tag:blogger.com,1999:blog-1780422800010466999.post7226699769630574804..comments2023-08-23T07:14:20.418-07:00Comments on கலகக்குரல்: கொலைகளை வழிமொழியும் விகடன் தலையங்கம்!கலகக்குரல்http://www.blogger.com/profile/13243848417568296707noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-1780422800010466999.post-32437922679016168902012-03-17T09:20:26.177-07:002012-03-17T09:20:26.177-07:00இந்த வாரம் மார்ச் 21 விகடன் தலையங்கம்.இது.அப்படியே...இந்த வாரம் மார்ச் 21 விகடன் தலையங்கம்.இது.அப்படியே பிளேட்டை மாத்திப் போட்ருக்காங்க சார்.அசோகருக்கு ஞானம் வந்துடுச்சான்னு தெரியலை!<br /><br />யாதும் ஊரே... யாவரும் கேளிர்' என்று காலங்காலமாக உறவு கொண்டாடியவன் தமிழன். திரை கடலோடித் திரவியம் தேட வெளிநாடுகள் செல்லும்போதும், தேசத்துக்குள்ளேயே வேறு ஒரு மாநிலத்தில் பிழைப்பு தேடிப் போகும்போதும் எத்தனையோ துன்பங்களுக்கு ஆளானவனும் தமிழனே. ஈழத் தமிழன் என்ற அடையாளம் தாங்கிச் சென்றாலே, உலகின் ஒவ்வொரு பகுதியிலும் எத்தகைய வேதனைகளையும் சோதனைகளையும் அனுபவிக்க வேண்டி இருக்கிறது என்ற 'அடையாள அநீதி'யைக் கண்டு தினம் தினம் மனம் குமுறிக்கொண்டு இருப்பவர்கள்தானே நாம்?<br /><br /> இப்படி எவ்வளவோ கசப்புமிக்க அனுபவங்களைப் பெற்றிருக்கும் தமிழனை - 'வந்தாரை வாழவைக்கும் தமிழகம்’ என்று உலகுக்கே விருந்தோம்பலைக் கற்றுத்தந்த தமிழனை - வடநாட்டு முகம்கொண்ட மனிதர்களைப் பார்த்தாலே வெறுப்பை உமிழ்ந்து, வன்முறையை யோசிக்கும் மனோபாவத்துக்குள் மெள்ள மெள்ளத் தள்ளிக்கொண்டு இருக்கிறது காவல் துறை!<br /><br />தமிழகத்தில் அடுத்தடுத்து நடந்தேறிய கொள்ளைச் சம்பவங்களும் அவற்றில் காவல் துறையால் அடையாளம் காட்டப்பட்ட குற்றவாளிகளும் வேற்று மாநிலத்தவராக அமைந்துவிட, 'வட இந்தியக் கொள்ளையர்' என்று அவர்களுக்கு மொத்தமாக ஓர் அடையாளப் பெயர் சூட்டி, அதன் தொடர்ச்சியாக காவல் துறை எடுத்துவரும் நடவடிக்கைகள்தான் 'வேற்று முகம்கொண்டு இருந்தாலே அச்சப்படு, ஆத்திரப்படு' என்பதாகத் தமிழ் மக்களைத் தூண்டிக் கொண்டு இருக்கிறது!<br /><br />புதிய சட்டசபைக் கட்டடமாக இருந்தாலும் சரி... பளபளக்கும் தொழில்நுட்பப் பூங்காவானாலும் சரி... கட்டுப்படியாகும் கூலிக்குள் வேலை பார்க்கிறார்கள் என்று பணிக்கு இந்த 'வேற்று முகங்களை’ ஏராளமாகக் கூட்டிவந்தது தமிழர்கள்தான். இவர்களைத் தமிழகம் வாழவைக்கிறது என்பதோடு சேர்ந்து, இவர்களால் தமிழகம் வளர்கிறது என்பதும்தானே உண்மை?<br /><br />குற்றங்களைத் துப்புத்துலக்குவதிலும் குற்றவாளிகளை அடையாளம் காண்பதிலும் உரிய நேரத்தில் உரிய திறமையையும் கடுமையையும் காட்டத் தவறிய காவல் துறை, இப்போது தங்கள் மீது மக்களுக்கு வந்திருக்கும் அதிருப்தியைத் திசை திருப்புவதற்காகவே இப்படி ஒட்டுமொத்தமாக 'சாயம் பூசும்' வேலைகளைத் தொடர்ச்சியாகச் செய்கிறதோ என்ற ஐயம் எழுகிறது. தும்பை விட்டு வாலைப் பிடிக்கப்போனால், கொம்பு திரும்பிக் குத்திவிடும்!//<br />late but not bad.சாத்தப்பன்https://www.blogger.com/profile/10056234651135380008noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1780422800010466999.post-78240479516259382132012-03-10T21:59:34.321-08:002012-03-10T21:59:34.321-08:00கலிங்கத்துப் போருக்குப் பின் அசோகர் மனம் மாறி அகிம...கலிங்கத்துப் போருக்குப் பின் அசோகர் மனம் மாறி அகிம்சைவாதியாய் மாறி மரம் நட்டார் என்று வரலாறு சொல்கிறது.<br />ஆனால் இங்கோ சிலர் 5 பேர் என்கவுண்டருக்குப் பின்னும் மனம் மாறவில்லை.<br />என்னத்தச் சொல்றது...சாத்தப்பன்https://www.blogger.com/profile/10056234651135380008noreply@blogger.com