும்,செல்வத்தில் ராஜாவான பெயரைக்கொண்ட பிளாக்மெயில் நிருபரும்,மற்றும் இவர்களைப் போன்ற மற்ற ஒரு சிலராலும் பத்திரிக்கையாளர்கள் அறை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற கும்பல்கள் அமைச்சர்களின் அறை தோறும் சென்று அமைச்சர்கர்களை வானளாவப் புகழ்ந்து வசூல் வேட்டையாடி வருகின்றார்களாம்.


சூடு,சொரணையற்ற,மானங்கெட்ட எந்தப் பத்திரிக்கையிலும் பணியாற்றாத இந்த கும்பலைக்கண்டு நேர்மையான செய்தியாளர்கள்,பத்திரிக்கையாளர்கள் அறைக்குள் செல்வதே பாவம் எனக்கருதி ஒதுங்கி ஓடி விடுகின்றனர்.
அன்னா ஹசாரே வலியுறுத்தும் லோக்பால் மசோதாவில் பத்திரிக்கை துறை ஊழல்களையும் சேர்த்தால் நல்லது.

No comments: